Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
11-6-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை
மாக்ஸ் ஹோடக் திட்டம்: மனித மூளையில் ஒரு சென்ஸர்! அது செய்யவிருக்கும் அதிசயங்கள்!
ச. நாகராஜன்
மாக்ஸ் ஹோடக் என்ற பெயரை இதுவரை அறியாதவர்கள் இனி அவரைப் பற்றித் தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹோடக் உயிரியல் மருத்துவ பொறியாளர் (Biomedical Engineer). 2021ம் ஆண்டு ஏப்ரலில் இவர் ஸயின்ஸ் கார்பொரேஷன் என்ற தனது நிறுவனத்தைத் தொடங்கினார்.
எலான் மஸ்க் நிறுவிய நியூராலிங்க் நிறுவனத்தில் பணியாற்றிய எட்டு விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர்
MAX HODAK .
இவர் கண்டுபிடித்த பிரைமா அமைப்பு (PRIMA SYSTEM) பார்வை இழந்தோர்களுக்குப் பார்வையைத் தர உதவியது. இந்த அமைப்பில் ப்ரெய்ன் – கம்ப்யூட்டர் இண்டர்ஃபேஸ் (BCI – Brain Computer Interface) என்னும் அதி நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது,
இப்போது அடுத்தபடியாக ஒரு பெரும் முன்னேற்றத்திற்கு அடிகோலியிருக்கிறார் ஹோடக். இந்தத் திட்டத்தின் படி மூளையில் ஒரு சென்ஸர் (உணர்கருவி) பொருத்தப்படும்.
இதற்காக ஹோடக், உலகின் ஆகப் பெரும் மூளை இயல் நிபுணரான டாக்டர் முரட் குனல் என்பவரைத் தனது நிறுவனத்தில் பணியாற்ற அழைத்துள்ளார்’
இந்தக் கம்பெனியின் செயல்பாடுகளைக் கண்டு வியந்த உலகம் 23 கோடி டாலர் மதிப்புள்ள இவரது நிறுவனத்தை இப்போது நூறு கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனமாக ஆக்கி விட்டது!
கம்ப்யூட்டருக்கும் மனித மூளைக்கும் நல்ல ஒரு இணைப்பைத் தருவதே ஹோடக்கின் நோக்கம்.
முதுகெலும்பு முறிவு உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு எலக்ட்ரானிக் சென்ஸர்களைப் பொருத்தி, புரட்சி செய்தது நியூராலிங்க் நிறுவனம்.
இந்த அமைப்பை நன்கு ஆய்வு செய்த ஹோடக், “இந்த முறையில் மின்சக்தி மூலம் எலக்ட்ரோடுகள் பொருத்தப்படுகின்றன; அது தவறு” என்று உணர்ந்தார்.
ஆகவே இந்த சிகிச்சை நடைமுறையை விட்டு விட்டு மூளையில் உள்ள நியூரான்களிடம் நேரடியாக இணைப்பைச் செய்வது என்று தீர்மானித்தார்.
அதற்காகத் தான் இந்த சென்ஸர் கருவி மூளையில் பொருத்தப்படும் முறை உருவாகி இருக்கிறது.
முதல் படியாக உயிருள்ள மனிதர் ஒருவரின் மூளையில் – மண்டையோட்டில் மூளைக்கு மேல் பகுதியில் – சென்ஸர் பொருத்தப்பட இருக்கிறது.
இதன் மூலம் முதுகெலும்பு முறிந்தவர்களுக்கான சிகிச்சை துரிதப்படுத்தப்படும். அத்துடன் மூளையில் கட்டி உள்ளவர்களுக்கு உடனடி எச்சரிக்கையைக் கொடுத்து உரிய சிகிச்சையை துரிதமாக அளிக்க இந்த மூளையில் பதிக்கப்படும் சென்ஸர் உதவும்.
பார்கின்ஸன் வியாதிக்கும் இது ஒரு தீர்வைத் தரும் என்று பலரும் நம்புகின்றனர்.
2027ல் முதல் கட்ட சோதனைகள் முடிவடையும். பின்னர் பெரிய அளவில் மூளை மருத்துவத்தில் ஒரு புரட்சி ஏற்படும்.
மாக்ஸ் ஹோடக்கின் பெயர் உலகளாவிய விதத்தில் பரவ ஆரம்பித்து விட்டது.
Colour pictures here are from Madurai Meenakshi Temple of Lord Siva.
Crowns worn by Goddes Meenakshi//Parvati
Written by London Swaminathan
Post No. 15,871
Date uploaded in London –14 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Research article
One of the wonders of Tamil Language is that they used the jewellery or ornaments to name their five epics; we know the greatest poet of India Kalidasa used ornaments, particularly rings, in his dramas to give twists. But Sanskrit Maha Kavyas are not named after ornaments. Tamils used ornaments in the following Pancha Maha Kayas of Tamil literature.
Kundala kesi (Kundala= “earring,” “hoop,” or “ornament for the ear)
Valaiyapathy (Valai=bangle)
Tamils were crazy about jewels! But in the stories the characters are not associated with any particular ornament except the first one, i.e.Silappadikaram (Silambu/Anklet+ Adikaram/Chapter)
No other language has named their epics with the ornaments.
***
Jewels in Silappadikaram
Kovalan, the hero of the epic married Kannaki; both were from the wealthiest businessmen family in Poompuhar, the port city of Sangam Age. When Kovalan, lover of music and dance, fell in love with a courtesan called Madhavi, the story moved towards a tragic end.
The event that made Kovalan to fall in love with Madhavi was a dance event in the Indra Festival in the port city. There Ilango the author of the epic, lists 11 types of dances and the ornaments she was wearing.
Following are the Ornaments:
Madhavi bathed her fragrant black hair, soft as flowers, till it shone, in the perfumed oil prepared by mixing up ten kinds of astringents, five spices, and thirty two herbs soaked in water; she dried it in fuming incense, and perfumed the different plaits—five plaits of hair were generally worn by Tamil ladies, especially when they were young—with the thick paste of the musk from deer. She adorned her little feet, reddened by dye, by wearing choice rings- PILI on her fair and tender toes, and on her ankles becoming ornaments known as PARIYAKAM, NUUPURAM, PAATAKAM, SATANGAI AND ARIYAKAM. She put ornaments on her rounded thighs. Over her waist was a GIRDLE MADE OF THIRTY TWO STRANDS OF BIG PEARLS worn over a blue cloth embroidered with the figures of flowers. Round her upper arms she had ARMLETS STUDDED WITH PEARLS TOGETHER WITH ATTRACTIVE BANGLES OF PRECIOUS STONES= KAAMAR KANTIKAI.
Round her soft haired wrists were beautiful BRACELETS=CUUTAGAM in which was set the costliest gem in front with DIAMONS ALL ROUND, GOLD BANGLES, GOLD BANGLES OF NINE GEMS = PARIYAKAM, CONCH BANGLES AND BANGLES OF CORAL.
On to her tiny fingers, red as kantal flower, so as to hide them she slipped a ring bent into the shape of an open mouthed fish, and a highly brilliant and lustrous ring of gems and A ROUND RING GLITTERING WITH RUBIES AND BRILLIANT DIAMONDS.
Her delicate and beautiful neck was adorned with a chain necklace called NUNTOTAR, with a fine string of exquisite workmanship and with a garland. Added to these was an ornamental gems held by a clasp, which covered the small nape of her neck.
A pair of ear rings, in which emeralds alternated with diamonds, glittered in her beautiful ears. In her dark tresses becoming head ornaments such as DAIVAUTTI, SRI DEVI, VALAMPURI, TALAI PAALAI, SEA CONCH, TOYYAKAM AND PULLAKAM WERE SET.
EXPLANATIONS FROM COMMENTATORS
PILI= It is in use even today, and it is considered inauspicious if it is not worn by a girl on her marriage
TOYYAKAM PULLAKAM =this is said to be a head ornament of two sections called TEN PALLI, VADA PALLI.
PALLI= HOUSE LIZARD .
Donated by English collector Rose Peter to the temple.
Tamil Epic Silappadikaram, written around fifth century CE, is an encyclopaedia. It has lot of information on every subject connected with Hindus, particularly Tamils. Ilango, the author of the epic, never hesitated to use Sanskrit words. Even many of the ornaments mentioned above are Sanskrit terms. We come across the inter galactic traveller-saint Narada and the Veena for the first time in this epic; they are not in 2000 year old Sangam Tamil literature. All the epic and Puranic stories are also used by the author. And for the first time we hear a long stanza of praise on Jain Tirtankaras (without naming them). No Buddha, No Mahavir is found in ancient Tamil Literature.
We can see Kalidasa’s influence in this book. His Ujjain, Vindhyas, Himalayas, Vidhyadhara etc are used by Ilango. One Brahmin called Madala Maraiyon is the uniting link in the epic.
Strangely Tamils never mentioned Indus/Sindhu river. They praised only Ganges and Himalayas. Sangam Age Tamil literature or later literature had no reference to Sindhu (Indus Valley) region!
To be continued…………………
Tags- Tamil Wonder, Ancient Hindu Jewellery, You can get Ph.D.,part 2, Research article, five Tamil epics, names of ornaments, Silappadikaram
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 2
தமிழ் அதிசயம்!
உலகிலேயே ஐந்து காப்பியங்களை ஆபரணங்களின் பெயரைச் சூட்டியவன் தமிழன் ஒருவனே ; சம்ஸ்க்ருதத்தில் காளிதாசன் நூல்களில் ஒவ்வொரு ஆபரணம் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தாலும் அவன் நூல்களுக்கு நகைகளின் பெயர்களை சூட்டவில்லை ; தமிழ் ஐம்பெருங்காப்பியங்கள் நகைகளின் பெயரில் உள்ளன .
தமிழன் ஒரு நகைப்பைத்தியமோ என்று வியக்க வேண்டியுள்ளது!
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
குண்டல கேசி
வளையாபதி
****
டாக்டர் பட்டம் கிடைக்கும் !
Picture- Parvati as huntress, Madurai Meenakshi Temple.
இந்துப் பெண்கள் அணிந்த நகைகள் பற்றி ஒருவர் ஆராய்ந்து எழுதினால் எளிதில் டாக்டர் பட்டம் பெறலாம் ; ரிக் வேதம், ஹரப்பா நாகரீகம் , சம்ஸ்க்ருத, தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள், சிலைகள், ஓவியங்களில் ஒரு என்சைக்ளோபீடியா அளவுக்குத் தகவல்கள் உள்ளன!
***
சிலப்பதிகாரத்தில் கடலாடு காதையில் மாதவியின் அலங்காரம் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன; அவள் என்னென்ன ஆபரணங்களை அணிந்து இருந்தால் என்று இளங்கோ அடிகள் ஒரு பட்டியல் தருகிறார் ; இது ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட காவியம் ஆதலால் அப்போதைய தமிழக நிலையை நமக்கு இளங்கோ படம்பிடித்துக் காட்டுகிறார். .
மாதவியின் ஒப்பனை
கூந்தலை நறுமணம் கலந்த நீரில் குளிப்பாட்டினாள். நறும்புகை கொண்டு உலர்த்தினாள். கால் அடிமுதல் தலை முடிவரை அவள் பலவகை அணிகளைப் பூண்டாள். இங்கே அவனுக்கு மாதவியாகக் காட்சி அளித்தாள். கால்விரலுக்குக் கணையாழிகள்; கணைக்காலுக்குச் சிலம்பு வகைகள்; தொடைக்குச் செறிதிரள் என்னும் அணி முத்துப்பதித்த மேகலை அவள் இடைக்கு அணிந்தாள். தோளுக்குக் கண்டிகை, வயிரம் பதித்த சூடகம்; மற்றும் பல்வகை வளையல்கள் அவள் கைகளில் அணிந்தாள்: கைவிரலுக்கு மகரமோதிரம்; கழுத்துக்குப் பொன் சங்கிலியும் முத்து ஆரமும் அணிந்தாள்: செவிக்குக் கடிப்பு: தெய்வஉத்தி, தொய்யகம் முதலியன அவள் தலைக்கு அணிந்தாள். இத்தகு ஒப்பனைகளோடு அவன் மகிழ அவனோடு ஊடலும் கூடலும் கொண்டு அவனை மகிழ்வித்தாள்.
புது விருப்பு
இந்திரவிழாவில் கலைவிழாக்களைக் கண்ட நகரத்து மாந்தர் அடுத்தது கடல்விளையாட்டைக் காணக் கடற்கரை நோக்கிச் சென்றனர். மாதவியும் அங்குச் சென்று அதனைக் காண அவாவினாள். கோவலனும் உடன் புறப்பட இசைந்தான்.
வைகறை விடிந்ததும் கோவலனும் மாதவியும் கடற்கரை நோக்கிப் புறப்பட்டனர். அவர்கள் பயணம் உல்லாசப் பயணமாக அமைந்தது. அவன் அத்திரி என்னும் அழகிய குதிரைமீது ஏறிச் சென்றான். அவள் வையம் என்னும் முடுவண்டியில் அமர்ந்து சென்றாள்.
Picture- Siva as hunter, Madurai Meenakshi Temple.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருவாலி
இவ்வூரும் அருகிலுள்ள திருநகரியும் சேர்ந்து ஒரே திவ்ய தேசமாகக் கருதப்படுகிறது. இது 34-வது திவ்ய தேசமாகும்.திருவாலி கோயிலில் வீற்றிருக்கும் பெருமாள் அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மர்) வீற்றிருந்த திருக்கோலம், வேதராஜன்
தாயார் : ஸ்ரீ அம்ருதகட வல்லி, பூர்ணவல்லி திருநகரி: ஸ்ரீ அம்ருத வல்லி
மூலவர் : ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹர்
உற்சவர்: ஸ்ரீ திருவாலி நகராளன், திருநகரி: ஸ்ரீ கல்யாண ரங்கநாதன்
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : இலாட்சணி புஷ்கரிணி
புராண பெயர் : ஆலிங்கனபுரம்
திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து, இரண்யனை வதம் செய்தார். அப்போது அந்த சீற்றம் அடங்காமல் இருந்ததால், தேவர்களும், முனிவர்களும் மிகுந்த கவலை கொண்டு, பூலோகம் மேலும் அழியாமல் இருக்க வேண்டும். அதைக் காக்கும் பொறுப்பை மகாலட்சுமி எடுக்க வேண்டும் என்று அவரிடம் விண்ணப்பம் வைத்தனர். அதையேற்ற மகாலட்சுமி, பெருமாளின் வலது தொடையில் அமர்ந்து அவரை ஆலிங்கனம் செய்து கொண்டார். அதன் காரணமாக இத்தலம் திருஆலிங்கனம் என்ற பெயர் பெற்று, பின்னர் திருவாலி (திருவாகிய லட்சுமியை ஆலிங்கனம் செய்தல்) ஆயிற்று.
இப்பகுதியில் திருமங்கையாழ்வார், குறுநில மன்னராகத் திகழ்ந்து வாசம் செய்ததால், அவர் ‘ஆலிநாடன்’ என்று அழைக்கப்படுகிறார்.
திருநகரி ஸ்தல வரலாறு :
பிரம்மாவின் ஐந்தாவது புதல்வர் கர்த்தமப் பிரஜாபதி மோட்சம் வேண்டும் என்று எம்பெருமானைக் குறித்துத் தவமிருந்தான். அவனுக்கு அருள்தர வேண்டும் என்றாள். எம்பெருமான் அதற்கு சம்மதித்தும், அவனுக்கு உடனே மோட்சம் தரவில்லை. அதனால் மகாலக்ஷ்மி கோபம் கொண்டு இந்தத் திருத்தலத்தில் உள்ள திருக்குளத்தில் ஒரு தாமரை மலருக்குள் புகுந்து கொண்டாள் . பின்னர் எம்பெருமான் வந்து அவரை ஆலிங்கனம் செய்ததால் ஆலிங்கன புரியாகவும், ஸ்ரீவந்து நின்றதால் ஸ்ரீபுரியும் ஆயிற்று. அப்பொழுது கர்த்தம ப்ராஜாபதி மோட்சமளிக்க வேண்டினார். எம்பெருமான் பிரம்ம புத்திரனை நோக்கி அவனுக்கு இப்போது மோட்சம் கிடையாதென்றும் அது கலியுகத்தில்தான் சித்திக்கும் என்று அருளினார்.
திருவாழி – திருநகரி இரட்டைத் தலங்களில், திருவாழியில் அழகிய சிங்கர் கோயில் மற்றும் திருநகரியில் கல்யாண ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.
திருவாழி தலத்தில் மேற்கு நோக்கி திருவாழி அழகியசிங்கர் கோயில் அமைந்துள்ளது. தாயார் பெயர் பூர்ணவல்லி நாச்சியார்.
திருமங்கை ஆழ்வார் பிறந்த ஊரான திருநகரியில் திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. மூலவர் பெயர் வேதராஜன்; தாயார் பெயர் அமிர்தவள்ளி நாச்சியார். இக்கோயில் விமானம் 7 நிலைகளைக் கொண்டது.
லட்சுமியுடன் பெருமாள் நரசிம்ம கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு “லட்சுமி நரசிம்ம க்ஷேத்திரம்’ என்ற பெயரும் உண்டு.
திருமங்கையாழ்வாருக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டும் என லட்சுமி தேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள். பெருமாள் கூறியபடி லட்சுமி திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மகரிஷியின் மகளாக பிறந்தாள். பெருமாளை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது திருமங்கை மன்னன் வழிமறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் திருமங்கையின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார்.
தனி சன்னதியில் திருமங்கையாழ்வார் ஆராதித்த சிந்தனைக்கினியான் என்ற மிகச்சிறிய உத்சவமூர்த்தி அமர்ந்து இருக்கிறார்.
ஆழ்வாருக்கு தனி கொடிமரம் உண்டு. கொடியேற்றி உற்சவம் நடக்கும். வேதராஜப் பெருமாளுக்கு தனி கொடிமரம் உண்டு. மூன்று ஆழ்வார்களுக்கு மட்டுமே கொடிமரம் மற்றும் கொடியேற்றி உற்சவம் உண்டு. ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாருக்கும் உள்ள ஆழ்வார் சன்னதிகள் கொடிமரம் உள்ள மற்ற இரண்டு ஆகும்.
பத்ரிகாசிரமத்துக்கு அடுத்ததாக பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசம் செய்த தலமாக இத்தலம் விளங்குவதால், பத்ரிகாசிரமத்துக்கு இணையாக இத்தலம் கருதப்படுகிறது. திருவாலியை தரிசிப்பதால் பஞ்ச நரசிம்மர் தலங்களை தரிசித்த பலன் கிட்டும். இத்தலத்தைச் சுற்றி குறையலூர் உக்கிர நரசிம்மர், மங்கைமடம் வீர நரசிம்மர், திருநகரி யோக நரசிம்மர் மற்றும் ஹிரண்ய நரசிம்மர் தலங்கள் உள்ளன.
ரங்கநாத பெருமாள், தாயாருடன் இளம் திருமண தம்பதிகளாக திருமங்கையாழ்வாருக்கு காட்சி அளித்த ஸ்தலம். அதனால் இந்த எம்பெருமானுக்கு கல்யாண ரங்கநாதன் என்ற பெயர் ஏற்பட்டது.
பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்று மேற்கு பார்த்து வீற்றிருந்த திருக்கோலம்.
***
திருவாலி திருநகரி
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவிலும், சீர்காழியிலிருந்து 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
திருவிழாக்கள் :
வைகாசி சுவாதி திருவிழா (10 நாள்), ஆவணி பவித்ரோற்சவம்,
வைகுண்ட ஏகாதசி,
தை 12 கருட சேவை,
பங்குனி உத்திரம், மாத சுவாதி, பிரதோஷ தினங்களில் சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும்.
திருமங்கைமன்னன் பெருமாள் வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெறும் விழாவும் பங்குனி உத்திர திருவிழாவின்போது நடைபெறுகிறது.
***
திருவாலி பாசுரங்கள்
1188.
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்* புகுந்ததன்பின் வணங்கும் என்*
சிந்தனைக்கு இனியாய்!* திருவே என் ஆர் உயிரே*
அம் தளிர் அணி ஆர் அசோகின்* இளந்தளிர்கள் கலந்து*
அவை எங்கும் செந் தழல் புரையும்* திருவாலி அம்மானே! (2)
1189.
நீலத்தடவரை* மாமணி நிகழக் கிடந்ததுபோல்*
அரவு அணை வேலைத்தலைக் கிடந்தாய்* அடியேன் மனத்து இருந்தாய்*
சோலைத்தலைக் கண மா மயில் நடம் ஆட* மழை முகில் போன்று எழுந்து*
எங்கும் ஆலைப் புகை கமழும்* அணி ஆலி அம்மானே!
1190.
நென்னல்போய் வரும் என்று என்று எண்ணி இராமை* என் மனத்தே புகுந்தது*
இம்மைக்கு என்று இருந்தேன்* எறி நீர் வளஞ் செறுவில்*
செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ* அரிவார் முகத்து எழு வாளை போய்*
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
10-6-26 தீபம் இதழில் வெளியான கட்டுரை!
உருவ வழிபாடு தேவையா, இல்லையா? – பாபா கொடுத்த ‘குதிரை’ உதாரணமும் ஆன்மீக உண்மையும்!
ச. நாகராஜன்
ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்தில் ரேபள்ளே நகரில் 2-12-1963 அன்று ஶ்ரீ சாயிபாபா விக்ரஹத்தை கோவிலில் ஸ்தாபித்து பகவான் ஆற்றிய உரை:
ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்! சாயி கட்டிடங்களிலோ, கல்லிலோ, செங்கல்லிலோ அல்லது சுண்ணாம்புக் கலவையிலோ வாழ்வதில்லை. அவர் இரக்கத்துடன் கூடிய உலகளாவிய அன்பெனும் மணம் வீசும் மென்மையான இதயங்களில் வாழ்கிறார்.
சமூகத்தில் உள்ள உபயோகமான சில வழிகளை விலக்கி மனிதனின் உள்ளுணர்வையும் உன்னத உணர்ச்சிகளையும் தூண்டும் கோவில்களும் விக்ரக ஆராதனையும் கொஞ்சம் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. ஆகவே தான் இந்தியாவில் இறைவனை நோக்கி மனிதனை இட்டுச் செல்லும் வழி இன்னும் மூடப்படவில்லை. எல்லா கலைகளும் அந்த இறுதி நிலைக்கே பயன்படுத்தப்படுகின்றன. ஒரு குடிகாரன் கூட எப்போதோ கேட்ட கீர்த்தனை ஒன்றை முணுமுணுத்து கடவுளின் புகழையும் தன்னை உணர்வதில் உள்ள இன்பத்தையும் கூறுகிறான். ஒவ்வொருவரும், அவர் எந்த ஒரு முன்னேறிய ஆன்மீக நிலையில் இருந்தாலும் சரி, கவனத்தைச் செலுத்தி முன்னேறிச் செல்லத் தூண்டப்படுகிறான். இதுவே இந்தியாவை மனிதகுலத்தின் ஆன்மீக கலாசாலையாக ஆக்கியுள்ளது. இந்தியாவின் மடியில் இந்த வாழ்க்கையை வாழும் ஒரு பெரும் பேறை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அதாவது வேதாந்தத்தில் வாழ கொடுத்து வைத்துள்ளீர்கள். இந்தப் பாரம்பரியத்தை நினைவில் கொண்டு அதை அவமதிக்காத வகையில் வாழுங்கள்.
சந்திரனையோ அல்லது செவ்வாய் கிரகத்தையோ அடைய முயற்சித்து விண்வெளியை ஆராய எண்ணும் நாடுகளைப் பார்த்து பொறாமைப் படாதீர்கள். வன்மத்திற்கும் பொறாமைக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கும் போது அப்படிப்பட்ட பிரதேசங்களை ஜெயித்து தான் என்ன பிரயோஜனம்? காட்டுமிராண்டித்தனமான கடந்த காலத்தைக் கொண்டு கெட்ட நோக்கங்களால் அழுந்திக் கிடக்கும் மனத்துடன் மணிக்கு பத்தாயிரம் மைல் வேகத்தில் பயணித்து தான் என்ன பிரயோஜனம்? மிகவும் முன்னேறிய மேலை நாடுகளில் நிலவும் அசாந்தியின் காரணத்தைப் பற்றி எண்ணிப் பாருங்கள். அதன் காரணமாக இருப்பது அதிக கர்வம், பேராசை, கெட்ட பழக்கம், பாவம் ஆகியவை தான் என்பதை நீங்கள் காண்பீர்கள். இறைவனிடம் பயம் இல்லை அல்லது வயதுக்கு மரியாதை இல்லை, பாவத்திற்கு பயமும் இல்லை. அவர்கள் செல்வத்திற்கும் அதிகாரத்திற்குமான வெளிப்புற அடையாளங்களுக்கே மதிப்பைத் தருகிறார்கள். சரக்குப் பெட்டிக்குத் தான் மதிப்பு; உள்ளே இருப்பவற்றிற்கு மதிப்பு இல்லை.
உதாரணத்திற்கு, இந்த சலவையில் ஆன உருவம் ஒரு சரக்கு பெட்டி தான். அதற்குள் இருப்பது சாயி தத்வம். இது எப்படி என்றால் ஒரு கோப்பை தான் ஆதாரம்; (அடிப்படை) அதற்குள் இருக்கும் பால் ஆதேயம்.(அதனால் தாங்கப்பட்டிருப்பது) நீங்கள் சாயி தத்வத்தை இதனுள் ஊற்றி இதை சாயிபாபா என்கிறீர்கள். இன்னொரு பாத்திரத்தில் இன்னொரு வடிவத்தைச் செய்து அதை ஶ்ரீநிவாஸன் அல்லது சிவா, கிருஷ்ணா, ராமா என்கிறீர்கள்.
சாதனா என்னும் கிண்டர்கார்டன் (ஆரம்ப) பள்ளியில் இருப்பவர்களுக்கு இந்த விக்ரஹம் தான் ஸ்பெல்லிங் புத்தகத்தில் இருக்கும் சித்திரங்கள் போல!
குதிரையின் படமானது கு-,தி-,ரை என்ற எழுத்துக்களைக் கீழே கொண்டிருக்கும் போது அந்த எழுத்துக்களை குதிரையின் படத்துடன் பார்த்தவுடன் குதிரையை உங்களால் நினைவு கொள்ள முடிகிறது. அது போலவே சாயி என்று சொல்லப்படும் ஒரு உருவத்தை, உங்கள் தெளிவற்ற, முடிவற்ற தெய்வீக தத்துவமானது, ஒரு வடிவம் பெறும் வரை நீங்கள் கொள்ள வேண்டும். ஒருவித உருவமும் இன்றி சாயி தத்வத்தை உங்களால் மனதில் கொண்டுவர முடியும் என்றால், அல்லது எல்லா வடிவங்களையும் நாமங்களையும் உங்களால் கொண்டு வர முடியும் என்றால் இந்த சாயி விக்ரஹம் தேவையில்லை, அது அகற்றப்படலாம்.
இந்தக் கோவிலில் சலவையினாலான விக்ரஹத்தை ஸ்தாபித்தவுடன் உங்களுடைய எல்லா முயற்சியும் முடிந்து விட்டது என்று அர்த்தமில்லை. உண்மையில் இது தான் ஆரம்பம். இந்த நாட்டில் ஏராளமான கோவில்கள் வெவ்வேறு நிலையில் சிதிலமடைந்துள்ளன. இங்கு மட்டுமல்ல, பல வெளிநாடுகளிலும் கூட இதே நிலைதான் இருக்கிறது. ஏன் இப்படி படாடோபமாக ஆரவாரித்து இன்னொரு கோவிலைக் கட்டி பட்டியலில் சேர்க்க வேண்டும்? புதிய கோவில்கள் உதயமாகின்றன; பழைய கோவில்கள் நினைவிலிருந்து நீங்கி அழிகின்றன. இது ஏனென்றால், வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு பெயர்களில் உங்கள் முன் தரப்பட்டாலும் அவற்றில் இருக்கும் உட்பொருள் ஒன்றே தான் என்பதை நீங்கள் உணரவில்லை என்பதால் தான்.
உங்கள் தவத்தில் ஒரு அத்தியாயம் முடிந்து விட்டது. உங்களுக்கு இந்த விக்ரஹம் கிடைத்துள்ளது, அத்துடன் உங்களுக்கு இந்த விழாவும் கிடைத்துள்ளது.
ஆனால் அடுத்த அத்தியாயத்தில் உங்கள் பக்தியானது இந்த விக்ரஹத்தில் பொழியப்பட வேண்டும், உங்களின் சொந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக, அதை எப்போதும் ஜீவனுடன் வைத்திருக்க வேண்டும் –
சாயியின் முன் கூப்பிய கரங்களுடன் நிற்கத் தகுதியானவர்களாக ஆக வேண்டும்.புனிதமான, தெய்வீகமானவர்கள் மட்டுமே தங்களை முழுமையாக இறைவனுக்கு சமர்ப்பிக்க முடியும்.
Ornaments of Lord Siva who appeared as hunter; Madurai Meenakshi Temple.
Written by London Swaminathan
Post No. 15,867
Date uploaded in London –13 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Hindus are the only people in the world who wear ornaments from head to foot. Greeks have no ornaments on their statues in the ancient time. Egyptians had some jewellery ut only kings and queens wore it around their necks. Where as all Hindus have been wearing it whether it is a king or a servant; our ancient statues and literature prove it. Until this day wedding pictures of brides also show this. We have copious references to these ornaments in the Rig Veda, the oldest book in the world. After Rig Veda, we see it in the necks of Mother Goddess in Harappan Civilization. Statues of Yakshis, Yakshas and devotees dated around second century BCE reveal all types of jewelleries.
***
Apart from Hindus, Mayans and Aztecs in South America wore almost similar ornaments like the Hindus. We know that Mayans migrated to South America after a big conflict with Lord Krishna and Arujana. Both wanted to cultivate in new areas and construct new houses. So, they declared that they are going to burn Khandava Vana (Gond Wana Land). Naga tribes in the forest objected to it. But Krishna went ahead igniting a long fight between Nagas and Rulers for a few centuries. They killed all Nagas when Parikshit was assassinated. Then Astika Rishi and Jaratkaru initiated a peace agreement. Brahmins recite this historical peace agreement in a mantra three times a day. They face towards north and recite Narmadaayai Namah mantra with full details. ( In my research article written a decade ago, I have given over sixty similarities between Mayan Civilization and Hindu Civilization).
***
You can get a doctorate if you do research in Hindu jewellery. Rig Veda, Harappan Civilization, Sangam Tamil literature gives us encyclopaedic information.
Here is the list of ornaments in the Rig Veda (2000 BCE according to Prof. Wilson who thrashed Max Muller and made him to withdraw his 1200 BCE dating)
List of Ornaments in the Rig Veda
Karna sosbhanaa- 8-78-3; ear stud; ear ring;
Khaadi-1-168-3, 5-54-11;brooch, ring, bracelet or anklet;
This list in not comprehensive; silver is mentioned in a lot of places with the word candra in the Rig Veda.
(Mani, Pinda were used even in 2000-year-old Sangam Tamil literature).
After Rig Veda, we get more information from Atharvana Veda, Yajur Veda, Upanishads, Sangam Tamil literature, and historical Tamil and Sanskrit inscriptions. The full jewellery list of Padhmanabha swamy Temple in Thiruvanathapuram (Kerala), Jagannath temple at Puri (Orissa) are not made public yet; Tirupati Balaji temple jewellery is uncountable. India is the richest country in the world even today. Each item in the temple will get millions of dollars if it is auctioned today. Palaces of old kings have hidden treasures. They keep it a secret until this day.
To be continued………………..
Tags- Ancient Hindu Jewellery, you can get Ph.D., part 1, list of ornaments, Rig Veda, Mayan, Aztec, Greek, Egyptian, ornaments,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லண்டன் சுவாமிநாதனின் ஆராய்ச்சிக் கட்டுரை
உலகிலேயே அதிக நகைகளை இந்துக்களின் சிலைகளில் மட்டும்தான் காண முடியும்; எகிப்திய பெண்களின் சிலைகள், ஓவியங்களில் கழுத்தில் மட்டும் நகைகளை காணலாம்; ஆனால் தெய்வங்களிடத்தில் இருக்காது ; கிரேக்க சிலைகளில் நகைகளையே காண முடியாது ; வேதத்தில் நகைகளின் பெயர்கள் உள்ளன; அதையடுத்து ஹரப்பா மொகஞ்சதாரோவில் தேவி சிலைகளில் மூன்று அல்லது நான்கு சங்கிலிகள் தொங்குவதைக் காணலாம் ; இந்துப் பெண்கள் திருமணத்தின்போது அணியும் நகைகளின் எண்ணிக்கை மிக மிக அதிகம் ; தலையில் அணியும் சுட்டி முதல் காலில் உள்ள மெட்டி வரை எங்கும் நகைகள் தான்!
இங்கு சில நகைகளின் பெயர்களைக் காண்போம்; அவைகளைக் கோவில் சிலைகளிலும் எல்லோரும் காணலாம் .
கோவிலுக்குள் இறைவனுக்கு அணிவிக்கப்படும் தங்க வைர இரத்தின நகைகள் அவ்வளவையும் சேர்த்துப் பார்த்தால் உலகிலேயே இன்றும் பணக்கார நாடு இந்தியாதான் என்பது வெள் ளிடை மலை என விளங்கும் . திருவனந்தபுரம், பூரி ஜகந்நாதர் கோவில் நகைகளின் பட்டியல் கூட பொதுமக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை ; திருப்பதி , மூகாம்பிகை கோவில்களில் தினமும் நகைகள் சேர்ந்த வண்ணம் இருக்கின்றன. இப்போது அயோத்திலுள்ள புதிய ராமர் கோவிலுக்கும் நிறைய நகைகள் காணிக்கைகளாக வந்து கொண்டிருக்கின்றன.
மாயா நாகரீகம்
இந்தியாவுக்கு வெளியே மாயன் (மயன்)ஆஸ்தீக (அஸ்டெக்) நாகரிக மக்கள் மட்டும் இந்துக்களைப் போலவே கை, கால், கழுத்து காது ஆகிய உறுப்புகளில் ஆபரணங்களை அணிந்தார்கள் ; ஏனெனில் அவர்கள் இந்தியாவிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்னர் பாதாள லோகத்துக்கு ( தென் அமெரிக்காவுக்கு ) அனுப்பப்பட்டார்கள் .
மஹா பாரத காலத்தில் அர்ஜுனனும் கிருஷ்ணனும் காடுகளை அழித்து நகரங்களை உண்டாக்கி மக்களைக் குடியமர்த்தும் நல்ல எண்ணத்தோடு பெரிய காடுகளை எரித்தனர். காடுகளில் வாழ்ந்த பழங்குடி நாகா இன மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் நாகர்/ பாம்பு சின்னத்தை அணிந்ததால் நாகர்கள் எனப்பட்டனர். மய தானவன் என்ற ஒரு நாகர் தலைவன் மட்டும் அர்ஜுனன் -கிருஷ்ணர் தரப்பில் இருந்தான். மஹாபாரத யுத்தத்துக்குப் பின்னர் மய தானவன் இன மக்கள் இந்தியாவிலிருந்து வெளியேறத் துவங்கினர். அவர்கள் புண்ய பாரத நாட்டை விட்டு வெளியேறிய தேதி ஆக்ஸ்ட் 11, கி.மு.3114 என்பதால் தான் அந்த தேதியை இன்றும் மத்திய அமெரிக்க கல்வெட்டுகளில் பொறிக்கின்றனர். இந்தியாவின் மீது அவ்வளவு நன்றி!
காண்டவ வனம் என்பதைத் திரித்து கோண்ட்வானா லேண்ட் என்ற புதிய சொல்லை வெள்ளியர்கள் உருவாக்கினர் .
Kahaandava Vana= Gondwana (land)
இந்துக்களுக்கும் மாயாக்களுக்கும் உள்ள அறுபது ஒற்றுமைகளை பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுரைகளாக எழுதினேன்; அது புஸ்தகமாகவும் வந்து விட்டது
***
இதோ நகைகளின் பெயர்கள்:–
ஆங்கிலக் கட்டுரையில் ரிக் வேத துதிகள் எண்களையும் குறிப்பிட்டுள்ளேன்
ரிக் வேதத்தில் ஆபரணங்கள்; அணிகலன்கள், நகைகளின் பெயர்கள்:
கர்ணசோபனா – காதணி – ரிக் வேதம்
காதி – கங்கணம் தோள் வளையம்
காதி ஹஸ்த- கங்கணம் அணிந்த
காதி பாத – காலில் வளையம் , சிலம்பு
க்ருசணம் – முத்து அல்லது முத்து போன்ற
கிருஷ்ணவத் – முத்து அணிந்த
சந்த்ர – வெள்ளி
சந்த்ரவத் – வெள்ளி நகை அணிந்த
தம்ச- அணிந்து கொள்
நிஸ்கா- காலத்தில் அணிய தங்கக்காசு / சங்கிலி
நிஸ்க க்ரீவ – கழுத்தில் தங்கச்சி சங்கிலி அணிந்த
மணி – ரத்தினம், ஸ்படிகம் ; உருண்டை வடிவ
மணிக்ரீவ – கழுத்தில் ரத்தினம் உடைய
ரஜத – வெள்ளி
ரத்ன- ரத்தினைக் கற்கள் ; நவ ரத்தினம்
ரத்னதா – பெரும் செல்வமுடைய
ரத்னதேய – கோட்டை வள்ளல், ரத்தினங்களை வழங்குவோன்
ருக்ம – தங்கச் சங்கிலி
ருக்மவக்ஷ – மார்பிலே தங்கச் சங்கிலி உடைய
ருக்மி – தங்க நகை அணிந்த
வருஷகாதி – நீண்ட சங்கிலி அணிந்த
ஹிரண்யய- தங்கம் கொழிக்கும்
ஹிரண்யம் – தங்கம்
ஹிரண்ய பாணி – தங்க நகை அணிந்த கைகள்
ஹிரண்ய பிண்ட – தங்க கட்டி
ஹிரண்ய பாஹு- தங்கத் தோள் வளையம்
ஹிரண்ய பேஷ – தங்க நகைகள் அணிந்த
ஹிரண்ய கர்ண- காதில் தங்க நகைகள்
புஷ்கர ராஜ் – தாமரை மாலை (தங்கத்தினால் ஆனது)
****
இவைகளில் பிண்டம் (கட்டி), மணி என்ற சொற்கள் சங்க இலக்கியத்திலும் உள்ளன . ஆண்களும் பெண்களும் கை,கால், தோள்களில் அணியும் நகைகளை சங்கத் தமிழ்ப் பாடல்கள் அதிகம் குறிப்பிடுகின்றன; பாணர்களுக்கு பொற்றாமரை வழங்கி கெளரவிக்கும் வழக்கத்தை சங்கப் புலவர்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றனர் ; வளையல், கழல், சிலம்பு ,தோள் வளையம் என்பன அடிக்கடி வரும் அணிகலன்களாகும்.
இவைதவிர அதர்வண வேதம், யஜுர் வேதம் பிராமண, உபநிஷத நூல்களில் ஏராளமான குறிப்புகள் இருக்கின்றன ; அவைகளைப் பட்டியலிட்டால் புஸ்தக அளவுக்கு கட்டுரை வளர்ந்துவிடும்.
வராஹ மிஹிரரின் பிருஹத் சம்ஹிதையில் ஒரு என்சைக்ளோபீடியா தயாரிக்கும் அளவுக்கு தகவல்கள் இருக்கின்றன . (பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய நவரத்தினங்கள்பற்றிய கட்டுரைகளில் அவைகளைக் கொடுத்துள்ளேன் ; எனது ‘பிளாக்’குகளில் காண்க)
***
இந்துக்கள் அணியும் நகைகளின் பெயர்கள்
உடலின் மேல் பகுதி —
புல்லகம்- தென் பல்லி, வட பல்லி;
பூரப் பாளை;
தந்தளம்;செவிப்பூ ;
அளக சூடம் ; தொய்யகம் ;
குதம்பை;
சாவடி;
காறை;
வாகுமாலை ;
முத்தாரம்;
தோள் வளை ;வாளைப்பகு வாய் மோதிரம் ;
பரியகம்;
வீரச் சங்கிலி ; சூடகம்;
பவழ வளை;
கடக வளை;
ஆடைக்கட்டு
*****
உடலின் நடுப் பகுதி –
முத்தரை ;
விரிசிகை
***
உடலின் கால்ப் பகுதி –
உடைதாரம்
குறங்குச் செறி ;
நூபுரம்;
பாடகம்
காற் சவடி (பரியகம்)
To be continued…………………..
Tags- இந்துக்களின் பழங்கால நகைகள் – Part 1, நகைகள் , ஆபரணங்கள்; அணிகலன்கள், ஆராய்ச்சிக் கட்டுரை, ரிக் வேதம் , நகைகள் பட்டியல்
விசேஷங்கள் – வீற்றிருந்த பெருமாளாக கோவிந்தராஜனுக்கும், சயனத் திருக்கோலத்தில் ரங்கநாதனுக்கும் இரு ஸந்நிதிகள். வேறு பல ஸந்நிதிகளும் உண்டு. ரங்கநாதன் ஸந்நிதியில் மிக அபூர்வமான அஷ்டபுஜ நரஸிம்ஹரின் வெண்கலச்சிலை உள்ளது. ஒருகை பிரஹ்லாதன் தலையைத் தொட்டும் மற்றொரு கை அபயஹஸ்தமாகவும் விளங்குகின்றன. மற்ற கைகள் ஹிரண்யவதம் செய்கின்றன. இந்த க்ஷேத்ரம் த்ருவனுக்கு ஸேவை தந்த அவஸரத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. கோலத்தில் இன்னும் சில சிறு அழகிய கோவில்கள் உள்ளன.
****
பாசுரங்கள்
திருமங்கையாழ்வார் அருளிய 10 பாசுரங்கள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ளன.இப்பதிகம் அச்சோப்பதிகம் என்று அழைக்கப்படுகிறது. பெருமாளின் அழகில் ஆழ்வார் மயங்கி, “அச்சோ, ஒருவன் அழகியவா!” என்று ஒவ்வொரு பாசுரத்திலும் வியந்து பாடியுள்ளார்.
நாலாயிர திவ்ய பிரபந்தம்– இரண்டாம் ஆயிரம்– திருமங்கை ஆழ்வார்– பெரிய திருமொழி– திருநாகை: அச்சோப்பதிகம்.
1757 பொன் இவர் மேனி மரகதத்தின்
பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்
மின் இவர் வாயில் நல் வேதம் ஓதும்
வேதியர் வானவர் ஆவர் தோழீ
என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி
ஏந்து இளங் கொங்கையும் நோககுகின்றார்
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்-
அச்சோ ஒருவர் அழகியவா (1)
1758 தோடு அவிழ் நீலம் மணம் கொடுக்கும்
சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த
சேடர்கொல் என்று தெரிக்கமாட்டேன்
செஞ் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி
பாடக மெல் அடியார் வணங்க
பல் மணி முத்தொடு இலங்கு சோதி
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்-
அச்சோ ஒருவர் அழகியவா (2)
1759 வேய் இருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த
மெய்ய மணாளர் இவ் வையம் எல்லாம்
தாயின நாயகர் ஆவர் தோழீ
தாமரைக் கண்கள் இருந்த ஆறு
சேய் இருங் குன்றம் திகழ்ந்தது ஒப்பச்
செவ்விய ஆகி மலர்ந்த சோதி
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்-
அச்சோ ஒருவர் அழகியவா (3)
1760 வம்பு அவிழும் துழாய் மாலை தோள்மேல்
கையன ஆழியும் சங்கும் ஏந்தி
நம்பர் நம் இல்லம் புகுந்து நின்றார்
நாகரிகர் பெரிதும் இளையர்
செம் பவளம் இவர் வாயின் வண்ணம்
தேவர் இவரது உருவம் சொலலில்
அம் பவளத் திரளேயும் ஒப்பர்-
அச்சோ ஒருவர் அழகியவா (4)
1761 கோழியும் கூடலும் கோயில் கொண்ட
கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர்
பண்டு இவர்-தம்மையும் கண்டறியோம்
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்
மா கடல் போன்று உளர் கையில் வெய்ய
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி-
அச்சோ ஒருவர் அழகியவா (5)
1762 வெம் சின வேழ மருப்பு ஒசித்த
வேந்தர்கொல்? ஏந்திழையார் மனத்தைத்
தஞ்சு உடையாளர்கொல்? யான் அறியேன்
தாமரைக் கண்கள் இருந்த ஆறு
கஞ்சனை அஞ்ச முன் கால் விசைத்த
காளையர் ஆவர் கண்டார் வணங்கும்
அஞ்சன மா மலையேயும் ஒப்பர்-
அச்சோ ஒருவர் அழகியவா (6)
1763 பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும்
பேர் அருளாளர்கொல்? யான் அறியேன்
பணியும் என் நெஞ்சம் இது என்கொல்? தோழீ
பண்டு இவர்-தம்மையும் கண்டறியோம்
அணி கெழு தாமரை அன்ன கண்ணும்
அம் கையும் பங்கயம் மேனி வானத்து
அணி கெழு மா முகிலேயும் ஒப்பர்-
அச்சோ ஒருவர் அழகியவா (7)
1764 மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட
மாலிருஞ்சோலை மணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்
நீர்மலையார்கொல்? நினைக்கமாட்டேன்
மஞ்சு உயர் பொன்மலைமேல் எழுந்த
மா முகில் போன்று உளர் வந்து காணீர்
அம் சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்-
அச்சோ ஒருவர் அழகியவா (8)
1765 எண் திசையும் எறி நீர்க் கடலும்
ஏழ் உலகும் உடனே விழுங்கி
மண்டி ஓர் ஆல் இலைப் பள்ளிகொள்ளும்
மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்
கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர்
கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும்
அண்டத்து அமரர் பணிய நின்றார்-
அச்சோ ஒருவர் அழகியவா (9)
1766 அன்னமும் கேழலும் மீனும் ஆய
ஆதியை நாகை அழகியாரை
கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன்
காமரு சீர்க் கலிகன்றி குன்றா
இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை
ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவர் ஆய் உலகு ஆண்டு மீண்டும்
வானவர் ஆய் மகிழ்வு எய்துவரே (10)
***
இங்கு புகழ்பெற்ற சிவன் கோவிலும் இருக்கிறது
அம்பாள் நீலாயதாட்சி இங்கு கருந்தடங்கண்ணி என்ற பெயரில் கன்னிப் பெண்ணாகக் காட்சி அளிக்கிறாள். ஆகையால் சுவாமிக்குப் பக்கத்தில் அமையாது தனியாகக் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள். அம்பாள் கோபுரம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், அம்மன் சந்நிதிக்கு எதிரில் உள்ள நந்தி சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு. சுற்றுச் சுவர்களில் புண்டரீக முனிவர் இங்கு இறைவனைப் பூஜித்து முக்தி அடைந்த கதை வண்ண ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறது.
மேலும் நாகாபரணப் பிள்ளையார், சுவாமி சந்நிதியின் முன் உள்ள மிகப் பெரிய சுதை நந்தி, ஒரே கல்லில் செய்யப்பட்ட ஆறுமுகக் கடவுள், பஞ்சமுக விநாயகர் உருவச்சிலை இந்த ஆலயத்தின் மற்ற சிறப்புகள் ஆகும்.
மேலும் இத்தலத்தில் தியாகராஜர் சந்நிதி உள்ளது. இவர் சுந்தரவிடங்கர் எனப்படுகிறார். 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் இத்தலத்தில் அவதரித்து முக்தியும் அடைந்தவர் அவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது. அதிபத்த நாயனார் தான் முதல் தடவை பிடிக்கும் மீன்களை பக்திப் பெருக்கோடு இறைவனுக்கு அர்ப்பணித்து பூஜித்து வந்தார். ஒரு முறை ஒரே ஒரு தங்க மீன் கொடுத்து அதிபத்த நாயனாரை சோதித்து திருவிளையாடல் செய்து அவரை இறைவன் ஆட்கொண்ட திருத்தலம் இதுவாகும்.
—subham—
Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-53; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், திரு நாகை, அம்பாள் நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி
எல்லோரும் அறிஞர்கள்! எல்லோரும் அரசியல் வல்லுநர்கள்! யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் “உண்மையாக்கலாம்” உண்மையைப் பொய் ஆக்கலாம்!
சோஷியல் மீடியாக்களில் எத்தனை மணி நேரம் வேஸ்ட்!
“இப்பதான் பிரதம மந்திரி என்னிடம் மட்டும் சொன்னாரு” என்று
டெல்லியிலிருந்து வரும் பொய்க்குரலைக் கேட்டு ஏமாந்தவர்கள் எத்தனை லட்சம்!
இப்படி ஏமாறுவதைத் தவிர்க்க வழி உண்டா?
2005ம் ஆண்டு பிலிப் டெட்லாக் என்பவர் “நிபுணர்களின் அரசியல் ஆரூடம்” என்று ஒரு ஆய்வை மேற்கொண்டார். இஷ்டத்திற்கு “அள்ளி விடுபவர்களைப்” பற்றிய ஆய்வு இது.
எதிர்காலத்தைப் பற்றி இந்த நிபுணர்களின் ஆரூடமும் கணிப்பும் உண்மை தானா, நம்பலாமா என்பதே அவரது ஆய்வின் அடிப்படைக் கேள்வி.
ஆச்சரியகரமான பதில் வந்தது.
உண்மை இல்லை!
284 அரசியல் நிபுணர்களிடமிருந்து அவர் 28000 அரசியல் கணிப்புகளை எடுத்து அலசி ஆராய்ந்தார்.
முடிவைக் கண்டவுடன் அவர் திகைத்தே போனார்.
கூக்குரலிட்டு கத்தி ‘நாளையே உலகம் பாழாய் போகப் போகிறது, இவர் தோற்கப் போகிறார் அவர் ஜெயிப்பார்’ என்ற கணிப்புகள் எல்லாம் பொய்யாய்ப் போயின.
மிகச் சில கணிப்புகளே அதிர்ஷ்டவசமாக உண்மை ஆயின.
எதைப் பற்றிய கணிப்பை வெளியிடும் அறிஞராக இருந்தாலும் அவர் இந்த அடிப்படை அம்சங்களைக் கொண்டிருக்கிறாரா என்று பாருங்கள் என்கிறார் பிலிப்..
கணிப்பை நம்பரில் சொல்லுங்கள்.
இ’ந்தக் கட்சி பெரும்பான்மையாக ஆகும். அது தேறவே தேறாது’ என்று அடித்துச் சொல்பவர்கள் போலி கணிப்பாளர்கள். இவர் 150 இடங்களை பெறுவார் அவர் 30 இடங்களையே பெறுவார் என்று ஒருவர் சொல்லும் போது உண்மையான கணிப்பாளர் சற்று அடிப்படை வேலைகளைச் செய்தே ஆக வேண்டும். களத்திற்குச் சென்று அவர்கள் நிலவரத்தை ஆராய்ந்த பின்னரே நம்பரைச் சொல்வார். இதையும் மீறி இரண்டு சீட்டுகளே வாங்குவார் என்று சொல்லும் போலி அறிவாளி ஒருவர், எதிராளி 108 இடங்களை வாங்கி விட்டால்
முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்?
அவர் ஒரு போலி என்பதை முத்திரை குத்தித் தெரிந்து கொள்ளலாம். அவர் சொல்வதை இனி யாராவது கேட்பார்களா?
கேள்வியைச் சுருக்கி குறிப்பாகக் கேளுங்கள்.
தினசரி உடற்பயிற்சி செய்தால் நான் கட்டமைப்பான உடலைப் பெறுவேனா என்று கேட்கக் கூடாது.இன்றிலிருந்து தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சியை நான்கு வாரங்கள் செய்தால் என் எடை எவ்வளவு குறையும் என்று குறிப்பாகக் கேளுங்கள்.முதல் கேள்விக்கான பதிலை ”அளக்க” முடியாது. இரண்டாம் கேள்விக்கான பதிலை அளக்க முடியும். தவறாக இருப்பின் அடுத்து என்ன செய்யலாம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இது உதவும்.
உண்மைக்கான அடிப்படை விகிதத்தைக் கேளுங்கள். ‘இது போல எப்போது யாருக்கெல்லாம் நடந்தது. அதன் பலன் அல்லது விளைவு என்ன’ என்று கேளுங்கள். இது உண்மையின் அடிப்படையை ஆராயும் கேள்வி. இப்போது சூழ்நிலை மாறி இருக்கிறதா, அதே போலத் தான் இன்றும் சகல அம்சங்களும் உள்ளனவா என்பனவற்றைக்
கேட்டால் கணிப்பு தவறாகப் போனாலும் அடிப்படையைப் பற்றிப் புரிந்து கொள்ளலாம்.
ஃபெர்மி வழியைக் கடைப்பிடியுங்கள். பிரபல விஞ்ஞானியான என்ரிகோ ஃபெர்மி கண்டுபிடித்து கடைப்பிடித்த வழி இது. ஒரு
பிரச்சனையை ஏழு எட்டு துண்டுகளாகப் பிரித்து உண்மையை அறிவது
தான் இந்த வழி உதாரணமாக இந்த வேலையை நள்ளிரவுக்குள்
முடிப்பேனா என்று கேட்காதீர்கள். இரவு 9 மணிக்கு எத்தனை பக்கம்
முடிப்பேன். அதற்கு அப்புறம் எவ்வளவு முடிக்க வேண்டி இருக்கிறது. இதில் என் வேகம் அல்லது ஆற்றல் என்ன என்று பல சிறு துண்டுகளாக பிரச்சினையை ஆக்கி விடை என்ன என்பதைப் பற்றி யோசித்தால் பதில் – உண்மையான பதில் -கிடைக்கும்.
இப்படித்தான் ஆரூடக் கணிப்புகளைச் செய்வோரையும் அலசி ஆராய வேண்டும். காசுக்காக சோஷியல் மீடியாக்களில் ஆரூடம் சொல்பவர்களைக் கேட்டுக் கொண்டே இருந்தால் நமது மூளையும் பாதிக்கப்படும்; நமது பொன்னான நேரமும் வீணாகும். அவர்களின் கணிப்புகளுக்கான பலிக்கடாக்களில் நாமும் ஒரு எண்ணிக்கையைக் கூட்டுவோம்.
இந்த நான்கு அம்ச வழிமுறையை பிலிப் சொல்கிறார்; கேட்டுப் பலனை அனுபவிப்போமே!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
The Pratasmaranam consists of some verses that are to be recited in the morning soon after waking up from the bed. प्रातः = at dawn, and
स्मरणम् = remembering.
There are many versions of this poem containing less number of verses or more. One well known version is that of Sri Sankaracharya and this consists of just four verses. These verses are highly significant as
they contain thoughts about the godhead residing within us.
When I was in India until December 1986, I ued to attend RSS shaka every morning in Madurai Simmakkal Shaka (Simmakkal Branch). There we used to recite the updated version of old Pratasmaran. RSS authorities included Tiru Valluvar, Rajendra Choza, Orissa Jain King Kharavela etc.
Now in London I recite only the first sloka every morning: Karagre Vasate Lakshmi………………
The wonder is in this morning prayer the Indian rivers, mountains,heroes, famous women, kings, saints, poets, Gods, Goddesses etc are included. When children are taught this, they will learn little by little about all in the Slokas. This is vey unique in Hinduism. You teach Religion, Geography, History, Sacred places and our location in the universe.
Though the full updated RSS version I recited in those days was very long taking 20 minutes, here below is a short version taken from Sanskrit documents.org
॥ प्रातःस्मरणम् ॥
कराग्रे वसते लक्ष्मीः करमध्ये सरस्वती ।
करमूले तु गौरी च प्रभाते करदर्शनम् ॥ १॥
Meaning:- Laksmi ( the goddess of wealth) resides in the upper part of hands, Sarasvati (the goddess of learning) resides in the middle, and Gauri (the goddess of valour) in the lower part. Therefore, every
morning one should respectfully have a look at one’s hands.
(In some versions Gauri is replaced by Govindah)
***
Big Salute to Earth!
Hindus are great environmentalists. Even when they dig earth for wells or ploughing, they first apologise for hurting or changing the environment. This feeling will make anyone to use anything carefully with minimum wastage. In Tamil there is a proverb about using water with respect/appreciation. In Sanskrit there are Vedic mantras praising water.
समुद्रवसने देवी पर्वतस्तनमण्डले ।
विष्णुपत्नि नमस्तुभ्यं पादस्पर्शं क्षमस्व मे ॥ २॥
Meaning:- O Devi! You are wearing the ocean as a clothing on your body. The mountains are your breasts! O Consort of Visnu! I salute you and beg your pardon for having to set foot on your body for my routine activities.
***
नमोऽस्तु प्रियदत्तायै तुभ्यं देवि वसुन्धरे ।
त्वं माता सर्वलोकानां पादन्यासं क्षमस्व मे ॥ ३॥
Meaning:- O Devi! I salute you and beg your pardon for having to set foot on your body for my routine activities. You are the giver of all that is dear to us. You are the mother and repository of all wealth.
***
Hindu Belief in Astrology; Salute to Nine Heavenly Bodies!
Meaning:- Brahma (the Creator), Murari (Visnu), Tripurantakari (Siva, the slayer of Tripuras), the nine planets, Sun, the Moon, Mars the son of Bhumi, Budha (Mercury), Brihaspati (Jupiter), Sukra (Venus), Sani (Saturn), Rahu and Ketu; may all these make the morning auspicious for me.
***
About Music, About Universe!
सनत्कुमारः सनकः सनन्दनः सनातनो-ऽप्यासुरि-पिङ्गलौ च ।
Meaning:- Sanatkumara, Sanaka, Sanadana and Sanatana ( whom Brahma, the creator, begot by wish); Rsi Asuri ( a disciple of Rsi Kapila, the founder of the Samkhya system of philosophy), Rsi Pingala ( the author of Hindu Prosody); the Seven Svaras (tones) (i.e. Shadja, Rsabha, Gandhara, Madhyam, Panchama, Dhaivata and Nisada); and the seven nether-worlds
(Atala, Vitala, Sutala, Talatala, Rasatala, Mahatala and Patala) —may all these make the morning auspicious for me !
***
Blow to Idiots (actors and actresses)
Now and then we read in newspapers about the bluffing of idiots (mostly from film stars) who believed that British united India. But the rivers, mountains, sacred cities we recite every day show Hindus know the Akhanda Bharath. Many reciters are children or illiterate or neo literates!
Meaning:- The seven oceans ( Lavanabdhi, Iksu, Suravarpa, Ajay, Dadhi, Ksira and Svadu-jala); the seven mountains (Mahendra, Malaya, Sahydri, Suktiman, Rkasavan, Vindhya and Pariyatra): the seven Rsis (Kasyapa,Atri, Bharadvaja, Visvamitra, Gautama, Jamadagni and Vasishta): the seven dvipas ( Continents) (i.e. Jambu, Plaksa, Salmala, Kusa, Kroncha, Saka and Puskara): the seven vanas (forests) ( i.e. Dandakaranya, Khandaranya, hampakaranya, Vedaranya, Naimisaranya, Brahmaranys and Dharmaranya); and the seven bhuvanas (heavens) (i.e.) Bhuh, Bhuvah, Svah, Mahah, Janah, Traph and Satyam) —may all these make the morning auspicious for me
***
पृथ्वी सगन्धा सरसास्तथापः स्पर्शी च वायुर्ज्वलनं च तेजः ।
Meaning:- The Earth with its quality of smell , Water with its quality of taste, Air with its quality of touch, Fire with its quality of teja (glow), Akasa (space) with its quality of sabda (sound)—- may all these elements along with the element of Buddhi (intellect) make my morning auspicious for me !
(This is in 2000 year old Tamil Literature as well)
***
Mountains
महेन्द्रो मलयः सह्यो देवतात्मा हिमालयः ।
ध्येयो रैवतको विन्ध्यो गिरिश्चारावलि-स्तथा ॥ ८॥
***
Rivers
गङ्गा सिन्धुश्च कावेरी यमुना च सरस्वती ।
रेवा महानदी गोदा ब्रह्मपुत्रा पुनातु मम् ॥ ९॥
Himalaya, Ganga are mentioned in 2300 year old Sangam Tamil literature.
Who in the world gave this much importance and respect to women? Only Hindus can show Gargi and Maitreyi from Vedic literature.
अरुन्धत्यनुसूया च सावित्री जानकी सती ।
तेजस्विनीइ च पाञ्चाली वन्दनीया निरन्तरम् ॥ १२॥
Arundhati, Sita and others are mentioned in Ancient Tamil verses.
वैन्यं पृथुं हैहयमर्जुनं च
शाकुन्तलेयं भरतं नलं च ।
रामं च यो वै स्मरति प्रभाते
तस्यार्थलभो विजयश्च हस्ते ॥ १३॥
***
Great Puranic Men
दध्यङ् मनुर्भृगुरसौ हरिपूर्वचन्द्रो
भीष्मार्जुन-ध्रुव-वशिष्ट-शुकादयश्च ।
प्रह्लाद-नारद-भगीरथ-विश्वकर्म-
वाल्मीकयोत्र चिरचिन्त्यशुभाभिधानाः ॥ १४॥
***
Seven People with Eternal Life! (meaning is ever remembered)
अश्वत्थामा बलिर्व्यासो हनूमांश्च विभीषणः ।
कृपः परशुरामश्च सप्तैते चिरजीविनः ॥ १५॥
सप्तैतान् संस्मरेन्नित्यं मार्कण्डेयमथाष्टमम् ।
जीवेत् वर्षशतं साग्रमपमृत्युविवर्जितः ॥ १६॥
***
Great People who succeeded after a long period of suffering!
पुण्यश्लोको नलो राजा पुण्यश्लोको युधिष्ठिरः ।
पुण्यश्लोको विदेहश्च पुण्यश्लोको जनार्दनः ॥ १७॥
***
Great Women from Epics and Puranas
अहल्या द्रौपदी कुन्ती तारा मन्दोदरी तथा ।पञ्चकन्याः स्मरेन्नित्यं महापातकनाशनम् ॥Ahalya Draupadi Kunti Tara Mandodari tathaPanchakanya smaren nityam mahapataka-nashanamMeaning and Translation”One who daily remembers the five maidens—Ahalya, Draupadi, Kunti, Tara, and Mandodari—is freed from even the greatest of sins.”The Five Revered WomenThese women are celebrated for their resilience, immense wisdom, and moral courage in the face of extraordinary adversity:Ahalya: Praised for her incredible patience, endurance, and ability to begin anew.Draupadi: Known for her fierce courage and her refusal to silently accept injustice.Kunti: Symbolizes sacrifice, immense maternal strength, and resilience.Tara: Revered for her sharp political intelligence and wisdom.Mandodari: Represents righteousness and unwavering wisdom, even in the midst of a corrupt kingdom.
This is only a short version; there are longer versions with regional variations. The very concept is unique to Hinduism.
When you remember 100+++ good things you day will bring you 1000+++ good things!