மஹாத்மாவும் மகா கவியும் (Post No.4094)

Written by S NAGARAJAN

 

Date: 19 July 2017

 

Time uploaded in London:- 5-56 am

 

 

Post No.4094

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

மஹாத்மாவும் மகா கவியும்

 

 

பாரதி இயல்  

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 35

மஹாத்மாவும் மகா கவியும்! – கல்கியின் கட்டுரைகள்!

 

ச.நாகராஜன்

 

பாரதியாரைப் போற்றி கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி ஆற்றிய தொண்டைத் தமிழ்நாடு நன்கு அறியும்.

 

அவர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு காந்தி பக்தராகத் திகழ்ந்ததோடு தனது கல்கி பத்திரிகையில் அவ்வப்பொழுது மஹாத்மாவைப் போற்றி சீரிய கட்டுரைகள் பலவற்றையும் எழுதி வந்தார்.

 

மஹாத்மாவும் மகாகவியும் என்ற நூல் மஹாத்மாவைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைகளையும் மகாகவிக்கு எட்டயபுரத்தில் எழுப்பப்பட்ட ஞாபகச் சின்ன விழா பற்றிய கட்டுரைகளையும் தொகுத்து வழங்குகிறது.

 

தலைப்பைப் பார்த்து மஹாத்மாவும் மகாகவி பாரதியாரும் சந்தித்த விஷயத்தையோ அவர்கள் தொடர்புடனான கட்டுரைகளோ இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் என்று நினைத்தவர் ஏமாந்தே போவர்.

 

காந்திஜி பற்றிய பத்து கட்டுரைகளும் பாரதியார் பற்றிய எட்டு கட்டுரைகளும் கொண்ட 103 பக்கங்கள் அடங்கிய இந்தச் சிறு நூல் 1957ஆம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது.

 

வெளியிட்டோர் : பாரதி பதிப்பகம், தியாகராய நகர், சென்னை -17.

எட்டயபுரத்தில் நடந்த மாபெரும் விழா பற்றி மனம் நெகிழ்ந்து  வந்தனம் என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை பாரதியார் பற்றிய எட்டுக் கட்டுரைகளில் முதலாவதாக அமைகிறது.

 

 

அதில் கல்கி கூறுகிறார்: “ என்னுடைய சொந்த அனுபவத்தில், மனிதனுடைய புலன்களுக்கும் அறிவுக்கும் எட்டாத சக்தி ஒன்று இருப்பதாக நான் உணர்ந்திருக்கிறேன். அத்தகைய சக்தியானது வெறும் குருட்டுத்தனமான சக்தியல்ல! ஏதோ ஒரு ஒழுங்கின்படி, ஒரு நியதியின்படி, இந்த உலகத்தையும் இதில் நடைபெறும் சகல காரியங்களையும் நடத்தி வருகிறது என்றும் நான் நம்புகிறேன்.

 

அந்த சக்தியானது தற்சமயம் தமிழ்நாட்டை ஒரு மகோந்நதமான நிலைக்குக் கொண்டுபோகும் மார்க்கத்தில் நடத்திக் கொண்டு வருகிறது என்று நான் பரிபூரணமாய் நம்புகிறேன். பாரதியார் பாடிப் பரவியுள்ள பராசக்தி அதுதான் போலும்.

 

அந்த மகாசக்தியின் காரணமாகத்தான் எட்டயபுரத்தில் நாம்  கண்ட அற்புதம் நிகழ்ந்தது என்று எனக்குத் தோன்றுகிறது. மற்றப்படி மனிதப் பிரயத்தனத்தினால்  மட்டும் அவ்வளவு மகத்தான ஒரு வைபவம் நடந்திருக்கக்கூடும் என்று என்னால் நம்ப முடியவில்லை.

 

கல்கி அவர்கள் தனது சக பத்திரிகாசிரியர்களுடன் தான் நடத்திய விவாதங்களைக் குறிப்பிட்டு அதையெல்லாம் மனதில் கொள்ளாமல் அனைவரும் இந்த மாபெரும் விழாவிற்கு ஒத்துழைப்புக் கொடுதததற்கு நன்றி தெரிவிக்கிறார்.

“ஸி.ஆர்.சீனிவாசன் அவர்களைப் போன்ற பத்திரிகாசிரியர்களும் வ.ரா போன்ற எழுத்தாளர்களும் மற்றும் பல தமிழன்பர்களும் பல காலமாகச் செய்து வந்த இடைவிடாத பாரதி பிரசாரத்தின் பலனாகத்தான் இப்போது எட்டயபுர ஞாபகச்சின்னம் ஏற்படுகின்றது” – கல்கியின் இந்த வார்த்தைகள் தமிழ்நாடே ஒரு மனதாக மகாகவிக்கு ஞாப்கச்சின்னம் அமைப்பதில் ஈடுபட்டிருந்ததை உணர வைக்கிறது.

 

அடுத்த கட்டுரை புதுச்சேரியில் பாரதி விழாக் கொண்டாட்டம் நடைபெறுவதைக் குறிப்பிடுகிறது.

 

விண்ணுலகில் இருக்கும் பாரதியாரை வ்.வே.சு ஐயர் புதுவைக்கு அழைத்து வருகிறார். ஒரே கோலாகலம். என்ன என்று கேட்கும் பாரதியாருக்கு வ்.வே.சு.ஐயர்  “பாரதி விழாக் கொண்டாட்டம் நடக்கிற்து” என்று கூற பாரதியார்.”பாண்டியா! ஆச்சரியத்தினால் மூர்ச்சை அடைந்து விடுவேன்” என்கிறார்.

 

இப்படி ஆரம்பிக்கும் கட்டுரை 1945ஆம் ஆண்டு புதுவையில் நடந்த பாரதியாரின் கோலாகலக் கொண்டாட்ட விழாவை அழகுறச் சித்தரிக்கிறது.

 

அடுத்த கட்டுரை எட்டயபுரத்தில் என்ற கட்டுரை. பாரதியாரின் ஞாப்கச் சின்னத்திற்கு பிளான் போட்டுக் கொடுத்தவர் எஸ்.எம்.சித்தலே (F.R.I.B.A., F.I.I.A., A.M.T.P.T.) மகாராஷ்டிரா தேசத்தவர்.  இந்தியா தேசத்திலேயே பிரசித்தி பெற்ற நிபுணர்.

இவரைப் பற்றியும் நிதியைப் பற்றியும் விளக்குகிறது கட்டுரை.

 

அடுத்த கட்டுரை இரண்டு கவர்னர்கள். “ஹெர் எக்ஸலன்ஸி கவர்னர் சரோஜினி தேவியாரும், மேற்கு வங்க கவர்னர் ராஜாஜியும் மணி மண்டபத் திறப்பு விழாவிற்கு அக்டோபர் 12, 13 தேதிகளில் வரவிருப்பதைச் சுட்டிக் காட்டும் கட்டுரை.

இதோ ஒரு அற்புதம் என்ற அடுத்த கட்டுரை காணி நிலம் வேண்டும் என்று கேட்ட மகாகவிக்கு ஞாபகச் சின்ன மண்டபம் எழுப்பி தமிழ் மக்கள் அவரது காணி நில கோரிக்கையை நிறைவேற்றி விட்டன்ர் என்று கூறும் கட்டுரை!

பேசும் பொற்சித்திரம் என்ற கட்டுரை சின்னஞ்சிறு கிளியே – கண்ணம்மா, செல்வக் களஞ்சியமே பாடலின் சிறப்பைப் புகழ்ந்து கூறுகிறது.

 

கட்டுரையின் கடைசி பாரா:-

 

“எளிய, கொஞ்சும் தமிழில் பாடப்பட்ட இந்த ஒப்புயர்வற்ற கவிகள் தமிழுக்கு ஒரு பொக்கிஷம்; தமிழ் நாட்டுக் குழந்தைகளுக்கு மகாகவி அளித்த ஈடு இணையில்லாத பரிசு; உண்மையாகவே அட்சரலட்சம் பெறக் கூடிய பாடல்கள்.

 

அற்புதமான் இந்த கல்கியின் வரிகளே அட்சர லட்சம் பெறும்.

 

ஆனால் பாரதியாரின் இந்தப் பாடல் அவர் குழந்தைகளுக்கு அளித்த பரிசு மட்டும் அல்ல; உலகிற்கே அளித்த பரிசு. தமிழின் உயர்வுக்கு அளித்த பரிசு.

 

நீண்ட நீடூழி நெடுங்காலம் இந்தப் பாடலின் புகழ் ஓங்கி நிற்பதைத் தமிழர்கள் மனக்கண்ணால் உணரலாம்.

 

பாடுவோம் கொண்டாடுவோம் என்ற கட்டுரை பாரதி விழாக் கொண்டாட வேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது.

 

கடைசிக் கட்டுரையான பாரதியாரின் இலட்சியங்கள் அவரது லட்சியங்களை நிறைவேற்ற அனைவரும் பாடுபட வேண்டும் என்ற நல்லுரையுடன் முடிகிறது.

 

ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் பாரதியாருக்கு உரிய விதத்தில் ஞாபகச் சின்ன மண்டபம் அமைக்க கல்கி எடுத்த முயற்சிகள் ஒரு பெரிய அரிய காரியம்.

 

அந்தப் பணியில் பாரத நாடெங்கும் உள்ள இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் ஓரணியில் இணைந்தனர். கல்கியின் கனவு நனவாயிற்று.

 

பாரதி இயலில் பாரதியார் பற்றிய ஒரு பெரும் விழிப்புணர்ச்சி எப்படி ஏற்பட்ட்து என்பதை விளக்கும் ஒரு நூல் இது.

பாரதி அன்பர்களுக்கு கல்கியின் வெல்லமெனத் தித்திக்கும் தமிழ்க் கட்டுரைகள் இதில் உள்ளன.

 

போனஸாக அண்ணல் காந்தியடிகளைப் பற்றிய கட்டுரைகள் வேறு! படித்து ஆனந்திக்கலாம்!

***

MONKEY WEDDING 100 YEARS AGO! (Post No.4093)

Written by London Swaminathan


Date: 18 July 2017


Time uploaded in London-16-23


Post No. 4093


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

There are some interesting stories about Hanuman in 100 year old books written by foreigners!

 

For anyone familiar with the adventures of Hanuman, comic books such as Superman, Spiderman, Phantom are all just imitations. The adventures of hanuman are true stories. Hindus call him the Great Hero – Mahaa Veer! Hanuman was called the Monkey God by foreigners; but for Hindus he is a god like any other god. Westerners could only look at his face and tail whereas Hindus can look at his great qualities! Foreigners couldn’t understand Hinduism even today because they look at it superficially.

 

Hanuman is described in the Ramayana as a man possessed of great learning. He was a master of grammar. he had the gift of the gab. he was a great orator. “The chief of the monkeys is perfect; no one equals him in the sastras, in learning and in ascertaining the sense of the scriptures. In all sciences, in the rules of austerity, he rivals the preceptor of the Gods.

In North India he is a village god. His image smeared with oil and vermillion, meets one’s gaze in many villages. He is often the guardian deity, and is considered the embodiment of virile strength, the conqueror of evil spirits, while women implore his aid as the giver of off spring.

 

Hanuman does not often rise to the dignity of a separate temple devoted to his honour (100 years ago), but in Rama’s birth place Ayodhya, the greatest temple is the Hanumangarhi. It is a fortress temple rising solidly from the surrounding plain, and is provided with a regular priesthood f ascetics.

 

One of the main reasons why this god is so widely worshipped over a large part of India is that he is regarded as the type and model of faithful, unselfish and devoted service.

At the Dasara, one of the most popular Hindu festivals, Hanuman, clothed in gorgeous attire, marches along the stage at the head of his army of monkeys and bears and plays his part valiantly in the assault of Lanka.

 

Living monkeys too are honoured and worshipped as Hanuman’s representatives, and the feeding of monkeys is part of the regular ritual at some temples, notably at the Durga temple in Varanasi, often called for this reason ‘the Monkey Temple’. There is a king of monkeys there who is treated with much respect. It is remarkable with what impunity monkeys are allowed to steal grain and fruits and sweets from shops on the main roads. Very little resentment is shown, and as for killing them would be a sacrilege, no matter how great the mischief and harm caused.

In fact, General Sleeman tells a story of a Muhammedan Nawab of Oudh (Ayodhya) who died of fever, the result, it was said, of his father killing a monky. “Mumtaz ud daula might have been King of Oudh, said his informant, had his father not shot that monkey” (Ref. Sleeman’s book Journey through Oudh)

Monkey Wedding

W.Ward ( in his book Hindoos) tells a remarkable story of the Raja of Nadiya who spent a lac of rupees (10,000 pounds in those days) in marrying two monkeys. There was a magnificent parade. In the procession were seen elephants, camels, horses, all richly caparisoned; palanquins carried the guests whose path was lit by torches and fairy lamps. The male monkey was fastened in his palanquin with a silver chain. he wore a golden crown on his head and servants stood o either side to fan him with punkahs (fans). There followed numbers of dancing girls in carriages. Every kind of musical instrument was pressed into use to celebrate the occasion, and at the time of marriage no less than twelve learned Brahmins were employed to read the Sastras.

–Subham–

 

 

 

 

தமிழ்க் கல்வெட்டுகளில் விநோதப் பெயர்கள் (Post No.4092)

Written by London Swaminathan


Date: 18 July 2017


Time uploaded in London-14-06


Post No. 4092


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மனிதர்களுடைய பெயர்கள் காலத்துக்கு காலம் மாறுபடும்; சங்கத் தமிழ் நூல்களில் வழங்கும் பல பெயர்கள் இப்பொழுது புழக்கத்தில் இல்லை; இதே போல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பல பெயர்களை நாம் இப்பொழுது நமது குழந்தைகளுக்கு சூட்டுவதில்லை. உலகில் மாறாத பொருட்கள் இல்லை. மாற்றம் என்பது தவிர்க்க இயலாதது (Change is inevitable) . உடை, உணவு, மொழி எல்லாமே மாறுபடும் என்பது அனுபவத்தில் கண்ட விஷயம்!

சுமார் ஐந்தாம் நூற்றாண்டிலேயே புனிதவதி, திலகவதி, பரம தத்தன் போன்ற சம்ஸ்கிருதப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டதை காரைக்கால் அம்மையார் சரித்திரம் அதற்குப்  பின்னர் வந்த அப்பர் சரித்திரம் ஆகியன காட்டும். ஆனால் நப்பசலை, நச்செள்ளை போன்ற பெண்களின் பெயர்களை நாம் இப்போது பயன்படுத்துவதில்லை. ஆயினும் சங்க காலத்தில் கேசவன், தாமோதரன், வால்மீகி, பிரம்மா, கபிலர், பரணர் போன்ற சம்ஸ்கிருதப் பெயர்களை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தினர்.

சங்கத் தமிழ்ப் புலவர்களின் பெயர்களில் நிறைய சம்ஸ்கிருதப் பெயர்கள் இருக்கின்றன. இன்னும் சிலர் சம்ஸ்கிருதப் பெயர்களை தமிழில்  மொழி பெயர்த்து வைத்துக் கொண்டனர். காமக்கண்ணி என்ற சங்கப் புலவரின் பெயர் காமாக்ஷி என்ற தெய்வத்தின் பெயராகும். வேத கால இந்திரனின் பெயரை காஷ்மீர் முதல், இலங்கையின் கண்டி வரையுள்ள எல்லோரும் பயன்படுத்துகிறோம். ஜாதி வித்தியாசமின்றி எல்லோரும் ராஜேந்திரன், மஹேந்திரன், உபேந்திரன் என்றெல்லாம் இந்திரன் பெயரை வைத்துக் கொள்கிறோம். இதே போல ஊர் என்பது சங்க காலத்திலேயே உள்ளது. இது புரம், பூர் (Jaipur, Nagpur, Jodhpur) என்ற சம்ஸ்கிருதச் சொல்லுடன் தொடர்புடையது. சங்க காலத்துக்கு முன்னமே சம்ஸ்கிருத நூல்களில் உள்ளது.

 

(என்னுடைய கொள்கைப்படி தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்திலிருந்து பிறந்ததால் இப்படி நூற்றுக்கணக்கான ஒற்றுமைகளைக் காணலாம். இவை எல்லாம் ஐரோப்பிய மொழிகளில் இல்லாததால் மாக்ஸ்முல்லர், வில்லியம் ஜோன்ஸ் போன்றவர்கள் சொன்னதெல்லாம் வெறும் ஊகமே — தவறான ஊகங்களே — என்பது உறுதியாகின்றது)

 

இதோ சில சுவையான கல்வெட்டுப் பெயர்கள்:

கல்வெட்டுகள் அனைத்தும் இந்து முறைப்படிதான் திசைகளைக் குறிக்கும்— பூர்வ, தக்ஷிண, பஸ்சிம, உத்தர = கீழ் பாலெல்லை, தென்பாலெல்லை, மேல் பாலெல்லை, வட பாலெல்லை). இது இந்துக்களின் கண்டுபிடிப்பு. கோவிலை வலம் வருதல், கடிகராத்தில் முள் வலமாகச் சுற்றல் எல்லாம் , உலகிற்கு இந்துக்கள் கற்பித்த நாகரீகம்!

 

கி.பி. 550

சிம்மவர்மன் (சிம்ஹவர்மர்), வஜ்ர நந்தி, நரபயன் (ஆணத்தி)

 

கி.பி.675

பரமேச்சுரன், அநந்தசிவ ஆசாரியர்

 

ஒன்பதாம் நூற்றாண்டு

சதுர்புஜன், சதுர்வக்த்ரன்,, அத்ரி, புரூரன், நஹுஷன், தசவதனன், தார்தராஷ்டிரன், வானரத்வஜன், ஹரிச்சந்திரன், சிரிவல்லன், வரகுணன், சிரிகண்டராசன், வீரநாரணன், ஸ்ரீ பராந்தக மஹாராஜன், பரமேஸ்வரன், காடக ஸோமயாஜி, மாயா நாராயண பட்டர், நாராயணங் கேசவன், கண சுவாமி பட்டர், யோகேசுவர பட்டர், மாதவன், சிரீவல்லன், நக்கன்

11ஆம் நூற்றாண்டு

வீர கேரளன், வீர பாண்ட்யன், வினைய கஞ்சுகன், விசால சீலன், கோவிந்த சுவாமி பட்டச் சோமாசி, வாசுதேவ பீதம்பரப் பட்டன்,

ப்ரஹ்ம ஸ்ரீதுங்க ராஜ, ராஜ சிம்ஹ, மாங்குடிச் சோலைக் கிழவன், இளவளம்புல்லன், அரையன், வேற்சாத்தன், சாத்தன்.

 

கி.பி.865

கருநந்தடக்கன், விஷ்ணு பட்டாரகன், குமாரசுவாமி பட்டன், இளையான் கண்டன், வெண்ணீர் வெள்ளாளன், சாத்த முருகன், சிங்கங்குன்றப் போழன்.

 

ராரஜராஜன் லெய்டன் செப்பேடு

கிருஷ்ணன் ராமன், பருத்திக் குடையான் வேளான், மூவேந்த வேளான், ஆரூரன்,  தத்தன் சேந்தன்,  பொற்காரி, , தாமோதர பட்டன், , கற்குடையான் பிசங்கன்,  சங்கர நாராயணரங்கன், , தம்மடி பட்டன், தியம்பக பட்டன், கொற்றன் பொற்காரி, சூற்றியன் தேவடி, தேவன் சாத்தன்,

தளிக்குளவன், குமரன் ரங்கன், சிங்கன் வெண்காடன்,   தம்மடிப் பட்டன், ஸ்ரீதரபட்டன், பற்பநாப பட்டன், வெண்ணைப் பட்டன்,  நந்தீஸ்வர பட்டன், அமுதன் தீர்த்தகரன், அரைசூர் மறியாடி, வேட்கோவன் மாதேவன், காஸ்யபன் ஸூர்யரங்கன், பாரத்வாஜி திரித்தி வைகுந்தன், சதுர்முகனரங்கன், கண்ணன், தேவன் குடையான், பூவத்தபட்டன், நள்ளாறன், கற்பகஞ் சோலை, கணவதி, முண்டனரங்கன், ராஜேந்திர சோழ பட்டன்.

TAGS: கல்வெட்டு, தமிழ்ப் பெயர்கள், லெய்டன், சங்கப்புலவர்

 

–சுபம்-

 

உலகின் அதி சிறந்த ரோபோ ஹ்யூபோ! (Post No.4091)

Written by S NAGARAJAN

 

Date: 18 July 2017

 

Time uploaded in London:- 7-13 am

 

 

Post No.4091

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

அறிவியல் துளிகள் தொடர் கடந்த பல ஆண்டுகளாக பாக்யா வார இதழில் வந்து கொண்டிருக்கிறது. 7-7-17இல் பாக்யா இதழ் 30ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. புதிய பொலிவுடன் இந்த இதழ் முதல் பாக்யா வெளிவருகிறது.

ஏழாம் ஆண்டின் 20வது கட்டுரையாக வெளியாகியுள்ள கட்டுரை இதோ:-

உலகின் அதி சிறந்த ரோபோ ஹ்யூபோ!

.நாகராஜன்

 

“கூகிளின் ஆல்ஃபா கோ என்ற புரோகிராம் ஒரு லட்சத்தி அறுபதினாயிரம் பேர் விளையாடும் போர்டு விளையாட்டை அவர்கள் விளையாடும் அதே கணத்தில் நன்கு கவனித்து  மூன்று கோடி பொஸிஷன்களை கணித்துக் கொண்டு சமயத்திற்குத் தகுந்தபடி விளையாடுகிறது “- அறிவியல் தகவ்ல்

உலகின் அதி சிறந்த ரோபோ இருக்குமிடம் கொரியாவின் அட்வான்ஸ்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கட்டிடத்தில்.

 

அதன் பெயர் ஹ்யூபோ! (Hubo) ரொபாட்டுகள் தோன்ற ஆரம்பித்ததிலிருந்து பார்த்தால் இது ஐந்தாம் தலைமுறை ரோபோவாகும். ஐந்து அடி உயரம் 200 பவுண்டு எடை. இலேசு ரக விமானத்தை உருவாக்கும் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டு   வெள்ளி போல ஜொலிக்கும் ஹ்யூமனாய்ட் தான் ஹ்யூபோ. அதற்கு இரண்டு கைகள்,இரண்டு கால்கள் உண்டு. தலைக்குப் பதிலாக  அதி நவீன லேஸர் தொழில்நுட்பம் அடங்கிய ஒரு காமராவும் உண்டு.ஒவ்வொரு கணத்திலும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முப்பரிமாணத்தில் அறியும் சக்தி கொண்டது அது

 

ஹ்யூபோ நடக்கும். தேவையானால் முழங்கால் மண்டியிட்டு அமரும். அதற்கு விசேஷமான சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.

உலகின் தலை சிறந்த ரொபாட் எது என்பதற்கான போட்டி ஒன்று 2015ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. பரிசோ பிரம்மாண்டமான தொகையான இருபது லட்சம் டாலர்கள். (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் 64 ரூபாய்கள்)

இந்தப் போட்டியில் உலகின் பிரபல கல்வி நிறுவனமான கார்னீகி மெலான், எம் ஐ டி, ஆகியவற்றோடு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸாவின் ஜெட் புரபல்ஷன் லாபரட்டரியும் கலந்து கொண்டன.

 

போட்டி என்ன தெரியுமா?ஜப்பானில் 2011ஆம் ஆண்டு நடந்த ஒரு அணு உலை உருக ஆரம்பித்த போது நடந்ததைப் போல ஒரு காட்சியை உருவாக்க வேண்டும் என்பது தான். புகுஷிமா என்ற ஜப்பான் நகரில் நேர்ந்த அந்த அணுக்கசிவின் போது அணு உலையை மூடுவதற்கு முன்னர் அங்குள்ள எஞஜினியர்கள் தப்பிக்க வேண்டி இருந்தது. ரொபாட்டுகளே அங்கு நடந்த பேரழிவைப் பற்றியும் கதிரியக்க அளவு பற்றியும் மதிப்பீடு செய்தன.

இது போன்ற பேரழிவுச் சம்பவம் ஒன்று நடக்கும் போது  மனிதனைப் போல உள்ள ரொபாட்டே சரியாகச் செயல்படும் என்று அமெரிக்க தற்காப்பு ஆய்வு நிறுவனமான டர்பா என்று சுருக்கமாக அழைக்கப்படும் டிஃபென்ஸ் அட்வான்ஸ்ட் ரிஸர்ச் ப்ராஜெக்ட்ஸ் ஏஜன்ஸி (The Advanced Research Projects Agency – DARPA) கருதியது. இது போன்ற சூழ்நிலையில் மனிதர்களால் செய்ய முடியாத வேலையை ரொபாட்டே செய்ய முடியும் என்பதால் அப்படிப்பட்ட ஒரு சிறந்த ரொபாட்டை வடிவமைப்போருக்குச் சிறந்த பரிசைத் தர அது கருதியது. அதனால் ஏற்பட்டதே இந்தப் போட்டி.

ரொபாட் இயலில் பெரும் நிபுணரான பேராசிரியர் ‘ஓ’ ரொபாட் எப்படி எதிர்காலத்தில் செயல்பட வேண்டும் என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறார். இவர் தென்கொரியாவைச் சேர்ந்தவர்.

 

ஒரு போர்க்களத்தில் அதைச் சுதந்திரமாக சிந்திக்க விட்டு செயல்பட வீடு விட்டால் அது ஒருவேளை நம்மையே கொன்று விடலாம். அதைச் சிந்திக்க விடாமல் வெறும் புரோகிராம் அடிப்படையில் சொன்னதை மட்டும் செய்யச் சொன்னால்,ரொபாட்டின் செயல்பாட்டுச் சுதந்திரத்தை பறித்ததாக ஆகி விடும்.

ஆகவே வலிமை வாய்ந்த ஒரு ரொபாட்டின் சிந்தனைத் திறன் அளவுடன் இருக்க வேண்டும் என்கிறார் ஓ. தென்கொரியாவின் கொடியை பின்னால் ஏந்திக்  கொண்டிருக்கும் ஹ்யூபோ செங்கல் அடுக்குகளால் கட்டப்பட்டுள்ள படிக்கட்டுகளின் மீது சர்வ சாதாரணமாக ஏறுகிறது.

 

அதன் கேமரா, படியை ஸ்கேன் செய்கிறது. தவழும் சின்னக் குழந்தை போல அது ஒவ்வொரு படியாக ஜாக்கிரதையாக ஏறுகிறது.

மற்ற ரொபாட்டுகள் எல்லாம் கீழே விழுந்த நிலையில்  ஹ்யூபோ மட்டும் அனைத்துத் த்டைகளையும் வென்று முன்னேறியது ஹ்யூபோ ஜாக்கிரதையாக காரை ஓட்டுகிறது.எதிரே உள்ள சாலையை நன்கு ஸ்கேன் செய்கிறது.

கதவைத் திறக்கிறது. வால்வைத் திறந்து மூடுகிறது. இடிபாடுகளின் இடையே எப்படி நடக்க வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறது.

 

காரிலிருந்து வெளியே வருவது மனிதர்களுக்கு சாதாரணமான ஒரு விஷயம். ஆனால் ஹ்யூபோவிற்கோ? அது இந்த விஷயத்தைப் பல கூறுகளாகப் பிரித்து வைத்துக் கொண்டு முதலில் தனது கைகளைத் தூக்குகிறது. காரின் பிரேம்களைக் கண்டு பிடிக்கிறது. அதைப் பிடித்துக் கொண்டு சரியான பிரஷருடன் தன் உடலைத் தூக்கிக் கொள்கிறது. பின்னர் வெளியே விழுந்து விடாமல் ஜாக்கிரதையாக வெளி வருகிறது.

 

எப்படி தென் கொரியா இப்படி செயற்கை அறிவிலும் ரொபாட் இயலிலும் முன்னேறி இருக்கிறது என்று கேட்டால் அதற்கு ஓ தரும் பதில் :’ நாங்கள் விஞ்ஞானத்தை நல்லதற்காகவே பயன்படுத்த நினைக்கிறோம். அதன் விளைவாகவே முன்னேறுகிறோம்” என்பது தான்.

செயற்கை அறிவிலும் அதன் பயன்பாட்டான ரொபாட் போன்றவற்றிலுல் உலகத் தலைநகராகத் திகழும் தென்கொரியா இன்னும் பல ஆச்சரியங்களைத் தந்து கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!

 

இயந்திர அமைப்பில் இருக்கும் ரொபோவே நம்மை இப்படி அசத்துகிறது. இனி எதிர்காலத்தில் பேரழகிகளாகவும், பெரும் அழக்ன்களாகவும் வடிவமைப்பிலும் தோற்றத்திலும் உருவாகப் போகும் ரோபோக்கள் உணர்ச்சியையும் கொண்டிருந்தால் அதை உலகம் எப்படி எதிர் கொள்ளப் போகிறது.

மனிதர்களுக்கும் ரோபோக்களுக்கும் மண உறவு ஏற்படுமா அல்லது மன உறவு மட்டும் இருக்குமா? கேள்வி சுவாரசியாமானது தான்! பதிலைக் காலம் தான் சொல்ல வேண்டும்!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரபல விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் புகழேணியில் உச்சத்தில் இருந்ததால் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க ஏராளமானோர் விரும்பினர். இதனால் அவருக்கு இப்படிப்பட்டோரின் தொந்தரவு மிக அதிகமாக இருந்தது.

அவர் எது சொன்னாலும் அது வேத வாக்காக அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஒரு முறை நடந்து செல்லும் போது பேச்சுவாக்கில் அவர் சொன்ன “God is subtle, but not malicious’ (கடவுள் நுட்பமானவர், தீய நோக்கம் கொண்டவரல்ல) என்ற வாக்கியம் அவரது     கணி தப் பிரிவில் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டு வைக்கப்பட்டது.

அவர் தனது அருமையான தரைத் தளத்தில் இருந்த அலுவலகத்தைக் கைவிட்டு மாடியில் உள்ள ஒரு அறைக்குச் செல்ல நேர்ந்தது இதனால் தான்!

போவோர் வருவோர் எல்லாம் அவர அறையின் ஜன்னல் வழியே எட்டிப் பார்ப்பார்கள்.

அகதிகளாக வந்த கலைஞர்களின் நிதி உதவிக்காக அவர் சிலை போல மாடலிங் செய்ய வேண்டியிருந்தது. மணிக்கணக்காக அவர் சிலை போல் இருப்பார்.

ஒரு முறை நியூயார்க்கிலிருந்து பிரின்ஸ்டனுக்கு ரயிலில் அவர் சென்ற போது சக பயணி ஒருவர் அவரிடம் வந்து,”உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது. ஆனால் யார் என்று தெரியவில்லை. நீங்கள் யார்?”என்று கேட்டார்.

ஐன்ஸ்டீன் உடனே அவரிடம,” நான் ஒரு மாடலிங் ஆர்டிஸ்ட். அதனால் என்னைப் பார்த்திருக்கக் கூடும்” என்றார்.

“அது தானே பார்த்தேன். மாடலிங் ஆர்டிஸ்டா?” என்று கூறிய அவர் மேற்கொண்டு தொந்தரவு செய்யாமல் அவரிடமிருந்து போய் விட்டார்.

ஐன்ஸ்டீனுக்கு ஒரே மகிழ்ச்சி – மாடலிங் ஆர்டிஸ்ட் என்று சொன்னதால் தொந்தரவு இல்லையே என்று!

***

 

 

Ganges in Greek Geographer’s Writings! (Post No.4090)

Written by London Swaminathan


Date: 17 July 2017


Time uploaded in London-21-37


Post No. 4090


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

India is the land of mighty rivers, and Ganga is the holiest of all those rivers. Ganga’s sister stream Yamuna is also worshipped because of Lord Krishna’s association with the river. Their banks are dotted with temples and shrines and thousands upon thousands worship daily the sacred streams. The principal centres of worship on the Ganges are Gangotri, the source of the Ganges in the mountain; Haridwar, where she forsakes her mountain home; Triveni Sangam (Allahabad) where she joins water with Yamuna (Jumna) and the mythical stream, the Sarasvati; Benares (Varanasi), the holiest city for the Hindus; and Sagar Island, where she mingles with the ocean.

 

According to the Greek geographer Strabo (64 BCE to 24 CE), Hindus worshipped Jupiter Pluvius, the River Ganges, and the gods of the country. This Jupiter Pluvius was Indra (Strabo 15-1-69). This shows Ganges was worshipped by the Hindus 2000 years ago which was noted by a Greek writer.

 

The day of Ganga’s supposed descent on earth, the tenth of the light half of Jeshth (June), and the day of the full moon or Kartik (October) are observed as festivals in her honour by all Hindus.

 

Water Power!

“Take away, O Waters, whatsoever is wicked in me, what I have done by violence or curse, and untruth” is a Vedic prayer repeated often today (Rig Veda 1-22-3)

So strong is the popular belief in the sanctity of the river that both in private life as well as in the law-courts people often give up cherished claims if their opponents deny them when holding Ganges water in their hands or swearing by the Ganges.

In the Mahabharata it is said that the “Gita comprises all the Sastras, i.e.sacred writings, Hari (Vishnu) all the gods and the Ganges all the Sacred places”.

In addition to the Ganges there are many others which are regarded as sacred by the Hindus. River Narmada also considered sacred for burning dead bodies on its banks.

 

Hindu River Marathon!

 

To follow the course of any river on foot is considered a highly meritorious act. A pilgrim, for example, sets out from the source of Ganges at Gangotri and walks by the left bank of the river to its mouth, at Ganga sagara; then turning round, he proceeds by the right side back to Gangotri, when he departed. This takes six years to accomplish. In the same way a pilgrim starts from the source of Narmada, a peak on the Vindhya Mountains, and walks to the mouth near Broach and back. This takes three years. The rivers Godavari and Krishna require only two years for the same process. Of course, the merit accumulated is in proportion to the time occupied in pilgrimage and the sacredness of the ground traversed.

 

Romans and Persians

Romans and Persians did something like a river worship in the olden days.

Gen.Sleeman points out that among the Romans and ancient Persians rivers were propiated  by sacrifices. When Vitellius crossed the Euphrates with the Roman legions to put Tiridates on the throne of Armenia, he propiated the river by the scrfice of a hog, a ram and a bull. Tiridates himself sacrificed a horse. Tacitus does not praise the river god, but the stream itself.

 

Plato makes Socrates condemn Homer for making Achilles behave disrespectfully towards the river Xanthus in offering to fight him (illiad 20-73); and towards the river Spercheus, another acknowledged god, in presenting to the dead body of Patroclus the locks of his hair which he had promised to the river (Iliad 23-14—53)

Hindu customs such as worshipping a river and giving hair to god, prevailed in those places 2000 years ago. But the beauty of Hinduism is that these customs prevail in India with the same fervour, but in other countries it has gone into the history books.

 

–Subham–

 

பூர்வ, தக்ஷிண, பச்சிம, உத்தர சதுச் சமுத்ராதிபதி கிருஷ்ண தேவ மகாராயர் (Post No.4089)

பூர்வ, தக்ஷிண, பச்சிம, உத்தர சதுச் சமுத்ராதிபதி கிருஷ்ண தேவ மகாராயர் (Post No.4089)

 

Written by London Swaminathan


Date: 17 July 2017


Time uploaded in London-16-08


Post No. 4089


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

முஸ்லீம்களின் படை எடுப்பிலிருந்து இந்த நாட்டைக் காப்பாற்றியவர் இருவர்: தென்னகத்திலிருந்து முஸ்லீம் படை எடுப்பாளர்களை விரட்டியவர் கிருஷ்ண தேவ ராயர்; வடநாட்டிலிருந்து விரட்டியவர் வீர சிவாஜி.

கிருஷ்ண தேவ ராயர் போல கோவில்களுக்கு தானம் செய்தவரும் இல்லை; இலக்கியத்தை வளர்த்தவரும் இல்லை. திருப்பதி கோவிலுக்கு வாரி வழங்கியுள்ளார். ஆமுக்த மால்யதா என்ற காவியத்தைத் தெலுங்கில் எழுதினார். அவர் ஒரு வீர வைஷ்ணவர்; திருப்பாவை மீது அலாதிப் பிரியம் கொண்டவர்.

ஆமுக்தமால்யதா என்பது ஆண்டாள்- விஷ்ணு கல்யாணம் பற்றிய கவிதை ஆகும்.

 

 

1509 ஆம் ஆண்டு முதல் 1529 ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகளுக்கு விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆண்டார்; அதை விரிவாக்கினார். இவரது சபையில் அஷ்ட திக்கஜங்கள் எனப்படும் எட்டு பேரறிஞர்கள் இருந்தனர். அவர்களில் புகழ் பெற்ற இருவர் அல்லாசானி பெத்தண்ணா, தெனாலி ராம (கிருஷ்ணா)

 

துளுவ வம்சத்தை ஸ்தாபித்தவர். திருப்பதி முதல் திருவண்ணாமலை வரை கோவில்களுக்கு தானம் வழங்கினார்.

 

திரு ஈங்கோய் மலை மீதுள்ள க்ருஷ்ண தேவ மகாராயரின் கல்வெட்டு அவருடைய வீரதீரச் செயல்களை விவரிக்கின்றது. அவருடைய பட்டங்கள் கம்பீரமான சொற்களை உடையது.

 

முதலில் கல்வெட்டின் சுவையான பகுதிகளைக் காண்போம்:

 

இந்தக் கல்வெட்டுக்குத் தீங்கு செய்வோருக்கு காசியில் பிராமணர்களையும் பசுக்களையும் கொன்ற பாவம் வரட்டும் என்று சாபம் தரும் பகுதியைக் கவனிக்கவும்.

பசுவுக்குத் தீங்கு செய்வோருக்கு, அதுவும் காசியில் தீங்கு செய்வோருக்கு வரும் பாபம்= அதாவது பல படங்கு பாவம்!!

 

கடைசியில் ஒரு அருமையான சம்ஸ்கிருத ஸ்லோகம் இருக்கிறது; அதன் பொருள்:-

“தான், தானம் செய்வதைக் காட்டிலும் மற்றவர் கொடுத்ததைத் திறம்பட நிர்வகிப்பது இரு மடங்கு பலன் தரும்

பிறர் கொடுத்ததை அபகரித்தால், தான் செய்த புண்ணியங்களும் வீணாகிப் போய்விடும்” என்று கல்வெட்டு எச்சரிக்கிறது.

அருமையான எச்சரிக்கை.

இறை வணக்கமாகக் கல்வெட்டின் ஆரம்பத்திலுள்ள ஸ்லோகம் பரம சிவனின் அருளை வேண்டுகிறது.

இக் கல்வெட்டு கிருஷ்ணவேணி ஆற்றங்கரையில் மகர சங்கராந்தித் திருநாளன்று (பொங்கல் திருநாள்) மன்னன் எழுந்தருளிய போது சோழ மண்டலத்திலுள்ள சிவன், விஷ்ணு கோவில்களுக்கு பத்தாயிரம் வராகன் பொன் தானம் செய்ததைக் கூறுகிறது

 

கோவில்களுக்கு சோடி, சூல வரி, புற வரி, அரச பேறு ஆகிய வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதைக் கல்வெட்டு விளம்புகிறது.

 

விஜய நகரத்திலிருந்து புறப்பட்ட மன்னர் எந்தெந்த மன்னரை வெற்றி கொண்டு உயிருடன் சிறைப்படுத்தினார் என்பதையும் இது குறிக்கிறது.

இந்த வெற்றிகளைக் குறிக்கும் வண்ணம் பொட்டுனூரில் ஒரு வெற்றித் தூண் நிறுவியதையும் கல்வெட்டு சொல்கிறது.

இவைகளில் பெரும்பாலும் தெலுங்குதேச வெற்றிகளாகும். தென்னகத்தின் மிகப் பெரும்பகுதியை ஆண்டவர் ராயர். இவருடைய பொக்கிஷங்களை மதிப்பிட வந்த ஐரோப்பியர் இவைகளை மதிப்பிடவே முடியாது; அவ்வளவு விலைமிகுந்த ரத்தினங்கள் என்று எழுதி வைத்துள்ளனர்.

 

திருச்சி மவட்டத்தில் திரு ஈங்கோய் மலை மீதுள்ள மரகதாசலேசுவரர் கோயிலில் இக்கல்வெட்டு உள்ளது; கல்வெட்டின் காலம் சக வருஷம் 1439, அதாவது கி.பி.1517.

இதோ அந்தக் கல்வெட்டு

 

“ஸ்வஸ்தி ஸ்ரீ நமஸ்துங்க சிரச்சும்பி

சந்த்ர சாமரசாரவே

த்ரைலோக்ய நகராரம்ப

மூலஸ்தம்பாய சம்பவே”

 

“ஸ்ரீ விசயாயாப்யுதய சாலிவாகன சகாப்தம் 1439 இதின்மேல் செல்லாநின்ற ஈசுவர (பிலவங்க) சம்வத்சரம் (புஷ்ய மாசத்துப் பௌர்ணமி நாள்) ஸ்ரீமன் மஹாமண்டலேஸ்வர,

அரியராய   ரவிபாடன்,

பாஷைக்குத் தப்புவராய கண்டன்,

கண்டநாடு கொண்டு,

கொண்டநாடு கொடாதான்

 

பூர்வ தக்ஷிண பச்சிம உத்தர சதுச் சமுத்ராபதிபதி

(East, South, West, North நாற்கடலை எல்லையாக உடையவர்)

ஸ்ரீ வீரப்ரதாப, ஸ்ரீ வீரகிருஷ்ண தேவ மகாராயர்

சோழ மண்டலத்து விஷ்ணுஸ்தானம், சிவஸ்தானம், முதலான தேவஸ்தானங்களுக்கு சோடி, சூல வரி, புறவரி, அரசபேறு மற்றும் உண்டா னது எல்லாம் சர்வமானியமாக திருவுளம் பற்றின தர்மசாசன ராயசம்.

 

நாம் விசய நகரத்திலிருந்து புறப்பட்டு, பூர்வ திக்கு விசையார்த்தம் எழுந்தருளி உதயகிரி துர்கமும் யிரிசிக் கொண்டு,

திருமலை ராகுத்தராயனையும் பிடித்துக்கொண்டு, வினி கொண்டை, வெல்லம கொண்டை, நாகார்ச்சுன கொண்டை,  கொண்டை வீடு, கொண்டை  பள்ளி ராசமகேந்திரவரம்,  முதலான துர்கங்களும் இரிசிக்கொண்டு,

 

பிரதாபருத்ர கசபதி பிரகலாதன், சிரச்சந்திரன், மல்லூகான், உத்தாண்டகான்,  முதலான பாத்திர சாமந்தரையும் சீவக்கிரகமாகப் பிடித்துக்கொண்டு, பிரதாபருத்திர கசபதியையும் முறியவெட்டி, சிங்காத்திரிக்கு எழுந்தருளி, பொட்டு நூரில் ஜயஸ்தம்பம் நிறுத்தி,

 

சோள மண்டலத்தில் தேவஸ்தானம் திருச்சிராப்பள்ளி, திரு ஈங்கோய்மலை, சந்தலைகை, திருக்காட்டுப்பள்ளி, திருமழவாடி, வல்லம், தஞ்சாவூர் திருநல்லூர், திருவாரூர், திருநகரி, திருவையாறு, திருவெழுந்தூர், இராசுராமப்பாளையம், திருவாஞ்சியம், திருப்புகலூர், திருப்பனந்தாள், திருநாங்கூர்,  தாடலங்கோயில், சீர்காழி, ச்ரிகண்டபுரம் உள்பட இரண்டாற்றுப் பற்றுச் சீர்மை, புவனேகவீரன் பட்டனச் சீர்மை, ராசராசச்சுர சீர்மை, தஞ்சாவூர்ச் சீர்மை  , வீரமடக்குச் சீர்மை, வழுதலம்பட்டுச் சீர்மை, வழுவத்தூர்ச் சீர்மை பெரம்பூர்ச் சீர்மை,

குழித்தண்டலைச் சீர்மை,  உடபட விஷ்ணுஸ்தானம், சிவஸ்தானம் தேவஸ்தானங்களில்  பூர்வம் அரண்மனைக்கு இறுத்து வருகிற சோடி, சூலவரி, ஆயம் ஸ்தலயாதிக்கம் பதினாயிரம் பொன்னிலே

(அந்தந்த தேவஸ்தானங்களுக்கு மகரசங்கராந்தி புண்ணியகாலத்திலே கிருஷ்ணவேணி தீரத்திலே)

உண்டவல்லி அநந்தசாயி சந்நிதியிலும்

விசயவாடை மல்லிகார்ச்சுன தேவர் ஆக

தாராபூர்வமாகச் சர்வமானியமாகவிட்டு (தர்மசாசன ராயசமும் பாவித்தோம். இந்த ராயசப்

பிரமணத்திலே எல்லா தேவஸ்தானங்களிலும்)

சிலாசாசனம் எழுதிவிச்சு பூஜை புனஸ்கரமும் அங்கரங்க    வைபோகமும், திருப்பணிகளும் சாங்கோபாங்கமாக ஆசந்திராதித்த (Moon and Sun) ஸ்தாயியாக நடத்திகொண்டு சுகத்திலே இருக்கவும்

 

இந்த தர்மத்துக்கு அகிதம் (harm) நினைத்தவன் தங்கள் மாதா பிதாவையும் கோ பிராமணரையும் வாரணாசியிலே கொன்ற பாவத்திலே போகக்கடவராகவும்.

 

ஸ்வ  தத்தாத்   விகுணம் புண்யம் பர தத்தானுபாலனம்

பரதத்தாபராரேன ஸ்வதத்தம் நிஷ்பலம் பவேது

     

Source: Kalvettu- An Intoduction, Archaological Department of Tamil Nadu, year 1976

 

–Subham–

 

சொல் கண்டார் சொல்லே கண்டார்– கம்பன் கவி இன்பம் (Post No.4088)

Written by S NAGARAJAN

 

Date: 17 July 2017

 

Time uploaded in London:- 5-59 am

 

 

Post No.4088

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 IMAGES OF SRI RAMA FROM FACEBOOK FRIENDS;THANKS.

 

கம்பன் கவி இன்பம்

 

கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை! என்ற கட்டுரையைத் தொடர்ந்து வரும் கட்டுரை இது.

 

சொல் கண்டார் சொல்லே கண்டார்; ஞான எல் கண்டார் எல்லே கண்டார்!

ச.நாகராஜன்

 

 

கம்பனை அணு அணுவாக, சொல் சொல்லாகச் சுவைத்து ரசிக்கும் கவிஞர் கே.என்.சிவராஜ பிள்ளை தனது அனுபவத்தை இப்படிக் கூறுகிறார்:

 

சொல் கண்டார் சொல்லே கண்டார்; சொல்லினுட் சொலிக்கும் ஞான

எல் கண்டார் எல்லே கண்டார்; இனிமையோடிகலுஞ் சந்த

மல் கண்டார் மல்லே கண்டார்; மகிழ்கவித் துறைகை போய

வல் கண்ட புலவர் யாரிவ் வரகவி முடியக் கண்டார்?!!!

 

 

சொல்லைக் கண்டவர் கம்பனின் சொல் வண்ணத்தில் மூழ்கி விடுவார்கள். ஒரு சொல்லா, இரண்டு சொல்லா? ஒரு பாடலுக்கு நான்கு வரிகள்; ஒரு வரிக்கு சுமாராக ஆறு சொற்கள் என்று வைத்துக் கொண்டாலும் பத்தாயிரம் பாடலுக்கு சுமார் இரண்டு லட்சத்து நாற்பதினாயிரம் சொற்கள். இவற்றில் பெர்முடேஷன் காம்பினேஷன் போட்டால் நமக்கு வரும் எண்ணிக்கை பல பல கோடிகள். அவ்வளவு விதமாக சொல்லோடு சொல்லினை இணத்து, சொற்றொடர்களை ஒன்றுடன் இன்னொன்றை ஒப்பிட்டு, அர்த்தங்களை அறிந்து, புரிந்து சுவைப்பது என்றால் ஒரு ஜென்மத்தில் நடக்கக் கூடிய காரியமா என்ன.

 

சொல்லைப் பார்க்கப் போய் சொல்லினுள் ஞான எல்லை, (எல் என்றால் ஒளி) – ஞான ஒளியைக் கண்டால் அதிலிருந்து மீள்வது எங்ஙனம்?

 

 

சொல்லினுள் ஜொலிக்கும் ஞான ஒளி கண்டவர் கண்டவரே; அதிலிருந்து அவர் எப்போது எப்படி மீள்வாரோ? யாருக்குத் தெரியும்.

 

சந்த இனிமையைக் கண்டவர்கள் அதிலேயே மாட்டிக் கொள்வார்கள்.

 

இப்படி இருக்கும் போது தமிழின் துறைகளை நன்கு கையாண்ட கம்பனின் கவிதையின் முடிவை முழுதுமாக யார் கண்டார்கள்.

 

 

இவ் வரகவியை “முடியக் கண்டவர்கள் யாரும் இலர்.

கே.என். சிவராஜ பிள்ளையுடன் ஓங்கிய குரலில் நாமும் ஆம், யாரும் முடியக் காண முடியாது என்று கூவுகிறோம்.

தோள் கண்டார் தோளே கண்டார் பாடலில் கம்பன் ராமனின் அழகை முடியக் கண்டவர் யாரும் இல்லை என்று ஒரு ‘போடு போடுகிறான் இல்லையா!

 

 

அதே “போடை அவருக்கே போடுகிறார் சிவராஜ பிள்ளை.

அற்புதமான பாடல் தானே இது?

கம்ப ராமாயணக் கவுத்துவ மணி மாலையில் (கம்பராமாயணக் கௌஸ்துப மணிமாலை) 72வது பாடலாக மலர்கிறது இது.

51வது பாடலில் இதையே வற்புறுத்துகிறார் அவர் இப்படி:

 

 

சொல்வளம் பெரிதென்கோ யான்? சொல்லினுட் டுளும்பு ஞான

நல்வளம் பெரிதென்கோ யான்? நவையறு மணிகள் வீசும்

வில்வளம் பெரிதென்கோ யான்? வியங்கியம் விழுமி தென்கோ?

பல்வளம் செறிந்து பண்ணாம் பரிமள மியன்ற பாவில்!

 

 

சொல்வளமா?

ஞான நல் வளமா?

மணிகள் வீசும் வில் வளமா?

அடடா, அனைத்தும் இணைந்து பல்வளம் செறிந்து காணும் கம்பனின் பண் கொண்ட பாடலை எப்படிப் புகழ்வது?

எங்களுக்கும் தெரியவில்லை.

 

கம்பன் புகழே புகழ்; அவன் பாடலே பாடல் என்று கவிஞர் சிவராஜ பிள்ளையுடன் மகிழ்ச்சியுடன் இணைந்து ஓர் குரலாய்க் கூவுகிறோம் நாம்.

அழகிய இந்த நூலில் வரும் பாடல்கள், கம்ப ராமாயணத்தில் வரும் முக்கியச் செய்யுள்களை நினைவுறுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என்பதைக் கம்பனைக் கற்றோர் அறிவர்!

***

 

Asura’s Mistake- Satapata Brahmana Story (Post No.4087)

Compiled by London Swaminathan


Date: 16 July 2017


Time uploaded in London-19-03


Post No. 4087


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Once upon a time the gods and the Asuras, both of them sprung from Prajapati, strove together. And the Asuras even though arrogance, thinking,

“Unto whom, forsooth, should we make offering? went on offering into their own mouths. They came to naught, even through arrogance; wherefore let no one be arrogant, for verily arrogance is the cause (mouth) of ruin.

“Pride goeth before destruction.

But the gods went on making offerings to one another.

Prajapati game himself to them; thus the sacrifice became theirs; and indeed the sacrifice is the food of the gods – Satapata Brahmana.

xxx

“This which is sacrifice is the soul of all beings and of all gods”

–Satapata Brahmana14-3-2-1

 

Prajapati gave himself to the gods and became their sacrifice. He then created sacrifice as his own image or counterpart. Hence they say that ‘Prajapati is sacrifice’; for he created it as his own image.

–Satapata Brahmana 11-1-8-2

xxx

 

Women in Vedic Times

The following passage is of interest as clearly indicating that women in Vedic times had access to the Vedas; they took part in the sacrifices is clear from quite a number of passages:

Ida, the daughter of Manu, was a revealer of sacrifice. She heard, ‘The Asuras are placing fire’……………. Ida said to Manu, ‘I shall so place thy fire that thou shalt increase in offspring, cattle and twins; thou shalt be firmly established in  the world and shalt conquer the heavenly  word’. She first placed the Garhapatya fire. It was through the Garhapatya she produced for him offspring.

Taittiriya Brahmana 1-1-4-4

(Garhapatya is one of the three fires in a house)

xxx

Manu’s Wife Sacrificed!

There is another story where one must read between the lines; this one of the  symbolic stories:

“Manu had a bull. Into it an Asura slaying, enemy slaying voice had entered. In consequence of this bull’s snorting and bellowing. Asuras and Rakshasas were continually destroyed.

 

Then the Asuras said, “This bull, alas! does us mischief; how shall we overcome him? Now there were two priests of the Asuras called Kilata and Akuli. They said, ‘Manu is a devout believer; let us make trial of him’. They went and said to him, “Let us sacrifice for thee”

“Wherewith”, he asked.

With this bull, they replied.

Be it so, he answered.

 

When it had been slaughtered, the voice departed out of it and entered into Manu’s wife, Maanavaa.

Wherever they hear her speaking, the Asuras and Rakshasas continue to be destroyed in consequence of her voice.

The Asuras said, “She does yet more mischief; for the human voice speaks more”

 

Kilata and Akuli said, Manu is a devout believer; let us make trial of him. They went and said to him,

“Manu, let us sacrifice for thee”.

“Wherewith?, he asked.

“With this thy wife”, they replied.

Be it so, he answered.

When she had been slaughtered, the voice departed of her”.

–Satapata Brahmana 1-1-4-16

The same story is found with variations in the Kathaka Brahmana.

This is a symbolic story. One must rely on saints of India rather than foreigners.

–Subham–

 

 

திருக்குறளுக்கு தமிழ் வேதம் என்று பெயர் சூட்டியது யார்? (Post No.4086)

Written by London Swaminathan


Date: 16 July 2017


Time uploaded in London- 6-34 am


Post No. 4086


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

திருக்குறளைப் பாராட்டி 53 புலவர்கள் பாடிய பாடல்கள் திருவள்ளுவ மாலையில் இடம் பெறும். இதைத்தவிர அவ்வையார், இடைக்காடர் ஆகிய இருவர் பாடல்களையும் சேர்த்து 55 பாடல்கள் என்றும் கொள்வர். இதில் பல புலவர்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ள வேதத்துடன் ஒப்பிட்டு திருக்குறளை தமிழ் வேதம் என்று அழைக்கின்றனர். அவர்கள் சூட்டிய பெயர்தான் தமிழ் வேதம். இதோ அந்தப் பாடல்கள்:

 

ஆரியமுஞ் செந்தமிழும் ஆராய்ந்திதனினிது

சீரியதென் றொன்றைச் செப்பரிதா – லாரியம்

வேதமுடைத்துத் தமிழ்திரு வள்ளுவனா

ரோது குறட்பா வுடைத்து

வண்ணக்கஞ் சாத்தனார்.

 

சம்ஸ்கிருதத்தையும், தமிழையும் ஆராய்ந்து இதைக் காட்டிலும் இது சிறப்புடைத்தென்று ஒன்றைத் தெரிந்து சொல்லுதல் முடியாது; சம்ஸ்கிருதம் வேதமுடையது; தமிழ் திருவள்ளுவர் தந்த குறட் பாக்களை உடையது.

 

இங்கு சம்ஸ்கிருதத்துக்கு வேதத்தால் பெருமை; தமிழுக்கு திருக்குறளால் பெருமை என்று வண்ணக்கஞ் சாத்தனார் கூறுகிறார்

 

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் கூறுகிறார்:-

 

ஐயாறு நூறு மதிகார மூன்றுமா

மெய்யாய வேத பொருள்விளங்கப் – பொய்யாது

தந்தானுலகிற்குத் தான் வள்ளுவராகி

யந்தா மரை மேலயன்

 

அதிகாரம் நூற்று முப்பத்து மூன்றுமாம்,  உண்மையான வேதப்பொருள் பொய்யாது விளங்க அழகிய தாமரை மலர் மேல் வீற்றிருக்கின்ற பிரம்மா, வள்ளுவராகி உலகில் வந்தான்.

 

பிரம்மாவின் நான்கு முகங்களிலிருந்து நான்கு வேதங்கள் வந்தன என்று புராண, இதிஹாசங்கள் விளம்பும். அது போல திருக்குறள் என்னும் தமிழ் வேதத்தை அளித்ததும் அவனே— என்பார் காரிக்கண்ணனார்.

 

வெள்ளி வீதியார் சொல்வார்

செய்யா மொழிக்குந் திருவள்ளுவர் மொழிந்த

பொய்யா மொழிக்கும் பொருளொன்றே — செய்யா

வதற்குரியா ரந்தணரே யாராயி னேனை

யிதற்குரியா ரல்லாதாரில்

ஒருவராலே செய்யப்படாத மொழியாகிய வேதத்துக்கும் —–(அபௌருஷேயம்=வேதங்கள் மனிதன் இயற்றியது அல்ல) —திருவள்ளுவாரால் அருளிச் செய்யப்பட்ட பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே. ஆராய்ந்து பார்த்தால்  செய்யப்படாத அந்த வேதம் ஓதுதற்குரியோர் அந்தணர் மட்டுமே; ஆனால் திருக்குறளை ஓதுதற்குரியவர் எல்லோரும் ஆவர்.

 

நாமகள் செப்பியது

நாடா முதனான் மறைநான் முகனாவிற்

பாடா விடைபாரதம் பகர்ந்தேன் — கூடாரை

யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாற பின்

வள்ளுவன் வாயதென் வாக்கு

 

பொருள்:

பகைவரைப் புறமுதுகு காட்டச் செய்து வெற்றி பெற்ற, வேற் படையுடைய பாண்டிய ராஜனே!  படைப்புக் காலத்தில் பிரம்மாவின் வாயிலிருந்து நான்கு வேதங்களைப் பாடினேன்; இடைக்காலத்தில் பாரதம் பகர்ந்தேன்; அதற்குப் பிற்பட்ட காலத்தில் என்னுடைய வாக்கு வள்ளுவன் வாயின் கண்ணதாயிற்று

 

ஆகவே சரஸ்வதியின் கூற்றுப்படி, வேதமும், பாரதமும், திருக்குறளும் ஒவ்வொரு காலத்தில் சரஸ்வதியின் வாயிலிருந்து வந்தவையே.

வேதம் = மஹா பாரதம் = திருக்குறள்

மஹா பாரதத்தை பஞ்சமோ வேத: = ஐந்தாவது வேதம் என்பார்கள்.

திருக்குறளை ஆறாவது வேதம் என்று சொல்லாமல் சொல்கிறாள் சரஸ்வதி!

Tags:- தமிழ் வேதம், தமிழ் மறை, திருக்குறள்

–சுபம்–

 

மருந்து உட்கொள்ள ஆரம்பித்தவுடன் எடை கூடுகிறதா? (Post No.4085)

Written by S NAGARAJAN

 

Date: 16 July 2017

 

Time uploaded in London:- 5-54 am

 

 

Post No.4085

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

திருநெல்வேலியிலிருந்து திரு ஆர்.சி.ராஜாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஹெல்த்கேர் மாத பத்திரிகையில் ஜூலை 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

புதிய மருந்து உட்கொள்ள ஆரம்பித்தவுடன் உங்க உடலின் எடை திடீரென்று கூடுகிறதா?

ச.நாகராஜன்

ள்﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽ம்பிதவtsRSதிடீரென்று உடல் எடை கூடுகிறதே என்று கவலைப்படுபவர்களில் ஒருவர் நீங்கள் என்றால் உடனடியாக நீங்கள் ஏதேனும் மருந்துகளை உட்கொள்ள ஆரம்பித்தீர்களா என்பதைச் சரி பார்க்க வேண்டியதும் அவசியமாகிறது.

 

ஆம், சில மருந்துகள் உடலின் எடை கூடுவதற்குக் காரணமாக அமைகின்றன. பக்க விளைவாக உடல் எடையைக் கூட்டும் மருந்துகளைப் பற்றிய கவனம் தேவை.

On Planet Pluto

எடை குறைவாக இருந்தால், பரவாயில்லை சரி என்று விட்டு விடலாம்.ஆனால் ஏற்கனவே எடை கூடுதலாக இருந்தால் உடலின் எடை இன்னும் கூடுவது அபாயத்தில் அல்லவா முடியும்!

 

சிலருக்கு மாதத்தில் 5 முதல் 10 கிலோ வரை எடை கூடி விடுகிறது. டாக்டர்கள் குறிப்பிட்ட மருந்துகளை அவர்கள் தொடர்ந்து உட்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தால் அவர்களின் நிலை என்னவாகும்?

 

பல ஸ்ட்ராய்ட் மருந்துகள் (Steroid Drugs) உங்களுக்குப் பசி உணர்வைத் தூண்டி விடுகிறது. அதே போல மனம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்குத் தரும் மருந்துகள் கூட – மனச்சோர்வு, schizophrenia போன்ற வியாதிகளுக்குத் தரப்படும் மருந்துகள் கூட – உடலின் எடையை அதிகரிக்கச் செய்யும்.

முதலில் இந்த மருந்துகள் பசி உணர்வைத் தூண்டுவதால் அதிகம் சாப்பிடத்  தோன்றும். இதன் விளைவாக உடலின் எடை கூடும். சில மருந்துகளோ உடலில் கலோரியை மிக மெதுவாகச் செலவழிக்க வைத்து உடல் கூற்றையே மாற்றும். இன்னும் சில மருந்துகளோ சர்க்கரைச் சத்தையும் சில ஊட்டச் சத்துகளையும் அவற்றை உறிஞ்சுவதிலும் சேமிப்பதிலும் பாதிப்பு ஏற்படுத்தி அதன் விளைவாக உடலின்

எடையை அதிகரிக்கச் செய்யும்.

உங்களுக்கு சுவாசம் விடுவதில் சில மருந்துகள் சிரமத்தை ஏற்படுத்தினால் இயல்பாகவே நீங்கள் உடல்பயிற்சியை செய்ய விரும்ப மாட்டீர்கள். இதன் விளைவாகவும் கூட உடல் எடை கூடக் கூடும்.

 

இன்னும் சில மருந்துகளோ நீரை உடலில் அப்படியே தங்கச் செய்யும். அதன் விளைவாக உடல் எடை கூடலாம். உடலில் கொழுப்பு சக்தி அதிகம் இல்லை என்றாலும்  உடலின் எடையை இந்த நீர் அதிகரித்தே காட்டும்! இன்னும் சில மருந்துகளைப் பற்றி ஆய்வாளர்களே அவை ஏன் எடையைக் கூட்டச் செய்கின்றன என்பதை அறியாது  தொடர்ந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள்னர்.

உடலின் எடையைக் கூட்டும் மருந்துகளின் பட்டியல் இதோ:-

டயபடீஸ் நோய்க்காக எடுத்துக் கொள்ளப்படும் இன்சுலின், Thiazolidinediones, Sulfonylureas போன்றவை

ஆன்ட்டி சைகாடிக் (Antipsychotic)மருந்துகள் எனப்படும் Haloperidal, Clozapine, Lithium போன்றவை

Anttidepressant drugs எனப்படும் மனச்சோர்வை அகற்றும் மருந்துகளான amitriptyline, paroxetine மற்றும் sertraline போன்றவை

 

வலிப்பு நோய்க்கான Valproate, carbamazepine போன்றவை

ஸ்ட்ராய்ட் ஹார்மோன் மருந்துகளான prednisone அல்லது குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள்

பீட்டா ப்ளாக்கர்ஸ் (Beta –blockers) போன்ற ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள்

 

 

ஒரு முக்கியமான விஷயம்; இங்கு குறிப்பிடப்படுள்ள இவை அனைத்துமே உடல் எடையைக் கூட்டும் மருந்துகள் என்பதில்லை. உதாரணமாக metformin என்ற டயாபடீஸுக்கான மருந்து உடல் எடையைக் கூட்டுவதற்கு பதிலாக எடையைக் குறைக்கவும் கூடும். மைக்ரேன் மற்றும் இழுப்புக்கான மருந்தான Topiramteம் கூட ஒருவரின் உடல் எடை இழப்பதற்கான காரணமாகக் கூடும். ஆகவே முடிவெடுப்பதில் கவனம் தேவை.

ஒருவரின் எடை கூடுகிறது என்பதற்கு பல காரணங்கள் உண்டு

 

ஒருவர் எடுத்துக் கொள்ளும் குறிப்பிட்ட மருந்து, அவரது வயது போன்றவற்றைச் சொல்லலாம்

முதலில் டாக்டரிடம் சென்று உடல் எடை கூடுவதைச் சொன்னவுடன் அவர் பல்வேறு காரணங்களைப் பகுத்து ஆராய்வார்.

 

இப்போது உட்கொள்ளும் மருந்து தான் காரணமெனில அவர் வேறு ஒரு மாற்று மருந்தை உட்கொள்ளுமாறு ஆலோசனை கூறலாம்.

 

அதே மருந்து தான் உங்கள் வியாதியைக் குணப்படுத்த தேவை எனில் அதன் உட்கொள்ளும் அளவை அவர் குறைக்கக் கூடும்.

 

சில வகையான கான்ஸர்கள் மற்றும்

உளவியல் ரீதியிலான வியாதிகள் போன்றவற்றில் மருந்துகளை மாற்ற முடியாத சூழ்நிலையில் டாக்டர் இப்படிப்பட்ட முடிவை பரிந்துரைக்கலாம்.

ஒரு மருந்தை உங்கள் டாக்டர் பரிந்துரைக்கும் போது அவரிடமே இதன் பக்க விளைவாக உடல் எடை கூடுதல் போன்றவை ஏற்படுமா என்று முதலிலேயே கேட்டுத் தெளிவு பெறலாம்.

நல்ல உணவுப் பழக்க வழக்கங்கள், உடல் பயிற்சியை மேற்கொள்வது போன்றவற்றால் உங்கள் எடையை எப்பொழுதும் கட்டுப்பாட்டிற்குள் வைப்பது சாத்தியம்.

அவசரப்பட்டுத் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசனை செய்து ஒரு முடிவை எடுப்பதோடு தொடர்ந்து உங்கள் எடை மீது கவனம் வைப்பது சாலச் சிறந்தது.

 

****