Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
(ஆர், சேஷாத்ரிநாதன்)
ஹனுமனுக்கு இராமனின் பதில்
कोसलेस दसरथ के जाए । हम पितु बचन मानि बन आए॥ १॥
नाम राम लछिमन दोउठ भाई । संग नारि सुकुमारि सुहाई॥ २॥
इहाँ हरी निसिचर बेदेही। बिप्र फिरहिं हम खोजत तेही॥ ३॥
आपन चरित कहा हम गाई । कहहु बिप्र निज कथा बुझाई॥ ४॥
இதனைக் கேட்ட ஸ்ரீ இராம பிரான் கூறினார் “ நாங்கள் கோசல நாட்டு மன்னர் தசரதனின் மைந்தர்கள். தந்தையின் கட்டளையை ஏற்று வனத்திற்கு வந்தோம்”. இங்கு தனது அவதார ரகசியத்தை வெளிப்படுத்தவில்லை (இராமன் வனவாசத்திற்கு கிளம்பும்போதே தனது தாயான கௌசல்யாவிடம் சந்கேதமாகத் தெரிவித்து விட்டான். துளசிதாசர் அயோத்திய காண்டத்திலேயே நமக்குத் தெரிவித்துவிட்டார்.
தாயிடம் இராமன் சொல்கிறான் “அன்னையே! தந்தை வனராஜ்ஜியத்தை எனக்கு தந்தருளியுள்ளார்.. அங்குதான் எனக்கு முக்கியமான வேலைகள் உள்ளன” என்று சூசகமாகச் சொல்லிவிட்டான்.)
ஹனுமனிடம் இராமன் சொல்வதாவது “இராமன், இலக்ஷ்மணன் என்பது எங்கள் பெயர். நாங்கள் இருவரும் சகோதரர்கள். எங்களுடன் எனது அழகிய மனைவியும் இருந்தாள். இங்கு வனத்தில் ஒரு அரக்கன் எனது மனைவி வைதேகியைக் கவர்ந்து சென்று விட்டான். ஆஞ்சநேயரே! நாங்கள் அவளைத்தான் தேடிக் கொண்டு அலைகிறோம். நாங்கள் எங்களைப் பற்றிய வரலாற்றைக் கூறிவிட்டோம். அந்தணரே! உங்களைப் பற்றிய கதையைத் தெளிவாகச் சொல்வீராக.” என்றான்.
இதையே ஆத்யாத்ம இராமாயணத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று பார்க்கலாமா?
अहं दाशरथी रामस्त्वयं मे लक्ष्मणोऽनुजः ।
सीतया भार्यया सार्धं पितुर्वचनगौरवात् ॥ १९॥
आगतस्तत्र विपिने स्थितोऽहं दण्डके द्विज ।
तत्र भार्या हृता सीता रक्षसा केनचिन्मम ।
तामन्वेष्टुमिहायातौ त्वं को वा कस्य वा वद ॥
“நான் தசரத புத்திரன் ராம். இவன் எனது தம்பி இலக்ஷ்மணன். தந்தையின் உத்திரவுப்படி நான் எனது மனைவி சீதையுடன் வனம் வந்தேன். தண்டகாரண்யத்தில் என் மனைவி சீதையை ஒரு இராட்சஸன் அபகரித்துச் சென்று விட்டான். அதனால் எனது மனைவி சீதையைத் தேடி இங்கு வந்தோம்” என்று தன்னைப் பற்றிய விவரங்களை எடுத்துச் சொல்கிறான் இராமன்.
இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்கவேண்டும்.ஆத்யாத்மா இராமாயணத்தில் இராமன் தனது மனைவியின் பெயர் சீதை என்று குறிப்பிடுவதோடு சீதையை அரக்கன் கடத்திச் சென்றுவிட்டான்; சீதையைத் தேடி நாங்கள் இங்கு வந்தோம் என்று மூன்று முறை குறிப்பிடுகிறான். ஆனால் துளசி இராமாயணத்தில் இராமன் ஹனுமனிடம் ஒரு அரக்கன் கடத்திச் சென்ற தனது மனைவியான வைதேஹியைத் தேடி அலைவதாகக் குறிப்பிடுகிறான். மனைவியின் பெயரை ஜானகி என்றோ சீதை என்றோ குறிப்பிடவில்லை.
விதேகம் என்றால் தேகமற்ற உடல் என்று பொருள். அப்படியானால் வைதேஹி என்றால் தேகமற்றவள் என்று பொருள். இது எவ்வாறு சாத்தியமாகும்.? ராம சரித மானஸ் ஆரண்ய காண்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது. இதை முன்னமே நீங்கள் படித்திருக்கலாம். ஒரு நாள் இராமன், இலக்ஷ்மணன் வனத்தில் பழங்கள் பூக்களைச் சேமிக்கச் சென்றபோது சீதையிடம், ‘ஒரு காரணமாக நீ இந்த அக்னி குண்டத்தில் இறங்கி அக்னி பகவானிடம் அடைக்கலமாக இரு” என்று சொன்னதும் எந்த வித மறுப்பும் சொல்லாமலும், காரணம் கேட்காமலும் சீதை நெருப்பில் இறங்கி அக்னி பகவனை அடைந்தாள். நெருப்பில் இருந்து மாயா சீதை வெளி வந்தாள் மாயா சீதை என்றால் பார்பவர்கள் கண்களுக்கு சீதையின் உருவம் தெரியும். ஆனால் உண்மையில் உடலற்றவள். இது இலக்ஷ்மணனுக்கும் தெரியாது. அதைத்தான் அரக்கன் தூக்கிச் சென்றது மாயா சீதையைத் தான் உண்மை சீதையை அல்ல என்று உணர்த்தத்தான் தேகமற்ற சீதையை தூக்கிச் சென்றான் (வைதேஹி) என்று இராமான் சொன்னான் என்பதாக உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
“सुकुमारि सुहाई़’ என்று இராமன் சொல்வதன் பொருளாவது “அவள் மிகவும் மென்மையானவள். கரடுமுரடான இந்த வனத்திற்கு வரத் தகுதி அற்றவள். ஆனாலும் என் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக உடன் வந்தாள். இப்பொழுது அவளில்லாமல் எனக்கு எந்தச் சுகமும் இல்லை” என்கிறான். இதையே துளசிதாசர் தன்னுடைய கவிதாவளி என்ற நூலில் கூறியுள்ளார்.
पुर ते निकसी रघुबीर-बधू, धरि धीर दये मर्ग में डग है ।
झलक भरि भाल कनी जल की, पुट सूखि गये मधुराधर वै ॥
फिरि बूझति हैं-”चलनो अब केतिक, पर्णकुटी करिहौ कित है?”
तिय की लखि आतुरता पिय की अँखिया अति चारु चलीं जल च्वै॥
இராமன் சீதை இலக்ஷ்மணன் மூவரும் வனவாசத்திற்காக அயோத்தியிலிருந்து இரதத்தில் கிளம்பி ஓரளவு தூரம் சென்ற பிறகு ஸ்ருங்கிபேரபுறம் நோக்கி நடக்கிறார்கள். நல்ல வெயில். இரண்டு அடிகள் எடுத்து வைத்ததுமே சீதையின் நெற்றியில் வியர்வைத் துளிகள். தண்ணீர் இல்லாமல் உதடுகள் வறண்டன. இராமனை நோக்கி “ஐயனே! இன்னும் எவ்வளவு தூரம் நாம் நடக்கவேண்டும். எவ்வளவு தூரத்தில் பர்ணசாலை அமைப்பீர்கள்” என்று கேட்கிறாள். இராமனுக்கு அவளது வேதனை புரிந்தது. அவள் களைத்துவிட்டாள் ஓய்வெடுக்க விரும்புகிறாள் என்று புரிந்து கொண்டான். அரணமனையில் இராணியாக உள்லசாமாக இருந்தவள் இன்று இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறாளே என்பதை நினைத்து இராமனின் கண்களில் கண்ணீர் வந்ததாம்.
மீண்டும் துளசிதாஸ்
ஹனுமனின் கேள்விகளுக்கு மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டான் இராமன். இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். வால்மீகி இராமாயணத்தில் இராமன் தான் பதிலுரைக்கவில்லை. மாறாக இலக்ஷ்மணன்தான் பதிலளித்தான்.. காரணம் இராமனுக்கு ஹனுமனைத் தெரியாது. அவரைப் பொறுத்தவரை அந்நியன். ஒரு அந்நியனிடம் தன்னைப் பற்றிய விவரங்களைக் கூற விரும்பவில்லை. மேலும் அவர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர், எந்த அரசரும் தனக்குச் சமமாக உள்ளவர்களிடம்தான் பேசுவார்கள். அதனால் அந்தப் பொறுப்பை இலக்ஷ்மணனிடம் விட்டுவிட்டார். இலக்ஷ்மணனும் துளசிதாசர் சொன்ன விவரங்களையே வால்மீகி இராமயணத்தில் கூறி உள்ளார்.
ஹனுமான் கேட்டான் “இந்தக் கடினமான கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் மிருதுவான பாதங்கள் கொண்ட தாங்கள் ஏன் வந்தீர்கள்? “काठिन भूमि कोमल पद गामी। कवन” என்று கேட்டதற்கு தந்தையின் கட்டளைப்படி ‘हम पितु बचन मानि बन आए! வந்தோம் என்று சுருக்கமாகச் சொல்கிறார்.
இராமன் ஹனுமனிடம் எங்களுடன் எனது அழகிய மனைவியும் இருந்தாள். संग नारि सुकुमारि सुहाई.எப்படிப்பட்ட அழகு? ஏற்கனவே பல இடங்களில் சீதையின் அழகைத் துளசி தாசர் சொல்லியுள்ளார். ஆனால் இந்த இடம் ஒரு சிறப்பு வாய்ந்த இடம். துளசிதாசரின் புலமைக்கு ஒரு எடுத்தக்காட்டு. அதாவது சீதையை இராவணன் அபகரித்துச் சென்றவுடன் இராமன் சீதையைத் தேடி வனத்தில் அலைகிறான். மரங்கள், செடிகள், கொடிகள், மலைகள், நதிகள் ஆகியவற்றிடம் சீதையைப் பற்றி விசாரிக்கிறான்.
कुंद कली दाड़िम दामिनी। कमल सरद ससि अहिभामिनी॥
बरुन पास मनोज धनु हंसा। गज केहरि निज सुनत प्रसंसा
இயற்கை எல்லாம் இன்று மகிழ்கிறது —
அவள் இல்லாத உலகம்,
அழகை மீண்டும் புகழ்கிறது!
ஆனால் என் இதயம் —
அவள் இல்லாமல்,
அழகின் அர்த்தம் இழந்துவிட்டது!
“குந்த மலரின் மொட்டு, மாதுளை பழம், மின்னல், தாமரை, சரத்கால சந்திரன், பாம்பு, வருணனின் பாசம், மன்மதனின் வில், அன்னப்பறவை, யானை, சிங்கம் — இவை எல்லாம் இன்று தங்கள் அழகைப் பற்றி புகழப்படுகிறதைக் கேட்டு மகிழ்கின்றன.”
இந்தச் ஸ்லோகம், அவளின் அழகுடன் ஒப்பிடப்படும் இயற்கை உருவங்கள், இப்போது சீதையைக் காணாமல், தங்கள் அழகைப் பற்றிப் புகழப்படுவதால் மகிழ்கிறார்கள் என்கிற விலாபக் கவிதை.
இயற்கையின் அழகு கூட சீதையின் அழகின் முன்னிலையில் மங்கியதாக இருந்தது. இப்போது அவள் இல்லாததால், அவை தங்கள் பெருமையை மீண்டும் கேட்டு மகிழ்கின்றன.
இராமன் வைதேஹியைத் தேடி இங்கு வந்தோம்.என்று சொல்கிறான். இதை ஏன் ஹனுமனிடம் சொல்லவேண்டும்? ஹனுமன் அந்தண வேடத்தில் உள்ளான். திருமணத்தில் கணவன் மனைவியிடம் உன்னை வாழ்நாள் முழுவதும் கண்ணின் மணி போல பார்த்துக் கொள்வேன் என்று உறுதி அளிக்கிறான். அந்தணன் என்ற முறையில் ஹனுமன் இதை அறிந்திருப்பான். அதனால் எனது மனைவியான வைதேஹியைத் தேடி இங்கு வந்தேன் என்று சொல்கிறான்..
இராமன் எங்கள் சரித்திரத்தை நான் சொல்லிவிட்டேன். இனி உனது கதையைச் சொல் आपन चरित कहा हम गाई। बिप्र कहहु निज कथा“! உரையாசிரியர்கள் இதுவரை உள்ள “आपन चारित! இராமாயணத்தையே இராமன் சொல்லிவிட்டான் என்கிறார்கள் . எப்படி? ‘कोसलेस दसरथ के जाए” இது பால காண்டம் हम पितु बचन मानि बन आए य இது அயோத்யா காண்டம் “इहाँ हरी निसिचर बेदेही இது ஆரண்ய காண்டம் “बिप्र फिरहिं हम खोजत तेही இது கிஷ்கிந்தாக் காண்டம் .இதைச் சொல்லிவிட்டு ஹனுமனிடம் அவனைப் பற்றிய விவரத்தைக் கேட்கிறான்., ‘कहहु बिप्र निज कथा बुझाई இதன் மறைமுகமாகன பொருள் என்னவென்றால் உனது பேச்சிலும் உச்சரிப்பிலும் வேதங்களின் சாயல் தெரிகிறது.. இதைத்தான் வால்மீகியும் கூறி உள்ளார்
न अन् ऋग्वेद विनीतस्य न अ\-\-यजुर्वेद धारिणः |
न अ\-\-साम वेद विदुषः शक्यम् एवम् विभाषितुम् || ४-३-२८
नूनम् व्यकरणम् कृत्स्नम् अनेन बहुधा श्रुतम् |
बहु व्याहरता अनेन न किंचित् अप शब्दितम् || ४-३-२९
வால்மீகி ராமாயணத்தின்படி இராமன் இலக்ஷ்மணனிடம் ஹனுமன் இதுவரை பேசியதை வைத்து அனைத்து வேதங்கள் மற்றும் இலக்கணங்கள் தெரியாதவனால் இவ்வாறு பேசமுடியாது. என்று கூறுகிறான். அதைத்தான் சுருக்கமாக துளசிதாசர் கூறிவிட்டார்,. அதுபோக துளசிதாசர் “निज कथा” என்ற பதத்தையும் கொடுத்துள்ளார். இதன் பொருள் உனது தந்தை பெயர், உனது பெயர், என்ன குலம், உனது கல்வி, குருவின் பெயர், இந்த காடுகளில் நீ ஏன் சுற்றுகிறாய், யாரால் அனுப்பப்பட்டு நீ இங்கு வந்தாய் போன்ற முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறான். இராமனுக்குத் தெரியாததா? ஹனுமான் வானர வடிவத்தை விட்டு இளம் பிராமணனாக வந்துள்ளான். உருவத்தை மறைத்தது போல் விவரங்களையும் மறைக்காமல் உள்ளது உள்ளபடி சொல்ல வேண்டும் என்ற தொனியில் சொல்கிறான்.
தனது விவரத்தை ‘சரித’ என்று சொல்லுகிறான் ஆனால் ஹனுமனின் விவரங்களை ‘கதா; என்று சொல்லுகிறான். இதன் உட்பொருள் “எங்களுக்கு ஒரு பிரச்னை நிகழ்ந்துள்ளது அதனால் நாங்கள் கோரமான வனத்தில் சுற்றுகிறோம். உனக்கு அப்படி என்ன பிரச்னை வந்துள்ளது? நீ ஏன் இந்த அடர்ந்த வனத்தில் சுற்றுகிறாய்” என்று தெரிந்து கொள்வதற்காக.
உத்தரகாண்டத்தின் பதினாறாவது ஸர்க்கமாக அமைவது ‘ராவணன் என்ற பெயரை அடைவது’ என்ற ஸர்க்கமாகும்.
ஒரு சமயம் புஷ்பக விமானத்தில் ராவணன் செல்லும் போது அது ஒரு இடத்தில் அசையாமல் நின்று விட்டது. ஏன் இப்படி இந்த விமானம் இங்கு நின்று விட்டது என்று ராவணன் யோசித்த சமயத்தில் சிவபெருமானின் அனுசரராகிய நந்தீஸ்வரர் அங்கு வந்து ராவணனிடம், ‘இது சங்கர பகவான் எழுந்தருளியிருக்கும் இடம். நீ திரும்பிப் போய் விடு” என்றார்.
கோபமடைந்த ராவணன், ‘இந்த சங்கரன் என்பவன் யார்?’ என்று கேட்டவாறே கைலாஸத்தை நெருங்கினான். அங்கு வானர முகத்துடன் இருந்த நந்தீஸ்வரரைப் பார்த்து அவன் அலட்சியம் செய்தான். இதனால் வெகுண்ட நந்தீஸ்வரர், “என் வானர முகத்தைக் கண்டு எள்ளி நகையாடினாய்.. உன் குலத்தை அழிக்க வானரர்கள் உதிப்பார்கள்’ என்றார்.
ராவணன் கைலாஸ மலையைப் பெயர்த்து எறிய எண்ணம் கொண்டு அந்த மலையின் அடியில் கைகளை வைத்து மலையைக் குலுக்கினான். உடனே சங்கரர் அந்த மலையை தன் திருவடிப் பெருவிரலினால் விளையாட்டாக அழுத்தினார்.
கைகள் நசுக்குண்ட நிலையில் ராவணன் ஓவென்று அலறினான். உடனே அவனது மந்திரிகள் அவனிடம் சிவபெருமானை வணங்கித் துதிக்குமாறு கூறினார்கள். ராவணனும் அப்படியே ஸ்தோத்திரங்களால் சிவனைத் துதிக்கலானான்.
இதனால் மகிழ்ந்த சங்கரர், “ஓ! தசானனா! நீ இட்ட கூச்சலினால் உலகமே நடுங்கியது. ஆகவே இனி ராவணன் என்ற பெயரை இட்டு அனைவரும் உன்னை அழைப்பார்கள் என்றார்.
அப்போது ராவணன் அவரை வணங்கி, ‘மஹாதேவரே. பிரஸன்னராய் இருக்கிறீர்கள் என்றால் வருந்திக் கேட்கும் எனக்கு ஒரு வரத்தை அருள்வீராக’ என்றான்.
ப்ரீதோ யதி மஹாதேவ வரம் மே தேஹி யாசத: |
உத்தரகாண்டம், பதினாறாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 34
மஹாதேவ – ,மஹாதேவரே ப்ரீதி: – பிரஸன்னராய் யதி – இருக்கிறீர்கள் என்றால் யாசத: – வருந்திக் கேட்கும் மே – எனக்கு வரம் – ஒரு வரத்தை தேஹி – தந்தருள்வீர்
இப்படிச் சொன்ன ராவணன் தனக்கு தீர்க்க ஆயுளைக் கேட்டதோடு ஒரு சஸ்திரத்தையும் தந்தருளுமாறு வேண்டினான்.
வாஞ்சிசதம் – பிரார்த்திக்கப்பட்டதாகிற சேஷம் – குறையாமலிருக்கிற ஆயுஷ: ச – ஆயுளையும் சஸ்த்ரம் ச ஒரு சஸ்திரத்தையும் மே – எனக்கு ப்ரயஸ்ச – தந்தருள வேண்டும்.
சிவபெருமானும் உடனே அப்படியே அருளினார். சந்திரஹாஸம் என்ற வாளை ராவணனுக்குத் தந்தார். அத்தோடு ராவணனைப் பார்த்து சங்கரர், “இந்த வாள் உன்னால் அவமரியாதை செய்யப்படத் தக்கதன்று. அப்படி அவமரியாதை செய்யப்பட்டால் இது என்னிடமே திரும்பி வந்து விடும்” என்றார்.
ராவணன் அதைப் பெற்றுக் கொண்டு தன்னிடத்திற்குத் திரும்பினான்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Purananuru wonders-31, Tamil Encyclopedia-71; One Thousand Interesting Facts -Part 71
Item 559
In Avvaiyar‘s poems in Purananuru, one notable thing is her use of Sanskrit words; she never hesitated to use them though Tamil words were available for the same .
Puranānūru 100, Poet Avvaiyār sang for Athiyamān Nedumān Anji,
Spear in his hand, beautiful warrior anklets on his legs, sweat on his body, fresh wounds on his neck, his dark, curly hair splendidly adorned with needle-like fronds from the top of young palmyra trees, entwined with huge vetchi blossoms and vēngai flowers, his enemies flee his sight, like he were a mighty elephant that had come back from battling a tiger, so that the rage he felt has not yet left him.
Alas! For those who aroused his anger, there is no escape. The eyes that saw his enemies are still red even though they see his young son!
Vaidehi Herbert’s English Translation is used; Thanks.
புறநானூறு100, பாடியவர்: ஔவையார், பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி, திணை: வாகை, துறை: அரச வாகை கையது வேலே, காலன புனை கழல், மெய்யது வியரே, மிடற்றது பசும்புண், வட்கர் போகிய வளர் இளம் போந்தை உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு வெட்சி மா மலர் வேங்கையொடு விரைஇச், 5 சுரி இரும் பித்தை பொலியச் சூடி, வரிவயம் பொருத வயக்களிறு போல, இன்னும் மாறாது சினனே அன்னோ, உய்ந்தனர் அல்லர் இவன் உடற்றியோரே, செறுவர் நோக்கிய கண் தன் 10 சிறுவனை நோக்கியும், சிவப்பு ஆனாவே.
***
Item 560
In Puram 101, poetess Avvaiyar says , Chieftain Athiyaman will give the First day treatment for the second day, third day……………….many more days
This is because the popular saying is
You are given food in Thalai Vaazai Ilaiyile (Longest Banana leaf)
On the second day they will serve you food in Kaiyile (In your hand)
If you stay for one more day
On the third day they will serve you food on your Thalaiyile (on your head)
The meaning is, the hosts will throw you out.
Remembering this popular saying Avvai says Athiyaman treat everyone the same way irrespective of the period of your stay with him as a guest.
முதல் நாள் தலைவாழை இலையில
இரண்டாம் நாள் – கையில
மூன்றாம் நாள் – உன் தலையில
***
Puranānūru 101, Poet Avvaiyār sang for Athiyamān Nedumān Anji,
We did not go to him just for one day or two days, but brought along many and went for many days, and he welcomed us like it was the first day.
When we receive gifts from Athiyamān who owns fine chariots and elephants adorned with ornaments, they are there, whether it takes more or less time. The gifts are in our hands like a ball of food placed between the tusks of an elephant.
He will not fail us, my heart that desires food! Do not worry! May his efforts prosper!
***
புறநானூறு101, பாடியவர்: ஔவையார், பாடப்பட்டோன் அதியமான் நெடுமான் அஞ்சி, திணை: பாடாண், துறை:பரிசில் கடாநிலை ஒரு நாள் செல்லலம், இரு நாள் செல்லலம், பல நாள் பயின்று பலரொடு செல்லினும், தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ, அணி பூண் அணிந்த யானை இயல் தேர் அதியமான் பரிசில் பெறூஉங் காலம் 5 நீட்டினும் நீட்டாது ஆயினும், யானை தன் கோட்டு இடை வைத்த கவளம் போலக் கையகத்தது, அது பொய் ஆகாதே, அருந்த ஏமாந்த நெஞ்சம், வருந்த வேண்டா, வாழ்க அவன் தாளே. 10
***
Item 561 Sixteen Blessings
In Puram verse 102 Avvaiayar praised Pokuttu Ezini, son of Chieftain Athiyaman and compared him to the Full Moon. Commentators say that he is blessed with 16 boons or blessings like the Moon. Hindus believe that on Full Moon Day (Purnima) the moon has all the 16 phases; it shines bright and there is no place for darkness.
The sixteen boons or blessings according to Abhirami Bhattar’s famous poem are:
பதினாறு பேறுகள்
1. Education
2. Long Life
3. Good Friends
4. Prosperity
5. Eternal youth
6. Life without diseases
7. Steady Mind
8. Ever loving wife
9. Good Children
10.Fame
11.Truthness
12.charitableness
13.Never diminishing Wealth
14.Equnomity
15.Trouble free Life
16.Devotion to God
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!
***
புறநானூறு102, பாடியவர்: ஔவையார், பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி, திணை: பாடாண், துறை:இயன் மொழி எருதே இளைய நுகம் உணராவே, சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே, அவல் இழியினும் மிசை ஏறினும் அவணது அறியுநர் யார் என உமணர் கீழ்மரத்து யாத்த சேம அச்சு அன்ன, 5 இசை விளங்கு கவிகை நெடியோய், திங்கள் நாள் நிறை மதியத்து அனையை, இருள் யாவணதோ நின் நிழல் வாழ்வோர்க்கே?
***
Puranānūru 102, Poet Avvaiyār sang for Athiyamān Nedumān Anji’s son Pokuttu Ezhini,
Not knowing what could happen, salt merchants tie spare axles to the lower wooden beams of their wagons, since the bulls are young and not acquainted with yokes, and since there are heavy loads in the wagons which climb on mounds and go down through ditches.
O lord! You are like that spare axle, a great man with cupped hands that give. You are like the full moon. How can there be darkness for those who live under your protection?
***
Item 562 Meat Eaters
Ancient Tamils were meat eaters. Here in poem 103 Avvaiyar says hat the Virali (dancer) will get if she goes to Athiyaman’s place. Another interesting Tamil word word is MANDAI. In those days it was the begging vessel and now the meaning is head.
***
Puranānūru 103, Poet Avvaiyār sang for Athiyamān Nedumān Anji,
Hanging a pathalai drum on one side, and a small, hollow muzhavu drum on another side, O virali in the wasteland with a few bangles, you wonder who will turn your dish right side up!
If you go to him, he is not far away. He is in the land of his enemies, where in the harsh battlefield, a mass of black smoke surrounds young male elephants like clouds that surround mountains.
Ānji of many spears, even in hard times, keeps the bowls of bards filled with food, meat with fat that appear like soft adais made with wax. May all his efforts prosper!
***
புறநானூறு103, பாடியவர்: ஔவையார், பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி, திணை: பாடாண், துறை:விறலியாற்றுப்படை ஒரு தலைப் பதலை தூங்க, ஒரு தலைத் தூம்பு அகச் சிறு முழாத் தூங்கத் தூக்கிக், ‘கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?’ எனச் சுரன் முதல் இருந்த சில் வளை விறலி! செல்வை ஆயின் சேணோன் அல்லன், 5 முனை சுட எழுந்த மங்குல் மாப் புகை மலை சூழ் மஞ்சின், மழ களிறு அணியும் பகைப் புலத்தோனே, பல் வேல் அஞ்சி, பொழுது இடைப்படாஅப் புலரா மண்டை மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப, 10 அலத்தற் காலை ஆயினும், புரத்தல் வல்லன், வாழ்க அவன் தாளே.
***
Item 562 Elephant and Crocodile simile
In Puram 104, Avvaiyar used the famous Gajendra Moksha scene as a simile. Crocodile attacking elephant Gajendra is sculpted all over India from Gupta period. Here Avvai used it to praise Athiyaman’s son. He is compared to a crocodile. An interesting simile.
***
Puranānūru 104, Poet Avvaiyār sang for Athiyamān Nedumān Anji,
Protect yourselves warriors! Let me tell you! My lord is like a crocodile that can drag in and slaughter an elephant in knee-deep, shallow water muddied by the playing feet of the little children in town.
If you don’t consider his acts, but despise him by saying “He is just a young man,” victory will come hard for you!
***
புறநானூறு104, பாடியவர்: ஔவையார், பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி, திணை: வாகை, துறை: அரச வாகை போற்றுமின் மறவீர்! சாற்றுதும் நும்மை! ஊர்க் குறுமாக்கள் ஆடக் கலங்கும் தாள்படு சில் நீர்க் களிறு அட்டு வீழ்க்கும் ஈர்ப்பு உடைக் கராஅத்து அன்ன, என் ஐ நுண் பல் கருமம் நினையாது, 5 இளையன் என்று இகழின், பெறல் அரிது ஆடே.
To be continued …………………
–Subham—
Tags- Avvaiyar‘s Sanskrit words; 31Purananuru wonders-31, Tamil Encyclopedia-71, Tamil’s sixteen Blessings, boons, Sanskrit words, Treatment of guests, item 562
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திராவிட அரைவேக்காடுகளுக்கு அவ்வப்போது ஒரு ஐயப்பாடு எழும் ; அந்தணர் என்பவர் பிராமணாளா அல்லது சன்யாசியா என்று. உண்மையைச் சொல்லப்போனால் இருவரும் ஒருவரே ; ஏனெனில் இருவரும் அறநெறிப்படி வாழ்பவர்கள்; மாமிசம், கள் சாப்பிடாதவர்கள் ; பொருளைச் சேர்த்து வைக்காதவர்கள் ; ஊர் ஊராகப் போய் பிழைப்பவர்கள் ; யாசகம் மூலம் உணவு பெறுவோர்; ஆயினும் துறவிகளுக்கு இல்லற வாழ்வு கிடையாது; அது ஒரு பெரிய வேறுபாடு; இதனால் அந்தணர் என்ற சொல்லை எல்லோரும் துறவிகளுக்கும் பிராமணர்களுக்கும் பயன்படுத்தினர்.
எச்சரிக்கை ; இதெல்லாம் அந்தக் கால பிராமணர் பற்றிய வருணனை !
கபிலர் என்ற புலவர் இன்னா நாற்பது என்று இன்னல் தரும் 40 விஷயங்களைப் பாடினார்; உடனே அவருக்கு எதிரொலியாக இன்பம் தரும் 40 விஷயங்களைப் பூதன் சேந்தனார் பாடினார். இந்த இரண்டு நூல்களும் சங்க காலத்துக்குப் பின்னர் சுமார் நான்கு அல்லது ஐந்தாவது நூற்றாண்டுகளில் தோன்றியவை; பூதன் சேந்தன் என்ற பெயரே சங்க காலப் பெயர் .
அவர் அந்தணர் என்ற சொல்லை இரண்டு இடங்களில் ஐயம் திரிபற பிராமணர்களுக்குப் பயன்படுத்துகிறார்
1
காவோ டறக்குளம் தொட்டல் மிகஇனிதே
ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே
பாவமும் அஞ்சாராய்ப் பற்றுந் தொழில்மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது.– இனியவை நாற்பது [23]
விளக்கம்:
சோலையுடன் கூடிய பொதுக் குளத்தை வெட்டுதல் இனிது. அந்தணர்க்குப் பசுவோடு பொன்னைக் கொடுத்தல் இனிது. பாவத்திற்கு அஞ்சாமல் சூதாடுகிறவர்களை நீக்கி வாழ்தல் இனியது.
(சன்யாசிகளுக்கு அந்தக் காலத்தில் யாரும் பசுவும் தங்கமும் தானமாகத் தருவது இல்லை)
2
அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே
தந்தையே ஆயினுந் தானடங்கான் ஆகுமேல்
கொண்டடையா னாகல் இனிது. . . . .[07]
விளக்கம்:
பிராமணர்க்கு வேதம் ஓதுதல் இனிது. இல்லறத்தாருக்கு பற்று,பாசம் இனிது. படையுடையானுக்கு வீரம் இனிது. தந்தையே ஆனாலும் அவர் கூறும் தவறானவற்றைச் செய்யாமை இனிது
***
சங்க காலத்துக்குப் பின்னர் எழுந்த அற நூல்களை பதினெண் கீழ்க்கணக்கு என்று நம் முன்னோர்கள் பிரித்துவைத்தனர் அதில் ஒன்றுதான் ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய திருக்குறள் என்பதும் ; கிட்டத்தட்ட அதே காலத்தில்தான் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் முதலிய நூல்களையும் எழுதினார்கள்.
ஒரு விஷயத்தை மறந்துவிடக்கூடாது சிலப்பதிகார நிகழ்ச்சிகள் நடந்தது சங்க காலத்தில்தான்; அதே போல தொல்காப்பியம் சொல்லும் விதிகளும் சங்க கால விதிகள்தான்; அதை யாரோ ஒருவர் தொகுத்த காலம் பிற்காலம் என்பதை எளிய நடையும் ஸம்ஸ்ருதச் சொற்களும் பல புதிய வழக்கங்களும் காட்டிவிடும்; எடுத்துக்காட்டாக சிலப்பதிகாரத்தில் நாரதர் வருகிறார்; வீணை வருகிறது. சங்க கலத்தல் இதைக் காணமுடியாது; லிங்கம், கணபதி சிவன் என்ற சொற்களைக் காண முடியாது இவை பிற்காலத்தில் வந்தவை ; இளங்கோ கூட சிவகதி நாயகன் என்பவற்றை சமணர்க்குதான் பயன்படுத்துகிறார் சிவ பெருமானுக்கு அல்ல.
இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன்; ஒரு பொருளை ஒருவர் சொல்லாததால் அது அக்காலத்தில் இல்லவே இல்லை என்று எண்ணிவிடாதீர்கள்; அதை வழக்கில் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.
பிராமணர்களுக்கு அளிக்கப்படும் 16 தானங்களில் பசுவும் தங்கமும் முக்கியம் ; இந்தோனேஷியாவின் அடர்ந்த காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மூல வர்மன் கல்வெட்டும் பூரண வர்மன் கல்வெட்டும் சம்ஸ்க்ருதத்தில் எழுதிவைத்துள்ளனர் அவரின் காலம் 1600 ஆண்டுகளுக்கு முன்! போர்னியோ தீவில் இருந்த கல்வெட்டுகள் இப்போது மியூசியங்ககளில் உள்ளன.
***
Pictures சதீசன் மோடி துலாபாரம் கொடுத்தது
செங்குட்டுவனிடம் 70 கிலோ தங்கம் வாங்கிய பிராமணன்
சிலப்பதிகாரத்தில் பிராமணன் மாடல மறையோன் என்பவன்தான் முக்கிய கதாபாத்திரம் கண்ணகி கோவலன் செங்குட்டுவன் வரலாறுகளை இணைக்கும் சங்கிலி இவன் ; அவனுடைய பங்கினை அகற்றிவிட்டால் சிலப்பதிகாரம் துண்டு துண்டாகத் தோன்றும்; செங்குட்டுவனை ஊக்குவித்து போர் செய்ய வைத்தவன் இறுதியில் யாக யக்ஞங்கள் செய் என்று அறிவுறுத்துகிறான்; இதற்காக அவனுக்கு செங்குட்டுவன் எடைக்கு எடை துலாபாரத்தில் தங்கம் கொடுத்தான் என்று சிலப்பதிகாரம் செப்பும்!
அன்மையில் புதிதாக கேரள முதல்வராகப் பொறுப்பேற்ற கங்கிரஸ் கட்சி முதலமைச்சர் சதீசன் எடைக்கு எடை வெண்ணெய் கொடுத்தார் அவருடைய எடை 71 கிலோ ; செங்குட்டுவனுக்கு 70 அல்லது 80 கிலோ இருந்திருப்பான் ஆகையால் அந்த பிராமணனுக்கு – மாடல மறையோனுக்கு அடித்தது லக்கி பிரைஸ்— Lucky Prize ! 80 கிலோ தங்கம் !
***
துலாபாரம் பிரதமர் மோடி முதல் எல்லோரும் இன்றுவரை செய்யும் சடங்கு ; குருவாயூர் மட்டுமின்றி தமிழ் நாட்டின் பல கோயில்களிலும் துலாபாரம் ‘துலா’க்களை– அதாவது தராசுகளைக் –காணலாம்.
–subham — Lucky Prize
Tags-பிராமணர், அந்தணர், துலாபாரம் இனியவை நாற்பது, பசு தங்கம் தானம், பூரண வர்மன், மூல வர்மன் கல்வெட்டுகள் இந்தோனேஷியா, பூதன் சேந்தன் புத்திமதி, செங்குட்டுவன், மாடல மறையோன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருநாவாய்
நாவாய் முகுந்தன் கோவில்
மலைநாட்டுத் திருப்பதி, கேரள மாநிலம்
திருநாவாய் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது
மூலவர் – நாவாய் முகுந்தன், நாராயணன், நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் – மலர்மங்கை நாச்சியார், சிறுதேவி.
தீர்த்தம் – செங்கமல ஸரஸ்.
விமானம் – வேத விமானம்.
ப்ரத்யக்ஷம் – லக்ஷ்மி, கஜேந்த்ரன், நவயோகிகள்.
கோவில் பாரதப்புழை ஆற்றை ஒட்டியுள்ளது. எதிர்க் கரையில் சிவனுக்கும் ப்ரஹ்மாவுக்கும் கோவில்கள் உள்ளன. இதைக் காசிக்கு ஸமானமாகக் கருதி சிராத்தங்கள் முதலியன செய்கின்றனர்.
துவாரபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இங்கு வந்து பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து, தம் முன்னோருக்கு பித்ரு பூஜை செய்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தலத்தில் பித்ரு பூஜை செய்தால் அளவிடற்கரிய புண்ணியம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
அமாவாசை நாட்களில் இத்தலத்தின் தலவிருட்சம் அடியில் பித்ருக்களுக்கு அன்னம் வைத்து வழிபடுகிறார்கள். அமாவாசையன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தலத்தின் அருகில் உள்ள பாரத புழை நதியில் நீராடி பித்ரு பூஜை செய்கின்றனர். கேரள மாநிலத்தில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பதில் இத்தலம் முதன்மை வகிக்கிறது.
இவ்விடத்தில் 9 யோகிகள் யாகம் செய்ததால் இந்த ஸ்தலம் திருநவயோகி என்று பெயர் பெற்று நாளடைவில் திருநாவாய் என்று மக்கள் வழக்கில் மாறுபட்டதாக ஐதீஹம்.
ஒரு சமயம் மஹாலக்ஷ்மியும் கஜேந்திரனும் தாமரைப் பூக்களை பறித்து பகவானை அர்ச்சனை செய்ய, கஜேந்திரனுக்கு, பூ கிடைக்காமல் பகவானிடம் முறையிட பகவான் லக்ஷ்மியை பூ பறிக்க வேண்டாம் என்று சொல்லி, லக்ஷ்மியை தன்னுடன் ஏக சிம்மாஸனத்தில் அமரச்செய்து கஜேந்த்ரன் பூஜையை எற்றுக் கொண்டதாக புராண வரலாறு. மலைநாட்டில் இந்த ஓர் இடத்தில்தான் லக்ஷ்மிக்கு தனி ஸந்நிதி உண்டு.
மங்களாசாஸனம் –
திருமங்கையாழ்வார் – 1520, 1856
நம்மாழ்வார் – 3634 -44
மொத்தம் 13 பாசுரங்கள்.
திருநாவாய் முகுந்தன் கோவில்
பெருமாளின் முழங்கால்களுக்கு கீழான பகுதி பூமியில் புதைந்துள்ள தலம் இதன் பொருட்டே இங்கே நேர்த்தி கடன் செலுத்தும் அன்பர்கள், முட்டியிட்டு பிரதட்சணம் செய்வது வழக்கம்.
***
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருநாவாய். சென்னை – கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் திருநாவாய் ரயில் நிலையம் அமைந்துள்ளது. சென்னை – கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் உள்ள இந்த
ஸ்டேஷனிலிருந்து ஊரும் கோவிலும் 1 மைல் தூரத்தில் உள்ளன. ஷோரானூரிலிருந்து பஸ்ஸில் குட்டீபுரம் வந்து அங்கிருந்து வேறு பஸ்ஸில் திருநாவாய் வந்ததும் கோயிலை அடையலாம்.
***
திருவிழா
வைகுண்ட ஏகாதசி, திருவோணம்;
இக்கோவிலில் மாமாங்கத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் திப்பு சுல்தானாலும் 1921 இல் மாப்பிள்ளைக் கலகம் நடந்த போதும் இக்கோவில் தாக்குதலுக்கு உள்ளானது
கேரளாவில் இந்த தலத்தில் மட்டும் தான் லட்சுமிக்கு தனி சன்னதி உண்டு என்கிறார்கள்.
கோயிலின் சுற்றுப்பகுதியில் கணபதி, லட்சுமி, ஐயப்பனுக்கு சன்னதிகள் உண்டு. கோயிலுக்கு எதிரே உள்ள ஆற்றின் அக்கரையில் பிரம்மனுக்கும், சிவனுக்கும் தனி கோயில் உள்ளது. எனவே இத்தலத்தை மும்மூர்த்தி என அழைக்கிறார்கள்.
***
பாசுரங்கள்
1520.
தூ வாய புள் ஊர்ந்து வந்து* துறை வேழம்*
மூவாமை நல்கி* முதலை துணித்தானை*
தேவாதிதேவனை* செங் கமலக் கண்ணானை*
நாவாய் உளானை* நறையூரில் கண்டேனே.
***
3750.
அறுக்கும் வினையாயின* ஆகத்து அவனை*
நிறுத்தும் மனத்துஒன்றிய* சிந்தையினார்க்கு*
வெறித்தண்மலர்ச் சோலைகள்சூழ்* திருநாவாய்*
குறுக்கும்வகை உண்டுகொலோ* கொடியேற்கே? (2)
3751.
கொடிஏர்இடைக்* கோகனகத்தவள் கேள்வன்*
வடிவேல் தடம்கண்* மடப்பின்னை மணாளன்*
நெடியான்உறை சோலைகள்சூழ்* திருநாவாய்*
அடியேன் அணுகப்பெறும்நாள்* எவைகொலோ!
3752.
எவைகொல் அணுகப் பெறும்நாள்?’* என்று எப்போதும்*
கவையில் மனம்இன்றி* கண்ணீர்கள் கலுழ்வன்*
நவைஇல் திருநாரணன்சேர்* திருநாவாய்*
அவையுள் புகலாவதுஓர்* நாள் அறியேனே
3753.
நாளேல் அறியேன்* எனக்குஉள்ளன* நானும்
மீளா அடிமைப்* பணி செய்யப் புகுந்தேன்*
நீள்ஆர்மலர்ச் சோலைகள்சூழ்* திருநாவாய்*
வாள்ஏய் தடம்கண்* மடப்பின்னை மணாளா!
3754.
மணாளன் மலர்மங்கைக்கும்* மண் மடந்தைக்கும்*
கண்ணாளன் உலகத்துஉயிர்* தேவர்கட்குஎல்லாம்*
விண்ணாளன் விரும்பிஉறையும்* திருநாவாய்*
கண்ஆரக் களிக்கின்றது* இங்குஎன்று கொல்கண்டே?
3755.
கண்டே களிக்கின்றது* இங்குஎன்று கொல்கண்கள்*
தொண்டேஉனக்காய் ஒழிந்தேன்* துரிசுஇன்றி*
வண்டுஆர்மலர்ச் சோலைகள்சூழ்* திருநாவாய்*
கொண்டே உறைகின்ற* எம்கோவலர்கோவே!
3756.
கோவாகிய* மாவலியை நிலம்கொண்டாய்*
தேவாசுரம் செற்றவனே!* திருமாலே*
நாவாய்உறைகின்ற* என்நாரணநம்பீ*
‘ஆஆ அடியான்* இவன் என்று அருளாயே.
3757.
அருளாது ஒழிவாய்* அருள்செய்து* அடியேனைப்
பொருளாக்கி* உன்பொன்அடிக்கீழ்ப் புகவைப்பாய்*
மருளேஇன்றி* உன்னை என்நெஞ்சத்துஇருத்தும்*
தெருளேதரு* தென்திருநாவாய் என்தேவே!
3758.
தேவர் முனிவர்க்குஎன்றும்* காண்டற்குஅரியன்*
மூவர் முதல்வன்* ஒருமூவுலகுஆளி*
தேவன் விரும்பிஉறையும்* திருநாவாய்*
யாவர் அணுகப்பெறுவார்* இனிஅந்தோ!
3759.
அந்தோ! அணுகப்பெறும்நாள்* என்றுஎப்போதும்*
சிந்தை கலங்கித்* திருமால் என்றுஅழைப்பன்*
கொந்துஆர்மலர்ச் சோலைகள்சூழ்* திருநாவாய்*
வந்தே உறைகின்ற* எம்மா மணிவண்ணா!.
3760.
வண்ணம் மணிமாட* நல்நாவாய் உள்ளானைத்*
திண்ணம் மதிள்* தென்குருகூர்ச் சடகோபன்*
பண்ணார் தமிழ்* ஆயிரத்து இப்பத்தும்வல்லார்*
மண்ணாண்டு* மணம்கமழ்வர் மல்லிகையே. ~ நம்மாழ்வார்
–subham—
Tags– திரு நாவாய்,மலைநாட்டுத் திருப்பதி, Part 45, Vishnu Temples, 108
உத்தரகாண்டத்தின் பத்தாவது ஸர்க்கமாக அமைவது ‘ராவணன் முதலியவர்கள் வரத்தைப் பெறுவது’ என்ற ஸர்க்கமாகும்.
அகஸ்திய முனிவர் ஶ்ரீ ராமரிடம் ராவணனும் அவனது சகோதரர்களும் பெற்ற வரம் பற்றி விளக்க ஆரம்பித்தார். அவர்களில் கும்பகர்ணன் பெற்ற வரத்தைப் பற்றி அவர் விளக்கமாக எடுத்துரைத்தார்.
விபீஷணனுக்கு வரம் அளித்த பின்னர் பிரம்மா கும்பகர்ணனுக்கு வரம் அளிக்கச் சித்தமானார். அப்போது தேவர்கள் எல்லோரும் பிரம்மாவை நோக்கி, “கும்பகர்ணன் துஷ்ட மனத்துடன் உலகங்களை எவ்வளவு நடுங்க வைத்திருக்கிறான் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இந்திரனுடைய நந்தவனத்தில் ஏழு அப்ஸரஸ்களும், மஹேந்திரனது பரிவார ஜனங்கள் பதின்மரும், மானிடப் பெரியோர்களும், ரிஷிகளும் இவனால் புசிக்கப்பட்டிருக்கின்றனர். ஆகவே இவனுக்கு வெளித்தோற்றத்திற்கு வரம் போல இருக்கும் ஒன்றால் அவனது அறிவு சற்று இழந்திருப்பது போன்ற வரத்தை அருள வேண்டும். இதனால் உலகங்கள் அனைத்திற்கும் நன்மை உண்டாகும்” என்று வேண்டினர்.
உடனே பிரம்மா தனது பத்தினியான சரஸ்வதியை மனதில் நினைத்தார். உடனே சரஸ்வதி தேவி அவர் முன்னால் வந்து கை கூப்பி என்ன செய்ய வேண்டும் என்று வேண்டினாள்.
பிரம்மா சரஸ்வதியை நோக்கி, “ஹே! வாணி! தேவர்கள் வேண்டிக் கொண்டபடி நீ கும்பகர்ணனின் நாக்கில் புகுந்து நடத்து” என்றார்.
தேவியும் சரி என்று சொல்லி விட்டு அமைந்தாள். உடனே பிரம்மா, கும்பகர்ணனைப் பார்த்து, “மஹாபாஹுவாகிய கும்பகர்ணா! எது மனதில் இருக்கிறதோ அந்த வரத்தைக் கேட்பாயாக” என்றார்.
கும்பகர்ண மஹாபாஹோ வரம் வரய யோ மத: |
உத்தரகாண்டம், பத்தாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 44
மஹாபாஹோ – மஹாபாஹுவாகிய கும்பகர்ண – கும்பகர்ணா! ய: – எது மத: – மனதில் இருக்கிறதோ வரம் – அந்த வரத்தை வரய – கேட்டுக்கொள் (என்றார்)
உடனே கும்பகர்ணன், “தேவதேவரே! அநேக வருஷங்கள் துயில் கொள்ள எனது கருத்து” என்றான்.
ஸ்வப்னம்து வர்ஷான்யனேகானி தேவதேவ மமேப்ஸிதம் |
உத்தரகாண்டம் பத்தாவது ஸர்க்கம் ஸ்லோக எண் 45
தேவதேவ – தேவதேவரே அநேகானி – அநேக வர்ஷானி – வருஷங்கள் ஸ்வப்னம்து – துயில்கொள்ள மம – எனது ஈர்ஷிசதம் – கருத்து
உடனே பிரம்மா ஏவம் அஸ்து – அப்படியே ஆகுக என்று வரத்தை அளித்து விட்டு அந்தர்தானமானார்.. ஸரஸ்வதி தேவியும் அகன்றாள்
கும்பகர்ணன் மனம் நொந்து, “என் வாயிலிருந்து வந்த சொல் ஏன் இப்படி ஆகியிருக்கிறது” என்று நினைத்தான்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மோதக/ம்
தமிழில் கொழுக்கட்டை என்று பொருள்; விநாயகரின் கையில் , அதாவது பிள்ளையார் கையில், இருப்பது இந்த தின்பண்டம் . பிள்ளையார் சதுர்த்தி/கணேஷ் சதுர்த்தி பண்டிகையின் போது இதைச் செய்து பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்வார்கள் ; அவருக்கு மிகவும் பிடித்த பண்டம் இது. வேகவைத்த அரிசி மாவினாலான பை போன்ற உறைக்குள் தேங்காய்ப் பூரணம் அல்லது வெல்லம் கலந்த பருப்பினை வைத்து நீராவியில் வேக வைப்பார்கள் ; பின்னர் இறைவனுக்குப் படைத்துவிட்டு இதைச் சாப்பிடலாம்; மகாராஷ்டிரா, தமிழ் நாடு மாநிலங்களில் இப்போதும் இதைச் செய்கிறார்கள் .
இதில் வேகவைத்த மாவினை கோலிக்குண்டு அளவுக்கு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கடுகு பருப்பு மிளகாய் தாளித்து செய்வதை ஊமைக் கொழுக்கட்டை என்பார்கள் ; அந்த உருண்டைகளை காரம் கலக்காமல் சர்க்கரை போட்ட பாலில் போட்டு சாப்பிடுவது பால் கொழுக்கட்டை எனப்படும். வேக வைத்த மாவிலான பைக்குள் வெல்லம் கலந்த தேங்காய்ப் பூரணத்துக்குப் பதில், காரம் நிறைந்த உளுத்தம் பருப்பு முதலியவற்றை வைத்தும் செய்யலாம். இது நைவேத்தியத்து உகந்தது அல்ல ; ருசிக்காகச் செய்யப்படும் தின்பண்டம்தான்.
மோதகம் என்ற சொல் வால்மீகி ராமாயண யுத்த்த காண்டத்தில் வருகிறது ;பத்ம புராணத்தில் கணபதிக்குப் படைக்கும் பொருள்காவே வருகிறது .
Vālmīki-Rāmāyaṇa Yuddhakhaṇḍa 131.38
Modaka (मोदक) refers to a type food-stuff used in the worship of Gaṇeśa, according to the Padmapurāṇa 1.65
***
மோக்ஷ/ம் , முக்தி , வீடுபேறு
ஜன மரண , அதாவது பிறப்பு இறப்பு, என்ற சூழலிலிருந்து விடுபடுவது வீடுபேறு ; சம்ஸ்க்ருதத்தில் இதை முக்தி என்பார்கள் ; இந்துக்களின் வாழ்க்கை நான்கு லட்சியங்களைக் கொண்டது; அவையாவன- தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் ; அதாவது அறம், பொருள், இன்பம், வீடு ; இது தொல்காப்பியம், புறநானூறு திருக்குறள் முதலிய நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இந்துக்களின் இறுதி லட்சியம் மோக்ஷம்; இதை தேவார திருவாசக திவ்யபிரபந்தப் பாடல்களிலும் பஜனைப் பாடல்களிலும் இந்துக்கள் வேண்டிக் கொள்கிறார்கள்; புத்த, சமண, சீக்கிய மதக் கோட்பாடுகளிலும் இது இருக்கிறது ; பிறவிப் பெருங்கடலிலிருந்து- சம்சார சாகரத்திலிருந்து- விடுபடுவது விடுதலை ஆகும்.
***
மூகாம்பிகை
சரஸ்வதி தேவியின் இன்னும் ஒரு வடிவம்; இந்த தேவியின் கோயில் கர்நாடக மாநிலத்தில் கொல்லூர் என்னுமிடத்தில் உளது ; துர்கா, லெட்சுமி , சரஸ்வதி, ஆகியோரின் மூலமான ஆதி பராசக்தி என்றும் சொல்லுவார்கள் ; மூகாசுரனை வதைத்ததாலும், மூகம் என்னும் ஊமைத்தன்மையைப் போக்குவதாலும் இந்தப் பெயர் . ஆதி சங்கரர் இவரை ஸ்தாபித்ததாகவும் கதை ஒன்று உள்ளது; ஆதிசங்கரர் வழிபட்ட தேவியை அவர் கேரளத்துக்கு அழைத்ததாகவும், அவர் திரும்பிப்பார்க்காமல் இருந்தால் அவரைப் பின்தொடர்ந்து வருவதாகவும் தேவி வாக்கு அளித்தாள்; அவரது நம் பிக்கையைச் சோதிக்க, தேவி ஓரிடத்தில் நின்றாள் ; காலடிச் சலங்கை ஒலி கேட்டகவில்லையே என்று சங்கரர் திரும்பிப் பார்க்கவே தேவி அங்கேயே நின்றுவிட்டாள். அந்த இடத்தில் அவளது விக்கிரகத்தையும் ஸ்ரீ சக்கரத்தையும் அவர் நிறுவினார் என்பது அந்தக் கதை ஆகும் . எம் ஜி ராமச்சந்திரன் , ஜெயலலிதா போன்ற அரசியல் தலைவர்கள் வைர வாள், தங்கக் கவசம் முதலியவற்றைக் காணிக்கையையாகச் செலுத்தியதால் தமிழ்ப் பாமரர்களுக்கு இடையேயும் இவள் புகழ் பரவியது.
***
மூக கவி
மூக கவி (Mooka Kavi) என்பவர்பிறவியிலேயே ஊமை; பின்னர் காமாட்சி தேவியின் அருளால் பேசும் திறனைப் பெற்றமகான் ஆவார். காஞ்சி காமாட்சி அம்மன் மீது 500 ஸ்லோகங்களைக் கொண்ட மூக பஞ்சசதீ என்ற ஸ்தோத்திரத்தை இயற்றினார் ‘மூகன்’ என்றால் ஊமை என்று பொருள். , தேவியின் அழகை வருணிக்கும் இந்த புகழ்பெற்ற,அற்புத நூலைப் படைத்தார்.மூக பஞ்சசதீ மொத்தம் ஐந்து பாகங்களைக் கொண்டுள்ளது:ஆர்யா சதகம்: அம்பிகையின் மேன்மைகளை விவரிக்கும் 100 ஸ்லோகங்கள்.பாதாரவிந்த சதகம்: காமாட்சியின் திருவடித் தாமரைகளை வர்ணிக்கும் 100 ஸ்லோகங்கள்.ஸ்துதி சதகம்: அம்பிகையைத் துதிக்கும் 100 பாடல்கள்.கடாக்ஷ சதகம்: தேவியின் கருணைக் கடாட்சத்தைப் போற்றும் 100 ஸ்லோகங்கள்.மந்தஸ்மித சதகம்: அம்பாளின் புன்னகையை விவரிக்கும் 100 ஸ்லோகங்கள். இவர் மூக சங்கர (398-437 CE) என்ற பெயரில் காஞ்சி சங்காராச்சார்ய மடத்தின் இருபதாவது மடாதிபதியாக இருந்தார் என்று மடத்தின் வரலாறு இயம்புகிறது ; அவரை காஷ்மீர் அரசர்கள் மாத்ரு குப்தா, பிரவர சேனன் ஆகியோரும் போற்றினார்கள்
***
முசுகுந்தன்
இந்தியாவின் வடமேற்குப்பகுதியை ஆண்ட சூரிய குல மன்னர்கள் தமிழ்நாட்டுக்கு குடியேறி சோழ வம்சஆட்சியை ஸ்தாபித்தார்கள். அவர்களுடைய முன்னோர்களில் ஒருவன் முசுகுந்தன்.மாந்தாதாவின் மகனான முசுகுந்தன் என்னும் சோழன் இந்திரனின் தலைநகரான அமராவதியைக் அசுரரிடமிருந்து காத்தான் என்றும் அதற்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான் காவல் பூதமும் ஐவகை மன்றமும் அனுப்பிவைத்தான் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது (5-65/67; 6-7/17)
சோழ மன்னர்கள் திலீபன், அரிச்சந்திரன், மாந்தாதா, முசுகுந்தன், நாபாகன், காகுத்தன், பகீரதன், தசரதன், ராமன் முதலியோர் தங்கள் குலத்தவர் என்று கூறிக்கொள்வதை கன்யாகுமரிக் கல்வெட்டும், திருவாலங்காட்டுச் செப்பேடும், கலிங்கத்துப் பரணியும், மூவர் உலாக்களும் கூறுவதைக் காணலாம்.
இமயத்தில் சின்னம் பொறித்தது, மஹாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு உதவியது, இந்திரனுக்குச் சமமாக ஆசனத்தில் அமர்ந்தது ஆகியவற்றை மூவேந்தர்களும் தாங்கள் செய்ததாகக் கூறிக்கொள்கின்றனர்.
மாந்தாதா என்ற சோழன் ஒரே துறையில் புலியும் மானும் நீருண்ணும்படி பகை நீக்கி ஆண்டான் என்றும், ஒரு சோழன் உத்தரகுரு என்னும் போகபுரியை ஆண்டான் என்றும் தமிழ் நூல்கள் கூறுகின்றன.
தமிழர்களின் ஆட்சி அவ்வளவு தூரம் பரவியிருந்தது என்று சொல்ல முயலலாம். ஆயினும் பெயர்கள் எல்லாம் சம்ஸ்கிருதத்தில், புராணத்தில் உள்ள மன்னர் பெயர்களாக இருக்கின்றன.
புறநானூற்றின் பாடல் 37, 39, 43, 46, 228 ஆகியவற்றில் சோழர்களின் முன்னோடியாக சிபிச் சக்ரவர்த்தி கூறப்படுகிறான். சிபிச் சக்ரவர்த்தியின் கதை புராண, இதிஹாசங்களிலும் பவுத்த ஜாதகக் கதைகளிலும் வருகிறது. ஒரு புறாவுக்காக தன்னையே தராசில் நிறுத்தவன் அவன். தியாகத்தின் சின்னம் அவன். மஹாபாரதம் வன பர்வத்தில் வரும் (அத்தியாயம் 200) வரும் சிபி- கழுகு, புறாக் கதையை சங்க இலக்கியம் அப்படியே கூறுகிறது.
சிபியின் வழித்தோன்றல் என்பது சம்ஸ்கிருதத்தில் ‘சைப்ய’ என்று வரும். அதைத் தமிழில் செம்பியன் என்று தமிழ்படுத்தினர். அகநானூறு பாடல் 36, நற்றிணைப் பாடல் 14 ஆகியவற்றில் சோழர்கள் செம்பியன் என்றே அழைக்கப்படுகிறான். வடமொழி ஆசிரியர்கள் தண்டி, வராஹமிகிரர் ஆகியோரும் சோழர்களை சிபியின் குடியினராகவே கருதுவர். அமராவதி, நாகார்ஜுனகொண்டா, பர்ஹுத், இந்தோநேசியாவில் போரோபுதூர் புடைப்புச் சிற்பங்களில் சிபியின் கதைகள் சித்திர வடிவம் பெற்றன.
சிபி குலத்தை ரிக்வேதமும் ,ஐதரேய பிராமணமும் குறிப்பிடுகின்றன. குறைந்தது 3500 ஆண்டுக்கு முந்தியவர்கள் சிபி குலத்தினர்.
***
முத்கல்ய ரிஷி
மௌத்கல்யர் (அல்லது முத்கலர்) என்பவர் இந்து புராணங்களின்படி நளாயினியை மணந்த ஒரு புகழ்பெற்ற முனிவர் ஆவார். வறுமையிலும் இறையச்சத்துடன் வாழ்ந்து, மோட்ச நிலையை அடைவதில் தேர்ச்சி பெற்றவர்.மௌத்கல்ய நளாயினி (இந்திரசேனை) என்ற பதிவிரதையான பெண், தன் கணவரான மௌத்கல்ய முனிவரை ஒரு கூடையில் சுமந்து சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. மௌத்கல்ய முனிவரின் வழித்தோன்றல்களே மௌத்கல்ய பிராமணர்கள் ; மேலும், சௌராட்டிர சமூகத்தின் பண்டைய கோத்திரங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த ரிஷியைச் சோதிக்க ஒரு முறை கோபக்கார ரிஷி துர்வாசர் வந்து சாப்பிட உட்கார்ந்தார்; அவர் யாரோ ஒரு யாசகர் (பிச்சை எடுப்பவர்) போல வந்தார் கடோத்கஜன், பீமன் போல வீட்டிலிருந்த எல்லாவற்றையும் சாப்பிட்டுத் தீர்த்தார். இவ்வாறு ஆறு முறை செய்தார் ; அப்போதும் முத்கல்யர் மலர்ந்த முகத்துடன் அன்னமிட்டார் . துர்வாசரும் மனம் மகிழ்ந்து தன்னுடைய உண்மை வடிவத்தை வெளிப்படுத்தினார் . அதே நேரத்தில் முத்கல்யரை அழைத்துச் செல்ல ஒரு புஷ்பக விமானம் / SPACE SHUTTLE ஸ்பேஸ் ஷட்டில் வந்தது; தேவலோகத்துக்கு வரும்படி தேவர்கள் அழைத்தனர் ; இதில் என்ன நிபந்தனைகள் என்று ரிஷி கேட்டார் ; உங்கள் புண்ணியம் தீரும் வரை நீங்க தேவலோக இன்பங்களை அனுபவிக்கலாம் என்று பதில் சொன்னார்கள் ; அப்படியா போய் வாருங்கள்; நான் சொர்க்கத்துக்கு வரவில்லை மீண்டும் நீண்ட தவம் செய்கிறேன் என்றார் ; எந்த இடத்தில் நிரந்தர சுகம் உண்டோ, எந்த இடத்திலிருந்து நாம் பிறப்பெடுக்க பூமிக்கு வருவதில்லையோ அதற்காக நான் தவம் செய்வேன் என்றும் சொல்லி விமானத்தை திருப்பி அனுப்பிவிட்டார்; இந்த சம்பவம் மஹாபாரத வனபர்வத்தில் உள்ளது .
***
முத்ரா / முத்திரை
BUDDHA COPIED HINDU RISHIS; HE NEVER REMOVED TILAK OR HIS SACRED THREAD.
முத்திரை என்பது விரல்கள், கைகள் மூலம் காட்டும் சமிக்ஞை ஆகும். இது உடலின் சக்தியை வழிப்படுத்தும் முறை அல்லது அதை அதிகரிக்கும் முறை ஆகும். அதுமட்டுமல்ல அதில் அக்குபிர்ஷர் ACUPRESSURE எனப்படும் உத்தியும் உளது; உடலில் சிலபகுதிகளுக்கு அழுத்தம் கொடுத்தால் அது ஞானம் பெறுவதற்கான நரம்புகளைச் சுண்டி விடும்.
முத்திரைகள் நாட்டியம் முதல், பூஜைகள் வரை பல இடங்களிலும் பயன்படுகின்றன. நாமும் கூட சாலைகளில் போலீஸ்காரகள் காட்டும் முத்திரைகள், காதுகேளாதோருக்கான முத்திரைகளைத் தினமும் காண்கிறோம். தியானத்தில் பயன்படுத்தும் முத்திரைகள் உயர்ந்த வகை முத்திரைகள். ரஹஸியப் பயன்பாடுள்ளவை.
பிராஹ்மணர்களும் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் முத்திரைகளைப் பயன்படுத்துவர். பதஞ்சலி யோக சாத்திரம் முதலியன முத்திரைகள் பற்றிப் பேசுகின்றன. இந்துக் கடவுளர் அபய முத்திரை அல்லது வரத முத்திரையுடன் காணப்படுவர். ஆக நம்மிடம் உள்ளவற்றை பௌத்தர்களும் ஏற்று அவைகளைப் பயன்படுத்தினர்.
‘முத்ரா விதானம்’ என்னும் ஸம்ஸ்க்ருத நூல் சுமார் 130 முத்திரைகளை வரை படத்துடன் காட்டுகிறது. இதை ராமகிருஷ்ண மடம் (மயிலாப்பூர், சென்னை) தமிழிலும் வெளியிட்டுள்ளது. அதன் மூன்று ஸ்லோகங்கள் முத்திரையின் பயன்பாட்டை (பூஜைகளில்) விளக்குகிறது. இதோ அவை:-
1.எல்லா தேவர்களையும் மகிழ்விப்பதாலும் பாவத் தொடர்பைப் போக்குவதாலும் (மோதனாத், த்ராவணாத்) முத்திரை என்று சொல்லப்படும். அது எல்லாக் காமங்களையும் அர்த்தங்களையும் (செல்வம்) தருவதாகும்.
2.தந்திரங்களில் எல்லாம் கற்பிக்கப்பட்ட முத்திரைகளை இனி கூறுவோம். அவைகளைக் காட்டுவதால் மந்திர தேவதைகள் ப்ரீதி அடைவார்கள் .
3.அர்ச்சனை, ஜபம், தியானம் முதலியவற்றிலும் காமிய கர்மங்களிலும், ஸ்நானம், ஆவாஹனம், சங்கப் பிரதிஷ்டை, ரக்ஷணம், நைவேத்யம் இன்னும் பிறவற்றிலும் அந்தந்தக் கல்பங்களில் கூறப்பட்ட முத்திரைகளை உரிய ஸ்தானங்களில், உரிய லக்ஷணங்களுடன் கண்டுகொள்ள வேண்டும்.
இதன் பின்னர் 11 தலைப்புகளில் முத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆக இவை அனைத்தும் நாம் கண்டு பிடித்து வளர்த்தவை என்பது தெளிவு:-
ஸ்ரீ குருவந்தன முத்திரைகள்; அர்கியஸ்தாபன முத்திரைகள்; அர்ச்சனையில் ஆவாஹனாதி முத்திரைகள்; நியாஸ முத்திரைகள்; ஸ்ரீவித்யா பத்து முத்திரைகள்; நிவேதன முத்திரைகள்; காயத்ரீ முத்திரைகள்; கணேச முத்திரைகள்; சிவ முத்திரைகள்; விஷ்ணு முத்திரைகள்; நானா முத்திரைகள்; முத்திரைகளின் அகராதி
புத்தர் ஒரு ‘பக்கா’ ஹிந்து. அவர் ஹிந்துவாகப் பிறந்து இந்துவாகவே வாழ்ந்தார் என்பது அவருடைய சிலைகளில் இருந்தும் பிறகாலத்தில் புத்த மதத்தினர் செய்த செயல்களில் இருந்தும் தெரிகின்றது.அவர் முகத்தில் பெரிய பொட்டு/ திலகம் இருக்கும்; தோளில் பூணுல் தொங்கும் ; இந்தோனேஷியா நாட்டில் ஜாவா தீவில் போரோபுதூரில் உள்ள புத்தர் சிலைகளில் அவர் மந்திர சக்தியுள்ள முத்திரைகளைப் பயன்படுத்தி அபூர்வ சக்திகளைப் பெற்றதை ஒரு ஜெர்மானியர் படங்களுடன் வெளியிட்டுள்ளார் .
பரத நாட்டிய சாஸ்திரத்திலுள்ள 108 முத்திரைகள் சிதம்பரம் முதலிய கோவில்களில் சிற்ப வடிவங்களில் செதுக்கப்பட்டுள்ளன உள்ளன
பழங்கால எகிப்திய சிலைகளில் தியான முத்திரை உள்ளது அபய முத்திரையும் உள்ளது புத்தர் சிலைகளைப் போல பல முத்திரைகளை காட்டும் சிலைகளும் உள்ளன (இது பற்றி நான் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுரைகளை எழுதி அது புஸ்தகமாகவும் வந்துள்ளது )
***
முரளீதரன்
கிருஷ்ணனின் பெயர் ; புல்லாங்குழலைத் தாங்கியவன் என்று பொருள் . மாடு மேய்க்கும் கண்ணனாக வலம் வந்தபோது, குழல் ஊதி மக்களையும் மாக்களையும் மயக்கிய வேணுகால லோலன் என்பதால் இந்த வடிவத்தில் கிருஷ்ணனின் படங்களும் பொம்மைகளும் சிலைகளும் எங்கும் காணப்படுகின்றன.
***
முருகன்
DR A NARAYANAN , SYDNEY, HAS TAKEN THIS PICTURE
தமிழ்க்கடவுள் என்ற சிறப்புப்பெயர் முருகனுக்கு உண்டு ; ஏனெனில் அகஸ்திய முனிவருக்கு முருகன் தமிழ் மொழியைக் கற்பிக்க, அவர் முதல் இலக்கணத்தை எழுதினார் ; இதை அருணகிரி நாதர் முதல் பாரதியார் வரைப் பாடிப் பரவியள்ளனர்.
முருகன் என்றால் அழகன் என்று பொருள்.
ஏனைய பெயர்கள் ; ஸ்கந்தன், கார்த்திகேயன், விசாகன், ஆறுமுகன், ஷண்முகன் ,குகன், குறிஞ்சிக் கிழவன்
காளிதாசன் எழுதிய குமார சம்பவ காவியத்தால் ஈர்க்கப்பட்டு வைஷ்ணவர்களான குப்தப் பேரரசர்களும் தங்களுடைய புதல்வர்களுக்கு ஸ்கந்த குப்தன், குமார குப்தன் என்ற பெயர்களைச் சூட்டினார்கள்
தொல்காப்பியத்தில் சேயோன் ஆகத் தோன்றுகிறார்; சங்க கால திருமுருகாற்றுப்படை முதல் அண்மைக்கால அவ்வையார் அருணகிரிநாதர் வரை பாடப்பட்டுள்ளார்
மாயோன் மேய காடுறை உலகமும்,
சேயோன் மேய மைவரை உலகமும்,
……………… தொல்காப்பியம்
தமிழ் நாட்டில் அறுபடை வீடுகள் எனப்படும் கோயில்களுக்கு நாள்தோறும் பல்லாயிரம் மக்கள் சென்று வழிபடுகின்றனர்
அறுபடை வீடுகள்: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்சோலை
மனைவியர் – வள்ளி, தேவசேனை ;
வாகனங்கள்- மயில், பிணிமுகம் என்னும் யானை;
கொடி- சேவல், மயில் கொடிகள்;
சடங்குகள் – பால் குடம், காவடி;
பிடித்த நைவேத்தியம் – பஞ்சாமிர்தம்;
கொன்ற அசுரர்கள்- தாரகாசுரன், சூரபத்மன் ;
***
மூலாதாரம்
மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம்,
விசுத்தி, ஆக்ஞா, ஸஹஸ்ராரம் என்று ஏழு சக்கரங்கள் உடலில் உண்டு என்று யோகசாஸ்திரங்கள் பகர்கின்றன .குண்டலினி சக்தி பாம்பு வடிவத்தில் மூலாதாரத்தில் உறைந்து கிடக்கும்; அதை மூச்சுப் பயிற்சிகளினால் — அதாவது பிராணாயாமத்தினால் –தலைக்குக் கொண்டுபோகும்போது பிரம்மானந்தம்/ பேரானந்தம் என்னும் சமாதி நிலை கிட்டும்; பாதி வழி போவதற்குள் அற்புத சக்திகள் தோன்றும்; அந்த நிலையில் மண், பெண்,பொன் ஆசைகளில் சிக்கி பாதி சாமியார்கள் சிறைச் சாலைக்குப் போய்விடுவார்கள் . தப்பித் பிழைப்பவர்கள் ராமகிருஷ்ணர், ரமணர் போல அழியாத புகழ் பெறுவார்கள்
உடலிலுள்ள சக்கரங்கள் : மனித உடலில் ஆற்றல் மையங்களாக ஏழு முக்கிய சக்கரங்கள் (மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரம்) விளங்குகின்றன. இந்த சக்கரங்களைச் சீரமைப்பதன் மூலம் ஆரோக்கியம், மன அமைதி மற்றும் ஆன்மீக விழிப்புணர்வு மேம்படுவதாகத் தமிழ் மற்றும் வேத இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
மனத்தின் ஏழு நிலைகள்
ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார்: மனம் உலக விஷயங்களைச் சிந்திக்கும் போது லிங்கம், குஹ்யம், நாபி எனும் மூன்று ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்.. அந்த நிலையில் உயர்ந்த மனோ பாவங்கள் எழுவதில்லை. காமினி காஞ்சனத்திலேயே அழுந்திக் கிடக்கும் (காமினி காஞ்சனம்= பெண் ஆசை, தங்கம்/செல்வம்/பணம் மீது ஆசை).
மனத்தின் நான்காவது ஸ்தானம் இருதயம். இந்த இடத்துக்கு மனம் வரும்போது முதன் முதலில் ஆத்ம எழுச்சி உண்டாகிறது. இந்த நிலையில் மனமானது பெண்ணாசை, பொன்னாசைகளில் ஒருபோதும் செல்வதில்லை.
மனத்தின் ஐந்தாவது ஸ்தானம் கழுத்து. அங்கு வரும்போது அஞ்ஞானம் எல்லாம் அகல்கிறது. ஆறாவது ஸ்தானம் புருவ மத்தி. அங்கு வரும்போது இரவும் பகலும் இறைவனின் திவ்ய தரிசனமே தென்படுகிறது.
தலைதான் மனத்தின் ஏழாவது நிலை. அங்கு சமாதி உண்டாகிறது. தன் நினைவே கிடையாது. உலக வியாபாரங்கள் அனைத்தும் அறவே ஒழிந்து பரமானந்தம் கிட்டுகிறது.
இந்த ஏழு ஸ்தானங்களே யோக நூல்களில் மூலாதாரம், ஸ்வாதி ஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, ஸஹஸ்ராரம் என்று கூறப்படுகின்றன.
***
மூல நட்சத்திரம்
இது 27 நட்சத்திரங்களில் ஒன்று ; திருமூலரும் சங்க காலப் புலவர் மாமூலனும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்று சொல்லலாம் ; ஆண் மூலம் அரசாளும் என்ற பழமொழி தமிழில் உள்ளது
இதோ 27 நட்சத்திரங்களின் பெயர்கள் :–
அசுவினி = பரி, புரவி, வாசி, ஐப்பசி, இரலை, புரவி, ஏறு, யாழ், தலை நாள், மருத்து நாள், சென் பூதம், குதிரை
ரோகிணி = பண்டி, மாட்டு வண்டி, உருள், வையம், ஊறல், பிரமநாள், சதி, அயன் நாள், தேர், விமானம், சகடம் (அகம் 86),
(சங்க காலத் தமிழர்கள் சகடம்/ரோகிணி நட்சத்திரம் அன்றுதான் கல்யாணம் செய்வர் என்று அகநானூறு கூறுகிறது. )
மிருகசீரிடம் = மான் தலை, மாழ்கு, மும்மீன், நரிப்புறம், பாலை வெய்யோன்.
திருவாதிரை = செங்கை, யாழ், சடை, இறைநாள் (வடமொழியில் ஆருத்ரா), மூதிரை,ஈசன் தினம்
27 நட்சத்திரங்களில் இரண்டே நட்சத்திரங்களுக்கு மட்டுமே (திரு+ஆதிரை, திரு + ஓணம்) திரு என்ற சிறப்பு அடைமொழி உண்டு. இது பற்றி காஞ்சி மஹா ஸ்வாமிகள் ஆற்றிய சொற்பொழிவினைப் படிக்க)
உத்திரட்டாதி = மன்னன், அறிவன் நாள், பிற்கொழுங்கோல் (உத்திரப் ப்ரோஸ்தபத);
ரேவதி = இரவி நாள், கலம், தோணி, நாவாய், தொழு, பஃறி, ஆ நாள், கடை நாள், சூலம், பெரு நாள், பூடா நாள், கடை மீன்;
என் கருத்துக்கள்:
ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் உரிய வேத கால தெய்வங்களின் பெயர்கள் இப்பட்டியலில் உள.
சில விண்மீன்களின் பெயர்கள் வேறு பல விண்மீன்களுக்கும் வரும்.
பல பெயர்கள் போலக் காணப்பட்டாலும் அவை எல்லாம் ஒருபொருள் குறித்த பல சொற்களே. எடுத்துக்காட்டாக தீ என்பதற்கான — அங்கி, அழல், தழல், எரி போன்ற பல சொற்களால் — கார்த்திகை நட்சத்திரம் குறிக்கப்படுவதைக் காண்க. ஆகவே பட்டியலைச் சுருக்க முடியும்.
மேலும் வட நாட்டில் நீண்ட காலமாக 27 நட்சத்திரங்களுக்கும் போடும் படமும் பல சொற்களும் ஒரே மாதிரி இருக்கின்றன.
பல நட்சத்திரங்கள், சில கிரகங்களுடனும், சில மாதப் பெயர்களுடனும் தொடர்பு படுத்திருப்பதை நோக்குக.
7) Punarvasu – Castor, Pollux with Procyon Alpha, Beta, Gemini-Alpha Canis Minor respectively புனர் பூசம்
8) Pushya – Gama, Delta and Theta of Cancer பூசம்
9) Ashlesha – Delta, Epsilon, Eta, Rho and Zeta Hydra ஆயில்யம்
10) Maagha – Regulus, Alpha, Ela, Gama, Zeta My and Epsilon Leonis மகம்
11) Poorva Phalkuni – Delta and Theta Leo பூரம்
12) Utra Phalkuni – Beta and 93 Leo உத்தரம்
13) Hasta – Delta, Gama, Eta, Virgo ஹஸ்தம்
14) Chitraa – Spica, Alpha Virgo சித்திரை
15) Swaati – Arcturus – Alpha Bootes ஸ்வாதி
16) Vishaakha – Alpha, Beta etc Libra விசாகம்
17) Anuraadha – Beta, Delta, Pi –Scorpia அனுஷம்
18) Jyestha – Antares Alpha, Sigma Tau Scorpio கேட்டை
19) Mula – Scorpio, tail stars மூலம்
20) Poorvaashadaa – Delta and Epsilon Sagittarius பூராடம்
21) Uttaraashaada – Zeta and Omicron Sagittarius உத்திராடம்
22) Shraavanaa – Altair – Alpha Aquila திரு ஓணம்
23) Dhanishtha – Delphinus அவிட்டம்
24) Shatabhisak – Lambda Aquarius சதயம்
25) Poorva Bhaadrapada – Alpha and Beta Pegasus பூரட்டாதி
26) Uttara Bhaadrapada – Gama Pagasus and Alpha Andromeda உத்திரட்டாதி
27) Revathi – Zeta Piscum ரேவதி
–Subham—
Tags – முருகன், மோக்ஷ, மூககவி, முத்ரா , மூலம் ,மூல நட்சத்திரம் HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 70; இந்து மத கலைச்சொல் அகராதி-70, 27 நட்சத்திரங்களின் பெயர்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருச்செங்குன்றூர் (திருச்சிற்றாறு)
மலைநாட்டுத் திருப்பதி
Part 44
மூலவர் – இமையவரப்பன், நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.
தாயார் – செங்கமலவல்லி.
தீர்த்தம் – சங்க தீர்த்தம், திருச்சிற்றாறு.
விமானம் – ஜகஜ்ஜோதி விமானம்.
ப்ரத்யக்ஷம் – ருத்ரன் (சிவன்)
பாரத யுத்தத்தில் துரோணரைக் கொல்வதற்காக தர்மன் ஒரு பொய் கூறினான். அஸ்வத் தாமன் யானை இறந்துவிட்டது என்று சொல்ல வேண்டிய தர்மன் அஸ்வத்தாமன் என்ற சொல்லைப் பலமாக கூவி யானை என்ற சொல்லை மிக மெல்லிய சப்தத்தில் உச்சரித்தான். இதனால் போரில் துரோணாச்சாரி கொல்லப்பட்டார்.
தன் குருவான துரோணரை யுத்தத்தில் கொல்வதற்கு பொய் சொன்னது தர்மபுத்ரரின் மனதை வருத்தியபடியால், இத்தலத்திற்கு வந்து ஆலய ஜீர்ணோத்தாரணம் செய்து, திருசிற்றாற்றில் ஸ்நானமும் பகவத் பூஜையும் செய்து, மனநிம்மதி அடைந்ததாக வரலாறு. தர்மபுத்ரர் ஜிர்ணோத்தாரணம் செய்ததால், தர்மபுத்ரர் ப்ரதிஷ்டை என்பர்.
(அஸ்வத்தாமன் என்ற) யானை இறந்து விட்டது =”அச்வத்தாமா ஹத” என்று உரக்கச் சொல்லி “குஞ்ஜர” (Elephant) என்ற சொல்லை மிக மெல்லிய சப்தத்தில் உச்சரித்தான்).
தலபுராணம்: திருச்செங்குன்றுர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருச்சிற்றாற்று மகாவிஷ்ணு கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலம் மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களுள் தருமரால் கட்டப்பட்ட தலம் எனக் கருதப்படுகிறது.
இக்கோயிலின் இறைவன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் இமையவரப்பன் என்ற பெயருடன் காட்சி தருகிறார். தருமன் இங்கு வருவதற்குப் பல்லாண்டு முன்பே இத்தலம் சிறப்புற்றிருந்தது எனலாம். இமையவர்கள் (தேவர்கள்) இங்கே குழுமியிருந்து திருமாலைக் குறித்து தவம் புரிந்தனர் என்றும் அவர்களுக்கு திருமால் இவ்விடத்து காட்சி தந்ததால் “இமையவரப்பன்” என்ற பெயர் இறைவனுக்கு உண்டாயிற்றென்றும் செவிவழிச் செய்திகளாகவே அறியமுடிகிறது.
***
எங்கள் செல்சார்வு யாமுடையமுதம்
இமையவரப்பன் என்னப்பன்
பொங்கு மூவுலகும் படைத்தளித்தழிக்கும்
பொருந்து மூவுருவன் எம்மருவன்
செங்கயலுகளும் தேம்பனை புடைசூழ்
திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியானல்லால்
யாவர் மற்று என் அமர்துணையே
(3481) திருவாய்மொழி 8-6-2
என்று நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருச்செங்குன்றூர் என்ற
பெயரில் சிறந்த நகரமாக விளங்குகிறது. செங்குன்றூர் என்றால்தான் யாருக்கும்; எளிதில் விளங்கும். திருவல்லாவில் இருந்து இவ்வூர் வழியாக திருவாறன்விளை திவ்யதேசமான ஆரமுளாவிற்குப் பல பேருந்துகள் செல்கின்றன.
இங்குள்ள பேருந்து நிலையத்திலிறங்கி சிற்றாறு என்றோ அல்லது தர்மரால் கட்டப்பட்ட அம்பலம் எங்குள்ளது என்றால் எளிதில் பாதை காட்டிவிடுவார்கள். பேருந்து நிலையத்திலிருந்து நடந்தே வந்து நதியைக் கடந்து (தற்போது மேற்கு திசையில் சுமார் 2 பர்லாங் சென்றால் இத்தலத்தை அடையலாம்.]
மாநிலம்: கேரளம் மாவட்டம்: ஆலப்புழா
***
1. இந்த நகரத்தின் பெயர் செங்குன்றூர். இங்கே பாயும் நதியின் பெயர் சிற்றாறு. எம்பெருமானின் திருநாமம் இமையவரப்பன். தலைப்பிலிட்ட பாடலில் நம்மாழ்வார் மூன்று பெயர்களையும் எடுத்தாண்டுள்ளார்.
2. இன்றும் இந்தச் சிற்றாறு ஒரு சிறு நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது.
பிரம்மாண்டமான கட்டிடமாக ஒரு காலத்தில் இத்தலம் இருந்திருக்க வேண்டும். தற்போது சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
3. கோவிலின் சுற்றுப்பிரகாரங்களில் வர்ணம் கலந்த தீபங்கள்
அகல்விளக்கு போல வரிசை வரிசையாக அமைந்துள்ள காட்சி காண்பதற்கு பேரழகு வாய்ந்தது.
***
மங்களாசாஸனம் –
நம்மாழ்வார் – 3480-90 – 11 பாசுரங்கள்.
3596.
வார்கடா அருவி யானை மாமலையின்* மருப்புஇணைக் குவடுஇறுத்துஉருட்டி*
ஊர்கொள் திண்பாகன் உயிர் செகுத்து* அரங்கின் மல்லரைக்கொன்று சூழ்பரண்மேல்*
போர்கடா அரசர் புறக்கிட* மாடம்மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த*
சீர்கொள்சிற்றாயன் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே (2)
3597.
எங்கள் செல்சார்வு யாமுடைஅமுதம்* இமையவர் அப்பன் என்அப்பன்*
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
31-5-26 தீபம் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
தர்மத்தின் வழியில் நடந்து இறைவனின் நாமத்தை உச்சரித்து நூறு ஆண்டுகள் வாழ்வீராக! – ஶ்ரீ சத்ய சாயிபாபாவின் அருளுரை!
ச. நாகராஜன்
22-8-2001 விநாயக சதுர்த்தி தினத்தன்று ப்ரசாந்தி நிலையத்தில் பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா ஆற்றிய அருளுரை:
ஆரம்பத்தில் ப்ரசாந்தி நிலையத்தில் சேஷகிரிராவ் இருந்தார். அவர் ஒரு பெரிய அதிகாரி. அவர் ஆரத்தி எடுப்பார். அவர் நூறு வருடங்கள் வாழ்ந்தார். இன்னொருவர், கிஷ்டப்பா என்று அவருக்குப் பெயர் சேஷகிரிராவுக்குப் பின்னால் வந்தவர் மறைந்து விட்டார். அவர் வெகு தூரத்திலிருந்து கால்நடையாக வருவார். பஜனை முழுவதிலும் இருந்து கலந்து கொள்வார். பின்னர் ஸ்வாமிக்கு ஆரத்தி எடுப்பார். அவரும் நூற்றியோரு வருடங்கள் வாழ்ந்தார். வேங்கடகிரியிலிருந்து வந்த பெரிய ஆளுமை கொண்ட சுரய்யா ஆறு அடி மூன்று அங்குல உயரம் இருப்பார்.அவரும் இங்கு இருந்தார். அவர் மிகவும் பிரபலமானவரும் கூட. இரவில் ஸ்வாமி ஓய்வெடுக்கும் போது அவர் ஸ்வாமியின் பாதங்களைப் பிடித்து விடுவார். ஸ்வாமி அவரிடம், “சுரய்யா, எனது பாதங்கள் வலிக்கவில்லை. நீ அதை அமுக்கிப் பிடிக்க வேண்டாம்” என்று கூறும் போது, அவர், “ஸ்வாமி. உங்களுக்கு வலி இல்லை. ஆனால் நான் பிடிக்கவில்லை என்றால் எனக்கு வலிக்கிறது. ஆகவே நான் உங்களின் பாதங்களைப் பிடிக்க விடுங்கள்” என்பார். ஸ்வாமி கண்களை மூடிய பிறகு அவர் அறையை விட்டு வெளியே செல்வார். இந்த வேலையை அவர் வாழ்நாளில் கடைசி நாள் வரை செய்தார். அவரும் நூறு ஆண்டுகள் வாழ்ந்தார். காருண்யாநந்த ஸ்வாமிகளும் நூறு ஆண்டுகள் வாழ்ந்தார். கஸ்தூரி மிகவும் சீக்கிரமாகவே இறந்திருக்க வேண்டும். ஆனால் ப்ரசாந்தி நிலையத்திற்கு வந்த பிறகு அவர் தொண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்தார்.
யாரெல்லாம் இங்கு வருகிறார்களோ அவர்கள் நீடித்து வாழ்வார்கள். இதன் காரணம் என்ன? அவர்கள் எப்போதும் கடவுளை நினைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதுவே அவர்களுக்கு நீடித்த வாழ்வைத் தருகிறது.
சிலர் ஜாகிங் செய்து கொண்டு, ஒரு பயனும் இல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகள் வரும் போது அவர்கள் ஸ்வாமியிடம் வந்து பிரசாதம் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை இப்படி கழிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆட்கள் மிகவும் அதிகமாக இருக்கிறார்கள். இன்றைய நாட்களில் இளைஞர்கள் குரங்கு மனத்தைக் கொண்டிருக்கிறார்கள். குரங்கு மனத்தை விட இன்னும் மோசமான மனத்தைக் கொண்டிருக்கிறார்கள். எதைச் சொன்னார்களோ அதை அடுத்த நிமிடமே மறக்கிறார்கள். நாக்கிற்கு எலும்பில்லை. ஆகவே அது எப்படி வேண்டுமானாலும் சுழலும்.
நீங்கள் செய்த சத்தியத்தை இறக்கும் வரை காப்பாற்ற வேண்டும். பல பேர்கள் ஸ்வாமியிடம் வந்து, “ஸ்வாமி! எனது பற்கள் விழுகின்றன. எல்லாப் பற்களையும் இழந்த பிறகு என்ன பயன்?”என்கின்றனர்.
ஸ்வாமி அவர்களிடம், “நீங்கள் பற்களை இழக்கலாம். ஆனால் நாக்கு இருக்கிறதே” என்று சொல்வார்.
எல்லாப் பற்களும் வலிமையானவை. வலிமையானவை முன்னால் போகும். மென்மையான நாக்கு இன்னும் இருக்கும். நீ மறையும் போது நாக்கும் போய்விடும். நாக்கை நன்கு பாதுகாக்க வேண்டும். ஆகவே தான், “உன்னால் எப்போதுமே பணிந்து போய்க்கொண்டிருக்க முடியாது; ஆனால் எப்போதுமே பணிவாகப் பேச முடியும்” என்று சொல்லப்படுகிறது.
மென்மையாகப் பேசுங்கள். இனிமையாகப் பேசுங்கள். சத்தியத்தைப் பேசுங்கள். தர்மத்தைக் கடைப்பிடியுங்கள். இறைவனின் நாமத்தைப் பாடுங்கள். அதை மற்றவர்களைக் கேட்கச் செய்யுங்கள். எதற்காக நாக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது தெரியுமா? எல்லாவற்றையும் சாப்பிடுவதற்காகவா? அல்லது சந்து பொந்துகளில் சுற்றிக் கொண்டிருப்பதற்காகவா? உடலில் உள்ள ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒரு குறிக்கோள் உண்டு. நீங்கள் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். சரியான செயல்களைச் செய்ய வேண்டும். புனிதமான செயல்களைச் செய்வதற்காகவே உடல் பரிசாக அளிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் ஒருபோதும் அதர்மவழியில் செல்லக் கூடாது. ஒருபோதும் தப்பானவற்றைச் சொல்லக் கூடாது. உங்கள் உடல் தர்ம வழியிலேயே அடி எடுத்து வைத்து நடக்க வேண்டும். ஸ்வாமி உங்களை நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Two of the following Kural couplets expose modern Dravidian translators.
In Kural 96, The first line அல்லவை தேய, அறம் பெருகும்will remind everyone paritranaya sadhunam vinashaya cha dushkritam dharma-sansthapanarthaya sambhavami yuge yuge
परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम्“To protect the righteous, to annihilate the wicked and to establish righteousness/Dharma “ said by Lord Krishna in the Bhagavad Gita.(IV- 8)
Kural 98 is about this birth and the next birth; modern Dravidian translators avoid Rebirth and give wrong interpretation.மறுமையும் இம்மையும் இன்பந் தரும்
English commentators stick to old and correct interpretations. This helps us to expose fraudulent commentators.
***
Following Translations are used:
1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933
2.S M Diaz, I G of Police- SMD Year 2000
3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886
4.Suddhananda Bharathiyar- SB
5.EVS Publishers, Singapore- EVS. Year 1986
6.H A Popley – HAP (not full book) Year 1931
7.Tamil Original
****
Abhishekam to Valluvar
Chennai Mylapore Tiru Valluvar Temple Now.
Part 20
Chapter 10 இனியவை கூறல்kind words; Pleasing speech or Courtesy;
1.2.6 The Utterance of Pleasant Words
96.In him does the force of evil decline and seeds of God like virtue grow, who hungering for righteousness sweetly does speak— ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933
***
96.If one seeks always to do good by pleasant speech,
Virtues will flourish and sins will disappear– S M Diaz, I G of Police- SMD Year 2000
***
96. Who seeks out good, words from his lips of sweetness flow; In him the power of vice declines, and virtues grow. If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase.- Rev.Dr.GU Pope – GUP. Year 1886
***
96.His sins vanish, his virtues grow Whose fruitful words with sweetness flow– Suddhananda Bharathiyar- SB
***
96.If a man utters well considered pleasing words, he will grow in virtue while his sin will decrease— EVS Publishers, Singapore- EVS. Year 1986
***
96.Evil will fade and good will grow in him
Who seeking good, speaks kindly words H A Popley – HAP (not full book) Year 1931
***
96. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
Tamil Nadu Governor salutes Tiru Valluvar 97.Do you know what kindles the spark of righteousness in man and lights up the path beyond his grave? It is the kind word that scatters peace and good-will to all mankind— ANM+2
***
97.Pleasant words from a well-mannered man will do
Good to others and generate blessings– SMD
***
97. The words of sterling sense, to rule of right that strict adhere, To virtuous action prompting, blessings yield in every sphere. That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world). – GUP
***
97.The fruitful courteous kindly words Lead to goodness and graceful deeds– SB.
***
97.Pleasing speech of good effect is productive of righteousness and virtue— EVS
***
Not translated by H A Popley – HAP (not full book) Year 1931
***
97. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
True Picture of Tiru Valluvar; Now Dravidians have changed it.
98.Blessings await a man both in heaven and on earth from whose lips do tenderly fall artless words— ANM+2
***
98.Kind words free from meanness, confer blessings
In this world as well as the next– SMD
*** 98. Sweet kindly words, from meanness free, delight of heart, In world to come and in this world impart. Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next. – GUP
***
98.Kind words free from meanness delight This life on earth and life the next –SB
***
98.Pleasing words which do no harm to others will give happiness to a man in this world and in the next— EVS
***
98.Kind speech, from meness free, will bring great joy,
Both in this life and in the life beyond- HAP ***
98. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பந் தரும்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
Valluvar in Mauritius Island
99. What would it profit a man to be bitter of tongue who has seen eyes sparkle with delight at the gentle dew drops of speech?- ANM+2
***
99.When a man knows that kind words bring joy and happiness
Why should he resort to harsh words?— SMD
***
99. Who sees the pleasure kindly speech affords, Why makes he use of harsh, repellent words? Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ? – GUP
***
99.Who sees the sweets of sweetness here To use harsh words how can he dare? — SB
***
99.Wherefore should a man use harsh words who has himself experienced the joy of hearing pleasing words— EVS
*** 99.why does a man speak bitter words,
When he has seen the joy that kind words give?- HAP
****
Valluvar Family
99. இன் சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
100.Behold the man that is harsh of tongue oblivious of the charms of pleasant discourse. He is one yearning for unripe fruits, while clusters of mellow ones do adorn his cottage wall— ANM+2
***
100.Using harsh words instead of kind ones, is like going in
For raw fruits, when ripe ones are available—SMD
*** 100. When pleasant words are easy, bitter words to use, Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose. To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe. – GUP
***
100.Leaving ripe fruits, the raw he eats Who speaks harsh words when sweet word suits– SB.
***
100.Using harsh words, when pleasing words are available, is like eating green fruits while there are ripe ones—EVS
*** 100.To use harsh words when kind words are at hand
Is picking unripe fruit where ripe fruit hangs—HAP