முருகப் பெருமானும் எண்களும்: ஒரு ‘க்விஸ்’ (Post No.2769)

thanga murukan

Compiled by london swaminathan

 

Date: 30 April 2016

 

Post No. 2769

 

Time uploaded in London :– 6-46 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

நீங்கள் முருக பக்தரா? எங்கே, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் பார்ப்போம். இதில் பத்துக்கு பத்து கிடைக்கவில்லையென்றால் நான் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதே பிளாக்கில் போட்ட 25-க்கும் மேலான கேள்வி பதில்களுக்குப் போங்கள். ஏதாவது ஒன்றிலாவது நூற்றுக்கு நூறு எடுக்க முடிந்தால் நீங்கள் மெத்தப் படித்தவர். மிகவும் குறைவாக மதிப்பெண்கள் கிடைத்தால் மெதுவாகப் படிப்பவர்கள்!!!

muruga,doddappalapura,karnataka

1.முதலில் ஒன்று என்ற எண்ணுடன் துவங்குவோம். எந்த ஓரெழுத்து மந்திரத்தின் பொருளை சிவனுக்கு முருகன் உபதேசித்தார்? எங்கு?

 

2.முருகனுக்கு எத்தனை மனைவியர்? யார் அவர்கள்?

 

3.திருத்தணியில் எத்தனை படிகள் உள்ளன?

4.கதிர்காமத்தில் எத்தனை திரைகள் உள்ளன?

5.நமக்கு திருப்புகழ் பாடல்கள் எவ்வளவு கிடைத்துள்ளன?

6.பழனியிலுள்ள முருகன் சிலை எத்தனை பொருட்களால் ஆனது?

7.முருகப் பெருமானுடன் தொடர்புடைய முக்கிய எண் எது?

8.பழனி மலையில் எத்தனை படிகள் ஏறிச் சென்றால் முருகனை தரிசிக்கலாம்?

9.மலேசியாவில் பத்துமலைக் குகைக் (Batu Caves) கோவிலில் எத்தனை படிகள் இருக்கின்றன?

10.நக்கீரரை பிடித்த பூதம் அவரை எத்தனையாவது ஆளாகப் பிடித்தது?

 

mayil murugan

விடைகள்: 1.ஓம், சுவாமி மலை 2.இரண்டு மனைவியர்:வள்ளி, தெய்வானை 3. மொத்தம் முன்னூற்று அறுபத்தைந்து படிகள் 4.ஏழு திரைகள்  5.அருணகிரிநாதர் பாடியது 16,000க்கும் மேலான  திருப்புகழ் பாடல்கள்; இன்று பட்டியலிடப்பட்டவை 1334; யாரேனும் 1300 அல்லது அதற்கு நெருங்கிய எண் சொன்னால் முழு மதிப்பெண். 6.நவபாஷாணம் எனப்படும் ஒன்பதுவகை மருந்துப் பொருட்களால் ஆன சிலை என்பது  ஐதீகம் 7.முருகப் பெருமானுடன் மிகவும் தொடர்புடைய எண் ஆறு; அவன் பெயரே ஆறுமுகன், ஷண்முகன், அவனது புகழ்பெற்ற தலங்கள் ஆறு படைவீடு, அவனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர்; அவனது யந்திரம் அறுகோணம் 8.பழனியின் படிகள் 689 அல்லது 690 என்ற இரண்டும் சரியே; நாம் கடைசி படியைக் கோவிலாகவோ அல்லது அதையும் ஒரு படியாகவோ எண்ணலாம் 9.பாட்டு கேவ்ஸ் (Batu Caves) என்றும் பத்துமலை என்றும் அழைக்கப்படும் மலேசியாவின் புகல் மிகு முருகன் கோவிலில் 272 படிகள் உள 10. குகையில் 999 பேரை அடைத்து வைத்து ஆயிரமாவது ஆளாக நக்கீரரைப் பிடித்தது ஒரு பூதம்; அப்போது அவர் முருகன் அருள் வேண்டிப் பாடியதே திருமுருகாற்றுப்படை..

 

Earlier Quiz posted by me:
(1&2) 27 Star Quiz (In English and Tamil)
(3&4)Hindu Picture Quiz-1 (In English and Tamil)
5.தமிழ் தெரியுமா? Tamil Quiz—1
6.தமிழ் தெரியுமா? Tamil Quiz—2
7.Tamil Quiz—3 தமிழ் தெரியுமா?
8.Hindu Tamil Quiz (in Tamil)
9.Hindu Tamil Quiz (in Tamil)-2
10.Hindu Tamil Quiz (in Tamil)-3
11.Hindu Tamil Quiz (in Tamil)-4
12.Hindu Quiz–1
13.Hindu Quiz–2
14.Hindu Quiz–3
15.Hindu Quiz–4
16.Hindu Quiz on Holy Forests
17.காடுகள் பற்றி இந்து மதம்: கேள்வி பதில்
18.ராமாயண வினா விடை
19.பிள்ளையார் பற்றி வினா விடை
(20&21)Quiz on Saivaite Saints (Both Tamil and English)
22.சைவம் பற்றி வினா விடை
23 & 24) Quiz on Hindu Hymns in English and Tamil
25. Are you familiar with Number Four?
26. நீங்கள் நாலும் தெரிந்தவரா?

murugan vattam
Contact swami_48@yahoo.com

படிப்பது எப்படி? (Post No.2768)

e bay reading statue

Written  BY S NAGARAJAN

Date: 30 April 2016

 

Post No. 2768

 

 

Time uploaded in London :–  5-23 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

சமஸ்கிருத செல்வம்

 

 

ச.நாகராஜன்

kids-Reading-Books-group-1

சபையிலாகட்டும் தனியாகவே படிப்பதாகட்டும் எப்படிப் படிப்பது.? அதற்கு 6 குறைகளை அகற்றிப் படிக்க வேண்டும் என்று பாணிணீய சிக்ஷா கூறுகிறது.

 

  • ஏற்றியும் இறக்கியும் கண்டபடி உச்சரிக்கக் கூடாது
  • வேக வேகமாகப் படிக்கக் கூடாது
  • படிக்கும் போது தலையை ஆட்டிப் படிக்கக் கூடாது
  • எழுதியபடி படிக்கக் கூடாது (இலக்கணப் பிழைகளுடன்)
  • எதைப் படிக்கிறோமோ அதை நன்கு புரிந்து கொள்ளாமல் படிக்கக் கூடாது
  • தாழ்ந்த குரலில் படிககக் கூடாது (கணீரென்ற குரலில் அனைவரையும் கவரும் வண்ணம்) படிக்க வேண்டும்

செய்யுளைப் பார்ப்போம்:-

கீதோ ஷீக்ரீ சிரக்கம்போ ததா லிகித பாடக: |

   அனர்த்தக்ஞோல்ப கண்டச்ச ஷடதே பாடகாதமா: ||

 

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை அழகாக எஸ்.பி. நாயர் (S B Nair) செய்துள்ளார் இப்படி:-

 

One who reads in a sing-song manner, reads too quickly, shakes his head while reading, reads as written (without correcting scribal errors), does not understand the sense, and has a faint voice – all these six are inferior reciters (readers)

பழைய கால குருகுல முறையில் இந்த ஆறு பிழைகளையும் ஆரம்பத்திலேயே திருத்தி விடுவார்கள்.

 

ஆக படிப்பதிலும் சரியான முறை ஒன்று உண்டு; அதைச் செய்க என்கிறது பாணிணி சிக்ஷா!

statue reading, gift

–subham–

**************

 

அர்ஜுனன் சபதமும், ராமன் சபதமும் (Post No.2766)

arjuna, bali, indonesia

PICTURE: ARJUNA IN INDONESIA

Translated by london swaminathan

Date: 29 April, 2016

Post No. 2766

Time uploaded in London :–  8-33

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

அர்ஜுனன் உறுதி மொழி (பிரதிக்ஞா)

ந தைன்யம் – என்றும் பரிதாபத்துக்குரிய நிலையை அடையமட்டேன்

ந பலாயனம் – என்றும் புறமுதுகு காட்ட மாட்டேன் (போரில்).

 

“அர்ஜுனஸ்ய பிரதிக்ஞே த்வே ந தைன்யம் ந பலாயனம்”

Xxx

tiruvallur rama

ஒரே சொல், ஒரே அம்பு

தத் ப்ரூஹி வசனம் தேவி ராக்ஞா யதபிகாங்க்ஷிதம்

கரிஷ்யே ப்ரதிக்ஞாதே ச ராமோ த்வினார்பிபாஷதே

வால்மீகி ராமாயணம், அயோத்யா காண்டம், 18-30

 

தேவி! நீ சொல். அரசனால் விரும்பப்பட்டராமன், இரண்டாவது முறை அம்பு தொடுப்பதுமில்லை; இரண்டாவது தடவை உறுதிமொழி செய்வதுமில்லை.

 

ராமனுக்கு சொல் ஒன்றே; அதிலிருந்து மாற மாட்டான். அதே போல அவன் ஒரு வில் விட்டால் போதும்; எதிரிகள் வீழ்வர். அதற்குப்பின், மற்றொரு அம்பைத் தொடுக்கும் தேவையே இராது.

 

த்வி: சரம் நாபிசந்தத்தே ராமோ த்விநார்பிபாஷதே— மஹாநாடகம்

இரண்டாவது அம்பு தொடுப்பது இல்லை; இரண்டாவது சொல் பேசுவதுமில்லை.

 

கைகேயி, சீதை, பரதன், அனுமன், சுக்ரீவன்,குகன், விபீஷணன் ஆகிய எல்லோருக்கும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினான்.

இந்த இப்பிறவியில் சிந்தையாலும் இரு மாதரைத் தொடேன் (மனதாலும் மற்ற பெண்களை நினைக்க மாட்டேன் என்று சீதைக்கு வாக்குக் கொடுத்தான்). அதனால் தான் ராமர் இருக்கும் இடத்தில் காமன் இருக்க மாட்டான் என்பர் பெரியோர். மண், பெண், பொன் ஆசையைத் துறந்தவன் அவன். இலங்கையின் பொன்மயமான கோட்டைகளை லெட்சுமணன் புகழ்ந்த போது “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” (ஜனனி ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரீயசி)

இந்த உறுதி மொழிகளால்தான் வில்லுக்கு விஜயன், சொல்லுக்கு ராமன் என்று உலகம் புகழ்கிறது.

xxx

 

RAMA ARCH

முந்தைய கட்டுரை

ராமனுக்கு ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் !!!

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 2 by ச.நாகராஜன்; Post No 1635; Dated 9th February 2015

 

–Subham—

 

 

வடகலை, தென்கலை நாமம் பற்றிய சர்ச்சை! (Post No. 2763)

truman1

Compiled by london swaminathan

Date: 28 ஏப்ரல், 2016

 

Post No. 2763

 

Time uploaded in London :–  19-40

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

தங்க யானை நாமம், குடை

1945 ஆம் ஆண்டில் தினமணிப் பத்திரிக்கை வெளியிட்ட நூலிலிருந்து இக்கட்டுரையை எடுத்துள்ளேன். இதற்கு முன் பிரிட்டிஷ் லைப்ரரியிலிருந்து எடுத்த ஒரு பெரிய தொகுப்பில், யானைக்கு நாமம் போடுவது பற்றி எழுந்த கோர்ட் வழக்கு சம்பந்தமான வாதப் பிரதிவாதங்களை பேஸ்புக்கில் வெளியிட்டேன்( சுமார் 20 பக்கங்களை மட்டும்). இது அக்காலத்தில் நடந்த பெரிய வழக்கு. பத்திரிக்கைகள் வாதப் பிரதிவாதங்களை வெளியிட்டன. இந்துமதத்தை வசைபாடிய திராவிடக் கட்சிகளுக்கு அப்போது இந்த வழக்கு, ‘வெறும் வாயை மென்றவர்களுக்கு அவல்’ போல வந்து சேர்ந்தது.

இதோ கோயில் பூனைகள் என்ற புத்தகத்திலிருந்து எடுத்த நாமச் சண்டை:–

 

vatakalai, tenkalai

 

tiruman2

 

tiruman3

 

tiruman4

 

tiruman5

 

tiruman6

 

tiruman7

 

tiruman8

 

tiruman9

–சுபம்–

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! -3 (Post No.2762)

buddha polished

Written  BY S NAGARAJAN

Date: 28 April 2016

 

Post No. 2762

 

 

Time uploaded in London :–  5-44 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

(இதற்கு முன்னர் வேதபிராயம் வகுத்த நூறு வயது வாழ்ந்த நால்வரைப் பற்றிய  கட்டுரைகள் படித்தவர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து! இப்போது120 வயது வாழ்ந்த புத்த துறவி ஸூ யுன் பற்றிய மூன்றாவது கட்டுரை இது.)

 

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! -3

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னின் தந்தைக்கு மகன் சங்கத்தில் சேர்ந்து புத்த தர்ம பிரசாரத்தில் ஈடுபட விரும்புவது நன்கு புரிந்து விட்டது.

வேங் என்ற ஆசிரியரை நியமித்து தாவோ புத்தகங்களைக் கற்பிக்கச் செய்தார்.

 

 

பதிநான்காம் வயதிலிருந்து மூன்று ஆண்டுகள் இந்தப் படிப்பு தொடர்ந்தது. ஆனால் ஸு யுன்னுக்கோ இதில் மனம் செல்லவில்லை.

 

 

17ஆம் வயதில் பாட்டி விரும்பியபடி இரண்டு பெண்களை அவருக்கு மணமுடித்தனர். கல்யாணம் ஆனதால் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார் ஸு யுன். ஆனால் அந்த இரு மனைவிகளிடமும் தாம்பத்திய உறவை அவர் மேற்கொள்ளவே இல்லை.

 

பத்தொன்பதாம் வயதில் உலகைத் துறக்க நிச்சயித்த அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதாவது அவ்ர் முழு துறவியாகி விட்டார்.

 

தந்தை அவரைத் தேட ஆட்களை அனுப்பினார். ஆனால் ஸு யுன்னோ வேலைக்காரர்களுக்குத் தெரியாதபடி ஒளிந்து கொண்டார்.

மவுண்ட் கு (Mount Gu) என்ற இடத்தில் ஆசார்யர் மியா லியான்    (Master Miao-lian) என்பவரிடம்  சீடராக இருந்து பயிற்சியைப் பெற்றார்.

 

 

காலப் போக்கில் அவரது இருபத்தைந்தாம் வயதில் அவர் தந்தையும் இறந்தார். அவருக்கு வீட்டுத் தொடர்பே அற்றுப்

போனது.

 

 

கடினமான தவ வாழ்க்கையை காட்டில் அவர் தொடங்கினார். அங்குள்ள ஓநாய்களோ அல்லது புலிகளோ ஒரு நாளும் அவரைத் துன்புறுத்தவில்லை. பாம்புகளும் அவரைத் தொந்தரவு செய்யவில்லை.

 

அவரது 31ஆம் வயதில் அவர் வென்ஸ்ஹோ (Wenzhou) என்ற மலைக்கு வந்தார். அங்கு ஹுவா டிங் என்ற சிகரத்தின் உச்சியில் ஏறி அங்கிருந்த குடிசை போன்ற ஆலயத்தின் கதவைத் தட்டினார். அதிலிருந்த ஆசார்யார் அவரிடம் உடலுடன் மனதைப் பயிற்றுவிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்லியதோடு பத்து ஆண்டுகளை வீணாகக் கழித்து விட்டாயே என்று கடிந்து கொண்டார்.

 

HUGE BUDDHA

பின்னர் மனமிரங்கி அவ்ரைச் சீடனாக ஏற்றுக் கொண்டார். இன்னும் கடினாமான பயிற்சிகள் தொடங்கின. ஆனால் ஆசார்யரே அவரின் தவத்தைக் கண்டு அவரை மெச்சினார்.

பிறகு மிக நீண்ட நெடிய பயணத்தை அவர் மேற்கொண்டார். ஒவ்வொரு ஊராகச் சென்று மடாலயங்களைப் பார்த்தார். திபெத்தில் தலாய்லாமா அமர்ந்திருந்த இருக்கையைப் பார்த்த பின்னர் இந்தியா வந்தார்.

காசியில் தரிசிக்க வேண்டிய இடங்களைத் தரிசித்த பின்னர் கல்கத்தா சென்றார். அங்கிருந்து சிலோன், பர்மா என்று பல நாடுகளில் உள்ள புத்த ஆலயங்களைத் தரிசித்து விட்டு பின்னர் சீனா திரும்பினார்.

 

 

மஹாகாஸ்யபரின் சமாதி உள்ள காக் ஃபுட் மலையில் ஏறினார்.

மஹாகாஸ்யபரின் குகைக் கோவிலின் வாயிலின் முன் வந்து நின்றார். அங்கு புத்தரின் சீடரான ஆனந்தர் வந்த போது அந்த குகைக் கதவுகள் தானாகத் திறந்து கொண்டதாம்.

 

அந்த வாயிலுக்குப் பெயர் ஹுவா  ஷூமென். அதன் பொருள் பூ  மலரும் வாயில்! அங்கு சென்ற ஸு யுன் ஊதுபத்திகளை ஏற்றியவுடன் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

 

அங்கிருந்த பெரிய மணி தானாக  மூன்று முறை ஒலித்தது. அங்கு குழுமியிருந்தோர் அனைவரும் அதிசயித்தனர்,

மிகப்பெரும் மஹா புருஷர் ஒருவர் வரும் போது தான் அது தானாக மூன்று முறை ஒலிக்குமாம்.

 

 

அனைவரும் ஸு யுன்னை பக்தியுடன் பார்த்து வணங்கினர்.

360 தவ சாலைகளும் 72 பெரும் கோவில்களும் இருந்த அந்த மலையில் இப்போது வெறும் பத்துக் கோவில்கள் கூட இல்லை!

அடுத்து தன் ப்யணத்தை தொடர்ந்த ஸு யுன் ஜி-கி என்ற  மலைத்தொடருக்கு விஜயம் செய்தார்.

அங்கு அவர் வந்தவுடன் அனைத்துப் பூக்களும் மலர்ந்தன.

அங்குள்ள அனைவரும் இந்த அதிசயத்தைப் பார்த்து மலைத்தனர்.

 

தலைமைத் துறவி வந்து ஸு யுன்னிடம்,” இங்குள்ள சுவடிகளின் படி இப்படி மலர்கள் மலர்வது இதற்கு முன்னர் சில சமயமே நடந்திருக்கிறது.இங்குள்ள மலர்ச் செடிகள் தெய்வீகத் தன்மை கொண்டவை. நல்ல ஒரு தவ புருஷர் இங்கு வந்தால் மட்டுமே அவை  மலரும்” என்று ஆனந்தத்துடன் சொல்லி அவரை வரவேற்றார். அவரது ஐம்பதாவது வயதில் இந்த அதிசயம் நிகழ்ந்தது. மேலும் அவர் பயணத்தைத் தொடங்கினார். பத்தாயிரம் லி (2000 லி என்பது 620 மைல்களுக்குச் சமம்) என்ற நெடுந்தூரத்தைக் கால்நடையாக நடந்து கடந்த அவர் தனது மனம் தூய்மையாக விளங்குவதை உணர்ந்தார்.

பத்தாயிரம் சாஸ்திர நூல்களைப் படித்த பின்னர் பத்தாயிரம் மைல் பயணத்தை மேற்  கொள் என்று பழைய கூற்று ஒன்று உண்டு.

 

 

ஸு யுன் தன் பயணத்தை விடாமல் தொடர்ந்தார்.

இப்போது அவருக்கு வயது 56.

 

– தொடரும்

 

 

Why did Bharati burn the Harmonium? (Post No 2602)

IMG_9567

Compiled by london swaminathan

Date: 5 March, 2016

 

Post No. 2602

 

Time uploaded in London :–  15-17

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; 

IMG_3519

There are very interesting anecdotes in the life of the great Tamil poet Subramanya Bharati. One of them was his fear of leprosy, which made him to consume a harmonium to fire!

Once he was playing on harmonium; actually he was playing with a harmonium like a child. He pressed many keys at the same time which produced a horrible sound. Immediately people in the room criticized him. He gave a beautiful reply. I wanted to show you how horrible it is when you scold a child! The same horrible sound you people produce when you scold a child! (His care and love for children is known through many anecdotes).

 

Chellamma’s bother has given her this harmonium. When it developed some problems it was sent to a shop for repair work.  Bharatiyar found out that the person who was handling it was a leper. Bharati was so scared of leprosy, he came home and told his wife Chellamma, “Never ever touch that harmonium, when it is returned”. She kept quiet. She loved the harmonium very much. Moreover it was given by her brother.

 

All this happened when the family was about to shift to far away Kadayam from Pondycheri. Bharati told his friends to pack all the goods and send them as cargo by next train. Chellamma told them to pack the harmonium without fail. After some days the cargo arrived at Kadayam. It so happened that Bharati himself received it and opened the package.

 

As soon as he saw the harmonium he became very angry. He separated it from rest of the goods and then asked someone to take it to the garden nearby. There he poured kerosene oil over it and set fire to it. Only when he saw the ashes of the harmonium he became peaceful. He came back home and gave treatment to the house with burning torches to kill the leprosy bacteria.

Once a freedom fighter who was afflicted with leprosy came home and touched Bharati’s daughter Sakuntala. She was a child then. As soon as he went out he bathed his child with anti-bacterial lotion. Since he had so much respect to freedom fighters he could not say anything when he was playing with his child.

 

He used to throw out all the tumblers and other utensils touched by a leper. People who find them on the roads, just outside his house, naturally returned them to Chellamma. When he saw them back in the house, he took them to a garden and buried them saying that it would prevent others getting leprosy. He was so health conscious!

 

Every one of us has some fear or phobia. Bharati was very much worried about leprosy. This shows that his human side.

 

 

Source: Tamil book on Bharatis Life by Akkur Ananthachary, 1936 publication. Rough translation by London swaminathan.

-subham-

ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் சுவையான வரலாறு (Post No. 2526)

IMG_2380

Research Article written by london swaminathan

Post No. 2526

Date: 10th February 2016

Time uploaded in London  பகல் 12-07

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_2253

ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பற்றிய நாலாவது கட்டுரை இது. முதல் மூன்று கட்டுரைகள் கடந்த 3 நாட்களில் இங்கே வெளியிடப்பட்டன.

 

சுமார் 40,000 முதல் 50,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மக்கள் இங்கே குடியேறியதாக இப்போதைய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. மற்றொரு ஆய்வு, இந்தியர்கள் இங்கே 5000 ஆண்டுகளுக்கு முன்பு வந்து, புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியதாகக் கூறும். ஆனால் இத்தகைய ஆய்வுகளை அப்படியே நம்பிவிடக்கூடாது. இன்னும் பத்தாண்டுகளுக்குப் பிறகு இதை மறுத்து வேறு ஒரு தகவல் வரும்!

 

20, 30 ஆண்டுகளுக்கு முன் தினமணிச் சுடரில் பிலோ இருதயநாத் என்பவர் எழுதிய இந்தியப் பழங்குடி மக்கள் வரலாற்றையும், மஞ்சரியில் மாதம் தோறும் வெளியான பழங்குடி மக்களின் வரலாற்றையும் படித்து பேப்பர் கட்டிங் சேகரித்து வைத்துள்ள எனக்கு ஆஸ்திரேலிய வரலாற்றில் அதிகம் புதுமை இருப்பதாகத் தெரியவில்லை.

 

ஒவ்வொரு இன மக்களும் பிறப்பு, இறப்பு, ஆவிகள், திருமணம், தொடக்கூடாதவை, தீட்டு, இசை, நடனம் ஆகியவற்றில் கொஞ்சம் கொஞ்சம் மாறுதலுடன் பல விநோதக் கொள்கைகளையுடவர்களாய் இருப்பார்கள். இந்தியப் பழங்குடி மக்களின் நம்பிக்கைகளில் இந்துமதத்தின் தாக்கமும், சம்ஸ்கிருத மொழியின் தாக்கமும் ஆழமாகவே தெரிகிறது. இப்போது கோண்ட்வானா லாண்ட் என்று சொல்லப் பாடும் சொல்லே, காண்டவ வனம் என்பதன் மரூஉ என்பதையும் “கோண்டு”கள் என்போர் அர்ஜுனனும், கிருஷ்ணனும் எரித்த “காண்ட”வ வன மக்கள் என்பதையும் நான் முன்னரே என் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதியுள்ளேன். ஆஸ்திரேலியப் பழங்குடிகள் பற்றி தமிழில் அதிக விஷயங்கள் கிடைக்காததால், சிட்னி நகர ஆஸ்திரேலிய மியூசியத்தில் நான் சேகரித்த விஷயங்களை மொழிபெயர்த்துத் தருகிறேன்.

IMG_2450

250 மொழிகள், 250 குழுழுக்கள்

ஆஸ்திரேலியப் பழங்குடி இன மக்கள் ஒரே மொழியைப் பேசவில்லை. 250 மொழிகளையும், கிளை மொழிகளையும் பேசுகின்றனர். கடல் என்பதற்குக் கூட ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு சொல்! ஏன் இவ்வளவு மொழிகள் வந்தன என்பது ஆச்சரியமான விஷயமே. அருகிலுள்ள நியூகினி தீவுகளில் 750 மொழிகள் உள்ளன. மொழியியலாரின் கொளகைகளை எல்லாம் பொய்மையாக்கிவிடும் நிலவரம் இது.

இதே போல ஆஸ்திரேலியப் பழங்குடி இன மக்கள் அனைவரும் ஒரே அணி அல்ல. அவர்களிடையே 250 பிரிவுகள் உண்டு.

ஒவ்வொருவரும் தனது இடத்தை நாடு என்றும், அதிலுள்ள குழு எல்லாம் ஒரே இனம் என்றும் கருதுவர். ஆயினும் ஒரு குழு, மற்றொரு குழுவில் தலையிடாது. மேலும் அத்தகையோர் போற்றும் புனிதமான மிருகத்தை மற்றொரு குழுவினர் புசிக்கமாட்டார்கள். அவர்களிடையே, பல பொதுவான அம்சங்களும் இருக்கின்றன.

IMG_2258

முன்னொரு காலத்தில்

“இப்பொழுது ஆஸ்திரேலியாவில் காணப்படும் பிராணிகள் எல்லாம், மிகப் பழைய காலத்தில், கடலுக்கு அப்பாலுள்ள வேறு ஒரு பிரதேசத்தில் வசித்தன. அப்போது அவை எல்லாம் மனித உருவில் இருந்தன. அவை எல்லாம் ஒரு நாள் ஒன்று கூடி நமக்கு நல்ல வேட்டை நிலம் வேண்டும் என்று முடிவு செய்து ஒரு படகில் ஏறி இங்கு (ஆஸ்திரேலியாவுக்கு) வந்தன” என்பது பழங்குடியினர் கூறும் கதை.

 

முதல் குடியேறிகள்

சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் தாழ்வாக இருந்தது. ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவுக்குப் படகுகள் மூலம் போவது எளிதாக இருந்தது. அவர்கள் அக்காலத்தில் குடியேறிய ஆஸ்திரேலிய நிலப் பகுதிகளை இப்பொழுது கடல் கொண்டுவிட்டது. ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் பூர்வ கதைகளும் இதையே சொல்லுகின்றன. தாங்கள் படகுகள் மூலம் வேறு  ஒரு இடத்திலிருந்து வந்ததாகவும், மழை மேகங்களைப் பின்தொடர்ந்து உள்நாட்டிற்குள் சென்றதாகவும் அவர்கள் கதைகள் சொல்லுவர். உலகில் இந்திய இலக்கியங்கள் மட்டுமே தாங்கள் வெளிநாட்டிலிருந்து வந்ததாகக் கூறுவதில்லை. வேறு சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய, ஆஸ்திரேலிய மக்கள் அனைவரும் தங்களை வந்தேறு குடிகள் என்று பகிரங்கமாக அறிவிக்கின்றனர். உலகின் நாகரீக தோற்றத்துக்கு இந்தியாவே மூல முதல்வன் என்பதை நமது இதிஹாச புராணங்கள் தெள்ளத் தெளிவாக உரைக்கின்றன. நிற்க

 

சுமார் 40000 ஆண்டுகளில், இவர்கள் ஆஸ்திரேலிய கண்டம் முழுதும் பரவிவிட்டனர். இந்தியர்கள் 56 தேசங்கள் வைத்து ஆண்டது போல இவர்கள் 250 “நாடு”களை உருவாக்கினர். 1700-ம் ஆண்டுகளில், இந்தோநேஷியத் தீவுகளிலிருந்து பலர் மீன் வியாபாரத்தின் பொருட்டு இங்கேவந்தனர். அதுதான், ஆஸ்திரேலியாவின் முதல் வெளி உலகத் தொடர்பு. பின்னர் கேப்டன் குக் முதலான வெள்ளையர்கள் வந்தனர்.

IMG_2259

1788ல் முதல் காலனி

உலகில் வடபகுதியில் நிலப்பரப்பு இருப்பதுபோலவே தென் பகுதியிலும் நிலப்பரப்பு  இருக்க வேண்டும், அப்படியில்லாவிடில் பூமியின் சமநிலை கெட்டு அது ஆட்டம் காணும் என்று கிரேக்க தத்துவ ஞானிகள் ஊகித்தனர். (இந்துக்கள், கீழ் ஏழு பாதாள லோகங்களில் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றைச் சேர்த்திருந்தது வெள்ளைக்காரர்களுக்கு தெரியாது. எனது மாயா- நாகர் தொடர்பு கட்டுரைகளைப் படிப்போருக்கு இது விளங்கும்). பின்னர் 1570 ஆம் ஆண்டில் ஆர்டீலியஸ் என்பவர் டெர்ரா ஆஸ்ட்ராலிஸ் என்று தனது வரைபடத்தில் ஆஸ்திரேலியாவை வரைந்தார். இதைத் தொடர்ந்து டச்சு கிழக்கு இந்தியக் கம்பெனியார் அங்கு போய் நியூ ஹாலந்து எனப் பெயரிட்டு, அது ஒன்றுமில்லாத இடம் என்று திரும்பிப் போய்விட்டர்கள்.

விஞ்ஞான ஆராய்ச்சிக்காக ஜோசப் பாங்க்ஸ் என்பவருடன் லெப்டினண்ட் கேப்டன் குக் 1770 ஆம் ஆண்டில் வந்தார். பாங்ஸ் நிறைய படங்களை வரைந்தார். பின்னர் நியூ சவுத் வேல்ஸில் குடியேறி வசிக்கலாம் என்று அறிவுரை வழங்கினார். 1788ஆம் ஆண்டில் ஒரு கப்பல் நிறைய ஆட்கள் வந்து ஆஸ்திரேலியாவை ஆக்ரமிக்கத் தொடங்கினர். ஆனால் முதலில் இங்கு அனுப்பப்பட்டவர்கள் எல்லாம் குற்றவாளிகள். வெள்ளைக்காரர்கள், நமது சுதந்திரப் போராட்டவீரர்களை அந்தமான் தீவுக்கு அனுப்பியதுபோல இங்கு பலரை அனுப்பினர்.

IMG_9059

கேடயங்கள்

ஒவ்வொரு குழுவும் ஒருவகை பாணியில் கேடயங்களைத் தயாரித்தனர். இவை பாதுக்காப்புக்கு மட்டுமின்றி கலாசார சின்னங்களாகவும் விளங்கும். ஒவ்வொரு இளைஞரும் அந்தக் கேடயத்தில் ஒரு புது வடிவு செய்து தனது தனித்துவத்தையும் காட்டுவார். கேப்டன் குக் வந்த போது அவரது பீரங்கி, துப்பாக்கிகளுக்கு , பழங்குடி மக்கள் ஈடு கொடுக்க முடியவில்லை. தங்கள் கேடயங்களைப் போட்டுவிட்டு காட்டிற்குள் சென்று மறைந்தனர். கேப்டன் குக் எடுத்துவந்த இந்த கேடயங்களே முதல் நினைவுப் பொருட்களாகும். இப்பொழுது ஆஸ்திரேலிய மியூசியத்தில் நூற்றுக்கணக்கான கேடயங்களைக் காட்சிக்கு வைத்துள்ளனர்.

 

வெள்ளையர்களுக்கு உதவிய இருவர்

ஆஸ்திரேலியாவை காலனியாக்க வந்த வெள்ளையர்களுக்கு இரண்டு பழங்குடி இன மக்கள் உதவினர். ஒருவர் பெயர் வைலி. 1840 ஆம் ஆண்டில் எட்வர்ட் ஜான் அய்ர் என்பவருக்கு உதவினார். பின்னர் இவருடன் வந்த வேறு இரு பழங்குடி இனத்தவர் (யார்ரி, ஜோயி) அவருடன் வந்த ஜான் பாக்ஸ்டர் என்பவரைக் கொன்றுவிட்டனர். வைலி மட்டும் இறுதிவரை அய்ருக்கு உதவி பின்னர் அரசு பென்ஷனும் பெற்றார். ஆஸ்திரேலிய கண்ட ஆராய்ச்சிகள் இப்படிப் பல படுகொலைகள் நடக்கக் காரணமாயின.

ஜாக்கி ஜாக்கி என்று புனைப்பெயருடைய கல்மாரா என்ற பழங்குடி இனத்தவர் எட்மண்ட் கென்னடி என்பவருக்கு உதவினார். ஆனால் ஒரு பழங்குடி இனக் குழு கென்னைடியை ஈட்டியால் துளைத்துக் கொன்றுவிட்டனர். கல்மாரா ஓடிச் சென்று, கப்பலில் இருந்த வெள்ளையரிடம் விஷயத்தைத் தெரிவித்துவிட்டு கென்னடியின் சடலத்தை மீட்க மீண்டும் புதர்களுக்குத் திரும்பிவந்தார். இதனிடையே அந்த ஆராய்ச்சிக் குழுவில் இருந்த பலர் காணாமற்போயினர். இரண்டுபேர் தவிர அனைவரும் மறைந்தனர். இப்படி ஐரோப்பியர்கள் சென்றவிடம் எல்லாம்  இரத்தக் களரியுடந்தான் வரலாறு துவங்கும். பின்னர் அதைக் காரணம் காட்டி, குருவி சுடுவதுபோல, பழங்குடி இனமக்களைச் சுட்டுக்கொல்லுவர். வட அமெரிக்க, தென் அமெரிக்க வரலாற்றைப் படிப்போருக்கு இது நன்கு விளங்கும்.

IMG_2382

 

IMG_9065

படங்கள்: கேடயங்கள் (லண்டன் சுவாமிநாதன்)

—தொடரும்

‘An inch of Gold will not buy an inch of Time’ (65 Sayings on TIME) – Post No 2524

IMG_2205

Compiled by london swaminathan

Post No. 2524

Date: 9th February 2016

Time uploaded in London 13-37

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_2332

Time cures all things.

Time is a great healer.

Nature, time and patience are the three great physicians.

Time tames the strongest grief.

Time works wonders.

Time is money.

Patience, time and money accommodate all things.

An inch of gold will not buy an inch of time (Chinese Proverb)

He that has time has life.

Gain time, gain life. (10)

IMG_1565

The crutch of time does more than the club of Hercules.

With time and art, the leaf of the mulberry-tree becomes satin.

Time and straw make medlars ripe.

Time devours all things.

Time is a file that wears and makes no noise.

Time undermines us.

Time is the rider that breaks the youth.

Time tries all things.

Time will tell.

Time tries truth. (20)

 

IMG_2716

Time is the father of truth.

Truth is time’s daughter.

Time flies (tempus fugit in Latin)

Time flees away without delay.

Time has wings.

Time is, time was and time is past.

For the busy man time passes quickly (Chinese Proverb)

Time and tide wait for no man.

The sun has stood still, but time never did.

Time stays not the fool’s leisure. (30)

 

IMG_2833

What greater crime than loss of time?

Time spent in vice or folly is doubly lost.

Lose an hour in the morning and you will be all day burning for it.

If you lose your time, you cannot get money or gain.

Time lost cannot be recalled.

Take time when time comes, lest time steal away.

There is a time and place for everything.

Everything is good in its season.

Other times, other manners

Now is now, and then was then. (40)

 

IMG_3061

It is too late to call back yesterday.

Things past cannot be recalled.

There are no birds in last year’s nests.

Things present are judged by things past.

Today is the scholar of yesterday.

The golden age was not the present age.

The time to come is no more ours than the time past

None knows what will happen to him before sunset.

This morning knows not this evening’s happenings (Chinese Proverb)

He that would know what shall be, must consider what has been. (50)

 

IMG_3128

History repeats itself

What has been, may be.

Coming events cast their shadows before (Thomas Campbell (1777-1844)

From Tirukkural:-

481.The crow defeats the owl during day-time. The leader seeks the right time to quell the enemy.

  1. Acting at appropriate season is a cord that will immutably bind wealth to a leader.

483.What is difficult for him to achieve who adopts proper means and tact and acts in right time?

484.One can even the world if he chooses the proper place and acts in the right hour.

485.Heroes who want to conquer the world wait patiently for the proper time, gathering strength.

486.The restrain of a strong man is like the step back of a fighting ram before charging.

487.The wise do not straightaway fly into a passion, but smoulder inwardly biding their time. (60)

 

IMG_9011

488.Bow to your foe when you see him; for when the time of his end is seen, his fall would headlong.

489.When a rare opportunity offers itself, accomplish forthwith the design that is difficult.

490.In adverse time feign peace and wait like a heron. Strike like its peck when the time is opportune.

(all the above numbered are from Tamil book Tirukkural)

I am Time (kalosmi) – (Bhagavd Gita 11-32)

The Master of the Past, Future and Present (Bhuta Bhavya Bhavat Prabhuh) – Vishnu Sahasranama (65)

IMG_9165

–subham–

 

ஆஸ்திரேலியப் பழங்குடிகள் தமிழர்களா? (Post No. 2517)

IMG_2347

Research Article Written by london swaminathan

Date: 7 February 2016

 

Post No. 2517

 

Time uploaded in London :– 7-57 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_2250

சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய நிலப்பரப்பிலிருந்து தமிழர்கள், இந்தோநேஷியா வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் குடியேறினர். அப்போதெல்லாம் கடலுக்கும் நிலத்துக்கும் இடையிலுள்ள தூரம் குறைவு. ஒரு தீவிலிருந்து எளிதாகப் படகில், கட்டுமரத்தில் தாவித் தாவிச் சென்று விடலாம். அதற்கும் லடசக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா கண்டங்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டேயிருந்தன.

 

1932 ஆம் ஆண்டில் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சென்னை மைலாப்பூரில் நிகழ்த்திய சமயச் சொற்பொழிவுகளில் உலகமெங்கும் ஒரே மதம் – சநாதன தர்மம் – நிலவிய காலம் பற்றிப் பேசியிருக்கிறார். அதன் மிச்ச சொச்சங்களையே இன்று உலகம் முழுதும் காணமுடிகிறது. உலகில் ஒரு ஆளின் பெயரால் அல்லது இனத்தின் பெயரால் இல்லாத மதம் இந்து மதம் ஒன்றே! பாரசீகர்களும் கிரேக்கர்களும் ‘ச’ என்பதைச் சொல்ல முடியது. ஆகையால் ‘சி’ந்து நதிக்கரையின் அப்பால் இருப்பவர்கள் ‘ஹி’ந்துக்கள் என்று சொன்னார்கள். அந்தப் பெயரே இன்று சநாதன தர்மத்துக்கு நிலைத்துவிட்டது. சநாதன தர்மம் என்றால் ‘ஆதியந்தமற்ற அற வழி’ என்று பொருள். இதே போல ஒரு இனத்தின் பெயரால் இல்லாத மொழி சம்ஸ்கிருதம் ஒன்றே. இதுவும் ஆதியந்தமற்ற மொழியின் பிற்கால (செம்மைப்படுத்தப்பட்ட) வடிவம்!

 

என்ன சொன்னார் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள்?

ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் விபூதி போலப் பூசிக் கொண்டு நடனம் ஆடுகிறார்கள். அதற்கு சிவா டான்ஸ்/ நடனம் என்று பெயர் என்று தான் படித்த புத்தகத்தின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். அவர் சொன்ன இந்த விசயம் என் மனதில் பதிந்தவுடன் என்றாவது நேரில்சென்று ஆராய வேண்டுமென்று எண்ணியிருந்தேன். அருமையான வாய்ப்பு கிடைத்தது.

 

எனது சம்பந்தி, நாங்கள் அனைவரும் குடும்ப சகிதம் சிட்னி நகருக்கு வருவதை அறிந்து பெருந்தொகை செலவிட்டு இந்திய- ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டிக்கு டிக்கெட் வாங்கியிருந்தார். எனக்கும் கிரிக்கெட்டிற்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது. கவாஸ்கர் எத்தனை ‘கோல்’ போட்டார்? என்று கேட்பவன் நான். ஆகையால் அவரிடம், மரியாதையுடன் அந்த டிக்கெட்டை வேறு ஒருவருக்குக் கொடுக்கும்படி பணிவுடன் வேண்டிக்கொண்டுவிட்டு நான் ஆஸ்திரேலிய மியூசியத்துக்கு விரைந்தேன். எனது மனைவியும் மக்களும் மட்டும் கிரிக்கெட் பார்க்கச் சென்றனர். நான் ஆஸ்திரேலிய மியூசியத்துக்குப் போய் என் வயது 68 என்று சொன்னவுடன் எனக்கு முதியோருக்கான தள்ளுபடி விலை டிக்கெட் கொடுத்தனர். மியூசியம் மேப்/வரைபடத்டை வாங்கிக்கொண்டு பழங்குடி மக்கள் பிரிவு எது என்று நோட்டமிட்டேன். அதுதான் முதல் பிரிவு! ஏக சந்தோஷம்!

 

ஐ போன், ஐ பேட், இரண்டு காமிராக்கள் சகிதம் உள்ளே பிரவேசித்தேன். பேரானந்தம்?

ஒவ்வொரு எழுத்தாகப் படிதத்தில் சட்டென மனதில் பதிந்தவிஷயம்!

அவர்கள் நிலம், நீர் தீ, காற்று, மலை, கடல், மனித இனம், மரணம் ஆகியன பற்றிக் கொண்டுள்ள விஷயங்களைப் படிக்கையில் வேத உபநிஷத மந்திரங்களைப் படிப்பதுபோல ஒரு எண்ணம் மனதில் தோன்றியது. இன்று ஒரு சில விஷயங்களை மட்டும் காண்போம்.

uluru2

ஆஸ்திரேலியாவின் நட்ட நடுவில், அதி பயங்கர பாலைவனப் பொட்டல் காட்டில் ஒரு பெரிய மலை நிற்கிறது. இதற்கு அய்யர் மலை என்று பெயர். சர் ஹென்றி அய்யர் என்ற ஆஸ்திரேலிய அதிகாரியின் பெயரைச் சூட்டி இருக்கின்றனர். அவருக்கு அய்யர் என்ற பெயர் ஒட்டிக் கொண்டது எப்படி என்பதை வேறு ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் எழுதுகிறேன்.

 

அய்யர் ராக்ஸ்= கைலாஷ் மலை

 

அய்யர் ராக்ஸ் என்பதன் உண்மைப் பெயர் உள்ளூரு. இதைப் புனித மலையாக வணங்குகின்றனர் அங்கே வாழும் பழங்குடி மக்கள். அதிபயங்கர பொட்டல் காட்டில் தன்னந்தனி ராஜாவாக விளங்கும் இந்த மலையைப் பார்த்தவுடன் நமக்கு நினைவுக்கு வருவது இமய மலையில் தன்னந்தனியனாக நீட்டிக் கொண்டிருக்கும் கைலாஷ் மலைதான். உலகில் பூஜியாமா (ஜப்பான்) எரிமலையாகட்டும், மவுண்ட் மேரு (கென்யா) ஆகட்டும். எது, எது சிவலிங்கம் போல தனியாக நிற்கிறதோ அவை எல்லாம் புனிதப் பொருட்களாகக் கருதப்படுகின்றன. ஆகவே ஆஸ்திரேலியாவில் தன்னதனியாக நிற்கும் இந்த உள்ளுரு என்பதை அவர்கள் வழிபடுவது பொருத்தமே. இதையும் காஞ்சி சுவாமிகள் சொன்ன விபூதி பெயிண்ட், சிவா டான்ஸ் என்பதையும் பொருத்திப் பார்க்கையில் மேலும் நெருக்கம் புலப்பட்டது.

 

நான் தினசரி சந்தியா வந்தனம் செய்யும் பிராமணன் ஆனதால், “உத்தமே சிகரே தேவி” என்ற காயத்ரீ தேவி வணக்கமும் மனதில் பளிச்சிட்டது. பிராமணர்கள் தினமும் மூன்று முறை காயத்ரீ தேவியை மலை உச்சியிலிருந்து அழைத்து, இதயத்தில் நிறுத்தி (ஆவாஹனம் செய்து) வழிபாடு செய்துவிட்டு “தாயே எனது வழிபாடு இப்போதைக்கு முடிந்துவிட்டது. போய் வருவாயாக” என்பர். ஆக, “ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கும்” காயத்ரீ (சூரிய தேவன்/தேவி) மலை உச்சியில் வைக்கப் படுவதால் மலை வழிபாடு வேதத்தில் உள்ள வழிபாடாகும்.

 

இது எல்லாம் ஒரு புறமிருக்க அந்தப் பழங்குடி மக்களின் பெயரைப் படித்த போது உடலில் மின்னலை பாய்ந்தது. செந்தமிழ் சொல்லைக் கேட்டவுடன் ‘இன்பத் தேன் வந்து பாய்ந்தது” அந்தப் பழங்குடி மக்களின் பெயர் ‘அணங்கு’ என்பதாகும். இந்த தூய தமிழ் சொல், சங்கத் தமிழ் இலக்கியத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் விதந்து ஓதப்படுகிறது. காடு, மலை, ஆறு கடல், மரம் கொடி, புனித இடங்கள், தோப்பு, துறவு ஆகிய இடங்களில் வாழும் புனித தேவதையை தமிழர்கள் அணங்கு என்பர். அதே பெயரை தங்களுக்கு வைத்துக் கொண்டு புனித உள்ளுரு மலையை அவர்கள் வழிபடுவது சாலப்பொருத்தமே. மேலும் ‘உள்ளூர்’ என்பதில்கூட தமிழ் வாசனை அடிக்கிறது!

 

நான் தினமணி பத்திரிக்கையில் சீனியர் சப் எடிட்டராக இருந்த போது பிரபல நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆஸ்திரேலியா சென்று வந்தது பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் அவர் தனக்காக ஆஸ்திரேலிய கலைத்துறை ஏற்பாடு செய்த பழங்குடி மக்களின் நடனத்தைப் பார்த்தபோது குறைந்தது 25 தமிழ்ச் சொற்களையாவது எண்ண முடிந்தது என்று சொன்னதும் நினைவுக்கு வந்தது. என்ன பொருத்தம்! இந்தப் பொருத்தம்!

IMG_2336

மூத்தோர் சொல் அமிர்தம்

 

பழங்குடி மக்களின் நம்பிக்ககள் பற்றி ஒரு போர்டு எழுதி வைத்திருந்தனர். அதைப் படித்துத் திகைத்து நின்றேன். அவர்கள் மிகவும் மதிப்பது மூத்தோர்கள் என்றும் அவர்களுடைய ஞானமும், அறிவும் பெரிதும்  மதிக்கப்படும் என்றும் அவர்களுக்கு பழங்குடி இனங்களிடையே தனி மதிப்பும் மரியாதையும் உள்ளது என்றும் எழுதி இருந்தனர். இது இந்துக்களின் நம்பிக்கை. உலகில் வேறு எந்த மத நூலிலும் இல்லாத விஷயம் “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்பதாகும் அது மட்டு மல்ல தினமும் இந்துக்கள் செய்யும் பஞ்ச யக்ஞத்தில் ஒன்று “தென்புலத்தார்” கடன். இதைத் திருவள்ளுவரும் பல குறள்களில் பாடியிருக்கிறார். முன்னோர்களுக்குக் கடன் செலுத்துவதை, இந்துக்கள் போல வேறு எவரும் செய்வதில்லை.

 

ரிக் வேதம் என்பது உலகின் மிகப் பழைய நூல். அதற்கு அருகில் கூட வேறு எந்த மத நூலும் வர முடியாது. அவ்வளவு பழமையான நூல். அதில் ஆடிப் பாடி, ஆனந்தக்கூத்தாடும் ரிஷி முனிவர்கள் அவர்களுடைய முந்தையோர் பற்றிப் பாடுகின்றனர். “பூர்வேப்யோ ரிஷி:” என்று மந்திரம் ஓதுகின்றனர். அவ்வளவு பழமையானது சநாதன மதம். ஆக முந்தையோரைப் போற்றிப் புகழ்வது வேத வழக்கு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

இதைவிட அருமையான விஷயம் அந்த மியூசியம் போர்டில் இருக்கிறது . ஆஸ்திரேலியப் பழங்குடிகள் எல்லா முதிய ஆண்களையும் மாமா (அங்கிள்) என்றும், முதிய பெண்களை மாமி (ஆண்ட்டி) என்றும் மரியாதையுடன் அழைப்பர் என்று எழுதப்பட்டது. இன்று வரை இந்துக் குடும்பங்களில், குறிப்பாகத் தமிழ்க் குடும்பங்களில் இது பின்பற்றப்படுகிறது.

 

பழங்குடி மக்கள், அவரவர்கள் இனத்தை (கோத்திரம்) மதித்தனர். ஒருவருக்குப் புனிதமான விலங்கை மற்றவர் வேட்டையாட மாட்டார்கள். நம்முடைய கோத்திரப் பெயர்களும் இனப் பெயர்களும் பிராணிகளின் அடிப்படையில் எழுந்தவையே. உலகிலேயே முதல் முதல் கொடிகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்திய இனம் இந்து இனம் என்பதை கொடிகள், சின்னங்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன். காஸ்யப (ஆமை), கௌசிக (ஆந்தை), ஜாம்பவான் (கரடி அடையாளம் உடைய இனம்), ஜடாயு, சம்பாதி (கழுகு அடையாளம் பொறித்த இனம்) அனுமான் (குரங்கு முத்திரை பொறித்த இனம்) என்பதையெல்லாம் காணுகையில் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் தங்களை ஏன் பிராணிகளின் பெயரில் அழைத்துக் கொண்டனர் என்பம்து வெள்ளிடை மலையென விளங்கியது.

 

ஆராய்ச்சிக் கட்டுரை தொடரும்………….

 

–சுபம்–

Are Australian Aborigines Tamil Hindus? (Post No. 2515)

IMG_2347

Research Article Written by london swaminathan

Date: 6 February 2016

 

Post No. 2515

 

Time uploaded in London :– 16-12

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

Long long ago, 50, 000 years ago, a group of people migrated to Australia via South India and Indonesia. Then there was only one religion that was known as Sanatan Dharma, meaning the Eternal law. Later Greeks and Parsis (Persians) called these people Hindus, because they encountered them first beyond the River Sindhu. ‘S’ became ‘H’ in their languages.

 

I developed some interest in the study of aborigines after reading Kanchi Paramacharya’s (1894-1994) lectures in Chennai. He gave a detailed map of Hindu vestiges around the world. Referring to the Australian aborigines he quoted a book where in the dance of the aborigines was called ‘Shiva dance’ and they wore white paints like the Saivaite Vibhuti/holy ash marks. Later came a report of the dancer Padma Subramaniam in the Tamil dailies that she noted at least 20 Tamil words in the languages of aborigines. She watched their dance especially arranged for her. When I went to Sydney in January 2016 my in laws booked us a ticket for the Cricket match between India and Australia. I told them plainly that I was more interested in the study of aborigines than the cricket match. So my ticket was given to one of their friends and only my wife and sons went to the match with them. I went to the Australia Museum where there was a big section about the aborigines. I was surprised to see lot of similarities with the Hindus.

 

For long I was wondering why the aborigines held the Ayers Rock in esteem like our Mount Kailash. It stands as a solitary rock in the middle of a vast desert. Whether it is the Mt Meru of Kenya or the Fujiyama of Japan, all solitary rocks or volcanoes or hills are worshipped as Divine entities. This is nothing but Hindu in approach. So the Australian aborigines’ worship of Ayer’s rock is similar to the Hindu worship of Mount Kailash.  The original name of the sacred solitary rock is Uluru. It was named after Sir Henry Ayers, an Australian officer. Anyway it is nothing but Mt Kailash of Australia. So Kanchi Shakaracharya’s comparison of Vibhuti and Siva Dance has one more similarity i.e. Ayers rock and Mt Kailash.

 

The similarities don’t stop there. As soon as I entered the Australia Museum in Sydney, I saw a big board about their veneration for their elders. There is only one culture in the whole wide world that respects elders, that is Hindu culture. We can’t see such veneration in Ten Commandments or any other religious book. The first thing taught to the Vedic students was Mata, Pita Guru/ Deivam (Mother, father, teacher and/are God(s). Not only that, one of the daily Pancha Yajnas (five tasks) is the worship of ancestors. The Vedas are the oldest scriptures in the world. Those Vedas praise “their ancestors” (Purvebhayo Rishi:)! That means they are talking about thousands of years before the Rig Vedic times. The Australian aborigines also held Elders in high esteem. All male elders are called uncles and female elders are called aunties by the aorigines. It is practised in Hindu families until today:

 

Look at the board:

IMG_2336

Some of their beliefs about life, death, natural forces like water, fire, wind etc., Gotras(neighbour groups) and the animals are sililar to the Vedic beliefs. When I read them in the museum I was reminded of the Vedic mantras. I will deal with them in the second part of this article. Now I will conclude by giving a Vedic Mantra where elders were praised:

“Gone are the mortals who in former ages

Beheld the flushing of the early morning;

We living men now look upon her shining;

Those will be born who shall hereafter see her” –(R.V.1-113-2 A A Macdonells Translation)

 

Kailash= Uluru= Fujiyama=Mt Meru

Mountain Lord, we speak to thee with blissful words,

“So that all that is moving and living

May, free from disease, have happiness of heart” — (Y.V.Vs 16-4)

Even the Brahmins invoke Gayatri three times every day from the High Mountains. After the prayer she is requested to go back to the top of the hills (Uttame Sikare Devi……)

 

So God in the mountain is part of a Hindu belief. It is no wonder the solitary hill is revered by the aborigines. It is the Mount Kailash of Australia!

One more amazing similarity is that the people who hold this sandstone rock a sacred object are ‘ANANGU’ people. The word Anangu is used in Sangam Tamil literature lot of times to denote divinities, venerable spirits that occupy all natural objects rocks, water sources, hills and holy places! Somehow the old Tamil world has crept into their language.

uluru2

Picture of Uluru (Ayers Rock in Australia)

To be continued………………..