Adi Sankara, Andal and Alangium hexapaetalum (Post No.4825)

Written by London Swaminathan 

 

 

Date: 17 MARCH 2018

 

 

Time uploaded in London – 13-52

 

Post No. 4825

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

Great men think alike! So, no one would believe that one copied it from the other. But there is a strange coincidence between Andal and Adi Shankara. Andal has composed two poems Thiruppavai and Nachiar Thirumozi. Adi Shankara mentioned a plant known as Azinjil in Tamil and Ankola in Sanskrit, in his hymn Sivananda Lahari. Though Andal did not mention this plant in her hymn Nachiar Thirumozi, a commentator has mentioned the plant and its strange properties.

In the commentary to Nachiar Thirumozi (4th Thirumozi, Fourth poem), Periyavachan Pillay says the following:

“The Kadamba tree which was burnt down due to the poison spit by the Kaliya snake, came back to life at the touch of Krishna’s feet. One may wonder how was it possible. Don’t you know that the mango seed smeared with Ankola (tree) oil becomes a tree at once and bears fruits? If it is so, cant Vishnus’s feet which secretes Amrita (elixir of life, ambrosia) for ever revive a tree?

 

The common belief is that the seeds of the Ankola (azinjil in Tamil) tree falls on the ground and when the lightning strikes the seedS go and stick to the tree. If the seeds (fruits) are collected at that time and crushed into oil and used on the mango seed, it would sprout into a full tree IMMEDIATELY and bear fruits. Another example is Rama’s feet turned a stone into a woman ( Ahalya)…… The commentary continues……………

 

So the miraculous properties of the Ankola tree are used by the commentators and composers for at least 2000 years.

 

My Visit to Singaperumal Koil

When I went to Singaperumal Koil in the first week of March 2018, I was surprised to see this tree in the hillock around the temple. It was written on the rock that Nachiar Thirumozi commentary speaks about the miraculous property of this plant. It also says that those wanted to become a genius or those who wanted to get married quickly or get an issue, have to take a thread from their clothes and hang it on the tree! As soon as I saw the tree, I remembered my old article about this plant (Please see below)

 

Following is my research article published in this blog on 21st August 2013.

Adi Shankara & Alangium hexapetalum

 

Adi Shankara, the greatest philosopher of India uses lot of similes from nature to illustrate Advaita philosophy. In one sloka he used four birds. I have written about it in my earlier post. One of his interesting observations is about a tree called Ankola in Sanskrit, Alinjil in Tamil and Alangium hexapetalum in botanical term. Its other variety is Alangium salvifolium.

 

‘’ True Bhakti or devotion is explained with the help of Ankola tree and magnet in Sivananda Lahari and Viveka Chudamani of Adi Shankara.

Ankolam nijabeejasanthathi syaskanthopalam suchika………… (Sivananda Lahari, verse 61)

 

 

Sri Shankara has explained what real Bhakti is. The relation between the devotee and Iswara(God) is explained with reference to five examples. They are the tree known as Ankolam and its seeds; the magnet and the needle; a chaste woman and her husband; a creeper and a tree; and a river and the ocean.

 

The ankola tree (Azinjil in Tamil) is found in the forest. It is said that when its fruits fall to the ground, the seeds, liberated from the fruit by some compelling force within, move close to the trunk of the tree, gradually climb up, and get inseparably attached to the tree. During my travels, I was shown this tree in a forest. I saw the seeds sticking o the trunk of the tree, though I was not able to observe the actual movement of the seeds from the ground to the tree. This example of the seeds which fall away from the tree struggling back and attaching themselves to the tree, is denoted by the words ‘’aankolam nija beeja santatih’’.

—- Kanchi Paramacharya’s Talk on February 8, 1958 in Madras (Page 90/91 ‘Acharya’s Call Part 2)

 

Later Tamil literature Seevaka Chintamani refers to this tree. This tree and its parts have got medicinal properties. It has got anti microbial activity. It is traditionally used for tonic and treatment of haemorrhoids (Piles complaint).

Andal posted by Ponnambalam Stapathy

ஞானாநந்த தபோவன அதிசயம்- செவ்வாய் கிரஹ ஞானிகள் (Post No.4824)

Written by London Swaminathan 

 

 

Date: 17 MARCH 2018

 

 

Time uploaded in London – 6-20 AM

 

Post No. 4824

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகிலுள்ள திருக்கோவிலூருக்குச் சென்றேன். தென் பெண்ணை ஆற்றின் கரையில் அழகான சூழ்நிலையில் ஞானாநந்த தபோவனம் உள்ளது. அங்கு விலைக்கு வாங்கிய மலரில் (புஸ்தகத்தில்) ஒரு அதிசயச் செய்தியைப் படித்தேன்; எனக்கு முழுதும் விளங்கவில்லை; உங்களுடன் அதைப் பகிர்வேன் .

திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு இடங்களில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருக்கோவிலூரில் பல முக்கிய இடங்கள் உள; அவற்றில் சில:– சிவன் கோவில், உலகளந்த பெருமாள் கோவில், ஞானாநந்தா தபோவனம் மற்றும் பல ஆஸ்ரமங்கள்.

 

நான் சிறு பையனாக இருந்தபோது எங்கள் அண்ணன் இருவருக்கும் திருப்பதியில் பூணூல் போட்டார்கள். எனது தந்தை வேங்கடராமன் சந்தானம் மதுரையின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான டி.வி.எஸ்-சுக்கு நெருக்கமானவர். அங்குள்ள ராமசந்திரன் என்பவர் பெரிய காரையும் கொடுத்து, நல்ல டிரைவரையும் கொடுத்து எங்களை ஊர்வலம் அனுப்பினார். அப்போது வரும் வழியில் திருக்கோவிலூருக்கும் சென்றதாக நிழல் போல சில நினைவுகள்.

 

நான் பள்ளிப் படிப்பு படிக்கையில் திருக்கோவிலூரில் தபோவனம் (ஆஸ்ரமம் அமைத்த) சுவாமி ஞானாநந்தா மதுரைக்கு வந்தார். எந்த சுவாமிகள் மதுரைக்கு வந்தாலும் மிகப்பெரிய ‘பப்ளிசிட்டி’ கொடுப்பது எங்கள் தந்தயின் கீழ் இருந்த மதுரை தினமணி மட்டுமே! அந்தக் காலத்தில் ஆன்மீகச் செய்திகளை முதல் பக்கத்தில் வெளியிடுவது ‘’ஹராம்’’ (அபச்சாரம்) என்று கருதினர். மதுரை தினமணிப் பொறுப்பாசிரியர் வெ. சந்தானம் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இதன் காரணமாக மதுரைக்கு சுவாமி ஞானாநந்தா வந்தபோது பழக்கடை தங்கவேலு, அவரது அம்மன் சந்நிதி பழக்கடையின் மாடியில் சுவாமிகளை தரிசிக்க எங்கள் குடும்பத்தை அழைத்து இருந்தார்; அடியேனும் ஒட்டிக்கொண்டேன்; அப்பொழுது அவரது தரிசனம் கிடைத்தது. எங்கள் வீட்டின் சுவாமி அறையில் இருந்த 108+ சாமியார் படங்களுடன் சுவாமி ஞானாநந்தா படமும் பூஜையில் இடம் பெற்றது. அது முதற்கொண்டு  அவருக்கும் பூ வைப்போம்.

நீண்டகாலமாக திருக்கோவிலூர் செல்ல வேண்டும் என்ற ஆவல், இந்த முறை இந்தியாவுக்குச் சென்றபோது நிறைவேறியது (7-3-2018). தபோவனம் நல்ல அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது. காலை பத்தரை மணிக்குக் காலை பூஜை முடிந்துவிடும் என்பதால் விருத்தாசலத்தில் இருந்து சிட்டாகப் பறந்தோம்; சமாதியைத் தரிசித்தோம்; வலம் வந்தோம் புகைப்படம் எடுத்தோம். நன்கொடை கொடுப்பதற்குப் பதிலாக புத்தகங்கள் வாங்கி ஆஸ்ரமத்துக்கு பணம் அளித்தோம் ; ஒரு புஸ்தகம் 1999-ல் வெளியான கும்பாபிஷேக மலர். அதில் ஹரிதாஸ் சுவாமிகள் முதல் பலரும் அரிய பெரிய கட்டுரைகள் எழுதி இருந்தனர். அத்தனையையும் படித்+தேன். அது ஒரு படி, தேன் (one measure of honey) போல இனித்தது.

 

(ஸ்டாலின் பற்றிய நூலைப் படித்தேன்; அது ஒரு படி, தேன் என்பது கலைஞர் கருணாநிதி சொன்னது). நிற்க

 

யார் இந்த சுவாமி ஞானாநந்தா?

கர்நாடகத்தில் மங்களூரில் பிறந்து, வடக்கில் ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியாராக சில காலம் இருந்து, இமய மலைக்கு மீண்டும் சென்று தவம் செய்து, பின்னர் நேபாளம் முதல் இலங்கை வரை பயணம் செய்து, தமிழ்நாட்டில் ஆட்டையாம்பட்டி ஏற்காடு முதலிய சில இடங்களில் ஆஸ்ரமங்கள் அமைத்து, இறுதியில் திருக் கோவிலூர் எனும் புனித க்ஷேத்ரத்தில் தபோவனம் நிறுவி, ஹரிதாஸ் சுவாமிகள் போன்ற பல பக்தர்களை உருவாக்கி, புகழ் மணமும் பக்தி மழையும் பொழிந்து 1974-ஆம் ஆண்டில் சமாதி அடைந்தார் ஞானாநந்தா.

இவருடைய சமாதி ஜீவ சமாதி- அதாவது பூத உடல் மறைந்தாலும் அவர்கள் அங்கே எப்போதும் இருந்து அருள் புரிவர். சுவாமிஜியின் குரு- ஜோதிர் மடத்தின் தலைவர் சிவரத்ன கிரி.

 

இவரைப் பற்றிய இரண்டு அதிசயச் செய்திகள்:

இவர் 150 ஆண்டுகள் வாழ்ந்தாராம்; இவர் என்று பிறந்தவர் என்பது யாருக்கும் தெரியாது; கர்நாடகத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவர் பேச்சுவாக்கில் சொன்ன செய்திகளில் இவர் ராமலிங்க சுவாமிகள் (வடலூர் வள்ளலார்) முதலிய பல பெரியோரைச் சந்தித்தவர் என்பது புலப்படும்.

 

இரண்டாவது செவிவழிச் செய்தி என் தந்தை மூலம் அறிந்தது- இவர் சமாதி நிலையில் அடிக்கடி இருந்ததால் உண்மையில் பூத உடலை விட்டுச் சென்றாரா என்பது பக்தர்களுக்குப் புதிராக இருந்ததாம்; பல நாட்களுக்கு உடல் அசைவில்லாமல் இருக்கவே காஞ்சி முனிவர்- மஹாபெரியவர்- சங்கராசார்யாரிடம் கருத்து கேட்டனராம்; அவர் குறிப்பிட்ட சில நாட்களைச் சொல்லி- அதற்குள் எழுந்திருக்காவிடில் சமாதியில் இறக்கிவிடுங்கள் என்று சொன்னவுடன் சீடர்கள் அப்படிச் செய்தனராம்.

 

இவை அனைத்தும் உண்மை என்றே நான் நம்புகிறேன்.

தபோவன மலரில் பல அதிசயங்கள் எழுதப்பட்டபோதும் நான் படித்த ஒரு அதிசயச் செய்தி எனக்கு விளங்கவில்லை. தபோவனம் எப்படி விரிவடையப் போகிறது என்பதெல்லாம் அவர் சொன்னபடியே நடந்தது. அவர் இருக்கும் காலத்திலேயே தபோவனத்தில் பல சந்நிதிகளையும் வைத்து பூஜை செய்யவைத்தார். ஆனால்…………..

 

ராஜ மாணிக்கம் என்பவர் எழுதிய கட்டுரையில் சுவாமிகள் பம்பாய் சென்று செவ்வாய் மண்டல ஞானிகளை அழைத்துவரப்போவதாகவும் அப்போது சுவாமிகளின் 1008 சங்க நாதம் ஒலிக்கும் என்றும் உலகமே சுபிட்சமாக வாழும் என்றும் இந்த நிகழ்வினைக் கண்டு உலகமே ஆச்சர்யப்படும் என்றும் — அந்தக் கட்டுரை முடிகிறது.

 

ஒரு பக்தரின் எழுத்து மூலம் வந்த செய்தி என்பதால்,  ஞானாநந்தா என்ன சொன்னார், எந்த சூழ்நிலையில் சொன்னார், செவ்வாய் மண்டல ஞானிகள் என்பது நாம் அறிந்த கிரஹங்களில் ஒன்றான செவ்வாயா அல்லது வேறு பொருள் உடைத்தா  என்பது விளங்கவில்லை.

சுவாமிகளின் பூத உடல் சமாதியில் இறக்கப்பட்டு விட்டாலும் அவருடைய அருள் அவர் சொன்னபடியே இன்றும் அங்கே இருப்பதை நாம் உணரமுடிகிறது. ஆகவே அவர் புகழ் உடம்பு அந்த அதிசயத்தை நிகழ்த்தும் என்று எதிர் பார்ப்போமாக ( ஆஸ்ரம மலரில் வெளியான கட்டுரையின் கடைசி பக்கத்தை இங்கே இணைத்துள்ளேன்; ப டித்து மகிழ்க.

 

ஞானாநந்த சுவாமிகளுக்கு நமஸ்காரம்; அவர் புகழ் ஓங்குக!

 

–subham–

சாஸ்திரங்கள் கூறும் இரகசியங்கள்! (Post No.4823)

Date: MARCH 17,  2018

 

 

Time uploaded in London- 5-15 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4823

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

 

 

ஞான ஆலயம் குழு வெளியீட்டுப் பத்திரிகையான ஸ்ரீ ஜோஸியம் மாத இதழில் மார்ச் 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

சாஸ்திரங்கள் கூறும் இரகசியங்கள்!

 

ச.நாகராஜன்

ஜோதிட சாஸ்திரம் உள்ளிட்ட நமது சாஸ்திரங்கள் நுட்பமானவை. பல நூற்றாண்டுகளில் கிடைத்த அனுபவத்தாலும், உள்ளுணர்வாலும் மனித குலத்திற்கு நலம் பயக்கும் நாட்களையும் நட்சத்திரங்களையும் மஹரிஷிகள் கண்டு அதை ஜோதிடம் உள்ளிட்ட சாஸ்திர நூல்களில் தொகுத்து வழங்கியுள்ளனர்.

 

தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களின் தொகுப்பைக் கீழே காணலாம்.

 

பஞ்சக நட்சத்திரங்களும் பஞ்சக் யோகமும்!

 

அவிட்டம் , சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திரங்கள் பஞ்சக் என்று அழைக்கப்படுகின்றன. பஞ்சகம் என்றால் ஐந்து. இந்த ஐந்து நட்சத்திரங்கள் உள்ள ராசிகள் கும்பமும் மீனமும் ஆகும். சந்திரன் இந்த ராசியில் சஞ்சரிக்கும் காலம் பஞ்சக் கால் என அழைக்கப்படுகிறது. இதை பஞ்சக யோகம் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறும்.

இந்த நட்சத்திரங்களில் (அவிட்டம் கடைசி இரு பாதங்கள் மட்டும்) புல், மரம் வெட்டக் கூடாது.

தென் திசையில் பயணம் மேற்கொள்ளக் கூடாது

படுக்கை அமைக்கக் கூடாது

புதிய பிஸினஸ் துவங்கக் கூடாது

பிரேத தகனம் கூடாது. (அப்படியானால் ஐந்து நாட்கள் எப்படி ஒரு பிரேதத்தை தகனம் செய்யாமல் வைத்திருப்பது என்ற கேள்வி எழும். இப்படி எரித்தால் இன்னும் ஐந்து மரணம் வரும் என்பதாலேயே இது சொல்லப்படுகிறது. என்றாலும் பிரேதத்தை தகனம் செய்யும் போது பரிகாரமாக இன்னும் ஐந்து மலர், மாவு ஆகியவற்றினாலான உடல்களையும் சேர்ந்து எரிப்பது மரபு.

சுப காரியங்கள் விலக்கப்பட வேண்டும். சுப காரியம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் உரிய பரிகாரத்தைத் தெரிந்து கொண்டு செய்வது வழக்கம்.

பஞ்சக காலம் என்பது மாதம் ஒரு முறை அதாவது 27 நாள் சுழற்சியில் வரும். இதை முன்னதாகவே கணித்து நமது திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம்.

 

புத்தாடை அணிவதற்கான தினங்கள்!

 

புதன், வியாழன், வெள்ளி ஆகிய  கிழமைகளில் புத்தாடைகளை அணிய வேண்டும்.

  • முகூர்த்த மார்த்தாண்டம்

 

புத்தாடை அணிவதற்கான நட்சத்திரங்கள்!

 

அவிட்டம், புனர்பூசம்,ஹஸ்தம்,சித்ரா,ஸ்வாதி,விசாகம், அனுஷம்,பூசம்,அஸ்வினி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் புத்தாடை அணிய வேண்டும்.

– முகூர்த்த மார்த்தாண்டம்

 

எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் பொதுவான விதிகள்!

 

1)பணம் (செல்வம்), உறவினர், நிலை, தொழில், படிப்பு ஆகிய ஐந்தும் மிகவும் மதிப்பு வாய்ந்தவை. இவற்றில் ஒன்றை விட ஒன்று அதிக சிறப்பு வாய்ந்தது என்று கொள்ள வேண்டும்.

– மனுஸ்மிருதி, பவிஷ்ய புராணம், யாக்ஞவல்ய ஸ்மிருதி, கூர்ம புராணம்

2) எல்லா தார்மீக காரியங்களிலும் முதலில் நவக்ரஹ சாந்தி செய்ய வேண்டும். – வைஸ்வாரம்ப ஸ்மார்த்த சூத்ரம்

3) வீட்டின் ஸ்தீரி இல்லாமல் ஒரு யக்ஞ காரியமும் செய்யக் கூடாது.

-ஆனந்த ராமாயணம்

4) பாடம் படித்தல் (ஓதுதல்), தேவி பூஜை, வஸ்திரம், நகை அணிதல்,ஆகியவற்றை வியாழக்கிழமைகளில் செய்ய வேண்டும்.

-கருட புராணம்

 

சந்தியாகாலத்தில் செய்யக் கூடாதவை

 

சந்தியாகாலத்தில் 1) உணவு உண்ணக் கூடாது 2) உடல் உறவில் ஈடுபடக்கூடாது 3) உறங்கக் கூடாது 4) வேதம் ஓதக் கூடாது.

சத்வாரி கலு கர்மாணி சந்த்யாகாலே விவர்ஜியேத் |

ஆஹாரம் மைதுனம் நித்ராம் ஸ்வாத்யாம் ச சதுர்தகம் ||

  • ஸ்மிருதி சந்தர்ப: – 76

 

இப்படி நுணுக்கமாக அனைத்து விஷயங்களையும் நமது சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.

 

அனைவரும் அனைத்து சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற முடியாது என்பதாலேயே இதில் விற்பன்னராக உள்ள சாஸ்திர பண்டிதர்கள் அல்லது ஜோதிடரைக் கலந்தாலோசித்து அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும் என்ற எளிய வழியை முன்னோர்கள் ஏற்படுத்தினர்.

 

குடும்ப புரோகிதர், குடும்ப ஜோதிடர் ஆகியோரைக் கலந்தாலோசித்த பின்னரே ஒரு காரியத்தைச் செய்வது என்ற நடைமுறை சிக்கலான விஷயங்களை ஒரு குடும்பம் எதிர்கொள்ள நேரிடாதவாறு பாதுகாத்தது.

இன்றும் இதை நடைமுறையில் அனுஷ்டிப்போர் சிக்கலின்றி வாழ்வதைப் பார்க்கலாம்.

 

 

***

 

 

Hindu Saint Gnanananda and Planet Mars! (Post No.4822)

 

Written by London Swaminathan 

 

 

Date: 16 MARCH 2018

 

 

Time uploaded in London – 13-35

 

Post No. 4822

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

It is a strange link indeed! Swami Gnanananda was born in Mangalore and became the Head of Jyotir Mutt, one the Mutts established by Adi Shankara. After some time, he relinquished that post and did penance in the Himalayas. He travelled from Tibet and Nepal to Sri Lanka in the south. He established his own Ashrams in various places in Tamil Nadu, but settled in Thiukkoilur, where he established a temple and Tapovanam (Forest of penance). It is said that he lived for 150 years and he was a contemporary of Vadalur Vallalar- Sri Ramalinga Swamikal. Gnanananda attained Samadhi in 1974. No one knew the exact year of his birth.

 

My connection with Thirukkoilur

Tirukkovilur or Kovalur is on the banks of Pennai River, located about 30 kilometres from Viluppuram or Tiruvannamalai.

My brother Prof Suryanarayanan is talking with the priest.

When I was a school boy, my father took us (the family) to Tirukkovilur after performing Punul (sacred thread) ceremony to my older brothers. I don’t remember much now. But we had a picture of Swami Gnanananda at home in Madurai and we worshipped him along with other saints’ pictures. His disciple Haridas came to Madurai and spread his message through Bhajans. He himself wrote about the greatness of Swamiji.

 

When Swami Gnanananda came to Madurai, Pazakkadai/Fruitshop Thangavelu invited us to have his darshan. It was arranged on the top floor of the fruit shop itself. My father had a chat with him and all other members of the family were just observers. When Swamiji attained Siddhi, I was working as a Senior Sub Editor in Madurai Dinamani newspaper. I wanted to visit the Tapovanam for very long. When I went to attend the Fifth World Saiva Siddhanta Conference in Chennai in March 2018, I targeted three new places and successfully finished them: Madurantakam Rama Temple, Vadalur Vallalar  Ashram and Tirukkovilur Tapovanam.

It is situated in a quiet place and anyone can feel the divine vibrations. It is closed at 10-30 am in the morning after Puja and opens in the evening. Fortunately, I and my brother reached the place at 10 am ad had the darshan of the Samadhi.

 

I bought two books so that the money would benefit the ashram. One of the books is a souvenir published in 1999. It has very good articles. Though I did not go for any miracles or anecdotes about miracles, one of the articles had a strange information of Swamiji speaking about the Saints of  Mars zone. But it came through the writing of another hand. So I did not know how far the information is correct and what he meant by that (see the version in Tamil posted here):

A rough translation of the last paragraph of the article written by A R P N Raja Manikkam is as follows:

“To make our country stand first in spiritual and mundane things, I go to Mumbai to bring the Jnanis/saints from Mars zone to Tapovanam; then swamijis 1008 conch shells will sound; Ramarajyam will begin; the world will be a prosperous place. It will be a great wonder to everyone. This is Swamiji’s resolve/ conclusion.”

 

Since Swamiji is no more, we don’t know what he meant by saints in planet Mars.

 

But the visit to the ashram will be a great experience. And this holy town has two more famous temples of Shiva and Vishnu. Viluppuram district has many more temples in the surroundings. It is worth visiting the town; better stay for a whole day or stay overnight.

 

Swamiji’s teachings are very simple and universal; anyone can follow them irrespective of one’s faith.

-Subham–

உள்ளதும் கெட்டதடா நொள்ளைக் கண்ணா (Post No.4821)

Written by London Swaminathan 

 

Date: 16 MARCH 2018

 

Time uploaded in London – 5-50 am

 

Post No. 4821

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

தமிழ்ப் பழமொழிகளும் சாணக்கிய நீதியும்

 

இருபதாயிரத்துக்கும் மேலான தமிழ்ப் பழமொழிகள் உள்ளன. இந்தப் பழமொழிகளில் பல, பாரதம் முழுதும் உள. அவைகளை ஒப்பிட்டு ஆராய்ந்தால் இமயம் முதல் குமரி வரை நம்பிக்கைகள் ஒன்றே என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும்.

 

இதோ! 2300 ஆண்டுப் பழமையான சாணக்கிய நீதியின் ஸ்லோகங்களும் இணையான பழமொழிகளும்

அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே என்பது தமிழ்ப் பழமொழி.

முயல்விட்டுக் காக்கைப்பின் போனவாறே- என்று அப்பர் பெருமான் தேவாரம் நாலாம் திருமுறையில் பாடுகிறார். புதரில் இருக்கும் இரண்டு பறவைகளைவிட கையில் இருக்கும் ஒரு பறவை மேல் A bird in hand is better than two in the bush என்பது ஆங்கிலப் பழமொழி. ‘உள்ளதும் கெட்டதடா நொள்ளைக் கண்ணா’ என்றும் ‘கையில் வெண்ணை இருக்க நெய்யிற்கு அலைவானேன்’ என்றும், ‘உள்ளங்கையில் தேனை வைத்துக் கொண்டு புறங்கையை நக்கினாற் போல’ என்றும் தமிழில் செப்புவர்.

 

 

யோ த்ருவாணி பரித்யஜ்ய ஹ்யத்ருவம் பரிஷேவதே

த்ருவாணி தஸ்ய நஸ்யதி ஹ்யத்ருவம் நஷ்டமேவ ஹி

 

-சாணக்கிய நீதி 1-13

பொருள்:

உறுதியான ஒன்றை விட்டு விட்டு உறுதியற்ற- நிச்சயமற்ற- பொருளை நாடுபவன், இருக்கும் ஒன்றையும் இழந்து விடுவான்; இல்லாத பொருள் கிடைக்காது என்பது ஏற்கனவே அறிந்த விஷயம்.

xxx

சிறு துளி பெரு வெள்ளம்

ஜல பிந்து நிபாதேன க்ரமசஹ பூர்யதே கடஹ

ஸ ஹேதுஹு ஸர்வ வித்யானாம் தர்மஸ்ய ச தனஸ்ய ச

12-21

பொருள்:

“சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் விழுந்தாலும் ஒரு பானை நிரம்பி விடும்.  இதுதான் மிகப் பெரிய ரஹஸியம் — செல்வம் சேர்வதும் இப்படித்தான், தர்மம் வளருவதும் இப்படித்தான்”.

 

எதிலுமே சிறுகச் சிறுக சேர்வது பின்னர் பெரும் கடல் போலப் பெருகிவிடும். பல ஓடைகளின் நீர் சேர்ந்து, நதிகளாகப் பெருகி சமுத்திரத்தை உண்டாக்குகின்றன. இயற்கையும் கூட நமக்கு கற்பிப்பது இந்த ரஹஸியமே!

xxx

 

மன்னன் எப்படி, மன்னுயிர் அப்படி

யதா ராஜா ததா ப்ரஜாஹா (As the Ruler, So the Ruled)  என்பது ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள இணையான பழமொழி. பகவத் கீதையில் கண்ண பிரானும் ‘பெரியவர்கள் எதைச் செய்கிறார்களோ பொது மக்களும் அதையே செய்வர் (3-21) என்று சொல்லுவார்.

 

சாணக்கியன் நுவல்வதும் அஃதே!

ராக்ஞி தர்மிணி தர்மிஷ்டாஹா  பாபே பாபாஹா ஸமே ஸமாஹா

ராஜானம் அனுவர்தந்தே யதா ராஜா ததா ப்ரஜாஹா- 13-7

 

பொருள்

அரசன் நேர்மையாளனாக இருந்தால் மக்களும் அப்படியே இருப்பர்; அவன் பாபம் செய்தால், மக்களும் பாவம் செய்வர்; அவன் நடு வழியில் சென்றால் அவர்களும் நடு வழியில் செல்லுவர்; மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி.- 13-7

 

மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி – என்பதைப் பொது வாழ்விலும் காணலாம். ஆட்சியாளர்களே ஊழல் செய்தால் மக்களும் கெட்டுப் போவார்கள்

 

xxx

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

 

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு – என்று பாடினான் சொற்தேரின் சாரதியாம் பாரதி.

 

ஒற்றுமையே உயர்வு என்பதற்குப் பல கதைகளை பஞ்ச தந்திரம் ‘மித்ர பேதம்’ என்னும் பிரிவில் எடுத்துரைக்கும்

 

சாணக்கியன் மொழிவதும் அஃதே!

பஹூனாம் சைவ ஸத்வானாம் ஸமவாயோ ரிபுஞ்ஜயஹ

வர்ஷதாஅதரோ மேகஸ்த்ருணரபி நிதார்யதே

14-4

 

பல கைகள் ஒன்று சேர்ந்தால், எதிரிகளை வென்று விடலாம்; வைக்கோலைச் சேர்த்துக் கட்டிய பாயும் பெரு மழையைத் தடுக்கவில்லையா!

 

xxx

 

குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு

குடித்து விட்டு, வீட்டிற்கு வந்து பிள்ளைகளையும் மனைவியையும் அடிக்கும் குடிகாரனை எல்லோரும் கண்டித்தவுடன் நாளை முதல் குடிக்க மாட்டேன் இது சத்தியம் என்பான்; ஆனால் மறு நாளே குடிக்கச் செல்லுவான். குடி போதையில் இருக்கும் போது மனைவியைப் பார்த்து உனக்கு தங்கச் சங்கிலி, வைர நெக்லஸ் வாங்கித் தருவேன் என்பான். காலையில் எழுந்தவுடன் — குடி போதை தெளிந்தவுடன் கதையே மாறிவிடும்.

 

இதே போலத்தான் ஸ்மசான வைராக்யம்– சுடுகாட்டு சபதம்-

 

யாராவது நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் இறந்தவுடன், அடடா! வாழ்க்கையே அநித்யமானது- உடனே நல்லது செய்துவிட வேண்டும்- கெட்ட வழியில் செல்லக்கூடாது- செல்ல மாட்டேன் என்று மனைதுக்குள் சபதம் செய்வர். பத்து நாள் சென்ற பின்னர் ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்று ஆரம்பித்து விடுவர். இதை ராமகிருஷ்ண பரம ஹம்ஸர் – உள்ளிப்பூண்டு வைத்த பாத்திரத்துடன் ஒப்பிடுவார். அந்த வாடை என்றுமே போகாது

 

இதோ சாணக்கியன் சொல்

 

தர்மாக்யானே ஸ்மசானே ச ரோகிணாம் யா மதிர்பவேத்

ஸ ஸர்வதைவ திஷ்டேச்சேத் கோ ந முச்யேத் பந்தனாத்

14-6

 

பொருள்

ஒரு சமயச் சொற்பொழிவினைக் கேட்கும் நோயாளி மனதில் ஓடும் எண்ணங்களும், சுடுகாட்டில் இரங்கல் தெரிவிக்கும்போது மனதில் ஓடும் எண்ணங்களும் நிலையாக மனதில் தங்கிவிட்டால் எல்லோரும் பற்றற்றான் பற்றினைப் பற்றிவிடுவரே! பந்தங்கள் அறுபட்டு மோட்ச சாம்ராஜ்யத்துக்குச் சென்று விடுவது எளிதாகி விடுமே!

 

xxx

 

விநாச காலே விபரீத புத்தி

விதி கெட்டுப் போனால்

மதி கெட்டுப் போகும்

ந நிர்மிதஹ கேன ந த்ருஷ்டபூர்வஹ

ந ச்ரூயதே ஹேம மயஹகுரங்கஹ

ததாபி த்ருஷ்ணா ரகுநந்தனஸ்ய

விநாச காலே விபரீத புத்திஹி

 

-சாணக்கிய நீதி, அத்யாயம் 16, ஸ்லோகம் 5

 

பொருள்:

உலகில் தங்க நிற மான் என்பது கிடையவே கிடையாது. யாரும் முன்னால் பார்த்ததும் இல்லை; யாரும் அப்படி ஒன்று இருப்பதாகக் கேட்டது கூட இல்லை. ஒருவருக்கு கெட்ட காலம் வரும்போது புத்தி பேதலித்து விடும்.”

(தங்க நிற மான் ஒன்றைப் பார்த்து சீதா தேவி ஆசைப்பட்டதால், ராமாயணம் என்னும் கதை வளர்ந்தது பற்றிய குறிப்பு இது )

–Subham—

(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்? பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

 

 

 

Part 2 க்ராஸ் டாக்கில் உதயமானது அர்த்தமுள்ள இந்துமதம் (Post No.4820)

Date: MARCH 16,  2018

 

 

Time uploaded in London- 3-45 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4820

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

க்ராஸ் டாக்கில் உதயமானது கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்; ராஜாஜியின் தூண்டுதலால் உதித்தது கடைசிப் பக்கம்! -2

 

Part-1 was posted on 14th March, 2018

 

ச.நாகராஜன்

 

கல்கியின் உதவி ஆசிரியர் ரா.வீழிநாதன் மிகுந்த தயக்கத்துடன் கவிஞரின் இல்லம் சென்றார். அங்கு அவரது உதவியாளர் இராம.கண்ணப்பனைச் சந்தித்தார்.

 

“கல்கியின் சார்பாகக் கவிஞரைச் சந்திக்க வேண்டும். அவர் கல்கியில் எழுதுவதற்குச் சம்மதிப்பாரா?” என்றும் கேட்டார்.

“கவிஞரோ குழந்தை உள்ளம் கொண்டவர். நீங்கள் தாராளமாக அவரைச் சந்திக்கலாம்” என்றார் கண்ணப்பன்.

சந்திப்பு நிகழ்ந்தது.

 

மறுநாள் மாலையில் கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரன் அவர்களை கவிதா ஹோட்டல் மண்டப்பத்திற்குக் கூட்டி வந்தார்.

கடைசிப் பக்கம் என்ற தலைப்பில் வாரந்தோறும் எழுத கவிஞர் ஒப்புக் கொண்டார்.

 

கடைசிப் பக்கம் கல்கியில் வாசிக்கப்படும் முதல் பக்கமாக ஆனது.

 

அர்த்தமுள்ள இந்துமதம் எதையெல்லாம் தெரிவித்ததோ அதை கடைசிப் பக்கமும் தெரிவித்தது.

 

இதில் அவ்வப்பொழுது அருமையான கவிதைகள் வேறு.

பின்னர் கடைசிப் பக்கம் முதல் பக்கம் ஆனது.

பின்னர் கல்கியில் ஏதோ ஒரு பக்கத்தில் கவிஞரின் எழுத்துக்கள் இடம் பெற்றன. வாசகர்கள் அமோகமாக கவிஞரின் எழுத்துக்களை வரவேற்றுப் படித்தனர்.

 

அன்பார்ந்த நேயர்களுக்கு என்ற தனது பகுதியில் கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரன் 1976ஆம் ஆண்டு ஒரு கல்கி இதழில் இப்படி எழுதினார்:

 

“கண்ணதாசனைப் பொறுத்தவரை அவர் தமது பேனாவைச் செங்கோலோச்சித் தமிழை இலக்கிய உலகில் அரியாசனத்தில் அமர்த்தி விடும் ஆற்றல் வாய்ந்தவர் என்பது பற்றி யாருக்கும் ஐயமிராது. தமிழை அவர் ஆள்கிறாரா தமிழ் அவரை ஆள்கிறதா என்று புரியாத அளவுக்கு இன்றைய தமிழகத்தின் மிகச் சிறந்த சிந்தனையாளருள் ஒருவரான கண்ணதாசன் எழுத்தில் எழில் கொஞ்சுகிறது; நடையில் நயம் மிகுந்திருக்கிறது. ஆத்ம திருப்தி இல்லாமல் வருவாயைக் கருதி மட்டுமே அவர் சிலவற்றை எழுதியிருக்கலாம். அவரே அதை ஒப்புக் கொள்வார். ஆனால் தமிழுக்கு அவர் அளித்திருக்கும் சிறப்புக்கள் இதனை நாம் மறந்து விடச் செய்கின்றன.”

 

பின்னர் “சேரமான் காதலி” தொடரை அவர் எழுத ஒப்புக் கொண்டமையை அவர் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்.

இப்படியாக ராஜாஜியின் தூண்டுதலால் கல்கியின் நல்ல தொடர்பு கவிஞருக்குக் கிடைத்தது.

 

அதை ஒட்டு மொத்த தமிழர்களும் வரவேற்றனர்.

க்ராஸ் டாக்கும் நன்மை பயக்கும்; ராஜாஜி போன்ற பெரியோரின் நுட்பமான கவனமும் தமிழுக்கு நலம் தரும் என்பதை அர்த்தமுள்ள இந்து மதம் மற்றும் கடைசிப் பக்கம் ஆகியவற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

 

இந்தத் தொடர் இத்துடன் முற்றும்.

 

–Subham–

 

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! (Post No.4819)

Written by London Swaminathan 

 

Date: 15 MARCH 2018

 

Time uploaded in London – 16-22

 

Post No. 4819

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே

 

சுற்றி  வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா

 

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

 

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

 

 

என்று தமிழ்ப் பெரும் சித்தர் சிவவாக்கியர் பாடினார். இது 2300 ஆண்டுகளாகப் பாரதத்தின் தென் குமரி முதல் வட இமயம் வரை நிலவிய கருத்து என்பது சாணக்கிய நீதியைப் படித்தோருக்கு விளங்கும்.

சாணக்கியன் சொல்கிறான்,

படந்தி சதுரோ வேதான் தர்மசாஸ்த்ராண்யனேகசஹ

ஆத்மானம் நைவ ஜானதி தர்வீ பாகரஸம் யதா

 

மக்கள் நான்கு வேதங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் மீண்டும் மீண்டும் படித்தும் தன்னை அறியும் அறிவில்லாவிடில் என்ன பயன்? சுவையான உணவைப் பரிமாறும் கரண்டிக்கு அந்த உணவின் சுவை தெரியுமா?

–சாணக்கிய நீதி 16-12

 

 

சாணக்கியன் சொல்லும் மரபியல் விஞ்ஞானம்

சாணக்கியன் உலக மஹா அறிவாளி; அலெக்ஸாண்டர் காலத்தில் வாழ்ந்தவன்; 2300 ஆண்டுகளுக்கு முன்னரே அவன் மரபியல் பற்றிப் பேசுகிறான்; கருவிலேயே திரு உற்றதாக நாயன்மார்கள் பாடினர்; மாணிக்க வாசகரோவெனில் திருவாசகத்தில் ஒரு கருவின் பத்து மாத வளர்ச்சியைப் பாடினார்.

 

சாணக்கியன் பகர்வதாவது,

 

கருவில் இருக்கும்போதே கீழ்க்கண்ட ஐந்து விஷயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன– அவனது ஆயுள், வேலை, செல்வம், படிப்பு, மரணம்.

என்ன அதிசயம்!

இதைப் பார்க்கையில் ஜோதிடம் உண்மையே என்பது விளங்கும்.

 

இந்துக்கள் குழந்தை பிறந்த ஓராண்டுக்குப் பின்னர் குடும்ப ஜோதிடர் மூலம் ஜாதகத்தை எழுதி வாங்குவர்; அதில் அவர் அக்குழந்தையின் படிப்பு, ஆயுள், வேலை, செல்வ வளம் முதலியன குறித்து எழுதி விடுகிறார். இது 2300 ஆண்டுகளாக இருப்பது சாணக்கிய நீதி மூலம் தெரிகிறது:–

ஆயுஹு கர்ம ச வித்தம் ச வித்யா நிதனமேவ ச

பஞ்சைதானி ஹி ஸ்ருஜ்யதே கர்பஸ்தஸ்யைவ தேஹினஹ

4-1

 

ஒரு தாயின் கரு பத்து மாத வளர்ச்சியில் நோக்கும் ஆபத்துகளை போற்றித் திரு அகவல் என்னும் திருவாசகப்   பகுதியில் மாணிக்க வாசகர் பாடுகிறார். அவர் தேவாரம் அருளிய மூவர்க்கும் முதல்வர்.

 

 

யானை முதலா எறும்பீ றாய
ஊனமில் யோனியி னுள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா வுதரத்
தீனமில் கிருமிச் செலவினிற் பிழைத்தும்

  1. ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும்
    இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
    மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
    ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
    அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
  2. ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்
    ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
    எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
    ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
    தக்க தசமதி தாயொடு தான்படும்
  3. துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்
    ஆண்டுகள் தோறும் அடைந்தஅக் காலை
    ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
    காலை மலமொடு கடும்பகல் பசிநிசி
    வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்

(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்பிளாக்குகளிலும்ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல்சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும்குறை கூறவும்கண்டிக்கவும் உரிமை உள்ளதுமற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

 

–சுபம்–

Genetics and other Sciences in Chanakya Niti (Post No.4818)

Written by London Swaminathan 

 

Date: 15 MARCH 2018

 

Time uploaded in London – 14-47

 

Post No. 4818

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

Chanakya, one of the greatest geniuses of India, lived 2300 years ago. He was a statesman and an economist. Though he was not a scientist he has composed slokas on various subjects including science. Here are some slokas/couplets:

GENETICS

While  a being is still in womb the following five are created for him—

Life span, action, wealth, knowledge and death.

Chanakya Niti 4-1

 

aayuh karma ca vittam ca vidhyaa niddhanameva

pancaitaani hi srujyante garbastarayaiva dehinah

 

This sloka points out that astrology is true. One year after the birth of a baby, the horoscope of that baby is cast in Hindu houses. The family astrologer used to write the education, job, money matters and the life span of that child. So, we know that this type of belief existed 2300 years ago!

 

Manikkavasagar, one of the four great Saivite Tamil saints, also describe the development of foetus in the womb. He lived 1500 years ago in Tamil Nadu.

GEMMOLOGY

Hindu knowledge about gem stones is found in all the Tamil and Sanskrit books. Here is what Chanakya says,

Ruby is not found in every mountain, pearl is not met with in every elephant, good people are not found everywhere, sandal wood is not found in every forest.

2-6

saile saile na maanikyam mauktikam na gaje gaje

saadhavo nahi sarvatra candanam na vane vane

 

The belief about gem stones is same in Sanskrit and Tamil books. They believed that in addition to oysters, pearl is ‘born’ in bamboos, elephants and scores of plants and animals!

 

Hindus knew that ruby, sapphire, diamonds are available in certain places only. They knew the fauna and flora of the country. Even Kalidasa, who lived 2000 years ago (see my research article on Kalidasa’s age), sings about the sandal wood available In Tamil Nadu. This sloka points out that beliefs were same even 2300 years ago in a vast land mass. So foreign rulers were not the people who united India.

PHILOSOPHY

Will the ladle know the taste of the food it serves?

A Tamil Siddha sang ,

Will the ladle know the taste of the curry it serves?

 

Chanakya also says the same!

People who go through the four Vedas and Darmasastras (Law books) time and again, still they do not know their own self like a ladle the taste of the cooked food.

patanti caturo vedaan dharmasaastraanyanekasah

aatmaanam naiva jaananti darvii paakarasam yathaa

15-12

 

It is amazing to see that for 2300 years the same simile is used by Tamils and Sanskrit scholars to illustrate the same point.

 

TIME

Time brings close to death, it destroys them. It keeps awake while others are asleep. It is difficult to overstep time

6-6

 

kaalah pacati bhutaani kaalah samharate prajaah

kaalah supteshu jaagarti kaalo hi duratikramah

 

–subham–

 

 

ஜோதிடம் பலிக்குமா? குட்டிக்கதை (Post No.4817)

Pictures are from Facebook; posted by Lalgudi Veda

Written by London Swaminathan 

 

Date: 15 MARCH 2018

 

Time uploaded in London – 6-08 am

 

Post No. 4817

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

மதியால்  விதியை வெல்லலாம்

(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்? பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

 

விதியை மதியால் வெல்லலாம். இதற்கு ஒரு நல்ல கதை உண்டு.

 

திருமூலர் சொல்கிறார்:

கடவுள் அருளால் முன்னை வினையின் முடிச்சை அவிழ்க்கலாம்-

 

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்

பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்

சென்னியில் வைத்த சிவன் அருளாலன்றே

— திருமந்திரத்தில் திருமூலர்

 

பொருள்:

தன்னை உணர்ந்து அறிந்தவர்கள் தத்துவ ஞானிகள். இந்த மெய்ஞானிகள், பூர்வ ஜன்ம தீவினைப் பயனை தவிர்ப்பர். இனி வரும் வினைகளையும் தகர்த்து விடுவர்; அதாவது வினைக்கான கர்மங்களைச் செய்ய மாட்டார்கள். இவை அனைத்தும் சிவன் அருளாலே கிட்டுவதாகும். அதாவது இறைவன் அருள் இருந்தால் விதியை வெல்லலாம்.

நாயன்மார்களும் — குறிப்பாக அப்பர் சம்பந்தர், சுந்தரர்—, மேலும் மாணிக்கவாசகரும், ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்களும் இறையருளால் தீய வினைகள் பொடிபடும், தீயினில் தூசாகும் என்று பாடினர். மார்க்கண்டேயன், சத்தியவான் சாவித்திரி போன்ற புராணக் கதைகளும் அப்படியே மொழிகின்றன.

 

ஒரு ஊரில் ஒரு ஏழை வசித்து வந்தான்; எவ்வளவோ முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லை. எல்லையில்லாத வறுமையில் வாடினான். எல்லோரும் அருகிலுள்ள கிராமத்தில் இருக்கும் பிரபல ஜோதிடனைப் பார்க்கும்படி யோஜனை கூறினர். அவனும் அதற்குச் சம்மதித்தான்.

பக்கத்து ஊர் ஜோதிடனைப் போய்ப் பார்த்தான். அவன் ஏழையின் ஜாதகத்தைப்  பார்த்தவுடன்  முகத்தில் ஈயாடவில்லை’ -ஒரே திகில்; ஆயினும் அதை வெளிக்காட்டாமல் அந்த ஏழையைப் பார்த்து ”முடிந்தால்” நாளைக்கு வந்து பாருங்கள் என்றான்.

அவனும் கட்டாயம் வருகிறேன் என்று செப்பிச் சென்றான்; ஜோதிடனுக்கோ மனதுக்குள் ஒரே நகைப்பு! ஏனெனில் ஜாதகப்படி அந்த ஏழையின் வாழ்வு முடிந்துவிட்டது; அவன் எந்த நேரமும் இறக்க நேரிடும். மறுநாள் அவன் வரவே முடியாது என்பது ஜோதிடத்தில் தெரிந்த உண்மை.

 

அந்த ஏழை வீட்டுக்குத் திரும்புகையில் பேய் மழை கொட்டியது. அவன் ஒரு பாழடைந்த கோவிலில் தங்கினான். மழை நிற்கவே இல்லை. அவன் ஏழையானாலும் ஒரு பக்தன். ஆகவே அவன் மனத் திரையில் பல காட்சிகள் ஓடின. அட டா ! நான் பாழடைந்த கோவிலில்   அல்லவா நிற்கிறேன். கடவுளுக்கும் இவ்வளவு கஷ்டமா? நாளை நான் ஒரு லாட்டரிச் சீட்டு வாங்குவேன். எனக்கு மட்டும் பரிசு விழுந்தால், முதலில் இந்தக் கோவில் மண்டபத்தைப் புதுப்பிப்பேன்; பின்னர் தமிழ்நாட்டிலேயே உயர்ந்த ராஜ கோபுரம் கட்டுவேன்; சிதம்பரம், மதுரை, ஸ்ரீரங்கம், திருப்பதி போல பொற்கூரை போட்டு தங்க கோவில் ஆக்குவேன்; அதற்கும் பின் பணம் மிச்சம் இருந்தால் என்னைப் போன்று வறுமையில் வாடும் ஏழைகளுக்கு அன்ன தானம் செய்வேன் என்று எண்ணிக் கொண்டே போனான். மழையும் நின்றது. வீட்டுக்குச் சென்றான்.

 

மறு நாள் பொழுது புலர்ந்தது; ஆவலோடு ஜோதிடர் வீட்டுக்குச் சென்றான்; ஜோதிடருக்கு முன்னை விட திகில்!! வந்தவன் நேற்று வந்த ஏழையா? அல்லது அவனது ஆவியா? என்று.

 

ஒருவாறு தன்னை சுதாரித்துக் கொண்டு அவனை அமரச்  சொன்னார். பின்னர் அந்த ஏழைதான் வந்திருக்கிறான், அவனது ஆவி அல்ல என்று பேச்சைத் துவக்கினான்; மனதுக்குள் ‘இவன் நேற்றே இறந்திருக்க வேண்டுமே ! எப்படி இன்னும் உயிரோடு இருக்கிறான்’ என்று வியப்பு.

 

ஜோதிடர்– ஏழை சம்பாஷணை

 

தம்பி; நேற்று நீ வீட்டிற்குச் சென்றது முதல் இன்று வரை நடந்ததைச் சொல் என்றான் ஜோதிடன்.

 

ஏழை:-

நான் வீடு திரும்பியபோது பேய் மழை கொட்டியது. ஒரு பாழடைந்த கட்டிடத்தில் ஒதுங்கிவிட்டு வீடு திரும்பினேன்.

 

 

ஜோதிடன்:–

அது என்ன கட்டிடம்?

 

பாழடைந்த கோவில்

 

ஓ அங்கே யாராவது சாது சந்யாசியைப் பார்த்தாயா?

 

இல்லை என்னைத் தவிர அங்கு ஒரு ஈ எறும்பு கூட இல்லை.

 

அப்படியா? ஆச்சர்யமாக இருக்கிறதே! வேறு ஏதாவது நடந்ததா? ஏதேனும் அற்புதம் ஆச்சர்யம்……

 

இல்லவே, இல்லை.

 

பின்னர் எப்ப டிப் பொழுதைக் கழித்தாய்?

 

ஓ அதுவா? நான் ஒரு மனக் கோவில் கட்டினேன்- என்று சொல்லி முழு எண்ணக் க் கோர்வையயும் சித்தரித்தான்.

 

ஜோதிடரின் ஆர்வம் அதிகரிக்க, அதிகரிக்க அவன் ஒரு துளி விடாமல் அப்படியே தான் எண்ணியவற்றை நுவன்றான்.

 

ஜோதிடருக்கு விஷயம் புரிந்துவிட்டது. அப்பனே, உனது ஜாதகப்படி நேற்றே நீ இறந்திருக்க வேண்டும். அதனால்தான் “முடிந்தால்” நாளைக்கு வா என்றேன். நீ வந்தது பெரிய அதிசயம்தான். உன்னைப் போலவே பூசலார் நாயனார் என்பவர் மனதிலேயே கோவில் கட்டி இறைவனைக் கண்டார். நீயும் மனம், மொழி, மெய் (மனோ, வாக், காயம்) என்று த்ரிகரண சுத்தியுடன் எண்ணியதால் இறைவன் உன்னையும் மார்க்கண்டேயன் போல என்றும் 16 வயது என்று சொல்லிவிட்டார். இனிமேல் உனக்கு நல்ல காலம்தான் என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பினார்.

அவனும் சுக போக வாழ்வு அடைந்தான்

எண்ணத்துக்கே இவ்வளவு நல்ல பலன் என்றால் நல்ல செயலுக்கு எவ்வளவு பலன் கிடைக்கும்!!

 

சுபம்–

 

பாரதி போற்றி ஆயிரம் – 63 (Post No.4816)

Picture posted by Vidhya Subramanian in Facebook

Date: MARCH 15,  2018

 

 

Time uploaded in London- 5-07 am

 

 

Compiled by S NAGARAJAN

 

 

Post No. 4816

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

  பாடல்கள் 455 முதல் 463

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு மூன்றாம் அத்தியாயமான பராசக்தி பார்வையில் பாரதி ஆரம்பிக்கப்படுகிறது

மூன்றாம் அத்தியாயம்: பராசக்தி பார்வையில் பாரதி

1 முதல் 9 வரை உள்ள பாடல்கள்

 

 

பராசக்தி என்றாலே பாரதம் முழுவதும்

   பக்தியுடன் போற்று மன்றோ?

பராசக்தி யாலேதான் இகவாழ்வின் நலம்யாவும்

   பாங்குடனே அமையு மன்றோ?

பராசக்தி தானிங்கு மூலசக்தி யாய்த்தோன்றி

   பரிணமித்த சக்தி யன்றோ?

பராசக்தி தானிங்கு புவனங்கள் உயிரினங்கள்

   பார்க்கின்ற யாவு மன்றோ?

 

ஆயிரம் பெயர்கொண்டு அழைத்தாலும் ஆதாரம்

   ஆதிபரா சக்தி யன்றோ?

ஆயிரம் வடிவினில் அமர்ந்தாலும் அவையாவும்

   அன்னையென் வடிவ மன்றோ?

ஆயிரம் பணிகளைச் செய்தாலும் வலிமையை

   அருள்பவள் யானே யன்றோ?

ஆயிர மாயிரம் கோயில்க ளிலென்றும்

    அமர்ந்ததிச் சக்தி யன்றோ?

 

புவனங்கள் அனைத்தும்தன் வடிவாகக் கொண்டதால்

   புவனேச்வ ரியென்று ரைப்பர்

அவமற அகிலத்தைக் காத்துவாழ் விப்பதால்

   அகிலாண்டேச் வரியே என்பார்

கவல்கின்ற நிலைமாற்றி கவினுறவாழ் விப்பதால்

   காமாட்சி என்று சொல்வார்

விவரிக்க வொண்ணாத பேரரசு கண்டதால்

   மீனாட்சி எனப்பு கழ்வார்

 

இமயத்தின் பார்வதியாய் இருப்பினும் வங்கத்தில்

   இகல்காளி யென்றி ருப்பேன்

அமர்வென்ற மராட்டிய பவானியாய் இருக்கும்நான்

    ஆந்திரத் துர்கை யாவேன்

குமரியாய் தென்கடலில் நிற்கும்நான் பாரதக்

   கோயிலெங் கணுமி ருப்பேன்

சமயஒற் றுமையோடு தேசியஒற் றுமைகாண

   சார்ந்தவள் நானே யன்றோ?

 

இத்தனைச் சிறப்புகள் எனக்கிருந்தும்

எனைப்பற்றிப் பாடல்கள் அதிகமில்லை

இத்தினம் அதனை நினைத்தாலும்

என்னதான் காரணம் புரியவில்லை

 

ஆலயங் கள்தமிழ் நாட்டினிலே

யாருக்கு அதிகம் எனப்பார்த்தால்

சாலவும் எனக்கே பலகோயில்

சான்றிடும் நூல்களோ சிலவேதான்

 

இடபா கத்தில் என்னை ஏற்ற

   ஈசன் புகழ்பாட

அடல்சார் மூவிழி எனமுப் புராணம்

   அழகாய் அமைந்தனவே

திடமார் நால்வர் பாவுடன் பன்னிரு

   திருமு றையானதுவே

கடல்போல் பரந்த சிற்றிலக்கியங்கள்

   கணக்கி லடங்காவே

 

எந்தன் தமையன் திருமால் பெருமை

   என்றும் நிலைபெறவே

சிந்தை துள்ளும் சந்தக் கவியில்

    திவ்ய பிரபந்தம்

அந்த மில்லாமல் அதற்குப் பின்னும்

   அட்ட பிரபந்தம்

எந்த நாளும்ரா மாயண பாரத

    இதிகா சம்உளவே

 

முருகன் எந்தன் அருமை மைந்தன்

   முத்த மிழின்தலைவன்

பெருமை உரைக்க எத்தனை எத்தனைப்

    புலவர் நாடிவந்தார்

திருமு ருகாற்றுப் படைமு தலாகத்

    திருப்பு கழுந்தொடர

அருள்பெற் றவனைப் பாடிய நூல்கள்

   அளவி டயியலாதே

 

         பராசக்தி பார்வையில் பாரதி தொடரும்

 

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி

***