உங்கள் எண்ணங்களைத் திரையில் பார்க்கலாம்! (Post No.3017)

Gallant

Article Written S NAGARAJAN

Date: 29 July 2016

Post No. 3017

Time uploaded in London :– 6-45 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

29-7-16 பாக்யா  இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

உங்கள் எண்ணங்களைத் திரையில் பார்க்கலாம்!

.நாகராஜன்

vision

மனதில் நினைப்பதை அறிவது என்பது குழந்தைகளின் மாயாஜாலக் கதைகளிலிருந்து இப்போது நிஜமாக ஆகிறது’                    – டெய்லி மெயில் பத்திரிகை                 

உலகம் மாறுகிறது! வேகமாக!! விளையாட்டாக முன்பு பேசியதெல்லாம் வினையாக ஆகிறது.

‘ஆமாம், இவரு நாம நினைச்சதை எல்லாம் கண்டு பிடிச்சிடுவாரில்லை!’ என்று கேலியாகப் பேசியதெல்லாம் பழைய கதையாக ஆகி விடப் போகிறது.

ஒருவர் என்ன நினனக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வது மட்டுமில்லை. அதை திரையிலும் பார்க்க முடியும், இனிமேல்!

அறிவியல் காட்டும் அற்புதங்களில் இதுவும் ஒன்றாகச் சேரப் போகிறது!

அமெரிக்காவில் புரட்சிகரமான கண்டுபிடிப்பு வரிசைகளில் ஒன்றாக நினைத்ததைப் படமாகக் காட்டும் முயற்சி வெற்றியை நோக்கி பீடு நடை போடுகிறது.

அமெரிக்க விஞ்ஞானிகளின் குழு ஒன்று, இரு தன்னார்வலர்கள்  வீடியோ ஒன்றைப் பார்க்கும் போது அவர்களின்  மூளைகளை ஸ்கேன் செய்து அந்த முடிவுகளை வைத்து அவர்கள் பார்த்தனவற்றை மறுபடியும் உருவாக்க முய்னறு வெற்றி பெற்றுள்ளது!

இந்தக் குழுவினரின் கண்டுபிடிப்பு இப்போது துல்லியமாக இல்லை என்றாலும், இந்த உத்தியின் மூலமாக ஒருவர் மனதில் நினைப்பதைச் சித்திரமாக திரையில் படமிட்டுக் காட்ட முடியும் என்ற நம்பிக்கையைத் தந்து விட்டது!

ஒரு மனிதனை நினைத்த போது விஞ்ஞானிகள் ஒரு மனிதனின் படத்தையும் அவன் பின்னணியில் ஆகாயத்தையும் உருவாக்க முடிந்திருக்கிறது.

பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜாக் காலண்ட் (Professor Jack Gallant) இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.

 

how it works

“நீங்கள் பார்க்கும் எதையாவது விவரிக்க வேண்டுமென்றால் இப்போது வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அல்லது அதைப் படமாக வரைந்து காட்ட வேண்டியிருக்கிறது. இது சில சமயம் சரிப்பட்டு வருவதில்லை. இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்ப உத்தியானது குற்றம் ஒன்றைப் பார்த்த ஒருவர் என்ன பார்த்தார் என்பதைத் துல்லியமாக மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர உதவும்” என்கிறார் அவர்.

இது பற்றிய ஆய்வுகளில் மேற்கொள்ளப்பட்ட பல சோதனைகளில் இந்த சோதனை எப்படி மூளை ஸ்கேன்கள் ஒருவரின் உள்ளார்ந்த எண்ணங்களைப் படமாகக் காட்ட முடியும் என்பதற்கான முத்தாய்ப்பான சோதனையாக அமைந்துள்ளது.

இன்று சர்வ சாதாரணமாக மருத்துவ மனைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஃபங்ஷனல் மாக்னெடிக் ரெஸொனென்ஸ் இமேஜிங் (Functional magnectiv resonance imaging – fMRI) ஸ்கேனரை வைத்து அமெரிக்க குழுவினர் இரண்டு தன்னார்வலர்கள் ஒரு வீடியோவைப் பார்க்கும் போது  அவர்களின் மூளைகளை ஸ்கேன் செய்ததன் விளைவே இந்த சோதனையை வெற்றியாக்கியது.

ஒரு கணினியில் அவர்கள் தங்கள்  முடிவுகளை ஏற்றினர். அதில் அவர்கள் நினைத்த எண்ணங்களுக்கான வண்ணங்கள், உருவங்கள், இயக்கங்கள், செயல்பாடுகளில் ஏற்படும் பாட்டர்ன் எனப்படும் ஒழுங்குகள் ஆகியவற்றைத் தொகுத்தனர்.

பிறகு கம்ப்யூட்டர் மென்பொருளில் தன்னார்வலர்கள் இன்னொரு வீடியோவைப் பார்த்து அதனுடைய ஸ்கேன் முடிவுகளை ஏற்றினர்.

இப்போது கணினியிடம் அவர்கள் பார்த்ததைப் படமாக வரையுமாறு ஆணையிட்டனர்.

கணினி தந்த முடிவைப் பார்த்த பேராசிரியர் காலண்ட் அசந்து போனார்.

அவரது முடிவுகள் இன்னும் பரம இரகசியமாக உள்ளன என்றாலும் அவர் பெற்ற வெற்றியை உலகம் அறிந்து விட்டது!

துல்லியத்திற்கு மிக நெருங்கியவையாக கணினியில் படங்கள் அமைந்துள்ளன!

இன்னொரு சோதனையில் காமடி நடிகர் ஸ்டீவ் மார்டின் வெள்ளை நிற சட்டையை அணிந்திருந்ததை அப்படியே கணினி சித்தரித்துப் படமாக்கிக் காண்பித்தது. ஆனால் அவர் முகத்தைக் காண்பிக்க முடியாமல் அது திணறியது. ஆனால் எதிர்காலத்தில் அதனுள் உள்ளிடும் தகவல்கள் துல்லியமாக் அனைத்தையும் காட்டும் என்பதை விஞ்ஞானிகள் அறிந்து மகிழ்கின்றனர்.

jack-gallant-engineering-thoughts

இன்னொரு சோதனையில் அதில் கலந்து கொண்டவர்களிடம் வானத்தின் பரப்பையும் அதில் விமானம் ஒன்று பறந்து செல்வதையும் காண்பித்தனர்.

கணினி வானத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியது. விமானத்தை அதனால் படம் பிடித்துக் காட்ட முடியவில்லை. ஆனால் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டால் எதையும் கணினி காண்பிக்கும் என்பது உறுதி.

‘நீங்கள் நினையுங்கள்; உங்கள் எண்ணங்களைப் பிடித்துத் திரையில் காட்டுகிறோம்’, என்கின்றனர் விஞ்ஞானிகள் மிகுந்த நம்பிக்கையுடன்!

இந்த் புது விதமான உத்தி உலகில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்களை நினைத்தாலேயே பிரமிப்பு ஏற்படுகிறது, இல்லையா!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஜப்பானில் பிறந்து அமெரிக்க  குடிமகனாக இன்று வாழ்பவரான ஷுஜி நகாமுரா (Shuji Nakamura – தோற்றம் 22-5-1954) ஒரு பெரிய விஞ்ஞானி. இயற்பியலில் 2014ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை இவர் பெற்றார். லைட் எமிட்டிங் டையோடுகளைச் சுருக்கமாக நாம் இப்போது எல் இ டி (LED) என்கிறோம். ப்ளூ எல் இ டி கண்டுபிடிப்பிற்காக நகாமுரா நோபல் பரிசைப் பெற்றார்.

1979 ஆம் ஆண்டு மாஸ்டர் டிகிரியைப் பெற்ற அவர் டோகுஷிமா என்ற சிறிய நகரத்தில் இருந்த  நிசியா கெமிக்கல் (Nichia chemical) என்ற கம்பெனியில் வேலை பார்க்க ஆரம்பித்தார். பலத்த போட்டியின் காரணமாக அந்த கம்பெனி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.

 

ucsb_nakamura

1988இல் நகாமுரா நிறுவனத்தின் உரிமையாளரான் ஒகவா நொபுவோவிடம் நேரடியாகச் சென்றார். 30 லட்சம் அமெரிக்க டாலர்களைத் தருவதோடு ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் ஆராய்ச்சி செய்ய அனுமதியையும் வேண்டினார். அவரே ஆச்சரியப்படும்படி உரிமையாளர் சரி என்று சொல்லி விட்டார்,

நகாமுரா தனது இடைவிடாத ஆராய்ச்சியினால் ப்ளூ எல் இ டிக்களை உருவாக்கும் உத்தியைக் கண்டு பிடிக்கவே கம்பெனி பெருத்த லாபம் அடைந்தது. கற்பனைக்கு எட்டாத அளவு லாபம்! ஆனால் நிறுவனமோ நகாமுராவைக் கண்டு கொள்ளவே இல்லை.

2000ஆம் ஆண்டில் நிறுவனம் நகாமுராவிடம் தனது கண்டுபிடிப்பை யாரிடமும் சொல்லக் கூடாது என்று நிபந்தனை விதித்தது.

கலிபோர்னியா பல்கலைக் கழகமோ இப்படி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என்று நகாமுராவுக்கு அறிவுரை வழங்கியது.

நகாமுராவின் மீது நிசியா, வணிக ரகசியங்களை வெளியிடுவதாக வழக்கு ஒன்றைத்  தொடர்ந்தது. நகாமுராவும் பதில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

1930 லட்சம் டாலரை (ஒரு டாலர் சுமார் 67 ரூபாய்கள்) த்னது கண்டுபிடிப்பிற்கான தொகையாக நகாமுரா கேட்டார். கம்பெனி வழங்கியதோ வெறும் 180 டாலர்கள் தான்!

இறுதியாக 81 லட்சம் டாலர் தர கம்பெனி சம்மதித்தது. நகாமுராவிற்கு இதில் ஏமாற்றம் தான்! என்றாலும் வெறும் 180 டாலரிலிருந்து 81 லட்சம் டாலரைத் தர கம்பெனி சம்மதித்ததை வழக்கின் வெற்றியாக அவர் ஏற்றுக் கொண்டார்.

உலக வரலாற்றில், குறிப்பாக ஜப்பானிய வணிக நிறுவன வரலாற்றில் இந்த வழக்கு குறிப்பிடத்தகுந்த வழக்காக அமைந்து விட்டது.நகாமுரா இன்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மட்டுமல்ல; பெரிய பணக்காரரும் கூட!

*********

 

 

உருக்கமான உண்மைக்கதை; யாதும் ஊரே யாவரும் கேளிர்! (POST No.3016)

baby kiran

Written  by London Swaminathan

Date:28 July 2016

Post No. 3016

Time uploaded in London :–  17-30

(Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

எந்த ஊரும் எமது ஊரே; எல்லோரும் உறவினரே – என்று புறநானூற்றில் கனியன் பூங்குன்றன் செப்பினான். உலகமே ஒரு குடும்பம் = வசுதைவ குடும்பகம் – என்று சம்ஸ்கிருத புலவர்கள் இயம்பினர். ஆனால் இந்தக் கருத்து உலகம் முழுதும் பல மொழிகளில் உளது; செயல்முறையில் இதைப் பின்பற்றுவோரும் உளர்.

 

லண்டனில் தினமும் இலவசமாக விநியோகிக்கப்படும் METRO மெற்றோ பத்திரிகையில் ஒரு உருக்கமான உண்மைக் கதை இன்று வெளியாகியது. இதோ அந்த உண்மைச் சம்பவம்.

joe and baby

“1994 ஆம் ஆண்டு, ஏப்ரல் 30-ஆம்தேதி.

அதாவது 22 ஆண்டுகளுக்கு முன்னர், ஜோ கேம்ப்பெல் என்ற இளைஞர் கிழக்கு லண்டனில் ஒரு டெலிபோன் ‘பூத்’துக்குப் போனார். கீழே ஒரு பொட்டலம் கிடந்தது. யாரோ உருளைக் கிழங்கு வதக்கலை (சிப்ஸ்) போட்டுவிட்டனர் என்று அதை ஒதுக்கித் தள்ளியபோது அது பிறந்து இரண்டு மணி நேரமே ஆன குழந்தை என்பதை அறிந்தார். உடனே போலீசுக்குப் போன் செய்தார்.

 

அந்தக் குழந்தை ஒரு பெண் குழந்தை. இப்போது அவள் பெயர் கீரன் ஷேக்.

 

பெற்ற மனம் சும்மா இருக்குமா? அந்தக் குழந்தையைப் பொட்டலம் கட்டிப்போட்ட தாயும் சமாரிட்டன்ஸ் (Samaritans) என்னும் அமைப் புக்குப் போன் செய்து ஒரு குழந்தை ஒரு டெலிபோன் பூத்தில் இருக்கிறது என்று பகரவே எல்லோரும் உஷாராயினர்.

 

குழந்தையைப் பெற்ற தாயாருக்கு அந்தப் பெண்குழந்தை முறை தவறிய உறவால் பிறந்ததால் அப்பெண் குழந்தையை எறிந்துவிட்டார். அக்குழந்தை சமூகநலப் பிரிவின் (Social Services) பார்வையில் வளர்க்கப்பட்டது.

 

குழந்தையைக் காப்பாற்றிய, ஜோ கேம்ப்பெல்(Joe Campbell) ஆண்டுதோறும் அக்குழந்தைக்கு பரிசுப் பொருட்களையும், வாழ்த்து அட்டைகளையும் அனுப்பிவந்தார். சமூக நலப்பிரிவு அதை நிறுத்தும்படி அவருக்குக் கட்டளையிட்டது. காப்பாற்றிய ஜோ கேம்ப் பெல் கறுப்பின இளைஞர். இந்தப் பெண்ணோ ஆசிய நாட்டவருக்கும் வேறு கலப்பின மனிதருக்கும் பிறந்தவள்.  ஐந்து வயதுச் சிறுமியை சுவீகாரம்/ தத்து எடுக்க அவர் முன்வந்த போது அதையும் சோஷியல் சர்வீஸ் (சமூக நலப் பிரிவு) நிராகரித்துவிட்டது. காரணம் ஜோ, திருமணமாகாதவர்.

joe

கடைசியாக ஒரே ஒரு முறை அந்தச் சிறுமியுடன் புகைப்படம் எடுக்க மட்டும் சமூக நல அதிகாரிகள் அனுமதி கொடுத்தனர். ஆனால் ஜோவுக்கோ அந்தச் சிறுமியை மறக்கவே முடியவில்லை. எப்போதும் அவர் மீதான அன்பு வளர்ந்தது. ஜோவுக்குக் கல்யாணம் ஆகி ஐந்து வயது முதல் 17 வயது வரையுள்ள ஐந்து குழந்தைகள் இப்போது உள்ளனர். அவர் தன் குழந்தைகளிடம் தான் ஒரு குழந்தையை மீட்ட கதையைச் சொல்லி உங்களுக்கு வளர்ப்பு சகோதரி ஒருவரும் உண்டு  அவள் எங்கோ இருக்கிறாள் என்று இயம்புவார்.

 

திடீரென சில நாட்களுக்கு முன்னர் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஜோ, வேலை பார்க்கும் கூரியர் (Courier) கம்பெனியில் சக ஊழியர் ஒருவர், மெற்றோ பத்திரிக்கையில் வந்த ஒரு அறிவிப்பைக் காட்டினார். ஜோ அல்லது ஜான் என்ற ஒருவர் தன்னைக் காப்பாற்றியதாகவும், அவரைப் பார்க்கத் தான் ஏங்குவதாகவும் அந்த பெண்மணி கூறியிருந்தாள். முதலில் ஜோ அது தான் இல்லை என்றார். ஆனால் அப்பெண்ணின் படத்தைப் பார்த்தவுடன், மெற்றோ அலுவலகத்தைத் தொடர்புகொண்டார். இருவரும் சந்திக்க மெற்றோ தனது அலுவலகத்திலேயே இடம் கொடுத்தது. இப்போது அபெண்மணிக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது.

kiran

கீரன் ஷேக் சொன்னார்: ஜோ கேம்பெல் எனது ‘ஹீரோ’ (உதாரண புருஷர்). நாங்கள் இருவரும் கிழக்கு லண்டனில் பாரெஸ்ட் கேட் பகுதியில்தான் பல்லாண்டுகள் வசித்திருக்கிறோம். ஒருவரை ஒருவர் கட்டாயம் சந்தித்திருப்போம். ஆனால் அறிந்தும் அறியாதவராக நடந்து போயிருப்போம்..

 

ஜோ கேம்ப்பெல் கூறினார்: என் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான நாள் இந் நாள். இப்படி ஒரு நாள் அக்குழந்தையைச் சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்ல. என் மனைவி ஊர்சுலாவுக்கும் என் ஐந்து குழந்தைகளுக்கும் கீரன் ஷேக்கை அறிமுகப்படுத்தி வைப்பேன்.

 

 

(இந்த சம்பவத்தில் சில விஷயங்களை பத்திரிக்கை கூறாமல் விட்டதற்குக் காரணம், ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியங்கள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காகவே)

 

Xxx  SUBHAM XX

 

Partnership and Employment Anecdotes (Post No.3015)

header_partnership

Compiled by London Swaminathan

Date:28 July 2016

Post No. 3015

Time uploaded in London :–  9-10 AM

(Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

One can’t cheat the other!

“Ok, Sam”, said one business man to his partner as they were about to enter the ocean at Coney Island on the afternoon they had decided to take off, “we forgot to close the safe!”

“What does it matter?” asked his partner.

“We are both here, ain’t we?”

 

Xxx

Max Brothers

The father of the Max Brothers was a tailor who operated, at one time, a business in Queens.  Marx was a much liked and very nice man, but the suits he made did not always fit. He entered, therefore, into a partnership with a very skilful Negro tailor under the firm name of Marx and Washington.

 

Xxx

employ425-Cropped-425x202

Employment Anecdotes

Unsteady hands led to a Steady Job!

A butter fingered man who had been suffering from a long siege of unemployment at last found a job in a China warehouse. He had been at work only a few days when he smashed a large vase. He was summoned to the manager s office and told by that dignitary that he would have to have money deducted from his wages every week until the vase was paid for.

“How much did it cost?”, asked the culprit.

“Three hundred dollars”, said the manager.

“Oh, that is wonderful”, he said.

“I am happy. At last I have a steady job”.

Xxx

Suicidal Note!

In Paris a young man named Arsene hanged himself at his master’s home. He left a memorandum bewailing his hard lot, and beseeching his parents to erect a simple tombstone to his memory with the inscription

“Born to be a man—died a grocery clerk”.

Xxx

employment

More Hiring and Firing Anecdotes

(Some time ago I posted some Firing and Hiring anecdotes).

A personnel manager found himself confronted with a real problem. He had explained to the applicant that he couldn’t place him because the firm was over staffed.

“That is alright”, said the job seeker, “the little bit of work I would do wouldn’t be noticed”.

–Subham–

காமத்தின் ஆற்றல் பற்றி கம்ப ராமாயணம் (Post No.3014)

cupids_arrow_tshirt-

Written by London Swaminathan

Date:28 July 2016

Post No. 3014

Time uploaded in London :–  8-32 AM

( Pictures are taken from various sources;thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

காம வசப்பட்டவர்களுக்கு என்ன நேரிடும் என்று  ஆரண்ய காண்டத்தில் கம்பன் இரண்டு பொன்மொழிகளை உதிர்க்கிறான்:-

 

1.கற்றனர் ஞானம் இன்றேல் காமத்தைக் கடக்கல் ஆமோ

பொருள்: என்னதான் கல்வி கற்றாலும் ஞானம் இல்லாவிடில், காமத்தை வெல்ல முடியுமா?

 

2.வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே

பொருள்:- எல்லா சக்தியையும் காமநோய் அழித்துவிடும்.

 

இதோ முழுப் பாடல்:-

 

(1).சிற்றிடைச் சீதை என்னும் நாமமும் சிந்தைதானும்

உற்று இரண்டு ஒன்று ஆய் நின்றால் ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன

மற்றொரு மனமும் உண்டோ மறக்கல் ஆம் வழி மற்று யாதோ

கற்றனர் ஞானம் இன்றேல் காமத்தைக் கடக்கல் ஆமோ

 

பொருள்:-

ராவணனுக்கு சிறிய இடையை உடைய சீதை என்ற பெயரும், அவனது மனமும் கலந்து, இரண்டு பொருள்கள் இல்லாமல் ஒன்றாகிவிட்டன. அதற்குப்பின்னர், ஒன்றிப்போன இரண்டிலே ஒன்றான சீதையை நீக்கி , மற்றொரு பொருளை நினைக்க அவனிடம் வேறு ஒரு மனம் இருக்கிறதா? இல்லை. அந்தச் சீதையை மறக்க வேறு வழி எது? கற்றுத் தேர்ந்தவர்களுக்கு, ஞானம் இல்லை என்றால் காமத்தை வெல்ல முடியுமோ? முடியாது.

 

கற்று அறிந்த விஷயம் நிறைய இருக்கலாம். ஆனால் விவேகமோ, ஞானமோ இல்லாவிடில் காமத்தை வெல்ல இயலாது.

 

ராவணன் மாபெரும் அறிஞன்; கலைஞன்; ஆனால் காமத்தையும், அஹங்காரத்தையும் அவனால் வெல்ல முடியவில்லை. அதுவே அவனுக்கு அழிவைக் கொண்டு வந்தது.

 

 

(2).பொன்மயம் ஆன நங்கை மனம் புக புன்மை பூண்ட

தன்மையோ அரக்கன் தன்னை அயர்த்தது ஓர் தகைமையாலோ

மன்மதன் வாளி தூவி நலிவது ஓர் வலத்தன் ஆனான்

வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே

—ஆரண்ய காண்டம், சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலம், கம்ப ராமாயணம்

 

ராவணனையே தாக்க அஞ்சிய மன்மதன் கூட, இப்போது அவன் மீது அம்பு எய்தும் ஆற்றல் பெற்றுவிட்டான். ஏனெனில் எல்லாவகையான வல்லமையையும் நீக்கும் சக்தி காமத்துக்கு உண்டு. ஏன் இது நடந்தது? பொன் மயமாக ஒளிவிடும் சீதை , தன் மனத்தே புகுந்ததால், ராவணன் பெருமை இழந்தான்.

heart-pierced-by-cupids-a-007

(3).விதியது வலியினாலும் மேல் உள விளைவினாலும்

பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும்

கதி உறு பொறியின் வெய்ய காமநோய்கல்வி நோக்கா

மதியிலி மறையச் செய்த தீமை போல் வளர்ந்தது அன்றே

 

கற்ற கல்வியை பின்பற்றாத ஒருவன் அறிவில்லாதபடி, மறைவாகச் செய்த தீமையைப் போல ராவணனின் காம நோய் மறைவாக வளர்ந்துதது. இதற்கு மூன்று காரணங்கள்:– ஊழ்வினை வலியது, நடக்கவேண்டிய செயல்கள் தப்பாமல் நடந்தே தீரும், இலங்கை நகரம் அழிய வேண்டிய காலம் நெருங்கிவிட்டது.

ஆரண்ய காண்டத்தில் அடுத்தடுத்து வரும் இப்பாடல்கள் படித்து இன்புறத்தக்கவை.

 

–subham–

 

 

மதசார்பற்ற (செகுலரிஸம்) கொள்கை சரியா?- 2 (Post No.3013)

Bishop-offers-cake

Article Written S NAGARAJAN
Date: 28 July 2016
Post No. 3013
Time uploaded in London :– 6-06 AM
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

(First Part was published on 26th July 2016)

செகுலரிஸம் சரியா? -2
ச.நாகராஜன்
இந்திய சரித்திரத்தைச் சற்று ஆழ்ந்து படித்தால் ஒன்று தெள்ளத் தெளிவாகப் புலப்படும்.
ஒரு நாளும் ஹிந்துக்கள் எந்த ஒரு நாட்டையும் ஆக்கிரமித்ததில்லை.
எந்த ஒரு தனி நபரையும் வலுக்கட்டாயமாக ஹிந்து மதத்திற்கு மாற்றியதில்லை.
எந்த ஒரு மதத்தின் வழிபாட்டு ஸ்தலத்தையும் இடித்ததில்லை.
அடுத்த மதத்தினரின் இடங்களைப் பிடுங்கியதில்லை
அழித்ததில்லை. அதில் ஹிந்து கோவில்களைக் கட்டியதில்லை.

 
‘உங்கள் மதம் எதுவானாலும் அதை அப்படியே கடைப் பிடியுங்கள்’ என்பது தான் எந்த ஒரு ஹிந்து ஆசார்யரின் அன்புரையாக இருந்திருக்கிறது.
ஆனால் மாறாக வாணிகம் செய்ய வந்த பிரிட்டிஷாரையோ அல்லது மதத்தைப் பரப்ப வந்த கிறிஸ்தவ பாதிரிகளையோ எடுத்துக் கொண்டால் கடைசியாக நமது சரித்திரம் இனம் காட்டும் அன்னை தெரஸா உட்பட அனைவருமே முதலில் ஹிந்துக்களை மதம் மாற்றுவதிலேயே கவனம் செலுத்தினார்கள் என்பதை அறிய முடியும்.

 

vijyakanth_0
ஹிந்து பழக்க வழக்கங்களை ஒழித்தல், ஹிந்து ஆலயங்களை அழித்தல், ஒவ்வாத இதர மேலை நாட்டு பழக்க வழக்கங்களை வலுக் கட்டாயமாகத் திணித்தல் ஆகியவையே அவர்களின் வழி முறையாக இருந்தது.
கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் தைரியமாக ‘வருகின்ற ஆயிரம் ஆண்டுகள் இந்தியாவில் நல்ல அறுவடை செய்யலாம் செய்யுங்கள்’ என்று சொல்லக் கூடிய அளவு ஹிந்துக்கள் தாராள மனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள் கூடவே வலி குன்றியும் ஒற்றுமை இன்றியும் இருக்கிறார்கள்.
முகமதிய கலாசாரத்தை எடுத்துக் கொண்டு இந்திய சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால் நெஞ்சமே பிளந்து விடும்.
எத்தனை கோவில்கள் இடிக்கப்பட்டன.
எத்தனை விக்கிரஹங்கள் நொறுக்கப்பட்டன.
வாள் முனையில் மதமாற்றம்.
ஹிந்துவாக இருந்தால் ஜஸியா வரி
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

 
ஆக இந்தப் பின்னணியில் நமது அரசியல் சட்டம் செகுலரிஸம் பேசாமல் சமத்துவம் என்ற கொள்கையை ஏன் முன் வைக்கவில்லை?
அனைவருக்கும் ஒரே சட்டம்! ஒரே இந்தியா! சமூகச் சட்டம் ஒன்றாக இருக்கட்டும்.
மதங்களின் வழிபாட்டு முறைகள் தனிப்பட்டவரின் விருப்பப்படி இருக்கட்டும்!
இது இல்லையே!
கிறிஸ்தவர்களுக்கு தனி போர்டு
முஸ்லீம்களுக்கு தனி போர்டு.
அவர்களின் நிலங்களை சொத்துக்களை அவர்களே தனிப்பட்ட முறையில் பராமரிக்க, செலவழிக்க, வசூல் செய்ய உரிமை.
ஆனால் ஹிந்து ஆலயங்கள் என்றாலோ அரசியல் வாதிகள் ஆட்சி செய்யும் அரசாங்கத்தின் பிடியில்!

 
ஆலயங்களில் வரக்கூடிய பக்தர்களின் காணிக்கையை ஆலய பூஜைக்கன்றி இதர் ஆயிரம் வழிகளில் செலவழிக்க அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?
ஆலயங்களின் நிலங்கள் இடங்கள் மூலமாக பல லட்சம் வருமானம் வர வேண்டிய இடத்தில் ஒரு பைசாவும் வருவதில்லை அதை அரசியல்வாதிகள் கபளீகரம் செய்து தங்கள் விருப்பப்படி ஆக்கிரமித்திருப்பதையும் பார்க்கிறோம்!

 

கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தங்கள் விருப்பப்படி தங்கள் வழிபாட்டு ஸ்தலத்தைப் பராமரிக்க உரிமை கொடுக்கும் சட்டம் ஹிந்து கோவில்களில் அதிக வருமானம் உள்ள கோவிலகளின் பணத்தை அந்தக் கோவில்களின் பராமரிப்புக்கும் சரியாகச் செலவழிப்பதில்லை; சற்று வருமானம் குறைந்த கோவில்களின் பூஜைகளுக்கு ஆகம விதிகளின் படி செய்வதற்கான பணத்தையும் தருவதில்லை.
ஆன்மீகக் கோவில்களின் பணம் அரசியல்வாதிகளின் மனம் போன படி செலவழிக்க அனுமதி!

 
திராவிட தீய சக்திகள் இதைத் தானே விரும்புகின்றன. என்ன ஒரு ஆனந்தம் அவர்களுக்கு – சீரங்க நாதரையும் தில்லை நடராசரையும் பீரங்கி வைத்துப் பிளக்கத் துடிக்கும் ‘கண்மணிகள்’ அல்லவா அவர்கள்!
ஆக இந்த குறைபாடுகள் ஏன்?
ஒரே வரியில் சொல்லி விடலாம் – பிளவுபட்டுள்ளது ஹிந்து சமுதாயம் என்று!
இந்தப் பிளவு பட்ட சமுதாயத்தை ஒன்றாக்கி ஹிந்துக்கள் அனைவரும் ஓரிழையில் இணைக்கப்படும் போது இந்தியாவில் அரசியல்வாதிகளின் சதிராட்டங்கள் முடிந்து போகும்.

Christians
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் தங்கள் தங்கள் விருப்பப்படி வழிபாடு செய்வர், ஒரு சட்டத்திற்குட்பட்டு!
ஹிந்துக்களின் ஆலயங்களும் சொத்துக்களும் அதற்கான வழியில் முறைப்படி கண்காணிப்புடன் பராமரிக்கப்படும்.
அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் ஒரே அரசியல் சாஸன சட்டம் அமையும்!
வலிமை வாய்ந்த ஹிந்து சமுதாயத்தில் ஆதாயம் பார்க்க நினைக்கும் அரசியல்வாதிகள் அறவே நீக்கப்பட்டிருப்பார்கள்.
இந்த ஹிந்துக்களை ஓரிழையில் இணைக்கும் பணியை யார் செய்வது?
அதற்கான அற்புதமான இயக்கமாக நமக்குத் தெரியும் ஒரே இயக்கம் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கமே
இப்படி ஹிந்துக்களை இணைக்க, ‘ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள்’ விடுவார்களா?
தடைகள், தடைகள், தடைகள்.
என்றாலும் இந்த சமுதாயம் ஒன்று சேர்ந்தே தீரும்.
சங்கம் வெற்றி பெற்றே தீரும்!
அப்போது அரசியல் சாஸனத்தின் செகுலரிஸம் உண்மையான சமத்துவத்தைக் கொண்டுள்ள வகையில் இருக்கும்!
இப்படி நம்பலாம்.
அதற்காக நம்மளவில் நாமும் ‘அணில் சேவை’ செய்வது போல சேவையைச் செய்யலாம்!
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் வலுப் பெறுவது ஒன்றே நாட்டின் சகல பீடைகளையும் ஒழிக்கும் ஒரே வழியாகும்!
********** முற்றும்

Hare Krishna Rath Yatra, 17th July 2016: Best Pictures of Chariot Festival (Post No.3012)

 

Compiled by London Swaminathan

Date:27 July 2016

Post No. 3012

Time uploaded in London :–  21-37

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

Annual Ratha Yatra (Chariot Festival of Iskcon) was held on 17th July 2016 in Central London. Like previous years, thousands of people gathered in Central London. Three Chariots started from Hyde Park and finished in Trafalgar Square. Through out the route thousands and thousands had the darshan of the three chariots. Tourists were amazed to see such a thing in central London. They took lot of pictures and selfies with the chariots, devotees and onlookers.

 

Hare Krishna devotes prostrated before the Rathas on the roads. Food was distributed to thousands of people at the finishing place. Throughout the route Bhagavad Gita and other books were distributed for a token donation. Devotees from other European cities also took part in it. Senior White and Black devotees were sitting on the Ratha at the foot of Jagannatha, Balabhadra and Subhadra.

Dancing and singing added colour to the Rath Yatra. Several Bhajan groups were singing the name of Lord Krishna and Lord Rama. Even white women came in sarees. It was a colourful show. Children also joined their parents by walk and riding on their shoulders. I saw a few pregnant devotees and women with children in Prams.

 

Though twenty other Tamil Temples also conduct Chariot Festivals every summer, they use the local routes around their temples. Hare Krishna people are the only devotees allowed in Central London. Their discipline is well known. Very few police were visible. Crowd control and traffic control were done efficiently by the volunteers. It was an enjoyable day for the devotees and the tourists.

 

Though I have posted lot of pictures on face book, I have selected some good pictures and post here.

IMG_3529

IMG_3537

 

IMG_3541

 

IMG_3547

IMG_3516

 

IMG_3554

 

IMG_3567

 

IMG_3581

 

IMG_3585IMG_3592.JPGIMG_3597IMG_3610

 

IMG_3618

 

IMG_3622

 

IMG_3625IMG_3643IMG_3647IMG_3666

 

IMG_3671IMG_3681

 

IMG_3686

 

IMG_3711

 

IMG_3725

 

IMG_3735

 

IMG_3740

 

 

Namaskar to all devotees.

–Subham–

Bosses and Executives Anecdotes (Post No.3011)

boss_irrational_number_employee_906375

Compiled by London Swaminathan

Date:27 July 2016

Post No. 3011

Time uploaded in London :–  18-36

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

boss

Talking to God twice a day!

Grocer Whalen, during his administration of the World Fair , was known for his inaccessibility.  The story was told of one man, who, after repeated rebuffs, stormed past the receptionist one morning. The astonished girl called out,

“You can’t speak to Mr Whalen”.

The visitor paused in his advance long enough to say,

“Young Lady, I talk with God twice a day and He listens to me. I can certainly talk to Grover Whalen”.

He got his interview.

 

Xxx

Time to Think!

Into the office of one of his subordinate executives came Edward H Harriman, the Railroad King. His unexpected entrance caught the man tilted back in his chair with his feet on his desk. The executive hastily straightened up, fearing a possible scene, and with visions of being fired on the spot.

With relief he heard Harriman say, “I am glad you take time to think.”

Xxx

cartoons104

Inspiring Slogan!

Ira Hirschman, the department store executive, once visited a department store in a medium sized mid-western city. The manager of the store was a bustling little man filled with self- importance and a belief in himself as a modern high pressure executive.

“One of the things I pride myself on, he explained, is the morale of the personnel in the store I keep them up on their toes all the time with inspiring slogans.  You would be surprised how it works. Now the slogan this week is one I thought up myself. If a thing is worth doing, it is worth doing at all”.

 

Xxx

 

Cheat got Double Pay!

The celebrated newspaper publisher, James Gordon Bennet, was a man of harsh principle, and most especially was he intolerant of drinking. One time one of his pressmen turned up, after a spree, with a conspicuous black eye. Bennet happened to enter the pressroom and, fearful of being spotted and asked for an explanation, the culprit hastily smeared printers ink over his face, and applied himself to his tasks.

Who is that fellow, Bennet demanded, noting the grimy workman.

“What are you paying him?”, he asked next.

The foreman told him.

“Double it, ordered Bennet. He is obviously doing more work than anyone else in the place”.

Xxx

Banker’s Hours!

The owner of a fruit and vegetables store employed a boy whose duty it was to be on hand at 3 o clock every morning to deal with the truck farmers. The proprietor did not arrive until opening time.  For the sake of checking up he unexpectedly came to the shop one night, and at 3 o clock the boy had not arrived. 3-05 and the had not yet come. A moment or so later the boy hastened in.

“So, bellowed his employer, Banker’s hours!”

(Banker’s Hours= Short working hours)

XxxSubhamXxx

 

இதயச் சிறையில் காதலி: கம்ப ராமாயண இன்பம் (Post No. 3010)

heart-pierced-by-cupids-a-007

 

Article written by London Swaminathan

Date:27 July 2016

Post No. 3010

Time uploaded in London :–  7-57 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பெண்கள், காதல் இவைகளைக் குறிப்பிடுகையில் இதயம் போன்று ஒரு படம் எழுதி அதில் ஒரு அம்புக்குறி போடுவதைக் காண்கிறோம். இது அதர்வ வேதத்தில் உள்ள உருவகம்; இதை இன்றும் காதலர் தினத்தன்று பயன்படுத்துவதைக் காண்கிறோம். இது பற்றியும் தமிழில் இருதயம் என்றே சொல் இல்லை என்பதையும் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதியுள்ளேன். குருத்து என்பதே ஹ்ருத் என்று சம்ஸ்கிருதத்தில் இருக்கிறது, இதுவே ஹார்ட் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மூலம் என்றும் குருதி (இரத்தம்) என்பதே இதற்கு ஆதாரம் என்றும் எழுதினேன். இதன் மூலமாக பழைய மொழிக் கொள்கைகள் பித்தலாட்டம் என்றும் ஆரிய-திராவிட மொழிக் குடும்பம் வேறு வேறு இல்லை என்பதையும் நிலைநாட்டினேன். இதை உலகம் விரைவில் ஏற்கும்.நிற்க.

 

ஒரு பெண்ணைப் பார்த்தால், அவள் காதலில் மயங்கி, நீ என் இதயத்தில் இருக்கிறாய் என்று சொல்லுவதும் உண்டு.

 

ஒரு பெண்ணைப் பார்த்தால், அவள் காதலில் மயங்கி, நீ என் இதயத்தில் இருக்கிறாய் என்று சொல்லுவதும் உண்டு. இதுவும் இந்துக்கள் கற்பித்ததே.

அன்பு எனும் சிறையில் அகப்பட்ட யாருக்கும் இது பொருந்தும்! ராமனை எப்போதும் தன் இதயத்தில் காட்டும் அனுமனின் படத்தை நாம் எல்லோரும் பார்த்திருப்போம்.

 

கம்பராமாயணத்தில் ஒரு அருமையான பாடல் வருகிறது. ராவணனின் இதயத்தில் சீதை சிறை வைக்கப்பட்டுள்ளாம்!

 

மயிலுடைச் சாயலாளை வஞ்சியா முன்னம் நீண்ட

எயிலுடை இலங்கை வேந்தன் இதயம் ஆம்  சிறையில் வைத்தான்

அயிலுடை அரக்கன் உள்ளம் அவ்வழி மெல்ல மெல்ல

வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெய் போல் வெதும்பிற்று அன்றே

ஆரண்ய காண்டம், சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலம், கம்ப ராமாயணம்

 

பொருள்:–

உயர்ந்த மதிலையுடைய இலங்கைக்கு அரசனான ராவணன், மயில் போன்ற சீதையைக் கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைப்பதற்கு முன்னர், தனது இதயம் என்னும் சிறையில் வைத்தான். அப்பொழுதே வெய்யிலில் உருகும் வெண்ணை போல அவனது மனமும் உருகிற்று. (ஆரண்ய காண்டம், சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலம், கம்ப ராமாயணம்).

 

 

வெய்யிலில் உருகும் வெண்ணெய் என்ற உவமையும் படித்துப் படித்து இன்புறத் தக்கது.

 

நாகரீக வளர்ச்சி பெற்ற ஒரு சமுதாயத்திலேயேதான் இதுபோன்ற உவமைகள் தோன்ற முடியும். இது அதர்வண வேதத்திலேயே வருவதால் கம்பன் அந்த உவமையைக் கையாண்டதில் வியப்பொன்றும் இல்லை. பாரத சமுதாயமே பழங்கால உலகின் தலைவன், முதல்வன் என்பதில் இனிமேலும் ஐயப்பாட்டிற்கு இடமுண்டோ?

 

–சுபம்—

 

Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda ( Research article written by London Swaminathan, posted on 26 September 2012)

 

சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிக்கை ஆசிரியர்: எனது தந்தையார் (Post No.3009)

appa, amma picture

Article Written S NAGARAJAN
Date: 27 July 2016
Post No. 3009
Time uploaded in London :– 5-24 AM
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

திரு திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்காக

சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் பத்திரிக்கையாளரும். ஆன்மீகவாதியுமான தினமணி மதுரைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய திரு வெ.சந்தானம் அவர்களின் புத்திரர் தனது தந்தையாரைப் பற்றிய நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்

வெ.சந்தானம்  தோற்றம்:4-9-1911 மறைவு:15-8-1998

 

 

எனது தந்தையார்

————————

சந்தானம் நாகராஜன்

 

தேசப்பணி

எனது தந்தையார் திரு வெ.சந்தானம் தேசீயம் இலக்கியம் தெய்வீகம் ஆகியவற்றில் ஈடுபட்டு நல்லனவற்றை நாள் தோறும் பரப்பிய புண்ணியர் என்று அவரை நன்கு அறிந்தவர்கள் கூறும் போது தான் அவரின் பெருமையை என்னால் உணர முடிந்தது. ஏனெனில் மிகவும் நெருக்கமாகப் பல ஆண்டுகள் கூடவெ வாழ்ந்த போதிலும் தன்னைப் பற்றியும் தான் ஆற்றிய பணியைப் பற்றியும் அவர் ஒரு வார்த்தை கூடக் கூறியதே இல்லை.

 

 

அவர் ஏன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதே எங்களுக்குத் தெரியாது. இதைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆசையிருந்தாலும் அது பற்றி அவர் கூறியதே இல்லை. ஆனால் டி,வி.எஸ் ஸ்தாபனத்தார் வெளியிடும் ஹார்மனி இதழின் ஆசிரியராக புதுக்கோட்டை திரு வெங்கடராமன் பொறுப்பேற்றிருந்தார். அவர் ஒரு நல்ல நண்பர். அவர் என்னிடம் தந்தையாரின் சுதந்திரப் போராட்ட பங்கைப் பற்றி ஒரு கட்டுரை வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டார். இதை முன் வைத்து என் தந்தையாரிடம் ஒரு கட்டுரை கேட்டேன். அதில் மலர்ந்தது ஒரு அற்புத கட்டுரை- அதில் அவரது பணி லேசாக குறிப்பிடப்பட்டு இருந்தது. சைமன் கமிஷன் பகிஷ்காரத்தை ஒட்டி வெள்ளையனே வெளியேறு என்று அச்சிடப்பட்டிருந்த பிரசுரத்தை அவர் சென்னை கடற்கரையில் விநியோகம் செய்ததற்காக ஆறு மாத சிறை தண்டனை பெற்றார் என்று அந்தக் கட்டுரை வாயிலாகத் தெரிய வந்தது.

 

 

 

தாமிரப் பட்டயம் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக வழங்கப்பட்டபோது திரு வை.சங்கரன், திரு ராஜாராம் உள்ளிட்டோர் மதுரையிலேயே கலெக்டர் புருஷோத்தமதாஸிடமிருந்து பெற்றனர்.பழைய போர் வீரர்கள் ஒன்றாகக் குழுமிய காட்சியைக் கண்ட கலெக்டர் இப்படிப்பட்ட பெரியவர்களுக்கு பட்டயம் வழங்க தனது நற்பேறை எண்ணி மகிழ்ந்தார்.

 

 

இலக்கியப் பணி

 

திரு பி.எஸ்,ராமையா மதுரையில் அவர் எழுதிய பிரஸிடெண்ட் பஞ்சாக்ஷரம், மல்லியம் மங்களம், தேரோட்டி மகன் ஆகிய நாடகங்களை நடத்தும் எஸ்.வி.சஹஸ்ரநாமம் குழுவினருடன் வந்தார். எங்கள் வீட்டிற்கு நேரடியாக அவர் வந்தது வெங்கலக் கடையில் யானை நுழைந்தது போல இருந்தது. நீண்ட காலப் பழக்கம் ஆதலால் வாடா, போடா என்ற வசனங்களைக் கேட்ட எனக்கு அது புதிதாக இருந்தது, ஏனெனில் என் வீட்டிற்கு என் தந்தையாரைப் பார்க்க வருவோர் தினமணி பொறுப்பாசிரியர் என்ற முறையில் மிகுந்த மரியாதை தருவர்.

 

 

ஆகவே திரு பி.எஸ். ராமையா வீட்டில் அமர்ந்த போது அவரது பழைய கால நினைவுகளைக் கிண்டி விட்டேன். சரசரவென்று அவர் அந்த மணிக்கொடி காலத்தைப் பிட்டு வைத்தார். அவர் பேசுவதே ரஸமாக இருந்தது. ஐந்து ரூபாய் சந்தாவாக வந்தால் அன்று தீபாவளிக் கொண்டாட்டம் தானாம்! அனைவரும் நடந்தே சென்று ஒரு பெரிய ஹோட்டலில் விருந்து போல சாப்பிட்டு உற்சாகமாக வந்து அடுத்த இதழின் பணியைத் தொடங்குவார்களாம்.

 

 

 

பின்னால் தனது மணிக்கொடிக் காலம் என்ற நூலில் எனது தந்தையாரைப் பற்றி பி.எஸ்.ராமையா குறிப்பிட்டிருக்கிறார். அவரது மணி விழாவைப் பெரிய அளவில் நடத்துவது என இலக்கிய அன்பர்களால் தீர்மானிக்கப்பட, என் தந்தையாருடன் நானும் வத்தலகுண்டு சென்றேன்.

 

 

வத்தலகுண்டு ஒரே விழாக்கோலம் பூண்டிருந்தது. மேளதாளத்துடன் திரு ராமையா அழைத்து வரப்பட்டார். திரு சி.சு.செல்லப்பா உற்சாகமாக ஆடி ஓடி அனைவரையும் வரவேற்றார். திரு ராமையாவின் முகம் மலர்ந்திருந்தது. வாழ்நாளிலேயே தன்னை கௌரவித்துவிட்டார்களே தமிழர்கள் என்று நினைத்தாரோ, என்னவோ!

 

 

கையில் காசு இல்லாமல் ஈஸி சேரை முறித்து விறகாகவும் அவர் ஆக்கியதுண்டு. பணம் ஆயிரக்கணக்கில் புரள லண்டனிலிருந்து,, “சந்தானம் உடனடியாக இங்கு வந்து விடு” என்று உற்சாகமாக அவர் என் தந்தைக்கு கடிதம் எழுதியதும் உண்டு. தமிழ் ஜீனியஸாக விளங்கிய அவர் மூலம் அவர்களது பழைய மணிக்கொடிக் காலத்தைப் பற்றியும் பாரதியார் பாடல்களைப் பரப்ப அவர்கள் எடுத்த முயற்சிகளையும் உணர முடிந்தது.

 

 

‘வெடிபடு மண்டலத் திடிபடு தாளம் போட’ என்ற பாட்டை எனது தந்தையார் ஞாயிற்றுக்கிழமைகளில் மதிய நேரத்தில் பாடும் போது காளி நேரில் நர்த்தனம் ஆடும் பிரமை எனக்கு உண்டாகும். அன்னை அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச் செய்தாய் என்னை என்ற வரிகளை உச்சஸ்தாயியிலும் அமைதியாக இறக்கமாகவும் பாடும் போது பாரதியின் சக்தி ஆவேசத்தை சுற்றி இருந்து கேட்கும் எங்களால் சுலபமாக உணர முடிந்தது.

 

 

லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனா என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்து அதில் கரீனினா என்பதை கரீனாவாக தமிழ் படுத்தியதன் காரணத்தையும் குறிப்பிட்டார். (தமிழில் கரீனினாவின், கரீரினாவை என்று வருவதைப் படிக்க வாசகர்கள் சிரமப்படுவார்கள் என்பதால் கரீனா என்ற மாற்றம் ஏற்பட்டது!)

 

 

தெய்வீகப் பணி

 

சுவாமிஜி கிருஷ்ணாவின் உபதேசத்தால் அதிகாலையில் கணபதி ஹோமம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என் தந்தையார். அச்சன்கோவிலுக்கு புஷ்பாஞ்சலிக்காக சென்றது, தர்மபுரம் திருவாவடுதுறை ஆதீனங்களில் நடத்தப்படும் திருமந்திர மற்றும் சைவ மகாநாடுகளில் பங்கேற்றது, பிரசாந்தி நிலையத்தில் ஸ்ரீ சத்யசாயி பாபாவை தரிசித்தது, இளையாத்தங்குடியில் பெரியவாளை தரிசித்தது, சிருங்கேரி மஹா சந்நிதானம் எங்கள் இல்லத்திற்கு வந்தது என ஏராளமான நிகழ்ச்சிகளை உணர்ச்சிபூர்வமாக அனுபவித்து இறையருளை அனுபவித்தோம். ஸ்ரீ சத்யசாயி பாபாவிடம் எனது தந்தையார் அவர் மீது தான் இயற்றிய கீர்த்தனங்களை சமர்ப்பித்தபோது அது பாடியபோதே சமர்ப்பிக்கப்பட்டதாகவும் பதங்கள் நன்கு வந்துள்ளன என்றும் கூறியதைக் கேட்டு நான் அதிசயித்துப் போனேன்.பாபா அவரை ஆபட்ஸ்பரியில் நடந்த மகாநாட்டில் ஒரே மேடையில் தன்னுடன் பேசுமாறு அழைத்தார்,

இதே போல திரு முத்துராமலிங்க தேவரும் என் தந்தையாரை தலைமை தாங்க அழைத்து மதுரையில் தெய்வீகப் பணியைப் பரப்பி வந்தார்.

 

 

பத்திரிகைப் பணி

எமர்ஜென்ஸி காலத்தில் தினமணி தலையங்கப் பகுதியை வெற்றிடமாக வெளியிட்டுத் தன் எதிர்ப்பைத் தெரிவித்தது. அந்தக் காலத்திலும் அதற்கு முன்னும் பின்னரும் திரு ராம .கோபாலன் உள்ளிட்டோர் எனது இல்லத்திற்கு அடிக்கடி வந்து ஜனநாயகம் தழைக்க வேண்டிய அவசியத்தைப் பகிர்ந்து கொள்வர். எமர்ஜென்ஸி நீக்கப்பட்ட போது ஜனநாயகம் புதிய பிறப்பை எடுத்தது. அந்த கால கட்டத்தில் அரசு அதிகாரிகள் ஒழுக்கம் உள்ள சீலர் என்று என் தந்தையாரைப் பாராட்டி தினமணி அவசர நிலையைக் கடுமையாக எதிர்த்த போதிலும் தங்களின் அதீத செய்கைகள் எதையும் செய்யவிடவில்லை.

 

 

பத்திரிக்கை பணி என்பதால் அதுவும் தினசரி என்பதால் அன்றாடம் நூற்றுக் கணக்கான நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கும். இவற்றை சமூகப் பொறுப்புடன் அவர் கையாண்டு செய்திகளைப் பிரசுரித்து வந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

ராமேஸ்வரத்தில் கடல் பொங்கி ஊருக்குள் வந்து விட்டது என்று கேள்விப்பட்டவுடனேயே ஒரு சிறிய காரில் நேரடியாக என்ன நடந்தது என்பதைப் பார்க்கத் தந்தையார் கிளம்பினார். விவரத்தின் முழு தாக்கமும் தெரியாத சிறுவனான நானும் காரில் ஏறி அமர்ந்து கொண்டேன். மானாமதுரைக்கு முன்பாகவே கடல் சாலையை மூட சாலையைக் கண்டுபிடிக்க பல ஆட்கள் இறங்கி இரு பக்கமும் சாலையின் ஓரத்தில் இருந்து சாலையின் எல்லையைக் காண்பித்தவாறே கார்களை மெதுவாக வழி நடத்திச் சென்றனர். போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராமையா அரசு வாகனங்களுடன் வந்தார்.

மானாமதுரையில் ஓரிடத்தில் வாகனங்களை நிறுத்தி  அனைவரையும் பின் தொடர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.நிலைமையின் தீவிரம் அவருக்கும் ஏனையோருக்கும் கொஞ்சம் கொஞ்சமாகப் புலப்பட ஆரம்பித்தது.ஒரு ரயிலையே காணோம் என்ற செய்தி வர ஆரம்பித்திருந்தது. உடனே என் தந்தையார் மதுரை திரும்பி அச்சில் ஓடிக் கொண்டிருந்த பத்திரிக்கையை நிறுத்தி நேரில் கண்ட நிலைமையை பிரசுரித்தார்.

 

 

ராமநாதபுர தினமணி நிருபர் திரு ஆதிநாராயணன் ஒரு தோணி மூலமாக ராமேஸ்வரத்திலிருந்து வந்து உலகத்திற்கு ராமேஸ்வரத்தின் நிலைமையை தினமணி மூலமாக அறிவித்தார். உடனே மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

இது போல ஆபத்து அல்லது அவசர காலங்களில் செய்தித்தாளின் முழு பலத்தையும் மக்களின் நலனுக்காக பலமுறை அவர் அர்ப்பணித்திருக்கிறார்.

 

 

 

செய்தித் தாள் என்பதே அன்றாட நிகழ்ச்சிகள் ஆயிரமாயிரத்தை எடிட் செய்து ஆறு அல்லது பத்துப் பக்கங்களில் கொடுப்பது தான். இதில் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டிருந்த எடிட்டரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடிட் செய்து சுருக்குவது முடியாத காரியம். ஏனெனில் அவை ஒவ்வொன்றும் சமுதாய நலனுக்காக பத்திரிக்கை எப்படி பாடுபட வேண்டும் என்பதை உணர்த்தி வந்ததால் தான்!அவற்றில் முக்கியம் அல்லாதது எதுவும் இல்லை!!

 

 

தந்தயாரின் மறைவை தாங்கிக் கொள்ள முடியாத ஒருவர் அவர் ஒரு மஹரிஷி போல என்று குறிப்பிட்டுப் புலம்பிக் கொண்டே இருந்தார்.

 

பணம், சொத்து, புகழ் இவற்றுக்கெல்லாம் ஏங்காமல் “என் கடன் சமுதாயம் நலன் பெற பணி செய்து கிடப்பதே” என்பது தான் மஹரிஷிக்கு இலக்கணம் என்றால் அவரும் ஒரு மஹரிஷி தான் என்று எனக்கும் தோன்றுகிறது.

 

**************

 

 

 

Indian Grammar Wonder! (Post No.3008)

450px-agastyaprambananindonesia

Statues of Agastya in Indonesia

Research Article written by London Swaminathan

Date:26 July 2016

Post No. 3008

Time uploaded in London :–  21-30

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 agastyanepal-carole-r-bolon

Statue of Agastya in Nepal

There is a beautiful verse in Tamil:

 

If there is no literature, no grammar;

If there is no sesame seed, there is no oil;

Like we extract oil from the seeds

We get grammar from literature

–Peragathyam (Big+Agastyam)

 

All of us are familiar with the chicken and egg question which came first? Chicken or Egg?

We are familiar with the question whether man came first or woman came first?

We have an answer at least for this question.

Adam came first and he made Eve out of his left rib. This story was copied from the Hindu scriptures. Atma became Adam and Jiivatmaa became Eve (atma) in the Old Testament (I have already dealt with it in my post “Sanskrit in the Bible”).

 

Hindus say that Parvati was the left side of Shiva and that form is known as Ardha Naareeswar (Half Shiva and Half Parvati/Uma). This is also basis for the ‘left rib’ story of Adam. Left always denotes woman in Hindu literature.

 

There is another story about Brahma falling in love with his own daughter. Stupid foreigners dubbed this as “Incest” without understanding the symbolism. This is again the basis for the Adam and Eve story. Adam fell in love with his own daughter created out of his left rib. This is copied again from the Brahma’s ‘incest’ story.

 

Going back to the original topic, which came first, Grammar or Literature? Tamils are very clear about it: Literature came first and then Grammar was done on the basis of existing literature. Later writers followed that grammar. After 1000 years they dropped some rules and invented new rules as we see in Tamil and Sanskrit.

agastya-in-london

Statue of Agastya in London V and A Museum

Both the languages were created by Lord Shiva from the same root (Sounds from his kettle drum). Foreigners who wanted to divide India invented two families –Aryan family and Dravidian family of languages which is wrong. Both the languages belong to the same family. Thousands of Tamil words are in English which has a known relationship with Sanskrit. This is possible because Tamil and Sanskrit belonged to the same family ( I have dealt with it in my previous research paper)

 

Great Grammar Wonder!

Agastya, a saint who lived in the Himalayas was sent by Lord Shiva to the South to codify a grammar for the Tamil language. We have inscriptional, archaeological and literary proof in Tamil epigraphs, Agastya Statues in South East Asia and literary evidence in Kalidasa and Tamil literature in support of this belief.

 

If we go by the Tamil verse that literature came first, we accept that there was literature in Tamil even before Agastya was sent to the South. The scholars believe that this happened between 700 BCE and 1000 BCE. Unfortunately, Tamils lost their books and their literature and the existing ones start only from first century BCE. One grammarian known as Tolkappiar , believed to be a disciple of Agastya wrote the grammar for Tamil – Tolkappiam which is used until today. But original Agastya couldn’t have been his Guru. Tolkappiam betrays a later age. One thing is certain that Tamils had literature before Agastya came. Tolkappiar had 12 contemporary grammarians including Agastya.

agastya

Sanskrit wonder!

If we apply the Tamil verse that literature came before grammar, we can see a big wonder. Panini was the oddest grammarian in the world. But he himself referred to ten other great grammarians. We did not have those grammars. If we accept the date of Panini as seventh century BCE. We must accept lot of books existed at that time; unfortunately, we did not have any work except the Vedic literature. The oldest book in the world — the Rig Veda– is dated between 1400 BCE and 6000 BCE. Even if we accept 1400 BCE, then another wonder awaits us. There are grammatical terms in Vedic literature which shows that there was a grammar. It was referred to in a religious book! This again means another thing that literature existed even before the Vedas.

 

Remember: Before Grammar was literature!

 

Another coincidence is that some of the names mentioned by Panini are found in the Vedic literature too. But we don’t know whether they are just saints with the same names or saints cum grammarians.

 

Pre- Paninian grammarians include Apisali, Kasyapa, Gargya, Galava, Cakravarmana, Bharadvaja, Sakatayana, Sakalya, Senaka and Sphotayana.

 

Yaska of 8th century BCE refers to the works of Saakataayana, Kraustuki, Gragya and several others.

 

Another wonder is that it shows that Hindus were far more advanced than any other civilization in the world 3500 years ago. Language (Sanskrit), Literature (Vedas), Linguistics (Yaska’s Nirukta) and Grammar (Panini) are the yard sticks of a civilisation. In the above four fields no language of today or ancient days comes closer to Sanskrit. Moreover this is the status after losing hundreds of Shakas (branches ) of the Vedas and thousands of books.

 

Long Live Tamil and Sanskrit.