அரசன் பேசிய பிழையான சம்ஸ்கிருதம்! குட்டிக் கதை! (Post No. 2411)

IMG_3207

Compiled by London swaminathan

Date: 21 December 2015

 

Post No. 2411

 

Time uploaded in London:- 9-35 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

palanquin

சம்ஸ்கிருதம் பேச்சு மொழியாக இருந்ததேயில்லை என்று பல அரைவேக்காடுகள் அவ்வப்பொழுது தனது அறியாமைக்கும், முட்டாள்தனத்துக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன. இவை எவ்வளவு தவறு என்பதற்கு வேத காலம் முதல் இன்றுவரை ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள.

சிலப்பதிகாரத்தில் வைஸ்ய ஜாதியைச் சேர்ந்த கோவலன், தெருவில் கதறி அழுத ஒரு பார்ப்பனப் பெண்ணின் சம்ஸ்கிருத ஓலைச் சுவடியைப் படித்தது, “த, த, த” கதையில் (பிருஹத் ஆரண்யக உபநிஷத்) தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் ஆகிய மூவரும் சம்ஸ்கிருதம் பேசியது, கும்பகர்ணன் சம்ஸ்கிருதத்தில் தவறான வரம் கேட்டது, விருத்ராசுரன் கதையில் ஒரு அசுரப் பிராமணன் தவறாக சம்ஸ்கிருதம் பேசியது, அகஸ்தியர்-வாதாபி கதையில், அகஸ்தியர் சம்ஸ்கிருதம் பேசியது, மஹாபாரத யுத்தத்தில் தர்மன், சம்ஸ்கிருதத்தில் பொய் சொன்னது (அச்வத்தாமா இறந்தான்), ஹாலன் என்ற மன்னன், அவனுடைய மனைவி சம்ஸ்கிருதத்தில் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டவுடன் அவள் ‘கொல்’ என்று சிரித்தது – இப்படி நூற்றுக் கணக்கான எடுத்துக் காட்டுகளை அவ்வப்பொழுது காட்டி வந்துள்ளேன். இதோ மேலும் ஒரு சுவையான கதை.

 

ஒரு அரசன் பல்லக்கில் பவனி வந்தான். அந்தப் பல்லக்கைப் பலர் தூக்கி வந்தனர். அவர்களில் ஒருவனைப் பார்த்து, இந்த பாரம் மிகவும் வலிக்கிறதா? என்று கேட்டான். அதை சம்ஸ்கிருத்தில் கேட்டான். அதையும் பிழைபடக் கேட்டான். உடனே பல்லக்குதூக்கி சொன்னான். உன் உடல் பாரம் வலிக்கவில்லை. நீ பேசிய சம்ஸ்கிருதத்தில் உள்ள இலக்கணப் பிழைதான் பொறுக்கமுடியாத வலியைத் தருகிறது என்றான்.

 

ஒவ்வொரு மொழியிலும் சில குறிப்பிட்ட முறையில் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்கால வினைச் சொற்கள் இருக்கும். எடுத்துக்காட்டாக தமிழில் இறந்த கால வினைச் சொற்கள்தான் மிகவும் சிக்கலானவை. கிட்டத்தட்ட பத்துவகைகள் உள்ளன. நான் வெளி நாட்டுக்காரர்களுக்குத் தமிழ் சொல்லித் தருவதால் இதை அவர்கள் புரிந்துகொள்ளப் படும் சிரமம் எனக்குத் தெரியும். வா என்பதன் இறந்த காலம் வந்தான். போ என்பதன் இறந்தகாலம் போந்தான் இல்லை! சாப்பிடு என்பதன் இறந்த காலம் சாப்பிட்டான். ஆனல் சா என்பதன் இறந்த காலம் செத்தான்! தமிழ் தெரியாத வெளி நாட்டுக்கார்கள் சா என்பதன் இறந்த காலத்தை சாப்பீட்டான் என்றும், சாத்தான் என்றும் சொல்லும்போது எனக்கு சிரிப்பு வரும். வில் என்ற வினைச் சொல்லை நாம் பயன்படுத்துவதே இல்லை. ஆனால் விற்றான், விற்கிறான், விற்பான் என முக்காலங்களிலும் பயன்படுத்துகிறோம் (கல்= கற்றான், கற்கிறான், கற்பான்). சொல் என்பதை சொற்றான், சொற்பான், சொற்கிறான் என்று சொல்ல மாட்டோம் இது போல எல்லா மொழிகளிலும் உண்டு. இப்படி சம்ஸ்கிருதத்திலும் உண்டு. இது தெரியாமல் ஒரு மன்னன் ஒரு தப்பு- இலக்கணத் தப்பு- விட்டான்.

 

பல்லக்கில் பவனி வந்த மன்னன்:

பாரம் பாததி வா? (என் உடல் பாரம் வலிக்கிறதா) என்றான். இது தவறு.

பல்லக்கு தூக்குபவன் சொன்னான்: “பாரம் ந பாததே யதா தவ பாததி”.

அதாவது பாரம் வலிக்கவில்லை. நீ (தவறாக) சொன்னாயே  “பாததி” என்று அதுதான் வலிக்கிறது.

palanquin1

இதிலிருந்து அக்காலத்தில் ராஜா முதல் பல்லக்கு தூக்கிவரை எல்லோரும் சம்ஸ்கிருதம் பேசியது தெள்ளிதின் விளங்கும். இதை ஒரு வேளை கற்பனைக் கதை என்று கருதினாலும், மஹாபாரத (அஸ்வத்தாமன் என்ற யானை இறந்தது), ராமாயண (கும்பகர்ணன் நித்திரை கேட்டது), உபநிஷத (த, த, த கதை) கதைகளை யாரும் பொய்யென்று சொல்லமுடியாது. பிருஹத் ஆரண்யக உபநிஷதம் (பெருங்காட்டு உபநிஷதம்) காமாலைக் கண் படைத்த வெள்ளைக்காரன் கணக்கிலும் கூட மிகப் பழைய நூல். அதாவது இற்றைக்கு 2800 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

 

இந்த த, த, த கதையை காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் எம்.எஸ்.சுப்புலெட்சுமிக்கு, ஐ.நா.சபையில் பாடுவதற்கு எழுதிக்கொடுத்த மைத்ர்ரிம் பஜத – என்ற சம்ஸ்கிருதப் பாடலில் எழுதியுள்ளார். ஆக 2800 ஆண்டுகளுக்கு முன் எழுந்த பேச்சு மொழி நமது காலத்தில், ஐ நா. சபையிலும் ஒலித்து, அதை ஒலிபரப்பிய 100+ நாடுகளிலும் ஒலித்தது.

வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க தமிழ்!!

 

மறு பிறப்பு பற்றி ஆராய்ந்த மாபெரும் விஞ்ஞானி! (Post No. 2410)

book reincarnation

Written by S NAGARAJAN

Date: 21 December 2015

 

Post No. 2410

 

Time uploaded in London :– காலை 5-56

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

அறிவியல் துளிகள் தொடரில் 11,டிசம்பர்,2015 தேதியிட்ட பாக்யா இதழில் வெளியான கட்டுரை

மறு பிறப்பு பற்றி ஆராய்ந்த மாபெரும் விஞ்ஞானி!

.நாகராஜன்

 

அவர் (டாக்டர் ஸ்டீவன்ஸன்) ஒன்று மாபெரும் தவறை இழைத்திருக்க வேண்டும். அல்லது இருபதாம் நூற்றாண்டின் கலிலியோ என்ற (மாபெரும் புகழுடன்) அறியப்பட வேண்டும்”    

                                                            –   டாக்டர் ஹரால்ட்

 

லியஃப் (டாக்டர்ஸ்டீவன்ஸனின் மறுபிறப்பு ஆராய்ச்சி பற்றி ஜர்னல் ஆஃப் நெர்வஸ் அண்ட் மென்டல் டிஸீஸ் பத்திரிகையில் எழுதியது)

 

Capa livro Reencarnação

    உலகிலுள்ள மறுபிறப்பைப் பற்றி அறிவியல் ரீதியாக அணுவளவும் பிசகாது ஆய்வு நடத்தி உலகைப் பிரமிக்க வைத்தவர் டாக்டர் ஐயான் ஸ்டீவன்ஸன். கனடா நாட்டைச் சேர்ந்த இவர் 3000 குழந்தைகளைப் பற்றி ஆராய்ந்தார். பெரும்பாலும் குழந்தைகளுக்கே முன்பிறப்பு பற்றிய பல தகவல்கள் துல்லியமாகத் தெரிகின்றன என்று இவர் கண்டு பிடித்தார். மிகச் சிறு வயதில் அப்போது பிறந்திருக்கும் குடும்பத்தினரின் பழக்க வழக்கங்கள், நடத்தைகளுக்கு முற்றிலும் மாறுபட்டு நடக்கும் குழந்தைகள் இவரது கவனத்தை கவர்ந்தன. உலகமெங்கும் சுற்றினார். அப்படி முன்பிறவி பற்றிக் கூறும் தகவல்களை நுணுக்கமாக ஆராய்ந்தார்.

 

 

 தனது ஆய்வில் இவர் சேர்த்த இன்னொரு முக்கிய அம்சம் உடல் அடையாளங்கள் குறித்தது. இப்பிறவியில் உடலில் காணப்படும் வடுக்கள், தழும்புகள் முற்பிறவி வாழ்க்கையுடன் ஒத்திருப்பது இவரைப் பெரிதும் கவர்ந்தது. இந்த அங்க அடையாளங்கள் முற்பிறவியின்கதைகளைத்தெரிவிக்கும் ஒரு அம்சம் என்பதையும் இவர் கண்டுபிடித்தார்.

ஹிப்நாஸிஸ் அல்லாத அறிவியல் ரீதியிலான ஒரு அணுகுமுறையை இவர் மேற்கொண்டதால் இவரை யாரும் ஏளனம் செய்யவோ அல்லது மறுத்துப் பேசவோ முடியவில்லை.

 

 

தனது அறை ஒன்றில் விசேஷ பேழை ஒன்றை இவர் பூட்டி வைத்துள்ளார். அதை எப்படித் திறப்பது என்ற இரகசியம் அவருக்கு மட்டுமே தெரியும். தனது மறுபிறப்பில் அல்லது இன்னும் ஏதாவது ஒரு வகையில் அந்தப் பேழையை நிச்சயம் தன்னால் திறக்க முடியும் என்பது அவரது நம்பிக்கை. இப்போது இறந்து விட்ட அவர் எப்படி அந்தப் பேழையை எப்போது திறக்கப் போகிறார் என்பதை உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த நாள் என்று வருமோ!

 

 

20 Cases suggestive of reincarnation என்ற அவரது புத்தகம் உலகப் பிரசித்தி பெற்ற ஒரு புத்தகம்.

அவர் தரும் சில சுவையான முற்பிறவி சம்பவங்களில் முக்கியமான ஒன்றானஸ்வீட் ஸ்வர்ணலதாகேஸைப் பார்ப்போம்:-

 

 ian-stevenson-md1

ஸ்வர்ணலதாவிற்கு மூன்று வயது ஆகும் போது அவள் தனது முன்பிறவி பற்றிய 50 நுணுக்கமான தகவல்களைத் தந்தாள். அத்தனையையும் ஸ்டீவன்ஸன் ஆராய்ந்தார்.

ஸ்வர்ணலதா மிஸ்ரா 1948இல் இந்தியாவில், மத்யப்ரதேசத்தில் பிறந்த குழந்தை. ஒரு நாள் தந்தையுடன் கத்னி என்ற இடத்தின் அருகில் பயணப்பட்ட குழந்தை திடீரென்று டிரைவரை ஒரு சாலையைக் காட்டித் திரும்பச் சொல்லிதனது வீட்டிற்குப்போக வேண்டும் என்றாள். அங்கு நல்ல டீ கிடைக்கும் என்றாள் அவள்!

 

பின்னர் தன்னைப் பற்றிய முழு விவரத்தையும் அவள் கூறலானாள். அவள் முந்தைய ஜென்மத்திலும் பெண்ணாகப் பிறந்தவள் தான். பெயர் பியா பாதக். பாதக்கிற்கு இரண்டு மகன்கள்.

 

ஜுர்குடியா என்ற இடத்தில் இருந்த தனது வீடு பற்றிய சிறு சிறு விவரங்களையும் கூட விடாமல் அவள் சொன்னாள். வீட்டின் முன்னால் ஒரு ரயில் லைன். பின்னால் பெண்கள் பள்ளி உள்ளிட்ட அனைத்து அடையாளங்களையும் அவள் குறிப்பிட்டாள். தனது காரைப் பற்றிய விவரத்தையும் கூட அவள் குறிப்பிட்டாள். (ஐம்பதுகளில் கார் என்பதே அரிது)

 

தொண்டையில் வலி வந்ததால் ஜபல்பூரில் டாக்டர் எஸ்.சி. பாப்ரட்டிடம் சிகிச்சை பெற்றும் பலனின்றி (1939ஆம் ஆண்டு) இறந்ததாக அவள் சொன்னாள்.

 

1959ஆம் ஆண்டு பியாவின் கணவன், இரு மகன்கள், சகோதரர் ஆகியோர் முன்னறிவிப்பின்றி ஸ்வர்ணலதாவைப் பார்க்க வந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் சகோதரனை அன்புடன்பாபுஎன்று பெயர் சொல்லி அழைத்தாள் ஸ்வர்ணா! தனது கணவனான சிந்தாமனி பாண்டே அருகில் வந்த போது, ஸ்வர்ணலதா வெட்கத்துடன் அவரைப் பார்த்தாள்! தனது மகன்களையும் அவள் அடையாளம் கூறினாள். அவர்கள், தாங்கள் அவளுடைய மகன்கள் இல்லை என்று கூறிய போதிலும் கூட, அவள் அதனால் ஏமாறவில்லை. உள்ளது உள்ளபடி அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைத்தாள்!

 

பின்னர் 1200 ரூபாயை மறைத்து வைத்திருந்ததைத் தன்கணவரிடம்சொல்ல, பாண்டே அது தனக்கும் தன் மனைவிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் என்று பிரமிப்புடன் ஒப்புக் கொண்டார்.

 

பின்னர் பியாவை அவளது முன் ஜென்ம வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு தான் இறந்த பிறகு செய்யப்பட்ட அனைத்து மாறுதல்களையும் சொன்னதோடு அக்கம்பக்கத்தார், உறவினர் அனைவரையும் அடையாளம் கண்டு சொன்னாள்.

 children reincarnation

சரி, வளர வளர இந்த முன் ஜென்ம ஞாபகங்கள் ஸ்வர்ணலதாவைப் பாதித்ததா?

தாவரப் படிப்பில் ((Botany) மேற்படிப்பை முடித்த ஸ்வர்ணா தனது வாழ்க்கை இயல்பாக இருக்கிறது என்றாலும் பழைய கத்னியை நினைத்தால் கண்கள் பனிக்கின்றன, அந்த பணக்கார வாழ்க்கை போல வருமா, என்ன என்றாள். ஆனாலும் கூட இப்போதைய மிஸ்ரா குடும்பத்தினரிடம் அவள் அன்பு குறையவில்லை! அழகிய இளம் பெண்ணாக வளர்ந்த ஸ்வர்ணலதா இந்த ஜென்மத்தில் தகுந்த மணவாழ்க்கையை மேற்கொண்டாள்!

 

அகதா கிறிஸ்டியின் மர்ம நாவல்களில் வரும் திருப்பங்கள், ஹிட்ச்காக் படங்களின் சஸ்பென்ஸ் ஆகிய அனைத்தையும் விஞ்சிய உண்மைச் சம்பவங்களை ஐயான் ஸ்டீவன்ஸன் எடுத்துரைக்கும் போது மெய் சிலிர்க்கும்.

ஸ்டீவன்ஸனின் ஆய்வுகள் முன் பிறவி பற்றி நமக்கு நம்பிக்கையை நிச்சயம் ஏற்படுத்தும்; ஏற்கனவே இருந்தால் அது வலுப்படும்!

ஸ்டீவன்ஸன் காட்டிய வழியில் இன்றும் பல விஞ்ஞானிகள் இந்த மறுபிறவி மாயத்தை ஆராய்ந்து வருகின்றனர்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்

பிரிட்டனின் புகழ் பெற்ற ராஜதந்திரி, (முதல் உலக) போர்க்கால பிரதம மந்திரி லாயிட் ஜார்ஜ். ((Lloyd George 1863-1945) அவரை புது இடங்களை ஆராயும் சாகஸக்காரரான ராபர்ட் ஃபால்ஸன் ஸ்காட் (Robert Falson Scott) என்பவர் சந்தித்து தனது துருவ ஆராய்ச்சிப் பயணம் பற்றி சொல்லி அந்தப் பயணத்திற்கு ஏராளமாக செலவாகும், அதற்கு உதவ வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். உடனே லாயிட் ஜார்ஜ் பிரபலமான ஒரு பணக்காரரிடம் தன் பெயரைச் சொல்லி உதவி பெறுமாறு சொன்னார். அந்த நபர் அரசியலில் செல்வாக்கு உள்ளவரும் கூட.

சிறிது நாள் கழித்து ஜார்ஜை சந்தித்த ஸ்காட் நன்றி தெரிவித்தார். ‘எப்படி அவரிடம் பணம் வாங்கினாய்?’ என்று கேட்டார் ஜார்ஜ்.

 

உங்கள் பெயரைச் சொன்னவுடன் ஆயிரம் பவுண்டுகளை உடனே தந்தார். உங்களையும் நான் துருவத்திற்கு அழைத்துச் சென்றால் இருபதினாயிரம் பவுண்டுகள் தருவதாக வாக்களித்தார். அத்தோடு உங்களை துருவத்திலேயே விட்டு விட்டு நான் மட்டும் திரும்பி வந்தால் நிச்சயம் பத்து லட்சம் பவுண்டுகள் தருவதாக உறுதி அளித்திருக்கிறார்!” என்றார் ஸ்காட்!

அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா!!!

***********

 

 

Ancient Madurai and Old Delhi! Beautiful Description!!( Post No. 2409)

old-madurai-290x290

Compiled by London swaminathan

Date: 20 December 2015

 

Post No. 2409

 

Time uploaded in London:- 13-24

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

old mdu

Here is a beautiful description of Madurai as seen by Mankudi Marudan, a poet who was in the court of a Pandya king who ruled South Tamil Nadu 2000 years ago:–

“The poet enters the city by its great gate, the posts of which are carved with images of the Goddess Lakshmi, and which is grimy with ghee, poured in oblation upon it to bring safety and prosperity to city it guards. It is a day of festival, and the city is gay with flags, some, presented by the king to celebrate to commemorate brave deeds, flying over the homes of captains, and others waving over the shops which sell the gladdening toddy.

 

The streets are broad rivers of people, folk of every race, buying and selling in the market place or singing to the music of wandering minstrels.

 

A drum beats and a royal procession passes down the street, with elephants leading to the sounds of conches. A refractory beast breaks his chain, and tosses like a ship in an angry sea until again he is brought to order. Chariots follow with prancing horses and fierce footmen.

 

Meanwhile stall keepers ply their trade, selling sweet-cakes, garlands of flowers, scented powder and betel quids. Old women go from house to house, selling nosegays and trinkets to the womenfolk.  Noblemen drive through the streets in their chariots, their gold-sheathed swords flashing, and wearing brightly-dyed garments and wreathes of flowers. From balconies and turrets the many jewels of the perfumed women who watch the festival flash in the sun light.

 

The people flock to the temples to worship to the sound of music, laying their flowers before the images and honouring the holy sages. Craftsmen work in their shops – men making bangles of conch shell, goldsmiths, cloth- dealers, coppersmiths, and flower sellers, vendors of sandal wood, painters and weavers. Food shops busily sell their wares – greens, jack fruits, mangoes, sugar candy, cooked rice and chunks of cooked meat.

madurai1904b

In the evenings the city prostitutes entertain their patrons with dancing and singing to the sound of the lute (Yaz), so that the streets are filled with music. Drunken villagers, up for the festival, reel in the roadways, while respectable women make evening visits to the temples with their children and friends, carrying lighted lamps as offerings. They dance in the temple courts, which are clamorous with their singing and chatter.

 

At last the city seeps—all but the goblins and ghosts who haunt the dark, and the bold housebreakers, armed with rope ladders, swords and chisels, to break through the walls of mud houses. But the watchmen are also vigilant, and the city passes the night in peace.

madurai 028

Mornings come with the sound of the Brahmins intoning their sacred verses. The wandering bards renew their singing, and the shopkeepers busy themselves opening their booths. The toddy-sellers again ply their trade for thirsty morning travellers. The drunkards reel to their feet and once more shout on the streets. All over the city is heard the sound of opening doors. Women sweep the faded flowers of the festival from their court yards. Thus the busy everyday life of the city is resumed.

–Maduraikanchi, Pattuppaattu.

 

delhi-and-agra-062

ANCIENT CITY OF DELHI

Ibn Batuta, Moroccan traveller who travelled from 1326 for 27 years, wrote about Asian countries and its peoples. Here is what he wrote about Delhi:–

“We then proceeded on from Masud Abad till we came to Delhi, the capital of the empire. It is a most magnificent city, combining atone beauty and strength. Its walls are such as to have no equal in the whole world. This is the greatest city of Hindustan; and indeed of all Islam in the East. It now consist of four cities, which becoming contiguous have formed one. The city was conqured in the year of the Hejra 584 (1188 CE). The thickness of its walls is 11 cubits. They keep grain in this city for a very long time without undergoing any change whatever. I myself saw rice brought out of the treasury, which was quite black, nevertheless, had lost noe of the goodness of its taste.  The same was the case with the kodru, which had been in the treasury for ninety years, flowers, too, are in continual blossom in this place. Its mosque is very large; and in the beauty and extent of its building, it has no equal. Before the taking of Delhi, it had been a Hindoo temple, which the Hindoos call El Bur Khana (But Khana); but, after that event, it was used as a mosque. In its court-yard is a cell, to which there is no equal in the cities of the Muhammadeans; its height is such that men appear from the top of it like little children. In its court, too, there is an immense pillar, which they say, is composed of stones from seven quarries. In length it is 30 cubits; its circumference eight; which is truly miraculous. Without the city is a reservoir for the rain water; and out of this inhabitants have their water for drinking.  It is two miles in length, and one in width. About it are pleasure gardens to which the people resort.

Ibn Batuta in Arabic

OldDelhi_AP_Alkazi

—Subham–

 

ஒன்று பட்டாலுண்டு வாழ்வு; ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு!( Post No. 2408)

unity

Compiled by London swaminathan

Date: 20 December 2015

 

Post No. 2408

 

Time uploaded in London: காலை 8-40

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

ஒற்றுமையே பலம் என்பதை வலியுறுத்த பாரத நாட்டில் பல கதைகளும், பழமொழிகளும் இருக்கின்றன. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு- நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு” என்று பாடினான் பாரதி.

 

சின்னக் குழந்தைகளுக்கு ஒரு கதை சொல்லுவதுண்டு. ஒரு குடியானவனுக்கு நாலு மகன்கள்; எப்போது பார்த்தாலும் அவர்களிடையே சண்டைதான். அந்தக் குடியானவனுக்கு அந்திம காலம் நெருங்கியது. மரணப்படுக்கையில் இருக்கும்போது, நான்கு மகன்களையும் அழைத்து, ஆளுக்கு ஒரு விறகுக்கட்டையைக் கொண்டுவரச் சொன்னான். இதை ஒடிப்போருக்குதான் நான் சொத்து முழுவதையும் எழுதிவைப்பேன் என்றான். பின்னர் ஒவ்வொருவ ரையும் விறகை ஒடிக்கச் சொன்னான். அவர்கள் பலம் முழுதையும் பிரயோகித்து எளிதில் உடைத்தனர்.

 

பின்னர் நாலு விறகுக் கட்டைகளையும் சேர்த்து ஒன்றாகக் கட்டச் சொல்லி இப்பொழுது இதை ஒடிப்போருக்குதான் முழுச் சொத்தும் கிடைக்கும் என்றான். நால்வரும் தனித்தனியே முயன்றனர். ஒடிக்க முடியவில்லை

 

அப்பொழுது சொன்னான்: என்னருமை மகன்களே, நீங்கள் தனித் தனியே இருந்தால் பலவீனம் அடைவீர்கள். நமது பரம்பரைச் சொத்துக்களைப் பாதுகாக்க இயலாது. உங்களை யாவரும் வென்று விடுவர். நீங்கள் நால்வரும் ஒற்றுமையுடனிருந்தால் பலம் அதிகரிக்கும். உங்களை யாரும் வெல்ல முடியாது என்றான். அவர்கள் நால்வருக்கும் புத்தி வந்தது. ஒற்றுமையே பலம் என்பதை உணர்ந்தனர்; அதைக் கடைப்பிடித்தனர்.

 

ஒற்றுமை பற்றிய கீழ்கண்ட சம்ஸ்கிருதப் பழமொழிகள்- பொன்மொழிகள்- சான்றோர் மேற்கோள்களைப் படிக்கையில் உங்களுக்கு இந்தக் கதை மீண்டும் மீண்டும் நினைவுக்கு வரும். இதோ அந்தப் பொன்  மொழிகள்:–

IMG_0377 (2)

1).அல்பானாம் அபி வஸ்தூனாம் சம்ஹதி: கார்ய சாதிகா- ஹிதோபதேசம்

எவ்வளவு சின்ன பொருளானாலும், அவை ஒன்று சேருகையில் செயலை முடிக்க உதவும்

 

2).ஏக சித்தே த்வயோரேவ கிம் அசாத்யம் பவேத் இதி – கதாசரித் சகரம்

இரண்டு பேருடைய மனம் ஒன்றுபட்டால், செய்யமுடியாதது எதுவுமில்லை.

 

3).ந இஹ நானாவஸ்தி கிஞ்சன- ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்

இந்த உலகில் உயிர்களிடத்தில் மட்டும் எந்தபேதமும் இல்லை

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமையான் – (திருக்குறள் -972)

 

4).பஞ்சபிர் மிலிதை: கிம் யஜ்ஜஹதீக ந சாத்யதே – நைஷதீக சரிதம்

ஐந்துபேர் சேருமிடத்தில் என்னதான் செய்யமுடியாது?

 

 

5).பஹூனாம் அபி சாராணாம் சமவாயோ ஹி துர்ஜய:

த்ருணைர்விதீயதே ரஜ்ஜுர்பத்யந்தே மத்ததந்தின: – பஞ்ச தந்திரம்

சாரமற்று இருப்பினும் எண்ணிக்கையில் அதிகமானதை வெற்றிகொள்ள இயலாது; புற்களைச் சேர்த்துச் செய்யப்படும் கயிறு மத யானையையும் கட்டிப்போடும்.

 

6).பஹூனாம் ச ஏவ சத்வானாம் சமவாயோ ரிபுஞ்ஜய: — சாணக்ய நீதி தர்பணம்

சாதுவானவர்களானும், ஒன்று சேர்ந்தால் எதிரிகளையும் வென்றுவிடலாம்.

 

7).சம் கச்சத்வம்

சம் வதத்வம்

சம் வோ மனாம்ஸி ஜானதாம் – ரிக் வேதம்

 

நாம் எல்லோரும் ஒன்றாகச் செல்வோம் (ஒன்றாகச் செல்லுங்கள்)

ஒன்றாகப் பேசுவோம் (ஒன்றகப் பேசுங்கள்)

ஒரே சிந்தனை உடையவர்களாவோம் (ஒன்றாகச் சிந்தியுங்கள்)

 

8).சங்கே சக்தி கலௌ யுகே

கலியுகத்தில் சங்கம் (ஒன்றுபட்டிருப்பதே) தான் சக்திவாய்ந்தது.

 

9).சமவாயோ துரத்யய:- போஜ சரித்ரம்

கூட்டாக இருப்பது வெல்ல இயலாதது (ஒன்றாக இருந்தால் அவர்களை யாரும் தோற்கடிக்க முடியாது)

 

(மீண்டும் மீண்டும் ஒரே கொள்கை/ தத்துவம் வலியுறுத்தப் பட்டிருக்கிறது)

IMG_0378 (2)

பராதீனதா – அடிமை (பிறரிடம் தொழில் செய்தல்)

10).கஷ்டம் கலு பராஸ்ரய: – சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)

பிறரைச் சார்ந்து வசிப்பது கடினமாகும்.

 

11).கஷ்டாத் அபி கஷ்டதரம் பரக்ருஹவாச: பரான்னம் ச – (சு.ர.பா)

கஷ்டங்களிலும் பெரிய கஷ்டம் மற்றவர் வீட்டில் வசிக்க வேண்டியிருப்பதும், மற்றவர் கொடுக்கும் உணவுக்காகக் காத்திருப்பதும் ஆகும்.

 

12).கஷ்டா வ்ருத்தி: பராதீனா

பிறரிடத்தில் ஊழியம் செய்வது கடினம்

 

13).திகஸ்து பரவசதாம் – ராமாயணம்

பிறருடைய வசத்தில்/ ஆளுகையில் இருப்பது ஒழியட்டும்

 

14).பராதீனே பரம் துக்கம் ஸ்வாதீனே ச மஹத் சுகம் – புத்த சரிதம்

பிறர் வசம் இருப்பது துக்கமானது

சுதந்திரமாகச் செயல்படுவது மிகவும் சுகமானது.

 

–சுபம்–

இராவணனைப் பற்றிய இரு சுவையான பாடல்கள்!( Post No. 2407)

ravana

Written by S NAGARAJAN

Date: 20 December 2015

 

Post No. 2407

 

Time uploaded in London :– காலை 6-23

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

இராவணனைப் பற்றிய இரு சுவையான பாடல்கள்!

 

ச.நாகராஜன்

 

 

சம்ஸ்கிருதம் அகன்ற, ஆழ்ந்த ஒரு பெருங்கடல். அதில் மூழ்கி கோடானு கோடி நல்முத்துக்களை எடுக்கலாம். இராவணனைப் பற்றிய சுவையான இரண்டு கவிதைகளைப் பார்க்கலாம்.

 

 

இராவணனின் இருபது கண்கள்

 

இராவணனுக்கு பத்துத் தலைகள். ஆகவே இருபது கண்கள் உண்டு என்பதை அறிவோம்.

 

அந்த இருபது கண்கள் என்ன செய்கின்றன – ஒரே சமயத்தில்? கவிஞர் தன் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டார். பிறந்தது பாடல்.

 

 

இராவணனின் இருபது கண்களில் ஒன்று வளைந்து இருக்கிறது. இன்னொன்று குறுகி இருக்கிறது. அடுத்தது ஆவலுடையதாக இருக்கிறது. நான்காவது புன்சிரிப்புடன் இருக்கிறது. அடுத்ததோ ஏதோ அர்த்தத்துடன் ஒன்றைப் பிரதானமாகக் கொண்டுள்ளது. அடுத்ததோ அரைக் கண்ணாக முடியிருக்கிறது. அடுத்தது கறுப்பாக ஆகியுள்ளது ,அடுத்தது எதையோ தூரத்தில் பார்க்கிறது. ஒன்பதாவது கண்ணோ மகிழ்ச்சியுடன் திகழ்கிறது. பத்தாவது அரும்பு போல மூடியிருக்கிறது. அடுத்தது  நடுங்குகிறது. பன்னிரெண்டாவது கண்ணோ நிலையாக நேர் பார்வையைக் கொண்டுள்ளது. அடுத்தது சுழல்கிறது. பதிநான்காவது கண்ணோ இமையோரத்தில் நகர்ந்துள்ளது; அடுத்தது நீர்த்துள்ளது பதினாறாவது கண்ணோ சோர்வைக் காண்பிக்கிறது. அடுத்தது அலை போன்ற இயக்கத்தைக் காண்பிக்கிறது. கடைசி மூன்று கண்களும் கண்ணீரால் நிரம்பியிருக்கிறது.

 

 

இப்படி ஒவ்வொரு கண்ணும் ஒரு குறிப்பிட்ட நிலைக்குத் தக்கபடி ஒவ்வொரு வித்தியாசமான விதத்தில் தன் நிலையைக் காண்பிக்கிறது!

 

 

கவிஞர் ஸ்வபாவோக்தி என்ற அலங்காரத்தைக் காட்டுமாறு இதை அமைத்துள்ளார்.

 

 

இதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பை – ரஸிக்லால் சி.பரீக் (Rasiklal C Parikh) செய்துள்ளதையும் – கீழே காணலாம்:

 

One of the twenty eyes of Ravana is bent,another is contracted, a third is eager, a fourth is smiling, the fifth is full of significance: the sixth is half-closed, the seventh is turned back; the eighth is having a long-range; the ninth is full of joy; the tenth is contracted like a bud; the eleventh is trembling; the twelfth is steady; the thirteenth is rolling’ the fourteenth is moving to its corner; the fifteenth is diluted; the sixteenth is drooping; the seventeenth is full of wave-like movements; the last three are full of tears.

(Thus owing to some particular condition every eye is working in a different way!)

 

India Hindu Festival

An Indian girl watches as a man displays effigies of ten-headed demon king Ravana for the upcoming Dussehra festival in Hyderabad, India, Saturday, Oct. 17, 2015. The Hindu festival of Dussehra commemorates the triumph of Hindu God Rama over Ravana, marking the victory of good over evil. (AP Photo/Mahesh Kumar A.)

குபேரபுரியில் கொண்டாட்டம்

 

மஹா வீரனான இராவணன் இறந்து விட்டான். உடனே விழா எடுக்கப்பட்டு விட்டது.

 

வானர சேனைகள் இருந்த இலங்கைக் கடற்கரையிலா? இல்லை! சுக்ரீவனின் கிஷ்கிந்தையிலா, அங்கும் இல்லை!

குபேர புரியில் கொண்டாட்டம்!

குபேரனின் அளகாபுரியில் ஒரே கொண்டாட்டமாம். யட்சர்கள் வசிக்கும் நகரில் மாதர்களுக்கு ஒரே மகிழ்ச்சி!

பாடலைப் பார்ப்போம்:

 

கைலாஸாசகர்ணிகேயமளாகா நேத்ரைகபேயா புரோ

தேவஸ்ய த்ரவிணப்ரபோ: கிமபரம் ஸ்ருங்காரஸாரஸ்யம்: I

அஸ்யாமஸ்தமிதே ஹி ராக்ஷஸபதௌ யக்ஷாங்கநாநாமமீ

வர்தந்தே ப்ரதிசத்வரம் ப்ரதிக்ருஹம் ப்ரத்யாபணம் சோத்ஸதா: II

 

 

இதன் பொருள் :- கண்களுக்கு விருந்தளிக்கும் அளகாபுரி,  செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் தலைநகர், மேலும் காமக்களியாட்டங்களின் மொத்த சாரத்தைக் கொண்டுள்ள நகர், கைலாஸத்தின் செவியில் உள்ள ஆபரணமாய் அமைந்துள்ளது. ராக்ஷஸர்களின் அதிபனான ராவணன் இறந்து விட்டான் என்று தெரிந்தவுட யட்ச பெண்மணிகள் ஒவ்வொரு நாற்சந்தியிலும் கூடிக் கொன்ண்டாடினர்.ஒவ்வொரு வீதியிலும் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாட்டம் தான்!

 

 

 

குபேரனின் புஷ்பக விமானத்தை அபகரித்ததிலிருந்து ராவணனின் ஒவ்வொரு செய்கையும் பாதித்தது அளகாபுரி மக்களைத் தான்! அவன் ஒழிந்தான் என்றவுடன் இன்ப புரியில் இன்ப லோகக் கொண்டாட்டம் தான்! குறிப்பாக மாதர்கள் ஸ்த்ரீலோலன் ஒழிந்தான் என்று மகிழ்ந்தனர்.

 

பெரும் வாழ்நாள் கொண்டிருந்தாலும், வேத விற்பன்னனாக இருந்தாலும், சிவ பக்தனாக இருந்தாலும் அடுத்தவர் மனைவி மீது ஆசைப்பட்டு அநியாயமாகத் தூக்கிக் கொண்டு வந்தவந் ஒழிவது தானே தர்மம்!

 

 

கவிஞரின் கற்பனையை நாம் கொண்டாட வேண்டியது தான்.சார்த்தூலவிக்ரிதித சந்தத்தில் அமைந்துள்ள இதை பகதத்த ஜலஹணர் என்பவர் தொகுத்த சுக்திமுக்தாவளியில் காணலாம்.

ராவணனைப் பற்றி இப்படி ஏராளமான தனிப் பாடல்கள் உண்டு. ஒவ்வொன்றும் மிகச் சுவையானது!

 

******

A Story about Senseless Scholars! (Post No. 2406)

lion water

Compiled by London swaminathan

Date: 19 December 2015

 

Post No. 2406

 

Time uploaded in London: 11-18

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

In a certain town there were four Brahmins who lived in friendship.  Three of them had reached the far shore of all scholarship, but lacked sense. The other found the scholarship distasteful. He had nothing but sense.

 

One day they met for consultation. “What is the use of attainments, said they, if one does not travel, win the favour of kings, and acquire money? Whatever we do, let us travel”.

 

 

But when they had gone a little way, the eldest of them said, “one of us, the fourth is a dullard, having nothing but sense .Now nobody gains the favourable attention of kings by simple sense without scholarship. Therefore we will not share our earnings with him. Let him turn back and go home”.

 

 

Then the second said, “My intelligent friend you lacked scholarship. Please go home”.

 

But the third said, “No, no, this is no way to behave for we have played together since we were little boys. Come along, my noble friend. You shall have the share of the money we earn.”

 

 

With this agreement they continued their journey, and in a forest they found the bones of a dead lion. There upon one of them said, “A good opportunity to test the ripeness of our scholarship. Here lies some kind of creature, dead. Let’s bring it to life by means of scholarship we have honestly won”.

 

 

Then the first said, “l know how to assemble the skeleton.”

The second said, “l can supply skin, flesh and blood”.

The third said, “I can give it life”.

 

 

So the first assembled the skeleton, the second provided the skin, flesh and blood. But while the third was intent on giving life, the man of sense advised against it remarking, “This is a lion. If you bring him to life, he will kill every one of us”.

 

“You simpleton, said the other, it is not I who will reduce scholarship to nullity. In that case, came the reply, wait a moment, while I climb this convenient tree”.

 

When this had been done, the lion was brought to life, rose up killed all the three. But the man of sense, after the lion had gone elsewhere, climbed down and went home.

 

And that is why I say,

 

“Scholarship is less than sense

Therefore seek intelligence

Senseless scholars in their pride

Made a lion, and they died”.

 

Xxxx

ganga boat

There is a similar story in the Tales and Parables of Sri Ramakrishna:

THE PANDIT WHO COULD NOT SWIM!

Once several men were crossing the Ganges in a boat. One of them, a pandit, was making a great display of his erudition, saying that he had studied various books – the Vedas, the Vedanta, and the six systems of philosophy. He asked a fellow passenger,

“Do you know the Vedanta?”

“No, revered sir.”

“The Sankhya and the Patanjala?”

“No, revered sir.”

“Have you read no philosophy whatsoever?”

“No, revered sir.”

 

The pandit was talking in this vain way and the passenger sitting in silence, when a great storm arose and the boat was about to sink.

The passenger said to the pandit,

“Sir, can you swim?”

“No”, replied the pandit.

The passenger said, “I don’t know Sankhya or the Patanjala, but I can swim”

 

What will a man gain by knowing many scriptures? The one thing needful is to know how to cross the river of the world. God alone is real, and all else is illusory.

–Subham–

 

 

 

சாது மிரண்டால் காடு கொள்ளாது! சீனக் கதை!! (Post No. 2405)

chin1

Compiled by London swaminathan

Date: 19 December 2015

 

Post No. 2405

 

Time uploaded in London: காலை 10-40

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

தமிழில் ஒரு பழமொழி உண்டு. சாதுக்கள் கோபிக்கமாட்டர்கள். ஆனால் அவர்களுக்குக் கோபம் வந்தாலோ அரசாட்சியே கவிழ்ந்துபோகும்.

வித்யாரண்யர் அருளால், விஜயநகரப் பேரரசு தோன்றி தென்னாட்டில் முஸ்லீம் ஆட்சிக்கு சாவு மணி அடித்தது. மகாராஷ்டிரத்தில் சமர்த்த ராமதாஸ் அருளால் வீர சிவாஜி உருவாகி மொகலாய சாம்ரஜ்யத்துக்கு சாவு மணி அடித்தார். இதற்கு முன் சாணக்கியனின் கோபம் நந்த வம்சத்தை வேரறுத்து மௌரியப்பேரசை நிறுவியது.

 

பழங்காலத்தில் அகஸ்தியரைப் பகைத்த நகுஷன் அழிந்தான்; வேனன், சுமுகன் முதலிய கொடுங்கோல் மன்னர்கள் அழிந்து போனதை மனு நீதி சாத்திரம் பட்டியல் போட்டுத் தரும். வள்ளுவனும் தன் குறளில் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதைப் “பெரியாரைப் பிழையாமை” அதிகாரத்தில் கூறுகிறார்:

 

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியோடு

நின்றன்னார் மாய்வர் நிலத்து (898)

 

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுறிந்து

வேந்தனும் வேந்து கெடும் (899)

பொருள்: குணத்தினால் உயர்ந்த பெரியோர்கள், ஒருவனை அழிக்க நினைத்தால், அவன் குலமே அழிந்து போகும்.

உயர்ந்த கொள்கையுடைய சான்றோர் வெகுண்டெழுந்தால், நாடாளும் அரசன் முறிந்து வீழ்வான்.

 

இதை விளக்கும் ஒரு சம்பவம் சீனாவில் நடந்தது:-

சின் வம்ச முதல் அரசன் (கி.மு.221-206), சீனாவின் ஒரு பெரிய நிலப்பரப்பை ஆண்டுவந்தான். அருகாமையிலிருந்த ஒரு சின்ன நாட்டின் பகுதியைத் தனக்குத் தரவேண்டுமென்று மிரட்டினான். அதை ஏற்க மறுத்த அந்த சிறிய நாட்டின் அரசன் ஒரு தூதரை சமாதானம் பேச அனுப்பினான். அந்தக் காலத்தில் தூது போவோர் பெரிய அறிஞர்களாக இருப்பர். இந்தியாவில் பிராமணர்கள் தூதர்களாகப் பணியாற்றியதை சங்க இலக்கியமும், தொல்காப்பியமும் கூறும்.

 

சீனாவில் சின் வம்ச அரசன், சின்ன நாட்டின் தூதரைப் பார்த்துச் சொன்னான்:

china-chin-large

“ஓய் அறிஞரே! ஒரு மன்னனுக்குக் கோபம் வந்தால் என்ன நடக்கும் என்பது உமக்குத் தெரியுமா?

அறிஞர்: மன்னவா, எனக்குத் தெரியாது.

மன்னன்: ஒரு மன்னனுக்குக் கோபம் வந்துவிட்டால் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு லட்சக் கணக்கான சடலங்கள்தான் இருக்கும்.

 

அறிஞர்: ஒரு அறிஞருக்குக் கோபம் வந்தால் என்ன நடக்கும் என்பது தெரியுமா?

மன்னர்: ஹூம்! தொப்பியையும், காலணிகளையும் கழற்றி எறிவார். மண்டையை நிலத்தில் மோதி உடைத்துக் கொள்வார். இது என்ன தெரியாதா?

அறிஞர்: ஓ, அது முட்டாள்கள் செய்யும் வேலை.

 

இப்படிச் சொல்லிவிட்டு அந்த அறிஞர் அந்த மன்னனுக்கு முன்னோர் காலத்தில் நடந்த மூன்று சம்பவங்களை அருமையான கவிதை நடையில் பொழிந்து தள்ளினார். கொடுங்கோல் மன்னர்களை அந்த அறிஞர்கள் தீர்த்துக் கட்டியது பற்றிய கவிதைகள் அவை.

மன்னவா! அந்த மூன்று பேர் பட்டியலில் இன்று என் பெயரும் சேரப்போகிறது. இதோ உமக்கும் எனக்கும் உள்ள ஐந்து அடி இடைவெளியில் இரண்டே சடலங்கள்தான் இன்று இருக்கும். இதோ பார்! என்று சொல்லியவாறே அறிஞர் தன் வாளை உருவினார்.

 

மன்னன் நடுநடுங்கிப் போனார்.

 

மன்னர்: அறிஞரே நிறுத்துங்கள்;அவசரம் வேண்டாம். தயவுசெய்து அமருங்கள். இப்பொழுது எனக்கு விளங்கிவிட்டது. மிகப்பெரிய சாம்ராஜ்யங்களான ஹான், வெய் போன்றவை அழிந்த போதிலும் உமது நாட்டைப் போன்ற சிறிய நாடுகள் உயிர்பிழைத்தது எப்படி என்பது விளங்கிவிட்டது. உங்களைப் போன்ற அறிஞர்கள் இருப்பதால்தான் நுமது நாடு இன்னும் வாழ்கிறது”.

 

மன்னனை அடக்கிய அறிஞனின் கதை இது!

–சுபம்–

தமிழுக்கு அரசர்! நாவுக்கரசர்!! ( Post No. 2404)

நால்வர் சிலைகள்

படம்: சம்பந்தர், அப்பர்(திருநாவுக்கரசர்), சுந்தரர், மாணிக்கவாசகர்

Written by S NAGARAJAN

Date: 19 December 2015

 

Post No. 2404

 

Time uploaded in London :– காலை 6-38

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

தேவார சுகம்

பிறவி வேண்டும் பேரருளாளர்!

ச.நாகராஜன்

 

 

புரட்சிக்கரசர்

 

நாவுக்கரசர் நாவுக்கு மட்டும் அரசர் அல்ல; தமிழுக்கும் அரசர் அவரே! அற்புதமான அருள் பாக்களைப் பாடியவர் புரட்சிகரமான ஏராளமான கருத்துக்களையும் தேவாரத்தில் ஆங்காங்கே அள்ளித் தெளித்திருப்பதைப் பார்க்கலாம்.

 

 

எல்லோரும் மனிதப் பிறவியே வேண்டாம் என்று பாடி இருக்கும் போது அதற்கு மாறாக பூவுலகில்  மனிதப் பிறவியும் வேண்டுகின்ற ஒன்று தான் என்று அவர் புரட்சிகரமாகக் கூறுகிறார். ஆனால் அதற்கான நிபந்தனை ஒன்றையும் அவர் விதிப்பதை அறியும் போது எவ்வளவு பெரிய பேரருளாளர் அவர், எவ்வளவு பெரிய சிவ பக்தர் அவர் என்பதை அறிய முடிகிறது.

 

 

சிதம்பர தரிசனம்

 

கோயில் என்றாலே அது சிதம்பர ஸ்தலத்தைத் தான் குறிக்கிறது.

ஆடல் வல்லானின் அற்புத தரிசனத்தைக் கண்ணுற்ற அப்பர் பாடுகிறார்:-

 

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்

வாயில் குமிண் சிரிப்பும்,

பனித்த சடையும், பவளம் போல்

மேனியில் பால் வெண்ணீறும்

இனித்தமுடைய எடுத்த பொற்

பாதமும் காணப் பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே

இந்த மாநிலத்தே

 

என்ன ஒரு அற்புதமான தெய்வீகத் திரு உரு! வளைந்த புருவம், கொவ்வைச் செவ்வாய், அதில் முகிழ்கின்ற குமிண் சிரிப்பு, பவளம் போன்ற மேனி, அதில் தீட்டப்பட்டிருக்கும் அழகிய திருநீறு, இனித்தமுடைய அருள் தரும் பாதங்கள்!

 

ஆஹா! என்ன ஒரு அற்புதக் காட்சி!

இதைக் கண்டாலே முக்தி நிச்சயம்!

 

ஆக, இந்தக் காட்சியைக் கண்டு முக்தி பெற்று மீண்டும் மீண்டும் அவன் அருளால் பிறப்பு எடுப்போம். முக்தி பெறுவோம்.

அவன் ஆடல் விளையாட்டை நடத்தட்டும்; நாம் பிறந்து பிறந்து ஆடல் வல்லானின் தரிசனத்தைக் கண்டு கண்டு முக்தி அடைந்து அடைந்து மீண்டும் பிறந்து பிறந்து…..

என்ன ஒரு அற்புதமான கருத்து!

 

 நால்வர், கலர்

இன்னம் பாலிக்குமோ

 

இதையே இன்னொரு பாடலிலும் வற்புறுத்துகிறார்:-

 

அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்

பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை

என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற

இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.

 

தில்லைச் சிற்றம்பலத்தைக் கண்டு களிக்க இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே!

 

 

உன்னை மறவாமை வேண்டும்

 

காரைக்கால் அம்மையாரை சிவ்பிரான் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது அவர்

“இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி

அறவா நீ ஆடும்போது உன்னடியின் கீழ்இருக்க”

என்று இப்படிக் கூறியதாக பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகிறார்.

 

 

புழுவானாலும் உன்னடி நினைப்பேனாகுக

 

அப்பரும் திருப்பாதிரிப்புலியூர் பதிகத்தில் புழுவாகப் பிறந்தாலும் உன் திருவடி மறவாதிருக்க வரம் தா என வேண்டுகிறார்:-

 

 

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே

வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே

தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்

செழுநீர்ப்புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்த தீவண்ணனே.

 

எல்லாப் பாடல்களிலும் அடிப்படைக் கருத்தாக இழை ஓடுவது ஒரு முறை அவனை நினைத்தாலே சிவ லோகம் நிச்சயம்; ஆக அந்த நினைப்பு இருந்தாலே போதும்; அதிலும் பிறந்து பிறந்து அவனை நினைந்து அவனைத் தரிசனம் செய்யும் சுகத்தை இன்னும் அதிகம் பெற வேண்டும் என்பது தான்!

 

தேவார சுகம்

 

உள்ளுவார் உள்ளத்தில் உளன் என்பது ஒரு புறம் இருக்க அவனைத் தில்லையிலே கண்ணாரக் காணும் சுகம் தனி தானே!

இந்த சுகத்தைத் தரும் அப்பரின் தேவார சுகமே சுகம்!

 

*********

 

 

 

King and Scholar: Who is Powerful? Post No. 2403

chin1

Compiled by London swaminathan

Date: 18 December 2015

 

Post No. 2403

 

Time uploaded in London: 19-41

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Anecdote from China:

 

china-chin-large

The famous First Emperor of the Chin Dynasty (221-206 BC) was snubbed by the scholarly envoy of a very small state. It happened in this way.

 

Chin having arbitrarily proposed to the small state to exchange a piece of territory, the latter being unwilling, commissioned an envoy to Chin to explain matters to the emperor who was at the height of his power.  At the audience, which seemed to be a tête-à-tête conference, the following incident took place:–

 

 

The emperor, suddenly losing his temper said, “Have you ever heard of anger of an emperor?”

 

“No, Your Majesty”, replied the envoy.

 

“When an emperor is in anger, said the emperor, there will be a million corpses lying about with blood flowing a thousand miles”.

 

“Has Your Majesty, asked the envoy, ever heard of the anger of a plain scholar?”

 

“The anger of the scholar, answered the emperor, can mean no more than taking off his hat and shoes, and knocking his head against the ground.”

 

“No Your Majesty, said the envoy, This is the anger only of a fool, not that of a scholar”.

 

After saying this, in highly poetical diction, he recited graphically three well known but not far distant historical instances where unworthy reigning princes were openly slain by scholars. At the end of the citation he calmly exclaimed,

chin2

“Now I am going to add my name as the fourth to the list. When a scholar is in anger, there will be only two corpses lying about with blood flowing within five steps. Today is the day when the whole Empire shall be in mourning”. Thereupon he rose with his sword in hand. The Emperor, visibly affected, forthwith knelt before his interlocutor saying,

 

“Please sit down, Master. Why should things be like this? I understand now. The fact that (larger states like) Haan and Wei have perished, while (a small state like) yours survives is merely because it has (men like) you, Master”.

 

dynasty-05-Qin

—–SUBHAM—–

xxxxx

 

 

கவிஞர்களின் பார்வையில் சீதை, ராமர், சுக்ரீவன்! (Post No. 2402)

rama_guha

Written by S NAGARAJAN

Date: 18 December 2015

 

Post No. 2402

 

Time uploaded in London :– காலை 8-41

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

கவிஞர்களின் பார்வையில் சீதை, ராமர், சுக்ரீவன்!

 

ச.நாகராஜன்

 RAMAYAN STATUES2,FB

கவிஞர்களின் பார்வையில் பட்ட எதுவுமே கவிதையாகும்! அதுவும் ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிஹாஸங்களிலும் புராணங்களிலும் வரும் கதாபாத்திரங்கள், நிகழ்ச்சிகள் மீது அவர்கள் பார்வை பட்டதென்றால் நமக்கு சுவையான கவிதைகள் தானே, கிடைக்கும்! கவிதைகள், தானே கிடைக்கும்!

 

1872ஆம் ஆண்டு பம்பாயில் வெளியிடப்பட்ட சுபாஷித ரத்னாகர(ம்) என்ற நூலில் இடம் பெறும் சம்ஸ்கிருதப் பாடல் இது.

 

சீதை ராமர் ஆக, ராமர் சீதை ஆவார்

 

கீடோயம் ப்ரமரி பவேத்விரதத்யானாத்தயா சேதஹம்                

ராம: ஸ்யாம் த்ரிஜடே ஹதாஸ்மி புரதோ தாம்பத்ய சௌக்யச்யுதா  I                   

 

 

ஏவம் சேத் க்ருதக்ருத்யதைவ பவிதா ராமஸ்தவ தியானம்                          

சீதா த்வம் ச நிஹத்ய ராவணரிபும் கந்தாஸி ராமாந்திகம் II

 

கீடம் – புழு ; ப்ரமர் – வண்டு ; ரிபு — எதிரி

 

 

சுவாரசியமான கருத்தைத் தெரிவிக்கிறார் கவிஞர் இதில். இதன் பொருளைப் பார்ப்போம்.

 

சீதையும், விபீஷணனின் பெண்ணான த்ரிஜடையும் அசோகவனத்தில் சம்பாஷித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சீதை த்ரிஜடையை நோக்கி, “ ஓ, த்ரிஜடை! புழுவானது இடைவிடாமல் வண்டை நினைத்துக் கொண்டிருப்பதால் அது வண்டாக மாறி விடும் என்று சொல்லப்படுவது உண்மையா? அப்படியென்றால் (ராமனை இடைவிடாமல் தியானிக்கும்) நான் ராமனாக மாறி விடுவேன்.எனது அன்புக்குரிய கணவரின் அன்பு இல்லாமல் தள்ளி தூர இருப்பதிலிருந்து விடுபட்டு விடுவேன்” என்றாள்

 

 

இதைக் கேட்ட த்ரிஜடை உடனே சீதையை நோக்கிப் பதில் கூறுகிறாள் : “ அப்படி என்றால் அது நல்லதற்குத் தான்! ஏனெனில் நீங்கள் ராமர் ஆகி விடுவீர்கள். உங்களை இடைவிடாமல் நினைத்துக் கொண்டிருக்கும் ராமர் சீதை ஆகி விடுவார்!

RAMA,SITTINNG,FB

 

நீங்கள் (ராமராக ஆகி விடுவதால்) எதிரியான ராவணனைக் கொன்று விடுவீர்கள். உடனே ராமருக்கு அருகில் சென்று விடுவீர்கள். (அவரவர் தம் தம் உருவை எடுத்துக் கொள்வீர்கள்!)

எப்படிப்பட்ட அபாரமான கற்பனை!

 

 

இது அமைந்துள்ள விருத்தம் சார்த்தூலவிக்ரிதிதம் என்ற சந்தத்தில் அமைந்துள்ள அருமையான செய்யுள்!

 

 

 

ராகவேந்திரரும் வானரேந்திரரும்

 

ராகவேந்திரருக்கும் (ராமர்) வானரேந்திரருக்கும் (சுக்ரீவர்) ஒரே பிரச்சினை தான்! அதனால் என்ன நடந்தது? இருவரும் நண்பராக ஆகி விட்டார்கள். கவிஞ÷ ´ÕÅரின் கவிதையைப் பார்ப்போம்:

 

 

ச ராகவேந்த்ரோ ஹ்ருதராஜதார: ச வானரேந்த்ரோ ஹ்ருதராஜதார: I          

ஏவம் தயோரத்வனி தைவயோகாத் சமானஷ்கிலவ்யசேஷு சக்யம் II

 

ரகுவம்சத் தலைவனான ராமன் தன் மனைவியை அபகரித்த நிலையில் இருந்தான். வானரத் தலைவனான சுக்ரீவனும் அதே போல தன் மனைவி அபகரிக்கப்பட்டவனாக இருந்தான்! விதியின் விளைவாக இருவரும் சந்தித்தனர். இருவருக்கும் ஒரே பிரச்சினை இருந்ததால் நண்பர்களாக ஆகி விட்டனர்!

தாரம் இழந்த ராகவேந்திரன், தாரம் இழந்த வானரேந்திரனைச் சந்திக்கவே சக்யம் (நட்பு) ஏற்பட்டது – இருவருக்கும் பிரச்சினை ஒன்றே என்பதால்!

 

 

நல்ல கற்பனையில் நமக்குக் கிடைத்தது அற்புதமான ஒரு செய்யுள்!

 

 

இது போன்ற தனிப்பாடல்கள் ஏராளம் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. தமிழிலும் உள்ளன.

சுவைக்க நேரமும், மனமும் வேண்டும்!

 

சம்ஸ்கிருதம், தமிழில் உள்ளவற்றை மனமூன்றிப் படிப்போம்; உயர்வோம்!!

***********