Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
படித்ததில் பிடித்தது ; சென்னை திருவல்லிக்கேணி பி, நாகராஜன் எழுதிய ஒரு பேப்பர் கட்டிங் வைத்திருந்தேன்; அதை த் தூக்கிப்போடுவதற்கு முன்னர் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
சாப்பிட்ட பிறகு ஆசமனம் செய்து தாம்பூலம் எடுத்துக் கொள்ளவேண்டும் ; இரண்டு பாக்குகளி எப்போதும் போட்டுக்கொள்ளக்கூடாது ; இதற்கு அதிகமாகவோ குறைவாகவோ உபயோகிக்கலாம் .
வெற்றிலையின் நுனி, நரம்பு, காம்புகளை நீக்கி சுண்ணாம்பு தடவி உபயோகிக்கவேண்டும். சுண்ணாம்பு வைத்த வெற்றிலையை உபயோகிக்கக் கூடாது .
ஒரு பாக்கு ஆரோ க்கியமும் சுகமும் தரும்;
இரண்டு பாக்கு கள் பயனற்றதாகச் செய்யும்;
மூன்றும் அதைவிட எண்ணிக்கையில் அதிகமும் எடுக்கும் பாக்குகள் சிறந்தது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் வரங்கள் (63– 2) பிரம்மா மேகநாதனுக்கு இந்திரஜித் என்ற பெயரைக் கொடுத்து வரங்களை அளித்தது!(தொடர்ச்சி)
ச. நாகராஜன்
உத்தரகாண்டத்தின் முப்பதாவது ஸர்க்கத்தில் ‘மேகநாதன் இந்திரஜித் என்ற பெயர் பெற்ற விவரத்தை அகஸ்தியர் வாயிலாக ராமர் கேட்டதைப் பார்த்தோம்.
பிரம்மா இந்திரஜித்துக்குக் கொடுத்த வரம் உள்ளிட்ட பல விஷயங்கள் யுத்த காண்டத்தில் பல ஸர்க்கங்களில் கூறப்பட்டுள்ளது.
அவற்றைக் காண்போம்.
உக்கிரமான யுத்தத்தில் அங்கதன் இந்திரஜித்தின் குதிரைகளையும் அவனது தேரின் சாரதியையும் கொன்றான். உடனே இந்திரஜித் கடும் கோபம் கொண்டான். அங்கிருந்து மறைந்தான். அப்போது ராமர் வானரர்களைப் பார்த்து, “ஸ ப்ரஹ்மணா தத்தவரைத்ரைலோக்யம் பாத்யதே ம்ருஷம்” – பிரம்மதேவரால் வரம் பெற்றிருக்கிற அவன் மூவுலகையும் இம்சிக்கிறான்” என்று கூறினார். இதை ராத்திரி யுத்தம் என்கின்ற 44ம் ஸர்க்கத்தில் 38வது ஸ்லோகத்தில் காண்கிறோம்
அடுத்து ராவணனின் தாபம் என்கின்ற 72ம் ஸர்க்கத்தில் ராவணனின் புலம்பலைக் காண்கிறோம், (ஸ்லோக எண் 5)
அதிகாயனை லக்ஷ்மணன் வதம் செய்தான். இதை அறிந்த ராவணன், “ அந்த சகோதரர்களாகிய வீரர்கள் இந்திரஜித்தால் வரமாய் பெற்ற பாணங்களால் கட்டப்பட்டார்களோ அந்தக் கட்டிலிருந்து அவர்கள் விடுபட்டார்கள் என்று அறிகிறேன்” என்று கூறினான்.
இந்த இடத்திலும் இந்திரஜித் பெற்ற வரம் ராவணனால் குறிப்பிடப்படுகிறது.
அடுத்து பிரம்மாஸ்திரத்தால் பந்திப்பது என்ற 73ம் ஸர்க்கத்தில் லக்ஷ்மணரிடம் ராமர் மீண்டும் இந்திரஜித் பெற்ற வரத்தைக் குறிப்பிடுகிறார்.
“லக்ஷ்மணா! இந்த தேவேந்திர சத்துருவான அரக்கத்தலைவனோ பிரம்மாஸ்திரத்தை கைக் கொண்டு பயங்கரமான வானர சேனையை நாசப்படுத்தி நம்மையும் எதிர்த்தவனாய் பாணங்களால் துன்புறுத்துகிறான். அஸ்திரங்களைக் கொண்ட இந்திரஜித்து பிரம்மதேவரால் வரங்கள் அளிக்கப் பெற்றவன். பேராற்றல் கொண்டவன்” என்று விவரித்து இந்திரஜித் பெற்ற வரத்தை ராமர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
அடுத்து ராமரையும் லக்ஷ்மணனையும் நேரில் எதிர்க்கக் கிளம்பியதை வர்ணிக்கும் இந்திரஜித்தின் புறப்பாடு என்ற 80வது ஸர்க்கத்தில் 27வது ஸ்லோகத்தில் இவ்வாறு வர்ணிக்கப்படுகிறான்:
“போரில் வரம் பெற்ற அந்த இந்திரஜித்து கோபம் கொண்டவனாய் சூரியனை நிகர்த்த பாணங்களால் ஶ்ரீ ராமரை எல்லா அங்கங்களிலும் மிகுந்து தாக்கினான்.” இதிலும் வரம் குறிப்பிடப்படுகிறது.
அடுத்து இந்திரஜித்தைக் கொல்ல லக்ஷ்மணன் புறப்படுவது என்ற 85வது ஸர்க்கத்தில் விபீஷணன் ராமரிடம் இந்திரஜித்து பிரம்மாவிடமிருந்து வரத்தைப் பெற்ற போது அவர் கூறியதை இப்படிக் கூறக் காண்கிறோம்:
‘மகாபாகுவே! நிகும்பலையில் செல்லாதவனாய், ஹோமத்தை முடிக்காதவனாய் போரிடும் உன்னை எந்த சத்ரு தாக்குவானோ அவன் தான் இந்திரசத்ருவாகிய உன்னை வதைப்பவன்’ என்று ஸர்வ ஜகதீசனான பிரம்மதேவரால் வரமானது அளிக்கப்பட்டிருக்கிறது. (ஸ்லோக எண் 15)
இப்படி பல இடங்களிலும் இந்திரஜித் பெற்ற வரம் பற்றிய விவரங்களை யுத்த காண்டத்தில் காண்கிறோம்.
PICTURE- DRAUPADI APPEARED IN SACRIFICIAL FIRE PIT.
Velirs came out of Yaga Kunda says Kapilar: Purananuru wonders-37!(Post No.15,950)
Written by London Swaminathan
Post No. 15,950
Date uploaded in London – 5 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Mr (late) Iravatham Mahadevan I A S made himself a fool by the following comment on Purananuru 201:
தடவினுள் (8) – ஒளவை துரைசாமி உரை – ஓமகுண்டத்தின்கண், உ. வே. சாமிநாதையர் உரை – ஓமகுண்டத்தின்கண். Iravatham Mahadevan who traces Akathiyar from the Dravidian Indus Valley Civilization to the South, quotes M. Raghava Iyengar’s interpretation of the word தடவு as ‘sacrificial vessel’ in the latter’s book வேளிர் வரலாறு. He adds, “Even he missed the obvious connection between Akathiyar and his inseparable water pitcher”. He adds further, “The word tadavu (variant taṭa, தட) means a ‘big clay pot’ (DEDR 3027) etymologically related to taṭa (தட) ‘thick, large’ (DEDR 3020). The matter has now been put beyond doubt as the word tada occurs in a Thamizh -Brahmi inscription (ca.2nd cen l. BCE) incised on a broken storage jar excavated at Kodumanal, Thamizh Nadu. The fragmentary inscription reads ‘earthen jar storing (?) cold (and) hot water’. The word tatavu ‘jar’ is also attested in Thamizh literature. It occurs twice in a poem in Nācciyār Tirumoḻi; (9:6), assigned to ca. 8th cent. CE: nūru taṭāvil veṇṇey (நூறு தடாவில் வெண்ணெய்) – ‘a hundred jars of butter’; nūru taṭā niṟaintha akkāra adicil (நூறு தடா நிறைந்த அக்கார அடிசில்) – ‘a hundred jars of sweet morsel’”.
But 1935 Ananda Vikatan Akaradi/ Dictionary gives the meaning Sacrificial Fire pit etc for Tadavu. Moreover Draupadi came out from Yaga Kunda; Goddess Meenakshi came out of Yaga Kundam; Elixir carrying Deva for Emperor Dasaratha came out of Yaga Kundam; Rajasthans four Kshatria castes came from Yaga Kundam. Tamil Velirs came out from the Fire pit; They came to Tamil Nadu from North India via Karnataka. Read more below:
Yaga Kundam= Sacrificial Fire pit
Velirs came to Tamil Nadu 1000 years before Kapilar:Purananuru wonders-37, Tamil Encyclopedia-77, One Thousand Interesting Facts -Part 77.
those kings who amass riches only for the sake of munificence; reticent only for the sake of veraciousness (truth); ambitious to campaign only for the sake of their upper hand and those that get married only for the sake of meetly progeny… hence, they are the conscientious kings… [1-7]
So, the purpose of wealth is charity. If one thinks of enjoying wealth by himself, many matters will fail!- Puram 189.
***
Item 598 Mahabharatam Purananuru
“Dharme Cha Arthecha Kamecha
Mokshecha Bharatarshabha
Yad Ihaasti Tad Anyatra
Yannehasti Na Tat Kvachit”- Mahabharatam
About Dharma, Artha, Kama and Moksha whatever is there in this Mahabharata can be found elsewhere in the world and whatever is not here cannot be found anywhere in the world.
These Four Stages of life are in Tirukkural 501, 754, 760;
Item 599 Purananuru 312 and Satapata Brahmana (800 BCE)
Puranānūru 312, Poet: Ponmudiyār, Thinai: Vākai, Thurai: Moothin Mullai It is my foremost duty to bear and raise him; it is his father’s duty to make him a noble man; it is the duty of the blacksmith to forge and give him a spear; it is the duty of the king to teach him good behavior, and it is the duty of the young man to fight in harsh wars with his bright sword, killing enemy elephants and coming back.
(Vaidehi Herbert Translation)
Mother’s duty to raise the child;
Father’s duty is to educate him.
It is Satapata Brahmana 14-58-2:
Maatrumaan, Pitrumaan Aachaaryavaan Veda
Commentators say on this :
To make a perfect child and an educated person one needs a wise mother, a learned father and a highly pious and well-versed teacher.
***
Item 600 Puram 183 on Four Castes and Manu 10-65
Caste is not important if one is educated
Puranānūru 183, Āriyappadai Kadantha Nedunchezhiyan sang this,
It is good to learn from a teacher, helping him during his troubles, giving him substantial wealth and learning with respect, without malice.
To those born in the same womb, a mother’s mind will be tender toward the man who is learned. The king will follow the path of the learned man, and not welcome and follow the path of a man just because he is first born.
Among the four groups in society, if a man from a lower group learns, even one from an upper group will come to him to learn with reverence.
One imbued with faith may acquire excellent learning even from a lowly person, special law even from the lowest, and the gem of a wife even from a base family.—(238)
***
Item 601 Zodiac
Some scholars thought Hindus learnt Zodiacal system from Greeks. But we have references to zodiac in Puram verse 117, Nedunal vadai line 160 ,
Paripatal 5-11 and Mullaippattu as well. Because of these references we may conclude Hindus knew zodiac even before the contacts with the Greeks. We have references to 12 months which was also based on the movement of Sun and Moon into zodiacal signs.
***
Item 602 Astrologer cum Poets
We have several poets in Sangam literature with the word Gani or Kani. It means they are well versed in astrological calculations;
Following poets were astrologers or astronomers –
Gani / kani medhaviyar
Ganiyan / kaniyan poonkundranar – Puram 192;
Kapilar – Puram 117;
Pakkudukkai nanganiyar – Puram 194.
Tamil word Arivan was also used for astrologers.
***
Item 603 Thousand years before Kapilar
PICTURE- Goddess Madurai Meenakshi appeared in Yaga Kundam as the daughter of Kanchanamala and Malayadwaja Pandya.
Puram verse 201 by Kapilar and 363 by Siruventeraiyar (Manduka Maharishi) show that the ancient history of Tamil Nadu is well known to Sangam Age poets.
Kapilar talks about 49 generations of Velir clan which means 1000 years before him. Velirs came to Tamil Nadu around 1000 BCE. Siru Venteraiyar speaks about the countless kings died on earth. He compared the dead kings to sand particles on the coast.
Brhad Aranyaka Upanishad also gives the names of over fifty generations. That puts the first Guru around 1800 BCE.
Puram.24, Narrinai 280 praised Velirs as an ancient clan.
Agastya brought them to Tamil Nadu along with 17 other groups/clans.
Who are Velirs?
Kapilar says they came out of Yaga Kunda (Sacrificial Fire Pit). Chalukyas also claimed that they came from Sacrificial Fire.
Velir= Velvi= Yaga/ Yajna.
In the north Four Rajpiut clans are said to have come out of Yaga Fire pit of Vasisthta Rishi.
Rajput Kshatriyas PARAMARA (PARAMAR), PRATIHARA (PARIHARA), CHALUKYA (SOLANKI) AND CAAHAMAANA (CHAUHAN) CAME FROM A SACRIFICIAL FIRE PIT ON MOUNT ABU. Col. Tod has reported it in his Annals of Antiquities of Rajasthan.
Skanda Purana 7-3-1 also confirms the Fire Pit matter.
இவர் யார் என்குவை ஆயின், இவரே, ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன் முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை படுமணி யானைப் பறம்பின் கோமான், நெடுமாப் பாரி மகளிர், யானே, 5 தந்தை தோழன், இவர் என் மகளிர், அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே, நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச் செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை உவரா ஈகைத் துவரை யாண்டு10 நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே விறல் போர் அண்ணல், தார் அணி யானைச் சேட்டு இருங்கோவே! ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய ஒலியற் கண்ணிப் புலிகடிமாஅல்! 15 யான் தர இவரைக் கொண்மதி, வான் கவித்து இருங்கடல் உடுத்த இவ் வையகத்து அருந்திறல் பொன்படு மால் வரைக் கிழவ! வென்வேல் உடலுநர் உட்கும் தானைக் கெடல் அருங்குரைய நாடு கிழவோயே. 20
Puranānūru 201, Poet Kapilar sang to King Irungōvēl, Thinai: Pādān, Thurai: Parisil If you ask who they are, they are his daughters, he who granted towns to those who came in need and earned great fame for gifting a chariot to a jasmine vine to climb, he who owned elephants with jingling bells, the lord of Parampu, the great king Pāri. They are my daughters now. As for me, I am their father’s friend, a Brahmin, a poet who has brought them here.
You are the best Vēlir of the Vēlir clan, with a heritage of forty-nine generations of Vēlirs who gave with love to those in need, who ruled Thuvarai with a fort with tall, huge walls that were made of copper, whose ancestors appeared in the sacrificial pit of a northern sage, O king who is victorious in battles!
O great king with garlanded elephants! O Pulikatimāl wearing a thick garland, who knows what a man’s responsibility is, and what your duty is to bards! I am offering them. Please accept them. Lord of the sky-high mountain that yields gold! You whose strength cannot be equaled on the earth that is covered by an arched sky and surrounded by the ocean, you whose army puts fear into enemies with victorious spears! O ruler of a land that can never be ruined!
AND TAMILS KNEW THOSANDS OF KINGS WHO RULED INDIA BEFORE SANGAM AGE!
புறநானூறு363, பாடியவர்: ஐயாதிச் சிறுவெண்தேரையார், திணை: பொதுவியல், துறை: பெருங்காஞ்சி இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம் உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றித் தாமே ஆண்ட ஏமம் காவலர் இடு திரை மணலினும் பலரே; சுடு பிணக் காடு பதியாகப் போகித் தத்தம் 5 நாடு பிறர் கொளச் சென்று மாய்ந்தனரே; அதனால் நீயும் கேண்மதி அத்தை! வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை மடங்கல் உண்மை மாயமோ அன்றே; கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு 10 வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண், உப்பு இலாஅ அவிப் புழுக்கல் கைக் கொண்டு பிறக்கு நோக்காது, இழிபிறப்பினோன் ஈயப் பெற்று, நிலம் கலனாக விலங்கு பலி மிசையும் 15 இன்னா வைகல் வாரா முன்னே, செய்ந்நீ முன்னிய வினையே, முந்நீர் வரைப்பு அகம் முழுதுடன் துறந்தே.
Kings who have ruled this huge land surrounded by the large ocean, without giving even an udai tree leaf size land for others, are many, more in numbers than the sand brought to the shores by waves. These kings who ruled have gone to the cremation grounds, as others took their land. So you too should listen! There is no one who has lived forever. Death is real! It is not an illusion!
Do what you intend to do and renounce totally, this world girded by ocean, before the sad day comes when you will be carried in a bier to the vast cremation ground filled with kalli trees with thorns, fed cooked rice without salt that will be placed on the ground, by a man performing funeral rites, who, without looking at your corpse, will offer you food.
(Vaidehi Herbert’s translations are used; thanks)
My comment
Ven Teraiyar= Manduka Maharishi ; this poem and another Purananuru poem which reports seven kings took power on the same day show clearly Hindus knew very ancient history of India.
To be continued………………………………….
Tags- Tamil Velir mystery, 49 generations, Fire pit , Yaga Kundam, Velirs , 1000 years before Kapilar,Purananuru wonders-37, Tamil Encyclopedia-77, One Thousand Interesting Facts -Part 77.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
36
नायमात्मा बलहीनेन लभ्यो न च प्रमादात्तपसो वाप्यलिङ्गात् । एतैरुपायैर्यतते यस्तु विद्वांस्तस्यैष आत्मा विशते ब्रह्मधाम ॥ ४ ॥
nāyamātmā balahīnena labhyo na ca pramādāttapaso vāpyaliṅgāt | etairupāyairyatate yastu vidvāṃstasyaiṣa ātmā viśate brahmadhāma || 4 ||
4. This Atman cannot he attained by one devoid of strength or by excitement or by tapas devoid of linga. But of the knower who strives with these aids, the Atman enters into the Brahman.MUNDAKOPANISHAD : CHAPTER-3. SECTION-2. MANTRAM-4.
Or
“The Self is not gained by the weak ( in body, mind, and intellect or Spirit ), nor by the insincere, nor by those practicing ( unintelligent ) austerities, but wise men who strive with vigour, attention and prosperity attain union with Brahmam.” MUNDAKOPANISHAD : CHAPTER-3. SECTION-2. MANTRAM-4.
****
37
ॐ असतो मा सद्गमय
तमसो मा ज्योतिर्गमय
मृत्योर्मा अमृतं गमय
ॐ शान्तिः शान्तिः शान्तिः
Transliteration
oṃ asato mā sadgamaya
tamaso mā jyotirgamaya
mṛtyormā amṛtaṃ gamaya — Brihadaranyaka Upanishad
om Lead me from the unreal to the real,
Lead me from darkness to light,
Lead me from death to immortality- Brihadaranyaka Upanishad
Or
Asato mā sadgamaya: Lead me from the unreal (illusion) to the real (truth/being).
Tamaso mā jyotirgamaya: Lead me from darkness (ignorance) to light (spiritual knowledge).
Mrityormā’mṛtaṃ gamaya: Lead me from death to immortality (realization of the eternal soul).
By realizing Him who is subtler than the subtlest who dwells in the midst of the chaos, who is the Creator of all things and is endowed with many forms, who is the non-dual Pervader of the universe and all good – by realizing Him one attains the supreme peace. Śvetāśvatara Upaniṣad (Chapter 4, Mantra 14).
1. Two inseparable companions of fine plumage perch on the self-same tree. One of the two feeds on the delicious fruit. The other not tasting of it looks on.
Shankara’s Commentary:
It is here that the Atman, conditioned in the subtle body to which ignorance, desire, karma and their unmanifested tendencies cling, and Isvara are perched like birds. Of these two so perched, one, i.e., kshetrajna occupying the subtle body eats, i.e., tastes from ignorance the fruits of karma marked as happiness and misery, palatable in many and diversified modes; the other, i.e., tbe lord, eternal, pure, intelligent and free in his nature, omniscient and conditioned by maya does not eat; for, lie is the director of both the eater and the thing eaten, by the fact of Ids mere existence as the eternal witness (of all); not tasting, he merely looks on; for, his mere witnessing is direction, as in the case of a king. Mundakopanishad 3-1
Kanchi Paramacharya (1894-1994) has pointed out that The Bible has taken this story from us.
Jeeve Atma = EVE in Old Testament
Param Atma = ADAM in Old Testament
Left rib = EVE = Ardhanaari (Left is Uma Right is Siva)
Samane vrukshe purusho nimagno Aneeshaya shochati muhyamanah Jushtam yad pashyatyanyameesham Asya mahimanamiti veetashokah
—Mundakopanishad 3-1 -2
On the same tree the bird which is involved with the tree on which it sitting is not in command of itself. It is affected by whatever is happening on the tree. It is affected by sorrows because it is caught in the trappings of maya. The bird which identifies with the Lord who transcends everything sees everything around him as his own manifestations and transcends all sorrows.
Or
The soul is the bird that sits immersed on the one common tree; but because he is not lord he is bewildered and has sorrow. But when he sees that other who is the Lord and beloved, he knows that all is His greatness and his sorrow passes away from him.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
36
நாயமாத்மா பலஹீனேன லேபியா ந ச
ப்ரமாதாத் தபஸோ வாப்யலிங்காத்
ஏதைருபாயைர்யததே யஸ்து வித்வான்ஸ்தஸ்யைஷ
ஆத்மா விசதே ப்ரஹ்மதாம
–முண்டகோபநிஷத் 3-4
இந்த ஆத்மாவானது பலவீனனால் அடையப்படுவதன்று; கவனமின்மையாலும் அடைய முடியாது; குறிக்கோள் இல்லாத தவத்தாலும் அடைய முடியாது; எந்த அறிவாளி இதை சரியான வழிகளில் அடைய முயற்ச்சி செய்கிறானோ அவனுக்கு இந்த ஆத்மா கிட்டுகிறது .
नायमात्मा बलहीनेन लभ्यो न च प्रमादात्तपसो वाप्यलिङ्गात् । एतैरुपायैर्यतते यस्तु विद्वांस्तस्यैष आत्मा विशते ब्रह्मधाम ॥ ४ ॥
nāyamātmā balahīnena labhyo na ca pramādāttapaso vāpyaliṅgāt | etairupāyairyatate yastu vidvāṃstasyaiṣa ātmā viśate brahmadhāma || 4 ||
****
37
அஸதோ மா ஸத்கமய
தமஸோ மா ஜ்யோதிர்கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய
–ப்ருஹத் ஆரண்யக உபநிஷத் 1-3-28
பொய்மையிலிருந்து என்னை மெய்ப்பொருளுக்கு அழைத்துச் செல்; அஞ்ஞான இருளிலிருந்து என்னை என்னை ஞான ஒளிக்கு அழைத்துச் செல்; மரணத்தினின்று என்னை மரணமில்லாத நிலைக்கு அழைத்துச் செல்.
ॐ असतो मा सद्गमय
तमसो मा ज्योतिर्गमय
मृत्योर्मा अमृतं गमय
ॐ शान्तिः शान्तिः शान्तिः
Transliteration
oṃ asato mā sadgamaya
tamaso mā jyotirgamaya
mṛtyormā amṛtaṃ gamaya — Brihadaranyaka Upanishad
****
38
ஸூக்ஷ்மாதி ஸூக்ஷ்மம் கலிலஸ்ய மத்யே
விச்வஸ்ய ஸ்ரஷ்டாரமநேகரூபம்
விச்வஸ்யையகம் பரிவேஷ்டிதாரம் ஞாத்வா
சிவம் சாந்தி மத்யந்தமேதி
— ஸ்வேதாச் வதத்ரோபநிஷதம் 4-14
சூக்ஷ்மத்திலும் அதி சூக்ஷ்மயிருப்பவனை — நுணுக்கரிய நுண்ணறிவு– பிரளயத்திலிருந்து உலகைப் படைத்தவனை , எண்ணற்ற வடிவங்களை எடுத்திருப்பவனை விஸ்வம் முழுதும் – பிரபஞ்சம் முழுதும்- நிறைந்திருக்கிறவனை , சிவனை, அனுபவத்தில் அறிகிறவன் எல்லையற்ற சாந்தியை அடைகிறான் – உலப்பிலா பேரின்பம் – அடைகிறான்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் வரங்கள் (63– 1) பிரம்மா மேகநாதனுக்கு இந்திரஜித் என்ற பெயரைக் கொடுத்து வரங்களை அளித்தது!
ச. நாகராஜன்
உத்தரகாண்டத்தின் முப்பதாவது ஸர்க்கமாக அமைவது ‘மேகநாதன் இந்திரஜித் என்ற பெயர் பெற்றது’ என்ற ஸர்க்கமாகும்.
ராவணனது புத்திரனான மேகநாதனால் எல்லா தேவர்களும் அடிமைப்படுத்தப்பட்டனர். அனைத்து தேவர்களும் பிரம்மாவைச் சந்தித்து எங்களை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என்று வேண்டினர்.
உடனே பிரம்மா ராவணனிடம் சென்று, “உனது புதல்வனது பராக்ரமத்தால் நான் சந்தோஷம் அடைகிறேன். அவன் இந்திரஜித்து என்று விளங்குவான்” என்றார்.
ராவண – ராவண தவ – உனது புத்ர: – புதல்வன் அதிபல: – ஒப்புயர்வில்லாத போர்வீரனாகவும் வீர்யவான் – மகா சாமர்த்தியசாலியாகவும் பரிக்யாத: – பிரசித்தி பெற்று விட்டான் ஜகதி – உலகில் அயம் ச – இவன் இந்த்ரஜித் – இந்த்ரஜித் என்று விளங்குவான்
பிரம்மா இப்படிக் கூறி தேவர்களை சுதந்திரமாக விடக் கூறினார். உடனே, அங்கிருந்த மேகநாதன் என்னும் இந்த்ரஜித், அவரிடம் “அமரத்வமஹம் தேவ விருணே யத்யேஷ முச்யதே| – தேவ, – தேவ இவர்கள் சுதந்திரம் பெற வேண்டியது என்கிற பட்சத்தில் என்றைக்கும் மரணமில்லாமை ஒன்றையே நான் வரமாக பிரார்த்திக்கிறேன் “ என்று விண்ணப்பம் செய்தான்.
உடனே பிரம்மா,
“நாஸ்தி சர்வாமரத்வம் இ கஸ்யசித்ப்ராணிநோ புவி | சதுஷ்பத: பக்ஷியஸ்ச பூதானாம் வா மஹௌஜஸாம்” என்றார்.
உத்தரகாண்டம் முப்பதாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 13
புவி – பூமியில் சதுஷ்பத – நாற்கால் பிராணிகளுக்கும் பக்ஷிஸ்ச – பறவைகளுக்கும் ப்ராணின ச – மனிதனுக்கும் மஹௌஜஸாம் – மஹா கீர்த்தி பெற்ற பூதானாம் வா – அடியார்களுக்கும் கூட கஸ்யசித் ஹி – ஏதொன்றுக்குமே சர்வாமரத்வம் – எப்போதுமே மரணமின்மை என்பது ந அஸ்தி – கிடையாது
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
WORDS BEGINNING WITH “P”
பைலர் – வேத வியாசரின் நான்கு சீடர்களில் ஒருவர் பைலர்; இவருக்கு ரிக்வேதத்தைக் கற்பித்து அதைப் பரப்பும் பொறுப்பினை வேத வியாசர் வழங்கினார் . ஏனைய மூன்று சீடர்கள் சுமந்து, ஜைமினி, வைஸம்பாயான ஆவர். பைலர் (पैल) ரிக் வேதத்தை, இந்திரப்ரமதி, பாஸ்கலயென்ற இருவருக்கு ஓதுவித்தார்; யுதிஷ்த்திரர் நடத்திய ராஜ சூய யாகத்துக்குப் பைலர் வந்த செய்தியை மஹாபாரதம் நமக்குத் தெரிவிக்கிறது .
***
பாஞ்சாலம் – தற்போது பஞ்சாப்என்று பெயர் ; பஞ்சாப் என்றால் ஐந்து நதிகள் ஓடும் பிரதேசம் என்று பொருள் .
***
பாஞ்சாலி – திரௌபதியின் பெயர் ; பாஞ்சாலத்தை ஆண்ட துருபதனின் புதல்வி என்பதால் திரௌபதி என்றும் அழைக்கப்பட்டாள் ; அவள் பேரழகி , ஆனால் கறுப்பி; அதனால் கிருஷ்ணா என்றும் பெயர் .
***
பஞ்சதந்திரம் – விஷ்ணு சர்மா என்ற பிராமணன், சம்ஸ்க்ருத மொழியில் எழுதிய நூல் பஞ்சதந்திரம் ஆகும் . பறவைகளையும் விலங்குகளையும் பயன்படுத்தி அரசிளங்குமாரர்களுக்கு நீதி நெறிகளையும், ஆட்சி செய்யும் முறையையும் விளக்கிய நூல் இது சுலோகத்துக்கு சுலோகம் ஆயிரக்கணக்கான பொன்மொழிகள் நிறைந்தது .2000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான இந்த நூலை பாரசீக மொழியில்1500 ஆண்டுகளுக்கு முன்னர் மொழிபெயர்த்ததால் உலகம் முழுதும் பரவியது.
ஐந்து தந்திரங்கள் பெயர்களும் அர்த்தமும் :
1.மித்ர-பேதம் – நண்பர்களுக்கு இடையே சண்டையை உருவாக்குதல் ;
2.மித்ர-லாபம் – நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுதல்;
3.காகோலுகியம்– காகம் + உலூகம்= காகத்துக்கு ஆந்தைக்கும் இடையே வளர்ந்த பகைமை ;
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது- 471 என்று வள்ளுவரும் இதை மொழிபெயர்த்துள்ளார்.
4.லப்தப்பிரநாசம் – கிடைத்ததை இழத்தல்;
5.அபரீக்ஷிதாகாரகம் – பதறாத காரியம் சிதறாது
பல குறள்கள், பஞ்ச தந்திரக் கதைகளின் எதிரொலி என்பதை எனது ஆராய்ச்சிக்கட்டுரையில் எழுதியுள்ளேன்.
***
பாண்டவர்கள் : பாண்டுவின் ஐந்து (பஞ்ச) புதல்வர்கள் ; யுதிஷ்டிரன் , பீமன், அர்ஜுனன் என்ற முதல் மூவர் குந்தி மூலமும் நகுலன், சகாதேவன் என்ற இரட்டையர் மாத்ரி மூலமும் பிறந்தார்கள். 13 ஆண்டு வனவாசத்துக்குப் பின்னர் கெளரவர்களுடன் போரிட்டு வெற்றி பெற்று ஹஸ்தினாபுரத்திலிருந்து ஆட்சிபுரிந்தார்கள் ; இதை உலகப் புகழ்பெற்ற மஹாபாரதம் சம்ஸ்க்ருத மொழியில் ஒரு லட்சம் ஸ்லோகங்களில் வருணிக்கிறது.
***
பாண்டியர்: தென் தமிழ் நாட்டினை 2300 ஆண்டுகளுக்கு முன் ஆளத் துவங்கினார்கள். மதுரையை முஸ்லிம்கள் பதிமூன்றாம் நூற்றாண்டில் கைப்பற்றியதோடு பாண்டியர்கள் மறைந்தனர் ; பின்னர் விஜய நகரப்பேரரசர்கள் மதுரையைக் கைப்பற்றி இந்து ஆட்சியை நிறுவினார்கள் . அகஸ்திய மஹரிஷியோடு தொடர்புபடுத்தி, காளிதாசன் குறிப்பிட்ட ஒரே தமிழ் மன்னர் பாண்டியர்தான்! இவர்களிலு மிகப் பழைய மன்னரான பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி (மீனாட்சி சுந்தரேஸ்வரர் ) கோவிலை வலம் வந்ததை புறநானூறு பாடுகிறது. மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவி தமிழை வளர்த்தார்கள். முத்துக்கள் மூலமும் தமிழ் மொழி மூலமும் உலகப் புகழ்பெற்றார்கள்.
***
பாண்டு: பஞ்ச பாண்டவர்களின் தந்தை; விசித்திர வீர்யன் என்ற மன்னர் இறந்த பின்னர் அவருடைய மனைவி அம்பாலிகா மூலம் வியாஸருக்குப் பிள்ளையாகப் பிறந்தார் ; அந்தக்காலத்தில் ஆட்சி செய்ய முறையான அரச குமாரன் இல்லாவிடில் ஒரு ரிஷி மூலம் குழந்தையைப் பெறும் முறை இருந்ததால் அம்பாலிகாவும் வியாசரும் இணைந்தனர் ; பிறக்கும் போதே பாண்டு ரோகத்துடன் பிறந்தார்; அவருடைய அண்ணன் திருத்த ராஷ்டிரன் பிறவிக்குருடு என்பதால் ஹஸ்தினாபுரத்தின் அரசுக் கட்டில் ஏறினார் ; குந்தி, மாத்ரி என்ற இரண்டு அரசிளங் குமரிகளை மணந்தார்.
ஒரு முறை பாண்டு காட்டிற்கு வேட்டையாடச் சென்றார்; இரண்டு மான்கள் கலவி இன்பத்தில் ஈடுபட்டபோது அதன் மீது அம்புகளை எய்தார்; ஆனால் அவை மான்கள் அல்ல; மான் தோல் போர்த்திய கிண்டம ரிஷியும் அவருடைய மனைவியும் ஆவர்; சாகும்போது கிண்டம ரிஷி ஒரு சாபம் போட்டார்; நீ கலவி இன்பத்தில் ஈடுபட்டால் அன்றே உனக்கு மரணம் சம்பவிக்கும் என்று சாபம் கொடுத்தார் ; ஆண்டுகள் பல உருண்டோடின ; ஒரு வசந்த காலத்தில் காம உணர்வு மேம்படவே மாத்ரி யை நெருங்கினார் பாண்டு; மாரடைப்பில் இறந்தார்; தன்னால்தானே இந்த மரணம் ஏற்பட்டது என்ற குற்ற உணர்வு மேம்படவே மாத்ரி, தனது இரண்டு புதல்வர்களைக் குந்தி தேவியிடம் ஒப்படைத்துவிட்டுத் தீப்பாய்ந்து உயிர்விட்டார் (இதே போல பூதப் பாண்டியன் தேவியும் தீப்பாய்ந்து கணவன் சிதையில் எரிந்த செய்தி புறநானுற்றில் உள்ளது.
***
பண்டிட்/ பண்டிதர்
சம்ஸ்க்ருத மொழி அல்லது அதிலுள்ள நூல்களைக் கற்ற சான்றோனுக்கு பண்டிட் என்று பொருள் ; காஷமீர் மாநிலத்தில் பிராமணர்களை பண்டிட் என்பார்கள் ; இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவும் பண்டிட் வம்சத்தில் பிறந்தவர் ; ஆயினும் பிராமணராக வாழவில்லை .
***
பாணினி- உலகத்தின் முதல் இலக்கண புஸ்தகத்தை சம்ஸ்க்ருத மொழியில் எழுதி அஷ்டாத்யாயி – எட்டு அத்தியாயங்கள் – என்று பெயர் சூட்டினார் ; உலகம் வியக்கும் வண்ணம், மிகச் சுருக்கமாக நாலாயிரம் சூத்திரங்களில் இலக்கணத்தைச் செப்பினார் ; இவர் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக கோட்ஸ்டக்கர் என்ற அறிஞர் காரணங்களுடன் அற்புதமாக விளக்கினார் ; அவருடைய நூலில் புத்த மதச் சுவடே இல்லை என்பதால் புத்தர் காலத்துக்கு முந்தியவர் என்பது தெளிவு ; சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற சூத்திர முறை இவரால் பரவியது .தற்கால பாக்கிஸ்தானில் உள்ள சாலத்துராவில் பிறந்தார் இவருக்குப் பல நூற்றாண்டு களுக்குப் பின்னர் வந்த பதஞ்சலி முனிவர் மஹாபாஷ்யம் என்ற விரிவுரை எழுதி – வியாக்கியானம் செய்து- பாணினியின் புகழைப் பரப்பினார். ஒரு மொழியை விஞ்ஞான முறையில் அணுகிய முதல்வர் பாணினி . இவர்கள் இருவருக்குமிடையே வாழ்ந்த காத்யாயன வரருசி என்பவர் சில குறிப்புகளை எழுதியதால் மூவரையும் முநித்ரயம் – மூன்று முனிவர்கள் – என்று அறிஞர்கள் போற்றுவர்
வாக்யகாரம் வரருசிம், பாஷ்யகாரம் பதஞ்சலிம்
பாணிணீம் சூத்ரகாரம் ச ப்ரணதோஸ்மீ முனித்ரயம்
–என்று துதித்து சம்ஸ்க்ருத மாணவர்கள் பாடத்தைத் துவங்குவார்கள்; பாணினி தனக்கு முன்னர் வாழ்ந்த பல இலக்கண கர்த்தாக்களைக் குறிப்பிடுகிறார்; அவர்களது நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை ; இலக்கியமின்றேல் இலக்கணமில்லை என்பது தமிழ்ச் சான்றோர்களின் கண்டுபிடிப்பு; ஆகையால் பாணினிக்கு முன்னர் பிரமாண்டமான சம்ஸ்க்ருத இலக்கியம் இருந்திருக்க வேண்டும்! அத்தனையும் அழிந்து போயிற்று ; அவர் வேத கால இலக்கியத்துக்கும் தமது கால இலக்கியத்துக்கும் உள்ள வேறு பாடுகளையும் சுட்டிக்காட்டுவதால் புத்தரின் காலத்துக்கு முன்னர் மிகப்பெரிய சம்ஸ்க்ருத நூல்கள் இருந்தன என்பது வெள்ளிடை மலையென விளங்கும்.
உபவர்ஷ, பராசர்ய, கரமாண்ட, சாகடயான, அபிதலி , சாகல்ய முதலிய இலக்கண வித்தகர்களின் பெயர்களை பாணினி குறிப்பிடுவதால் அவருக்கும் முன்னர் இலக்கண நூல்கள் இருந்ததை அறிய முடிகிறது.
அஷ்டாத்யாயி நூலினை நன்றாகக் கற்ற ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பொற்காசுகளைத் தருவதாக காஷ்மீர் மன்னர் அறிவித்தைதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கல்ஹணர் எழுதிய ராஜ தரங்கிணி நமக்கு எடுத்துரைக்கிறது .
***
பராசரர்
(पराशर) முனிவர் பராசரர், சக்தி என்பவரின் புதல்வர்; வசிஷ்டர்-அருந்ததி ஆகியோரின் பேரர்; பராசரரின் தாயாருக்கு அத்ருச்யந்தி, மத்ஸ்யவதி/ மீனவச்சி, , சத்யவதி என்று பல பெயர்கள் உள்ளன.
லட்சக் கணக்கான இந்துக்கள் தினமும் விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்கிறார்கள்; இந்துக்கள் ஜீனியாலஜி GENEOLOGY எனப்படும் வம்ச பரம்பரை இயலில் வல்லவர்கள் என்பதால் தினமும் வியாசரின் வம்ச பரம்பரையைச் சொல்வர் ; பராசரரின் புதல்வர் வியாசர் .
நாரதர் ஒரு அரிய பாரிஜாத மலரை தேவலோகத்திலிருந்து கொண்டுவந்து கிருஷ்ண பரமாத்மாவிடம் கொடுத்தார். அவர் அதை யாரிடம் கொண்டு கொடுக்கிறார் என்று பார்த்துக் கொண்டே நின்றார். அவருக்கும் தெரியும் கிருஷ்ணருக்குப் பல மனைவியர். அவர்களில் ருக்மணிக்கும் சத்யபாமாவுக்கும் இடையே கொஞ்சம் சலசலப்பு உண்டு என்று.
அவர் எதிர்பார்த்த மாதிரியே கொஞ்சம் சுவையான செய்தி கிடைத்தது. அந்த பாரிஜாத மலரை, கொஞ்சமும் தயங்காமல், யோசிக்காமல் ருக்மணியிடம் கொடுத்தார் கிருஷ்ண பரமாத்மா .
நாரதர், நாராயண, நாராயண – என்று உச்சரித்தவாறே விரைந்தார். சத்யபாமாவைக் கண்டார். ஒன்றுமே பேசாமல் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு சோகமே உருவாக நின்றார்
நாரதர் சொன்னார்: ஒன்றுமில்லை, அரிய, பெரிய பாரிஜாத மலர் ஒன்றை உங்களுக்காகப் பறித்துக் கொண்டுவந்து கிருஷ்ணரிடம் கொடுத்தேன். நீங்கள் அவருக்கு மிகவும் பிடித்தமானவரே உங்களிடம் அது வந்துவிடும் என்று நினைத்தேன். அவரோ ஒரு நொடியும் தாமதிக்காமல் ருக்மணியிடம் கொடுத்துவிட்டார். அதுதான் எனக்கு பெரிய கவலை, துக்கம
சத்யபாமா சொன்னார்: அப்படியா சேதி? இப்போதே அந்த மலரை இங்கே கொண்டுவரச் சொல்லுகிறேன் என்றாள்.நாரதர்: வேண்டாம், வேண்டாம்; அது ஒரு மலர்தானே. மரத்தையே கொண்டுவரச் சொல்லி கிருஷ்ணனிடம் கட்டளை இடுங்கள் என்றார். சத்யபாமா கோபமாக இருப்பதை அறிந்த கிருஷ்ணன், காரணத்தை விசாரித்து அறிந்தார். பாரிஜாத மரத்தைக்கொண்டு வருவதாக வாக்கு கொடுத்துவிட்டுப் புறப்பட்டார்
இதற்குள் நாரதர் இந்திர லோகத்துக்குச் சென்று, ” இந்திரா, வர வர லோகத்தில் திருட்டு பயம் அதிகமாகி வருகிறது. உன் பாரிஜாத மரத்தைக் கொஞ்சம் கண்காணித்து வா” என்று சொல்லிவிட்டுப் போனார்.
கிருஷ்ணன், பாரிஜாத மரத்தை அடியோடு பெயர்ப்பதை அறிந்து அவரைக் கையும் களவுமாகப் பிடித்தார் இந்திரன், .
கண்ணன் உண்மைக் காரணத்தைச் சொன்னவுடன் அவருக்குப் பரிதாபம் ஏற்பட்டது. கண்ணனும் அதை எடுத்துவந்து சத்யபாமாவின் தோட்டத்தில் ஊன்றி வைத்தான்.
கண்ணன் இறந்தவுடன் துவாரகாபுரி கடலுக்குள் சென்றது. அப்போது அந்த பாரிஜாத மரம் இந்திரலோகத்துக்கே சென்றுவிட்டது.
இப்பொழுது உத்தரப் பிரதேசத்தில் கிட்டோர் என்னுமிடத்தில் உள்ள ஒரு மரம் பாரிஜாதம் என்று கருதப்படுவதாக விக்கிபீடியா படம் போட்டுள்ளது. தமிழ்நாட்டில் பவள மல்லிகைக்கும் பாரிஜாதம் என்ற பெயர் உண்டு.
அபிமன்யு இறந்த பின்னர் அவருக்குப் பிறந்தவர் பரீக்ஷித் ; உத்தராவின் கர்ப்பத்தில் பரீக்ஷித் இருந்தபோது அஸ்வத்தாமா, பிரம்மாஸ்திரம் என்னும் அணு ஆயுதத்தை ஏவினார்; இது உத்தராவின் கர்ப்பத்தைத் தாக்காமல் இருப்பதற்கு கிருஷ்ணர் ஏற்பாடு செய்தார் ; பின்னர் பிறந்த பரீட்சித் பாண்டவ வம்ச ஆட்சியை நீடித்தார்
பரீட்சித் மன்னன் காட்டுக்கு வேட்டை ஆடச் சென்றபோது சமீக என்ற முனிவரை அவமானப் படுத்தவே அவர் இன்னும் ஒரே வாரத்தில் நீ ஒரு நாகர் கையால் ( பாம்பு கடித்து ) இறப்பாய் என்று சாபமிட்டார். அவருடைய நாகா இன நண்பர் தட்சகனுக்கு இந்தப் பணியைக் கொடுத்தார். ஒரு வார காலத்துக்குள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக அரண்மனை “செக்யூரிட்டியை” அதிகப்படுத்தினார். ஆனால் தட்சகன் ஒரு பழக் கூடையில் ஒளிந்துகொண்டு அரண்மனைக்குள் புகுந்து பரீட்சித் மன்னனைப் படுகொலை செய்தான்.
பரீட்சித் மன்னன் படுகொலை, பாண்டவ வம்சத்துக்கு ஒரு களங்கமாக அமைந்தது. உடனே மன்னனின் மகன் ஜனமேஜயன் நாகர்களைக் கண்ட இடத்தில் கொல்லுமாறு உத்தரவிட்டான். இந்த நாகர் படுகொலை மக்களுக்கு பெரிய கவலையைத் தந்தது.
பிராமணர் சமாதான உடன்பாடு
அந்தக் காலத்தில் கலப்புத் திருமணம் நிறைய நடந்தது. ஜரத்காரு என்ற ஒரு பிராமண ரிஷி / முனிவர் ஒரு நாக இனப் பெண்ணை மணந்து கொண்டார். அந்தப் பிராமண முனி ஜரத்காருவுக்கு ஆஸ்திக முனிவர் என்று ஒரு மகன் இருந்தார். அவருக்கு அரசாங்கத்தில் நல்ல செல்வாக்கு. ஆக அவரைத் தேர்ந்தெடுத்து சமாதான தூது அனுப்பினர். அவருடைய தூது வெற்றி பெற்றது. நாகர்கள் படுகொலை நிறுத்தப்பட்டது. அவர்களும் பாண்டவ வம்சத்தைத் தொடுவதில்லை என்று சபதம் செய்தனர்.
விந்தையிலும் விந்தை! 5000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட இந்த சமாதான உடன்பாட்டை இன்றும் பிராமணர்கள் மூன்று வேளை சந்தியாவந்தனத்தில் ஒரு மந்திரமாக சொல்லுகிறார்கள் ( நர்மதாயை நம: என்னும் இந்த மந்திரம் நர்மதை நதிக்கரையில் நடந்த சர்ப்ப யாகத்தை நினைவு படுத்துகிறது) அந்த மந்திரத்தில் நாகர்கள், ஜரத்காரு, ஜனமேஜயன், ஆஸ்தீகர் ஆகிய அனைவரும் நினைவு கூறப்பட்டு புகழப் படுகின்றனர். உலகிலேயே மிகப் பழைய சமாதான உடன்பாடு இதுதான்!!
***
இதற்கு முன் நடந்த சம்பவமே நாகர்- யாதவர் மோதலுக்கு காரணமாக அமைந்தது ; அந்தக் கதை பின் வருமாறு:
நாகா- கிருஷ்ண பரமாத்மா மோதல்
மஹா பாரத காலத்தில் அர்ஜுனனும் கிருஷ்ணனும் காடுகளை அழித்து நகரங்களை உண்டாக்கி மக்களைக் குடியமர்த்தும் நல்ல எண்ணத்தோடு பெரிய காடுகளை எரித்தனர். காடுகளில் வாழ்ந்த பழங்குடி நாகா இன மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும் அர்ஜுனனும் கண்ணனும் தன் போக்கில் காடுகளை எரிக்கவே நிறைய பேர் இறந்தனர். இது தவிர காளீயன் என்னும் நாகர் தலைவர் இருந்த இடத்தில் மாடு மேய்க்கச் சென்ற இடையர்களுக்கும் காளீயனுக்கும் மோதல் வலுக்கவே அவனையும் கண்ணன் கொன்றான். இந்த மேய்ச்சல் நிலத் தகராறை பிற்கால புராண ஆசிரியர்கள் காளீயன் என்னும் பாம்பைக் கொன்றான் என்று கதை கட்டி விட்டனர். உண்மையில் காளியனும் ஒரு மனிதனே. அவர்கள் நாகர்/ பாம்பு சின்னத்தை அணிந்ததால் நாகர்கள் எனப்பட்டனர்.
யாதவர்கள் மீதும் பாண்டவர்கள் மீதும் கோபம் கொண்ட நாகர்கள் பழிவாங்குவதற்காக ஒரு தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தனர். மய தானவன் என்ற ஒரு நாகர் தலைவன் மட்டும் அர்ஜுனன் கிருஷ்ணர் தரப்பில் இருந்தான்.அவனைக் கானகத் தீயிலிருந்து மீட்டதால் பாண்டவர்களுக்கு உலகம் வியக்கும் அரண்மணையைக் கட்டித் தந்தான். மஹாபாரத யுத்தம் முடிந்தபின், கிருஷ்ணன் ஒரு வேடனின் அம்புக்குப் பலியானான். பாண்டவ சகோதரர் ஐவரும் பழைய கால வழக்கப்படி வடக்கு நோக்கிச் சென்று பாத யாத்திரை செய்து உயிர்த் தியாகம் செய்தனர். அர்ஜுனனின் பெயரன் பரீக்ஷித் ஆட்சிக்கு வந்தான்.
மய தானவன் தென் அமெரிக்காவுக்குள் குடியேறி மாயா நாகரீகத்தை ஸ்தாபித்தான்.
Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 76; இந்து மத கலைச்சொல் அகராதி- 76 , பரீக்ஷித், பைலர், பஞ்சதந்திரம், பாணினி, பாரிஜாத மலர்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
July 1 National Doctors’day மருத்துவர் தினம்
1-7-2026 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள பொன்மொழிகள்!
புகழ் பெற்ற மருத்துவப் பொன்மொழிகள்!
ச. நாகராஜன்
மக்களிடம் டாக்டர்களின் முதல் கடமை எப்படி வியாதிக்கு உள்ளாகாமல் இருப்பது என்பதை போதிப்பது தான். டாக்டர் என்ற வார்த்தை லத்தீன் மொழியிலிருந்து பிறந்தது. இதன் அர்த்தம் போதிப்பவர் என்பது தான்!
– பிரபல அமெரிக்க டாக்டரான ஆண்ட்ரூ வெய்ல்
ஒரு மருத்துவராக ஒருவருடைய வேலை என்னவெனில் நல்ல உறுதிமொழியை அளிப்பது தான். அதை விட முக்கியம் தான் கொடுத்த உறுதிமொழியை அவர் காப்பாற்றுவது தான்.
– ஐரிஷ் பெண்மணியான டாக்டர் பிக்ஸி மக்கென்னா. டி.வி.
நிகழ்ச்சிகளில் பிரபலமானவர். டாகுமெண்டரி தயாரிப்பாளர்
எவ்வளவு வயதாகியிருந்தாலும் சரி, எவ்வளவு எடையைக் கொண்டிருந்தாலும் சரி, இப்பொழுதும் கூட நீங்கள் உங்கள் உடல்நலத்தைக் கட்டுப்படுத்தலாம்.
– அமெரிக்க நியூரோ சர்ஜன் ஹார்வி குஷிங். மூளை அறுவை சிகிச்சையில் பெயர் பெற்றவர்.
உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது அறிவு சரியாக வெளிப்படாது, பலத்தால் சண்டை போட முடியாது, நுண்ணறிவைப் பயன்படுத்த முடியாது, கலை உருவாகாது, பணம் பயனற்ற ஒன்றாக இருக்கும்.
– கிரேக்க மருத்துவரான ஹிரோபிலிஸ். பண்டைய நாட்களில் கிரேக்கத்தில் பிரபலமான மருத்துவர்.
மருத்துவத்தில் இறுதி நிலையாக நாம் அடைய வேண்டியது மன நல மருத்துவம் தான். ஏராளமானோர் தனிமையில் வாடுகிறார்கள். ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.ஆதரவின்றி இருக்கிறார்கள். மீள முடியாமல் சமாளிக்கவும் முடியாமல் தவிக்கிறார்கள்.
– பிரிட்டிஷ் டி.வி. டாக்டர் கிறிஸ்டியன் ஜெஸன் மனநல மருத்துவம் பற்றி எடுத்துரைத்து அனைவரது கவனத்தையும் பெற்றவர்.
வியாதியைப் பரிசோதிக்கும் போது நாம் உடற்கூறியல், உடலியல் மற்றும் உயிரியல் பற்றி நல்ல அறிவைப் பெறுகிறோம். நோயாளியைப் பரிசோதிக்கும் போது வாழ்க்கையைப் பற்றிய அறிவைப் பெறுகிறோம்.
– ஆலிவர் சாக்ஸ் நியூரோ சர்ஜன்
ஒரு டாக்டராகட்டும் அல்லது எந்த மனிதராகட்டும் அவரது முதல் குறிக்கோள் நோயாளியின் மரணத்தைத் தள்ளிப் போடுவதாக மட்டும் இருக்கக் கூடாது, ஆனால் அவரது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.
– அமெரிக்க டாக்டரான பாட்ச் ஆடம்ஸ் (இவரது பெயரிலேயே இந்த வசனம் ராபின்ஸ் வில்லியம்ஸ் வாயிலாக திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது)
நல்ல டாக்டர் குறைந்த மருந்துகளையே அளிப்பார்.
– பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
எங்கே மருத்துவம் விரும்பப்படுகிறதோ அங்கே மனித குலத்தின் மீதான அன்பும் இருக்கிறது.
– ஹிப்போக்ரேடஸ்
ஒரு நல்ல மருத்துவர் வியாதியைக் குணப்படுத்துவார். ஆனால் ஆகப்பெரிய மருத்துவரோ வியாதியுள்ள நோயாளியைக் குணப்படுத்துவார்.
– வில்லியம் ஆஸ்லர்
ஒருவர் உயிரைக் காப்பாற்றினால் நீங்கள் ஒரு ஹீரோ. நூறு பேர்களைக் காப்பாற்றினால் நீங்கள் ஒரு நர்ஸ்
– யாரோ
மருத்துவ உலகின் இதயம் நர்ஸ்களே
– டோனா வில்க் கார்டில்லோ
நன்கு உற்று கவனிப்பது, பகுத்தறிவால் ஆராய்வது, மனிதத்தன்மையைப் புரிந்து கொள்வது, தைரியம் – இவையே ஒரு நல்ல மருத்துவரை உருவாக்கும்.
– மார்டின் ஹெச். பிஷர்
மருத்துவத்தின் நோக்கம் வியாதியைக் குணப்படுத்தி நீடித்த வாழ்வைத் தருவது தான். ஆனால் மருத்துவத்தின் இறுதி லட்சியம் ஒரு மருத்துவரின் தேவையை இல்லாமல் செய்வது தான்!
– வில்லியம் ஜே. மாயோ
மருத்துவ உலகில் ஒரு டாக்டருக்குக் கிடைக்கும் சிறந்த பரிசு நோயாளியின் நன்றியும் அவரது புன்சிரிப்பும் தான் \
– யாரோ
பச்யேம சரத சதம் – (சூரியனை நூறாண்டு கண்டு வணங்குவோம்)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செங்கல்வராய பிள்ளை — உ வே சா சந்திப்பு
தமிழ் அறிஞர் செங்கல்வராய பிள்ளை, மிகப்பெரிய தமிழ் அறிஞர் உ வே சாமிநாத ஐயரைச் சந்தித்தார் . முருகன் பற்றிய நூல்களைக் கொடுத்தார். அவைகளை வாங்கிக்கொண்ட அவர், பிள்ளைவாளின் கைகளைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டார் ; ஒரு பிராமணன் இப்படிச் செய்கிறாரே என்று பிள்ளைவாளுக்கு ஒரே ஷாக் ! ஏது செய்வதென்று ஒரே திகைப்பு ; வெளியே போய்க்கொண்டே இருந்த போது, ஒரு ஐடியா பிளாஷ் ஆனது ; திரும்பி வந்தார்; உ வே சா வின் கால்களைத் தொட்டுக்கண்களில் ஒற்றிக்கொண்டார். இப்போது அய்யர்வாளுக்கு பெரிய ஷாக் ; அவர்களிடையே நடந்த சம்பாஷணையை தினமணியில் இரு முறை படித்த பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் paper cutting-ஐ வெளியே எறியப்போகும் முன், அந்த சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
Please see the paper cutting
–subham—
Tags- அய்யர்வாள் காலும் புனிதம், பிள்ளைவாள் கையும் புனிதம், செங்கல்வராய பிள்ளை உ வே சா சந்திப்பு