Tirukkural Encyclopaedia- Chapter 19 (Kural 181-190) -Post 16,066

Written by London Swaminathan

Post No. 16,066

Date uploaded in London – 8 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx    

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

2.S M Diaz, I G of Police- SMD Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

7.Tamil Original

****

From now onwards all the ten Kurals are given in one part

 

PART 37 Refraining from Back-Biting புறங்கூறாமை – Against slander, 1.2.15 Not Backbiting

 

181.Behold the man who is guilty of every other evil and knows not righteousness. It were well, if it be said of him that he back-bites not— ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

***

181.A man may speak evil and do evil, but if it is said

Of him he does not slander it is great — S M Diaz, I G of Police- SMD, Year 2000

***

181
Though virtuous words his lips speak not, and all his deeds are ill.
If neighbour he defame not, there’s good within him still.
Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him “he does not backbite.” –Rev.Dr.GU Pope – GUP. Year 1886

***

181.Though a man from virtue strays,
To keep from slander brings him praise.         Suddhananda Bharathiyar- SB

***

181.A man may act unrighteously, and not even make mention of virtue, but if he would refrain from slander behind others back it would be creditable to him — EVS Publishers, Singapore- EVS, Year 1986

***
181. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

182.More hideous than the heart of a sinner is the deceitful smile of a slanderer— ANM+2

***

182.To be unrighteous and do evil is bad, but to indulge in slander

Behind a false smile, is worse—– SMD

***

182
Than he who virtue scorns, and evil deeds performs, more vile,
Is he that slanders friend, then meets him with false smile.
To smile deceitfully (in another’s presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue. – GUP
***
182.Who bite behind, and before smile
Are worse than open traitors vile –SB

***

182.Greeting a friend with false smile, but speaking ill of him behind his back, is conduct more despicable than denouncing righteousness  and doing evil– EVS

***

182.It is sin to murder virtue and do vicious deeds;

But greater sin is to smile deceitfully and slander men– HAP (not full book; only selected couplets) Year 1931

***

182. அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை

***

183.Prefer death to a life of deceit and slander; it is the only course open unto you for the welfare of your soul- ANM+2

***

183.It is better to die in virtue than live

A life of slander, under false pretences—– SMD

***

183
‘Tis greater gain of virtuous good for man to die,
Than live to slander absent friend, and falsely praise when nigh.
Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out. – GUP
***

183.Virtue thinks it better to die,
Than live to backbite and to lie—SB

***

183.Death after a virtuous life is preferrable to a life sustained by lies and slander— EVS

***
183. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

184. Talk your bitterest to one’s face, but back-bites not; for slander is the source of all evils— ANM+2

***

184.Whatever evil is said in a man’s presence is not so reprehensible

As that which is said behind his back—– SMD

***

184
In presence though unkindly words you speak, say not
In absence words whose ill result exceeds your thought.
Though you speak without kindness before another’s face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it. – GUP
***

184.Though harsh you speak in one’s presence
Abuse is worse in his absence—SB

***

184.You may utter harsh words in one’s presence; but do not slander in one’s absence— EVS

***
184. கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

185.Backbiting betrays the littleness of a sweet- tongued slanderer— ANM+2

***

185.An insincere heart, that rants virtue, will be exposed

In no time, by its indulgence in slander–– SMD

***

185
The slanderous meanness that an absent friend defames,
‘This man in words owns virtue, not in heart,’ proclaims.
The emptiness of that man’s mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back.
– GUP

***
185.Who turns to slander makes it plain
His praise of virtue is in vain—SB

***

185. The insincerity of one who extols virtue only in word is revealed by one’s meanness of slandering others— EVS

***

185.The emptiness of that man’s heart, who Virtue prates,

Is shown by his foul slander, made behind another’s back– HAP

***

185. அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்

XXXXXXXXXXXXXXXXXXXXX

186.Beware of slandering less the worst of your faults should be exposed to the scorn of the world— ANM+2

***

186.It is well for the slanderer, before he dwells on other’s faults

To realise his own select sins too, provide matter for slander- – SMD

***

186
Who on his neighbours’ sins delights to dwell,
The story of his sins, culled out with care, the world will tell.
The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published. – GUP

***
186.His failings will be found and shown,
Who makes another’s failings known—SB

***

186.The man who slanders another  at his back is liable to the exposure of the worst of his misdeeds – EVS

***
186. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்

XXXXXXXXXXXXXXXXXXXXXX

187.Behold the vile slanderer who sows the seeds of discord among men; he knows not the sweet joys of friendship— ANM+2

***

187.Those who cannot foster friendships with a smiling word

Will slander away even kinsmen to separation—– SMD

***

187
With friendly art who know not pleasant words to say,
Speak words that sever hearts, and drive choice friends away.
Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives. – GUP

***
187.By pleasing words who make not friends
Sever their hearts by hostile trends—SB

***

187.Those who know not how to win friends with pleasant words will, through slander, drive away near and dear ones— EVS

***

187. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்

XXXXXXXXXXXXXXXXXXXXXX

188.Will a slanderer that proclaims to the world the faults of his kith and kin ever spare the enemy? ANM+2

***

188. The tribe that broadcasts the faults of their near and dear ones

Will surely not hesitate to slander strangers—– SMD

***

188
Whose nature bids them faults of closest friends proclaim
What mercy will they show to other men’s good name?
What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ? – GUP

***

188.What will they not to strangers do
Who bring their friends’ defects to view?         –SB

***

188.Those who are disposed to expose    the faults of even their kinsfolk will not refrain from slandering others— EVS

***

188. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

189.Is it out of infinite grace that mother earth bears on her bosom the weight of a slanderer?— ANM+2

***

189.The very fact that the earth is bearing the load

Of a vile slanderer, is its greatest virtue—– SMD

***

189
‘Tis charity, I ween, that makes the earth sustain their load.
Who, neighbours’ absence watching, tales or slander tell abroad.
The world through charity supports the weight of those who reproach others observing their absence. – GUP

***
189.The world in mercy bears his load
Who rants behind words untoward         –SB

***

189.Even the Earth groans under the weight of the man who slanders others at their back— EVS

***

189.Surely for Virtue’s sake alone doth earth bear up the weight

Of men who foully slander fellow-men behind their –-HAP

***

189. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.

***

190. Do ever evils befall a heart that judges not lest it should be judged? ANM+2

***

190.If people scrutinise their own faults as they do the faults of others,

#mankind will be freed of all evil–– SMD

***

190
If each his own, as neighbours’ faults would scan,
Could any evil hap to living man?
If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ? – GUP

***

190.No harm would fall to any man
If each his own defect could scan.         –SB

***

190.If a man can look upon other’s faults as his own what evil can befall him— EVS

***

190.If each one saw his faults, as those of foes,

Would any ill befall the human race?– HAP

***

190
190. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

To be continued……………………….

Tags- Tirukkural Encyclopaedia, Chapter 19, (Kural 181-190) ,PART 37, Refraining from Back-Bitin,g புறங்கூறாமை – Against slander, Not Backbiting

பிரகலாதனின் உபதேசம்! – 2 (Post No.16,065)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,065

Date uploaded in London – 8 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பிரகலாதனின் உபதேசம்! – 2 

ச. நாகராஜன் 

சர்வதேசங்களிலும், சர்வகாலங்களிலும் மூன்று வகையான தாபங்களால் மன வருத்தமுற்றிருந்தும் குடும்பத்தில் மனம் தாழ்ந்து சம்சாரத்தில் யாருக்கும் வெறுப்பு உண்டாவதில்லை.

பரதிரவ்யத்தைப் பறிக்கும் புருஷனுக்குப் பரலோகத்தில் வரும் நரகானுபவ தோஷமான தோஷத்தையும் இகலோகத்தில் ராஜதண்டனை உள்ளிட்ட ரூபமான தோஷத்தையும் அறிந்தவன் என்றாலும் கணம்தோறும் பணத்தில் பேராசை கொண்டு இந்திரியங்களை ஜெயிக்காமையால் காமம் அடங்கப் பெறாமல் பெரும் குடும்பியாகி மற்றவர் சொத்தையும் பறிக்கிறான்.

 ஓ, மகன்களே! இப்படியாக சம்சாரத்தின் தோஷத்தை அறிந்தும் குடும்பத்தை போஷிக்க முயன்று ஆத்ம ஸ்வரூபத்தை ஆராயாமல். ‘இது நம்முடையது, இது பிறருடையது’ என்னும் பேத புத்தியை பாராட்டிக் கொண்டிருப்பவன் நரகத்தையே அடைவான்.

 ப்ரக்ருதி, புருஷ, ஈஸ்வரர்களின் உண்மையை அறிந்தவன் தான் என்றாலும் தனது பிறருடையது என்னும் பேதம் நீங்காமல் குடும்பத்தையே போஷிப்பதால் ஒன்றும் தெரியாத மூடனாக நரகத்தையே அடைவான். முக்தியைப் பெற மாட்டான். 

அறிந்தவன் கதியே இது என்றால் அறியாதவன் கதியைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

 எவனேனும் இல்லறவாழ்க்கையில் பற்று கொண்டிருப்பானென்றால் அவன் சப்தாதி விஷயங்களில் மிகவும் விருப்பம் கொண்டு மனக் களிப்பற்று கண்ணழகிகளான மங்கையருக்கு விளையாட்டு மிருகம் போல இருந்து மென்மேலும் சம்சார பந்தம் நீங்கப் பெறாமல்  வருந்துவானே தவிர, எக்காலத்திலும் எவ்விடத்திலும் தன்னை விடுவித்துக் கொள்ள வல்லவனாக மாட்டான்.

 ஓ, குமாரர்களே! ஆகையால் அஸத்துகளின் தொடர்பைத் துறந்து சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்னும் விளையாடலைப் செய்யப் பெற்றவனும் தன் தேஜஸினால் திகழ்பவனும் ஶ்ரீ நாராயணன் என்னும் பெயர் பெற்றவனுமான பகவானைச் சரண் அடைவீர்களாக!

 பற்றற்றவர்கள் அந்த பரம புருஷனையே பரம புருஷார்த்தமான முக்திக்குக் காரணம் என்று சொல்லுகிறார்கள். தன்னை அடைந்தவர்களைக் கைவிடாத அந்த பரம புருஷனை வழிபடுபவர்களுக்கு அதிக வருத்தம் வராது.  அவன் எல்லா பிராணிகளுக்கும் அந்தராத்மாவாகவும் உங்கள் இதயத்திலும் நிறைந்திருக்கிறான். நீங்கள் அவனைத் தேடிப் போக வேண்டிய அவசியமில்லை. சுவர்க்கம் போன்ற பலன்களைப் போல அவனை நாம் சாதிக்க வேண்டியதில்லை. அனைவருக்கும் அவன் தானாகவே சித்தமாக இருக்கிறான். அவன் இதயத்தில் இருப்பதை அறிந்தால் மட்டும் போதும்.

அவன் அனைத்திலும் சேதனங்களையும் அசேதனங்களையும்  சரீரமாகக் கொண்டு இருக்கிறான்.

ஜீவாத்மாக்களை அவரவர் கர்மத்திற்குத் தக அவன் நியமிப்பவன்.

இது என்று நிரூபிக்க முடியாதவன்.

ஜாதி, குணம் ஆகியவை அற்றவன்.

தன்னைத் தவிர இன்னொரு ஈஸ்வரன் இல்லாதவன்.

தன் மாயையால் லோகத்தில் வாழ்பவர்களுக்கு அறிய முடியாதவன்.

சதாசார்யர்களுடைய உபதேசத்தினால் அறியத் தகுந்தவன்.

இப்படி அவனை அறிந்து பணிவார்களேயானால் அவன் அவர்களிடத்தில் அன்பு பாராட்டுவான்.

ஆகையால் பிராணிகளுக்கு துரோஹம் செய்யும் உங்கள் அசுர சுபாவத்தை விட்டு விட்டு எல்லா பிராணிகளிடமும் அவற்றின் மேன்மை, தாழ்வுக்குத் தக தயையும் சினேகத்தையும் செய்வீர்களாக.

அதனால் பரம புருஷன் சந்தோஷம் அடைவான்.

பிறகு எதுதான் அடைய முடியாதது?

நமது ஆசார்யர்கள் கூறும் தர்க்க வித்யா, வேதத்தின் பூர்வபாகம், நீதி சாஸ்திரம், தண்ட சாஸ்திரம் க்ருஷி முதலான ஜீவன்களை அறிவிக்கும் சாஸ்திரம் ஆகியவை எனக்குத் தெரியும்.

என்றாலும் பரமபுருஷனின் பாதாரவிந்தங்களில் ஆத்ம சமர்ப்பணம் செய்வதே வேதாந்தம் கூறும் பொருள்.

அதுவே அழிவில்லாத புருஷார்த்தம் என்று நான் நினைக்கிறேன்.

இந்த ஞானத்தை நான் நாரதரிடம் கேட்டேன்.

இதுவே பாகவதம் என்று கூறப்படுகிறது. இது பரிசுத்தமானது. 

இவ்வாறு பிரகலாதன் தன் பிள்ளைகளுக்கு உபதேசிக்கிறார். 

ஶ்ரீமத் பாகவதம் ஏழாம் ஸர்க்கம்

** முற்றும்

Different Types of Tamil Swearing! Purananuru wonders-50, One Thousand Interesting Facts – Part 90 (Post No.16,064)

Written by London Swaminathan

Post No. 16,064

Date uploaded in London – 7 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru wonders-50, Tamil Encyclopedia-90 , One Thousand Interesting Facts – Part 90

Item 736 Himalayas = Tirupparankundram hills!

Paripatal verse 8 on Lord Muruga/Skanda have very interesting details.

Himalayas = Tirupparankundram hills .

Himalayas is 1500 miles long and the highest mountain in the world .

Tirupparamkundram (TPK) is scaled even by London swaminathan , author of this article, many time; when we were school students our hobby is to go to Tirupparamkundram and Alagarkoil , abode of Vishnu and Lord Muruga/Skanda.

Then how come the poet compared it with the great Himalayas?

He says 33 Vedic gods, ashta dik palas, demons and sages came here to worship Lord Muruga/Skanda. So it is equal to Himalayas (the implication is all these people worshipped Siva and Skanda there also)

33 Vedic gods = 8 Vasus+ 11Rudras+12 Adityas+2 Asvin Twins

***

Item 737

Another interesting detail:

The bees, the beetles and other insects raised music like Five Hole Flute, Seven Hole Flute and Lyre.

One more musical note: TPK drums competed with Madurai Drums.

Those drum sounds were heard like roaring seas, Indra’s Thunder etc.

***

Item 738 Different types of swearing

A heated argument is narrated between the hero, heroine and her companion. He was accused of visiting a courtesan. But he denied it and said he can swear and show he is honest

Types of swearing recounted in the poem:

Swearing by touching sands of Vaigai river;

Swearing by touching the feet of Brahmins;

Swearing in the name of Lord Skanda=Muruga, his Vel/spear, his wife Valli, his vehicle Peacock.

These swearing types show all these were considered equally holy!

***

Item 739 wife compromised and prayed for him

All courtesan visiting husbands are accepted by their wives and they pray for him; never locked out or turned back! Here also she prayed for him by ringing the bell though he came back from the house of a courtesan. Tamil women considered husbands as Gods as we find in Tirukkural ; the Tamil saying is Kaallananum Kanavan- Pullaannalum Purushan= Even if he is a stone, even if he is a grass, HE is GOD!

This is a popular Hindu belief seen in North as well ; we see Sita, Savitri, Damayanti , Draupadi etc supporting their husbands and shared their sufferings.

Kanavane Kan kanda Deivam (Husband indeed is the visible God)  is a popular old Tamil film.

( I was working for a charity in London. A Sri Lankan Tamil woman and her educated daughter came and reported the troubles given by the drunkard husband; I gave them several options including a referral to social service or police. She declined all those options saying she can’t act against her own husband; after coming to meet us a few times, they stopped coming; and the daughter is a BA English literature student! )

***

Item 740  What did Tamils pray for?

A very interesting list of prayer demands is given in this 2000 year old poem:

They prayed for fresh floods in Vaigai River;

Prayed for becoming pregnant;

Prayed for their husbands getting wealth;

Prayed for victory in the war (so patriotic!); like our English foot ballers!

***

Item 741  

This is composed by Nallanthuvan, a poet praised by Maruthan Ilanagan of Purananuru.

That shows Paripatal also is equally old.

We have a few references to Double headed bird; if one makes false swearing or promise, wife will die; Siva as Arudra star God; also the  custom of Tamils swearing by touching a cow or a brahmin or a woman.

Another point to be noted are the poets’ names :

Nal + Anthuvan; Nal+ Achyuthan ; like Sanskrit Su prefix, Tamils used Nal prefix. Both meant same (good)

To be continued…………………..

Tags- Purananuru wonders-50, Tamil Encyclopedia-90, One Thousand Interesting Facts – Part 90, item 741

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 94; இந்து மத கலைச்சொல் அகராதி-94 (Post.16,063)

Written by London Swaminathan

Post No. 16,063

Date uploaded in London – 7 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சப்த ரிஷி

ஏழு ரிஷி முனிவர்கள் என்று பொருள் ; மனித இனத்தின் மூல புருஷர்கள் இவர்கள் ; இந்துக்கள் அனைவரும் , அவர்கள்வழியாக உலக மக்கள் அனைவரும், இவர்களின் வழிவந்தவர்கள் என்று கருதலாம் . அவர்களைக் கெளரவிக்கும் வகையில் வானத்தில் துருவ நட்சத்திரத்தைக் காட்டும், பட்டம் பறப்பது போன்ற வடிவத்தை உடைய, ஏழு நட்ச்சத்திரங்களை இந்தப்பெயர் கொண்டு இந்துக்கள் அழைத்தனர் .

ஏழு ரிஷிகள் பற்றி இரண்டு முக்கிய விஷயங்கள் :

தமிழர்கள் 2000 ஆண்டுகளாக இவர்களை வழிபட்டு வருகின்றனர் நற்றிணைப்பாடலில் (231) இந்தச் செய்தி உள்ளது . அந்த ஏழு முனிவர்களில் வசிஷ்டர் என்னும் முனிவரைச் சுற்றிவரும் அருந்ததியையும் தமிழர்கள் சங்க காலம் முதல் வழிபட்டு வருகின்றனர் ; அருந்ததி, வடமீன் , சாலினி என்ற பெயர்களில் சங்கப்பாடல்களில் அவள் இடம்பெறுவதோடு திருமண நாளன்று இரவில் அருந்ததிகாட்டல் என்ற  நிகழ்ச்சியும் இன்றுவரை உள்ளது.

மை அற விளங்கிய மணி நிற விசும்பில்

கைதொழும் மரபின் எழு மீன் போல,

பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய,

சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும்

துறை புலம்பு உடைத்தே தோழி! பண்டும்,  5

உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன,

பெரும் போது அவிழ்ந்த கருந் தாட் புன்னைக்

கானல்அம் கொண்கன் தந்த

காதல் நம்மொடு நீங்காமாறே.—- நற்றிணை-231

பிராமணர்கள் தினமும் மூன்றுமுறை செய்யும் சந்தியாவந்தன கிரியையில் இவர்களுடைய பெயர்களை சொல்லி பின்னர் காயத்ரீ ஜபம் செய்கிறார்கள் .

அந்த ஏழு முனிவர்கள்

அத்ரி, பிருகு, குத்ச, வசிஷ்ட. கெளதம, காஸ்யப, ஆங்கீரஸ– என்பதாகும் .

இவர்களில் இரண்டு நட்ஷத்திரங்களிலிருந்து ஒரு நேர்கோடு கிழித்தால் துருவ நடசத்திரம் தெரியும் .

இதே வரிசையில் ஏழு ரிஷிகளையும் பாணினி, தான் எழுதிய உலகத்தின் முதல் இலக்கண நூலான அஷ்டாத்யாயியில் குறிப்பதால் 2700 ஆண்டுகளாக இவர்கள் புகழ் கொடிகட்டிப்பறந்து வருவது புலனாகிறது .

இந்த சப்த ரிஷிகள் பற்றிய இன்னும் சில அதிசய விஷயங்கள் :

இந்துக்கள் பூமியின் வடபகுதியில் தான் முதல் முதலில் வாழ்ந்தார்கள் ; பின்னர்தான் தென்பகுதிக்குப் போனார்கள் என்பதாகும்; ஏனெனில் சப்த ரிஷிக்களை பூமியின் வட பகுதியில் வாழ்வோர் மட்டுமே காண முடியும் ; பின்னர் தென் பகுதிக்குப் போனதால் தென் பகுதியில் மட்டும் தெரியக்கூடிய விண்மீன் கூட்டத்துக்கு திரிசங்கு (Southern Cross) என்ற மன்னன் பெயரை இட்டார்கள் ; இதே போல பரிபாடல் குறிப்பிடும் அகஸ்திய (Canopus) நடசத்திரமும் தென் பகுதியை ஒட்டி உள்ளது .

அத்ரி மகரிஷி பெயரில் ஏட்ரியாட்டிக் கடலும்  , காஸ்யப மகரிஷி பெயரில் காஸ்பியன் கடலும் , கபிலாண்ராய  என்ற பெயரில் கலிபோர்னியாவும் இருப்பதை நாம் அறிவோம் . அட்லான்டிக் மஹா சமுத்திரம் என்ற பெயரில் அதல விதால பாதாள லோகம் இருப்பதையும் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் . இவற்றில் கபில முனிவர் பெயரில் கலிபோர்னியா வந்ததை காஞ்சி மஹா சுவாமிகள் சுட்டிக்காட்டியுள்ளார் அதை ருசுப்பிக்கும் வகையில் ஆஷ் ஐலண்ட், ஹார்ஸ் ஐலண்ட் (CALIFORNIA =  KAPILA ARANYA; ASH ISLAND, HORSE ISLAND ) இருப்பதையும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார் இதை 10, 15  ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய கட்டுரையில் விளக்கமாக எழுதியுள்ளேன்

சப்த ரிஷி நட்சத்திரக்கூட்டத்தை URSA MAJOR உர்சா மேஜர் = பெருங்கரடி என்று மேலை நாட்டினர் அழைத்தனர் உர்சா என்றால் கரடி என்று அவர்கள சொல்வர். ஆனால் இது மகா (மேஜர்) ரிஷி = ருக்/ ஷ / உற்சா என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் திரிபே !

மஹாருஷாய = உற்சா மஹா.

 அதைவிட அதிசய விஷயம் திருக்குறளில்(850) உள்ளது:

 உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப் படும். –850

இதில் வரும் அலகை என்பதற்கு பேய் என்று பொருள்;

சங்க இலக்கியத்தில் வேறு மூன்று இடங்களில் வந்தாலும் வேறு பொருள் தரப்படுகிறது ; இதை அல்கால் என்று அராபியர் சொல்கிறார்கள் 

Algol primarily means the Demon Star (an eclipsing binary star in Perseus) or an early computer programming language. [12]

  • The Demon Star: Named from the Arabic phrase al-ghūl (the ghoul or demon).

Ursa Major is the Mizar and Alcor pair, located at the middle star in the handle of the Big Dipper. Known historically as the “horse and rider,” these two stars are easily spotted with the naked eye and sit approximately 83 light-years away from Earth. Naked-Eye Visibility: Mizar shines at magnitude 2.2 and Alcor at magnitude 3.9, making them distinct for people with normal vision.

The most famous double star in Ursa Major is the Mizar and Alcor pair, located at the middle star in the handle of the Big Dipper. Known historically as the “horse and rider,” these two stars are easily spotted with the naked eye and sit approximately 83 light-years away from Earth. [123]

  • Location: Second star from the end of the Big Dipper’s handle (Mizar is Zeta Ursae Majoris; Alcor is 80 Ursae Majoris). [12]
  • Naked-Eye Visibility: Mizar shines at magnitude 2.2 and Alcor at magnitude 3.9, making them distinct for people with normal vision

Algol (β Persei): Known as the “Demon Star,” this famous variable star periodically dims and brightens as a companion star passes in front of it.

கல்யாணப் பெண் மாப்பிள்ளை ஆகியோரின் கண் பார்வையைச் சோதிக்கவும் அருந்ததி போல கற்புக்கரசியாக நீ கணவனைச் சுற்றிச் சுற்றி வரவேண்டும் என்றும் இந்தச் சடங்கினை உண்டாக்கினார்கள் . ஏனெனில் இந்த நட்சத்திரக்கூட்டத்தில் உள்ள அருந்ததி டபுள் ஸ்டார் DOUBLE STAR SYSTEM இரட்டை நடசத்திரம் ஆகும்; அதாவது ஒன்றை ஒன்று வலம் வரும்; இதை அராபியர்களும் பாரசீகர்களும் கண் பார்வை சோதனைக்குப் பயன்படுத்தினர் அதாவது இந்துக்களின் அருந்ததி காட்டல் நிகழ்ச்சியை அராபியர்களும் பாரசீகர்களும் பின்பற்றினர் ; ஆல்கால் என்பதை ஆல்கார்  என்றும் மாற்றினர்; ல =ர இடம் மாறும் என்பது மிகவும் தெரிந்த சம்ஸ்க்ருத இலக்கண விதி . ஆகையால் வள்ளுவர் குறிப்பிடும் அலகை என்பது அராபியர் வரை சென்றது ஆராய்ச்சிக்குரியது ஏனெனில் வள்ளுவர் தவிர வேறு யாரும் தமிழில் பேய் என்ற பொருளில் பயன்படுத்தவில்லை !

ஆல்கால் எனபதற்கு அராபியர் சொல்லும் பொருளிலும் கூளி வருகிறது “கூளி” என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் பேய் அல்லது பூதம் என்ற பொருளைத் தருகிறது. இதை பரணி நூல்களிலும் காணலாம்.

***

சரஸ்வதி

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
   வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை யின்பம் குலவு கவிதை
   கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
   ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
   கருணை வாசகத் துட்பொரு ளாவாள்.

தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம்
   தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம்
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
   உயிரி னுக்குயி ராகிய தெய்வம்
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
   செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
   கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம்.

என்று பாரதியார் பாடிப்போற்றிய தெய்வம் கலைமகள் என்னும் சரஸ்வதி தேவி ஆவார் . குமரகுருபரர் சகல கலா வல்லி மாலைத் துதியைப்ப்பாடி  துலுக்க ராஜாக்களையும் வென்றார். கம்பன் சரஸ்வதி அந்தாதி பாடி கவிச்சக்கரவர்த்தி என்று பட்டம் பெற்றான்

வேத கால நதியின் பெயர்; கல்விக்கு அதிபதியான தெய்வத்தின் பெயர்; இவரைப் பாடாத தமிழ் ஸம்ஸ்க்ருதப் புலவர்கள் இல்லை;

சரஸ்வதி தேவி வெண்ணிற ஆடையுடன் நான்கு கைகளுடனும் வெண்தாமரை மலரின் மேல் பத்மாஸனத்தில் அமர்ந்து காட்சி அளிக்கிறார். அவர் கையில் வீணை இருக்கும் .

உலகின் மிகப்பெரிய விழாவான கும்ப மேளா நடைபெறும் பிரயாகையில், திரிவேணி சங்கமத்தில் இவள் இன்றும் பாதாள நதியாக வருகிறாள் ; கங்கா, யமுனா சரஸ்வதி நதிகள் கலப்பதால் முக்கூடல்- திரிவேணி சங்கம்— என்று பெயர் ; வேதகாலத்தில் கடல்போல ஓடியது ; அண்மைக்கால அணுசக்தி ஆராய்ச்சிகள் இவள் சிந்து வெளி நாகரீகத்துக்கும் முன்னால் ஒடியதைக் காட்டுகிறது; மனு ஸ்ம்ருதியிலும் இந்த நதியின் ஓட்டத்தைக்  குறிப்பிடுவதால் அதன் ஒரிஜினல் சிந்து வெளி நாகரீகத்துக்கு முந்தியது என்றும்  தெரிகிறது..

சரஸ்வதியின் துதியைப்படாத மாணவனோ கலை ரசிகனா சங்கீத வித்வானோ இல்லை; ஏனெனில் அவள் காமசூத்திரத்தில் வாத்ஸ்யாயன மகரிஷி எழுதிய பெண்கள் சிலபஸில் வரும் 64 கலைகளுக்கும் அவளே அதிபதி ; இதைத் தமிழ்ப்புலவரும் பாடிப்போற்றினார்கள்.

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என் அம்மை – தூய

உருப்பளிங்கு போல்வாள், என் உள்ளத்தின் உள்ளே

இருப்பள், இங்கு வாராது இடர்!

படிக நிறமும் பவளச் செவ்வாயும்

கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் – துடியிடையும்

அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்

கல்லுஞ்சொல் லாதோ கவி.

தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடு துறையிலிருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத்தில் பூந்தோட்டம் என்னும் ஊரின் அருகில் அரிசிலாற்றங்கரையில் புகழ்பெற்ற கூத்தனூர் சரஸ்வதி கோயில் அமைந்துள்ளது.

பிரம்மாவின் மனைவி ; இவளுடைய பெயர்கள் அனைத்தும் சரஸ்வதி அஷ்டோத்திரத்தில் காணலாம் ; இன்று வரை அவை அனைத்தும் வட பெருங்கல் இமயம் முதல் தென் குமரி வரை பெண்கள் பெயர்களில் உள்ளன!

To be continued…………………………

TAGS- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 94; இந்து மத கலைச்சொல் அகராதி-94, சப்த ரிஷி சரஸ்வதி, நதி,ஆய கலைகள் படிக நிறமும் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள், திரிவேணி சங்கம்

பஜ கோவிந்தம் பாடல் பற்றி 10 கேள்விகள் (Post.16,062)

பஜ கோவிந்தம் பாடல் பற்றி 10 கேள்விகள் (Post.16,062)

Written by London Swaminathan

Post No. 16,062

Date uploaded in London – 7 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

பஜகோவிந்தம் என்பது என்ன  ? அந்த நூலை யார் இயற்றினார் (கள்)?

2

இந்த நூலின் ஒரிஜினல்/ உண்மைப்பெயர் என்ன ?

3

இந்தத் துதி தோன்றக் கருவாக அமைந்த சம்பவம் என்ன ?

4

இந்தத் துதியின் முதல் பாடல் எது ? அதன் பொருள் என்ன?

5

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்துவிடின் – (குறள் 280)- என்று வள்ளுவன் சொன்னதை பஜகோவிந்தம் துதியில் எங்கே காணலாம் ?

6

ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற கங்கை, கோவிந்தன், காயத்ரி ஆகிய மூன்று ‘க’ காரங்களை (மூன்று க) மிகவும் முக்கியமானவையாகக் குறிப்பிட்டார். பஜகோவிந்தம் துதியில் இது உள்ளதா ?

7

அப்பர் பாட்டில் ஜய ஜய சங்கரயென்றும் ஆதி என்றும் சொல்கிறார் ; அப்படியானால் காஞ்சி மஹா சுவாமிகள் சொல்வது போல ஆதி சங்கரர் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்தானே?

8

முப்பது வருஷம்  ஜாலியாக இளைஞராக வாழ்ந்தோம்; அடுத்த முப்பது வருஷம் மனைவி யோடு ஜாலியாகச் சுற்றினோம்; அடுத்த  முப்பது வருஷம்  வாக்கிங் ஸ்டிக்குடன் நடந்தோம்; கடவுளை எங்கு நினைத்தோம்? என்று அப்பரும் ஆதிசங்கரரும் சொன்னார்களா?

9

தந்தை யார்? தாய் யார்? உடன் பிறந்தார், தாரம், ஆர்?

புத்திரர் ஆர்? தாம் தாம் ஆரே?

வந்த ஆறு எங்ஙனே? போம் ஆறு ஏதோ? மாயம்

ஆம்; இதற்கு ஏதும் மகிழ வேண்டா!

சிந்தையீர்! உமக்கு ஒன்று சொல்லக் கேண்மின்: திகழ்

மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி

எந்தையார் திருநாமம் “நமச்சிவாய” என்று எழுவார்க்கு

இரு விசும்பில் இருக்கல் ஆமே– அப்பர் பாடல் இதே கருத்து பஜகோவிந்தத்தில் எங்கு வருகிறது ?

 10

நல்லோருடன் சேர்ந்தாலே பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல முக்தி கிடைத்துவிடும் என்று சொல்லும் சத் சங்கம் பாடல் எது ?

***************************

விடைகள்

1.கோவிந்தனைத் துதி = பஜ கோவிந்தம் என்பது பொருள் ; இதை ஆதிசங்கரரும் அவருடைய சீடர்களும் இயற்றினார்கள் என்பது ஐதீகம்; 31 ஸ்லோகங்கள் உடைய இந்த துதியில் முதல் 12 ஆதி சங்கரரால் இயற்றப்பட்டவை, ஏனையவை அவருடன் சென்ற சீடர்கள் 14 பேராலும் மற்றோராலும் பாடப்பட்டவை.

***

2. எளிய ஸம்ஸ்க்ருதத்தில் அரிய கருத்துகளைக் கொண்ட இந்த பாட்டின உண்மையான பெயர் பஜ கோவிந்தம் அல்ல!

‘மோகத்துக்கு (ஆசை) சம்மட்டி அடி’ கொடுக்கும் பாடல் என்பதால் இதை ‘மோக முத்கர’ என்றும் அழைப்பர்.

***

3

3.இந்துக்களின் புனித நகரான காசியில் ஆதி சங்கரர் தனது சீடர்களுடன் நடந்து கொண்டிருந்தார். வயதான ஒருவர் ஸம்ஸ்க்ருத இலக்கண பாடத்தை ‘டுக்ருஞ்கரணே’, ‘டுக்ருஞ்கரணே’  என்று நெட்டுரு போட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த ஆதி சங்கரருக்குக்  கருணை பிறந்தது .மூட புத்தியுளவரே! சாகப் போகும் தருணத்தில் இந்த இலக்கண விதிகள் உமக்கு உதவிக்கு வருமா? சாகும் நேரத்தில் சங்கரா, சங்கரா என்றாலாவது போகும் வழிக்கு புண்ணியம் சேர்க்கலாமே என்று 12 துதிகளில் அறிவுரை பகன்றார்.

***

4

4.‘பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்

பஜ கோவிந்தம் மூடமதே

ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே

ந ஹி ந ஹி ரக்ஷதி டுக்ருஞ்கரணே  

“கோவிந்தனைத் துதி (கடவுளைத் துதி) , கோவிந்தனைத் துதி (கடவுளைத் துதி) மூடனே! குறித்த நேரம் (மரண காலம்) வரும்போது இலக்கண விதிகள் உன்னைக் காக்காது.”

பஜகோவிந்தத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் தமிழ் வேதமாகிய திருக்குறளில் இருந்து ஒவ்வொரு குறளை ஒப்பிட்டுப் பார்த்து மகிழலாம். இதோ இந்த முதல் பாட்டின் கருத்தை இரண்டாவது குறளில் காணலாம்.

கற்றதனா லாய பயனென் கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின் (2)

“அறிவே வடிவாய் விளங்கும் கடவுளின் திருவடிகளை ஒருவன் நாள்தோறும் வணங்கவில்லை எனில் கல்வியால் (டுக்ருஞ்கரணே) என்ன பயன்?”

***

5.மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்துவிடின் – (குறள் 280)-

பொருள்: தவம் செய்வாருக்கு மொட்டை அடித்துக் கொள்வதும் சடை முடி வளர்த்தலும் தேவை இல்லை உலகத்தார் எதையெல்லாம் பழிக்கிறார்களோ அத்தகைய தீய வழக்கங்களை விட்டாலே போதும்.

சங்கரரும் சாடுகிறார்:

தத்துவ வித்தகர் ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் என்ற அருமையான துதிப்பாடலில் இதை அழகாக வருணிக்கிறார். இந்தப் பாட்டை அவரது சீடர் தோடகர் பாடியதாகச் சொல்லுவர்.

“ஜடிலோ முண்டி லுஞ்சித கேச :

காஷாயாம்(அ)ம்பர பஹுக்ருத வேஷ :

பஸ்யன் அபி ச ந பஸ்யதி மூட:

ஹ்யுதரநிமித்தம் பஹுக்ருத வேஷ :”

—பஜகோவிந்தம்

( : இவ்வாறு இரண்டு புள்ளி இருக்கும் இடத்தில் ஹ என்று உச்சரிக்கவும்.எ.கா. வேஷஹ, கேசஹ, மூடஹ).

பொருள்: ஒருவன் சடை முடியுடன் இருக்கிறான். மற்றொருவனோ மொட்டைத் தலையன். இன்னும் ஒருவன் ஒவ்வொரு முடியாகப் பிடுங்கிவிட்டான். இன்னொருவன் காவி உடையில் வலம் வருகிறான். இந்த மூடர்கள் கண் இருந்தும் குருடர்கள். இந்த வெளி வேஷம் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்குத்தான்.

***

6.ஆமாம். இதோ அந்தப் பாடல் :

பகவத்கீதா கிஞ்சித் அதீதா

கங்காஜல லவ கணிகா பீதா I

ஸக்ருதபியேந முராரி ஸமர்சா

க்ரியதே தஸ்ய யமேன நசர்சா II

பொருள்: கொஞ்சமேனும் பகவத்கீதை படித்திருந்தாலும், சொட்டு கங்கா ஜலம் குடித்திருந்தாலும், ஒரே தடவை நாராயணனை பூஜித்திருந்தாலும் போதும் அவன் விஷயத்தில் யமன் தீவிர சோதனை செய்வதில்லை

****

7. (ஆதீ சங்கர, செய செய சங்கர என்று ஒரே பாட்டில் வருவதைக் காண்க)

“நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே—-

தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடி

சங்கரா செய போற்றி போற்றி என்றும்

அலை புனல் சேர் செஞ்சடையெம் ஆதீ என்றும்

ஆரூரா என்று என்றே அலறா நில்லே” —அப்பர் தேவாரம்

***

8.பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்

மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து

கோலனாய்க் கழிந்த நாளுங் குறிக்கோளி லாது கெட்டேன்

சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.

இது திருநாவுக்கரசர் (அப்பர்) பெருமான் அருளிய நான்காம் திருமுறையில் இடம்பெற்ற திருக்கொண்டீச்சரம் தேவாரப் பதிகப் பாடல் ஆகும்.

இதோ ஆதிசங்கரர் பாடல்

பாலஸ்தாவத்க்ரீடாஸக்த:

தருணாஸ் தாவத் தருணீஸக்த: I

வ்ருத்தஸ்தாவத் சித்தாஸக்த:

பரே ப்ரஹ்மணி கோsபி நஸக்த: II

பொருள்: சிறுவன் விளையாட்டில் ஈடுபடுகிறான். வாலிப இளமங்கையை நாடுகிறான். கிழவர் கவலையில் தோய்கிறார். ஆனால் பரப்ஹ்மத்தில் ஒருவர் கூட ஈடுபடுவதில்லையே!

***

9.காதே காந்தா கஸ்தே புத்ர:

ஸம்ஸாரோsய மதீவ விசித்ர: I

கஸ்ய த்வம் க:குத ஆயாத:

தத்வம் சிந்சய யதிதம் ப்ராத: II

பொருள்: உனது மனைவி என்பவள் யார்?உனது மகன்தான் யார்? இந்த உலகியல் மிக விந்தையானது. c யாருக்கு உடைமையானவன்?நீ  யார்? எங்கிருந்து வந்தாய்? இது மாதிரியான உண்மை நிலையை சற்று ஆராய்ந்து பாரேன்!

***

10.ஸத்ஸங்கத்வே நி:ஸங்கத்வம்

நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம் I

நிர்மோஹத்வே நிஸ்சலதத்வம்

நிஸ்சலிதத்வே ஜீவன் முக்தி : II

பொருள்: நல்லோரி இணக்கம் இருந்தால் உலக விஷயங்களில் பற்று இருக்காது. அவ்வாறு இருந்தால் மோஹமும் இராது. மோஹம் இல்லையேல் உறுதியான தத்வம் மேலிடும். அவ்வாறு உறுதியான கட்டுப்பாடு இருந்தால் ஜீவன் முக்தி கிடைக்கும்.

–subham—

Tags- பஜ கோவிந்தம் பாடல், 10 கேள்விகள், ஆதி சங்கரர்

பிரகலாதனின் உபதேசம்! –1 (Post 16,061)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,061

Date uploaded in London – 7 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பிரகலாதனின் உபதேசம்! – 1 

ச. நாகராஜன் 

பிரகலாதன் தன் பிள்ளைகளை அழைத்து தத்வோபதேசம் செய்கிறார்.

அதில் ஒரு பகுதி இது: 

மனிதனின் வாழ்நாள் நூறு வருடங்கள். இந்திரியங்களை ஜெயிக்க முடியாத ஒரு மனிதனின் வாழ்நாளில் பாதி வீணாகவே கழிகிறது. மனிதன் இரவில் உறக்கம் என்னும் இருட்டில் தள்ளுண்டு வெறுமனே படுக்கிறான் அல்லவா? 

இளமையில் ஒன்றும் தெரியாத மூடனாகவே அவன் பத்து வருடங்களைக் கழிக்கிறான். இன்னொரு பத்து வருடங்களை விளையாடிக் கொண்டே கழிக்கிறான். இப்படியாக இருபது வருடங்கள் இளமையில் கழிகின்றன!. 

பிறகு கடைசிகாலத்தில் கிழத்தனம் ஏற்பட்டு தேகம் தளர்ந்து ஒன்றும் செய்ய முடியாமல் இருபது வருடங்கள் கழிகின்றன. இவ்வாறு விழித்துக் கொண்டிருக்கும் ஐம்பது வருடங்களில் நாற்பது வருடங்கள் போயின.

மிகுந்த பத்து வருடங்களை வருந்தியும், தீர்க்க முடியாத காமத்தினாலும் அதைத் தொடர்ந்த மோகம் முதலியவற்றினாலும் இல்லற வாழ்க்கையில் ஆழ்ந்து இதத்தை மறந்து வீணாகவே கழிக்கின்றான். 

இந்திரியங்களை வென்றவன் இளமை முதற்கொண்டே பகவத் தர்மங்களை அனுஷ்டித்து வாழ்நாளைப் பயனடையச் செய்கிறான். இரவில் கூட நடுவில் இரண்டு யாமங்களை மட்டுமே தூக்கத்திற்குப் பயன்படுத்தி முன், பின் யாமங்களில் பகவத் தர்மங்களை அவன் அனுஷ்டிப்பான். 

இந்திரியங்களை வெல்ல முடியாத எவன் தான் வீட்டில் என்னுடையது என்னும் அபிமானத்துடன் ஆழ்ந்து அறுக்க முடியாத சினேகங்களாகிய பாசங்களால் கட்டுண்ட தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்வான்?

 உயிரைக் காட்டிலும்  மேலான பணத்தாசையை எவன் துறக்க வல்லவன் ஆவான்? திருடன், சேவகன், வியாபாரி ஆகியோர் உயிரை விட்டாவது பணத்தைத் தேடுகிறார்கள் அல்லவா?

 மன இரக்கமுடைய காதலியின் ரகசியமான பாலியல் உறவையும் இனிய உரைகளையும் நண்பர்களின் சகவாசத்தையும் அவர்களினால் கட்டுண்ட ஒருவன் அவற்றை எப்படித் துறப்பான்?

ஒவ்வொரு சொல்லும் அமிர்தம் போல இருக்கின்ற இன்சொற்களைச் சொல்லுகின்ற குழந்தைகளிடத்தில் மனதை ஈடுகொடுத்தவன் அவற்றின் சகவாசத்தை எப்படித் துறக்க வல்லவன் ஆவான்?

 மனதிற்கு இனிய பிள்ளைகளையும் பெண்களையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் மன இரக்கத்திற்கு இடமான தாய், தந்தையரையும் பல்வகையான போகக் கருவிகளையும், அழகிய வீடுகளையும் குலப்பரம்பரையால் ஏற்பட்ட சொத்தையும் பசுக்களையும் வேலைக்காரர்களையும் எப்படி துறப்பான்? எப்படித்தான் அவற்றிலிருந்து மனதை மீட்டுக் கொள்ள வல்லவன் ஆவான்?

 கோசகாரம் என்னும் புழு போல கர்மங்களைச் செய்து கொண்டு காமங்களை எவ்வளவு அனுபவித்தாலும் லோபத்தினால் திருப்தி அடையாமல் உடலின்பம், நாக்கு ஆகியவற்றின் சுகத்தை வெகுவாக மதித்துப் பெரிய மோகத்தில் ஆழ்ந்தவன் அதில் எங்ஙனம் விரக்தி உண்டாகப் பெறுவான்?

 இப்படியாக மனிதர்கள் மதிமயங்கி குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக தமது வாழ்நாளையெல்லாம் வீணாகக் கழித்துக் கொண்டு தமக்கு இதமான புருஷார்த்தத்தை அறிகிறதில்லை.

ஶ்ரீமத் பாகவதம் ஏழாம் ஸர்க்கம்

—தொடரும்

Tamil attacks on Atheists: Purananuru wonders-49, Tamil Encyclopedia-89 (Post No.16,060)

Written by London Swaminathan

Post No. 16,060

Date uploaded in London – 6 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

One Thousand Interesting Facts – Part 89

Item 727

River Vaigai  and Tolkappiar

If one looks at the River Vaigai today and compares it with the river in Paripatal, one wouldn’t believe the description in Paripatal. It has deteriorated to the extent of a gutter. And we could easily guess what happened to the ancient Vedic River Saraswati. Half of the devastation is caused by the humans and the other by nature or climate.

The poet described the beauty of Vaigai clothed with flowers. Women and men enjoy bathing in it and lovers made it a meeting point. Theu used boats to cross the river!

Here we remember the strange story of Nachinarkiniar, the most famous Tamil commentator of Sangam literature. During Vaigai floods, Tolkappiar used one stick to cross the river with Lopamudra, wife of Agastya. Tolkappiar avoided holding the woman’s hand and so he gave a long pole so that Lopamudra can hold the other end; even this gesture angered Agastya and he cursed Tolkappiar; and Tolkappiar in turn cursed Agastya for unjust behaviour. Nacchi also added Tolkappiar’s original name was Trunadumagni; unfortunately, we did not have any other personal details about the great Tamil grammarian. The Payiram/Intro of Tolkappiam says Tolkappiar’s work was approved by Acharya of Athankodu who was well versed in Four Vedas.

***

Item 728 Sworn  on Tirupparankundram

In verse six, which is about River Vaigai there is a lovely argument between a lover and the lady love. She blamed him of visiting another woman and hence delay in coming to her. It is a long argument and at the end he swears on Tirupparankundram! That is the abode of Lord Muruga/Skanda. It shows the belief on God Muruga and the custom of swearing.

***

Item 729

Paripatal verse 7 is also on River Vaigai .

Here are some interesting similes. The poet compared the floods to a dancer who could not dance according to rules; devastation caused by the floods is given in full details; the floods washed away the ornaments of women; vast paddy fields were submerged under water. And we come across the city name TIRU MARUTHA MUN THURAI. Scholars believe that was the original name of Madurai. And the woman who enjoyed the bathing prays that she should enjoy it for ever. Vaigai floods looked like Pandya army entering an enemy country , according to the poet.

***

Item 730

Verse 10 is also on the same river where a strange custom is sung by the poet.

Vaigai water festival is narrated. People used wooden water guns to sprinkle colour water. Even today we can see water guns or squirt guns used by the villagers during Chitra festival in Madurai. It is made up of skin bag with a narrow tube to squirt water. Like Holi festival Madurai people used coloured water 2000 years ago.

***

Item 731 strange custom of golden animals

In Hindu temples and in the ancient Greek temples, devotees offered golden or silver replicas of body parts to gods and goddesses as a token of thanks for curing diseases in those body parts of individuals.  Even now Tamil Hindus do this in many temples. But in ancient Madurai, women threw golden replicas of fish, crab, conches into River Vaigai , saying “let there be prosperity”.

Probably devotees do such things in other parts of India as well.

Several types of games including ball games are recounted

***

Item 732

Paripatal verse five is composed on Lord Muruga/Skanda.

God’s elephant name is Pinimukham.

God Skanda has 12 arms, six faces. The demon Surapadman was in the shape of Mango Tree.

The association of the demon with Mango tree deserves more research.

Throughout Tamil Sangam  poems we see certain trees are associated with chieftains; they were guarded, respected and saluted by the common folk. Any disrespect to the Guardian Tree is not tolerated by the chieftain or the local leader.

Throughout Sangam literature a particular Mango Tree is portrayed as the Demon Sura Padman, enemy of Muruga/Skanda.

Nowadays a plantain tree is brought and planted instead of mango tree; and the tree is symbolically cut off during Skanda Sasthi festival.

***

Item 733 rebirth

And in this verse five on Lord Skanda/Muruga belief on rebirth is confirmed.

One gets a good birth if one does good deeds or bad birth if one does bad deeds.

Karma theory is described thus.

***

Item 734 metaphor

We come across a metaphor as follows

Brahma – charioteer;

Earth- chariot;

Vedas- horses;

Mountain – bow;

Snake- the bow string; (also in Puram. Verse 55)

***

Item 735 attack on atheists (Lokayata/ Carvaka)

Those who argued that there is no rebirth are called idiots/ fools in line 76.

Parimel azakar was the commentor for Paripatal verses. He is the most celebrated commentator onTirukkural as well. He was a temple priest of Kanchipuram Vishnu Temple. He has used the same comment on Kural 281.

Lokayata or Carvaka (Sweet Talkers)

 “Indian Materialism” refers to the school of thought within Indian philosophy that rejects supernaturalism.  It is regarded as the most radical of the Indian philosophical systems.  It rejects the existence of other worldly entities such an immaterial soul or god and the after-life.  Its primary philosophical import comes by way of a scientific and naturalistic approach to metaphysics.  Thus, it rejects ethical systems that are grounded in supernaturalistic cosmologies.  The good, for the Indian materialist, is strictly associated with pleasure and the only ethical obligation forwarded by the system is the maximization of one’s own pleasure.

We see it in Valmiki Ramayana in Jabali Rishi’s argument.

Hindus are the only people who included this as a system of philosophy. But in most places, it is condemned. Patripatal poet Kaduvan Ilaveyinanar called the atheists  idiots/ false people (Madavor in Tamil)

To be continued…………………..

Tags- item 735, Tamil attacks on Atheists: Purananuru wonders-49, Tamil Encyclopedia-89 , One Thousand Interesting Facts – Part 89

தாயுமானவர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,059)

Written by London Swaminathan

Post No. 16,059

Date uploaded in London – 6 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

தாயுமானவர்அற்புதங்கள் அனைத்தையும் பட்டியலிட்டுவிட்டு அதைவிடக் கடினம் மனதை அடக்குவது என்று சொன்ன பாடல் எது ?

 2

தாயுமானவர் பாடல்களை இயற்றிய காலம் எது ?

3

அவர் பாடிய நூல்கள் என்ன என்ன ?

4

அவர் பாடலில் என்ன உள்ளது ?

5

காகம் என்னும் பறவையைச் சொல்லி அவர் நமக்கு என்ன போதிக்கிறார் ?

6

வள்ளுவர் கொல்லாமை, புலால் மறுத்தல் என்ற அதிகாரங்களில் 20 குறள்களில் மாமிசபட்சிணிகளைக் கண்டிக்கிறார்; உமது பாலிசி என்ன ?

7

ஆனந்த விகடன் பத்திரிகைக்கும் உமக்கும் நெருங்கிய தொடர்பு உளதாமே ?

8

அங்கிங் கெனாதபடி  எங்கும் ப்ரகாசமாய்

      ஆனந்த பூர்த்தியாகி

  அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே

      அகிலாண்ட கோடியெல்லாந்

தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்

       தழைத்ததெது மனவாக்கினில்

  தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்

       தந்தெய்வம் எந்தெய்வமென்

றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது

       எங்கணும் பெருவழக்காய்

  யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்

       என்றைக்கு முள்ள தெதுஅது

கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது

       கருத்திற் கிசைந்ததுவே

  கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்

       கருதிஅஞ் சலிசெய்குவாம்.     — என்ற புகழ்பெற்ற பாடல் எதில் உள்ளது?

9

சங்கநிதி பதும நிதி இரண்டும் தந்து…… என்று அப்பர் பெருமான் பாடினர்; நீவீர் ?

10

தாயுமானவர் பிறந்ததும் முக்தியடைந்தும் எங்கே ?

**************************************************

விடைகள்

1கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்

கரடி வெம் புலி வாயையும்

கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம்

கண் செவி எடுத்தாட்டலாம்

வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து உலோகத்தையும்

வேதித்து விற்று உண்ணலாம்

வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலா வரலாம்

விண்ணவரை ஏவல் கொள்ளலாம்

சந்ததமும் இளமையொடு இருக்கலாம் மற்றும் ஒரு

சரீரத்தினும் புகுதலாம்

சலமேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம்

தன் நிகரில் சித்தி பெறாலாம்

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற

திறம் அரிது  சத்தாகி என்

சித்தமிசை குடி கொண்ட

தேசோ மயானந்தமே

***

2.காலம்: கி.பி 18-ஆம் நூற்றாண்டு (1705 – 1742).

***

3.திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்;

பராபரக் கண்ணி;

மௌனகுரு வணக்கம்;

  மொத்தப் பாடல்கள்: 1452 பாடல்கள்.

  தலைப்புகளின் எண்ணிக்கை: 56 பிரிவுகள்.

***

4.இப்பாடல்கள் அத்வைத வேதாந்தத்தையும் சைவ சித்தாந்தத்தையும் இணைத்து, பக்தி மற்றும் ஞானத்தை எளிய தமிழில் விளக்குகின்றன.

***

5.காகமானவை கோடி கூடி நின்றாலும் ஒரு கல்லின் முன் எதிர் நிற்குமோ! கர்மமானவை கோடி முன்னே செய்தாலும்  நின் கருணை ப்ரவாக அருளைத் தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ?

காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டாகார சிவ,                            

போகமெனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமா                  

ஏக உருவாய்க் கிடக்குதையோ, இன்புற்றிட நாம் இனி எடுத்த                         

தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் செகத்தீரே!

***

6.“கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லார் மற்று

அல்லாதோர் யாரோ அறியேன் பராபரமே”

“கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க

எல்லோர்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே”

***

7. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!

வாசன் அவர்கள் தன் பொறுப்பில் ஆனந்தவிகடனை ஏற்றவுடன் இந்த பராபரக் கண்ணியை விகடனின் குறிக்கோளாக ஆக்கி அதை விகடனில் வெளியிட ஆரம்பித்தார்.

***

8.திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்;

திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்– என்ற தொகுப்பில் முதல் பாடல்.

***

9.பத்மநிதி சங்கநிதி இருபாரி சத்திலும்

        பணிசெய்யுந் தொழிலாளர்போல்

கேட்டது கொடுத்துவர நிற்கவைப் பீர்பிச்சை

        கேட்டுப் பிழைப்போரையுங்

கிரீடபதி யாக்குவீர்

***

திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் சைவ வேளாளர் குலத்தில் பிறந்தார். இவர் தந்தையார் கேடிலியப்ப பிள்ளை மற்றும் தாயார் கேசவள்ளி அம்மையார் ஆவார்கள். மட்டுவார்குழலி என்னும் மங்கையை மணந்து கனகசபாபதி என்ற மகவையும் பெற்று வாழ்ந்தார். பின்னர்த் துறவு வாழ்க்கையில் நாட்டங்கொண்டு துறவு பூண்டார்.  அவர் 1742-ஆம் ஆண்டு தை மாதம் விசாகம் நட்சத்திரம் கூடிய நாளில் இராமநாதபுரத்தில் உள்ள இலட்சுமிபுரத்தில் முக்தி அடைந்தார் .

–Subham–

Tags- தாயுமானவர் பாடல்கள் , 10 கேள்விகள்

1

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 93; இந்து மத கலைச்சொல் அகராதி-93 (Post.16,058)

Written by London Swaminathan

Post No. 16,058

Date uploaded in London – 6 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version was posted on 5-8-26

சந்தியா வந்தனம்

பிராமணர்கள் தினமும் மூன்று காலம் சந்திக்கும் நேரங்களில் — அதாவது இரவும் காலையும், காலையும் பகலும், பகலும் மாலையும் சந்திக்கும் மூன்று நேரங்களில் செய்யும் சூரிய வழிபாடு இது. காயத்ரீ மந்திரத்தை ஜபிப்பது இதன் முக்கிய உபாசனை. முன் காலத்தில் ஏனைய  ஜாதியினரும், பெண்களும் சந்திரா வந்தனம் செய்ததை வாலமீகி ராமாயணம் முதலிய நூல்கள் செப்புகின்றன. ஒருவேளை அதிலுள்ள மந்திரங்கள் வேறு பட்டிருக்கலாம்.இந்த வழிபாட்டுக்கு தண்ணீர் வேண்டும். ஆரியர்கள் குளிர் பிரதேசத்திலிருந்து வந்தார்கள் என்று சொல்லும் அரைவேக்காடுகளுக்கு இந்து மதச்சடங்குகள் வேட்டு வைக்கின்றன .

***

சாந்திபனி

கிருஷ்ணர் காலத்தில் வாழ்ந்த குரு/ ஆசிரியரின் பெயர்.  மகரிஷி சாந்திபனியிடம் கிருஷ்ணர், பலராமன், குசேலர் என்னும் சுதாமா முதலியோர் சகல சாஸ்திரங்களையும் கற்றனர் . உஜ்ஜயினி நகரில் இப்படி ஒரு ஆஸ்ரமம் இருந்தது .

***

சங்கம்  /குழு , கூட்டம்

இந்த ஸம்ஸ்க்ருதச் சொல் தமிழ் வரலாற்றில் முக்கிய இடம்பெறுகிறது ; தமிழ் மொழியை வளர்க்க பாண்டிய மன்னர்கள் மூன்று இதனங்களில் முதல், இதை, கட்டைச் சங்கங்களை நிறுவியதாக பிற்கால உரைநடை  நூல்கள்   கூறுகின்றன . அதில் கூறப்படும் பத்தாயிரம் ஆண்டுக்காலம் முதலியன நமப்புக்கொட்டியதாக இல்லை . தொல்காப்பியரின் விதிப்படி ச என்னும் எழுத்தில் சொற்கள் துவங்க முடியாது . 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகப்புகளைப்பெற்ற இலக்கண வித்தகன் பாணினி எழுதிய அஷ்டாத்யாயி நூலில் சங்கம் என்னும் சொல் வருகிறது அவர் இதற்கான பல பொருள்களை இலக்கண விதிகளுக்கு உதாரணமாகக் காட்டியுள்ளார் ; அதில் ஒரு பொருள் குழு, பலர் இருக்கும் அமைப்பு என்பதாகும் ; ஆயத்தங்களை விருப் பிழைக்கும் ஆயுதஜீவி சங்கத்தையும் குறிப்பிட்டுள்ளார் . ப்புத்தர் இறந்த பின்னர் , பிட்சுக்கள் சங்கங்களை ஏற்படுத்தினார் கள். அவர்களைப்போலவே சமணர்களும் சங்கத்தை ஏற்படுத்தினார்கள் ; அவை எல்லாம் சமய அமைப்புகள் ; மொழியுடன் தொடர்புடையவை அல்ல 

தமிழ்ச் சங்கப்புலவர்களிடையே நடந்த கோஷ்டி ஓதல்களைத் திருவிளையாடல் புராணம் முதலிய நூல்களில் காணலாம் .

சத்சங்கம் என்ற சொல்லை ஆதிசங்கரரின் பஜ கோவிந்தம் முதலிய திதிகளில் காணலாம்.

***

சனி- சனைச்சரன் — சனிக் கிரகம்

சனீஸ்வரன்

பெயர்கள் – மந்தன்,சாயாபுத்திரன்,சூர்யபுத்திரன்,காரி,அனிலன்,முதுமகன்,

முடவன், ஊனன், பாவணன்,சஞ்சலன்,செனரி,நீலன்,கரியவன்,

மனைவிகள் –நீளா தேவி; இவளுக்கு பிறந்த குழந்தையே “குளிகன் “.

எந்த நல்ல காரியங்களும், குளிகன்”நேரத்தில் செய்ய வேண்டும் .அந்த காரியங்களைத் திரும்பத் திரும்ப செய்ய நேரிடும்

ஜேஷ்டா தேவி- இவள் மகன் “தரித்திரன்” .

மந்தா தேவி-

பூமியிலிருந்து சனி இருக்கும் அதிக பட்ச தூரம்- 88,லட்சத்து 66 ஆயிரம்மைல்கள்

குறைந்த பட்ச தூரம் – 74 லட்சத்து 66ஆயிரம்மைல்கள்

சூரியனை ஒருமுறை சுற்றி வர – 30 வருடங்கள்!!!!

நிறம் – கறுப்பு.ஆகையினால்தான் கறுப்பாக இருக்கும் எந்தப்

பொருளையும் அவருக்குப் பிடிக்கிறது.

வாகனம் – காகம் – கறுப்பு; தானியம் – எள் – கறுப்பு; உலோகம் – கறுப்பாயுள்ள இரும்பு; வஸ்திரம் – கரு நீலப் பட்டு அல்லது கறுப்புத் துணி; புஷ்பம் – கருங் குவளை. இஷ்ட காலம் – சாயும்காலம், பிரதோஷ வேளை

குணம் – தாமசம்; உத்யோகம் – அடிமை;  அதிதேவதை – யமன்;  பிரத்யதி தேவதை- பிரஜாபதி; ஜாதி – சண்டாளர்/ கலப்பு இனம்;

திசை – மேற்கு;  பூதம் – காற்று; தன்மை – ஆண் அலி;  மொழி – நீச பாஷை;  உடல் அதிபதி -நரம்புக்கு;

அவஸ்தை – விருத்தர் அல்லது வயதானவர்; சுவை – துவர்ப்பு; சமித்து – வன்னி; ரத்தினம் – நீலம்; சுபாபவம் – குரூரம்;

குணம் – பாவி; நாடி – வாத நாடி; ஆசனம் – வில்; தேசம் – சௌராஷ்டிரம்; கண்டம்- ஆப்ரிக்கா; கோத்திரம் – காஸ்யபம்;

ருது- வஸந்த ருது; காரகன்- ஆயுள் காரகன்;  உச்சம் – துலா ராசியில்; நீசம் – மேஷ ராசியில்;  சொந்த வீடுகள் – மகரம், கும்பம்;

பார்வை – 3, 7, 10;  நண்பர்கள் – புதன், சுக்கிரன்; எதிரிகள் – சூரியன், சந்திரன், செவ்வாய்; சமமானவர் – குரு; ஆதிக்கம் உள்ள நட்சத்திரங்கள்- பூசம், அனுஷம், உத்ரட்டாதி; தைலம் – நல்லெண்ணெய்; ப்ரீதி செய்ய தானம் – காராம் பசு, நல்லெண்ணெய், இரும்பு;  ப்ரியமான பலகாரம்- வெல்லம் கலந்த எள் உருண்டை, எள்ளும்,உளுந்தும் கலந்த சாதம்.

கோவில்கள் – திரு நள்ளாறு, கொள்ளிக்காடு,திருநெல்வேலி அருகில் உள்ள ஸ்தலங்களான,குன்னத்தூர் என்ற திரு வேங்கடநாதபுரம் , திருக்குளந்தை என்ற பெருங்குளம், சென்னையில் உள்ள பொழிச்சலூர், மதுரை அருகில் உள்ள குச்சனூர், சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள சனீஸ்வரன் கோவில்.

கன்னி மாதம் என்ற புரட்டாசி மாதம் விஷ்ணுவிற்கு விசேஷமான மாதம்.அதே மாதத்தில் முதல் சனிக்கிழமையன்று ரோகிணி

நடசத்திரத்தில் பிறந்தவரே சனீஸ்வரன்!!! ஆகையால், புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்தவர்களையும், ரோகிணி நட்சத்திரத்தில்

பிறந்தவர்களையும் அவர் ஒன்றும் செய்ய மாட்டார்!!!

ஏழரை நாட்டு சனி

ஏழரை நாட்டு சனி, முதல் இரண்டரை வருடம், மங்கு சனி, இரண்டாவது இரண்டரை வருடம்;

பொங்கு சனி, மூன்றாவது இரண்டரை வருடம் இறுதிச்சனி- நடுங்க வைத்துவிடும்.

சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டு வளர்ந்ததினால், தண்டிப்பதில்

கடுமையான நீதிபதி!!! தண்டிப்பதில் அவருக்கு நிகர் அவர் தான்,,அவர் சிவனாக இருந்தாலும்

சரி, சொந்த சகோதரன் யமனாக இருந்தாலும்சரி……விடமாட்டார்!!!

அவர் அள்ளிக் கொடுப்பதில் வள்ளல், பிடிக்காதவர்க்கு கொள்ளி வைக்கும் சூரர்!!!

அஸ்வ ரகசியத்தை தெரிந்தவன், சிறந்த ஆட்சியாளன்,அழகான ராஜ குமாரன், சமையல் கலை வல்லுனன், நளன்!!!

காலை சரியாக கழுவ வில்லை என்ற ஒரே காரணத்திற்காக, நாட்டை விட்டு ஓட்டி, மனைவியைப் பிரிந்து, தனது ஆடையை இழந்து ,

மனைவியின் புடவைத் தலைப்பில் அலைய விட்டு, கடைசியில் தனது க்ஷேத்திரமான திருநள்ளாறுக்கு வந்து தன்னை வழிபட்ட பின்னரே

அவனுக்கு விடுதலை அளித்தார் சனீஸ்வர பகவான்!!!

கறுப்பு ஆடை

சனீஸ்வர பகவானுக்குப் பிடித்த கறுப்பு ஆடை அணிந்து, அல்லது கரு நீல ஆடை

அணிந்து 45 நாட்கள் விரதம் இருந்து, தரையில் படுத்து, உயரமான மலையிலேற்றி ஐயப்ப பக்தர்களுக்கு திருப்திகரமாக தரிசனம்

செய்வித்து திருப்பி அனுப்புகிறார்.

சனீஸ்வர பகவான் !!!

சிறை வாசம், தீராத நோய், கடும் கடன், அவமானம், ஆயுளுக்கு

அதிபதி இத்தனை அதிகாரமும் கொண்டவர் சனி!!!

நமது உடல் முழுவதும் பரவி இருக்கும் நரம்புக்கு அதிபதி சனி!!.,

சனியில் பலமில்லாததினால் வரும் வியாதியே காக்காய் வலிப்பு!!!

கர்ம வியாதி என்றும், தீராத நோய் என்று ஜோதிடர்களினால் வரணிக்கப் படுகிறது இது ……

சனியின் உலோகமான இரும்பைக் கொடுத்தவுடன் நிற்கிறது……

இவ்வளவு பெருமையும், கடூரமான, கண்டிப்பான, தலைவிதிப்படி

தண்டிப்பதில் தனக்கு நிகரற்ற அனைவரையும் நடுநடுங்க

வைக்கும் சனீஸ்வரரை பணியவைக்கும் தெய்வம் ஆஞ்சனேயர்!!!

சனிக்கிழமை சனிஸ்வரனை எள் விளக்கேற்றி வணங்கி வழிபட்டாலும் சரி ஆஞ்சனேயரை

வடைமாலை அணிவித்து வழிபட்டாலும் சரி , கருணை வைத்து அருள்புரிவார்!!!

அனைவரும் சனீஸ்வரனை வணங்கி அவனருள் பெறுமாறு வேண்டி

விடை பெறுகிறேன் சீனிவாசன்!!! நன்றி , வணக்கம்!!! (From Gnanamayam Broadcast from London; Speaker Santanam Srinivasan)

XXXX

ஶ்ரீ சனீஸ்வர காயத்ரி

ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயா புத்ராய தீமஹி

தன்னோ சனி: ப்ரசோயதயாத்

XXXX

ச்லோகம்

நீலாஞ்சன சமாபாசம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் சாயா

மார்த்தாண்ட சம்பூதம் தம் நமாமி சனைச்சரம்.

****

சஞ்சயன் 

மஹாபாரதத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ; பெயரின் பொருள்- வெற்றி  ; திருதராஷ்டிரனின் ஆலோ சகர்; தேரோட்டி;  வியாசரின் சீடர்; அவர் கொடுத்த வரத்தால் இருந்த இடத்திலிருந்தே மஹாபாரதப் போர் முழுதையும் நேரடி ஒளிபரப்பு செய்தவர் ; இந்த பூர்வ சக்தி துரியோதனன் இறந்த நாளில் கதறிக்கொண்டு யுத்தகாலத்துக்குச் சென்றவுடன் மறைந்துவிட்டது ; பகவத் கீதையில் சஞ்சயர் சொன்னார் என்று அடி கடி வரும்; இவர் மூலமே நமக்கு பகவத் கீதை கிடைத்தது ; ஒரு காலத்தில் பாணடவர்களிடத்தில் சமாதானத் தூதும் சென்றார் ; நடுநிலைவாதி ; உள்ளதை உள்ளபடியே உரைத்தவர் .

***

சங்கரர் – ஆதிசங்கரர்

அத்வைத தத்துவத்தைப் பரப்பிய மிகப்பெரிய ஞானி. காலடியில் அவதரித்து 32 ஆண்டுகளே வாழ்ந்த இவர் இயற்றிய நூல்கள் கணக்கற்றவை;.ஜீவாத்மாவானது ப்ரஹ்மத்திலிருந்து பிரிந்த ஆத்மனே தவிர வேறல்ல; அது பரப்ரஹ்மத்துடன் சேர்தல் வேண்டும், அதுவே மோட்சம் என்று போதித்தார் . இந்தியா முழுதும் வலம் வந்து பல தத்துவ ஞானிகளை வாதத்தில் வென்று பெரும் பக்தர் கூட்டத்தை உருவாக்கினார் நாட்டின் நான்கு மூலைகளில் — ஜோஷிமத், பூரி, துவாரகா, சிருங்கேரி – மடங்களை நிறுவி காஞ்சீபுரத்தில் முக்தி அடைந்தார் ; சிலர் இவர் இமயமலையில் முக்தி அடைந்ததாகவும் சொல்வர் ; சென்ற இடமெல்லாம் சக்தி வாய்ந்த லிங்கங்களையும் யந்திரங்களையும் அமைத்து கோவில்களுக்கு சக்தி ஊட்டினார் . இவர் பெயரில் உள்ள சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் இன்றும் பல லட்சக் கணக்கானோரால் பாடப்படுகின்றன ; விவேக சூடாமணி, செளந்தர்ய லஹரி, பஜகோவிந்தம்,  கனகதாரா ஸ்தோத்திரம் முதலிய ஒவ்வொன்றின் பின்னாலும் கதைகளும் அற்புதங்களும் உள்ளன ;  இவர் பகவத் கீதைவிஷ்னு சஹஸ்ரநாமம் , முக்கிய உபநிஷதங்களுக்கு எழுதிய உரைகளே இவரது புலமைக்குச் சான்று பகரும் ; சிறுவயதிலேயே சகல சாஸ்திரங்களையும் கற்றார் ; இவரது காலம் எடடாம் நூற்றாண்டு என்றும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர் என்றும் இரண்டு கருத்துக்கள் உள்ளன ; இவரைப் போலவே பிற்காலத்தில் வாழ்ந்த அபிநவ சங்கரரின் வாழ்வும் ஆதி சங்கரர் வாழ்வும் அதிசயங்கள்  நிறைந்தவை; ஆகையால் காலத்தைத்  தெளிவாகச் சொல்லமுடியவில்லை . இவரது சீடர்கள் பரம்பரை, இன்றும் சங்கராசார்யார் என்ற பெயரில் இந்துமதத்தைப்  பரப்பிவருகின்றனர்.

***

சனத் குமாரர்

இந்து புராணங்களின் படி, படைப்புக் கடவுளான பிரம்மாவின் மனத்திலிருந்து தோன்றிய முதல் நான்கு ஞானிகளில் (மானச புத்திரர்களில்) சனத்குமாரரும் ஒருவர். ஏனைய மூவர் சனகர், சனாதனர், சனந்தனர் ஆவர். எப்போதுமே ஐந்த வயதுடைய குழந்தைப் பருவத் தோற்றத்துடன் இருக்கக்கூடிய இவர்கள், பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து மெய்ஞானம் பெற்ற ரிஷிகள் ஆவர்.

காஞ்சி  மஹாசுவாமிகள் (1894-1994) உரையில் சொல்வதாவது: ONLY SUMMARY IS GIVEN BELOW

பிரம்மாவின் மனஸிலிருந்து உதித்தவர் ஸனத்குமாரர். அவர் பிரம்ம ஞானி. சுகாசாரியார் மாதிரி, உள்ளும் புறமும் எல்லாம் ஒன்று என்று ஸதாகாலமும் உணர்ந்திருந்தவர். இப்படிப்பட்டவருக்கு விசித்திரமாக ஒரு நாள் ஸ்வபப்னம் வந்தது. ஸ்வப்பனத்தில் தேவர்களும் அசுரர்களுக்கும் சண்டை நடந்தது. அதில் ஸனத்குமாரர் தேவ சேனாபதியாக யுத்தம் செய்து, அசுரர்களை எல்லாம் சம்ஹரிக்கிறார்.

விழித்தெழுந்ததும் அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. தகப்பனாரான பிரம்மாவிடம் போய் ஸ்வப்பனத்தைச் சொல்லி, அதற்கென்ன அர்த்தம் என்று கேட்டார்.

“குழந்தை! நீ பூர்வ ஜன்மத்தில் வேத அத்யயனம் செய்தாய். அதில் தேவாசுர யுத்தம் என்று வருவது உன் மனஸில் ஆழப் பதிந்துவிட்டது. வேத யக்ஞங்களால் ஆராதிக்கப்பட்டு அநுக்கிரகம் செய்கிறவர்கள் தேவர்கள். இவற்றை அழிக்க நினைக்கிறவர்கள் அசுரர்கள். உனக்கு வேதத்தில் இருந்து ஆழ்ந்த பிடிமானத்தால், “அசுரர்களையெல்லாம் நாமே சம்ஹாரம் செய்துவிட மாட்டோமா?’ என்று பூர்வஜன்மத்தில் ஆத்திரப்பட்டாய். அந்த நினைப்புத்தான் இந்த ஜன்மாவிலும் தொடர்ந்து வந்து ஸ்வப்னமாக வெளியாகி இருக்கிறது” என்றார் பிரம்மா.

ஸனத்குமாரரிடம் பிரம்மா, “உனக்கு எந்த எண்ணம் உண்டானாலும் அது வாஸ்தவத்திலேயே நடந்துவிடும். அதனால் நீ யதார்த்தமாகவே ஒருநாள் தேவ சேனாதிபதியாக அசுர சம்ஹாரம் செய்யத்தான் போகிறாய். இந்த ஜன்மாவில் நீ, ‘தேவராவது, அசுரராவது, எல்லாம் ஒரே பிரம்மம்’ என்று இருப்பதால், இன்னொரு ஜன்மா எடுத்து இதைச் செய்யப் போகிறாய்” என்றார்.

………………………..

ஸனத்குமாரர் அடுத்த ஜெனமாவில் பரமேசுவர தேஜஸாக ஜனித்து விடுவதென்றும், பிறகு அதை அம்பாள் சரவணம் என்ற தன் சரீரத்தில் தாங்கி ஸுப்ரம்மண்ய ஸ்வரூபமாக்கித் தருவதென்றும் முடிவு செய்து கொண்டார்கள்.

இதன்படியே பிற்பாடு ஈசுவரன் தன் நெற்றிக் கண்களிலிருந்து பொறிகளை வெளியிட்டார். ஸனத்குமாரர்தான் இப்படி ஆவிர்பவித்தவர். அந்தத் தேஜசின் உக்கிரத்தை எவராலும் தாங்க முடியவில்லை. முதலில் கங்கை தாங்கப் பார்த்தாள். முடியவில்லை.

அப்போது பிரம்மா அவளிடம், “இதைக் கொண்டுபோய் சரவணத்தில் சேர்த்துவிடு” என்றார்.

“……………………………..

ஸனத்குமாரர்தான் ஸ்கந்தர் என்று சந்தோக்ய உபநிஷத்திலும் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது. அதில் அவரே ஞான பண்டிதர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனானப்பட்ட நாரத மகரிஷி ஸனத்குமாரரிடம்தான் ஞானோபதேசத்துக்காக வருகிறார். ………..

‘இப்படியாக பகவான் ஸனத்குமாரர், இருள் கடந்த நிலையைக் காட்டினார். ‘அவருக்குத்தான் ஸ்கந்தன் என்று பேர்; அவருக்குத்தான் ஸ்கந்தன் என்ற பேர்’ என்று உபநிஷத்து இரண்டு தடவை முத்தாய்ப்பு வைக்கிறது.இருள் கடந்த ஒளி, ஞானாக்னி முருகன்தான். அதைத்தான் சாந்தோக்யம் சொல்கிறது.

TO BE CONTINUED…………….

TAGS- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 93; இந்து மத கலைச்சொல் அகராதி-93 , சனத் குமாரர் , ஏழரை நாட்டு சனி, சந்தியா வந்தனம்

116 வயதான பாட்டி திருமலையில் படியேறி செய்த தரிசனம்! (Post.16,057)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,057

Date uploaded in London – 6 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

116 வயதான பாட்டி திருமலையில் படியேறி செய்த தரிசனம்! 

ச. நாகராஜன் 

திருப்பதி வெங்கடேச பெருமாள் நடத்தும் லீலைகள் அனந்தம்.

தன் பக்தர்களை அவர் காக்கும் விதமும் பிரமிப்பூட்டும் ஒன்றாகும்.

 சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் அவரது அருளுக்குச் சான்றாக விளங்குகிறது.

நவநீதம்மா என்ற 116 வயது பாட்டி திருமலைக்குக் கால்நடையாகச் சென்ற சம்பவம் பக்தர்களிடையே பிரமிப்பையும் பரவசத்தையும் ஊட்டுகிறது.

தனது குடும்பத்துடன் வெங்கடாஜலபதியின் அருள் வேண்டி அவர் திருமலை யாத்திரைக்குப் புறப்பட்டார்.

அவரது யாத்திரையை காணொளியாக எடுத்த அன்பர்கள் அதை சமூக ஊடகங்களில் காண்பிக்க இது உலகெங்கும் பரவி விட்டது.

இதை அறிந்து கொண்ட ஆந்திர பிரதேச முதன்மந்திரி திரு என். சந்திரபாபு நாயுடு  சமூக ஊடகத்தில் இந்தப் பதிவை இட்டுள்ளார்: “உண்மையான பக்திக்கு முன்னர் வயது என்பது வெறும் ஒரு நம்பர் தான்! இந்த 116 வயது பாட்டி திருமலைக்குக் கால்நடையாகச் சென்று வெங்கடேஸ்வர சாமியை  தரிசனம் செய்தது பிரமிப்பை ஊட்டுகிறது.”

அனைவரும் அவரது யாத்திரை உத்வேகம் ஊட்டும் ஒன்று என்று கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர். பலரும் மனிதனின் உறுதி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்று என்றும் தெரிவித்துள்ளனர்.

நவநீதம்மாளுக்கு அவரது குடும்பம் முழு ஆதரவையும் தந்துள்ளது. அவருடன் கூடவே நடந்து சென்று அவரது சங்கல்பத்தை நிறைவேற்ற உதவியது. சந்திரபாபு நாயுடு அவரது குடும்பத்தினரின் ஆதரவை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அவரது வருகையை அறிந்த திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஒரு விசேஷமான வி ஐ பி தரிசன ஏற்பாட்டை அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் செய்தது. ஆலய அதிகாரிகள் அவருடன் இருந்து அவரது பூரண திருப்தியுடனான தரிசனத்திற்கு உதவி செய்தனர்.

பின்னர் அவருக்கு ஒரு பட்டாடையைப் போர்த்தி அவரை கௌரவித்தனர். தீர்த்த பிரசாதம் உள்ளிட்டவை அவருக்கு வழங்கப்பட்டது.

நம்பிக்கையையும் உள்ளார்ந்த மன உறுதியையும் வெளிப்படுத்தும் இந்த சம்பவம் இப்போது பக்தர்களின் முக்கிய பேசுபொருளாகி விட்டது.

 சந்தேகங்கள் எல்லாம் தீர்ந்த நிலையில் நீங்கள் இருக்கும் போது உங்களுக்கு முக்தி நிச்சயம் என்று மைத்ரேயி உபநிடதம் கூறுவதை இங்கு நாம் நினைவு கூரலாம். 

இந்த நிகழ்ச்சியைப் பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா தனது 7-7-2026 இதழில் விவரமாக வெளியிட்டுள்ளது.

கோவிந்தா, கோவிந்தா, அனைவரையும் காக்க வேண்டும் கோவிந்தா!

**