Love speaks even when the lips are closed (Post No. 2421)

god is love

Compiled by london swaminathan

Date: 24 December 2015

Post No. 2421

Time uploaded in London:- 10-00 AM
( Thanks for the Pictures  )

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

One Hundred Quotations on Love, Affection and Kindness—Part 2

 

First part with 50 quotations was published yesterday.

 

51).True love never grows old.

 

52).Love is a sweet torment

 

53).‘Sweet-heart’ and ‘Honey-bird’ keeps no house.

 

54).Love speaks even when the lips are closed.

 

55).The onset of love in damsels is indeed charming – Malavikaagnimitra

Ramaniiyah khalu navaanganaanaam madana visayaavataarah

 

56).Excellence inhabits the emotion of love, not objects – Kiraatarjuuniya

Vasanti hi premni gunaa na vastuni

 

57).Whom does not the cloud-kissed, dew-drenched breeze turn romantic?

Sasikaraambhodhara sanga siitalah samiiranah kam na karoti sotsukam – Rajatarangini

 

 

58).What can the relatives do about a couple courting passionately- – Kahavatratnakar

Striipumaamsau yadaa raktau kim karisyanti baandavaah

 

59).When love is greatest, words are fewest.

 

60).Whom we love best, to them we can say least.

assam floods, hindu

61).Likeness causes liking.

 

62).Looks breed love.

 

63).Love begets love.

 

 

64).Love needs no teaching.

 

65).Love is not found in the market.

 

66).Time, not the mind, puts an end to love.

 

67).All is fair in love and war.

 

68).Love is a game in which both players always cheat.

 

69).Lovers’ quarrels are soon mended

 

70).The quarrel of lovers is the renewal of love.

 

 

Dentist Monkey

 

71).About young love– Calf love, half love; old love, cold love.

 

72).Love of lads and fire of chats/wood-chips is soon in and soon out.

 

73).Lad’s love a busk of broom, hot awhile and soon done.

 

74).The new love drives out the old love.

 

75).Old love expels another.

 

76).Love without return is like a question without an answer.

 

77).There is more pleasure in loving than in being loved.

 

78).He that loves the tree, loves the branch.

 

79).Where there is no trust, there is no love.

 

80).Where love is, there is faith.

 

narayana seva, badravathi

Picture: Narayanaseva by Sathya Sai School students; picture posted by Rameshkumar on face book.

 

81).Love is never without jealousy.

 

82).Love does much, money does everything.

 

83).Love lasts as long as money endures.

 

84).When poverty comes in at the door, love flies out of the window.

 

85).Love and lordship like no fellowship (This proverb may be interpreted in two ways; that neither love nor lordship will tolerate a rival, or that love and lordship are not compatible. The first interpretation applies here.)

 

86).Charity covers a multitude of sins.

 

87).Kindness is the noblest weapon to conquer with.

 

88).An iron anvil should have a hammer of feathers (Gentle approach may be the best way to win over a stubborn person.)

 

 

89).The rough net is not the best catcher of birds.

 

RAKSHABANDAN BABIES

 

90).To fright a bird is not the way to catch her.

 

91).Honey catches more flies than vinegar.

 

92).Where men are well used, they will frequent there.

 

93).Tender-handed stroke a nettle

And it stings you for your pains

Grasp it like a man of mettle

And it soft as silk remains – Aaron Hill (1685-1750).

 

94).Give a clown your finger, and he will take your hand

 

95).Give him an inch and he will take yard.

 

96).Sometimes clemency is cruelty, and cruelty clemency.
97).Kindness cannot be bought for gear

 

98).Kindness come of will.

 

99).Fair words break no bones

 

100).Fair words hurt not the mouth.

 

narayana seva-2

Picture: God is seen in the smile of the poor.

 

101).A good word costs no more than a bad word.

 

102).There is a great force hidden in a sweet command.

 

 

103).Krsna, who visited Mathuraa was detained by Kubjaa (the hunch back) – Kahavatratnakar

Mathuraayaam gatah krsno ruddhah tatraiva kubjayaa

 

–the end —

செட்டியார் தந்திரம் பலிக்கவில்லை! (Post No. 2420)

GOLU CHETTI

Compiled by london swaminathan

Date: 24 December 2015

Post No. 2420

Time uploaded in London:- 7-49 AM
( Thanks for the Pictures  )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பூலோக இன்ப துன்பம் – என்ற பழைய தமிழ்  நூலிலிருந்து எடுக்கப்பட்ட கதை; பழைய தமிழ் நடையில் இருக்கும்:–

 

 

“ஓர் ஊரிலிருக்கும் வைசியனொருவன் தனது கடையை மூடிவிட்டு, வீட்டுக்கு வந்து ஸ்நானபானஞ் செய்துவிட்டு சாப்பிடப்போகும் சமயத்தில் வெளியே வந்து “ஐயோ யாதொரு பிச்சைக்கரனும் காண்கிலனே” யென்று வருத்தபடுபவன் போற் பாசாங்கு செய்துவிட்டு திடீரென்று போய் வீட்டுக் கதவைத் தாளிட்டுக் கொண்டு சாப்பிடுவான். யாராவது அன்னக் காவடிகளாகத் திரியும் ஆண்டிப் பரதேசிகள் வந்து ‘அன்னமோ, அன்னம்’ என்று கூச்சலிட்டால், அடுத்தவீட்டுத் திண்ணையில் படுத்திருப்பவர், “அடடா, உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை; இப்பொழுதுதான் செட்டியார் கதவைத் தாளிட்டுச் சாப்பிடப்போனார்” என்பார்.

 

இப்படியிருக்கையில் ஒரு நாள் ஒரு கிழட்டு சந்யாசி, பக்கத்து வீட்டிற்றானே வெகுநேரம் உகார்ந்திருந்தனன். செட்டியார் வழக்கம்போல கடையை மூடிவிட்டு வீட்டுக்கு வந்து தான் சாப்பிடப்போகும் தருணம் வெளியில் வந்து, நாற்புறமும் சுற்றிப்பார்த்து, யாதொரு பிச்சைக்கரரும் காணப்படாததால், “ஆரையா, ஆண்டிப் பரதேசிகளே! அன்னம் புசிக்க வாருங்களென்று” கூச்சலிட்டான்.

 

அண்டை வீட்டுத் திண்ணையில் சண்டிபோல் உட்கார்ந்திருந்த கிழட்டு சந்யாசி, “இதோ வந்தேனையா, புண்ணியமாய்ப் போச்சு!” என்று சொல்லி ஓடிவந்தான்.

 

லோபியாகிய வைசியன் மனம் மெலிந்து திகிலுற்று “ஐயோ! நாம் யாரும் இல்லையென்று கூச்சலிட்டால் இவன் எப்படியோ வந்துவிட்டானே. இல்லையென்றாலும் இத்தனை நாளாய் நம்மை மெத்த தர்மவானென்று புகழ்ந்து கொண்டிருந்த ஆட்களெல்லாம் நம்மை பரிகசிப்பரே” யென்று பயந்து வாய்ப்பேச்சுக்குப் பஞ்சமில்லாதவன் போல, “வாருமையா, சாமி” என்று சொல்லி, சந்யாசி வீட்டிற்குள் வருவதற்குள் தன் பெண்சாதியை மெதுவாக நாலைந்து அடி அடித்தனன். அந்த வஞ்சகி சந்யாசி சோற்றுக்கு வருவதை உணர்ந்து  நமது கணவன் உஷார் படுத்துகிறாரென்று ஊகித்து குய்யோமுய்யோவென்று கூச்சலிட்டழத்தொடங்கினாள். வந்த விருந்தாளியாகிய சந்யாசி மனமிரண்டு ஈதென்ன கர்மம், இவ்வளவு நேரம் காத்திருந்தும் வயிற்றுக்குக் கஞ்சியகப்படாமல் கலகாரம்பமாய்விட்டதேயென்றெண்ணி, ஓடிப்போய், நடையிலிருக்கும் தொம்பக்கூண்டின் (நெற்கூடு) பின்னால் போய் ஒளிந்துகொண்டான். ஈது உணரா வைசியன், பீடை ஒழிந்ததென்று போய் வாசற்கதவைத் தாளிட்டுவிட்டு மிகவும் சந்தோஷமாய் பெண்சாதியிடம் வந்து,

 

golu vedam madhu (2)  golu, seetharam2 (2)

“பெண்ணே! நான் நோகாமல்தானே அடித்தேன்?” என்றான்

அவள் உடனே “நான் ஓயாமல்தானே அழுதேன்” என்று சொல்லி சிரித்தாள். ஒளிந்திருந்த சந்யாசி இதையெல்லாம் பார்த்துவிட்டு திடீரென்று அவர்கள் முன் குதித்து,

“யானும் போகாமல்தானே இருந்தேன்” என்றார்.

 

செட்டியாரும் மரியாதைக்கஞ்சி தான் சாப்பிடவைத்திருந்த சோற்றைப் போட்டு இனிமேல் வரவேண்டாமென்று சொல்லி அனுப்பினார்.

–சுபம்–

(இப்படிச் சந்தி பிரிக்காமல் நீண்ட வாக்கியங்களை எழுதுவது உலகில் இரண்டே மொழிகளில்தான் உண்டு; சம்ஸ்கிருதமும் தமிழும்; இதற்கு இந்த இரண்டு மொழிகளில் மட்டுமே இலக்கணமும் உண்டு. ஆகையால் இவ்விரு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து உதித்தவை என்பதை முன்னரே சில ஆராய்ச்சிக்கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன். படித்து மகிழ்க!)

 

பிரான்ஸிலும் முஸ்லீம் எதிர்ப்பு அலை!( Post No. 2419)

mizapur krishna

Written by S NAGARAJAN

Date: 24 December 2015

 

Post No. 2419

 

Time uploaded in London :– காலை 5-19

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

உலகப் போக்கு

 

First part of this article was published yesterday.

 

முஸ்லீம்களே, உணர்வீர்களா, உலகப் போக்கை!- 2

 

ச.நாகராஜன்

 

சென்ற கட்டுரையில் முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு எதிராக ஸ்விட்சர்லாந்து எடுத்த தீவிர நடவடிக்கையின் முதல் படியைப் பார்த்தோம். உலக நாடுகள் கடைசி கடைசியாக ஒன்று சேர்ந்து முஸ்லீம்களின் தீவிரவாதப் போக்கைத் தடுத்தே நிறுத்துவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு விட்டன. அப்பாவிகளை கொன்று குவிக்கும் அராஜகத்தை யார் தான் விரும்புவர்?

 

 

நவம்பர் மாதம் ஜனவரி மாதம் அல்ல என்பதை பிரான்ஸ் இப்போது உணர்த்தி விட்டது – முஸ்லீம்களுக்கு!

ஜனவரி 2015-இல் சார்லி ஹெப்டோ (Charlie Hebdo) பத்திரிகை அலுவலகம் உள்ளிட்ட இதர இடங்களில் முஸ்லீம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 அப்பாவிகள் உயிரை இழந்தனர். ஆனால் அப்போது பிரெஞ்சு ஊடகங்களும் மக்களும் வெகுவாக இதைக் கண்டிக்கவில்லை. வெகுஜன எழுச்சி ஏற்படவில்லை. ஆனால் இப்போது பாரிஸில் நடந்த அக்கிரமத்தால் 129 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை (13-11-15) அன்று நடந்த தாக்குதல் உலக மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டுள்ளது.

 

 

இந்த முஸ்லீம்களிம் தீவிரப் போக்குக்கு ஒரு முடிவு கட்ட வேண்டிய கடைசித் தருணம் வந்து விட்டதாக பிரான்ஸ் முடிவு செய்தது. மிகவும் கவலையுடன் கூடிய செழுமையான கோபத்துடன் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி பிரான்ஸ்வா ஒலாந்தே (Francois Hollande)  பாராளுமன்றம் அவசரநிலை பிரகடனத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஒரு படி மேலே போய் முஸ்லீம்களின் தீவிரவாதத்தைக் கடுமையாக ஒழித்துக் கட்ட அரசியல் சட்டத்தையே திருத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

 

வெளிப்படையாக வார்த்தை ஜாலங்களால் தன் உணர்வை அவர் வெளிப்படுத்தவினல்லை தான்! என்றாலும் அவர் மனம் உணர்த்த விரும்பிய செய்தி தெளிவானது.

 

eid,bhadravathi

Picture: Posted by Ramesh Kumar on face book; Sathya Sai Educational institutes, Bhadravathi .

 

மத சார்பற்ற செகுலர் ஃபிரான்ஸ் ஒரு சிக்கலான உறவைத் தான் முஸ்லீம்களுடன் இது வரை கொண்டிருந்தது. ஆனால் இப்போது அந்த சிக்கலைத் தாண்டி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டது. இதற்கு முஸ்லீம்களை எதிர்க்கத் தான் வேண்டுமென்றால் அதற்கும் தயார் என்பது தான் பிரான்ஸின் இன்றைய நிலை.

 

 

பிரான்ஸ் அரசின் உயர் அதிகாரிகள் தேசத்திற்கே ஒரு பெரும் எதிரி கிளம்பி விட்டான் என்றே உணர்கின்றனர். ஆகவே முஸ்லீம்களின் மசூதிகளுக்கு ஒரு புதிய பாதுகாப்பு தேவை என்கின்றனர். அவசரநிலை நீட்டிக்கப்பட வேண்டும் என்பதும் அவர்களின் எண்ணம். பத்தாயிரத்திற்கும் அதிகமான தீவிரவாதிகளின் பட்டியலை ஏற்கனவே தயார் செய்துள்ள பிரான்ஸ் அவர்களது நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணிப்பதோடு அவர்களைக் கட்டுப்படுத்தவும் முடிவை எடுக்கவுள்ளது.

 

 

இவர்களை தேசீய எதிரிகள் என அறிவிக்கும் பிரான்ஸ் அதிகாரிகள், தீவிரவாதிகளான இமாம்களை தேசத்தை விட்டே வெளியேற்ற வேண்டும் என்ற முடிவுக்கும் வந்து விட்டனர். பிரான்ஸ் பிரதம மந்திரி மானுவல் வால்ஸ் (Manuel Valls)  14-11-15 சனிக்கிழமையன்று “expel all these radicalized imams”  – இந்த புரட்சிகரமான இமாம்களை வெளியே தள்ளுங்கள் – என்றே பிரகடனம் செய்தார்.

 

 

உலக முஸ்லீம்கள் ஒன்றை உணர வேண்டும். அரபு நாடுகளை விட பாகிஸ்தானை விட முஸ்லீம்களுக்கு சர்வ சுதந்திரமும் பாதுகாப்பும் அரசியல் ரீதியிலான சமத்துவத்தையும் உலகில் தரும் ஒரே நாடு இந்தியா தான்.

 

 

சகிப்புத்தன்மையின் எல்லையையும் மீறி முஸ்லீம்களை இந்தியா ஆதரிக்கிறது – பம்பாயைத் தகர்க்கும் நாசவேலையில் முஸ்லீம் தீவிரவாதிகள் ஈடுபட்ட பின்னரும் கூட.

இந்தியப் பாராளுமன்றத்தைத் தாக்கிய போதும் கூட. ஆனால் உலகப் போக்கைக் கவனிக்கும் போது எல்லையற்ற சகிப்புத்தன்மைக்கு ஒரு உதாரண உருவமாக இருக்கும் ஹிந்து இனம் உலகப் போக்கிற்கேற்ப நடக்க வேண்டிய அவசியம் இனி ஏற்படும்! முஸ்லீம்கள் உலகப் போக்கை உன்னிப்பாக உணர வேண்டும். குறிப்பாக முஸ்லீம் இளைஞர்களும் பெண்மணிகளும் விழித்தெழ வேண்டும்.

eid2, bahdravathi

 

நவம்பர் மாதம் ஜனவரி அல்ல என்பதை பிரான்ஸ் உணர்த்தி விட்டது. நவம்பரில் பாதை திசை மாறி விட்டது. இனி முஸ்லீம் தீவிரவாதம் ஒழிக்கப்படும் – ஒட்டுமொத்தமாக.

 

ஆக இந்த நிலையில் முஸ்லீம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களிடையே ஊடுருவி இருக்கும் தீவிரவாதிகளான இமாம்கள், தீவிரவாதிகளின் பட்டியலைத் தாமே தயாரித்து அந்தந்த அரசுகளிடம் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும்.

இது உலகத்தை மட்டும் காப்பாற்றாது, அவர்களையும் காப்பாற்றும்.

 

முஸ்லீம்கள் ஒரு இனமாக, மதத்தினராக வாழ இதுவே சிறந்த வழி! உலகப் போக்கை உணர்வார்களா, முஸ்லீம்கள்?!

*********

 

One Hundred Quotations on Love, Affection and Kindness—Part 1 (Post No. 2418)

animal love, kurangu

Date: 23 December 2015

Post No. 2418

Time uploaded in London:- 17-14
( Thanks for the Pictures  )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

1).Affection cannot be confined by shutters; uncontrollable tears will roll down spontaneously, when one sees the sufferings and sorrows of the loved ones – Tirukkural 71

 

2).Love locks no cupboards.

 

3).Love laughs at locksmiths.

 

4).Those without affection in their hearts will keep all they have for themselves; the tender-hearted will even give away their bones- Tirukkural 72

 

5).A penny weight of love worth a pound of law.

 

6).There can be life only when the body has soul in it; even so, life without affection is no life at all – Tirukkural 73

 

7).I searched for my god,

My god I could not see

I looked for my soul

My soul eluded me

I sought out my neighbour

And in him found all three

 

 

8).Affection endows one with ardour, and that leads to admirable friendship- Tirukkural 74

 

9).Love is blind.

 

10).The realisation of heavenly bliss follows a happy and affectionate householder’s life – Tirukkural 75

b b day 2

11).All the world loves a lover.

 

12).The ignorant say that affection is appropriate only to righteousness; but it will also inspire heroism, to be rid of evil – Tirukkural 76

 

13).The life of those who have not traversed love’s way is frittered away – Khavatratnakar

Eesaam vrthaa janma gatam jagatyaam premno na panthaa avalokito yaih

 

14).Love is the quintessence of life; without it, a man is a frame of bones covered with skin – Tirukkural 80

 

 

15).If Jack in love, he is no judge of Jill’s beauty.

 

16).Love is without reason.

 

17).Love is lawless.

 

18).Affection blinds reason.

 

 

19).Even as the scorching sun dries up the boneless worm, righteousness will scorch life without affection – Tirukkural 77

 

 

20).One cannot love and be wise.

 

box cart

21).Lovers are madmen.

 

22).The dead tree on the desert  will not put forth leaves; even so life without love cannot flourish – Tirukkural 78

 

23).If a man’s heart is devoid of love, of what avail are the externals? – Tirukkural 79

 

24).Love increases, more so when beauty and virtue are coupled – Valmiki Ramayana 1-77-27

Gunaad ruupagunaaccaapi priitirbhuyuyo abhivardhate

 

25).The fetters of love are delightful – Brhatkatha manjari

Premabandho hi ramyataa

 

26).In the eyes of the lover, pock marks are dimples.

 

27).No love is foul, nor prison fair.

 

28).Love carried over from earlier births binds soon- Katha sarit sagar

Aasu badhnaati hi prema praagjanmaantarasa sambhavah

 

 

29).Faults are thick where love is thin.

 

30).Labour is light where love doeth pay.

anbe aruyire

31).Love makes one fit for any work.

 

32).Love is free.

 

 

33).It is better to have loved and lost than never to have loved at all- Lord Tennyson 1809-92

 

34).Unbearable is the shattering of fervent love – Katha sarit sagar

Prakrstasya bhangah premnah susduhsahah

 

35).Love conquers all.

 

36).Love rules his kingdom without a sword.

 

37).Love makes all men equal.

 

 

38).Love and business teach eloquence.

 

39).Love makes a wit of the fool.

aadu kutty

40).Those swelling with joy of love do not relish food

— Brhatkatha manjari

Premaati harsa sampuurnaa naabhinandanti bhojanam

 

41).Love makes all hearts gentle.

 

42).Love will find a way.

 

43).The love of proud damsels attains greater heights after love fights – Bharata manjari

Prema pranayakopaante maaniiniinaam hi vardhate

 

44).Love will go through stone walls.

 

45).Love cannot be compelled.

 

46).A man has choice to begin love, but not to end it.

 

47).Love and a cough cannot be hid.

 

48).Myriad are the ways of love – Sanskrit saying

Premno hi naanaagatih

 

 

49).Old love will not be forgotten.

 

 

50).Old love does not rust.

aadu krishna

to be continued……………………………..

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

முஸ்லீம்களே, உணர்வீர்களா, உலகப் போக்கை! (Post No. 2417)

arabian wonder

Written by S NAGARAJAN

Date: 23 December 2015

 

Post No. 2417

 

Time uploaded in London :– காலை 8-32

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

உலகப் போக்கு

முஸ்லீம்களே, உணர்வீர்களா, உலகப் போக்கை!

 

ச.நாகராஜன்

 

முஸ்லீம்கள் உலகப்போக்கை நன்கு கவனிக்க வேண்டிய கடைசித் தருணம் வந்து விட்டது. தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்தத் தருணத்தை விட்டு விட்டால் இனி ஒரு தருணம் கிடைப்பது அரிது.

 

 

ஒரு சில தீவிரவாதிகளால் உலகெங்குமுள்ள முஸ்லீம்களை “ஓரம் கட்ட” உலக நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

நடப்பவற்றைப் பார்ப்போம்.

 

 

தி இண்டிபெண்டண்ட் பத்திரிகை தரும் செய்தி இது:-

ஸ்விட்சர்லாந்தில் டிசினோ (Ticino) பிராந்தியத்தில் முகத்தை மூடி பர்கா (BURKA) அணிவது இனி கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் 6500 ஸ்டர்லிங் பவுண்டுகள் அபராதம். இந்தப் பிராந்தியத்தின் பார்லிமெண்ட் இதற்கான சட்டத்தை சமீபத்தில் 23-11-2015 திங்களன்று இயற்றி நிறைவேற்றியுள்ளது.

 

 

ஐரோப்பாவில் மிக அதிக அளவில் அதிகரித்து வரும் தீவிரவாத நடவடிக்கைகளை முற்றிலுமாக முறியடிக்கும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என ஸ்விட்சர்லாந்து பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

ஸ்விட்சர்லாந்தின் தென் பகுதியான இத்தாலி மொழி பேசும் டிசினோ பிராந்தியம், பொது இடங்களில் இப்படி முகத்திரை அணிந்து வந்தால் தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்து விட்டது. பொது இடங்கள் என்றால் கடைகள்,உணவு விடுதிகள், பொது கட்டிடங்கள் என்று அர்த்தம். காரில் அமர்ந்து செல்லும் போதும் பர்கா அணியக் கூடாது. சுற்றுலாப் பயணிகளுக்கும் விதிவிலக்கு இல்லை. அவர்களும் இந்த விதியை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்.

 

 

ஆனால் முகமூடி, க்ராஷ் ஹெல்மெட் போன்றவற்றை அணியத் தடை இல்லை.

 

இந்தப் பிராந்தியத்தில் ஜனநாயக முறைப்படி கருத்து வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்கள் இப்படி தடை விதிப்பதை ஆதரித்தனர். இந்த வாக்கெடுப்பு 2013ஆம் ஆண்டு செப்டம்பரில் எடுக்கப்பட்டது. பின்னர் சட்டம் இயற்றப்பட்டு சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

 

 

இதை முன்னின்று வரைவுச் சட்டத்தை அமைத்த ஜியார்ஜியோ கிரின்ஹெல்லி (George Ghiringhelli), “இந்தத் தடையானது டிசினோ மற்றும் ஸ்விட்சர்லாந்து பகுதியில் பதுங்கி இருக்கும் முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறது” என்றார்.

ராய்ட்டர் செய்தி நிறுவனம் தரும் இந்தச் செய்தி தனியான ஒரு செய்தி அல்ல.

2 முஸ்லீம் கண்ணன்

 

உலகெங்கும் உள்ள நாடுகளின் பார்வை முஸ்லீம்களின் மீது சந்தேகத்தைக் கொண்டுள்ளதாக மாறி வருவதைத் தெரிவிக்கும் பல செய்திகளில் ஒன்று.

முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை என்று பல முஸ்லீம் அறிவுஜீவிகளும், நல்லவர்களும் கூறுவது உண்மையே!

 

 

ஆனால் அந்த அறிவு ஜீவிகளும், நல்லவர்களும், அவர்களை ஆதரிக்கும் அரசியல்வாதிகளும் தீவிரவாத நடவடிக்கைக்கு எதிராக ஒன்றையும் செய்யவில்லையே (அல்லது அவர்களைத் தீவிரவாதிகளும் அவர்களின் இயக்கத் தலைவர்களும் செய்ய விடவில்லையே)

 

ஆகவே முஸ்லீம்கள், குறிப்பாக முஸ்லீம் பெண்மணிகள் எழ வேண்டிய தருணம் வந்து விட்டது. அவர்கள் தங்கள் கணவன்மார்களை, சகோதரர்களை, உறவினர்களை அழைத்து தீவிரவாதத்தை முஸ்லீம் சமுதாயத்திலிருந்து அறவே அழித்தொழிக்க முன் வர வேண்டும். சொர்க்கத்தை இங்கேயே ஸ்தாபிக்கும் வண்ணம் அமைதியான சமாதானமுள்ள அழகிய பூமியை உருவாக்க உதவ வேண்டும்.

 

 

இல்லையேல்… காலம் அவர்களுக்குக் கடுமையான படிப்பினையைத் தந்து விடும். உணர்வார்களா?

********

அடுத்து பிரான்ஸ் என்ன செய்கிறது என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்

 

பக்காத் திருடனுக்கு நிதியமைச்சர் பதவி! (Post No. 2416)

king raja

Compiled by London swaminathan
Date: 23 December 2015

Post No. 2416

Time uploaded in London:- காலை 8-11
( Thanks for the Pictures  )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வரும்படி கிடைக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு புறப்படுவான். அந்தக் கோவில் மண்டபத்தில் தினமும் ஒரு சாமியார் உபந்யாசம்/ சொற்பொழிவு ஆற்றிவந்தார். சில நேரங்களில் அங்கிருக்கும் கூட்டம் சிரிப்பதைக் கேட்டு நாமும் சாமியார் சொல்லும் ‘ஜோக்’கைக் கேட்போமே என்று போவான். நல்ல குட்டிக் கதைகள் சொன்னால் அதையும் கேட்டுவிட்டு திருடப் போவான்.

 

ஒரு நாள் அவனுக்கு பூர்வ ஜன்ம வாசனையால் ஞானோதயம் ஏற்பட்டது. பகற்பொழுதில் அந்த சாமியார் இருக்கும் குடிலுக்குச் சென்று, “குருவே! வணக்கம் பல! எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தாருங்களேன்” என்றான். அவரும் , “மகனே! நீ யார்?” என்று கேட்டார். அவன் கூசாமல் உண்மையைச் சொன்னான்: “நான் ஒரு பக்காத்திருடன்! பத்து வயது முதல் திருட்டுத் தொழில்தான் செய்து வருகிறேன்”

 

சாமியார் : அடக் கடவுளே! வேறு எதுவும் நல்ல தொழில் செய்யக்கூடாதா?

திருடன்: இப்போதைக்கு எனக்குத் தெரிந்த தொழில் அது ஒன்றுதான். மனைவி மைந்தர்களைக் காப்பாற்ற 30 ஆண்டுகளாகச் செய்யும் தொழில் இது.

சாமியார்: சரி, போ. நீ உண்மை பேசுவதால் உனது உள்ளத்தில் ஏதோ சில நல்ல அம்சங்களிருப்பதை உணர்கிறேன். இன்று, வேதத்திலுள்ள, எல்லோருக்கும் சொல்லித் தரும் முதலாவது மந்திரத்தை உனக்கும் போதிக்கிறேன். அதைப் பின்பற்றினால் அந்த மந்திரம் பலித்து சில அற்புதங்களைச் செய்யும்.

திருடன்: சரிங்க சாமி! அப்படியே செய்வேன்.

சாமியார்: முதல் மந்திரம்: ‘சத்தியம் வத’ – அதாவது, ‘உண்மையே பேசு”

 

திருடன்: சாமி, இது ரொம்ப எளிதான மந்திரம். பின்பற்றுவதும் எளிது. கைகள் தானே திருட்டுத் தொழில் செய்யும்; வாய், உண்மையைப் பேசுவது ஒன்றும் கடினமில்லையே’ என்றான்.

சாமியார் புன்னகை பூத்தார்; அவனும் விடை பெற்றுச் சென்றான்.

 

மனைவியிடம் போய் நடந்ததைச் சொன்னான். அவளுக்கு ஒரே சிரிப்பு. இது என்னங்க? நெசவாளி குரங்கு வளர்த்த கதையாய் இருக்கு’ என்றாள்.

அது என்னடி கதை? என்றான்.

ஒரு நெசவாளி குரங்கு வளர்க்க ஆசைப்பட்டு குரங்கை வாங்கினான். அது அவன் செய்த ஒவ்வொரு துணியையும், நூலாக இருக்கையிலேயே பிய்த்துப் போட்டது. அது போல நீர் உண்மை பேசினால் திருடும் முன்னரே அகப்பட்டுக் கொள்வீர்” என்றாள்.

“கண்மணி! கவலைப்படாதே, குருவருள் கிட்டும்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

இரவு நெருங்கியதும், கன்னக் கோல், நூலேணி, சுத்தியல், கடப்பாரை, அளவுபார்க்கும் நூல் எல்லாவறையும் எடுத்துக்கொண்டு போனான்.

 

இன்று மந்திர உபதேசம் இருப்பதால், பெரிய இடத்தில் கைவைத்து பெரிய சாதனை புரியவேண்டுமென்றெண்ணி, அரண்மனையில் திருடப் போனான். நள்ளிரவுக்குப் பின், கும்மிருட்டு. அரண்மனை மதிலைச் சுற்றி வருகையில், அந்நாட்டு மன்னரும் கையில் விளக்குடன் மாறு வேடத்தில் வந்தார். இந்து சமய ராஜாக்கள் நாட்டு மக்களின் நாடி பிடித்துப் பார்க்க இப்படி நள்ளிரவில் மாறுவேடத்தில்  நகர் வலம் வருவதுண்டு.

ராஜா: நில், யார் அங்கே?

திருடன்: ஐயா, நான் பக்காத் திருடன்.

ராஜா: அட நான் பாக்தாத் திருடன். அசலூரிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கும் பணம் வேண்டும். உன்னுடன் வரட்டுமா? பங்கில் பாதி கொடுத்தால் போதும்

திருடன்: மிக நல்லது. வா போவோம் என்றான்.

 

ராஜாவுக்கு அவரது அரண்மனை வழியெல்லாம் அத்துபடி என்பதால் திருடனை நேரே கஜானாவுக்கு அழைத்துச் சென்றார்.

இருவரும் ஒரு பெரிய பெட்டியைத் திறந்தனர். அதில் மூன்று விலையுயர்ந்த பெரிய மாணிக்கக் கற்கள் இருந்தன.

திருடன்: இன்று நமக்கு அதிர்ஷ்ட நாள். உனக்கு ஒன்று , எனக்கு ஒன்று. மூன்றாவது ரத்தினக் கல்லை அதன் சொந்தக் காரனுக்கு இந்தப் பெட்டியிலேயே வைத்துவிடுவோம்.

ராஜா: அட உனக்கு என்ன பைத்தியமா? நாமோ திருடர்கள் இதில், சொந்தக்காரனுக்கு ஒரு பங்கா?

திருடன்: நண்பா! நான் உனக்கு பாதி தருவதாக ஒப்புக் கொண்டேன். இப்பொழுது இந்த மூன்றாவது ரத்தினக் கல்லை நான் எடுத்தாலும், நீ எடுத்தாலும், 50-50 வராது ஒருவருக்குக் கூடுதலாகிவிடும். அதுமட்டுமல்ல. இதை இவ்வளவு காலம் கஜானாவில் வைத்திருக்கும் மன்னன் , ஒரு கல்லாவது திருடுபோகாமல் இருந்ததே என்று சந்தோஷப் படுவானில்லையா?

ராஜாவும் அவன் சொன்ன வாதத்தில் பசையிருப்பதை ஒப்புக் கொண்டு வீடு திரும்பலாம் என்றார். அந்தத் திருடன் விடைபெற்றுச் சென்றபோதும், அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்று அவன் எங்கே வசிக்கிறான் என்பதை குறித்துக்கொண்டார்.

IMG_2802

மறு நாள் அரசவை கூடியது.

ராஜா: ஒரு முக்கிய அறிவிப்பு! நமது அரண்மனை கஜானாவில் திருடு நடந்திருப்பதாக் நமது உளவாளிகள் எனக்குத் தகவல் தந்துள்ளனர்.

நிதி அமைச்சர்: மன்னர் மன்னவா! சிறிது நேரத்துக்கு முன் நாங்கள் மந்திரிசபை கூட்டம் நடத்தினோம். அதில் கூட யாரும் இதுபற்றிச் சொல்லவில்லை. இதோ, உடனே சென்று பார்த்து அறிக்கை சமர்ப்பிபேன்.

அவர்  கஜானாவுக்குச் சென்று பார்த்ததில் திருடன் ஒரு மாணிக்கக் கல்லை மட்டும் விட்டுச் சென்றிருப்பதைக் கண்டார். திடீரென அவருக்குப் பேராசை வரவே அதை இடுப்பில் வேட்டியில் முடிந்து வைத்துக் கொண்டார்.

அரசவைக்கு ஓடோடி வந்தார்.

நிதியமைச்சர்: மன்னரே, நமது உளவாளிகள் மிகவும் திறமைசாலிகள், ராஜ விசுவாசிகள். அவர்கள் சொன்னது சரியே. கஜானாவில் உள்ள ஒரு பெட்டி உடைக்கப்பட்டு, மூன்று மாணிக்கக் கற்கள் திருடப்பட்டிருக்கின்றன.

 

ராஜா: அப்படியா? ஒரு கல்லைக் கூட அவர்கள் விட்டுச் செல்லவில்லையா?

நிதியமைச்சர்: மன்னவா, திருடர்கள் என்ன முட்டாள்களா? ஒரு கல்லை நமக்கு விட்டுச் செல்ல. இருப்பதையெலாம் சுருட்டுவதுதானே அவர்கள் தொழில்

ராஜா: போகட்டும் எனக்கு இன்னும் ஒரு உளவுத் தகவலும் வந்துள்ளது. யார் அங்கே? காவலர்கள் எங்கே?

அவர்கள் ஓடி வந்து, மன்னவன் முன் நிற்க, இதோ இந்த முகவரியிலுள்ள திருடனை உடனே பிடித்து வாருங்கள். ஆனால் அவனை ஒன்றும் செய்துவிடாதீர்கள்.

குதிரை மீது விரைந்து சென்ற காவலர், அந்தத் திருடனைப் பிடித்துவந்து, அரசன் முன்னர் நிறுத்தினர்.

திருடன்: ராஜா, வணக்கமுங்க (நடுங்கிக் கொண்டே)

ராஜா: நேற்று இரவு என்ன நடந்தது? சொல்.

திருடன்: நானும் இன்னொருவனும் உங்கள் அரண்மனை கஜானாவுக்குள் நுழைந்து பெட்டியை உடைத்தோம். அதில் மூன்று மாணிக்கக் கற்கள் இருந்தன. நான் ஒன்றை எடுத்துக்கொண்டு, என்னுடன் வந்த மற்றொருவனுக்கு ஒன்றைக் கொடுத்தேன். மூன்றாவது ரத்தினக் கல்லை உங்களுக்கே இருக்கட்டும் என்று வைத்துவிட்டேன். இதோ நான் எடுத்த மாணிக்கம். (அதை அரசர் முன் பயபக்தியுடன் சமர்ப்பிக்கிறான்)

ராஜா: உன்னுடன் வந்தவன் திருடனில்லை. நான்தான் மாறுவேடத்தில் வந்து உன்னுடன் கஜானாவில் நுழைந்தேன். இதோ நீ என் பங்காகக் கொடுத்த மாணிக்கக் கல் (அரசனும் அதை முதல் கல்லுடன் வைக்கிறார்.)

நிதி அமைச்சரே, மூன்றாவது கல்லை வையுங்கள்.

நிதியமைச்சர்: மன்னர் மன்னவா! என்ன அபவாதம் இது? மூன்று தலைமுறைகளாக எங்கள் குடும்பம் உங்களுக்குச் சேவை செய்துவருகிறது. ஒரு நிமிடத்தில் எனக்குத் திருட்டுப் பட்டம் கட்டிவிட்டீர்களே. அந்தக் கல்லையும் இந்தத் திருடன்தான் எடுத்திருப்பான்; திருடர்களுக்குக் கண்கட்டு வித்தை தெரியும்

ராஜா: நிதியமைச்சரே! இன்னும் ஒரு நிமிடத்தில் அந்த ரத்தினக் கல்லை சமர்ப்பிக்கவில்லையானால், உமது வேட்டியை உருவி சோதனை செய்ய உத்தரவிடுவேன். உமது வீடு முழுவதையும் சோதனையிட உத்தரவிடுவேன்.

நிதியமைச்சர் (நடுங்கிக் கொண்டே): மன்னவா! என்னை மன்னித்துவிடுங்கள்; அரை நிமிட காலத்தில் பேராசை என் கண்களை மறைத்துவிட்டது. நான்தான் திருடினேன்; இதோ அந்தக் கல் என்று வேட்டியின் முடிச்சிலிருந்து எடுத்து வைத்தார்.

 

ராஜா: யார் அங்கே? (காவலர்கள் ஓடி வருகின்றனர்); இந்த நிதியமைச்சரை சிறையில் தள்ளுங்கள்.

முக்கிய அறிவிப்பு: (அனைவரும் கவனத்துடன் கேட்கின்றனர்); இன்று முதல் நமது நாட்டின் நிதியமைச்சராக இந்தத் திருடனை நியமிக்கிறேன். உங்கள் அனைவரையும் விட உண்மையுடனும் ராஜ விசுவாசத்துடனும் இருந்தமைக்காக அவரே இப்பகுதிக்குத் தகுதியுடையவர்.

 

அனைவரும்: புதிய நிதி அமைச்சர் வாழ்க! வாழ்க, வாழ்க; மன்னர் மன்னவர் வாழ்க, வாழ்க!!

 

புதிய நிதியமைச்சர் (பழைய திருடன்), மறு நாளைக்குச் சாமியாரைச் சந்தித்து உண்மை விளம்பியதால் ஏற்பட்ட நன்மைகளைக் குருநாதரிடம் ஒப்புவித்தார்.

சாமியார்: சத்தியம் வத (உண்மையே பேசு) என்பதுதான் வேதத்தின் முக்கியக் கட்டளை. நீ அதைக் கடைபிடித்தால் வேறு எதுவும் தேவையில்லை. “எனைத்தானும் நல்லவை கேட்க”- என்று வள்ளுவன் சொன்னான். நீயும் அப்படிச் சிறிது உபதேசம் கேட்டு இந்நிலைக்கு உயர்ந்தாய்.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற

செய்யாமை செய்யாமை நன்று (குறள் 297)

என்று வள்ளுவனும் செப்பினான். அடுத்த முறை சந்திக்கும்போது உனக்கு வேறு ஒரு மந்திரம் உபதேசம் செய்கிறேன் இன்னும் உயர்வாய்- என்றார்.

-சுபம்-

 

THIEF PROMOTED AS FINANCE MINISTER! (Post No. 2415)

king raja

Compiled by London swaminathan
Date: 22 December 2015

Post No. 2415

Time uploaded in London:- காலை 10-31
( Thanks for the Pictures  )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

In a town there was a thief. He used to go to ‘his work’ after worshipping in a temple praying for a good ‘harvest’. Every day he saw a big crowd listening to a saint. The saint was giving religious discourses. Sometimes he used to listen to it because of some jokes or stories told by the saint.

 

Suddenly wisdom dawned upon him. One day he visited the saint in the day time.

Thief: Guruji, Namaste!

Guru/saint: My son! Blessings! What brought you here?

Thief: I want to learn some Mantras. Please teach me some mantras.

Guru: Good. What do you do every day for living?

Thief: I am a thief. I have been doing it for the past thirty years.

Guru: What? You have been doing it for 30 years and you want to learn Mantras!

Thief: I want to shine in my life.

Guru: Since you boldly told me the truth that you are a thief, I see something good in you. So here is my Upadesa/teaching. From today onwards ‘Satyam Vada’ i.e. Speak the truth. This is enough for today.

 

Thief: Yes, Guruji! Thanks. I will follow it.

The same night he wanted to try his hand at the palace with the help of powerful mantra ‘Satyam Vada’.

 

At the dead of night, he went round the place with all the tools of his trade: Measuring thread, spade, chisel, ladder and hammer. At the same time the king came out of the palace to find the pulse of the country. Hindu kings always go out in disguise to know what the people think about his rule.

 

King: Hey! Who is it there?

Thief: I am a thief. Today I am going to rob the treasury.

King: Good. I come from outside. I need money. Can I help you? Just give me half of what you get.

Thief: Fine by me. Come on, let us climb the wall.

Since the king know his own palace, he took him straight to the treasury in the pitch darkness.

When they reached the treasury they came across a box. When they opened it they found three big, valuable ruby stones.

King: We are lucky. The very first found itself is valuable.

Thief: Right. Here is one for you and one for me. Let us leave the third stone for the owner.

King: I am surprised. We came to steal. Why do you leave one for the owner/King?

Thief: Look, man. I told you that I would give you half of what I get. If I take the second stone it would not be 50 – 50. If you take the second stone, then again it wouldn’t be half – half. But that is not the only reason. The owner of the stones will be happy to find at least one of his valuables is left out.

The king appreciated his opinion and both of them left the place. The king followed the thief without him knowing. King found out where exactly he lived in the town.

 

IMG_2802

Next day the royal court began its daily session.

King: An important announcement! Spies told me that there was one robbery in the treasury. Did the finance minister who is in charge of treasury know it?

Finance Minister: Oh, King! None of us knew about the theft. We had even our ministerial meeting earlier in the day. I will quickly run to the treasury and give you a report.

When the finance minister went there he saw two gems were stolen and one left out. Greediness blinded him and he took one and put it in his inside pocket.

 

He came straight to the king and reported:

FM: King! Our spies are very efficient and correct. Three valuable gems- all rubies—were missing.

King: Are you sure that all the three gems missing? Nothing was left by the thief?

F M : Which foolish thief in the world will leave one gem?

King: Right. I have got one more bit of information. Guards, Go and get this man from this address. Don’t harm him.

 

The king gave the thief’s address to the royal guards who fetched him in no time.

Thief (shivering): Namaste, Maharaj.

King: What did you do last night?

Thief: I came to your palace with another thief and took two gems from your treasury. I kept one and gave the other to my partner. There was one more gem and I left it for the owner.

King: That is right. I was your partner last night. I came in disguise. Now the third gem is missing. FM, put it on the table at once.

FM: King, how dare you accuse me of theft? I and my forefathers have been serving you for generations.

King: If you don’t place it in front of me, I am going to order body search and your house search.

FM: Pardon me, King. My greediness blinded my eyes. He placed the ruby at the king’s feet.

As soon as he confessed, he was taken to the prison at the order of the king.

 

King: One more important announcement: This thief is appointed as the Finance Minister from today on wards. He is more truthful and more loyal to my kingdom than any one of you.

All the ministers congratulated the newly appointed FM.

The new FM went and met his Guru next day and told him what happened

In the past few days.

Guru: One Vedic command “Satyam Vada” is enough for you to shine in life. I will teach you more next week.

 

–subham–

தஞ்சாவூர் நகைச்சுவை!! தாசி தையனாயகி சமர்த்து!! (Post No. 2414)

IMG_3349

Compiled by London swaminathan

Date: 22 December 2015

 

Post No. 2414

 

Time uploaded in London:- காலை 8-01

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

இந்தக் கதை — பழைய கால தமிழ்நடை, நகைச்சுவை, சமுதாய நிலையைப் பிரதிபலிப்பதால் இங்கே இடப்படுகிறது.

 

பழைய கால நகைச் சுவை நூலான  பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.

 

 

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

 

IMG_3227

நூறு ஆண்டு பழமையான ‘ஜோக்’குகள்

 

ஒரு ஊரில் தையனாயகி என்ற தாசி ஒருத்தி உண்டு. அவளை ஒரு செட்டியாரும், அவர் மகனும், கணக்குப்பிள்ளையும், அகுதாரும் வைப்பாக ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் வைத்திருந்தார்கள். ஒரு நாள் செட்டியார் மகன் சரச சல்லாபமாகப் பேசிக்கொண்டிருக்கும் சமயம், தகப்பன் செட்டியார் வந்துவிட்டார். மகன், தன்னை ஒளித்துவைக்கும்படி தாசியை வேண்ட, இருட்டாயிருக்கும் சேந்தியிலிருக்கும்படி செய்து, செட்டியாருடன் பேசும் முன்பு, கணக்குப் பிள்ளை வந்துவிட்டார். இதுசெய்தி செட்டியாரறிந்து தன்னை ஒளித்துவைக்கும்படி வேண்டினார். அவரையும் அவ்வாறே சேந்தியிலேற்றினாள்.

 

பின்னர் கணக்குப்பிள்ளை பேசிக்கொண்டிருக்கும் போது அகுதார் வந்துவிட்டார். தற்சமயம் தன்னை ஒளித்துவைக்கும்படி கணக்குப்பிள்ளை வேண்ட, அவரையும் சேந்தியிலேற்றிவிட்டாள். இவர்கள் மூவரும் ஒரே காபி கிளப்பில் உப்பு ஜாஸ்தியாகப் போட்ட உப்புமா சப்பிட்டுவந்தபடியாலே தாகம் அதிகரித்து, ‘தண்ணீர், தண்ணீர்’ என்று கூவினார்கள். உடனே அகுதார் இது என்ன கூப்பாடு? எங்கிருந்து வருகிறது? என்று கேட்டார். அதற்கு தாசி “பிரபுவே, எங்கள் குலதெய்வத்துக்கு வருஷவாரி நேத்திக்கடன் செய்வது வழக்கம். அது இந்த வருஷம் நின்றுவிட்டது. அதனால்தான் தாகம், தாகம் என்று கூவுகிறது. கொல்லையில் இருக்கும் மரத்தில் இரண்டு இளநீர் வெட்டிப் போட்டாற் கூவாது” என்றாள்.

 

உடனே வேலையாளை ஏவி, இரண்டு, மூன்று இளநீர் வெட்டி மேலே எறியப்பட்டது. இளநீர் சேந்தியில் விழவே மூவரும் அதை இருட்டில் தடவி எடுத்துக்கொண்டு உடைப்பதற்கு கல்லைத் தேடினார்கள். “இறப்பில் செருகிவைத்த சூரியன் குஞ்சைத் தேடின”. நாட்டுப்புறத்தானைப் போல மூவரும் தேட, மூவர் தலையும் மொட்டையாகவும், அன்று சவரம் செய்துகொண்டதால் தலை மொண்ணையாயுமிருந்தது. அதை குத்துக் கல் என்றெண்ணி ஒருவர் தலைவர் மீது மற்றொருவர் இளநீரை ஓங்கி அடித்தனர். அவர்கள் மூவருக்கும் அதிர்ச்சி தாளாமல் மயக்கம் வந்தது. குய்யோ முறையோ என்ற கூக்குரலுடன் கீழே குதித்தனர்.

 

குலதேவதைதான் கீழே குதிக்கிறது என்று நினைத்த, அகுதார், அந்த தேவதையைச் சாந்தம் செய்யும்படி கூறிவிட்டு ஓட்டம்பிடித்தார். மற்ற மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் மூடிக்கொண்டு இல்லங்களுக்கு விரைந்தேகினர்.

 

நீதி: எப்போதும் தாசியின் வலையில் அகப்படுவோருக்கு இந்த கதிதான் ஏற்படும். அவர்களால் தொல்லையே தவிர சுகமில்லை.

 

IMG_4359

-சுபம்-

ஆசீர்வாதம் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்!!( Post No. 2413)

baba-blessing

Written by S NAGARAJAN

Date: 22 December 2015

 

Post No. 2413

 

Time uploaded in London :– காலை 6-16

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

சம்ஸ்கிருதச் செல்வம்

வாழ்த்துவதிலும் ஒரு அழகு, முறை, ஆசீர்வாதம்!

 

ச.நாகராஜன்

 

பெரியோர்களைப் பணிய வேண்டும் என்று சொல்லும் அறநூல்களை போற்றுகிறோம்.

 

 

அப்படிப் போற்றும் போதே பெரியோர்கள் தம்மிடம் வந்து வணங்கியோரை வாழ்த்துவதிலும் ஒரு அழகை, முறையைக் கையாண்டனர். ஆசீர்வாதம் செய்தனர் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

 

இதை நமது இதிஹாஸ, புராண, காவியங்களில் காணலாம். வேத மந்திரங்களில் வாழ்த்து கூறும் மந்திரங்களைக் கேட்பதே ஒரு புண்ணியம்; அவ்வளவு அழகு; அவ்வளவு பொருள் பொதிந்த வாழ்த்துக்கள்; ஆசீர்வாதங்கள்.

கோவையைச் சேர்ந்த என்.வி.நாயுடு (N.V.Nayudu) என்னும் சம்ஸ்கிருத ஆர்வலர் தன் வாழ்நாள் முழுவதும் படித்து வந்த சம்ஸ்கிருத இலக்கியங்களில் நல்ல பகுதிகளைக் குறிப்பெடுத்து வந்தார். அவற்றை 21 தலைப்புகளில் அழகுறப் பிரித்தார். SUBHASHITA COLLECTION ANTHOLOGY என்ற பெயரில் 1992ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டார்.

 

 kanna, rajini

இலக்கியங்களைப் படிப்பது மட்டும் போதாது; அவற்றை அடுத்த தலைமுறைக்குப் பொருள் பொதிந்த முறையில் வழங்க வேண்டும் என்பதற்கு இந்த ஒரு நூல் நல்ல எடுத்துக் காட்டு.

வாழ்த்துக்கள், ஆசீர்வாதங்கள் என்ற முதல் பகுதியில் மட்டும் இந்தப் பொருளையே 17 விதங்களாகப் பிரிக்கிறார்!

 

 

  • பொதுவான வாழ்த்து முறைகள் 2) குழந்தையை ஆசீர்வாதம் செய்தல் 3) தம்பதிகளை ஆசீர்வாதம் செய்தல் 4) ஒரு குடும்பத்தை ஆசீர்வாதம் செய்தல் 5) பெரும் வீரச்செயலைச் செய்தவரை பாராட்டுதல் 6) ஒரு பெண்மணிக்கு ஆசீர்வாதம் செய்தல் 7) அறிவுரையுடன் ஆசீர்வாதம் செய்தல் 8) சொந்த அனுபவத்தைக் கொண்டு அதை வைத்து ஆசீர்வாதம் செய்தல் 9) வழிப்பயணம் செய்யும் போது ஒருவரை வாழ்த்தி அனுப்புதல் 10) போருக்குச் செல்வோரை வாழ்த்தி அனுப்புதல் 11) திருப்தியுடன் வெற்றி பெற்றுத் திரும்ப ஆசீர்வதித்தல் 12) வாழ்த்தும் போதே அதில் நையாண்டி அடிநாதமாக இழைந்தோடல் 13) வாழ்த்துக்களினால் அடுத்து இன்னும் மாபெரும் வெற்றி அடைய ஊக்குவித்து வாழ்த்தல் 14) வாழ்த்துக்களை அங்கீகரிப்போர் அதன் மூலமாகத் தமது அரிய குணநலன்களைக் காண்பித்தல் 15) ஊழிக்காலம் வரைக்குமான நம்பிக்கை வாழ்த்துக்கள் 16) உலகம் நலம் பெற வாழ்த்து 17) ஒருவன் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான அறவுரை வாழ்த்துக்கள்

இப்படிப் பல விதமாக ஆசீர்வாதங்களை வகை பிரித்து அதற்கான இலக்கிய மேற்கோள்களையும் திரு என்.வி.நாயுடு தந்துள்ளார்.

 

 

மிக பிரம்மாண்டமான ஒரு வாழ்க்கை முறையை ஹிந்துத்வம் பாரம்பரிய வழியில் கடந்த நூற்றாண்டுகளில் தொடர்ந்து வழங்கி வருகிறது என்பதற்கு இந்த வாழ்த்துக்களே சான்று.

“தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு                  சூழ்கலை வாணர்களும் –   இவள்                     என்று பிறந்தவள் என்றுணராத                 இயல்பினளாம் எங்கள் தாய் என்று இப்படி

ஆரியச் செல்வம் அல்லது ஹிந்துச் செல்வம் அல்லது பாரதீயச் செல்வத்தை அவர் பாரதமாதாவாகப் பாவித்துக் கூறுவது ஆழ்ந்த அர்த்தமுள்ள சத்தியமாக விளங்குகிறது.

 

 

நூலுக்கு வருவோம்.

 

நம்மைக் குளிர வைக்கும் சில எடுத்துக்காட்டுகள் :-

பத்ரம் தே |

எல்லா நலமும் (புகழ், தூய்மை) உனக்கே!

 

 

ஸ்வஸ்தி ப்ராப்னுஹி |

நீ நலமுற இருப்பாயாக

 

 

தே பவந்து மங்களம் |

உனக்கு மங்களம் உண்டாகட்டும்

 

 

சிரம் ஜீவ |

நீண்ட ஆயுளுடன் வாழ்வாயாக

 

 

ஜயது பர்த்தா |

ஆதரவு அளிப்பவனுக்கு (இறைவன், ஆதரவாளன்) வெற்றி உண்டாகுக

 

அதிதி துஷ்யந்தனிடம் கூறுவது:

அப்ரதிரதோ  பவ | (சாகுந்தலம் 7-17)

 

ரதம் ஒட்டுவதில் உனக்கு நிகரானவர் யாரும் இல்லாதபடி ஆவாயாக

 

யசோதை கிருஷ்ணரை ஆசீர்வதிப்பது

ஜீவ, க்ருஷ்ணா, சரதாம் சதம் சதம் |  (க்ருஷ்ண கர்ணாமிருதம் 2 – 67)

 

க்ருஷ்ணா, நீ நூற்றுக்கணக்கான சரத்காலங்கள்  வாழ்வாயாக

 

அருந்ததி ஜனகரை ஆசீர்வதிப்பது :

அக்ஷரம் தே ஜ்யோதி: ப்ரகாஷதாம் | (உத்தர ராம சரிதம் 4 -10)

 

 என்றும் மறையாத ஜோதி (ப்ரகாசிக்கும் நுண்ணறிவு) உன்னிடம் என்றும் ப்ரகாசிக்கட்டும்

 

ரிஷிகள் துஷ்யந்தனை ஆசீர்வதிப்பது :

இஷ்டேன யுஜ்யஸ்வ | (சாகுந்தலம்  5-13)

(உன்) இஷ்டம் பூர்த்தியாகட்டும்

 

 

துஷ்யந்தனிடம் சகுந்தலையின் தோழிகள் கூறுவது :

ஸ்வாகதம் அவிலம்பினோ மனோரதஸ்ய | (சாகுந்தலம் 3 – 16)

 

வருக, உங்கள் மனோரதம் தாமதமின்றி அதி விரைவில் நிறைவேறட்டும்

( மனோரதம் என்ற அழகிய வார்த்தை மனம் ஒரு ரதம்  என்றும் அது தான் விரும்பிய விஷயங்களை நோக்கி அதி வேகமாக ஓடும் என்பதையும் தெரிவிக்கும் பொருள் பொதிந்த சொல்)

 IMG_2597 (2)

******                                       

 

நாமும் ஒரு குறிப்பேடு தயாரிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் பல நூல்களில் இதுவும் ஒன்று என்பதை மேலே நாம் படித்தவற்றைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம்!

–subham–

 

TALKING BEHIND SOMEONE’S BACK! (Post No. 2412)

o-NAPOLEON-BONAPARTE-facebook

Napoleon Bonaparte. Portarit of Napoleon Bonaparte 1769-1821 at the battle. Detail of a painting by Joseph Chabord 1786-1848. Museo Napoleonico, Rome Italy

Compiled by London swaminathan

Date: 21 December 2015

 

Post No. 2412

 

Time uploaded in London:- 16-55

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Mohammed

A disciple came to Mohammed and said:

“Master, my six brethren are all asleep, and I alone have remained awake to worship Allah.

Mohammed replied:

“And you too had better been asleep, if your worship of Allah consists of accusations against your brethren.”

xxx

napoleonprimary

Napoleon III

One day M Villemain, the Secretary of the French Academy, was declaiming in the library of in a vigorous manner against napoleon III. Leverrier, who was an ardent imperialist, chanced to overhear some of his remarks, and demanded:

“How dare you speak in this manner of the emperor in a public building?”

 

Villemain looked up carefully and replied:

And who are you?

You know me, Sir, said the astronomer.

Your face may be familiar to me, but I don’t exactly recall your name.

Leverrier is my name

Oh, yes, Leverrier. Astronomer, I think. In his day I was intimately acquainted with Laplace; he was an astronomer too, and a gentleman.

 

“Sir,” said Leverrier, “I despise wit, but if you continue speaking thus I warn you that I shall report your words to the proper authorities.”

 

“Well,” said Villemain shrugging his shoulders, “everyone has his way of making a living.”

XXX