Ganges in Greek Geographer’s Writings! (Post No.4090)

Written by London Swaminathan


Date: 17 July 2017


Time uploaded in London-21-37


Post No. 4090


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

India is the land of mighty rivers, and Ganga is the holiest of all those rivers. Ganga’s sister stream Yamuna is also worshipped because of Lord Krishna’s association with the river. Their banks are dotted with temples and shrines and thousands upon thousands worship daily the sacred streams. The principal centres of worship on the Ganges are Gangotri, the source of the Ganges in the mountain; Haridwar, where she forsakes her mountain home; Triveni Sangam (Allahabad) where she joins water with Yamuna (Jumna) and the mythical stream, the Sarasvati; Benares (Varanasi), the holiest city for the Hindus; and Sagar Island, where she mingles with the ocean.

 

According to the Greek geographer Strabo (64 BCE to 24 CE), Hindus worshipped Jupiter Pluvius, the River Ganges, and the gods of the country. This Jupiter Pluvius was Indra (Strabo 15-1-69). This shows Ganges was worshipped by the Hindus 2000 years ago which was noted by a Greek writer.

 

The day of Ganga’s supposed descent on earth, the tenth of the light half of Jeshth (June), and the day of the full moon or Kartik (October) are observed as festivals in her honour by all Hindus.

 

Water Power!

“Take away, O Waters, whatsoever is wicked in me, what I have done by violence or curse, and untruth” is a Vedic prayer repeated often today (Rig Veda 1-22-3)

So strong is the popular belief in the sanctity of the river that both in private life as well as in the law-courts people often give up cherished claims if their opponents deny them when holding Ganges water in their hands or swearing by the Ganges.

In the Mahabharata it is said that the “Gita comprises all the Sastras, i.e.sacred writings, Hari (Vishnu) all the gods and the Ganges all the Sacred places”.

In addition to the Ganges there are many others which are regarded as sacred by the Hindus. River Narmada also considered sacred for burning dead bodies on its banks.

 

Hindu River Marathon!

 

To follow the course of any river on foot is considered a highly meritorious act. A pilgrim, for example, sets out from the source of Ganges at Gangotri and walks by the left bank of the river to its mouth, at Ganga sagara; then turning round, he proceeds by the right side back to Gangotri, when he departed. This takes six years to accomplish. In the same way a pilgrim starts from the source of Narmada, a peak on the Vindhya Mountains, and walks to the mouth near Broach and back. This takes three years. The rivers Godavari and Krishna require only two years for the same process. Of course, the merit accumulated is in proportion to the time occupied in pilgrimage and the sacredness of the ground traversed.

 

Romans and Persians

Romans and Persians did something like a river worship in the olden days.

Gen.Sleeman points out that among the Romans and ancient Persians rivers were propiated  by sacrifices. When Vitellius crossed the Euphrates with the Roman legions to put Tiridates on the throne of Armenia, he propiated the river by the scrfice of a hog, a ram and a bull. Tiridates himself sacrificed a horse. Tacitus does not praise the river god, but the stream itself.

 

Plato makes Socrates condemn Homer for making Achilles behave disrespectfully towards the river Xanthus in offering to fight him (illiad 20-73); and towards the river Spercheus, another acknowledged god, in presenting to the dead body of Patroclus the locks of his hair which he had promised to the river (Iliad 23-14—53)

Hindu customs such as worshipping a river and giving hair to god, prevailed in those places 2000 years ago. But the beauty of Hinduism is that these customs prevail in India with the same fervour, but in other countries it has gone into the history books.

 

–Subham–

 

பூர்வ, தக்ஷிண, பச்சிம, உத்தர சதுச் சமுத்ராதிபதி கிருஷ்ண தேவ மகாராயர் (Post No.4089)

பூர்வ, தக்ஷிண, பச்சிம, உத்தர சதுச் சமுத்ராதிபதி கிருஷ்ண தேவ மகாராயர் (Post No.4089)

 

Written by London Swaminathan


Date: 17 July 2017


Time uploaded in London-16-08


Post No. 4089


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

முஸ்லீம்களின் படை எடுப்பிலிருந்து இந்த நாட்டைக் காப்பாற்றியவர் இருவர்: தென்னகத்திலிருந்து முஸ்லீம் படை எடுப்பாளர்களை விரட்டியவர் கிருஷ்ண தேவ ராயர்; வடநாட்டிலிருந்து விரட்டியவர் வீர சிவாஜி.

கிருஷ்ண தேவ ராயர் போல கோவில்களுக்கு தானம் செய்தவரும் இல்லை; இலக்கியத்தை வளர்த்தவரும் இல்லை. திருப்பதி கோவிலுக்கு வாரி வழங்கியுள்ளார். ஆமுக்த மால்யதா என்ற காவியத்தைத் தெலுங்கில் எழுதினார். அவர் ஒரு வீர வைஷ்ணவர்; திருப்பாவை மீது அலாதிப் பிரியம் கொண்டவர்.

ஆமுக்தமால்யதா என்பது ஆண்டாள்- விஷ்ணு கல்யாணம் பற்றிய கவிதை ஆகும்.

 

 

1509 ஆம் ஆண்டு முதல் 1529 ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகளுக்கு விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆண்டார்; அதை விரிவாக்கினார். இவரது சபையில் அஷ்ட திக்கஜங்கள் எனப்படும் எட்டு பேரறிஞர்கள் இருந்தனர். அவர்களில் புகழ் பெற்ற இருவர் அல்லாசானி பெத்தண்ணா, தெனாலி ராம (கிருஷ்ணா)

 

துளுவ வம்சத்தை ஸ்தாபித்தவர். திருப்பதி முதல் திருவண்ணாமலை வரை கோவில்களுக்கு தானம் வழங்கினார்.

 

திரு ஈங்கோய் மலை மீதுள்ள க்ருஷ்ண தேவ மகாராயரின் கல்வெட்டு அவருடைய வீரதீரச் செயல்களை விவரிக்கின்றது. அவருடைய பட்டங்கள் கம்பீரமான சொற்களை உடையது.

 

முதலில் கல்வெட்டின் சுவையான பகுதிகளைக் காண்போம்:

 

இந்தக் கல்வெட்டுக்குத் தீங்கு செய்வோருக்கு காசியில் பிராமணர்களையும் பசுக்களையும் கொன்ற பாவம் வரட்டும் என்று சாபம் தரும் பகுதியைக் கவனிக்கவும்.

பசுவுக்குத் தீங்கு செய்வோருக்கு, அதுவும் காசியில் தீங்கு செய்வோருக்கு வரும் பாபம்= அதாவது பல படங்கு பாவம்!!

 

கடைசியில் ஒரு அருமையான சம்ஸ்கிருத ஸ்லோகம் இருக்கிறது; அதன் பொருள்:-

“தான், தானம் செய்வதைக் காட்டிலும் மற்றவர் கொடுத்ததைத் திறம்பட நிர்வகிப்பது இரு மடங்கு பலன் தரும்

பிறர் கொடுத்ததை அபகரித்தால், தான் செய்த புண்ணியங்களும் வீணாகிப் போய்விடும்” என்று கல்வெட்டு எச்சரிக்கிறது.

அருமையான எச்சரிக்கை.

இறை வணக்கமாகக் கல்வெட்டின் ஆரம்பத்திலுள்ள ஸ்லோகம் பரம சிவனின் அருளை வேண்டுகிறது.

இக் கல்வெட்டு கிருஷ்ணவேணி ஆற்றங்கரையில் மகர சங்கராந்தித் திருநாளன்று (பொங்கல் திருநாள்) மன்னன் எழுந்தருளிய போது சோழ மண்டலத்திலுள்ள சிவன், விஷ்ணு கோவில்களுக்கு பத்தாயிரம் வராகன் பொன் தானம் செய்ததைக் கூறுகிறது

 

கோவில்களுக்கு சோடி, சூல வரி, புற வரி, அரச பேறு ஆகிய வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதைக் கல்வெட்டு விளம்புகிறது.

 

விஜய நகரத்திலிருந்து புறப்பட்ட மன்னர் எந்தெந்த மன்னரை வெற்றி கொண்டு உயிருடன் சிறைப்படுத்தினார் என்பதையும் இது குறிக்கிறது.

இந்த வெற்றிகளைக் குறிக்கும் வண்ணம் பொட்டுனூரில் ஒரு வெற்றித் தூண் நிறுவியதையும் கல்வெட்டு சொல்கிறது.

இவைகளில் பெரும்பாலும் தெலுங்குதேச வெற்றிகளாகும். தென்னகத்தின் மிகப் பெரும்பகுதியை ஆண்டவர் ராயர். இவருடைய பொக்கிஷங்களை மதிப்பிட வந்த ஐரோப்பியர் இவைகளை மதிப்பிடவே முடியாது; அவ்வளவு விலைமிகுந்த ரத்தினங்கள் என்று எழுதி வைத்துள்ளனர்.

 

திருச்சி மவட்டத்தில் திரு ஈங்கோய் மலை மீதுள்ள மரகதாசலேசுவரர் கோயிலில் இக்கல்வெட்டு உள்ளது; கல்வெட்டின் காலம் சக வருஷம் 1439, அதாவது கி.பி.1517.

இதோ அந்தக் கல்வெட்டு

 

“ஸ்வஸ்தி ஸ்ரீ நமஸ்துங்க சிரச்சும்பி

சந்த்ர சாமரசாரவே

த்ரைலோக்ய நகராரம்ப

மூலஸ்தம்பாய சம்பவே”

 

“ஸ்ரீ விசயாயாப்யுதய சாலிவாகன சகாப்தம் 1439 இதின்மேல் செல்லாநின்ற ஈசுவர (பிலவங்க) சம்வத்சரம் (புஷ்ய மாசத்துப் பௌர்ணமி நாள்) ஸ்ரீமன் மஹாமண்டலேஸ்வர,

அரியராய   ரவிபாடன்,

பாஷைக்குத் தப்புவராய கண்டன்,

கண்டநாடு கொண்டு,

கொண்டநாடு கொடாதான்

 

பூர்வ தக்ஷிண பச்சிம உத்தர சதுச் சமுத்ராபதிபதி

(East, South, West, North நாற்கடலை எல்லையாக உடையவர்)

ஸ்ரீ வீரப்ரதாப, ஸ்ரீ வீரகிருஷ்ண தேவ மகாராயர்

சோழ மண்டலத்து விஷ்ணுஸ்தானம், சிவஸ்தானம், முதலான தேவஸ்தானங்களுக்கு சோடி, சூல வரி, புறவரி, அரசபேறு மற்றும் உண்டா னது எல்லாம் சர்வமானியமாக திருவுளம் பற்றின தர்மசாசன ராயசம்.

 

நாம் விசய நகரத்திலிருந்து புறப்பட்டு, பூர்வ திக்கு விசையார்த்தம் எழுந்தருளி உதயகிரி துர்கமும் யிரிசிக் கொண்டு,

திருமலை ராகுத்தராயனையும் பிடித்துக்கொண்டு, வினி கொண்டை, வெல்லம கொண்டை, நாகார்ச்சுன கொண்டை,  கொண்டை வீடு, கொண்டை  பள்ளி ராசமகேந்திரவரம்,  முதலான துர்கங்களும் இரிசிக்கொண்டு,

 

பிரதாபருத்ர கசபதி பிரகலாதன், சிரச்சந்திரன், மல்லூகான், உத்தாண்டகான்,  முதலான பாத்திர சாமந்தரையும் சீவக்கிரகமாகப் பிடித்துக்கொண்டு, பிரதாபருத்திர கசபதியையும் முறியவெட்டி, சிங்காத்திரிக்கு எழுந்தருளி, பொட்டு நூரில் ஜயஸ்தம்பம் நிறுத்தி,

 

சோள மண்டலத்தில் தேவஸ்தானம் திருச்சிராப்பள்ளி, திரு ஈங்கோய்மலை, சந்தலைகை, திருக்காட்டுப்பள்ளி, திருமழவாடி, வல்லம், தஞ்சாவூர் திருநல்லூர், திருவாரூர், திருநகரி, திருவையாறு, திருவெழுந்தூர், இராசுராமப்பாளையம், திருவாஞ்சியம், திருப்புகலூர், திருப்பனந்தாள், திருநாங்கூர்,  தாடலங்கோயில், சீர்காழி, ச்ரிகண்டபுரம் உள்பட இரண்டாற்றுப் பற்றுச் சீர்மை, புவனேகவீரன் பட்டனச் சீர்மை, ராசராசச்சுர சீர்மை, தஞ்சாவூர்ச் சீர்மை  , வீரமடக்குச் சீர்மை, வழுதலம்பட்டுச் சீர்மை, வழுவத்தூர்ச் சீர்மை பெரம்பூர்ச் சீர்மை,

குழித்தண்டலைச் சீர்மை,  உடபட விஷ்ணுஸ்தானம், சிவஸ்தானம் தேவஸ்தானங்களில்  பூர்வம் அரண்மனைக்கு இறுத்து வருகிற சோடி, சூலவரி, ஆயம் ஸ்தலயாதிக்கம் பதினாயிரம் பொன்னிலே

(அந்தந்த தேவஸ்தானங்களுக்கு மகரசங்கராந்தி புண்ணியகாலத்திலே கிருஷ்ணவேணி தீரத்திலே)

உண்டவல்லி அநந்தசாயி சந்நிதியிலும்

விசயவாடை மல்லிகார்ச்சுன தேவர் ஆக

தாராபூர்வமாகச் சர்வமானியமாகவிட்டு (தர்மசாசன ராயசமும் பாவித்தோம். இந்த ராயசப்

பிரமணத்திலே எல்லா தேவஸ்தானங்களிலும்)

சிலாசாசனம் எழுதிவிச்சு பூஜை புனஸ்கரமும் அங்கரங்க    வைபோகமும், திருப்பணிகளும் சாங்கோபாங்கமாக ஆசந்திராதித்த (Moon and Sun) ஸ்தாயியாக நடத்திகொண்டு சுகத்திலே இருக்கவும்

 

இந்த தர்மத்துக்கு அகிதம் (harm) நினைத்தவன் தங்கள் மாதா பிதாவையும் கோ பிராமணரையும் வாரணாசியிலே கொன்ற பாவத்திலே போகக்கடவராகவும்.

 

ஸ்வ  தத்தாத்   விகுணம் புண்யம் பர தத்தானுபாலனம்

பரதத்தாபராரேன ஸ்வதத்தம் நிஷ்பலம் பவேது

     

Source: Kalvettu- An Intoduction, Archaological Department of Tamil Nadu, year 1976

 

–Subham–

 

சொல் கண்டார் சொல்லே கண்டார்– கம்பன் கவி இன்பம் (Post No.4088)

Written by S NAGARAJAN

 

Date: 17 July 2017

 

Time uploaded in London:- 5-59 am

 

 

Post No.4088

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 IMAGES OF SRI RAMA FROM FACEBOOK FRIENDS;THANKS.

 

கம்பன் கவி இன்பம்

 

கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை! என்ற கட்டுரையைத் தொடர்ந்து வரும் கட்டுரை இது.

 

சொல் கண்டார் சொல்லே கண்டார்; ஞான எல் கண்டார் எல்லே கண்டார்!

ச.நாகராஜன்

 

 

கம்பனை அணு அணுவாக, சொல் சொல்லாகச் சுவைத்து ரசிக்கும் கவிஞர் கே.என்.சிவராஜ பிள்ளை தனது அனுபவத்தை இப்படிக் கூறுகிறார்:

 

சொல் கண்டார் சொல்லே கண்டார்; சொல்லினுட் சொலிக்கும் ஞான

எல் கண்டார் எல்லே கண்டார்; இனிமையோடிகலுஞ் சந்த

மல் கண்டார் மல்லே கண்டார்; மகிழ்கவித் துறைகை போய

வல் கண்ட புலவர் யாரிவ் வரகவி முடியக் கண்டார்?!!!

 

 

சொல்லைக் கண்டவர் கம்பனின் சொல் வண்ணத்தில் மூழ்கி விடுவார்கள். ஒரு சொல்லா, இரண்டு சொல்லா? ஒரு பாடலுக்கு நான்கு வரிகள்; ஒரு வரிக்கு சுமாராக ஆறு சொற்கள் என்று வைத்துக் கொண்டாலும் பத்தாயிரம் பாடலுக்கு சுமார் இரண்டு லட்சத்து நாற்பதினாயிரம் சொற்கள். இவற்றில் பெர்முடேஷன் காம்பினேஷன் போட்டால் நமக்கு வரும் எண்ணிக்கை பல பல கோடிகள். அவ்வளவு விதமாக சொல்லோடு சொல்லினை இணத்து, சொற்றொடர்களை ஒன்றுடன் இன்னொன்றை ஒப்பிட்டு, அர்த்தங்களை அறிந்து, புரிந்து சுவைப்பது என்றால் ஒரு ஜென்மத்தில் நடக்கக் கூடிய காரியமா என்ன.

 

சொல்லைப் பார்க்கப் போய் சொல்லினுள் ஞான எல்லை, (எல் என்றால் ஒளி) – ஞான ஒளியைக் கண்டால் அதிலிருந்து மீள்வது எங்ஙனம்?

 

 

சொல்லினுள் ஜொலிக்கும் ஞான ஒளி கண்டவர் கண்டவரே; அதிலிருந்து அவர் எப்போது எப்படி மீள்வாரோ? யாருக்குத் தெரியும்.

 

சந்த இனிமையைக் கண்டவர்கள் அதிலேயே மாட்டிக் கொள்வார்கள்.

 

இப்படி இருக்கும் போது தமிழின் துறைகளை நன்கு கையாண்ட கம்பனின் கவிதையின் முடிவை முழுதுமாக யார் கண்டார்கள்.

 

 

இவ் வரகவியை “முடியக் கண்டவர்கள் யாரும் இலர்.

கே.என். சிவராஜ பிள்ளையுடன் ஓங்கிய குரலில் நாமும் ஆம், யாரும் முடியக் காண முடியாது என்று கூவுகிறோம்.

தோள் கண்டார் தோளே கண்டார் பாடலில் கம்பன் ராமனின் அழகை முடியக் கண்டவர் யாரும் இல்லை என்று ஒரு ‘போடு போடுகிறான் இல்லையா!

 

 

அதே “போடை அவருக்கே போடுகிறார் சிவராஜ பிள்ளை.

அற்புதமான பாடல் தானே இது?

கம்ப ராமாயணக் கவுத்துவ மணி மாலையில் (கம்பராமாயணக் கௌஸ்துப மணிமாலை) 72வது பாடலாக மலர்கிறது இது.

51வது பாடலில் இதையே வற்புறுத்துகிறார் அவர் இப்படி:

 

 

சொல்வளம் பெரிதென்கோ யான்? சொல்லினுட் டுளும்பு ஞான

நல்வளம் பெரிதென்கோ யான்? நவையறு மணிகள் வீசும்

வில்வளம் பெரிதென்கோ யான்? வியங்கியம் விழுமி தென்கோ?

பல்வளம் செறிந்து பண்ணாம் பரிமள மியன்ற பாவில்!

 

 

சொல்வளமா?

ஞான நல் வளமா?

மணிகள் வீசும் வில் வளமா?

அடடா, அனைத்தும் இணைந்து பல்வளம் செறிந்து காணும் கம்பனின் பண் கொண்ட பாடலை எப்படிப் புகழ்வது?

எங்களுக்கும் தெரியவில்லை.

 

கம்பன் புகழே புகழ்; அவன் பாடலே பாடல் என்று கவிஞர் சிவராஜ பிள்ளையுடன் மகிழ்ச்சியுடன் இணைந்து ஓர் குரலாய்க் கூவுகிறோம் நாம்.

அழகிய இந்த நூலில் வரும் பாடல்கள், கம்ப ராமாயணத்தில் வரும் முக்கியச் செய்யுள்களை நினைவுறுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என்பதைக் கம்பனைக் கற்றோர் அறிவர்!

***

 

Asura’s Mistake- Satapata Brahmana Story (Post No.4087)

Compiled by London Swaminathan


Date: 16 July 2017


Time uploaded in London-19-03


Post No. 4087


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Once upon a time the gods and the Asuras, both of them sprung from Prajapati, strove together. And the Asuras even though arrogance, thinking,

“Unto whom, forsooth, should we make offering? went on offering into their own mouths. They came to naught, even through arrogance; wherefore let no one be arrogant, for verily arrogance is the cause (mouth) of ruin.

“Pride goeth before destruction.

But the gods went on making offerings to one another.

Prajapati game himself to them; thus the sacrifice became theirs; and indeed the sacrifice is the food of the gods – Satapata Brahmana.

xxx

“This which is sacrifice is the soul of all beings and of all gods”

–Satapata Brahmana14-3-2-1

 

Prajapati gave himself to the gods and became their sacrifice. He then created sacrifice as his own image or counterpart. Hence they say that ‘Prajapati is sacrifice’; for he created it as his own image.

–Satapata Brahmana 11-1-8-2

xxx

 

Women in Vedic Times

The following passage is of interest as clearly indicating that women in Vedic times had access to the Vedas; they took part in the sacrifices is clear from quite a number of passages:

Ida, the daughter of Manu, was a revealer of sacrifice. She heard, ‘The Asuras are placing fire’……………. Ida said to Manu, ‘I shall so place thy fire that thou shalt increase in offspring, cattle and twins; thou shalt be firmly established in  the world and shalt conquer the heavenly  word’. She first placed the Garhapatya fire. It was through the Garhapatya she produced for him offspring.

Taittiriya Brahmana 1-1-4-4

(Garhapatya is one of the three fires in a house)

xxx

Manu’s Wife Sacrificed!

There is another story where one must read between the lines; this one of the  symbolic stories:

“Manu had a bull. Into it an Asura slaying, enemy slaying voice had entered. In consequence of this bull’s snorting and bellowing. Asuras and Rakshasas were continually destroyed.

 

Then the Asuras said, “This bull, alas! does us mischief; how shall we overcome him? Now there were two priests of the Asuras called Kilata and Akuli. They said, ‘Manu is a devout believer; let us make trial of him’. They went and said to him, “Let us sacrifice for thee”

“Wherewith”, he asked.

With this bull, they replied.

Be it so, he answered.

 

When it had been slaughtered, the voice departed out of it and entered into Manu’s wife, Maanavaa.

Wherever they hear her speaking, the Asuras and Rakshasas continue to be destroyed in consequence of her voice.

The Asuras said, “She does yet more mischief; for the human voice speaks more”

 

Kilata and Akuli said, Manu is a devout believer; let us make trial of him. They went and said to him,

“Manu, let us sacrifice for thee”.

“Wherewith?, he asked.

“With this thy wife”, they replied.

Be it so, he answered.

When she had been slaughtered, the voice departed of her”.

–Satapata Brahmana 1-1-4-16

The same story is found with variations in the Kathaka Brahmana.

This is a symbolic story. One must rely on saints of India rather than foreigners.

–Subham–

 

 

திருக்குறளுக்கு தமிழ் வேதம் என்று பெயர் சூட்டியது யார்? (Post No.4086)

Written by London Swaminathan


Date: 16 July 2017


Time uploaded in London- 6-34 am


Post No. 4086


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

திருக்குறளைப் பாராட்டி 53 புலவர்கள் பாடிய பாடல்கள் திருவள்ளுவ மாலையில் இடம் பெறும். இதைத்தவிர அவ்வையார், இடைக்காடர் ஆகிய இருவர் பாடல்களையும் சேர்த்து 55 பாடல்கள் என்றும் கொள்வர். இதில் பல புலவர்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ள வேதத்துடன் ஒப்பிட்டு திருக்குறளை தமிழ் வேதம் என்று அழைக்கின்றனர். அவர்கள் சூட்டிய பெயர்தான் தமிழ் வேதம். இதோ அந்தப் பாடல்கள்:

 

ஆரியமுஞ் செந்தமிழும் ஆராய்ந்திதனினிது

சீரியதென் றொன்றைச் செப்பரிதா – லாரியம்

வேதமுடைத்துத் தமிழ்திரு வள்ளுவனா

ரோது குறட்பா வுடைத்து

வண்ணக்கஞ் சாத்தனார்.

 

சம்ஸ்கிருதத்தையும், தமிழையும் ஆராய்ந்து இதைக் காட்டிலும் இது சிறப்புடைத்தென்று ஒன்றைத் தெரிந்து சொல்லுதல் முடியாது; சம்ஸ்கிருதம் வேதமுடையது; தமிழ் திருவள்ளுவர் தந்த குறட் பாக்களை உடையது.

 

இங்கு சம்ஸ்கிருதத்துக்கு வேதத்தால் பெருமை; தமிழுக்கு திருக்குறளால் பெருமை என்று வண்ணக்கஞ் சாத்தனார் கூறுகிறார்

 

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் கூறுகிறார்:-

 

ஐயாறு நூறு மதிகார மூன்றுமா

மெய்யாய வேத பொருள்விளங்கப் – பொய்யாது

தந்தானுலகிற்குத் தான் வள்ளுவராகி

யந்தா மரை மேலயன்

 

அதிகாரம் நூற்று முப்பத்து மூன்றுமாம்,  உண்மையான வேதப்பொருள் பொய்யாது விளங்க அழகிய தாமரை மலர் மேல் வீற்றிருக்கின்ற பிரம்மா, வள்ளுவராகி உலகில் வந்தான்.

 

பிரம்மாவின் நான்கு முகங்களிலிருந்து நான்கு வேதங்கள் வந்தன என்று புராண, இதிஹாசங்கள் விளம்பும். அது போல திருக்குறள் என்னும் தமிழ் வேதத்தை அளித்ததும் அவனே— என்பார் காரிக்கண்ணனார்.

 

வெள்ளி வீதியார் சொல்வார்

செய்யா மொழிக்குந் திருவள்ளுவர் மொழிந்த

பொய்யா மொழிக்கும் பொருளொன்றே — செய்யா

வதற்குரியா ரந்தணரே யாராயி னேனை

யிதற்குரியா ரல்லாதாரில்

ஒருவராலே செய்யப்படாத மொழியாகிய வேதத்துக்கும் —–(அபௌருஷேயம்=வேதங்கள் மனிதன் இயற்றியது அல்ல) —திருவள்ளுவாரால் அருளிச் செய்யப்பட்ட பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே. ஆராய்ந்து பார்த்தால்  செய்யப்படாத அந்த வேதம் ஓதுதற்குரியோர் அந்தணர் மட்டுமே; ஆனால் திருக்குறளை ஓதுதற்குரியவர் எல்லோரும் ஆவர்.

 

நாமகள் செப்பியது

நாடா முதனான் மறைநான் முகனாவிற்

பாடா விடைபாரதம் பகர்ந்தேன் — கூடாரை

யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாற பின்

வள்ளுவன் வாயதென் வாக்கு

 

பொருள்:

பகைவரைப் புறமுதுகு காட்டச் செய்து வெற்றி பெற்ற, வேற் படையுடைய பாண்டிய ராஜனே!  படைப்புக் காலத்தில் பிரம்மாவின் வாயிலிருந்து நான்கு வேதங்களைப் பாடினேன்; இடைக்காலத்தில் பாரதம் பகர்ந்தேன்; அதற்குப் பிற்பட்ட காலத்தில் என்னுடைய வாக்கு வள்ளுவன் வாயின் கண்ணதாயிற்று

 

ஆகவே சரஸ்வதியின் கூற்றுப்படி, வேதமும், பாரதமும், திருக்குறளும் ஒவ்வொரு காலத்தில் சரஸ்வதியின் வாயிலிருந்து வந்தவையே.

வேதம் = மஹா பாரதம் = திருக்குறள்

மஹா பாரதத்தை பஞ்சமோ வேத: = ஐந்தாவது வேதம் என்பார்கள்.

திருக்குறளை ஆறாவது வேதம் என்று சொல்லாமல் சொல்கிறாள் சரஸ்வதி!

Tags:- தமிழ் வேதம், தமிழ் மறை, திருக்குறள்

–சுபம்–

 

மருந்து உட்கொள்ள ஆரம்பித்தவுடன் எடை கூடுகிறதா? (Post No.4085)

Written by S NAGARAJAN

 

Date: 16 July 2017

 

Time uploaded in London:- 5-54 am

 

 

Post No.4085

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

திருநெல்வேலியிலிருந்து திரு ஆர்.சி.ராஜாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஹெல்த்கேர் மாத பத்திரிகையில் ஜூலை 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

புதிய மருந்து உட்கொள்ள ஆரம்பித்தவுடன் உங்க உடலின் எடை திடீரென்று கூடுகிறதா?

ச.நாகராஜன்

ள்﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽ம்பிதவtsRSதிடீரென்று உடல் எடை கூடுகிறதே என்று கவலைப்படுபவர்களில் ஒருவர் நீங்கள் என்றால் உடனடியாக நீங்கள் ஏதேனும் மருந்துகளை உட்கொள்ள ஆரம்பித்தீர்களா என்பதைச் சரி பார்க்க வேண்டியதும் அவசியமாகிறது.

 

ஆம், சில மருந்துகள் உடலின் எடை கூடுவதற்குக் காரணமாக அமைகின்றன. பக்க விளைவாக உடல் எடையைக் கூட்டும் மருந்துகளைப் பற்றிய கவனம் தேவை.

On Planet Pluto

எடை குறைவாக இருந்தால், பரவாயில்லை சரி என்று விட்டு விடலாம்.ஆனால் ஏற்கனவே எடை கூடுதலாக இருந்தால் உடலின் எடை இன்னும் கூடுவது அபாயத்தில் அல்லவா முடியும்!

 

சிலருக்கு மாதத்தில் 5 முதல் 10 கிலோ வரை எடை கூடி விடுகிறது. டாக்டர்கள் குறிப்பிட்ட மருந்துகளை அவர்கள் தொடர்ந்து உட்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தால் அவர்களின் நிலை என்னவாகும்?

 

பல ஸ்ட்ராய்ட் மருந்துகள் (Steroid Drugs) உங்களுக்குப் பசி உணர்வைத் தூண்டி விடுகிறது. அதே போல மனம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்குத் தரும் மருந்துகள் கூட – மனச்சோர்வு, schizophrenia போன்ற வியாதிகளுக்குத் தரப்படும் மருந்துகள் கூட – உடலின் எடையை அதிகரிக்கச் செய்யும்.

முதலில் இந்த மருந்துகள் பசி உணர்வைத் தூண்டுவதால் அதிகம் சாப்பிடத்  தோன்றும். இதன் விளைவாக உடலின் எடை கூடும். சில மருந்துகளோ உடலில் கலோரியை மிக மெதுவாகச் செலவழிக்க வைத்து உடல் கூற்றையே மாற்றும். இன்னும் சில மருந்துகளோ சர்க்கரைச் சத்தையும் சில ஊட்டச் சத்துகளையும் அவற்றை உறிஞ்சுவதிலும் சேமிப்பதிலும் பாதிப்பு ஏற்படுத்தி அதன் விளைவாக உடலின்

எடையை அதிகரிக்கச் செய்யும்.

உங்களுக்கு சுவாசம் விடுவதில் சில மருந்துகள் சிரமத்தை ஏற்படுத்தினால் இயல்பாகவே நீங்கள் உடல்பயிற்சியை செய்ய விரும்ப மாட்டீர்கள். இதன் விளைவாகவும் கூட உடல் எடை கூடக் கூடும்.

 

இன்னும் சில மருந்துகளோ நீரை உடலில் அப்படியே தங்கச் செய்யும். அதன் விளைவாக உடல் எடை கூடலாம். உடலில் கொழுப்பு சக்தி அதிகம் இல்லை என்றாலும்  உடலின் எடையை இந்த நீர் அதிகரித்தே காட்டும்! இன்னும் சில மருந்துகளைப் பற்றி ஆய்வாளர்களே அவை ஏன் எடையைக் கூட்டச் செய்கின்றன என்பதை அறியாது  தொடர்ந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள்னர்.

உடலின் எடையைக் கூட்டும் மருந்துகளின் பட்டியல் இதோ:-

டயபடீஸ் நோய்க்காக எடுத்துக் கொள்ளப்படும் இன்சுலின், Thiazolidinediones, Sulfonylureas போன்றவை

ஆன்ட்டி சைகாடிக் (Antipsychotic)மருந்துகள் எனப்படும் Haloperidal, Clozapine, Lithium போன்றவை

Anttidepressant drugs எனப்படும் மனச்சோர்வை அகற்றும் மருந்துகளான amitriptyline, paroxetine மற்றும் sertraline போன்றவை

 

வலிப்பு நோய்க்கான Valproate, carbamazepine போன்றவை

ஸ்ட்ராய்ட் ஹார்மோன் மருந்துகளான prednisone அல்லது குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள்

பீட்டா ப்ளாக்கர்ஸ் (Beta –blockers) போன்ற ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள்

 

 

ஒரு முக்கியமான விஷயம்; இங்கு குறிப்பிடப்படுள்ள இவை அனைத்துமே உடல் எடையைக் கூட்டும் மருந்துகள் என்பதில்லை. உதாரணமாக metformin என்ற டயாபடீஸுக்கான மருந்து உடல் எடையைக் கூட்டுவதற்கு பதிலாக எடையைக் குறைக்கவும் கூடும். மைக்ரேன் மற்றும் இழுப்புக்கான மருந்தான Topiramteம் கூட ஒருவரின் உடல் எடை இழப்பதற்கான காரணமாகக் கூடும். ஆகவே முடிவெடுப்பதில் கவனம் தேவை.

ஒருவரின் எடை கூடுகிறது என்பதற்கு பல காரணங்கள் உண்டு

 

ஒருவர் எடுத்துக் கொள்ளும் குறிப்பிட்ட மருந்து, அவரது வயது போன்றவற்றைச் சொல்லலாம்

முதலில் டாக்டரிடம் சென்று உடல் எடை கூடுவதைச் சொன்னவுடன் அவர் பல்வேறு காரணங்களைப் பகுத்து ஆராய்வார்.

 

இப்போது உட்கொள்ளும் மருந்து தான் காரணமெனில அவர் வேறு ஒரு மாற்று மருந்தை உட்கொள்ளுமாறு ஆலோசனை கூறலாம்.

 

அதே மருந்து தான் உங்கள் வியாதியைக் குணப்படுத்த தேவை எனில் அதன் உட்கொள்ளும் அளவை அவர் குறைக்கக் கூடும்.

 

சில வகையான கான்ஸர்கள் மற்றும்

உளவியல் ரீதியிலான வியாதிகள் போன்றவற்றில் மருந்துகளை மாற்ற முடியாத சூழ்நிலையில் டாக்டர் இப்படிப்பட்ட முடிவை பரிந்துரைக்கலாம்.

ஒரு மருந்தை உங்கள் டாக்டர் பரிந்துரைக்கும் போது அவரிடமே இதன் பக்க விளைவாக உடல் எடை கூடுதல் போன்றவை ஏற்படுமா என்று முதலிலேயே கேட்டுத் தெளிவு பெறலாம்.

நல்ல உணவுப் பழக்க வழக்கங்கள், உடல் பயிற்சியை மேற்கொள்வது போன்றவற்றால் உங்கள் எடையை எப்பொழுதும் கட்டுப்பாட்டிற்குள் வைப்பது சாத்தியம்.

அவசரப்பட்டுத் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசனை செய்து ஒரு முடிவை எடுப்பதோடு தொடர்ந்து உங்கள் எடை மீது கவனம் வைப்பது சாலச் சிறந்தது.

 

****

 

 

 

Common Sense Anecdotes (Post No.4084)

Compiled by London Swaminathan


Date: 15 July 2017


Time uploaded in London-13-57


Post No. 4084


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Why I tell Many stories?

Lincoln once said to Chauncey Depew , “They say that I tell a great many stories; I reckon I do, but I have found in the course of a long experience that common people, take them as they run, are more easily informed through the medium of a broad illustration than in any other way, and to what the hypercritical few may think, I don’t care”.

 

Xxx

Common Sense- Gift of God!

This is one of the favourite stories of Dr Karl Compton , the noted physicist of  M I T . His sister lives in India. She was having a simple electrical installation done by a native electrician. He troubled her so much for instructions that she at last said irritably, “You know what I want; just use your common sense and do it.”

The electrician salaamed politely and said, “Madam, common sense is a rare gift of God. I have only a technical education”.

Xxxxx

 

Literature Anecdotes 

 

Two passengers were overheard in a literary discussion on the Brooklyn express,

“Whatcher favourite readin?”

“Popeye, Superman, and Flash Gordon”

“Howcha like O Henry?”

“Naw, the nuts get in my teeth”

Xxx

Did Little Neil Die? Suspense in the Story!

The magazine which published The Old Curiosity Shop came to America by sailing vessel. As interest in Dickens story mounted from week to week, the crowds became larger on the New York wharf waiting to buy copies as soon as the boat docked. By the time the story reached its last chapter these crowds had grown to such large numbers and to such a pitch of suspense that they swarmed, five or six thousand strong, upon the wharf and could not wait until the ship docked, when they spied the captain on the deck they called out across the narrowing in waters

The question that burned in everyone’s heart, “Did little Neil Die?”

–Subham–

 

 

தமிழ்ச் சங்கத்தில் மோதல்! (Post No.4083)

Written by London Swaminathan


Date: 15 July 2017


Time uploaded in London-6-59 am


Post No. 4083


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மதுரையில், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கடைத் தமிழ்ச் சங்கத்தில் புலவரிடையே காழ்ப்புணர்ச்சியும் பொய்யும்,புரட்டும் மிகுந்திருந்தது. இது பற்றி திருவிளையாடல் புராணத்தில் பல படலங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லப்பட்டுள்ளது.

 

1931ஆம் ஆண்டில் வெளியான திருவள்ளுவர் சரித்திரத்தில் சில சுவையான பாடல்கள் உள்ளன:

 

சங்கத்தாரை வெல்ல வேண்டி அவ்வையார் ஞானக் குறிகளால் கை சைகைகள் பண்ணி இவை என்னென்று கேட்கச் சங்கத்தார் சொல்லியது:-

இவ்வளவு கண்ணினாள் இவ்வளவு சிற்றிடையாள்

இவ்வளவு போன்ற இளமுலையாள் – இவ்வளவாய்க்

காமத் தலைவனையும் காணாது கன்றினால்

நாமத்தை காட்டுகுறி நன்கு

 

இஃது தகுதியான உத்தரவன்றென்று அக்குறிகளுக்கு ஔவை சொல்லியது

 

ஐயமிடுமின் அறநெறியைக் கைப்பிடிமின்

இவ்வளவேனும் மனத்தை இட்டுண்மின் றெய்வம்

ஒருவனே யென்ன உணரவல்  லீரேல்

அருவினைகள் ஐந்தும் அறும்

 

 

இப்படியென்று ஔவை சொல்ல சங்கத்தார் நாணமுற்று இவளை வெல்லப் படாதென்று திருவள்ளுவரைப் பார்த்து நீர் எந்த வூரென்றதற்கு அவர் சொல்லியது

எந்தவூர் என்றீர் இருந்தவூர் நீர் கேளீர்

அந்தவூர்ச் செய்தி அறியீரோ – வந்தவூர்

முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய்

அப்பாலும் பாழாயறும்

 

என்றிது முதலான ஞானார்த்தமான செய் யுட்களளாலவர் வினவியவைகளுகெல் யு லா முத்தரவு சொல்ல (உத்தரவு=பதில்)

சொல்ல, இவரையும் வெல்வ தரிதென்று இடைக்காடருடனே பேச, அவர் சொல்லியது

 

ஆற்றங்கரையின் அருகிருந்த மாமரத்தில்

காக்கை யிருந்து கஃகஃகென்னக் — காக்கைதனை

எய்யக்கோல் இல்லாமல் இச்சிச் செனவெய்தான்

வையக்கோ னார்தன் மகன்

 

இது போன்ற அனேகஞ் செய்யுட்களை அவர்களாலெழுதப் படாமலும்

கற்றுக்கொள்ளப்படாமலுஞ் சொல்ல நாணித் தோற்படைந்தார்கள்

 

திருவள்ளுவ நாயனார் திருவடி வாழ்க!

xxx

நாகலிங்க முதலியார் வெளியிட்ட திருக்குறள் மூலமும் பரிமேலழகர் இயற்றிய உரையும் என்ற நுலில் திருவள்ளுவர் சரித்திரம் என்ற பகுதியில் உள்ள விஷயம், ஆண்டு 1931.

 

(நான் முன்னர் வெளியிட்ட கட்டுரைகளில் திருவள்ளுவருடன் பிறந்த ஆறு பேர் கதைகளையும், தமிழ்ச் சங்கத்தில் ஏற்பட்ட மோதல்கள் பற்றிய திருவிளையாடல் புராணக் கதைகளையும் கொடுத்துள்ளேன்)

–சுபம்–

கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை! (Post No.4082)

Written by S NAGARAJAN

 

Date: 15 July 2017

 

Time uploaded in London:- 5-38 am

 

 

Post No.4082

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

 

கம்பன் கவி இன்பம்

கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை!

 

ச.நாகராஜன்

 

 

தமிழுக்குக் ‘க-தி’ – க- கம்பன் – தி-திருவள்ளுவர்.

இருவர் புகழையும் யாராலும் முழுதும் உரைக்க முடியாது.

ஏனெனில் அப்படி ஒரு ஆழம். அப்படி ஒரு  அகலம். அப்படி ஒரு வீச்சு. அதிலே தான் தமிழின் மூச்சு.

 

கம்ப ராமாயணத்தையோ அல்லது திருக்குறளையோ முழுதுமாக அதன் அகல்,ஆழ, வீச்சுடன் யாராலும் இன்னொரு மொழியில் மொழியாக்கம் செய்ய முடியாது.

 

ஏனெனில் தமிழின் திறம் அப்படி.

ஒரு சொல்லில் ஓராயிரம் அர்த்தங்களைச் சொல்லும் உன்னத மொழி தமிழ்.

 

கம்பனைப் போற்றி எழுந்த பாடல்கள் ஏராளம்; ஏராளம்.

அவற்றில் சமீப காலத்தில் எழுந்த ஒரு அழகிய நூல்

கம்ப ராமாயணக் கவுத்துவ மணிமாலை.

 

கம்பனை முழுதுமாக ரசிக்கத் துடித்த கம்ப ரசிகர் கே.என்.சிவராஜ பிள்ளை அவர்கள் இயற்றிய அற்புதமான நூல் இது.

18-6-̀1968இல் எனது குறிப்புப் புத்தகத்தில் நான் எழுதி வைத்துள்ள பாடல்கள் 90. (தொண்ணூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் உண்டா எனத் தெரியவில்லை)

 

ஒவ்வொன்றும் கம்பனின் புகழ் பாடும் சுவை மிகுந்த பாடல்.

 

கம்பன் என்னும் ஓர் காளமே கம்தமிழ்

அம்பு ராசி அ டங்கலும் மொண்டு வான்

பம்பும் ஆரிய மாம் இம யம்படிக்

கிம்பர் நாட்டிற் கிறைத்ததண் வாரியே

 

என்று தொடங்குகிறது நூல்.

 

கம்பன் என்னும் இயற்கை வளம் நிறைந்து இருண்ட ஒரு மேகம் எழுந்து சென்று தமிழ் இலக்கிய இலக்கணக் க்டல் முற்றிலும் உண்டு அதனோடு அமையாது வானம் அளாவி ஓங்கி நிற்கும் வடமொழியாகிய சம்ஸ்கிருதம் என்னும் இமயமலையிற் சென்று படிந்து ஆங்குச் சூல் முதிர்ந்து இந்நாட்டுள்ளார் அனைவரும் பருகித் தழைக்கும் வண்ணம் பொழிந்த குளிர்ச்சியான மழைத்தாரையாகும் – இக்கம்ப ராமாயண மகா காவியம்.

 

குறிப்பு: மஹாகவியாகிய கம்பன் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஆழ்ந்தகன்ற பாண்டித்தியமுடைய ஒரு பெரும் புலவன் என்ன இங்குக் குறிப்பிடப்படுகின்றது.

 

 

இப்படித் தொடங்குகிறது நூல்.

 

முதல் பாடலிலேயே சம்ஸ்கிருத வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி இன்றி

கம்பன் தொட்ட மூலத்தைச் சுட்டிக் காட்டுகிறார் கவிஞர் கே.என்.சிவராஜ பிள்ளை.

 

முக்கியமான ஒரு விஷயம் அந்தக் காலத்தில் , அதாவது ஆயிரத்த்தி தொள்ளாயிரத்து அறுபதுகளுக்கு முன்னர் தமிழகத்தில் சம்ஸ்கிருதமும் தமிழும் இரு கண்கள் எனத் தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டு வந்தது.

சம்ஸ்கிருதம் அறிந்த பான்மையினால் தமிழின் வளத்தையும் சிறப்பையும் நன்கு அனுபவிக்க முடிந்தது. தமிழின் தனிச் சிறப்பை ஓங்கிய குரலில் உலகுக்கு எடுத்துரைக்கவும் முடிந்தது.

 

காமர் பூவுதிர் கற்பகக் காக்கொலோ?!

பூமகள் செவ்வி பொங்கும் பயோதமோ?!

நாமகள் மெய்ந் நடம் செயும் ரங்கமோ?!

பாமகார் பதிகம்பன் நற் பாடலே

 

கம்பனின் காவியம் அழகிய பூக்களைச் சொரியும் கற்பகக் கா வா?

இலக்குமி தேவியினுடைய ஐசுவரிய அழகு பெருகித் ததும்பும் பாற்கடல் தானோ?

 

அல்லது சரஸ்வதி தேவி தன் முழு மேனியும் கொண்டு நடனம் செய்யும் ஒரு நாடக சாலையோ?

இவற்றில் எவற்றுடன் கம்பனை நான் ஒப்பிடுவேன்.

அனைத்தையும் ஒப்பிடலாம்; அதற்கு மேலும் ஒப்பிடலாம்!

என்பது கவிஞரின் கருத்து.

 

இப்படி தொண்ணூறு பாட்ல்களில் கம்பனின் தமிழ் அமுதத்தைச் சுவைத்த பான்மையை மிக அருமையாகச் சொல்கிறார் சிவராஜ பிள்ளை.

அவரது தமிழ் வன்மையையும் சுவைக்கும் பான்மையினையும் இந்த நூலில் காணலாம்.

கம்ப ராமாயணத்தைச் சுவைக்கும் அன்பர்களுக்கு இந்த நூல் ஒரு அமுத நூல்!

***

சிவபெருமானுக்கு நக்கீரர் சவால் (Post No.4081)

Written by London Swaminathan
Date: 14 July 2017
Time uploaded in London-21-27
Post No. 4081
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

திருவள்ளுவர் சரித்திரத்தின் (Year 1931) இறுதியில் நக்கீரருக்கும் சிவ பிரானுக்கும் இடையே நடந்த சண்டை பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ள்து.

 

சண்டை எப்படி துவங்கியது?

மதுரையை ஆண்ட செண்பக பாண்டியனுக்கு ஒரு சந்தேகம்; பெண்களின் கூந்தலில் இயற்கையாக மணம் உண்டா?

 

அமைச்சரவையில் யாருக்கும் பதில் தெரியாததால், நாடு முழுதும் தண்டோராப் போட்டு யார் ஒருவர் சரியான விடை தருகின்றனரோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் என்று அறிவித்தான்.

இதைக் கேட்ட ஒரு ஏழைப் பிராமணன் மதுரை மீனாட்சி கோவிலில் நின்றுகொண்டு அடக்கடவுளே! எனக்கு மட்டும் விடை தெரிந்தால் என் வறுமை எல்லாம் நீங்குமே! என்று அங்கலாய்த்தான். அந்த ஏழைப் பார்ப்பனனின் குரலைச் செவிமடுத்த சிவபிரான் மனமிறங்கி ஒரு திருவிளையாடல் செய்வோமே என்று அந்த அந்தணனிடம் ஒரு பாடலை எழுதிக் கொடுத்தார். அந்தப் பாடல் பின்வருமாறு:-

 

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமஞ் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின், மயிலியற்

செறியெயிற் றருவை கூந்தலின்

நறியவுமுளவோ நீயறியும் பூவே

குறுந்தொகை பாடல் 2

பொருள்:-

 

பூந்தாதுக்களை ஆராய்ந்து தேன் உண்ணும் வண்டே! என்னிடத்துள்ள அன்பின் காரணமாகச் சொல்லாமல், உன் கண்ணால் கண்டபடி சொல்வாயாக. நீ அருந்திய மலரில், இந்தப் பெண்ணின் கூந்தலைப் போல நல்ல மணமுடைய மலர்களும் உளவோ? சொல்வாயாக.

 

 

இதைக் கொண்டு பாண்டிய ராஜன் சபையில் வாசித்த தருமி என்ற பிராமணனை நக்கீரன் என்ற பார்ப்பனப் புலவர் சகட்டுமேனிக்குக் கேள்விகள் கேட்டார். பாடலில் சொற் குற்றமும் பொருட் குற்றமும் இருப்பதாகப் பழி சுமத்தினார்.

 

தருமி மீண்டும் கோவிலுக்குச் சென்று புலம்பவே மறுநாள், சிவபெருமானே நேரில் வந்து நக்கீரருடன் மோதினார். அப்போது சிவன் சொன்னதாவது:

 

அங்கங் குலைய அரிவாளி நெய் பூசிப்

பங்கம் படவிரண்டு கால்பரப்பிச் சங்கதனை

கீர் கீர் என அறுக்கும் கீரனோ என் கவியை

ஆராயும் உள்ளத்தவன்

 

பொருள்:

எண்ணையைப் பூசிக்கொண்டு அங்கமே ஆடும்படி உடலை எல்லாம் குலுக்கி, கால்களைப் பரப்பி வைத்துக்கொண்டு சங்குகளை அறுத்து வளையல் செய்யும் நக்கீரனா என் பாட்டைக் குறை சொன்னான்?

 

இதைக் கேட்டவுடன் புலவர் நக்கீரனுக்குக் கோபம் வந்தது.

 

நக்கீரர் சொன்னார்

சங்கறுப்பதெங்கள் குலம் சங்கரனார்க்கேது குலம்

பங்கமறச் சொன்னாற் பழுதாமோ – சங்கை

அரிந்துண்டு வாழ்வோம் அரனே நின்போல

இரந்துண்டு வாழ்வதில்லை

 

பொருள்:

ஏய்! சிவா! நாங்களாவது சங்குகளை அறுத்து வளையல் மோதிரம் செய்யும் வேளாப் பார்ப்பான் என்ற அந்தண ஜாதியைச் சேர்ந்தவர்கள்; உனக்கோ குலம் கோத்திரம் ஏதுமில்லை

நாங்களாவது சங்குகளை அறுத்து அதை விற்று வாழ்க்கை நடத்துகிறோம்; உன்னைப் போல பிச்சை எடுத்து வாழவில்லையே.

 

இதற்குப் பின்னர் வாக்கு வாதம் முற்றவே சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறக்கவே நக்கீரன் அடி பணிந்தார் என்பது திரு விளையாடல் புராணக் கதை.

 

–subham–