அதிசய புத்த துறவி ஸு யுன்! – 34 (Post No.3518)

Written by S NAGARAJAN

 

Date: 13 March 2017

 

Time uploaded in London:-  8-10 am

 

 

Post No.3718

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 34

ச.நாகராஜன்

 

113ஆம் வயது – (1952-1953)

ஸு யுன்னுக்கு இப்போது வயது 113. வசந்த காலம் வந்தது. அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது.மிகவும் மோசமான தருணங்களை எப்ப்படிக் கையாளுவது என்பத்ற்காக சான் தியான பயிற்சியை அவர் நடத்தினார்..

பீஜிங் அரசிடமிருந்து முதல் மூன்று மாதங்களில் நான்கு முறை பீஜிங் வருமாறு தந்தி வந்தது. அவரை அழைத்துச் செல்ல அதிகாரிகள் பீஜிங்கிலிருந்து வந்தனர். அப்போது அங்கிருந்த மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து போக வேண்டாம் என்றனர்.

அதற்கு ஸு யுன், “காலம் கனிந்திருக்கிறது. ஒரு நல்ல தலைவன் இல்லாததால் நமது பணிகளைச் செய்ய முடியாமல் துரதிர்ஷ்டம் வந்து தடுக்கிறது. நான் தர்மத்தைக் காக்க அங்கு செல்ல வேண்டும். அது எனது பொறுப்பாகும்.” என்றார்.

யுன் மென் மடாலயத்தை நிர்வகிக்க சில மூத்த பிக்ஷுக்களை அவர் தேர்ந்தெடுத்தார். பின்னர் விடை பெறுமுன் இரு துண்டுச் சீட்டுகளில் இப்படி எழுதினார்:

“ஐந்து ஆட்சிகளையும் நான்கு வம்சங்களையும் நான் பார்த்துக் கொண்டிருந்த போது பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன.

சொல்லவொண்ணாத ஏற்ற இறக்கங்கள் உலகின் நிலையில்லாத் தன்மையை எனக்குப் புரிய வைத்தன.”

நான்காம் மாதம் நான்காம நாள் அவர் அதிகாரிகளுடன் அவர் புறப்பட்டார். பல நூறு பேர்கள் திரண்டு வந்து அவரை வழியனுப்பி வைத்தனர். டா ஜியான் மடாலயத்தில் அவர் தங்கிய சமயத்தில் ஏராளமானோர் வந்து அவருக்குத் தங்கள் மரியாதையைச் செலுத்தினர். ஆட்சி மாறினாலும் அவரது மதிப்பு மாறாது என்பதை இது காட்டியது.

ப்த்தாம் நாளன்று அவர் காண்டன் ஹாங்கோ ரயிலில் ஏறி வுசாங் சென்றார்.

அங்கு ‘மூன்று புத்தர்கள்’ மடாலயத்தில் அவர் தங்கினார். உடம்பெல்லாம் ஏற்பட்டிருந்த புண்கள் இந்தப் பயணத்தினால் அவருக்கு வலியையும் வேதனையையும் தந்தன.

உபாசகர் ஜென் ஜென் ரு அவருக்கு மருத்துவ உதவியை அளித்தார். பின்னர் ஒரு வார காலம் அவலோக்தேச்வர போதிசத்வரின் மந்திரங்கள் ஓதப்பட்டன.

பின்னர் அவர் பீஜிங் சென்றார். அவர் செல்லுமுன்னர் மடாலயத்தில் இருந்த பிக்ஷுக்கள் அனைவரும் அவரை போட்டோ எடுத்தனர். போட்டோவில் ஒரு கவிதையை ஸு யுன் எழுதினார்.

“கர்மம் என்னை வுசாங் நோக்கிச் செலுத்துகிறது.

எனது உடல்நலமின்மை மற்றவருக்கு ஒரு தொந்தரவு.

மூன்று புத்தர்கள் ஆலயத்தில் மூன்று மாதம் தங்கினேன்.

அவமானமும் பயங்கரமும் என்னைச் சூழ உலகின் உச்சியில் ஏறினேன்.

மற்றவரும் அதை அடைவதற்காக நான் காத்திருந்தேன்.

குவான் ஜாங் மியூ ஓரிரு வார்த்தைகள் கேட்ட பின்னர் யு ஷுவான் மலையுச்சியில் நிர்வாண நிலையை எய்தியதை நினைவில் கொண்டேன்.”

ஏழாம் மாதம் இருபத்தெட்டாம் நாள் அவர் பீஜிங் அடைந்த போது ரயில் நிலையத்தில் ஏராளமானோர் அவரை வரவேற்கக் குழுமி இருந்தனர்.

குவாங் ஹா மடாலயத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் வருகை புரிந்தோர் அதிகமாக இருந்ததால அந்த இடம் போதவில்லை.

நாடெங்கிலுமிருந்து நூறு பிரதிநிதிகள் அங்கு வந்தனர். சீன புத்த சங்கத்தை மறுபடியும் நிறுவ முடிவு செய்யபப்ட்டது.

மதத்தை சுதந்திரமாகக் கடைப்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை அரசின் முன்னர் ஸு யுன் சமர்ப்பித்தார்.

மடாலயங்கள் இடிக்கப்படக் கூடாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

பிக்ஷுக்களிடம் பிடுங்கிய நிலத்தை மீண்டும் ஒப்படைத்து அவர்கள் அதைப் பயிரிட அனுமதிக்க வேண்டும் என்ற் வேண்டுகோளையும் அவர் முன் வைத்தார்.

எட்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளன்று சிலோன் புத்த தர்ம பிரதிநிதிகள் அவரைச் சந்திக்க வந்தனர்.

ஒன்பதாம் மாதம் குவாங் ஜி மடாலயம் வருமாறு ஏராளமானோர் வேண்டிய போது தனது முதிர்ந்த வயதையும் உடல் நலம் சரியில்லாம்ல் இருப்பதையும் சுட்டிக் காட்டி வர இயலாது என்று அவர் தெரிவித்தார்,

பத்தாம் மாதம் உலக அமைதிக்காக ஒரு பெரிய பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. ஏழு வாரம் நடை பெற்ற கூட்டத்தின் இறுதியில் 3000 சீன டாலர்கள் அவருக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்டது. அதை நான்கு புனித தலங்களுக்கும் எட்டு மடாலயங்களுக்கும் 350 சிறிய மற்றும் பெரிய ஆலயங்களுக்கும் அவர் வழங்கினார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க அருமையான சொற்பொழிவை அவர் ஷாங்காயில் 1952, டிசமப்ர் 17ஆம் தேதி ஆற்றினார்.

அதில் உலக அமைதியை அவர் வலியுறுத்தினார்.

தர்ம குரு யின் குவாங்கின் 12வது நினைவு நாள் 1952 டிசம்பர் 21ஆம் தேதி அனுஷ்டிக்கப்பட்ட போதும் அவர் ஒரு சிறப்புரையை ஆற்றினார்.

அவரது 113ஆம் வ்யது முடிவுக்கு வந்தது.

– தொடரும்

 

Husband is God!!! Who will believe Valmiki, Kalidasa and Sangam Tamil Poets? (Post No.3717)

Written by London swaminathan

 

Date: 12 March 2017

 

Time uploaded in London:- 19-37

 

Post No. 3717

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

There is a saying in all old Sanskrit and Tamil books that ‘Husband is God’; I don’t know how many modern Hindu women would agree with this ‘old fashioned’ thought. When I was a school by there was, a film titled ‘Kanavane Kankanda Deivam’ i.e. Husband is the visible God! Now people may laugh at this idea, leave alone believing it!

 

The second idea repeated very often in 2000 year old Sangam Tamil Literature and Sanskrit literature is that the ‘same husband must come as her husband in future births’!! How many women would dare to say this to her husband in private or in public? How many women can tolerate such a thing if it happens!! Is in it horrible?

 

My mother had never said my father’s name in public! This is the third old fashioned idea that Hindu women had in the past. Now, my wife says my name loud and clear ten times in public when there was an opportunity to say it. But I myself had the difficulty of finding a gentleman’s’ name in a village, when I was working as the secretary of Madurai District RSS (Jilla Karyavah). The woman refused to say her husband’s name when I asked her and she gave me lot of tips and clues! It was like a puzzle I had to solve!

 

For instance if her husband’s name is Rama chandran, she would say her husband’s name is Sita’s husband name. If I say just Rama , then she will say ‘yes’ and add the moon with that name! Then I have to derive Rama Chandra from that! (Chandran is the Sanskrit word for moon)!

 

I don’t know how many Hindu women still believe in these ‘’old fashioned’’ views.

 

If you dare to put these views to any woman and ask her opinion, she may say ‘NO’ or a conditional YES (if my husband is like Rama, ‘YES’, if he is like Krishna ‘NO’)!

 

Let me give examples from Tamil and Sanskrit books:-

“Supressing his sobs, Rama replied to his mother, who was weeping, and said:- As long as sge lives, a woman’s god and her master is her husband; further the king is thine absolute lord as well as mine.”

 

This is a conversation between Rama and Kausalya about Kaikeyi and Dasaratha.

 

“By obedience to her husband, a woman attains the highest heaven, even if she has failed to render due homage to the Gods.”

 

–Ayodhya kanda, chapter 24, Vlmiki Ramayana

Tamil Poet supports Valmiki

Tiruvalluvar, author of Tamil Veda, Tirukkural says

“A wife who may not worship God but wakes up with worshipful devotion to her husband has the power to make rainfall at her bidding”- Kural 55

 

In fact Tiruvalluvar’s wife Vasuki is attributed with so many miracles because of her devotion to her husband.

 

Valmiki has repeated this in many places; one more instance from the same Ayodhya kanda:

“O, son of an illustrious monarch! a father, a mother, a brother, a son or a daughter-in-law enjoy the fruit of their merits and receive what is their due, a wife alone follows the destiny of her husband. For a woman it is not her father or her son nor her mother friends nor her own self, but the husband who in this world and the next is ever her sole means of salvation.”

Sita said this to her husband Rama.

In Kalidasa’s Raghuvamsa Kavya, Sita says that she would do penance to get Rama as her husband in her next birth!

साहम् तपः सूर्यनिविष्टदृष्टिः
ऊर्ध्वम् प्रसूतेश्चरितुम् यतिष्ये।
भूयो यथा मे जननान्तरेऽपि
त्वमेव भर्ता न च विप्रयोगः ॥ १४-६६

sāham tapaḥ sūryaniviṣṭadṛṣṭiḥ
ūrdhvam prasūteścaritum yatiṣye |
bhūyo yathā me jananāntare’pi
tvameva bhartā na ca viprayogaḥ  || 14-66

 

Thus situated, I shall, after the birth of the child, endeavour to practise penance with my eyes fixed on the sun in such a manner that I may gain you as my unseparated husband. [14-66]

But, once Thy son is born,/Unswerving I shall fix my weary eyes/On yon bright Sun, and by severest modes/Of penance strive that in some future life/Thou only be my Lord, my Lord for aye!

(It is called Panchagni penance, i.e. Five Fire Penance. Uma did this type of penance to get Siva s her husband in Kalidasa’s Kumara sambhava. On four sides there will be fire and one would stand in the sun which is the fifth fire. And in this heat the penance would be done).

 

Tamil Epic Silappadikaram has the following passage:

 

In a divine chariot at the side of Kovalan, Kannnaki went up to heaven.. Because it is a fact that Gods will worship her who worships not God but worships her husband, Kannaki, that jewel among women of the earth, became a goddess and the guest of the ladies of heaven (Katturai Kaathai, Silappadikaram)

Manimekalai, another Tamil epic, has a similar passage.

Sangam Poets

 

Tamil work Kuruntokai (49) of Sangam Period has a similar poem:

A man left the courtesan and returned to his lady love. Immediately the lady was over the moon and said, “ O , My Lord, even in the next birth you must be my lord and I must be your lover.—Poet Ammuvanar.

A wife cried because…………………………..

Tiruvalluvar, author of the Tamil Veda Tirukkura says,

“The moment I said we will not part IN THIS LIFE

Her eyes were filled with tears” – Kural 1315

 

the idea is that when her husband stated that they will not part in the PRESENT LIFE, she immediately held, that he was envisaging the possibility of their parting in the next life, which she did not kindly take to. Hence the tears.

 

Kalidasa says Aja and Indumati became husband and wife again in this birth. (Raghuvamsa 7-15)

 

रतिस्मरौ नूनमिमावभूताम् राज्ञाम् सहस्रेषु तथा हि बाला।
गतेयमात्मप्रतिरूपमेव मनो हि जन्मान्तरसंगतिज्ञम्॥ ७-१५

ratismarau nūnamimāvabhūtām
rājñām sahasreṣu tathā hi bālā |
gateyamātmapratirūpameva
mano hi janmāntarasaṁgatijñam || 7-15

“These two are undoubtedly Rati Devi and Manmatha in human form… that is why this maiden has chosen Prince Aja as her own match from among thousands of kings… after all, it is heart that cognises connubial tie-ups existing in all lifecycles… [ raghu vamsa 7-15]

 

Natrinai  (Verse 397 by Poet Ammuvanar) is another book in the Sangam literature. A woman laments: I am not worried about death; whoever is born must die. But if I am born as a non-human being in my next birth I may not get this man as my husband. That is what worries me much”.

There are lot of such examples in Tamil and Sanskrit literature. This is a common thought reflected in Manu Smrti and other Sanskrit works. It is amazing to see the same though from land’s southernmost end to the Northern Himalayas. The absence of such a view in other cultures explode the Aryan Dravidian divisions. India is one and there is no different culture. There is only one culture which is unique in the world.

 

–Subham–

 

 

எகிப்து மீது படை எடுத்தவர்கள் இந்திய யக்ஷர்களா?-எகிப்திய அதிசயங்கள் -18 (Post No.3716)

Written by London swaminathan

 

Date: 12 March 2017

 

Time uploaded in London:- 6-39 am

 

Post No. 3716

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

எகிப்தின் மீது படை எடுத்த HYKSOS ஹிக்ஸோஸ், வெளிநாட்டினர் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்றும் எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் ஆசியாவில் எங்கிருந்து என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. என்னுடைய கருத்து அவர்கள் இந்தியர்கள் என்பதே.

 

எகிப்தியர்களுக்கு குதிரை என்றால் என்ன என்று தெரியாது. ஹிக்ஸோச் கி.மு 10 வாக்கில் எகிப்துக்குள் நுழைந்த பின்னர்தான் அவர்கள் குதிரையைப் பயன்படுத்தத் துவங்கினர். அதற்கு முந்தைய 1500 ஆண்டுகளுக்கு குதிரையும் தெரியாது; ரதமும் (தேர்) தெரியாது. ஆயினும் கி.மு.1500 முதல் குதிரை ரதங்களின் படைகளில் எகிப்திய பாரோக்கள் சண்டை போடுவது போல படங்கள் இருப்பதால் ஹிக்ஸோஸ் படை எடுப்பதற்கு முன்னரே குதிரை வியாபாரிகளாகப் போயிருக்க வேண்டும். இலங்கைக்குள் குதிரை வியாபாரம் செய்யப்போன தமிழர்கள், ஆட்சியைக் கைப்பற்றிய செய்தி மஹா வம்சத்தில் இருக்கிறது.

IMG_1464

துருக்கியில் கிடைத்த (கி.மு.1300) சம்ஸ்கிருத கையேட்டில், குதிரைப் பயிற்சி எல்லாம் சம்ஸ்கிருதக் கட்டளைகளில் இருப்பதால் அக்காலத்திலேயே நம்மவர் துருக்கிவரை சென்று சம்ஸ்கிருத மொழி   மூலம் பயிற்சி தந்தது தெரிகிறது. இது தொல்பொருட் துறை சான்று என்பதால் மறுப்பதற்கில்லை.

 

துருக்கி என்ற நாடு இன்று முஸ்லீம் நாடாக இருந்த போதிலும் துருக்கி, சிரியா, இராக், ஈரான் முதலிய நாடுகள் இந்துக்களின் ஆதிக்கத்தில் அவ்வப்பொழுது இருந்து வந்தது. துரக (குதிரை) என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்தே துருக்கி என்ற சொல் வந்தது. இந்தக் காலத்துக்குப் பின்னர் எகிப்து – இந்துக்கள் தொடர்பு நல்ல ஆதாரங்களுடன் அமைந்துள்ளது. துருக்கி-சிரிய பகுதியை ஆண்ட தசரதன் என்ற மன்னன் எழுதிய கடிதங்கள் எகிப்தில் உள்ளன.

 

இனி ஹிக்ஸோஸ் (Hyksos) ஆட்சி பற்றி சற்று விரிவாகக் காண்போம்:

 

” பின்னர் கிழக்கு திசையிலிருந்து திடீரென்று இனம் தெரியாத ஆட்கள் வெற்றி முழக்கத்துடன் நம் தேசத்தின் மீது படை எடுத்தனர். பலத்தைப் பயன்படுத்தி நம் மன்னர்களை அவர்கள் வென்றனர். கருணையின்றி நம்முடைய நகரங்களை எரித்தனர்; கடவுளரின் கோவில்களை தரை மட்டமாக்கினர். நாட்டு மக்களை வெறுப்புடன் கொடூரமாக நடத்தினர்” — இவ்வாறு எகிப்து வரலாற்றை எழுதிய மனீதோ (Manetho) எழுதி இருப்பதாக முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஜோசபஸ் (Josephus) எழுதியுள்ளார்.

 

இதை அப்படியே நம்பிவிடக்கூடாது. ஏனெனில் ஹிக்ஸோஸ் படை எடுத்தது மனீதோவுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பு!

மனீதோவின் புத்தகம் முழுதும் கிடைக்காததால் அவர் சொன்னதாக மற்றவர் எழுதி இருப்பதைப் பார்க்கிறோம்.

Pottery from Hyksos period

இவ்வளவுக்கும் இன்றுவரை அவர்கள் யார் என்பதற்கான தொல்பொருத் துறை தடயங்களோ, உறுதியான தகவல்களோ இல்லை. 15ஆவது 16ஆவது வம்சங்கள் ஆண்டபோது இவர்கள் இருந்ததால் சமகாலத்திய எழுத்துகள் கிடைத்துள்ளன. மனீதோ எழுதியதாக மற்றவர்கள் மேற்கோள் காட்டுவதைத்தான் நாம் நம்ப வேண்டியுள்ளது.

 

அதிலிருந்து கிடைக்கும் குறிப்புகள்:

  1. ஹிக்ஸோஸ் கடல் வழியாக (SEA PEOPLE) வந்த வெளிநாட்டினர்.

2.இந்தச் சொல்லின் பொருள் வெளிநாட்டு ஆட்சியாளர். இதற்கான எகிப்திய சொல்லை கிரேக்கர்கள் ஹிக்ஸோஸ் என்று எழுதத் துவங்கினர்.

  1. அவர்கள் நைல் நதி டெல்டாவில் அவரிஸ் என்ற ஊரை தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

4.அவர்களுடைய ஆட்சி தெற்கில் நூபியா NUBIA வரை பரவியது

6.அவர்கள் கொடூரமானவர்கள்.

7.இறுதியில் எகிப்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர்.

இவர்கள் கி.மு 1650 முதல் கி.மு.1550 வரை சுமார் 100 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்.

 

சில மன்னர்களின் பெயர்கள்

சகிர் ஹர — ??

க்யான் (ஞான) –கி.மு.1620

அசுர அபோபி –கி.மு.1595-1555

கமுதி (கௌமுதி) – – கி.மு. 1555- 1545

சேஷி (சசி)

(பெயர்களில் சம்ஸ்கிருத சாயல் இருப்பதைக் கவனியுங்கள்)

இதெல்லாம் நடந்தது நடு ராஜ்யத்துக்கும் இரண்டாவது இடைவெளிக் காலத்துக்கும் இடையே ஆகும். அவர்களை கி.மு 1520 ஆம் ஆண்டில் விரட்டி அடித்தவுடன் எகிப்தில் புதிய ராஜ்யம் ஆட்சி செய்யத் துவங்கியது.

இக்காலத்திய கல்வெட்டுகள் இரண்டு கிடைத்தன. தீப்ஸ் THEBES நகர மன்னர் காமோசி, தலை நகர் ஆவரிஸ் AVARIS வரைக்கும் 1540ல் சென்றார். ஹிக்ஸோஸ் மன்னர் அசுர அபோபிஸ்,  , கோட்டையைவிட்டு வெளியே வரவில்லை. பின்னர் கி.மு 1520ல்  காமோசிக்குப் பின்னர் ஆண்ட  அமோசி சென்று அவர்களை விரட்டினார்.

 

எங்கிருந்து வந்தனர்?

 

இவர்கள் எந்த இனத்தவர் என்பதற்கான துப்பு எதுவும் கிடைக்கவில்லை. ஹகா கசுட் Heqa Khasut என்றால் வெளிநாட்டு ஆட்சியாளர்- இது கிரேக்க மொழியில் ஹிக்ஸோஸ் ஆனது. சில காகிதங்களில் ஆவர்கள் Aamu ஆமு (ஆசிய நாட்டவர்) என்று சொல்லப்படுகிறது. அவர்களுடைய பெயர்களில் அசுர என்ற சொல் வருவதால் அவர்கள் செமிட்டிக் மொழியினர் என்று ஊகிக்கப்படுகிறது.

 

1985 ஆம் ஆண்டுவரை இரண்டு இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்ததில் அவர்கள் பைபிளில் குறிப்பிடப்படும் கானனைட் (Cananite) தொடர்புடையோர் என்பது தெரிகிறது. பானை ஓடுகள், இறுதிச் சடங்குகள் ஆகியவற்றைக் கொண்டு இதை அறிந்தனர்.

 

படங்களைப் பார்க்கையில் அவர்கள் குதிரை பூட்டிய ரதங்களில் வருவதும், புதுவகை வில்லைப் பயன்படுத்துவதும் தெரிகிறது. இதை இதற்கும் முன்னர் பாலஸ்தீனம், சிரியா  ஆகிய இடங்களில் காணலாம். புதிய ஆட்சியைப் பிடித்த அவர்கள் எகிப்திய கலாசாரங்களின் பல அம்சங்களை ஏற்று அவர்களோடு இணைந்துள்ளனர்.

 

கிழக்கு மத்திய தரைக் கடலோர நாடுகளான கிரீஸ், துருக்கி, பாலஸ்தீனம், சிரியா ஆகிய பகுதிகளை லெவான்ட் LEVANT என்று அழைப்பர். அதன் தென்பகுதிலிருந்து இவர்கள் வந்தனர் என்பது சிலரின் கணிப்பு.

 

13-ஆவது வம்சம் ஆட்சி பலவீனமானபோது பல நாடோடிக் குழுக்கள் எகிப்துக்குள் புகுந்து குடியேறினர் அவர்களே பின்னர் இப்படி ஆட்சியைக் கைப்பற்றினர் என்பர் மற்றும் சிலர். இவர்களுடைய ஆட்சிக் காலத்தில் எகிப்து நீண்ட தொலைவு கடல் வாணிபம் செதுள்ளது. கிரேக்க நாட்டிலும், அருகிலுள்ள தீவுகளிலும் இவர்களுடைய பரிசுப் பொருட்கள் கிடைத்தன. வாசனைத் திரவிய பாட்டில் மூடிகளில் மன்னர் க்யான் KHYAN (ஞானி?) பெயர் உள்ளது. அவர்கள் அருகாமை நாடுகளுடன் நட்புறவுடன் வாழ இப்படிப் பரிசுகளை அனுப்பியது குறிப்பிடத் தக்கது.

 

அவரிஸ் AVARIS என்ற தலைநகரில் ஹிக்ஸோஸ் அரண்மனையில்,  கிரேக்க நாட்டு மினோவன் MINOAN பாணி ஓவியங்கள் இருக்கின்றன. எகிப்தியர்கள் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிவர்கள்; ஆனால் ஹிக்ஸோஸ் கடலாதிக்கம்  செலுத்தினர்..

 

குதிரைகளை எகிப்துக்குள் கொண்டுவந்தவர்கள் என்பதாலும், ஞான், அசுர, யக்ஷ (Hykso) போன்ற சப்தம் உடைய பெயர்கள் இருப்பதாலும் இவர்கள் இந்திய நிலப் பரப்பிலிருந்து புறப்பட்டவர்களாக இருக்கலாம்.

 

தீப்ஸ் என்னும் தெற்கத்திய நகரிலிருந்து தன்னாட்சி செய்துவந்தோர் எகிப்திலிருந்து ஹிக்ஸோசை வெளியேற்றி முன்னைவிட சக்தி வாய்ந்த எகிப்தியப் பேரசை உருவாக்கினர்.

xxxx

 

 

My Research Articles on Egypt

Did Indians build Egyptian Pyramids?

27 august 2012

Hindu Gods in Egyptian Pyramids

16 september 2012

Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda

26 september 2012

 

Mata and Pita in Egyptian Religion! – 17 November 2014

 

Vedas and Egyptian Pyramid Texts

29 August 2012

 (Part 3)

5 september 2012

More Tamil and Sanskrit Names in Egypt

Research paper written by London Swaminathan
Research article No.1413; Dated 15th November 2014.

Flags: Indus Valley-Egypt similarity

15 october 2012

 

First Homosexual King in History! (Post No.3692) 5-3-2017

 

கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி எகிப்து அதிசய ஒற்றுமை!

14 october 2012

எகிப்திய நாகரீகத்தில் மேலும் பல தமிழ்ப் பெயர்கள்!!

Research paper written by London Swaminathan
Research article No.1414; Dated 16th November 2014.

 

எகிப்தில் திருமூலர் கருத்துக்கள்

POST No. 716 dated 21 Novemeber 2013

சுமேரியா, எகிப்தில் இந்திரன் வழிபாடு!

15 September 2014

 

எகிப்திய அதிசயங்கள் 17 கட்டுரைகள்

 

1.எகிப்திய அதிசயங்கள்-1: மிஸ்ர தேசம் என்று ஏன் பெயர்? (Post No.3638) posted on 15-2-2017

2.எகிப்திய அரசனுக்கு ஐந்து பெயர்கள்! எகிப்திய அதிசயங்கள்-2 (Post No.3641) posted on 16-2-2017

 

3.எகிப்தில் இந்தியப் பண்பாட்டின் தாக்கம்: எகிப்திய அதிசயங்கள்- பகுதி 3 (Post No.3648)posted 18-2-2017

 

4.எகிப்தில் சூர்ய வம்சம்: எகிப்திய அதிசயங்கள்-பகுதி 4 (Post No.3651) posted 19-2-2017

 

5.ஆதிகால எகிப்திய புலவரின் புலம்பல்; எகிப்திய அதிசயங்கள்-5 (Post No.3654) posted 20-2-2017

6.எகிப்தில் நரபலி:எகிப்திய அதிசயங்கள்-பகுதி 6 (Post No.3657) posted on  21-2-2017

 

7.எகிப்தில் இந்திய நீலக்கல்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 7 (Post No.3660) posted on 22-2-2017
8.மனித முகம்சிங்க உடல்! ஸ்பிங்ஸ்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 8 (Post No.3664) posted on  23-2-2017

9.எகிப்தில் 30 வம்சங்கள்: அதிசய தகவல்கள்-பகுதி 9 (Post No.3667)

posted on  24-2-2017

 

10.பிரமிடுகளை முதலில் கட்டிய வம்சாவளி: எகிப்திய அதிசயங்கள்-10 (Post No.3670)posted on  25-2-2017

 

11.பெரிய பிரமிடு– எகிப்திய அதிசயங்கள் -பகுதி 11posted on  27-2-2017

12.வேதக் கழுகும், எகிப்தியக் கழுகும்- எகிப்திய அதிசயங்கள்-12 (Post No.3684) posted on  2-3-2017

 

13.சுவர்களில் எழுதப்பட்ட சமயச் சடங்குகள்- எகிப்திய அதிசயங்கள்-13 (Post No.3687)posted on  3-3-2017

 

14.மன்னர்களுடன் படகுகளை புதைத்தது ஏன்எகிப்திய அதிசயங்கள் –14 (Post No.3689) posted on  4-3-2017

15.சித்திர எழுத்துக்கள் – எகிப்திய அதிசயங்கள் –15 (Post No.3693)

posted on  5-3-2017

 

16.விசித்திர உருவம் கொண்ட தெய்வங்கள்: எகிப்திய அதிசயங்கள்-16 (Post No.3696) posted on   6-3-2017

 

17.எகிப்தில் இந்து தெய்வங்களின் வழிபாடு- எகிப்திய அதிசயங்கள் – பகுதி 17 (Post No.3705)

 

 

 

xxxxx

எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 1 (கட்டுரை எண் 2803) by S Nagarajan; posted on  Date: 12 May 2016

2.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 2 (Post No.2806) by S Nagarajan; posted on  Date: 12 May 2016

 

3.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 3 (Post No.2809)  BY S NAGARAJAN; posted on  Date: 14 May 2016

 

Please Read my earlier Posts
The Great Scorpion Mystery in History – Part 1 (posted 10 November 2012)
The Great Scorpion Mystery in History – Part 2(posted 10 November 2012)

 

பார்வை இருந்தும் பார்க்க முடியாத மாய கொரில்லா! (Post No.3715)

Written by S NAGARAJAN

 

Date: 12 March 2017

 

Time uploaded in London:-  5-41 am

 

 

Post No.3715

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

அறிவியல் துளிகள் தொடரில் ஏழாம் ஆண்டு துவங்குகிறது. ஏழாம் ஆண்டின் முதல் கட்டுரை பாக்யா 3-3-2017 இதழில் வெளியாகியுள்ளது.

 

 

பார்வை இருந்தும் பார்க்க முடியாத மாய கொரில்லா!

ச.நாகராஜன்

 

“உணர்ச்சியைப் போல கவனம் என்பதும் வியப்பளிக்கும் ஒரு விஷயமே” – ஏரியன் மாக்

 

பார்வையுள்ள அனைவ்ருமே எதிரில் இருப்பதை சரியாகப் பார்க்கிறார்களா? இதில் என்ன சந்தேகம், பார்க்கத் தான் பார்க்கிறார்கள் என்று பதில் சொன்னால் அது உணமையில்லை என்கிறது அறிவியல்.

 

 

எதிரில் நண்பர் ஒருவர் நிற்கும் போது மனதில் எதையோ ஒன்றை நினைத்துக் கொண்டிருக்கும் போது அவரைப் பற்றிய உணர்வே நமக்குத் தோன்றுவதில்லை. அவர் நம்மை அசைத்து ஆட்டி என்ன ஆயிற்று உனக்கு என்று கேட்கும் போது ‘சாரி, கவனம் எங்கேயோ இருந்தது’ என்கிறோம்.

 

 

 

இப்படி மனம் கண் என்ற புலனுடன் இயையாமல் இருக்கும் போது எதிரில் இருப்பதைப் பார்க்க முடிவதில்லைல் ஆனால் மனம் கண்ணுடன் இயைந்து இருக்கின்ற போது, கண் பார்வை சரியாக இருந்தும் எதிரில் இருப்பதை சரியாக பலரும் பார்ப்பதில்லை என்பதைத் தான் அறிவியல் சொல்கிறது.

இதற்கு இன் அட்டென்ஷனல் ப்ளைண்ட்னெஸ் (Inattentional Blindness) கவனமற்றுக் குருடாயிருத்தல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

 

கிறிஸ்டோபர் சாப்ரில் மற்றும் டேனியல் சைமன்ஸ் (Christopher Chabril and Daniel Simons)  ஆகிய இரு விஞ்ஞானிகள் இதற்காக ஒரு தனிச் சோதனையையே செய்துள்ளனர். அது மாயக் கொரில்லா என்ற பொருள்படும் இன்விஸிபிள் கொரில்லா சோதனை என்று அழைக்கப்படுகிறது.

 

 

இந்த விஞ்ஞானிகள் தன்னார்வத் தொண்டர்கள் சிலரை சோதனைக்கு அழைத்தனர். சோதனையில் வீடியோ ஒன்று போட்டுக் காண்பிக்கப்பட்டது. அது ஒரு பேஸ்க்ட்பால் விளையாட்டு. அதில் விளையாடியது இரு அணிகள். வெள்ளை உடை அணிந்து ஒரு டீம்;; கறுப்பு உடை அணிந்து இன்னொரு டீம். வீடியோ பார்ப்பதற்கான  மொத்த நேரமே ஒரு நிமிடம் தான்.

 

 

சோதனைக்கு வந்த பார்வையாளர்கள் வெள்ளை உடை அணிந்தவ்ர்கள் எத்தனை முறை பந்தைப் போடுகிறார்கள் என்று சொல்ல வேண்டும், அவ்வளவு தான்!

 

இந்த விளையாட்டில் பாதியில் கொரில்லா உடை அணிந்து ஒரு பெண் காட்சியில் தோன்றி நடந்து வந்து நின்று தனது மார்பில் ஒரு தட்டு தட்டிக் கொண்டு பின்னர் நடந்து சென்று விடுவார். அவர் காட்சியில் தோன்றும் மொத்த நேரம் ஒன்பது விநாடிகள் தான்.

படம் முடிந்த பிறகு அந்தப் பெண்மணியைப் பார்த்தவர்கள் யார் யார் என்று கேட்ட போது பாதிப் பேர் அப்படி ஒரு பெண்மணி விளையாட்டின் இடையே வரவே இல்லை என்றனர்.

 

 

இது தான் மாய கொரில்லா சோதனை.

 

இன்னும் பல சோதனைகளில் இப்படி ஒரு மாய கொரில்லா இடையே வருவார் என்று சொன்ன போதும் கூட அதைப் பலரும் கவனிக்கத் தவறி விட்டனர்.

 

மக்களில் பெரும்பாலானோர் திடீரென்று தோன்றும் ஒன்றைப் பொதுவாக கவனிப்பதில்லை.

 

 

 

இன்னொரு சோதனை ஒன்று நடத்தப்பட்டது.

யாரோ ஒரு அன்னியர் ஒரு பெண்மணியை திடீரென்று வழியில் பார்த்து ஒரு முகவரியைச் சொல்லி அது எங்கே இருக்கிறது என்று கேட்கிறார். அப்படிக் கேட்டுக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு இடையே இரண்டு மனிதர்கள் ஒரு பெரிய கதவை தூக்கிக் கொண்டு நடக்கின்றனர். பிறகு அந்தப் பெண்மணி முகவரியில் உள்ள இடத்திற்கு எப்படிச் செல்வது என்று விவரிக்கிறார். ஆனால் அவர் விவரிப்பது இன்னொரு நபரிடம். கேள்வி கேட்டவ்ர் அவரில்லை. அவரை விட மாறுபட்ட உடை, உயர்ம் இருந்தாலும் கூட அதைப் பார்ப்பவர்கள் இந்த மாறுதலை உடனடியாகக் கண்டுபிடிக்கவில்லை.

 

 

மேலை நாட்டில் ஒரு முக்கிய கேஸில் ஒருவர் இதனால் தண்டனையையே அடைந்தார். 1995ஆம் ஆண்டில் நடந்தது இது. ஆபீஸர் கெனி கான்லி என்பவர் குற்றவாளி என்று சந்தேகப்பட்ட

ஒருவரைத் துரத்திக் கொண்டு ஓடினார். அதே சமயம் ஒரு புலனாய்வு ஆபீஸர் ஒருவரை அவரது சக அதிகாரிகள் அடித்துக் கொண்டிருந்தனர். வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் கான்லி தான் எதையும் பார்க்கவில்லை என்று சாட்சி சொன்னார். நீதிபதி அதை நமபவில்லை. அவர் தனது நண்பர்களுக்குச் சாதகமாக அந்த சண்டையைப் பார்க்கவில்லை என்று சொல்வதாகக் கூறி அவருக்கு பிழை சாட்சியம் சொன்னதற்காக தண்டனையைத் தந்தார்.

 

 

பாவம் கான்லி. இந்த இன் அட்டென்ஷனல்

ப்ளைண்ட்நெஸ்ஸுக்கு உள்ளான காரணத்தினால் தண்டனை அடைய நேர்ந்தது.

 

 

பொதுவாக் ஐம்பது சதவிகதம் பேருக்கு இந்த மாய கொரில்லா சோதனை ஒரு பெரிய வேதனையைத் தந்து விடுகிறது.

‘தி இன்விஸிபிள் கொரில்லா’ (The Invisible Gorilla( என்ற தங்களது புத்தகத்தில் மனிதர்களின் பார்வைக் கோளாறு பற்றி இந்த இரு விஞ்ஞானிகள் அழகுற விளக்குகின்றனர்.

 

 

 

மனமானது ஒரு மனிதனை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது என்பதை விளக்குகையில் மனம் ஏமாற்றும் இன்னும் ஐந்து மாயங்களையும் அவர்கள் விளக்குகின்றனர்.

 

 

நினைவில் அனைவரும் ஒரு காட்சியைப் பார்த்ததை நூறுக்கு நூறு சதவிகிதம் சொல்வது அரிது. நீதி மன்றத்தில் ஒரு சாட்சி பார்த்ததை இன்னொரு சாட்சி மறுக்கிறாரே, அது சகஜமான ஒன்று.

அடுத்து நம்பிக்கை பற்றியது. பலரும் அதீத நம்பிக்கையுடன் அடித்து ஒரு விஷயத்தைச் சொல்வார்கள். இதனால் குழப்பம் தான் ஏற்படும்.

 

 

அடுத்து அறிவைப் பற்றியது. நிபுணர்கள் கூட தனக்கு ஒரு விஷயத்தைப் பற்றி மிக நன்றாகத் தெரியும் என்று ஏமாறுவது வழக்கம். நன்றாக ஆராய்ந்து பார்த்தால் தான் அவர்களுக்கு உண்மையில் எவ்வளவு தெரியும் என்பது தெரிய வரும்.

அடுத்து காரண காரியம் பற்றி ஏமாறுவது. ஏதோ ஒரு விஷயம் நடந்த போது அதற்கான காரணம் இது தான் என்று மனதில் தோன்றிய படி கூறி விடுவது வழக்கம். ஆனால் ஆராய்ந்தால் உண்மை வேறு விதமாக இருக்கும்.

 

 

 

இறுதியாக எல்லோரும் சொல்லும் ஒன்றை ஆராயாமல் உடனே நம்பி ஏமாறுவது. மனிதர்கள் தங்கள் மூளைத் திறனில் ஒரு சதவிகிதமே பயன்படுத்துகின்றனர் என்று ஒரு அறிவியல் கூற்றைப் படித்தவுடன் அதை அப்படியே நம்பி விடுவது வழக்கமாகி விடுகிறது. உண்மையில்  மூளையின் செயல் திறனை அளப்பதற்கு எந்தக் கருவியும் இல்லை; யாராலும் அது  முடியாது.

 

 

ஆக இப்படி மனதின் மாய வலையில் விழாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் சாப்ரிஸும் சைமன்ஸும்.

என்றாலும் கூட மாய கொரில்லா வருவதைப் பார்க்காதவர்க்ளே நிறைய பேர் என்பது நிதர்சனமான உண்மை!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் . .

.

விஞ்ஞானிகளுக்கு நகைச்சுவை உணர்வே இருக்காது என்பது பொதுவான அபிப்ராயம். அவர்கள் எப்போதும் தங்கள் ஆராய்ச்சியில் மூழ்கி இருப்பர் என்பது அனைவரது கருத்தும் கூட.

ஆனால் உணமை அதுவல்ல. பல விஞ்ஞானிகளுக்கு நகைச்சுவை என்றால் உயிர்.

 

 

உதாரணத்திற்கு இரண்டு சமபவங்களைப் பார்ப்போம்.

பிரிட்டனைச் சேர்ந்த இரசாயன இயல் விஞ்ஞானியான சர் ஹம்ப்ரீ டேவிஸ் ஒரு முறை பாரிஸிலிருந்து திரும்பி வந்தார். அங்குள்ள ஓவியக் கூடங்களை அவர் பார்வையிட்டு வந்திருந்ததால் அவரை அனைவரும், “ எப்படி இருந்தது பாரிஸின் ஓவியக்கூடங்கள்?” என்று கேட்டனர்.

அதற்கு உடனடியாக டேவிஸ், “ அடடா, என்னாமாய் இருந்தது படங்களைச் சுற்றி இருந்த ப்ரேம்கள். அது போன்ற ப்ரேம்களை என் வாழ்நாளில் எங்குமே நான் கண்டதில்லை!” என்றார்!

 

 

பிரபல விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் ரிலேடிவிடி தத்துவத்தினால் மிகவும் பிரபலமடைந்தார். இதைப் பொறுக்காதவ்ர்கள் புத்தகம் ஒன்றை எழுதினர். 100 ஆதர்ஸ் அகெய்ன்ஸ்ட் ஐன்ஸ்டீன் என்பது புத்தக்த்தின் பெயர். (100 Authors against Einstein).. இப்படி நூறு எழுத்தாளர்கள் உங்களுக்கு எதிராக ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார்களே என்று ஐன்ஸ்டீனிடம் அவரது அபிப்ராயத்தைக் கேட்டனர் சிலர். அதற்கு அவர், “ நான் தவறு செய்திருக்கிறேன் என்றால் அதை நிரூபிக்க ஒருவர் போதாதா என்ன. எதற்கு நூறு பேர் வேண்டும்?” என்று கேட்டார்.

 

நகைச்சுவையுடன் கூடிய பளீர் சுளீர் பதில் அது!

****

 

Story: The Brahmin who ate Too Much! (Post No.3714)

Written by London swaminathan

 

Date: 11 March 2017

 

Time uploaded in London:- 10-17 am

 

Post No. 3714

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

I am trying to document all the old stories I have heard or read in the past. This is about the gluttonous Brahmins. People may wonder why they single out Brahmins in such stories. Of course, there are stories about every caste in India.

 

Feeding Brahmins (Brahmana Bhojanam) was considered a great meritorious (Punya) act; this is because the Neeti Shastras (Law Books) stipulated that the Brahmins should not accumulate any wealth and they should always go begging for alms by reciting the Vedas. So, kings have donated lot of lands to Brahmins so that they survive easily at times of natural catastrophes such as famine, drought, floods. Moreover, Brahmins themselves organised lot of Yagas and Yajnas (Fire Ceremonies) and other Pujas (ritual offerings to Gods) where feeding the Brahmins was done. This gave birth to a type of Brahmins who were gluttons. They can consume enormous quantity of food like a cart puller or a manual labourer.

 

One day there was a big festival in a village. Hundreds of Brahmins had a great feast on that day. Having done justice to their calling, Brahmins were returning to their respective villages in the afternoon. It happened so that two Brahmin priests travelling in opposite directions, crossed each other at a junction. Thy exchanged some pleasantries and then one of them had a big doubt!

“Oh my god, did I forget my shoes? I don’t feel anything in my feet because of heavy meals. I can’t even bend and look below because of my protruding tummy. Let me ask for some help from this man”, thought one of them. He said to the other Brahmin:

O, friend, do you see a pair of shoes on my feet?

Unfortunately, that Brahmin who had enjoyed a good feeding, was unable to look down at the foot of the Brahmin. He looked here and there and told him:

“What do you think about me? Am I a fool to leave some space in my tummy so that I can bend? Had I got that much space to allow me to bend, I would have consumed two more Vadas!”

(Vadai is a fried doughnut like snack)

He , then, made big burp and went his way!

Such was the helpless condition of the overeating Brahmins!

 

There is a saying about Brahmins: ‘Brahmana Bojana Priya’ (Brahmins are fond of food)

 

People use to tease Brahmins by saying, “Oh, that man! he would not know how much to eat in a feast. He always ties around his stomach a piece of thread, and eats until the thread bursts with the distension of the stomach!”

Long live Brahmins!

–Subham–

ரிக் வேதத்தில் பழமையான மண்டலம் எது? (Post No.3713)

Compiled by London swaminathan

 

Date: 11 March 2017

 

Time uploaded in London:- 7-40 am

 

Post No. 3713

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

மஹாபாரதத்தை எழுதிய வேத வியாசர் வேதங்களை நான்காகப் பிரித்தார். ரிக், யஜூர், சாம, அதர்வணம் என்ற நான்கு வேதங்களில் மிகப் பழையது ரிக் வேதம். இதை வியாசர் பிரித்து வகுத்தது கி.மு..3102-க்கு முன் — அதாவது கலியுகம் துவங்குவதற்கு முன்பு—. ரிக் வேதம்தான் உலகில் பழமையான நூல். உலகின் முதல் கவிதைத் தொகுப்பு. இதை ஹெர்மன் ஜாகோபி, பால கங்காதர திலகர் ஆகியோர் கி.மு 4500 க்கு முந்தையது என்று வானியல் குறிப்புகளைக் கொண்டு நிரூபித்தனர். இன்று வரை உலகில் எவரும் அது தவறு என்று காட்ட முடியவில்லை.

 

இப்போது பன்மொழி வித்தகரும் கிரேக்க நாட்டு அறிஞருமான நிகலஸ் கஜானாஸ் எழுதிய புத்தகத்தில் இது கி.மு. 3300 க்கு முந்தையது என்று மொழியியல் ரீதியில் நிரூபித்து இருக்கிறார். முதலில் ரிக்வேதத்துக்கு கி.மு.1200 என்று சொன்ன மாக்ஸ்முல்லரும் அந்தர்பல்டி அடித்து ரிக்வேதத்தின் காலத்தை எவருமே கணிக்க முடியாது. அது கி.மு.5000 ஆகக் கூட இருக்கலாம் என்று சொன்னதை அறிஞர் உலகம் நன்கு அறியும்.

 

ரிக் வேத மந்திரங்கள் ‘’இயற்றப்பட்ட’’ (not composed) கவிதைகள் அன்று. அவை ‘’கேட்கப்பட்ட’’ (heard) துதிகள். அதாவது ரிஷி முனிவர்கள் தியானத்தின் போது — நாம் ரேடியோ அலைவரிசைக்கேற்ப ஸ்டேஷன்களின் ஒலிபரப்பைக் கேட்பது போல — தெய்வீக அலைவரிசியில் கேட்ட – கண்டுபிடித்த (found) — மந்திரங்கள். இதனால் ரிஷிகளுக்கு மந்திர த்ருஷ்டா — மந்திரங்களை மனக் கண்ணில் பார்த்தவர்கள்/கண்டுபிடி த்தவர்கள் என்றும், வேதங்களுக்கு ச்ருதி (கேள்வி/கேட்கப்பட்டவை) என்றும் அறிஞர்கள் பெயரிட்டுள்ளனர்.

 

ரிக் வேதம் என்பதே உலக மஹா அதிசயம் — உலகில் இவ்வளவு பிரம்மாண்டமான கவிதைத் தொகுப்பை (anthology) எவரும் 6000 வருடங்களுக்கு மேல் அட்சரம் மாறாமல் வாய்ச் சொல் மூலம் பரப்பியதும் (word of mouth) இல்லை – எழுதப்பட்ட இலக்கியங்களில் இதற்கு இணையான சமய இலக்கியமும் இல்லை- உலகில் வெளியான கவிதைத் தொகுப்புகளில் இதை மிஞ்சிய கவிதைத் தொகுப்பும் இல்லை. ஜில்காமேஷ் (Gilgamesh) போன்ற இலக்கியத்தில் – அல்லது எகிப்து நாட்டுப் பிரமிடுகளின் (Pyramid Texts) சுவர்களில், மரணப் புத்தகத்தில் (Book of Dead) காணப்படும் சாதாரண புராணக் கதைகள் போலன்றி- மிக உயரிய கருத்துக்களைக் கொண்டுள்ளது எல்லோரும் வாழ்க, இன்புற்று வாழ்க என்ற கடைசி மந்திரத்துடன் முடிகிறது ரிக் வேதம்!

உலகில் முதல் முதலில் நானூறுக்கும் மேலான    கவிஞர்களின் (Over 400 poets) பட்டியலைக் கொடுத்ததும் இன்டெக்ஸ் (Index) போட்டதும் (அணுக்ரமணி) ரிக் வேதத்தொகுப்புதான் இதைப் பிற்காலத்தில் தமிழ்ச்  சங்க இலக்கியத்தைத் தொகுத்தவர்கள் அப்படியே பின்பற்றியுள்ளனர் என்பது என் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ரிக்வேதத்தில் பெயர் தெரியாத ரிஷிகளின் (anonymous) கவிதைகளுக்கு அதில் உள்ள ஒரு வரியையே (line or expression) கவிஞரின் பெயராகக் கொடுப்பர். இதை அப்படியே தமிழ்க் கவிதைத் தொகுப்பாளரும் பின்பற்றினர்—(தேய்புரிக்கயிறு, செம்புலப்பெயல் நீரார்) —(இது பற்றி முன்னரே விரிவாக எழுதியுள்ளேன்)

 

 

பத்து மண்டலங்கள்

 

ரிக்வேதம் பழமையான நூல் மட்டுமல்ல. மிகப் பெரிய கவிதைத் தொகுப்பும் கூட. இதில் 1028 துதிகள் (சூக்தம்) உள்ளன. அவற்றில் பத்தாயிரத்துக்கும் மேலான மந்திரங்கள் இருக்கின்றன. இதை பத்து மண்டலங்களாகப் பிரித்தனர். அதில் முதல் மண்டலமும், பத்தாவது மண்டலமும் பல உதிரி மந்திரங்களின் தொகுப்பு. பொதுவாக அறிஞர்கள் இதை பிற்காலப் பகுதியாகவும் இடைப்பட்ட மண்டலங்களை ( 2 முதல் 9 வரை) பழைய பகுதி என்றும் கருதுவர்.

 

(எனது கருத்து: முதல் மண்டலத்திலும் பத்தாவது மண்டலத்திலும் உள்ள அத்தனை பாடல்களும் புதியன அல்ல. அவறில்தான் கல்யாண மந்திரங்களும், இறுதிச் சடங்கு மந்திரங்களும் உள்ளன. எல்லாவற்றையும் பாடி முடித்தபின்னர் கல்யாணம் பற்றியும், மரணம் பற்றியும் பாடிநர் என்பது கேலிக்குரியது. ஆனால் இம்மண்டலங்களில் பல புதிய பாடல்கள் இருப்பது உண்மையே)

 

 

இடைப்பட்ட எட்டு மண்டலங்களில் 2 முதல் 7 வரை குடும்ப மண்டலங்கள் (Family Mandalas). அதாவது ஒவ்வொரு ரிஷியின் பரம்பரையிலும் வந்த ரிஷிகளின் பாடலகளை வியாசர் அழகாகத் தொகுத்து வைத்திருக்கிறார். இதில் எது பழையது? என்பது நீண்ட காலமாக ஆராயப்படும் விஷயம். அண்மைக் காலத்தில் தலகரி (Shrikant G. Talageri) என்ற அறிஞர் எது பழையது என்ற வரிசைக் கிரமத்தை அளித்துள்ளர். அதை நிகலஸ் (Nicholas Kazanas) ஏற்றுக் கொண்டு வேறு சில விஷயங்களையும் முன்வைக்கிறார். அது என்ன?

 

தலகரியின் ஆராய்ச்சியில் கண்ட வரிசை

 

மிகப்பழைய மண்டலங்கள் — 6, 3, 7

 

நடு மண்டலம் – 4, 2 (+ முதல் மண்டலத்தின் சில பாடல்கள்)

 

இதற்கடுத்தது – 5 (+ முதல் மண்டலத்தின் சில பாடல்கள்)

 

கடைசி – 1, 8, 9

 

புதியது – 10

 

துதிகளில் வரும் மன்னர்களின் பெயர்கள், ரிஷிகளின் குடும்பம் ஆகியவற்றைக் கொண்டு தலகரி இவ்வாறு வரிசைப்படுத்தினார்.

இது பற்றி நிகலஸின் கருத்துரை:

 

தலகரி  கூறுவதைக் கொண்டுமட்டும் எதையும் உறுதிபடச் சொல்வதற்கில்லை. ஏனெனில் பழைய கவிஞர்கள் பயன்படுத்திய சொற்களை, வரிகளை, கற்பனைகளை, உவமைகளைப் பிற்காலப் புலவர்களும் Imitate காப்பி அடிக்கலாம்.

 

கிரேக்க மொழியில் உள்ள ஆர்பிக் (orphic hymns)  பாடல்கள் முதல் இரண்டு நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டன. ஆயினும் அவற்றின் பாணி style மிகப் பழைய பாடல்களை ஒத்து இருக்கின்றன. இதை எனக்கு முன்னரே ஹாப்கின்ஸ் (E W Hopkins) அவர்களே 1896 ஆம் ஆண்டில் சுட்டிக் காட்டிவிட்டார். புக ழ்பெற்ற பழங்கால புலவர்களின் பெயரகளைப் பிற்காலத்தவர் வைக்கக்கூடும்.

 

(தமிழிலும் இத்தகைய குழப்பம் உண்டு. பல அவ்வையார்கள், பல பரணர்கள், பல கபிலர்கள் உண்டு. சிலர் பல நக்கீரர்கள் உண்டு என்றும் கருதுவர்!)

 

பல ரிஷிகளின் பெயர்கள், அதிலுள்ள கடவுளின் பெயர்களில் உள்ளன

 

10-158 (கடவுள் காற்றுதேவன்; கவிஞர் காற்றாடி/வாதாயன)

10-158 (கடவுள்- சூர்ய தேவன்; கவிஞர் சூர்யக் கண்ணன்/சக்ஷுஸ் சூர்ய)

10-14 (யமன்; கவிஞர் யமன்)

9-107 (சப்தரிஷி; சப்தரிஷி )

8.27.8 (வைவஸ்வத மனு வைவஸ்வத மனு; )

 

(நான் முன்ன்ரே குறிப்பிட்டது போல சங்கத் தமிழ் கவிதைத் தொ குப்பாளர்களும் பெயர் தெரியாத புலவர்களுக்கு அவர் சொன்ன வாசகங்களையே பெயராகச் சூட்டிவிட்டனர். இப்படி 20 க்கும் மேலான விநோதப் புலவர் பெயர்களை நான் முன்னரே பட்டியலிட்டுள்ளேன்)

 

ஐதரேய பிராமணம் என்னும் நூலே ரிக்வேதப் புத்தகத்தில் கீழ்கண்ட பாடலகள் பிற் சேர்க்கை என்று சொல்கிறது:

3-30, 31, 34, 36, 38, 48

 

(பிற்சேர்க்கை என்றால் எவ்வளவு காலத்துக்குப் பின் என்று யாரும் சொல்லவில்லை. நிகலஸின் கருத்துப்படி வேதங்கள் கி.மு.3300; அதாவது சிந்துவெளி நாகரீகத்துக்கு முன் என்று அவரே தெளிவாகச் சொல்கிறார்)

 

ஆனால் தலகரி சொல்லுவது போல இவ்வளவு பாடல்களும் 2000 ஆண்டுக் கால வீச்சில் பாடப்பட்டவை என்பதை நான் ஏற்கமாட்டேன். மொழியியல் ரீதியில் பழைய பாடலுக்கும் புதிய பாடல்களுக்கும் வேறுபாடு இருப்பது உண்மையே. ஆயினும் இவ்வளவு கால இடைவெளி இருக்காது.

(எனது கருத்து: தமிழ் சங்க இலக்கியத்தின் 2000 பாடல்கள் — சுமார் 30,000 வரிகள்— உருவாக சுமார் 400 ஆண்டுகள் ஆயிற்று. நான் மொழியியல்  ரீதியில் மூன்று தமிழ் சங்க காலக் கணக்கீடு தவறு என்று முன்னரே காட்டி இருக்கிறேன். சங்க இலக்கியத்தில் மூன்று தமிழ் சங்கங்களின் சில புலவர் பாடல் இருப்பதால் மூன்று தமிழ் சங்ககங்களும் 300, 400 ஆண்டு இடைவெளிக்குள் தான் இருந்திருக்க வேண்டும் என்று காட்டியுள்ளேன். இதே போல தொல் காப்பியத்தின் காலம், திருக்குறளின் காலம் என்பனவற்றையும் மொழியியல் ரீதியில் அணுகி எழுதியுள்ளேன்)

 

ரிக்வேதம் கி.மு.3300க்கு முன் முடிக்கப்பட்டிருக்கும். நான் சொல்லும் கால வரிசை:-

முற்கால மண்டலங்கள் – 3, 6. 7

நடுக் கால மண்டலங்கள் – 2, 4

கடைசி  மண்டலங்கள் – 5,1,8,9, 10

 

என்று நிகலஸ் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

 

தமிழ் மொழி பற்றிக் கதைக்கும், பிதற்றும் பேர்வழிகள் உலக மொழிகளை மற்றவர்கள் எப்படி அறிவியல் ரீதியில் அணுகுகிறார்கள் என்பதைப் பயிலுதல் நலம் பயக்கும். தமிழும் சம்ஸ்கிருதமும் அறியாதோர், பிற மொழிகளின் இலக்கியம் பற்றிப் படிக்காதோர் — முதலில் அறிவை வளர்த்துக்கொள்ளுதல் அவசியம்.

(Source:- Vedic and Indo-European Studies by Nicholas Kazanas, Aditya Prakashan, New Delhi, year 2015)

 

–சுபம்–

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 33 (Post No.3712)

Written by S NAGARAJAN

 

Date: 11 March 2017

 

Time uploaded in London:-  5-15 am

 

 

Post No.3712

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 33

ச.நாகராஜன்

 

112ஆம் வயது – தொடர்ச்சி  (1951-1952)

ஸு யுன் மெல்லிய குரலில் சொல்லலானார்:

“நான் துஷிடா சுவர்க்கத்தில் மைத்ரேய புத்தரின் அந்தரங்க அறைக்குச் செல்வதாகக் கனவு கண்டேன். அழகிலும் கம்பீரத்திலும் அது பூமியை விடப் பல மடங்கு மேலானது. மைத்ரேய புத்தர் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு சூத்ரங்களை விளக்கிக் கொண்டிருந்தார். பெரிய கூட்டம் நிரம்பி இருந்தது. அதில் எனக்குத் தெரிந்த பத்து குருமார்கள் இருந்தனர்.

நான் இரு க்ரங்களையும் குவித்து வணங்கிய போது முதல் வரிசையில் காலியாக இருந்த மூன்றாம் இருக்கையைச் சுட்டிக் காட்டினார்கள். ஆர்ய ஆனந்தர் தான் கூட்டத்தின் தலைவர். நான் அவர்கள் சுட்டிக் காட்டிய இருக்கையில் அமர்ந்தேன். மைத்ரேயர் மனம் பற்றிய தியானத்தில்  பிரக்ஞையை ஒரு நிலைப்படுத்துவததப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தவர் பாதியில் அதை நிறுத்தி விட்டு என்னை நோக்கினார்.

“நீ திரும்ப உன் இடத்திற்குச் செல்ல வேண்டும்” என்று அவர் என்னப் பார்த்துக் கூறினார்.

நான்,”எனது கார்மிக பந்தம் மிகவும் பெரியது. ஆகவே அங்கு திரும்பிச் செல்ல எனக்குப் பிடிக்கவில்லை” என்றேன்.

அவர், “உனது கார்மிகம் மிகவும் பெரியது. அது இன்னும் முடியவில்லை. நீ இப்போது திரும்பிப் போக வேண்டும். பின்னர் வரலாம்” என்றார்.

பின்னர் ஒரு அருமையான கீதத்தை இசைக்கலானார்:

ஞானிகளும் உலகமும் நன்மையும் தீமையும் சந்தோஷமும் கூட வானத்தில் தோன்றும் மலர்கள் போல அனைத்தும் மாயையே

துன்பக் கடலில் பயணமுறும் போது

தயையிலிருந்து நீ திரும்பாதே

சேற்றிலிருந்து தாமரை  மலர்கிறது

புத்தரை நடுவிலே இருத்திக் கொண்டு”

இன்னும் ப்ல கீதங்கள் இசைக்கப்பட்டன. எனக்கு நினைவில் இல்லல.”

இந்த மாதிரி தியான சமாதியில் மாஸ்டர் ஸு யுன்  தனக்கு ஏற்பட்ட் அனைத்துத் துன்பங்களையும் துடைத்து எறிந்தார்.

பழைய காலத்தில் மாஸ்டர் ஹான் ஷான் (1546-1623) மாஸ்டர் ஜி பாய் (1543-1604) ஆகியோரும் இதே சமாதி நிலையில் தான் இருந்தனர். தர்மத்தின் உயரிய நிலை பற்றி அறியாதோருக்கு இது புரியாது.

ஸு யுன்னை அடித்த் கம்யூனிஸ்டு குண்டர்கள் இந்த அற்புதமான காட்சியைக் கண்டனர். தங்களுக்குள் ஒருவ்ருக்கொருவர் முணுமுணுத்துப் பேசிக் கொண்டனர். அவர்கள் மிகவும் பயந்து போனார்கள்..

அந்தக் குண்டர்களின் தலைவன் ஒரு பிட்சுவை நோக்கி, “ஏன் இவர் எங்கள் அடிக்குப் ப்யப்படவில்லை” என்று கேட்டான்.

 

அதற்கு அவர், “உலக் மக்களுக்காக எங்கள்  மாஸ்டர் துன்பங்களை ஏற்றுக் கொள்கிறார். உங்களின் தொந்தரவுகளிலிருந்து நீங்கள் தப்பிக்க அவர் உதவுகிறார். பின்னால் அவர் ஏன் உங்கள் அடிகளுக்கு இலக்காகவில்லை என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்” என்றார்.

நடுநடுங்கிப் போன அந்த குண்டன், பின்னால் ஒரு போதும் அவரை அடிக்க நினைக்கவில்லை.

தாங்கள் நினைத்தது போல எந்த ஒன்றும் அங்கு கிடைக்காததனாலும், அங்கு அவர்கள் சித்திரவ்தை செய்யப்பட்டது வெளியில் பரவி விடும் என்பதாலும் மடாலயத்திலேயே தங்கிய அவர்கள் பிக்ஷுக்களை ஒருவரோடொருவர் பேசவிடவில்லை.  அவர்களுக்குத் தரப்பட்ட உணவும் நீரும் கூட தலைவன் சோதித்த பின்னரே தரப்பட்டது, இந்த நிலை ஒரு மாத காலம் நீடித்தது.

 

பயங்கரமான அடியின் காரணமாக மாஸ்டர் ஸு யுன் சொல்ல்வொண்ணாத வலிக்கும்வேதனைக்கும் ஆளானார்.அவர் படும் வேதனையைக் கண்ட சீடர்கள் அவர் இறந்து விடுவாரோ என்று எண்ணினர்.

அவர்கள் அனைவரும் அவரைத் தங்கள் சுய சரிதையை எழுதுமாறு வேண்டினர்.

அத்னால் தான் எழுந்தது இந்த EMPTY CLOUD என்னும் சுய சரிதை.

 

நான்காம் மாதத்தில் யுன் மென்னில் நடந்த சம்பவங்கள் பற்றிய செய்தி ஷாஷோவை அடைந்தது. அங்குள்ளோர் இதை பீஜிங்கிற்கு சொல்லி அனுப்பினர். அவர்க்ள் மூலமாக் உலகெங்கும் வெளிநாடுகளில் வாழும் பௌத்தர்களுக்கு இந்தச் செய்தி பரவியது.

உடனடியாக அனைவரும் ஒன்று சேர்ந்தனர். எப்பாடுபட்டேனும் ஸு யுன்னைக் காப்பாற்றத் துடித்தனர்.

இதன் விளைவாக பீஜிங்கில் உள்ள அரசு குவாண்டாங் மாகாண அதிகாரிகளுக்கு என்ன நடந்தது என்பதை விசாரிக்குமாறு உத்தரவிட்டது.

குண்டர்கள் படிப்படியாக  மடாலயத்தை விட்டு வெளியேறினர். என்றாலும் போகும் போது ஒட்டு மொத்தமாக ஆடைகளையும் உணவுப் பொருள்களையும் சுருட்டிக் கொண்டு ஓடினர்.

இந்த சித்திரவதைக்குப் பின்னர் மாஸ்டர் ஸு யுன் கஞ்சி கூட அருந்தவில்லை. நீர் மட்டும் அருந்தினார்.

அவர் இதர் பிட்சுக்களை நோக்கி, “என்னால் உங்களுக்கு இப்படி நேர்ந்ததற்கு நான்  மிகவும் வருத்தப்படுகிறேன். என்னுடைய பெரிய தீய கர்மம் உங்களையும் பாதித்து விட்டதே! உடனடியாக இந்த இடத்தை விட்டுச் சென்று விடுங்கள். எங்காவது சென்று வாழுங்கள்” என்றார்.

ஆனால் சீடர்கள் அவரை விட்டுப் போக மறுத்து விட்டனர்.

பின்னால் காட்டுப் பகுதியில் உள்ள சுள்ளிகளைப் பொறுக்கி அதை உள்ளூர் சந்தைகளில் விற்று சிறிது அரிசியை வாங்கி கஞ்சி தயாரிக்குமாறு ஸு யுன் அவர்களிடம் கூறினார்.

இப்படியாக கஞ்சி உணவுடன் காலை மற்றும் மாலை தியானம் மற்றும் சூத்திரங்களை இசைத்தல் ஆகியவை மறுபடியும் ஆரம்பிக்கப்பட்டன.

முதல்  மாதம் பதினைந்தாம் நாளனறு பீஜிங் அரசு தொழில்நுட்ப வல்லுநர்களை டேப் ரிகார்டர்கள் காமராக்களுடன் அனுப்பி என்ன நடந்தது என்பதை விசாரிக்க முனைந்தது.

வந்த குழுவினர் முதலில் ஸு யுன்னிடம் விசாரித்தனர். கட்டிலில் படுத்திருந்த அவருக்கு யார் வந்தார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் பேசுவதும் கேட்கவைல்லை.

அவரிடம் முதலில் விசாரித்த போது, அவரோ பேச மறுத்தார்.

 

என்றாலும் இடைவிடாத வற்புறுத்தலுக்குப் பின்னர் அவரை யாராவ்து துன்புறுத்தினார்களா என்று கேட்ட போது இல்லை என்றார். மடாலயத்தில் ஏதாவது கொள்ளையடிக்கப்பட்டதா என்று கேட்ட போதும் இல்லை என்றார்.

வந்தவர்கள் தாங்கள் யார் என்று தங்கள் அடையாள அட்டையைக் காட்டிய பின்னர் அவர்களிடம் என்ன நட்ந்தது என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து அதை அப்படியே பீஜிங்கிற்கு அனுப்புமாறு அவர் கூறினார்.

வந்தவர்கள் அவரை ஆசுவாசப்படுத்தினர். பின்னர் கைது செய்யப்பட்டிருந்த அனைத்து பிக்ஷுக்களையும் உடனடியாக விடுவிக்க ஆணையிட்டனர்.

யுன் மென் மடாலயத்தில் இப்படியாக இரண்டாம் மாதம் இருபத்திநாலாம் நாளனறு ஆரம்பித்த துரதிர்ஷ்ட சம்ப்வங்கள் ஐந்தாம் மாதம் இருபத்திமூன்றாம் நாளனறு முடிவுக்கு வந்தது.

 

இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலத்தில் மாஸ்டர் ஸு யுன் தேறி வந்தார். அவர் கூறிய படியே காட்டிலுள்ள சுள்ளிகளைப் பொறுக்கு உள்ளூர் சந்தையில் விற்று அரிசி வாங்கி கஞ்சி தயார் செய்யப்பட்டது.

கம்யூனிஸ்ட் குண்டர்கள் மடாலயத்தை விட்டுச் சென்று விட்டனர் என்பதை அறிந்த பக்கத்து கிராம மக்கள் எல்லோரும் மடாலயம் வந்து அவரை நலம் விசாரித்தனர்.

வெளியிடங்களில் இருந்த அவரது சீடர்கள் அவரை யுன் மென்னை விட்டு உடனடியாக நீங்குமாறு வற்புறுத்தினர்.

மாகாண உயர் அதிகாரிகளுக்கு எழுதி மாஸ்டருக்குப்  பாதுகாப்புக் கொடுக்குமாறு அவர்கள் வற்புற்த்தினர்.

இப்படியாக 112ஆம் ஆண்டு முடிந்தது.

 

****

 

 

 

Word Research shows Sanskrit is the Oldest Language! (Post No.3709)

Compiled by London swaminathan

 

Date: 10 March 2017

 

Time uploaded in London:- 21-15

 

Post No. 3709

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

I gave some excerpts from “Vedic and Indo-European Studies” written by Nicholas Kazanas, (Aditya Prakashan, New Delhi, year 2015) yesterday.

 

Here are some more issues raised by him. I found his research into 400 words in Indo European languages very interesting. Here is what he says in his summary:

 

The second study is about, “Coherence and Preservation in Sanskrit” (published in Kumar 2009, 108 184, but revised since). Herein are examined more than 400 IE lexical items (nouns, verbs etc) occurring in the IE branches and denoting fairly common and as far as possible invariable things, qualities and activities like arm and foot, anger and love, father and mother, bowl and barley/grain, to breathe and to fly and so on. This study shows that Sanskrit lacks 53, some of which may well have not been PIE, Germanic lacks 145, Greek 149, Baltic 185 in 207, Celtic 210 and Slavic 215. Thus Sanskrit preserves a much larger stock whereas Greek, with its early and voluminous literature does not surpass Germanic, and Latin, with an almost equally early and rich literature, lags behind Germanic and Baltic. Another and perhaps more important aspect is that while many words appear in Germanic, Greek, Latin etc, only as isolated lexemes without a family of cognates (e.g. daughter’), in Sanskrit many such words have root- nouns, adjectives and verbal forms. Sanskrit has organic coherence. Both facts indicate that Sanskrit is by far the most archaic branch and most faithful to PIE.

PIE= Proto Indo-European

I E = Indo European

xxx

 

Rig Vedic Poetry is better than Greek Poetry

The third study, “Rigvedic All-comprehensiveness reinforces the conclusion that Sanskrit is the most archaic of the IE branches and closest to PIE. In the second chapter are examined the lexical items. Here, in the third, are examined grammatical and poetical aspects and in every case the Vedic language and poetry are seen to contain everything found in one or two of the other branches. For instance, the Periphrastic Perfect is found in Hittite but not in ancient Greek or Latin (in both it appears as a later innovation), is also present in Vedic. The Greek poetry has strict metre but little or no alliteration where as Germanic poetry has as one of its basic elements alliteration but not strict metre: both of these are present in the poetry of Rig Veda.

 

xxx

Vedic and Avestan

The fourth study, ‘Vedic and Avesta’ is very technical and shows that contrary to mainstream belief, Vedic is far older than Avestan. It shows also that it is the Iranians who moved out of the wider Saptasindhu to Bactria/Gandhara, then to South East Iran and North westward.

xxx

 

  1. As the title Vedic and Indo-European Studies indicates, the volume consists of dealing with common in both areas so that one may illuminate the other. Following facts rather than conjectures and reasoning rather than repetition, I arrive at unorthodox conclusions that diverge from mainstream (usually mechanical) thinking.

 

The most significant conclusion is that the Rig Veda furnishes facts that militate against many prevalent notions in many disciplines and studies in academia like the beginning of language or religion. Another conclusion concerns the origins of the Indo Aryan or Vedic people and the obnoxious Aryan Invasion/Immigration Theory. The AIT (-Aryan Invasion Immigration Theory) is a major impediment in mainstream IE (Indo European) scholarship but it is not the only one. In fact this is an external structure established by other, internal or psychological tendencies like inattention, love of ease, mechanicalness, arrogance, obstinacy, ambition, greed etc, all sprouting from an unchecked ego; all these can be encapsulated in the triad arrogance, greed, ignorance (more in the sense of ignoring than not knowing). And it is these that often motivate us rather than love and promotion of truth, the primary purpose of all scholarship (And if your mind, dear reader, rejects all this as claptrap unrelated to scholarship, then it is in the thralls of the triad.)

 

xxxx

Research on Vedic God Rhbu

 

Let us now go to Greece holding in mind the adjective name rbhu ‘intelligent fashioner. Scholars generally agree that this word is cognate with English Germanic ‘elf’ ( Elf, Alp etc), Old Slavic rabh ‘servant’ and the name of the Greek poet-musician-hero Orpheus.

 

In the Rig Veda ( 1.20, 110; 3.60, 7.48 etc) the Rbhus are three brothers, sons Sudhanvan, who perform several miraculous deeds through the power of mind’. For instance, RV 4- 2 says “ratham ye cakruh suvrtam sucetaso a-vibvarantam manasas pari dhyaya.

The wise-ones who fashioned the fine-rolling, impeccable car by visionary power ‘dhi’- out of mind/ manas. But the three are often indicated as one. Thus in the RV the indicated by the singular Rbhu as one. Thus in the Rig Veda the name appears both in the singular and in the plural.  The three brothers, though mortal, thanks to their great mental power gain, the favour of the gods and stay in the mansion of the Sun god where they serve as priests and become immortal gods themselves.

 

–Subham–

 

 

உலகம் முழுதும் உமா தேவி வழிபாடு! (Post No.3711)

Written by London swaminathan

 

Date: 10 March 2017

 

Time uploaded in London:- 10-22 am

 

Post No. 3711

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

(Source:- Vedic and Indo-European Studies by Nicholas Kazanas, Aditya Prakashan, New Delhi, year 2015)

 

இந்துக்கள் 8000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவுக்குள் குடியேறியது, ரிக்வேதத்தின் காலம் கி.மு.3500, பத்தாம் பசலி ஆரிய-திராவிடக் கொள்கையின் மறைவு ஆகியன குறித்து கிரேக்க நாட்டு அறிஞர் நிகலஸ் கஜானா எழுதிய பல வியப்பான விஷயங்களை நேற்று தந்தேன். இன்று அவரது புத்தகத்திலுள்ள மேலும் சில அதிசய விஷயங்களை சுருக்கி வரைவேன்.

 

 

 

உமாதேவி வழிபாடும், துர்ர்கா தேவி வழிபாடும் உலகம் முழுதும் இருந்தது என்பதை சக்தி வழிபாடு என்ற தலைப்பில் கே.க்ளோஸ்டர்மெய்ர் (K.Klostermaier) எழுதியிருப்பதைப் புத்தகத்தில் தந்துள்ளார்;

 

 

மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் 6000 ஆண்டுகளுக்கு முன்பு (கி.மு.4000) ,பெருமளவுக்கு தாய் தெய்வ (Mother Goddess) வழிபாடு இருந்தது. சிந்து சமவெளி நாகரீகத்திலும் தாய் தெய்வ வழிபாடு இருந்ததை அங்கு கிடைத்த சுட்ட களிமண் (terra cotta) வடிவ உருவங்கள் காட்டுகின்றன. நிர்வாணமான ஒரு பெண்ணின் மர்மஸ்தானத்திருந்து ஒரு செடி வெளியே வரும் உருவம் சிந்துவெளியில் கிடைத்துள்ளது– அதன் பின்புறத்தில் ஒரு ஆண் அரிவாளைக் கையில் ஓங்கிய காட்சியுடன் காட்சி தருகிறான். இது, பூமாதேவிக்கு  நரபலி கொடுக்கும் காட்சி ஆகும்.

 

மத்தியதரைக் கடல் நாடுகள் — சிந்து சமவெளி நாகரீக தாய் வழிபாடு தொடர்பு வேறு சில விஷயங்களிலும் உறுதியாகிறது. இந்துக்கள் உமா தேவியை, மலைமகள் (பர்வத= பார்வதி) என்றும் சிம்ம வாஹினி என்றும் வருணிப்பர். பாபிலோனியாவி,,,,ம் உம்மு, உம்மா (ummu, Umma) என்ற தெய்வமும்,

 

ஆர்கேடிய (கிரீஸின் பகுதி) உம்மி (Ummi)    தெய்வமும், சிதியன் (காஸ்பியன், கருங்கடல் பகுதி= ரஷ்யா) உம்மோ (Ommo) தெய்வமும் உமா தேவி வழிபாடே.

இதே போல துர்கா தேவியை ஆசியாமைனரில் (துருக்கி) (Truqas) ற்றுகாஸ் என்று லிடியன் (Lydian Inscriptions)  கல்வெட்டுகளில் குறிப்பிடுகின்றனர். சில இடங்களில் அவளுக்கு ஒரு மகன் பிறந்ததும் காட்டப்படுகிறது. இதை நியுமன் (Neumann) என்பவர் எழுதியுள்ளார். அதை க்ளோஸ்டர் மெய்ர் குறிப்பிட்டுள்ளார். அதை நிகலஸ் தனது புத்தகத்தில் எழுதி பல தெய்வ வழிபாடு உலகெங்கிலும் இருந்தது என்பார். மேலும் ஆண்   தெய்வம்தான் முதலில் உலகில் இருந்த்து என்பது தவறு என்றும் சொல்லுகிறார்

 

 

கஜானாஸ் மேலும் கூறுவதாவது:–

வேத கால தெய்வமான அக்னி,  (Hittite) ஹிட்டைக் கலாசாரத்தில் அக்னிஸ் Agnis என்றும் ஸ்லாவிக் பண்பாட்டில் Oghen அகன் என்றும் லத்தீன் மொழி பகுதிகளில் Ignis இக்னிஸ் என்றும் லிதுவேனியா நாட்டில் Ugnis உக்னிஸ் என்றும் வழங்கியது

 

(இக்னைட் IGNITE = தீ உண்டாக்கு என்பது இன்றும் ஆங்கிலத்தில் உள்ளது)

 

மழை/புயல் தெய்வமான பர்ஜன்ய (Parjanya) ஸ்லாஇயவில் Perunju பருண்ணு என்றும் பால்டிக் நாடுகளில் பெர்குனஸ் Perkunas என்றும் ஜெர்மானிய மொழிகளில் ப்யீர்ஜின் Fjorgyn என்றும் வழங்குகிறது

 

உதய தெய்வமான உஷஸ் ( Ushas) உஷா  கிரேக்க மொழியில் ஈயோஸ் (Eos) என்றும் லத்தீன் மூல மொழிகளில் ஓஷோரா (Ausrora) என்றும் ஜெர்மானிய மொழிகளில் இயச் த்ரே(Eos-tre)  என்றும் வழங்குகிறது.

த்யௌஸ் பிதா (Dyaus) என்னும் வேத கால வானம்/ஆகாயம் (Sky God) தொடர்பான கடவுள் ஹிட்டைட் பண்பாட்டில்  ட்- சியு-ஸ் (D-siu-s) என்றும் கிரேக்க மொழி யில் ஸ்யூஸ் (Zeus) என்றும் லதீனில் ய்யுஸ்பிடர் (ஜூபிடர்) ( Ju-s- piter )என்றும் ஜெர்மானிய மொழிகளில் டீவஸ் என்றும் மாறுகிறது

(வருணன்’ உரேனஸ், இந்திரன் முதலிய தெய்வங்களை எல்லோரும் பிரஸ்தாபித்து இருப்பதால் தான் “அரைத்த மாவையே அரைக்க”  விரும்ப வில்லை என்று நூலின் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார்)

மேலு ரிக் வேதத்தில்தான் ஒரே கடவுள் கொள்கை தோன்றியது என்று கருதிவிடக்கூடது என்றும் நிகலஸ் வாதாடுகிறார். ரிக் வேதம் கி.மு 3500-க்கு முன் தோன்றியபோதும் அதற்குப் பின் வந்த பாபிலோனிய, எகிப்திய தெய்வங்களிலும் இதைக் காணமுடிகிறது என்கிறார்.

ரிக் வேதத்தில் உள்ள “ஏகம் சத் விப்ராஹா பஹூதா வதந்தி” என்ற மந்திரம் உலக அறிஞர்களால் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது

 

“உண்மை ஒன்றே; அதை அறிஞர்கள் பலவாறு அழைப்பர்” என்பது இதன் பொருள். இந்த  ஒரே கடவுள்  கருத்து பிற்காலத்தில் யூதர்களாலும், கிறிஸ்தவர்களாலும் முஸ்லீம்களாலும் பரப்பப்பட்டது.

 

எகிப்தில் கூட அதம் ( ATUM முழுமையான) அல்லது நன் ( NUN ஆதிகால நீர்) என்பதிலிருந்தே எல்லா தெய்வங்களும் உண்டானதாக பிரமிடுகளின் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது.

 

(Atum = Sat=Satyam; Nun= Narayana)

 

யூதர்கள், கிறிஸ்தவர்களின் பைபிள் பழைய ஏற்பாட்டிலும் கடவுளைப் பன்மையில் (Plural; Elohim) பேசிவிட்டு பால் (Baal) என்ற தெய்வங்களை எல்லாம் பேசிவிட்டுப் பின்னர்தான் யஹோவா என்ற ஒரு தெய்வம் வருகி றது( Psalms 81, 82)

 

வேதத்தில் உள்ளது போல பிரம்மன் (ஆண் அல்லன், பெண் அல்ல, அலியுமல்லன்— தேவாரம்) பால் வேறுபாடற்ற “தத் ஏகம்” (அந்த ஒன்று) முன்னர் மேலை நாடுகளிலும் இருந்துள்ளது.

 

(இது பற்றி நிகலஸ் விரிவாக எழுதியுள்ளதை மிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளேன். நூலை முழுதும் படித்தால் மேலும் பல விஷயங்கள் தெரியும்)

 

400 சொற்கள் ஆராய்ச்சி

நிகலஸின் புத்தகத்தில் இரண்டாவது அத்தியாயம் 400 சொற்கள் ஆராய்ச்சி பற்றிய சுவையான (coherence and preservation in Sanskrit) ஆராய்ச்சியாகும். சம்ஸ்கிருதத்துக்கு மூல மொழி (PIE= Proto Indo European) ஒன்று இருந்ததாகவும் அந்த இந்தோ-ஐரோப்பிய (I.E) குடும்பத்திலிருந்து கிரேக்க, ஜெர்மானிய, லத்தீனீய, அவஸ்தன், டொசாரியன் (Tocharian) மொழிகள் எல்லாம் கிளைத்தன என்றும் பத்தாம்பசலி “அறிஞர்கள்” எழுதுவதுண்டு. நிகலஸ்,இவற்றையெல்லாம் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு புதிய அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்கிறார். அவர் இந்திய ஐரோப்பிய (Indo- European) மொழிக் குடும்பத்திற்குப் பொதுவான 400 சொற்களை ஒப்பிட்டு ஆராய்ந்தார். இதில் வினைச் சொற்கள், பெயர்சொற்கள் (Verbs and Nouns) இரண்டையும் ஆராய்ந்தார். குணங்கள், செயல்பாடுகள், உணர்வுகள் (அன்பு, கோபம்), உடல் உறுப்புகள் (கை, கால்) உணவுப் பொ ருட்கள்  முதலிய பலவகைச் சொற்களை தேர்வு செய்தார்.

 

மூலச்சொற்களில் இருந்து, ஆனால் சம்ஸ்கிருதத்தில் காணப்படாத சொற்கள் 53 மட்டும்தான்; மற்ற எல்லாம் சம்ஸ்கிருதத்தில் உள்ளன!

ஜெர்மானிய மொழிகளில் (ஜெர்மன், ஆங்கிலம்) 145 சொற்களைக் காணோம்!

கிரேக்கத்தில் 149 சொற்களைக் காணோம்!

 

பால்டிக் மொழிகளில் 185 சொற்களைக் காணோம்!

 

லதீனில் (போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், பிரெஞ்சு, இதாலிய மொழிகளின் தாய்) 207 சொற்களைக் காணோம்!

 

கெல்திக் (CELTIC) (ஐரிஷ்) க்கில் 210 சொற்களைக் காணோம்!

 

ஸ்லாவிய மொழிகளில் 215 சொற்களைக் காணோம்!

 

இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் சம்ஸ்கிருதம்தான் இந்திய ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் மிகப் பழைய மொழி, தூய்மையை அப்படியே பராமரித்துப் பாதுகாக்கும் மொழி!!

 

மேலே குறிப்பிட்ட மொழிகளில், “மூலமே இல்லாத அனாதைச் சொற்கள்” அதிகம் காணப்படுகின்றன. ஆனால் சம்ஸ்கிருதத்திலோ அதற்கான வேர்ச் சொல்லை, மூலத்தை, தாதுவை எளிதில் காணமுடிகிறது. அற்புதமான ஒருமை- இணைப்பு- தொடர்ச்சி (organic coherence) உளது.

இதன் மூலம் நாம் அறிவது யாதெனில் மூல இந்திய ஐரோப்பிய தாய்மொழிக்கு மிக அருகிலுள்ளது சம்ஸ்கிருதம், மிகப் பழமையானது (Most archaic and most faithful to PIE) சம்ஸ்கிருதம் என்பதாகும்.

 

சுருங்கச் சொன்னால் சம்ஸ்கிருதம்தான் அந்தக் குடும்பத்திலேயே மிகப் பழமையானது, மிகத் தூய்மையானது.

 

இது நிகலஸின் ஒரிஜினல் ஆராய்ச்சி!

 

வேத மொழிகளையும் அவெஸ்தன் மொழிகளையும் ஒப்பிட்டு, பழைய கொள்கைகளை தகர்த்தெரிகிறார் நிகலஸ். இதைப் புரிந்து கொள்ள வேதங்களிலும் பாரசீக மொழிகளிலும் கொஞ்சம் பரிச்சயம் தேவை. ஆனால் வெளி நாட்டு “அறிஞர்கள்” வேதங்களுக்கும் முந்தையது இந்திய-ஈரானிய மொழிகள் ( Indo- Iranian அவெஸ்தன் Avestan=பாரசீக); அங்கே இருந்துவிட்டுத்தான் ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தனர் என்றெல்லாம் ‘புருடா’ (blatant lies) விட்டுக் கொண்டிருந்தனர். அதாவது ஆரிய-திராவிடர் என்ற பிரிவினையை 400 வருடங்களாக முன்வைத்து, அதற்கேற்ப எல்லாவற்றையும் புழுகியும் மெழுகியும் ஒழுகியும்  வந்தனர்.

 

(ஆனால் காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள், ஜொராஸ்டர் என்பவர், குஜராத்திலுள்ள சௌராஷ்டிரர் தேசத்தவர் என்று முன்னரே பேசியதை எனது கட்டுரையில் விரிவாகக் கொடுத்துள்ளேன். ஆயினும் நிகலஸ் கஜனஸ் மொழியியல் ரீதியில் ஆப்பு வைப்பது படித்து இன்புதற்கிரியது.)

 

முன்னரே சொன்னது போல மொழியியல் மற்றும் சம்ஸ்கிருதம், கிரேக்கம், அவெஸ்தன் ஆகியவற்றில் ஓரளவு அறிவுள்ளவர் களுக்கான புத்தகம் இது. ஆகையால் அடுத்த கட்டுரையில் அவர் ரிக் வேத மண்டல கால வரிசைக் (Chronology of 10 Rig Vedic Mandalas) கிரமம், ரிபு (Vedic God Rbhu) பற்றிய ஆராய்ச்சி, ரிக்வேத மொழிபெயர்ப்பு பற்றிச் சொல்லும் சில கருத்துகளை செப்புவேன்.

 

–தொடரும்

Wonderful Episodes of Temples that were Saved During Muslim Invasion (Post No.3710)

 

Picture:-Tirupparankundram Murugan Temple

Written by S NAGARAJAN

 

Date: 10 March 2017

 

Time uploaded in London:-  5-56 am

 

 

Post No.3710

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

Wonderful Episodes of Temples That Were Protected and Saved During Muslim Invasion

 

 by S. Nagarajan

 

Hindu Gods are very many. Shiva, Vishnu, Brahma etc. Shiva is destroyer. Vishnu is protector. Brahma is creator. And there is Goddess Devi, worshipped as Kali, Bhavani etc.

The atheists usually ask when there are so many Gods why not Hindu’s temples were not protected during Muslim invasion?

God’s ways are inscrutable. Let us go through some historical incidents.

Swami Vivekananda once went to Kshir Bhavani temple in Kashmir. The famous temple was in a dilapidated condition. Swamiji was very upset on seeing the condition of the temple. He mused within himself that this famous temple should not have met this state and calls for renovation.

 

Suddenly he heard a clear and commanding female voice, “I want to stay in such a state of the temple at My Will. Could not I get a huge temple constructed here if I so wished? What do you think in your mind? Do you protect me or I protect thee?”

Swamiji was stunned and later told this episode to his disciples on return to Kolkata.

 

Let us go back in time to Malik Kafur’s time. He was a famous general of Alauddin Khilji. He attacked Madurai and destroyed parts of the famous Meenakshi Temple. On his way back he was passing through Thirupparankundram.

Thirupparankundram is situated 5 miles from Madurai. It is one of the famous six abodes of Lord Muruga.

On seeing the temple tower at Thirupparankundram Malik kafur ordered his men to demolish the temple tower.

The soldiers assembled in front of the tower. At that moment one mason by name chitthan climbed over the temple tower.

 

From the top he jumped down. Dashing the ground his skull was broken into hundreds of pieces and blood was flowing like a stream.

On seeing this sudden sacrifice the soldiers trembled and out of fear they ran away from the temple.

And Malik kafur returned. Thus the temple was saved.

We may cite hundreds of episodes like this regarding Hindu temples.

One more incident from the pages of history.

Picture: Mayadevi temple, Haridwar

After the demise of Firoze Shah Tughlak, Taimur Lang reached the banks of Ganga, once. He reached the famous shrine Haridwar. He also demolished several temples on the way.

On reaching Haridwar Taimur looted the city. There was a Bairava temple n ear Mayadevi temple in Haridwar. While he struck the image of Lord Bairava, suddenly hundreds of snakes and scorpions appeared on the scene.

On seeing so many snakes and scorpions at a time, the army of Taimur felt highly terrified and started fleeing from the temple site.

The temple was saved without any damage.

 

If the history of Hindu temples in India is compiled, thousands of real incidents will surprise us. As we know God’s ways are inscrutable, the devotees were inspired to save the temples sacrificing their lives. Sometimes by Lord’s divine sports, snakes and scorpions were also played a role.

Many temples have their own stories of miraculous escape from evil forces.

***