ஜனவரி 2016 காலண்டர் (மன்மத- மார்கழி/தை மாதம்) (Post No. 2431)

IMG_0635

Written by London swaminathan

Date: 27 December 2015

 

Post No. 2431

 

Time uploaded in London :– 6-55 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

வித்வான் (அறிஞன்), நற்குணம் பற்றிய 31 பழமொழிகள்

 

விழா நாட்கள் :- 1- ஆங்கிலப் புத்தாண்டு;  14- போகிப் பண்டிகை;  15- தைப் பொங்கல்;  16- கனு, மாட்டுப் பொங்கல், வள்ளுவர் தினம்; 23- ஸ்ரீரங்கம் தேர்; 24-தைப்பூசம்/வடலூரில்ஜோதி தரிசனம் 26- இந்தியக் குடியரசு தினம்; 29-தியாகராஜ ஆராதனை;30 சேஷாத்ரி சுவாமிகள் ஜயந்தி 31- சுவாமி விவேகாநந்தர் ஜயந்தி

முகூர்த்த நாட்கள்:- 20, 29

அமாவாசை:- 9

பௌர்ணமி:- 24 (தைப்பூசம்)

ஏகாதசி:- 6, 20

 IMG_0636 (2)

ஜனவரி 1 வெள்ளிக் கிழமை

வித்யா விநய சம்பன்னே ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி

சுனிசைவ ஸ்வபாகே ச பண்டிதா: சமதர்சின: – பகவத் கீதை 5-18

கல்வியும் அடக்கமும் நிறைந்த பிராமணனிடத்திலும், பசுக்களிடத்தும் யானைகளிடத்திலும், நாயிடத்திலும், நாயை உண்ணும் புலையனிடத்திலும் ஆத்ம ஞானிகள் சமதரிசனம் கொள்கிறார்கள்.

ஜனவரி 2 சனிக்கிழமை

பலிப்யோ பலின: சந்தி – வால்மீகி ராமாயணம்7-33-22

பலவானைவிட பலம் மிக்க வீரர்கள் உண்டு.

 

ஜனவரி 3 ஞாயிற்றுக் கிழமை

சர்வநாசே சமுத்பன்னே அர்த்தம் த்யஜந்தி பண்டித: – பஞ்சதந்திரம்

எல்லாம் போகக்கூடிய நிலையில் பாதியை விட்டுக் கொடுப்பவன் அறிஞன்.

ஜனவரி 4 திங்கட்கிழமை

வித்வானேவ விஜானாதி வித்வத் ஜன பரிஸ்ரமம் – குவலயானந்த:

அறிஞனுக்குதான் மற்றொரு அறிஞனின் கஷ்டங்கள் புரியும்

 

ஜனவரி 5 செவ்வாய்க் கிழமை

விகாரஹேதௌ சதி விக்ரியந்தே யேஷாம் ந சேதாம்சி த ஏவ தீரா: – குமார சம்பவம்

ஒருவனுடைய புத்தியை பேதலிக்கக்கூடிய விஷயங்கள் இருந்தபோதிலும், புத்தி தடுமாறாதவனே வீரன்.

புலனைந்தும் வென்றான் தன் வீரமே வீரம்- அவ்வையார்

 

 

air3

ஜனவரி 6 புதன் கிழமை

பலவதபி சிக்ஷிதானாம் ஆத்மன்யப்ரத்யயம் சேத: – சாகுந்தலம்

நன்கு கற்றவர்களும்கூட தன்னம்பிக்கையை இழக்கிறார்கள்.

ஜனவரி 7 வியாழக்கிழமை

பண்டிதே ச குணா: சர்வே மூர்கே தோஷா ஹி கேவலம்

தஸ்மான மூர்க சஹஸ்ரேஷு ப்ராக்ஞ ஏகோ விசிஷ்யதே – சாணக்கியநீதி தர்பணம்

அறிஞர்களிடத்தில் நற்குணங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன; முட்டாள்களிடத்திலோ கெட்ட விஷயங்களே உள்ளன. ஆகையால ஆயிரம் முட்டாள்களைவிட ஒரு அறிஞனே மேல்.

ஜனவரி 8 வெள்ளிக்கிழமை

அனுக்தமப்யூஹதி பண்டிதோ ஜன:- ஹிதோபதேசம்—பஞ்சதந்திரம்

அறிஞன் என்பவன் , எதையும் ஊகித்தறிவான்.

 

ஜனவரி 9 சனிக்கிழமை

ஸ்வதேசே பூஜ்யதே ராஜா, வித்வான் சர்வத்ர பூஜ்யதே – பஞ்சதந்திரம்

கல்விகற்றவனை உலகமே போற்றும்; ராஜாவையோ அந்த நாடு மற்றுமே பூஜிக்கும்

 

ஜனவரி 10 ஞாயிற்றுக் கிழமை

ஜடிதி பராசயவேதினோ ஹி விக்ஞா: – நைஷதீய சரிதம்

விரைவில் பிறருடைய உள்ளக் கிடக்கையை அறிந்தவன் அறிஞன்.

 

ஜனவரி 11 திங்கட்கிழமை

ந கலு தீமதாம் கஸ்சித் விஷயோ நாம – சாகுந்தலம்

அறிவுள்ளவனுக்கு தெரியாத விஷயம் ஏதேனும் உளதோ!

 

ஜனவரி 12 செவ்வாய்க் கிழமை

ந்யாயாத் பத: ப்ரவிசலந்தி பதம் ந தீரா: – பர்த்ருஹரி நீதி சதகம்

புத்திமான்கள், நியாயமான பாதையிலிருந்து விலகுவதில்லை.

 

ஜனவரி 13 புதன் கிழமை

அஜராமரவத் ப்ராக்ஞோ வித்யாமர்தஞ்ச சிந்தயேத் – ஹிதோபதேசம்

வயதான ஒருவன் எப்படி மூப்பு, இறப்பு இல்லாத நிலைக்கு ஆசைப்படுவானோ, அப்படி ஒரு அறிஞன் கல்வியையும், செல்வத்தையும் நாடவேண்டும்.

 

ஜனவரி 14 வியாழக்கிழமை

அகுலீனோஅபி சாஸ்த்ரக்ஞோ தைவதைரபி பூஜ்யதே – ஹிதோபதேசம்

நற்குலத்தைச் சேராதவனாயினும், சாஸ்திர அறிவுடையவன், தேவர்களாலும் பூஜிக்கப்படுகிறான்.

100 tada sarkarai pongal

 

ஜனவரி 15 வெள்ளிக்கிழமை

குணா: ப்ரியத்வே அதிக்ருதா ந சம்ஸ்தவ:- கிராதர்ஜுனீயம்

ஒருவரை நாம் விரும்புவதற்குக் காரணம்- அவரது நற்குணமே; உண்மையிது, வெறும் புகழ்ச்சியன்று.

 

ஜனவரி 16 சனிக்கிழமை

குணீ ச குணராகீ ச விரல: சரலோ ஜன: – சு.ர.பா.

நற்குணமும் நற்குணத்தை நாடுபவரும் அபூர்வமே.

 

ஜனவரி 17 ஞாயிற்றுக் கிழமை

 

குணீ குணம் வேத்தி ந வேத்தி நிர் குண: – மனு

நற்குணமுடையோர், நல்லதையே காண்பர்; அவர்களுக்கு குறைகளே கண்களில் தென்படாது (தர்மன் துரியோதனன் கதை)

 

ஜனவரி 18 திங்கட்கிழமை

குணா: சர்வத்ர பூஜ்யந்தே ந மஹத்யோபி சம்பத: – சாணக்யநீதி

நற்குணமுள்ளவரிடத்தில் அதைப் போற்ற வேண்டும்; இதற்கு ஆண், பெண் என்ற வேறுபாடோ, வயதோ ஒரு தடையல்ல.

 

ஜனவரி 19 செவ்வாய்க் கிழமை

குணா குணக்ஞேசு குணா பவந்திதே நிர்குணம் ப்ராப்ய பவந்தி தோஷா: – ஹிதோபதேசம்

நற்குணமானது, நல்லோரிடத்தில் குணமாகத் தெரியும்; மற்றவர்களிடத்தில் அது ஒரு குறையாகத் தென்படும்.

 

ஜனவரி 20 புதன் கிழமை

கமீசதே ரமயிதும் ந குண: – கிராதர்ஜுனீயம்

நற்குணமானது யாருக்குதான் மகிழ்ச்சி தராது?

 

ஜனவரி 21 வியாழக்கிழமை

ஏகோ ஹி தோஷோ குணசந்நிபாதே நிமஜ்ஜதீந்தோ: கிரணேஷ்விவாங்க: – குமார சம்பவம்

சந்திரனிடத்தில் ஒரு களங்கமிருந்தாலும் அதன் ஒளி (பெருமை) குன்றவில்லை; பல நற்குணங்கள், ஒரு குறையை மறைத்துவிடும்.

 

ஜனவரி 22 வெள்ளிக்கிழமை

இந்த்ரோ அபி லகுதாம் யதி ஸ்வயம் ப்ரக்யாபிதைர் குணை: — சாணக்யநீதி

கெட்ட செயல் செய்கையில் இந்திரனும் கூட சிறுமை அடைகிறான்

 

ஜனவரி 23 சனிக்கிழமை

ஏகோ குண: கில நிஹந்தி சமஸ்த தோஷான் – சாணக்யநீதி

ஒரு நல்ல குணமானது, எல்லா தோஷங்களையும் (குறைகளையும்) அழித்துவிடும்.

Thiruvarupa_cover

ஜனவரி 24 ஞாயிற்றுக் கிழமை

அகுணஸ்ய ஹதம் ரூபம் – சு.ர.பா.

குணமில்லாத இடத்தில் அழகு இருந்து என்ன பயன்?

 

ஜனவரி 25 திங்கட்கிழமை

சஹநாவவது, சஹநௌ புனக்து சஹவீர்யம் கரவாவஹை: – யஜூர் வேதம்

நம்மிருவரையும் கடவுள் காப்பாற்றுவாராக;

நம்மிருவருக்கும் அவர் உணவு படைப்பாராக:

நாமிருவரும் பெரும் சக்தியுடன் செயல்படுவோம்;

 

ஜனவரி 26 செவ்வாய்க் கிழமை

சர்வே பவந்து சுகின: சர்வே சந்து நிராமயா:

சர்வே பத்ராணி பஸ்யந்து மா கஸ்சித் துக்கபாக் பவேத்

எல்லோரும் சுகமாக இருக்கட்டும்

எல்லோரும் நோயற்றவர்களாக வாழட்டும்

எல்லோரும் நல்லனவற்றையே காணட்டும்

ஒருவரும் துயர் அடையக்கூடாது.

air2

ஜனவரி 27 புதன் கிழமை

யத்ர விஸ்வம் பவத்யேகநீடம் – யஜுர்வேதம்

பிரம்மத்தில் இந்த உலகம் முழுதும் ஒரு பறவைக் கூடு போல இருக்கிறது. (கடவுளின் முன்னால் உலகமே ஒரு குடும்பம்.)

 

ஜனவரி 28 வியாழக்கிழமை

க்ருண்வந்தோ விஸ்வம் ஆர்யம் – ரிக் வேதம்

உலகம் முழுவதையும் பண்பாடு உடையோராக்குக.

IMG_4432

ஜனவரி 29 வெள்ளிக்கிழமை

ஆத்மவத் சர்வ பூதேஷு ய: பஸ்யதி ச பண்டித: – ஹிதோபதேசம்

தன்னைப் போலவே எல்லா உயிர்களையும் பார்ப்ப்வனே பண்டிதன்/ அறிஞன் ஆவான்.

மன்னுயிரைத் தன்னுயிர்போல் நினை

சேசாத்ரி

ஜனவரி 30 சனிக்கிழமை

க்ருண்வந்தோ விஸ்வம் ஆர்யம் – ரிக் வேதம்

உலகம் முழுவதையும் பண்பாடு உடையோராக்குக.

 

ஜனவரி 31 ஞாயிற்றுக் கிழமை

கோவிதேச: சவித்யானாம் – சாணக்கிய நீதி —பஞ்சதந்திரம்

கல்வி கற்றவனுக்கு வெளிநாடு என்று எதுவுமில்லை (யாதும் ஊரே, யாவரும் கேளிர்).

கம்பன் சோழ மன்னன் மோதல்:

(கற்றவனுக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு

உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?)

 

saint7

–சுபம்-

 

மரகதஜோதி வீரன் அர்ஜுனன், இராமனே! (Post No. 2430)

rama sky

Written by S NAGARAJAN

Date: 27 December 2015

 

Post No. 2430

 

Time uploaded in London :– காலை 5-37

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

வில்லிபாரதம்

 

மரகதஜோதி வீரன் அர்ஜுனன், இராமனே!

ச.நாகராஜன்

 

வில்லிபாரதம்

 

தமிழின் செழுமையைக் காட்டும் அற்புத இலக்கியங்களில் வில்லிப்புத்தூரார் இயற்றிய பாரதமும் ஒன்று.

சொற்சுவையும் பொருள் சுவையும் மஹாபாரதத்திற்கே உரித்தான சிறப்புத் தன்மையும் சேர்ந்த கலவை செந்தமிழில் கிடைக்கிறது என்றால் அதன் பெருமையைச் சொல்லவா வேண்டும்.

 

 

உலக இலக்கியங்களில் எல்லாம் தலை சிறந்த தனி இடத்தைப் பிடித்திருக்கும் அர்ஜுனன் சிறந்த சிவ பக்தன். அவன் சிவனை நோக்கித் தவம் செய்து பாசுபதாஸ்திரத்தைப் பெறுகிறான்.

 

இந்த அருமையான சம்பவத்தை வில்லிப்புத்தூரார் விவரிக்கும் விதமே தனி!

 

சிவனைப் போற்றும் போதெல்லாம் அர்ஜுனனையும் போற்றுகிறார்.

 

 

 rama_tirumanjanam

 

கோதண்ட இராமனே காண்டீவ அர்ஜுனன்

 

சிவனைத் துதிக்கும் அர்ஜுனன் யார் என்பதில் ஒரு இரகசியம் பொதிந்து இருக்கிறது அந்த மாபெரும் இரகசியத்தை வில்லிப்புத்தூரார் படிப்படியாக பல்வேறு விதமா சொல்லிக் கொண்டே வருகிறார்.

 

 

காண்டீவம் ஏந்திய மரகதஜோதி வீரன் அர்ஜுனன் கோதண்டம் ஏந்திய இராமனே தான் என்பதே அந்த இரகசியம்.

அர்ஜுனன் மரகதம் போல் ஜொலிப்பதால் மரகதஜோதி வீரன் என்று அவனை அழைக்கிறார் வில்லிப்புத்தூரார்.

‘மையோ, மரகதமோ, மறிகடலோ, மழைமுகிலோ, ஐயோ இவன் வடிவென்பதொர் அழியா அழகுடையான் என்று இராமனை வர்ணிக்கிறான் மஹாகவி கம்பன்.

இராமனு அர்ஜுனனும் ஒரே நிறம்!

 

 ramaswami temple,Kutanthai

வேடனாக உருத்தரித்து சிவன் அர்ஜுனனுடம் போர் புரியும் சம்பவத்தை அர்ஜுனன் தவநிலைச் சருக்கத்தில் சொல்ல வருகிறார் வில்லிப்புத்தூரார்.

 

விராதன் ஆதி நிசாசரேசரை வென்று முச்சிகரத்தின் மேல் இராதவாறு அடல் அமர் புரிந்த இராமனே நிகர் ஏவினான்

 

 

      (புராதனாகம வேத எனத் தொடரங்கும் பாடல் – 92)

 

விராதன் முதலான ராக்ஷஸத் தலைவர்களை ஜயித்து மூன்று சிகரங்களை உடைய திரிகூடகிரியில் (அதாவது இலங்கையில்) இல்லாதவா கொடிய போரைச் செய்த இராமனையே ஒத்த அம்புத் தொழிலைச் செய்யும் அர்ஜுனன் என்பதே இதன் பொருள்.

 

மாதலி கூற்று

 

அடுத்து நிவாதகவசர் காலகேயர் வதைச் சருக்கத்தில் இந்திரனின் சாரதியான மாதலி அர்ஜுனனிடம் அவனை ஏற்றிச் செல்லும் தேரைப் பற்றிச் சொல்கிறான்.

‘நீ ஏறி வரும் இந்தத் தேர் ஜம்புவன், ஜம்புமாலி என்னும் பெயருடைய அசுரர் இருவரை இந்திரன் வதைத்த அந்த நாளில் ஏறி வந்த அதே தேர் தான். இராவணனை வதை செய்து இராமன் வென்ற பிறகு அந்த நாளில் ஏறிய அதே தேர் தான் இது

 

“தும்பையஞ்சடையான் வெற்பைத் துளக்கிய சூரன் மாள  விம்பவார் சிலை இராமன் வென்ற நாள் ஊர்ந்தது இத்தேர்

 

(பொருள்: தும்பைப் பூவைச் சூடிய அழகிய சடையினை உடைய சிவபிரானின் கைலாச மலையை அசைத்த சூரனாகிய இராவணனை வட்டமாக வளைந்த, நீண்ட கோதண்டம் என்னும் வில்லை உடைய ராமபிரான் ஜயித்த காலத்தில் ஏறிச் சென்றது இந்தத் தேர்)

 

கோதண்டம் என்ற வில் சக்கரம் போல வளையும் தன்மை (விம்பம் வார் சிலை) உடையது.

 

காண்டீவம் என்னும் அர்ஜுனனின் வில்லும் இதே போலச் சக்கரம் போல வளையும் தன்மை உடையது. என்ன ஒற்றுமை!

 ramayana picture

இராமன் போல அம்பு வீசும் அர்ஜுனன்

 

இன்னுமொரு ஒற்றுமையைச் சுட்டிக் காட்டுகிறார் தமிழ்க் கவிஞர்!

காஸ்யப முனிவரின் மனைவியான திதிக்குப் பிறந்த அசுரர்கள் அர்ஜுனன் மீது அம்புகளை வீச அர்ஜுனன் வைஷ்ணவாஸ்திரத்தை அவர்கள் மீது செலுத்துகிறான்.

அது வெள்ளம் போல அசுரர் படைகளை மாய்க்கிறது. இது எப்படி இருக்கிறது?

 

 

முன்னொரு நாளில் இராமன் கடல்நீர் வெள்ளத்தை வற்றச் செய்த விதம் போல இது இருக்கிறது.

 

வண்ணவிற்படை இராமன் வாரிதி வெள்ளம் வீத்த      பண்ணெனப் படுத்தது அந்தப் பைந்துழாய்ப் பரமன் வாளி

 (நிவாதகவசர் காலகேயர் வதைச் சருக்கம் விண்ணிடத்தசனி எனத் தொடங்கும் பாடல் – எண் 78)

 

பைந்துழாய்ப் பரமன் வாளி என்பது வைஷ்ணாவாஸ்திரம்.

 

அர்ஜுனன் இராமன் தானோ!

தன் ஒற்றை வில்லைக் கொண்டு அம்பு மழை பொழிகிறான் அர்ஜுனன்.

அதை வில்லிப்புத்தூரார் வர்ணிக்கிறார் இப்படி:

“தவரினுக்கு இராகவன் கொல் என வரும் தனஞ்சயன்

 

 

     (அவர் விடுத்த எனத் தொடங்கும் பாடல் – எண்126)

(தவரினுக்கு – வில் வித்தையில் இராகவன் கொல் என – இராகவன் தானோ என்று சொல்லும்படி வரும் – அவதரித்த

தனஞ்சயன் – அர்ஜுனன்)

 

 

 arjun-big2

அர்ஜுனன் இராமனே!

அர்ஜுனன் இராமன் தானோ என்று சொல்லும்படி இருந்தது என்ற வில்லிப்புத்தூரார் கடைசியில் இந்திரன் வாயிலாக அர்ஜுனன் இராமனே என உறுதிப் படுத்துகிறார்.

 

 

பாடலைப் பார்ப்போம்:-

 

ஆதி நாயகன் மாமாயன் அமரர் தம் துயரும் ஏனைப்      பூதல மடந்தைக்கு உற்ற புன்மையும் தீர்ப்பான் எண்ணிச்       சீதை தன் கொழுநநான திண்டிறல் இராமன் போல             ஓத நீருலகில் மீண்டும் அர்ஜுனன் உருவம் கொண்டான்

 

 

இந்திரன் கூறுவதாக வரும் இந்தப் பாடலின் பொருள் :

முதல் கடவுளாகிய திருமால் தேவர்களது துன்பத்தையும் மற்ற பூமி தேவிக்கு உற்ற துயரத்தையும் தீர்ப்பதற்காக சீதையின் கணவனான மிக்க வலிமை உடைய இராமனாக அவதரித்தது போல கடல் நீர் சூழ்ந்த உலகில் மறுபடியும் அர்ஜுனனது உருவம் எடுத்து அவதரித்தான்.

 

 

அர்ஜுனன் இராமனே என்பதைப் படிப்படியாக வில்லிப்புத்தூரார் சொல்லும் பான்மை சிறந்த கவிகளுக்கே உரித்தான நாடக பாணியில் அமைந்துள்ளது சுவாரசியமான விஷயம்!

 

அனைத்தையும் சுவைத்துப் படித்தால் மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும்.

 

கம்பசூத்திரம் என்பது போல வில்லி சூத்திரமும் இருக்கிறது!

*******

 

 

 

பழைய ஜோக்! குப்பா சாஸ்திரியும், சுப்பா தீக்ஷிதரும் ஏகாதசி விரதம் (Post No. 2429)

er uzavan 3

Written by London swaminathan

Date: 26 December 2015

 

Post No. 2429

 

Time uploaded in London :– 12-17

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

ஒருநாள் கும்பபுரம் குப்பாசாஸ்திரிகள், ஏகாதசி அன்று வெற்றிலை பாக்குப் புகையிலை போட்டுக்கொண்டு மிதுனபுரம் சுப்பாதீக்ஷிதர் வீட்டுக்கு வர, அவர் குப்பா சாஸ்திரிகளைப் பார்த்து, “ஏனையா ஏகாதசியன்று வெற்றிலைபாக்கு போட்டு வந்தீர்?” என்றார்.

குப்பா:- ஐயா! நன்றாய்ச் சொன்னீர். பிரம்மபத்ரமாகிய புகயிலை போட்டுக் கொண்டதால் வெற்றிலை போடுவதில் தோஷமில்லை.

சுப்பா:- பிராமணன் புகையிலை போடலாமா?

குப்பா: பழையது சாப்பிட்ட எனக்கு புகையிலையின்றி சரியாய் வராது.

சுப்பா:- அடடா! ஏகாதசியன்று பழையது சாப்பிடலாமா?

குப்பா:- பழையது சப்பிடாவிட்டால் ஏர் பிடித்து உழ முடியாதே!

சுப்பா:- சரி, சரி; பிராமணன் ஏர் பிடித்து உழுவது எந்தவூர் வழக்கம்?

குப்பா: என்னையன்றி வில்வக்கட்டை கலப்பையைக் கொண்டு உழ வேறொருவராலும் சாத்தியமாகாது.

சுப்பா:- இதென்ன அநியாயம்! வில்வ மரத்தை வெட்டக் கூடாதே. அதனால் செய்த கலப்பையைப் பிடித்து பிராமணன் உழலாமா?

குப்பா:- ஓய்! அதன் மகிமை உமக்குத் தெரியாது. வில்வக் கட்டையைக் கலப்பைக்குப் போடாவிடில் காராம்பசு ஏருக்கு வராது.

சுப்பா: கிருஷ்ண, கிருஷ்ண; மகா பாவம். காராம்பசுவைக் கொண்டு உழலாமாங்காணும்?

குப்பா:- நல்ல நீதி சொல்ல வந்தீர். அப்படிச் செய்யாவிடில் துளசி வனம் அழியாதுங்காணும்.

சுப்பா:- ராம, ராம; அட சண்டாளா! மகாவிஷ்ணுவுக்கு அர்ப்பணிக்க எல்லாரும் துளசி வனம் வைக்கிறார்கள் நீரதை அழிக்க வேணும் என்கிறீர்.

 

opium

குப்பா:- போங்காணும் போம்; துளசி வனம் அழியாவிட்டால் கஞ்சாப் பயிராவது எப்படி?

சுப்பா:- ஹரி, ஹரி! ஏன் ஓய் என்ன இது! பிராமணனுக்குக் கஞ்சாப் பயிர் எதற்க்குங்காணும்?

குப்பா:- கஞ்சாப் பயிர் செய்யாவிடில் நான் சாப்பிடுவதற்குக் கடையில் வாங்கிக் கட்டுபடியாகாது இல்லியோ?

சுப்பா:- ஓய், இது என்ன அநியாயம்? பிராமணன் கஞ்சா சாப்பிடலாமாங்காணும்?

குப்பா:- ஓய் கூச்சல் போடாதேயும். வம்ச பரம்பரையாய் நடந்து வருகிற வழக்கத்தை விடக்கூடாதுகாணும். மேலும் அது சாப்பிடாவிட்டால் நான் சாப்பிடுகிற மாம்சம் எப்படி ஜீரணமாகும்?

சுப்பா:- சரி, சரி, உம்மோடு பேசுவதுகூட மகபாவம்! நீர் பிராமணனே இல்லை! (என்று சொல்லி முகத்தைத் திருப்பிக்கொண்டார்)

குப்பா:- ஏன்? நீர் பிராமணன் அல்ல என்றால் ஆகாதோ? (என்று சொல்லி நடையைக் கட்டினார்).

–சுபம்—

 

 

Businessman- born as Cow, Dog and Snake before got liberated! (Post No. 2428)

SEA WAVES

Cycle of Birth and Death is described as Samsara Sagara (ocean of family ties) in Tamil and Sanskrit.

 

Written by London swaminathan

Date: 26 December 2015

 

Post No. 2428

 

Time uploaded in London :– காலை 8-17

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

There is an interesting story in an old Tamil book about a businessman who became cow, dog and snake because of his strong attachment to his family. At last he was liberated from the cycle of birth and death with the grace of a Guru (spiritual teacher).

 

A saint was going through a town where a good man was running a sweetmeat shop. The shopkeeper used to welcome any saint visiting the town and offer him food. This saint also visited his house where he was honoured with a good feast. He was given all types of sweets with a pot of hot milk. The saint was so happy to get food from a good soul, he immediately came forward to give him a ‘mantra’ which would liberate him from the ‘disease of birth and death’. But the businessman hesitated saying that he had some duty to fulfil towards his family. The saint said that he would come back after some time.

 

After a few years the saint passed through the same town where he met the businessman. He welcomed the saint home and told that his wife had died, but yet he has some duty towards his two sons. He wanted them to get married. The saint smiled at his statement and went away.

jersey cow

A few years have passed. Again he came back to the businessman’s house where his two sons prostrated before him with their new wives. He blessed them and looked at the businessman. He understood what the saint meant. But he apologised to the saint saying that the family incurred some debt due to the marriages. So he wanted to clear the debts before getting the liberation mantra. The saint smiled at him and went his way.

 

Several years passed and the saint came back again. Now he was welcomed only by his sons. They told him that they had lost their father. The saint used his third eye to know his whereabouts in his rebirth. The businessman was born as a cow and in the cattle shed of the same house. But his children didn’t know that. The saint went to the cattle shed when the children were inside the house and told the cow who he was in his previous birth. The saint even came forward to give him the mantra. But the cow told him, “Look! Guruji! My sons are in need of money. My milk helps them to earn some money. So I don’t want the liberation mantra now”. The saint smiled and went his way.

 

 

After a long time, the saint came again. This time he saw a dog in the businessman’s house whose story he heard from the businessman’s sons. After the cow’s death, this dog came on its own to his house and so they raised it as their pet dog. As soon as the saint heard this he knew that it was the cow reborn as a dog now. The saint went to the dog and told him, “Look! You were born as a cow and now a dog. I offered the mantra even when you were in human form. Are you ready to accept my mantra now which will liberate you from this low life of a dog”.

dog3

The dog said to the Guru, “Please don’t give me the mantra now. My sons have been very irresponsible. If I were not there, this house would have been burgled several times. So I wanted to guard the house for some time. The saint was surprised to hear his reply. His attachment to the family was so strong that not even a saint could help him. So he smiled at the dog and went his way.

 

After a few years the saint who became very old now, struggled to walk to the house of the businessman. His sons were not ready to welcome him. They were angry to see him and was about to chase him. But the saint told them that he wanted to reveal them a secret. They told the saint that the dog had died and now there was no one to guard the house.

 

The saint told them it didn’t matter much because there was a treasure buried in his house. He told them that it was under a thick bush in the wooded area of their garden. The sons ran there with a spade and axe. But to their surprise a cobra rose its hood and tried to bite them. They came back to the Guru accusing him of conspiracy to kill them. He told them that the cobra is protecting the treasure. The saint knew that it was their father who became cow, then dog and now a snake to guard the family property. When the sons heard abbot the treasure, they called the villagers to kill the cobra. When it died they took the treasure from the ground.

snake

The saint who watched the whole drama caught the spirit of the cobra and liberated it. Guru also disappeared from the scene. Then the businessman’s sons realised that it was not an ordinary saint who visited them. Guru also was very happy that it was able to save one soul.

 

“Attach yourself to the one who has no attachment (God) to sever all other attachments” (Tirukkural 350)

-subham-

 

சுபாஷித இலக்கியம் (Post No. 2427)

raghavan 2

Picture of Dr Raghavan, Sanskrit Scholar

 

Written by S NAGARAJAN

Date: 26 December 2015

 

Post No. 2427

 

Time uploaded in London :– காலை 6-35

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

சுபாஷித இலக்கியம்

ச.நாகராஜன்

 

 

கூகிளின் புத்தகத் திட்டம்

 

உலகில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கையைச் சொல்வது முடியக் கூடிய காரியமா என்ன?

மலைக்க வேண்டாம்.

 

வானத்தில் உள்ள கோடிக்கணக்கான நட்சத்திரங்களையே பட்டியலிடும் இந்தக் காலத்தில் முடியாதது என்று ஒன்று உண்டா என்ன?

 

கூகிள் களத்தில் இறங்கியது. தி டெலகிராஃப் பத்திரிகை 6-8-2010 தேதியிட்ட இதழில் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதன்படி புத்தகம் பற்றிய கூகிள் திட்டம் முடிந்து விட்டதென்றும் உலகில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை சரியாக 129,864,880 (பன்னிரண்டு கோடியே தொண்ணூற்றெட்டு லட்சத்து அறுபத்தி நான்காயிரத்து எண்ணூற்றி எண்பது) என்றும் அந்தச் செய்தி கூறியது.

 

புத்தகங்களின் கணக்கு ஒருவாறாக வந்து விட்டது!

 

dr raghavan

டாக்டர் வி.ராகவனின் அரிய பணி

 

நல்லது, புத்தகமாக வெளி வராத சுவடிகள் எவ்வளவு? அதில் சம்ஸ்கிருதச் செல்வம் எவ்வளவு உள்ளது? மலைக்க வைக்கும் அளவில் பல லட்சக்கணக்கான சுவடிகள் உலகெங்கும் பல்வேறு இடங்களில், – பல்கலைக் கழகங்களில், கோவில்களில், மடாலயங்களில், தனியாரது சேகரிப்பில், அருங்காட்சியகங்களில் என்று இப்படிப் பல்வேறு இடங்களில்  –  உள்ளன.

இதை மொத்தமாகப் பட்டியலிடும் பெரிய திட்டத்தை யாரும் மேற்கொள்ளவில்லை.

 

சம்ஸ்கிருத பேரறிஞர் டாக்டர் வி.ராகவன் (1908-1979) இந்தப் பணியில் தீவிரமாக இறங்கினார். உலகெங்கும் பயணம் செய்தார். ஓரளவுக்கு பல்லாயிரம் சுவடிகள் மற்றும் புத்தகங்களின் விவரத் தொகுப்பை நூலாக்கினார்.

 

ஆனால் தஞ்சையில் உள்ள சரஸ்வதி மஹாலில்  தொடங்கி  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வரை பகல்லாயிரக்கணக்கான இடங்களில் உள்ளவற்றை முழுவதுமாக யாரே தொகுப்பர்? காலம் தான் விடை சொல்ல வேண்டும்.

 

என்றாலும் கூட தங்களால் முடிந்த அளவில் பல அறிஞர்கள் தங்கள் வாழ்நாள் பணியாக சம்ஸ்கிருதச் செல்வத்தைக் காக்க முயற்சி எடுத்திருப்பதை சரித்திரம் சொல்கிறது.

 

SUBASHITA BIG

மஹாசுபாஷித சம்க்ரஹா – லுட்விக் ஸ்டர்ன்பாக்

 

சம்ஸ்கிருத இலக்கியத்தில் சுபாஷிதம் ஒரு தனி இடத்தைப் பெறுகிறது.

 

பல்லாயிரக்கணக்கான சுபாஷித ஸ்லோகங்களை வெளியிடுவது ஒன்றையே தன் வாழ்நாள் பணியாக மேற்கொண்ட அறிஞர் லுட்விக் ஸ்டர்ன்பாக் (Ludwik Sternbach) அனைத்து சம்ஸ்கிருத ஆர்வலர்களாலும் போற்றிக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு பெரியார்.

 

 

மஹாசுபாஷித சம்க்ரஹா என இவர் அரிய சுபாஷிதங்களைத் தொகுக்கும் பணியை ஆரம்பித்தார். இந்தத் திட்டத்தின் கீழ் எட்டுத் தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில்

அகரவரிசைப்படி ஸ்லோகங்கள்/செய்யுள்கள்  தொகுக்கப்பட்டுள்ளன.

 

சம்ஸ்கிருத மூலமும் அதன் கீழ் ஆங்கில மொழிபெயர்ப்பும் அரிய குறிப்புகளும் இந்த எட்டுத் தொகுதிகளில் உள்ளன.

முதல் தொகுதியில் 1 முதல் 1873 ஸ்லோகங்களும் இரண்டாம் தொகுதியில் 1874 முதல் 4208 முடிய உள்ள ஸ்லோகங்களும் மூன்றாம் தொகுதியில் 4209 முதல் 8285 முடிய உள்ள ஸ்லோகங்களும் நான்காம் தொகுதியில் 6286 முதல் 8264 முடிய உள்ள ஸ்லோகங்களும் ஐந்தாம் தொகுதியில் 8265 முதல் 9979 முடிய உள்ள ஸ்லோகங்களும் ஆறாம் தொகுதியில் 9980 முதல் 11491 முடிய உள்ள ஸ்லோகங்களும் ஏழாம் தொகுதியில் 11492 முதல் 13018 முடிய உள்ள ஸ்லோகங்களும் எட்டாம் தொகுதியில் 13019 முதல் 14653 முடிய உள்ள ஸ்லோகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

 

LUDWIG 2

முதல் பாகம் 586 பக்கங்களையும் இரண்டாம் பாகம் 608 பக்கங்களையும் மூன்றாம் பாகம் 564 பக்கங்களையும் நான்காம் பாகம் 571 பக்கங்களையும் ஐந்தாம் பாகம் 492 பக்கங்களையும் ஆறாம் பாகம் 575 பக்கங்களையும் ஏழாம் பாகம் 671 பக்கங்களையும் எட்டாம் பாகம் 732 பக்கங்களையும் கொண்டுள்ளது. ஆக சுமார் 4799 பக்கங்களில் 14653 சுபாஷித செய்யுள்களைப் படிக்க முடியும்.

 

 

அறிஞர் லுட்விக் ஸ்டர்ன்பாக்கிற்கு அறிவுச் செல்வத்தைப் போற்றும் உலகினர் அனைவரும் நன்றிக் கடன் பட்டுள்ளனர். இந்தத் தொகுதிகளை விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் தக்க நூலகத்தை அணுகி இவற்றைப் படிக்கலாம். இணையதளத்திற்கான இணைப்பு வசதி உள்ள,

சுபாஷிதத்தைப் படிக்க ஆரம்பிக்க விரும்பும் ஆர்வலர்கள் கீழே குறிப்பிட்டுள்ள இணையதளங்களை நாடலாம்; நற்பயன் பெறலாம் :-

LUDWIG3

http://sanskritdocuments.org/doc_z_misc_subhaashita/doc_z_misc_subh_1_index.html

http://www.scribd.com/doc/94115369/Sanskrit-Subhashita-Collection#scribd

 

—Subham—-

U.S. ARMY AND NAVY ANECDOTES (Post No. 2426)

washington

Compiled  by london swaminathan

Date: 25 December 2015

Post No. 2426

Time uploaded in London:- 13-06
( Thanks for the Pictures  )

General Washington seldom indulged in joke or sarcasm, but when he did, he always made a decided hit. It is related that he was present in Congress during the debate on the establishment of the Federal army, when a member offered a resolution limiting the army to three thousand men. Upon this Washington suggested to a member an amendment providing that no enemy should ever invade the country with more than two thousand soldiers. The laughter which ensued smothered the resolution completely.

 

Xxxx

One day Lincoln and some of his friends were discussing the amount of man power involved in the American Civil War. Someone asked him how many men the confederates had in the field. Lincoln astonished them by saying, “Twelve hundred thousand, according to the best authority”.

“Yes, Sir”, repeated Lincoln, “twelve thousand – no doubt of it. You see, all our generals, when they get whipped, say the enemy outnumbers them from three or five to one, and I must believe them. We have four thousand men in the field, and three times four make twelve. Don’t you see it?”

lincoln new

xxx

Nearly all great scientific discoveries have been combated and misunderstood, even by great men. Admiral Sir Charles Napier fiercely opposed the introduction of steam power into the Royal navy, and one day exclaimed in the House of Commons:

“Mr. Speaker, when we enter Her Majesty’s Naval Service and face the chances pf war, we go prepared to be hacked in pieces by cutlasses, to be riddled with bullets, or to be blown to be bits by shot and shell; but, Mr Speaker, we do not go prepared to be boiled alive.”

 

Xxx

maccellan

President Lincoln once wrote to General McClellan, when the latter was in command of the army. General McClellan, as is well known, conducted a waiting campaign, being so careful not to make any mistakes that he made very little headway. President Lincoln sent this brief but exceedingly pertinent letter:

“My dear McClellan: If you don’t want to use the army I should like to borrow it for a while.”

 

Xxx

Stories concerning the clashes between Lincoln and the inadequate General McClellan are common. Lincoln deemed it necessary for McClellan to report frequently and the General chaffed at this. One time he sent the President the following telegram from the field:

President Abraham Lincoln

Washington D C

Have just captured six cows. What shall we do with them?

George McClellan

 

Lincoln promptly wired:

General George McClellan

Army of the Potomac

As to six cows captured – milk them

A.Lincoln.

Abraham_Lincoln_

–Subham–

 

 

ஒரு நீண்ட கதை! அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானமா? (Post No. 2425)

SEA WAVES

Written by london swaminathan

Date: 25 December 2015

Post No. 2425

Time uploaded in London:- 9-00 AM
( Thanks for the Pictures  )

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

மனைவி, மகன், நில, புலன்கள் முதலியன எல்லாம் ஒருவனை எப்படிப் பந்த பாசத்தில் சிக்க வைக்கும் என்பதற்கு ஒரு சுவையான கதை.

 

ஒரு ஊரில் ஒரு நல்ல மனிதன் இனிப்புப் பலகாரங்களைச் செய்து விற்கும் வியாபாரம் நடத்தி வந்தார். அவர் ஒரு தர்மவான். போகும் வரும் சந்யாசிகளுக்கு உணவு கொடுத்து மரியாதை செய்வார். ஒரு நாள் ஒரு சந்யாசி அந்தப் பக்கம் வரவே, அவரை வரவேற்று, வாழையிலையில் அன்னத்துடன் தான் செய்த இனிப்புப் பலகாரங்களையும், ஒரு குவளையில்  பாலையும் பரிமாறினார். அந்த சந்யாசி அவரை வயிறார வாழ்த்தி, “அன்பனே, உனது பக்திக்கு மெச்சினோம். உம்மை சம்சார பந்தத்திலிருந்து விடுவிக்க அருமருந்தாகிய ஒரு உபதேசத்தை உமக்கு அருள திருச்சித்தம் கொண்டுள்ளோம்” என்றார்.

 

சுவாமி! மிக்க மகிழ்ச்சிதான். ஆனால் அதற்கு இது தருணமல்ல. மனைவி மக்களைக் காப்பாற்றும் கடமை உளதே என்றார்.

சாமியாரும் (சந்யாசி) அதற்கென்ன பின்னொரு சமயம் வருவோமென்று கூறிச் சென்றார். சில ஆண்டுகள் சென்றன. மீண்டும் அவ்வழியே அந்த சந்யாசி வந்தவுடன் அறுசுவை அன்னம் படைத்தான் அந்த இனிப்பு வியாபாரி. “அன்பனே, காலம் கனிந்ததா? உபதேசத்துக்குத் தயாரா?” என்று சாமியார் வினவ, “சில ஆண்டுகளுக்கு முன் என் மனைவி இறந்துவிட்டாள். இப்பொழுது இரு மகன்களுக்கும் கல்யாணம் முடிக்கவேண்டிய கடமை உளது” என்றார். சாமியார் சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.

 

இன்னும் சில ஆண்டுகள் சென்றன. சாமியார் அதே வீட்டுக்கு வந்தார். வழக்கம்போல உபசரிப்பு. இப்பொழுது இரண்டு மகன்களுக்கும் கல்யாணம் நடந்து தம்பதி சகிதம் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். சாமியார், கடைக் கண்களால் வியாபாரியைப் பார்த்தார். அவருக்கு சட்டென விளங்கியது.

jersey cow

“இன்னும் உபதேசத்துக்கு நேரம் வரவில்லை. ஏனெனில் மகன் கல்யாணத்துக்கு வாங்கிய கடன்களை அடைக்க வேண்டி இருக்கிறது” என்றார். சாமியாரும் சிரித்துக் கொண்டே வந்த வழியே சென்றார்.

ஆண்டுகள் பல உருண்டோடின. மீண்டும் வந்தார் சாமியார். வழக்கம் போல அறு சுவை உணவு. ஆனால் வியாபாரியைக் காணவில்லை. மகன்களிருவரும் “தந்தை இறந்துபோய் சில ஆண்டுகள் ஆனதாக”ச் சொன்னார்கள். உடனே சந்யாசி தனது ஞான திருஷ்டியால், அவரது தந்தை அதே வீட்டில் மாட்டுக் கொட்டிலில் மாடாய்ப் பிறந்திருப்பதை உணர்ந்தார்.

 

மகன்களிடம் சாக்குப் போக்குச் சொல்லி நைஸாக மாட்டுக் கொட்டிலுக்குச் சென்றார். இந்த மாட்டை எங்கே வாங்கினீர்கள்? என்றார். இது வாங்கிய மாடல்ல. முன்னால், இந்த வீட்டிலிருந்த, பசு ஈன்ற கன்றுதான் இது என்றனர். மகன்களிருவரும் வீட்டுக்குள் சென்ற சமயம், அந்த மாட்டிடம் அது யார் என்பதை உணர்த்தி இப்போது ஞான உபதேசத்துக்குத் தயாரா? என்று கேட்டார். அதற்கு அந்த பசு சொன்னது:

“ஐயோ, இப்போது வேண்டாம். என் மகன்களிருவரும் வரும்படியின்றி கஷ்டப்படுகிறார்கள். நான் கொடுக்கும் பாலை விற்றுப் பணம் சம்பாதிப்பதால் அவர்கள் கஷ்டம் நீங்கியபின்னர் தான் தயார்” என்றது. அந்த சாது சந்யாசியும் சிரித்துக் கொண்டே விடைபெற்றுச் சென்றார்.

 

சில ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த வீட்டுக்கு வந்தபோது, மகன்கள், ஒரு நாயை வளர்த்து வருவதைக் கண்டார். அது சந்யாசியைக் கண்டவுடன் அவர் மீது தாவிக்குதித்து ஓடி வந்தது. மகன்கள் இருவரும் அதைக் கட்டிப்போட்டுவிட்டு, உணவு படைத்தனர். மாடு இறந்து போன பின்னர் வீட்டுக்குத் தானாகவே வலிய வந்த ஒரு நாயை வளர்க்கத் துவங்கிய கதைகளைச் சொன்னார்கள். அனத சந்யாசி ஞானதிருஷ்டியில் பார்த்த போது மாடாகப் பிறந்து, இறந்த பின்னர் அந்த வியாபாரிதான் இப்போது நாயாகப் பிறந்திருக்கிறார் என்பதை அறிந்தார். யாருமில்லத சமயம் அதனிடம், அது யார் என்பதைச் சொல்லி, உபதேசம் செய்ய்யத் தயாராக இருப்பதாகவும், அதைக் கேட்டால், இந்த நாய்ப்பிழைப்பு தேவையில்லை என்றும் சொன்னார்.

 

dog3

அதற்கு அந்த நாய் சொன்னது:

சுவாமி! இப்போது வேண்டாம். என் மகன்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த வீட்டை அவர்கள் இல்லாத போது நான் தான் காவல் காக்கிறேன் என்று சொன்னது.

 

அந்த சந்யாசியும் சிரித்துக் கொண்டே வந்தவழியே போய்விட்டார். இந்த வியாபாரியை பிறப்பு- இறப்பு என்ற மாயச் சுழலிலிருந்து விடுவிக்க முயன்றாலும், முடியவில்லையே! இந்த சவாலை சமாளித்தேயாக வேண்டும் இன்னும் ஒரு முறை வருவோமென்று கங்கணம் கட்டிக் கொண்டார். விசுவாமித்திரர், திரிசங்கு மஹாராஜனை சுவர்க்கத்துக்கு அனுப்பிய கதை போல இருக்கிறதே! என் தவ வலிமையைப் பயன்படுத்தி இவனை விடுவிப்பேன்; பந்த பாசம் என்பது அவ்வளவு வலியதா என்று வியந்தார்.

 

ஆண்டுகள் பறந்தன. அதே சந்யாசி தள்ளாடித் தள்ளாடி அந்த வியாபாரி வீட்டுக்கு வந்தார். இப்பொழுது நாயும் இறந்து விட்டது. மகன்கள் இருவருக்கும் இந்த சந்யாசி நம்மை விட மாட்டான் போல இருக்கிறது, இவனை விரட்ட வேண்டும் என்று கோபத்துடன் வந்தனர். அவருக்குப் புரிந்துவிட்டது உடனே ஞான திருஷ்டியால் ஒரு விஷயத்தை அறிந்தார். அவர்களிருவரும் கோபத்துடன் வந்தவுடன், “இவ்வளவு நாளாக உங்களுக்குச் சொல்ல மறந்த ஒரு ரஹசியத்தைச் சொல்லிவிட்டுப் போகலாமென்று வந்தேன்” என்றார்; உடனே அவர்கள் சோறு படைத்து , இனிப்பு கொடுத்து மெதுவாக ரஹசியம் என்ன? என்று கேட்டனர்.

 

தோட்டத்தில் மரப் புதர்களுக்கிடையில் அவரது தந்தை 100 பவுன் தங்க நகையைப் புதைத்து வைத்திருப்பதாகச் சொன்னார். உடனே அவர்கள் இருவரும் கடப்பாரை , மண்வெட்டி சகிதம் விரைந்தனர். அங்கே ஒரு பாம்பு அவர்கள் மீது சீறிப்பாய்ந்தது. இந்த சந்யாசி நம்மைக் கொலை செய்யத் திட்டமிட்டு இப்படி பாம்பிருக்கும் புதருக்கு அனுப்பியிருக்கிறான் என்று எண்ணி அவரை அடிக்க ஓடி வந்தனர். அவர் உடனே, “நிறுத்துங்கள், அந்தப் பாம்பு அங்கேயுள்ள புதையலுக்குக் காவலாக இருக்கிறது” என்றார்.

snake

உடனே அதைக் கொல்வதற்காக பாம்பு! பாம்பு! என்று கத்தியவுடன் ஊர் ஜனங்கள் எல்லோரும் வந்து அதை அடித்துக் கொன்றனர். அவர்கள் எல்லோரும் போன பின்பு இரண்டு மகன்களும் அந்த தங்கப் புதையலைப் பங்கு போட்டுக் கொண்டனர். அந்த சந்யாசியும் பாம்பின் ஆவியைப் பிடித்து அதைக் கரயேற்றி  அப்படியே மாயமாய் மறைந்தார். அதை இரண்டு மகன்களும் வியப்புடன் பார்த்தார்கள்.

 

அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய  முடியாது. ஒருவருடைய பந்த பாசத்தை விடுவித்து, ஒருவரைக் கரையேற்ற ஞானிகளும் கூட மிகவும் பிரயத்தனம் (முயற்சி) செய்ய வேண்டியிருக்கிறது. வியாபாரியின் வீட்டில் ஒரு நாள் உணவு சாப்பிட்டதாலும் அவர் தர்மவான் என்பதாலும் அவரை ஜனன-மரணச் சுழலிலிருந்து அந்த சந்யாசி விடுவித்தார்.

–subham–

உயிருடன் புதையுண்டு மீண்டும் வந்த யோகிகள்! (Post No.2424)

1306_Maharshi_Dadhichi

Written by S NAGARAJAN

Post No.2424

Date : 25th December 2015

Time uploaded in London: 6-45 AM

 

25-12-2015 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளி வந்த கட்டுரை

 

உயிருடன் புதையுண்டு மீண்டும் உயிர்த்தெழுந்த யோகிகள்!

.நாகராஜன்

 

“நாம் அனுபவிக்கும் ஒவ்வொன்றையும் தர்க்கத்தாலோ அல்லது விஞ்ஞானத்தாலோ விளக்க முடியாது” – லிண்டா வெஸ்ட்பால்

 

‘LIVING BURIAL’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உயிருடன் புதையுண்டு மீண்டும் உயிர்த்தெழும் ச சாமானியர்களுக்கு மட்டுமல்ல, விஞ்ஞானிகளுக்கும் கூட ஒரு சுவாரசியமான விஷயம் தான்!

 

 

இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய மேலை நாடுகளில் ஆவிகள் பற்றிய ஆராய்ச்சி மும்முரமாக நடந்த கால கட்டத்தில் அதையும் மிஞ்சும் விஷயமாக இது நேரடியாகப் பலமுறை செய்து காட்டப்பட்டது. இதனால் விஞ்ஞானிகள் இதில் ஆர்வம் கொண்டனர்; இதை ஆராய முன் வந்தனர்.

 

இதில் முதலிடம் பெற்றவர்கள் இந்திய யோகிகள். இது அவர்களுக்கு சர்வ சாதாரண விஷயமாக இருந்தது.

1870ஆம் ஆண்டு அல்ஜீரியாவிலிருந்து லண்டனுக்கு வந்த யோகிகள் குழு செய்த செய்கைகள் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. அவர்கள் தங்கள் உடலில் ஆழமான வெட்டுக் காயங்களை ஏற்படுத்திக் காண்பித்தனர். அந்தக் காயங்களால் அவர்கள் வ்லியில் துடிக்கவில்லை. இதே போன்ற காட்சிகளை பாரிஸில் நடந்த ஒரு கண்காட்சியில் அல்ஜீரியாவைச் சேர்ந்த மகமதியர்கள் சிலர் செய்து காட்டினர். இதை நேரில் இருந்து பார்த்து ஆய்வு நடத்திய டாக்டர்கள் நாகல், சாபௌட், பாரட் ஆகியோர் (UEBERSINNLICHE WELT என்ற) ஜெர்மானிய பத்திரிகையில் தாங்கள் பார்த்தவற்றைப் போட்டோக்களுடன் வெளியிட்டனர்.

 

651-Saint-Arunagirinathar

உடல் மீது தங்களுக்கு முழு ஆதிக்கம் உண்டு என்று இப்படிச் செய்து காட்டியவர்களுள் முக்கியமானவர்கள் தாரா பே, ரஹ்மான் பே மற்றும் ஹமித் பே ஆகியோராவர். ஆழமான வெட்டுக் காயங்களை ஏற்படுத்திக் கொண்ட இவர்கள் அத்துடன் நிற்கவில்லை, தங்களை உயிருடன் புதைக்கச் செய்து மீண்டும் உயிருடன் வெளியே வந்து காண்பித்தனர். வெட்டுக் காயங்கள் ஏற்படும் போது சாதாரணமாக குபுகுபுவெனப் பொங்கும் இரத்தத்தை இவர்கள் கட்டுப்ப்டுத்தி இரத்தம் வெளிப்படாமல் இருக்கச் செய்தனர். நாடித்துடிப்பைக் குறைத்துக் கொண்டே வருவது, இடது கையில் ஒரு நாடித் துடிப்பு வலது கையில் இன்னொரு நாடித் துடிப்பு என்று இப்படி இவர்கள் செய்து காட்டிய செயல்கள் அனைவரையும் திகைக்க வைத்தது.

 

 

சவம் போல மாறி தங்களை உயிருடன் புதைக்குமாறு செய்து கொண்ட அவர்கள், சவப்பெட்டியில்லாமல் வெறும் மண்ணிலேயே புதையுண்டனர். அனைத்து பத்திரிகையாளர்களும் டாக்டர்களும் இதை நேரில் பார்க்க அழைக்கப்பட்டனர். ஒரு குழுவாக தங்களை அமைத்துக் கொண்ட ஆய்வாளர்கள் புதைபடும் இடத்தைத் தாங்களே தேர்ந்தெடுத்தனர்.

 

புதையுண்டவர்களின் நாடித்துடிப்பு படிப்படியாக குறைந்து நின்றே போனது. இதயத்துடிப்பு இல்லை! சுவாசமும் இல்லை. மூக்கிலும் காதிலும் பஞ்சு வைக்கப்பட்டது.

ஐந்து நிமிடங்கள் கழித்து அவர்கள் உயிருடன் மீண்டனர். அவர்கள் தங்கள் இதயத்துடிப்பை தாமாகவே நிறுத்திக் கொண்டதுடன் தலையிலும் கழுத்திலும் சில ந்ரம்பு மண்டல புள்ளிகளில் அழுத்தம் கொடுத்துக் கொண்டனர்.

 

 

“இறக்கும் நிலையில்” அவர்கள் இருக்கும் நேரத்தை அவர்கள் ஆழ்மனம் அபாரமாகக் கையாண்டது. சரியாகக் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் மீண்டும் உயிருடன் எழுந்தனர்.

 

ரஹமான் பே செய்வது போலத் தன்னாலும் செய்து காண்பிக்க முடியும் என்று சவால் விட்ட பிரபல மாஜிக் நிபுணர் ஹௌடினி ஒரு உலோகத்திலான பெட்டியில் தன்னை அடைத்துக் கொண்டு அந்தப் பெட்டியை நீரில் ஆழ்த்தி சுமார் ஒன்றரை மணி நேரம் இருந்து காண்பித்தார். நீரில் இருந்த பெட்டியிலிருந்து கொண்டு டெலிபோன் மூலம் தன் உதவியாளருடன் பேசிக் கொண்டே இருந்த ஹௌடினி தான் மூச்சை மெதுவாக விட்டு இந்தச் சாதனையைச் செய்வதாகக் கூறினார்.

 

இந்திய யோகிகள் இப்படி சர்வ சாதாரண்மாக உயிருடன் புதையுண்டு இருந்த செய்திகளைத் தொகுத்து தான் நேரில் பார்த்தவற்றையும் சேர்த்து ஜேம்ஸ் ப்ரெய்ட் (JAMES BRAID) என்பவர், அப்ஸர்வேஷன் ஆன் ட்ரான்ஸ்: (OBSERVATION ON TRANCE OR HUMAN HYBERNATION) என்ற ஒரு சிறிய புத்தகத்தை எழுதினார்.

 

2494-Maharshi-Patanjali-India-Stamp-Block-of-4

அதில் அவர் குறிப்பிட்ட விஷயம் சுவாரசியமானது! இந்திய யோகிகள் இரு கண்களையும் புருவ மத்தியை நோக்கி வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொள்கின்றனர். அப்போது அவர்களுக்கு ஒரு மனித உருவம் தெரிகிறது. எப்போது அந்த உருவத்தின் தலையை அவர்களால் காண முடியவில்லையோ அப்போது தங்களின் ஆயுள் முடியும் நிலைக்கு வந்து விட்டது என்பதை உணர்ந்து கொள்கின்றனர். உடனே உயிருடன் தங்களைப் புதைத்துக் கொள்கின்றனர் என்று இவ்வாறு தனது கண்டுபிடிப்பை அவர் எழுதி வைத்தார்.

 

இப்படிப் புதையுண்ட யோகிகளைத் தோண்டி எடுத்து அவர்களை உயிர் பிழைக்க வைக்க முடியும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

 

இந்திய மஹாராஜாக்கள் தங்கள் சபைகளில் யோகிகளை வரவழைத்து அவர்கள் காட்டும் உடல் மீதான் ஆதிக்கத்தைக் கண்டு களித்து அவர்களைப் போற்றி வணங்குவது வழக்கம்.

ஆங்கிலேயர் நம்மை ஆண்ட போது பல மஹாராஜாக்கள் இங்கிலாந்திலிருந்து விஞ்ஞானிகளை தங்கள் சபைக்கு வரவழைத்து அவர்கள் முன்னர் யோகிகளை இப்படிப்பட்ட அபூர்வ செயல்களைச் செய்து காண்பிக்க வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

 

 

இதில் கலந்து கொண்ட மேலை நாட்டினர் தங்கள் ஊர்களுக்குச் சென்று இந்த விந்தையைச் சொல்லி மகிழ்ந்ததோடு புத்தகத்திலும் எழுதி வைத்துள்ளன்ர்.

அறிவியலில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்த யோகிகளின் உயிருடன் புதைக்கும் நிகழ்வு உதவியாக இருந்து வருவது உண்மையே!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஜெர்மானிய-பிரிட்டிஷ்  உயிரியல் விஞ்ஞானியான வில்ஹெம் ஃபெல்ட்பெர்க் (Wilhelm Feldberg : பிறப்பு 19-11-1900 இறப்பு 23-10-1993) உயிரியல் கண்டுபிடிப்புகளுக்குப் பெயர் பெற்றவர். ஆனால் அவர் தனது சோதனைகளுக்காக மிருகங்களை, குறிப்பாக முயல்களைக் கொடுமைப் படுத்துகிறார் என்று அவப்பெயர் பெற்றார்.

 

ஒரு நாள் மிருகங்களை நேசிக்கும் தன்னார்வத் தொண்டர்கள் இருவர் அவரது சோதனைச்சாலைக்குச் சென்றனர். அவரது வாழ்க்கை வரலாற்றை எழுத விரும்புவதாக அவர்கள் கூறி அந்த சோதனைச்சாலையில் நடப்பதை ஒரு படமாகவும் பிடித்தனர். அங்கு சோதனைக்குள்ளாக்கப்படும் முயல்கள் மயக்கமருந்து இல்லாமலேயே அறுக்கப்படுவதாகவும் கொடுமைப்படுத்தப் படுவதாகவும் அப்படியே புதைக்கப்படுவதாகவும் அவர்கள் பத்திரிகைகளுக்குத் தகவல் தந்து தாகங்ள் எடுத்த படத்தைத் திரையிட்டும் காட்டினர். ஒரு பெரிய சர்ச்சை எழுந்தது.

1202-Dayanand-Arya-Vidyalaya-Centenary-India-Stamp-1989

 

இதனால் 1990ஆம் ஆண்டு அவரது விஞ்ஞான சோதனைகள் ஒரு முடிவுக்கு வந்தன. படம் பிடித்த இருவரில் ஒருவரான பெண்மணி மெலடி மக்டொனால்ட் ஒரு நூலையே எழுதி வெளியிட்டார். காட் இன் தி ஆக்ட்: தி ஃபெல்ட்பெர்க் இன்வெஸ்டிகேஷன் (Caught in the act: the Feldberg investigation)  என்ற அந்த நூல் பெரும் பரபரப்பை ஊட்டியது.

 

பெரிய விஞ்ஞானி தான் என்றாலும் கூட, மிருகங்களைக் கொடுமைப்படுத்தியதால் அவப் பெயர் பெற்றதோடு தனது 90ஆம் வயதில் சோதனைகள் செய்வதிலிருந்து ஃபெல்ட்பெர்க் ஓய்வும் பெற்றார்.

 

 

Ramakrishna_India_SriLanka_Stamp

******

 

 

 

ஏசு கிறிஸ்து பற்றி பாரதியார் (Post No. 2423)

painting jesus

(c) St Stephen’s House, University of Oxford; Supplied by The Public Catalogue Foundation

 

Compiled by london swaminathan

Date: 24 December 2015

Post No. 2423

Time uploaded in London:- 21-26
( Thanks for the Pictures  )

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

0637-christmas-stamps-2013

2013  பிரிட்டிஷ் கிறிஸ்துமஸ் தபால்தலைகள்

பாரதிக்கு எம்மதமும் சம்மதம். இந்திய ஞானிகளுக்கே உள்ள தனிப்பெரும் உயர்ந்த சிந்தனை அவருக்கும் இருந்தது. ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற பெரியோர்கள் ஒவ்வொரு மதத்துக்குள்ளும் நுழைந்து உண்மைப்பொருளை உலகிற்கு எடுத்துரைத்தனர். பாரதியோ பாடலின் மூலம், ஏசுவையும், மரியா மக்தலேனாவையும், அல்லாவையும் பாடிப் பரவியுள்ளார். இதோ அவரது பாடல்:

நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்

அந்தணனாம் சங்கராசார்யன் மாண்டான்

அதற்கடுத்த ராமனுஜனும் போனான்!

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்

தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்

பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்

பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்!

மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய் கூறேன் யான்,

மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே

நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர்.

 

இது ஒரு தத்துவப் பாடல். புத்தன், ஏசு, ராமன், கிருஷ்ணன் ஆகிய அனைவரும் இயற்கைக்கு மாறான மரணம் அடைந்தனர். ஆனாலும் ஆன்மா அழியாது. அவர்களுடைய பூத உடல் அழிந்தாலும் புகழ் உடம்பு நீடிக்கிறது. இந்தப் பொருளிலேயே பாரதியும் நான் சாகாதிருப்பேன் என்கிறார்.

Christmas Stamps revised artwork

2015 பிரிட்டிஷ்  கிறிஸ்துமஸ் தபால்தலைகள்

இந்தப் பாட்டின் அடுத்த செய்யுளில் “அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும் மிச்சத்தைப் பின் சொல்வேன்” … என்று தொடர்கிறார். இதிலிருந்து அவர் சொல்லும் மரணமிலாப் பெரு வாழ்வு என்ன என்பது தெள்ளிதின் விளங்கும்.

 

ஏசு பிரான் பற்றி பாரதி பாடிய பாடல் இதோ:–

 

யேசு கிறிஸ்து

1.ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்

எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்

நேசமா மரியா மக்தலேநா

நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்

தேசத்தீர் இதன் உட்பொருள் கேளீர்;

தேவர் வந்து நமக்குட்புகுந்தே

நாசமின்றி நமை நித்தங் காப்பார்

நம் அகந்தையை நாம் கொன்றுவிட்டால்.

 

2.அன்புகாண் மரியா மக்தலேநா

ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து;

முன்பு தீமை வடிவினைக் கொன்றால்

மூன்று நாளில் நல்லுயிர் தோன்றும்;

பொன்பொலிந்த முகத்தினிற் கண்டே

போற்றுவள் அந்த நல்லுயிர்தன்னை;

அன்பெனும் மரியா மக்தலேநா

ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே.

 

3.உண்மையென்ற சிலுவையிற் கட்டி

உணர்வை ஆணித் தவங் கொண்டடித்தால்

வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து

வான மேனியில் அங்கு விளங்கும்

பெண்மைகாண் மரியா மக்தலேநா

பேணும்நல்லறம் யேசு கிறிஸ்து

நுண்மைகொண்ட பொருளிது கண்டீர்

நொடியிலிஃது பயின்றிடலாகும்.

 

 2014 X mas

கிறிஸ்தவ மத தத்துவம்

 

இந்தப் பாட்டில் ஏசு பிரான் மூன்று நாளில் உயிர்த்தெழுந்தது, சிலுவையில் அறையுண்டது எல்லாவற்றிற்கும் தத்துவ விளக்கம் தரப்படுகிறது.

 

தமிழில் பொருள் விளங்காதவர்களுக்கு ஒருவேளை, இதை ஆங்கிலத்தில் படித்தால் நன்றாகப் பொருள் விளங்கலாம்:-

1.The Lord came died upon the cross,

And rose up resurrected on the third day,

Devoted and glorious Mary Magdalene

Was witness to this wondrous event

Listen, countrymen, to its secret meaning;

The gods will come and live within us,

And shield us from evil, and redeem us for ever

If only we would shed our pride of self.

 

2.Look! Mary Magdalene is Love incarnate;

And look! Jesus Christ is the Holy Spirit!

If first we shed this embroiled evil,

Godly sacred life will manifest itself in three days.

Mary Magdalene, Love incarnate, saw the radiant vision

Of that godly sacred life beaming from the face

Of golden splendour, and praised it in adoration

This is bliss indeed! The greatest, most ecstatic bliss!’

 

3.If you tie the senses fast to the Cross called Truth,

And hammer them down with the nails of austere penance

Gloriously great and sacred life will shine with radiant splendour

In the sublime and celestial body of Lord Jesus Christ.

Look! Mary Magdalene is true womanhood incarnate;

And Jesus Christ is eternal virtue, which all cherish and revere!

Look! This is the finest, greatest secret, and inmost, mystic meaning;

Yet anyone can learn and practise it in just a moment’s time.

(Translated from Tamil into English by P N Appuswami)

 

இன்னுமொரு பாடலில் எல்லா மதங்களும் மனிதனை இறைநிலைக்கு இட்டுச் செல்வதைப் பாடுகிறார்:

2011_Xmas_set

2011 கிறிஸ்துமஸ் தபால்தலைகள்

 

பூமியிலே, கண்டம் ஐந்து, மதங்கள் கோடி!

புத்த மதம், சமண மதம், பார்ஸி மார்க்கம்,

சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,

சநாதனமாம் ஹிந்துமதம், இஸ்லாம், யூதம்,

நாமமுயர் சீனத்துத் ‘தாவு’மார்க்கம்

நல்ல ‘கண்பூசி’ மதம் முதலாப் பார்மேல்

யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே;

யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங்கொன்றே.

 

எல்லா மதங்களும் “சாமி நீ, சாமி நீ, கடவுள் நீயே, தத்வமஸி, தத்வமஸி, நீயே அஃதாம்” — என்று அடுத்தவரிகளில் சொல்லி, பெரிய அத்வைத கருதுக்களை “தத்வமஸி” என்ற உபநிஷத வாக்கியம் மூலம் போதிக்கிறார்.

பாரதி பாடாத பொருளே இல்லை!

xxxxx

Tamil Poet Bharati on Jesus Christ (Post No. 2422)

Statue-of-Chr,rome

Date: 24 December 2015

Post No. 2422

Time uploaded in London:- 21-07
( Thanks for the Pictures  )

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

Bharati was the greatest Tamil poet of our time. He has sung about all the freedom fighters including G K Gokhale, Lala Lajpat Rai, Dadabai Naoroji, B G Tilak, V O C, M K Gandhi and national heroes and Gurus including Veera Shivaji, Guru Gobind Singh, poets including Tagore , Avvaiyar , Valluvan, Ilango, Kambanand Kalidas and philosophers and religious teachers including Shankara, Ramanuja, Vivekananda, Nivedita, Buddha and Jesus.

 

Here is his poem on Jesus Christ:-

 

1.The Lord came died upon the cross,

And rose up resurrected on the third day,

Devoted and glorious Mary Magdalene

Was witness to this wondrous event

Listen, countrymen, to its secret meaning;

The gods will come and live within us,

And shield us from evil, and redeem us for ever

If only we would shed our pride of self.

 

2.Look! Mary Magdalene is Love incarnate;

And look! Jesus Christ is the Holy Spirit!

If first we shed this embroiled evil,

Godly sacred life will manifest itself in three days.

Mary Magdalene, Love incarnate, saw the radiant vision

Of that godly sacred life beaming from the face

Of golden splendour, and praised it in adoration

This is bliss indeed! The greatest, most ecstatic bliss!’

 

3.If you tie the senses fast to the Cross called Truth,

And hammer them down with the nails of austere penance

Gloriously great and sacred life will shine with radiant splendour

In the sublime and celestial body of Lord Jesus Christ.

Look! Mary Magdalene is true womanhood incarnate;

And Jesus Christ is eternal virtue, which all cherish and revere!

Look! This is the finest, greatest secret, and inmost, mystic meaning;

Yet anyone can learn and practise it in just a moment’s time.

(Translated from Tamil into English by P N Appuswami)

–subham–