About Brahmins: Buddha and Valluvar Think Alike!- Part 7 (Post No.3956)

Research Article Written by London Swaminathan

 

Date: 30 May 2017

 

Time uploaded in London- 20-37

 

Post No. 3956

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

Buddha in Dhammapada and Tiru Valluvar in the Tamil Veda ‘Tirukkural’ praised the Brahmins sky-high, but defined who is a true Brahmin as well.

 

Tamil poet Valluvar lived approximately 1000 years after the Buddha. He referred to Brahmins in at least four couplets directly and another six couplets indirectly; but Buddha referred to Brahmins in at least 45 couplets; Buddha was so obsessed with the Brahmins that he wanted them to follow him like the emperor Ajata satru and others.

Let me give some examples for comparison which will show that great men think alike.

One must remember that the Brahmins of those days lived like saints; the very term meant one who seeks Brahman; Tamil words for Brahmins are also synonyms of saints such as inward looking, who sees (seer). Other Tamil names included ‘men of six tasks’ ‘Veda reciters’.

Buddha also accepted the Vedic Sanskrit word Brahmana, synonymous with a saint. But he devoted one entire chapter for Brahmins. It follows the chapter Bikshu varga (Buddhis monks). so by Brahmin he meant only Hindu Brahmins/saints.

 

In short Brahmins were saints and saints were Brahmins in those days. That is how even Viswamitra was called a Brahmin by Vasishtha after a long penance observed by him. Tamil kings and emperors of North India donated a lot to the Brahmins; Asoka mentioned Brahmins first and then Sramanas in his inscriptions.

Virtuous are called Brahmins

 

“It is the virtuous that are called Brahmins (Anthanar in Tamil) for it is they that scatter kindness towards all that breathes”- Kural 30

“And a saint, a Brahmin, is pure from past sins; even if he had killed his father and mother, had murdered two noble kings, and had ravaged a whole kingdom and its people” (294 Dhammapada).

 

He who hurts not with his thoughts, or words or deeds, who keeps these three under control – him I call a brahmin -(391 Dhammapada).

xxx

 

Don’t Hurt Brahmins

 

“Cows yield less and men of six duties forget their book (Vedas), if the king does not guard justice”- (Kural 560)

Cows and Brahmins will be paired together in most of the Tamil verses and Sanskrit hymns (E.g Bhagavad Gita 5-18 and Sambandar Tevaram)

One should never hurt a Brahmin; and a Brahmin should never return evil for evil. Alas for the man who hurts a Brahmin; Als for the Brahmin who returns evil for evil- (Dhammapada 389)

 

xxxx

Men of Character

“ A Brahmin can learn anew the Vedas even if he forgets his leaning; but if he fails in his conduct he slips down in his rank of birth”- Kural 134

Brahmins are placed first in the four castes in all the ancient books. If they lose the character they lose their birth right.

It is Manu Smrti also.

A man becomes not a Brahmin by long hair or family of birth. The man in whom truth and holiness, he is in joy and he is a Brahmin -(Dhammapada 393)

Of what use is your tangled hair, foolish man, of use your antelope garment, if within you have tangled cravings, and without ascetic ornaments-(Dhammapada 394)

 

 

xxxx

King and the Brahmins

 

As the ultimate basis of the Vedas of the sages/brahmins and the dharma of wise men

stands the straight sceptre of a just king- Kural 543

 

Here Valluvar used the Tamil word ‘book of the Anthanar’ and the word Anthanar stands for brahmins.

 

It is sweet in this world to be a mother; and to be a father is sweet. It is sweet in this world to be a monk; and to be a saintly Brahmin is sweet (Dhammapada 332)

Who clings not to sensuous pleasurers, even water clings nt to the lotus leaf, or a grain of mustard seed  to the point of a needle – him I call a Brahmin -(Dhammapada 401)

 

 

xxx

Avoidance of Killing (Non Killing)

In another Kural/couplet he mentioned the fire sacrifices of the Brahmins:

Far better and holier than a thousand oblations on the sacrificial fires is the one sacred act of abstaining from the flesh of a slaughtered animal (Kural 259)

Manu gives the same message in Manu Smrti 5-53:

“The man who offers a horse sacrifice (Asva medha Yajna) every year for a hundred years and the man who does not eat meat, the two of them reap the same fruit of good deeds” -Manu 5-53

This is about the Brahmins sacrifices; though Asva medha was done by the kings, only Brahmins performed it for them.

Who hurts not any living being, whether feeble or strong, who neither kills nor causes to kill – him I call a Brahmin- (Dhammapada 405)

 

But although a man may wear fine clothing, if he lives peacefully; and is good, self-possessed, has faith and is pure; and if does not hurt any living being, he is a holy Brahmin, a hermit of seclusion, a monk called a Bikshu (Dhammapada 142)

xxx

Brahmins – Gods on Earth!

“Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods who enjoy who enjoy the food of the sacrifice”- Kural 413

Tamil words used by Valluvar ‘Kelvi’ litearlly means Sruti/Veda; ‘avi unavu’ = Havis food

Brahmins are called Busurar i.e. god among men in Tamil hymns; Satapata Brahmana call them living/walking gods.

He who lives in contemplation, who is pure and is in peace, and who has done what was to be done, who is free from passions, who reached the Supreme end – him I call a Brahmin – (Dhammapada 386)

xxxxx

In couplet 28 of Tirukkural, he mentioned Vedic mantras.

 

–Subham–

 

சங்க இலக்கியத்தில் வறட்சி! (Post No.3955)

Research Article Written by London Swaminathan

 

Date: 30 May 2017

 

Time uploaded in London- 9-58 am

 

Post No. 3955

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

வறட்சி பற்றி பாரத நாட்டு இலக்கியங்கள் எழுதி இருக்கும் விஷயங்கள் பல வரலாற்று உண்மைகளை எடுத்துரைக்கின்றன. மிகவும் அதிசயமான விஷயங்கள் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உள்ளன.

 

சிந்துசமவெளி நாகரீகம் எப்படி அழிந்தது என்ற செய்தியும் வறட்சி பற்றிய மஹாபாரதக் குறிப்பால் தெரியவருகிறது.

மஹாபாரத காலத்திலேயே சரஸ்வதி நதி வற்றிய செய்தி மஹாபாரதத்திலேயே பல இடங்களில் வருவதால் வேதங்கள் கி.மு 3102-க்கு முந்தையவை என்பது உறுதியாகிறது. வேதங்கள் ஜீவ நதியாக இருந்த சரஸ்வதி நதியை விதந்து ஓதுகின்றன. பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள், தொல் பொருட் துறை அடிப்படையில், மஹாபாரத காலம் கி.மு .1500 என்று எழு தி  இருப்பதை ஏற்றுக் கொண்டாலும்  வேதங்கள் 3500 ஆண்டுகளுக்கு முன் என்பது உறுதி ஆகிறது. வேதங்களைத் தொகுத்து அளித்ததாலும் , மஹாபாரதத்தை தொகுத்து வழங்கியதாலும் தான் நாம் ‘கறுப்புத் தீவுக்காரனை’ (க்ருஷ்ண த்வைபாயன) ‘வியாசன்’ (கட்டுரையாளன், எழுத்தாளன்) என்று போற்றுகிறோம்.

 

(( நான் பள்ளியில் படித்த போது யானை பற்றி ஒரு வியாசம் எழுது என்றுதான் கேள்வித்தாளில் இருக்கும்! இப்பொழுது யானை பற்றி ஒரு கட்டுரை எழுது  என்று வருகிறது.))

 

பத்து பிரிவுகளைக் கொண்ட பிராமணர்கள் எப்படி நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்றனர் என்றும் தெரிகிறது

முதலில் தமிழில் உள்ள விஷயத்தைப் பார்ப்போம்.

நற்றிணையில் (230) ஆலங்குடி வங்கனார் பாடுகிறார்:

முயப்பிடிச் செவியின் அன்ன பாசடைக்

…………

முனிவில் பரத்தையை என் துறந்து அருளாய்

நனிபுலம்பு அலைத்த வேலை நீங்கப்

புதுவறங்கூர்ந்த செறுவில் தண்ணென

மலிபுனல் பரத்தந் தாஅங்கு

இனிதே தெய்ய நின் காணுங் காலே –230

 

பொருள்

பரத்தையிடம் (ப்ர ஸ்த்ரீ) சென்ற தலைவா! அவளிடமே இரு; இங்கு வாராதே; உன்னைப் பார்த்த போதே வறண்ட நிலத்தில் பாய்ந்த புது மழை வெள்ளம் போல என் உள்ளம் குளிர்ந்து இருக்கிறது (அது போதும்)

 

இவ்வாறு வறண்ட நிலத்தில் பெய்த மழை (நீர், வெள்ளம்) என்ற உவமை சம்ஸ்கிருதத்தில் பல இடங்களில் வருகிறது. புகழ் பெற்ற கவிஞன் காளிதாசனும் ரகுவம்ச காவியத்தில் இந்த உவமையைக் கையாளுகிறான்:

ராவணன் என்னும் வறட்சியை திருமால் என்னும் மழை போக்கியது- இதுதான் காளிதாசன் சொல்ல வந்த செய்தி (ரகுவம்ச காவியம் 10-48)

 

தேவர்கள் பயிர்கள்; ராவணனுடைய கொடுமை பயிர்களுக்கு உண்டான வறட்சி; திருமால்-மேகம்; அவர் உதிர்த்த வாக்கு அமிர்தம். பயிர்கள் வறட்சியால் வாடின; மழை பொழிந்தது; நீரால் அவ்வாட்டம் மறைந்தது.

 

மஹாபாரதத்தில் இரண்டு கதைகள்

அங்க தேச மன்னனான லோமபாதன், சில பிராமணர்களுக்கு தீங்கு செய்யவே அவர்கள், அந்த நாட்டில் நீண்ட காலம் வறட்சி ஏற்படட்டும் என்று சபித்தனர். “நல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யும் மழை”– என்ற சான்றோர் வாக்கை அறிந்த லோமபாதன், மிகச் சிறந்த ரிஷ்ய ஸ்ருங்கர் என்ற முனிவரை தம் நாட்டுக்கு அழைக்க எண்ணினான். அவரை அழகான பெண்களை அனுப்பி தந்திரமாக அழைத்து வந்தான். நாட்டில் வறட்சி நீங்கியது. தன்னுடைய வளர்ப்பு மகள் சாந்தாவை அவருக்கு திருமணமும் முடித்தான் (மஹா. 3-110)

இதில் அங்க தேச வறட்சி பற்றி நாம் அறிகிறோம்.

 

சாரஸ்வத பிராமணர்கள் என்போர் இப்போது கொங்கண தேசத்தில் அதிகம் உள்ளனர். ஆனால் இவர்கள் ஒருகாலத்தில் சரஸ்வதி நதி தீரத்தில் வசித்தவர்களாவர். அங்கு தொடர்ந்து 12 ஆண்டுக் காலம் வறட்சி நிலவவே இவர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து பல திசைகளுக்கு ஏகினர்.

 

பிரமணர்களை பத்து பிரிவாகப் பிரிப்பர்: பஞ்ச கவுடா (வடக்கத்திய 5 பிரிவு); பஞ்ச திராவிடா =தெற்கத்திய 5 பிரிவு பிராமணர்கள். சாரஸ்வத பிராமணர்கள், கௌடா பிரிவைச் சேர்ந்தோர் ஆவர்.

 

இரண்டாவது கதை

ததீசி மகரிஷியின் மகன் பெயர் சரச்வத. அவருடைய அம்மா பெயர் சரஸ்வதி. 12 ஆண்டுகளுக்கு வறட்சி நிலவியதால் எல்லா ரிஷிகளும் சரஸ்வதி நதி தீரத்திலிருந்து வெளியேறினர். இதனால் அவர்களுக்கு வேதங்கள் மறந்துவிட்டன. “பசி வந்திடப் பத்தும் போம்” என்பது சரிதானே! அவர்கள் எல்லோரும் உணவைத் தேடி அலைந்தனர். சரஸ்வத மட்டும் வேதங்களைப் போற்றிப் பாதுகாத்து அவர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தினார் (மஹா.9-51)

இதில் பல உண்மைகள் பொதிந்துள்ளன:

  1. நீண்ட 12 ஆண்டுக்கால வறட்சி

2.இதனால் சிந்து சமவெளி காலியனது. சரஸ்வதி நதி வற்றியது. சாரஸ்வத முனிவரின்   தாய் போன்றது அந்த நதி என்ற பொருளிலேயே அவரது தாயார் சரஸ்வதி என்று கூறியதாக நான் நினைக்கிறேன்.

3.சிந்து சமவெளி நாகரீகம் அழிந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

4.சாரஸ்வத பிராமணர்கள், தாங்கள், சரஸ்வதி நதி தீரத்தில் இருந்து வந்ததாகச் சொல்வதற்கும் இந்த மஹாபாரத கதை உதவுகிறது.

 

சம்ஸ்கிருதத்தில் வற்கடம் என்றால் வறட்சி; தமிழ்ச் சொல்லுக்கும் அந்த சொல்லுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைக் காணலாம்.

 

வியாழன் கிரகமும், வெள்ளி கிரகமும்

 

குரு என்னும் வியாழன் கிரகம் சூரியனைச் சுற்றிவர 12 ஆண்டுகள் பிடிக்கும். ஆகையால் 12 ஆண்டுக்கு ஒரு முறை வறட்சி  ஏற்படும் என்று சம்ஸ்கிருத நூல்கள் செப்பும் ஆனால் தமிழர்களைப் பொறுத்த மட்டில் வெள்ளி கிரகத்துக்கும் மழைக்கும்தான் தொடர்பு அதிகம் மூன்று சங்கப் பாடல்களில் இக்குறிப்பு வருகிறது:-

 

வெள்ளி கிரகம் தென் திசை ஏகியதால் வறட்சி வந்ததாக புற நானூறு 388, பதிற்றுப் பத்து 24; 69 பாடல்களில் வருகின்றது.

 

வெள்ளி தென் திசை சென்றாலும் சோழர் ஆட்சியில் வளம் கொழிக்கும்; வறட்சி வாலாட்டாது என்று மேலும் மூன்று புற நானூற்றுப் புலவர்கள் பாடுவர் ( புற.35, 386, 397)

 

ஆக வியாழன் , வெள்ளி கிரஹம் பற்றி அவ்வளவு கவலை! உலகில் வேறு எந்த நாட்டு விஞ்ஞானியும் கூறாத இக்கருத்துகளை பாரதீயர்கள் மட்டுமே புகன்றனர். வருங்காலத்தில் அவர்களும் கண்டு பிடிக்கும்போது நாம் முன்னரே

சொல்லிவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளலாம்.

தேவாரத்தில் வறட்சி

 

தேவாரத்தில் இரண்டு அற்புதங்கள் வறட்சியுடன் தொடர்புடையவை. வறட்சியால் சோழ நாட்டு மக்கள் கஷ்டப் படவே அப்பரும் சம்பந்தரும் சிவபெருமனை வேண்ட அவர் வாசி தீர தங்கக் காசு நல்கினார். அதை வைத்து வயிற்றுக்குச் சோறிட்டனர் இரு பெரும் சைவப் பெரியார்கள். இது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. அவர்களுக்கு 200 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த சுந்தரருக்கு வறட்சி காலத்தில் சிவன் நெற்குவியலை மலை போலக் குவித்துக் கொடு  தார்.

 

சுந்தரருக்குப் படியளக்கும் கிழார், வறட்சி காரணமாக நெல அனுப்பவில்லை. சுந்தரருக்கும் வருத்தம்; நிலக்கிழாருக்கும் வருத்தம்.

இரவில் நிலக் கிழாரின் கனவில் வந்த சிவபெருமான் , நெற்குவியல் வரும் என்று சொல்லிப் போந்தர். மறு நாள் கிராமம் முழுத்ம் நெல். உடனே ஆரூரருக்கு செய்தி அனுப்பினார். ஆரூரர்– சுந்தரர் – – வந்து பார்த்து, இதை எப்படி திருவாரூருக்கு எடுத்துச் செல்வேன் என்று வழி தெரியாமல் வருந்தினார். சிவன், அவரது கனவில் தோன்றி சிவ கணங்கள் அப்பணியைச் செய்யும் என்று பகர்ந்தார். அவர் சொன்ன மாதிரியே மறு நாள் திரு ஆரூரில் வீடு தோறும் நெல் மலை!

ஆக அற்புதம் ஒரு புறம் இருக்க அதற்குக் காரணமான வறட்சி நமக்கு ஒரு செய்தியாகும்.

திருவிளையாடல் புராணத்தில் வறட்சி

 

மதுரையில் எழுந்தருளிய சிவ பெருமானின் 64 திருவிளையாடல்களைச் சொல்லுவது பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணமாகும்

அதில் உக்கிரகுமார பாண்டியன் காலத்தில் தமிழ்நாட்டில் 12 ஆண்டுக்கால வறட்சி  ஏற்பட்டது. உடனே முடியுடைய மூவேந்தரும் அகஸ்தியர் வழிகாட்டுதலில் இந்திரனைப் பார்த்து தீர்வு கண்டனர்.

 

ஆக வறட்சி பற்றி மஹாபாரதம் முதல் திருவிளையாடல் புராணம் வரை 4000 ஆண்டுகளுக்கான குறிப்புகள் உள்ளன. பிருஹத் சம்ஹிதா முதலிய நூல்களில் உள்ள விஷயங்களை ஆராய்ந்தால் உலகிற்கே நாம் வறட்சி  பற்றி கற்பிக்கலாம்.

–subham–

‘வைஷ்ணவ பரிபாஷை’ என்னும் அரிய நூல்!! (Post No.3954)

Written by S NAGARAJAN

 

Date: 30 May 2017

 

Time uploaded in London:-  6-44  am

 

 

Post No.3954

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipdia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

தமிழ் இன்பம்

 

வள்ளுவர் குறளில் கையாண்ட வ்டமொழிச் சொற்கள் என்ற கட்டுரையில் (கட்டுரை எண் 3873, வெளியான தேதி : 3-5-2017)

 

வைஷ்ணவ பரிபாஷை என்ற நூலைக் குறிப்பிட்டு அந்த நூலின் பெருமையைக் குறித்து தனியே ஒரு கட்டுரை எழுதப்படும் என்று குறிப்பிட்டிருந்தேன். இதோ, அந்தக் கட்டுரை!

 

 

தமிழ் வளர்க்கும் பரிபாஷைச் சொற்கள்!- வைஷ்ணவ பரிபாஷை என்னும் அரிய நூல்!!

ச.நாகராஜன்

 

வைஷ்ணவ பரிபாஷை என்ற அரிய நூல் பிராமணர்கள் பேசும் பரிபாஷைச் சொற்களைப் பற்றிய நூல்.

 

எங்க ஆத்துக்கு வரேளா?

 

அவாள் எப்படி வருவா? அவாத்திலே ஆம்படையான் எங்கேயோ வெளிலே போயிருக்காராம்.

 

இதில் அகம் – வீடு – இல்லம் ‘ஆம்’ ஆகச் சுருங்கி ஆத்துக்கு வருகிறீர்களா என்ற பொருளில் ஆத்துக்கு வரேளா என்று ஆகி இருக்கிறது.

 

அகமுடையான் – வீட்டுக்காரன் – கணவன்

அகமுடையாள் – வீட்டுக்காரி – இல்லத்தரசி – மனைவி

 

இப்ப்டி ஐயர் ஆத்துத் தமிழை ஆராயப் புகுந்தோமானால் அழகிய தமிழ்ச் சொற்கள் நூற்றுக் கணக்கில் கண்டு பிடிக்கலாம்.

ஆயிரக் கணக்கில் அள்ளித் தருகிறேன் என்று கச்சை கட்டிக் கொண்டு முன் வருகிறார் ஒரு தமிழ் அன்பர்.

அவர் தான் எம்பார் க்ண்ணன் ரங்கராஜன்.

வைஷ்ணவ ப்ரிபாஷை என்ற மின்வடிவ நூலில் ஐயர்  மற்றும் ஐயங்கார் பரிபாஷையை – ஆங்கிலத்தில் dialect –   நன்கு ஆராய்ந்து சொற்களைத் தொகுத்து முறைப்படுத்தி வகைப்படுத்தி 931 பக்கங்களில் தந்துள்ளார்.

 

அசுர முயற்சி. ராக்ஷஸ பிரயத்னம். வெற்றி கிடைத்திருக்கிறது.

56 அத்தியாயங்களில் அன்பர் பலவேறு தலைப்புகளில் பரிபாஷையை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து அமுதாக வழங்கி இருக்கிறார்.

 

பாராட்ட வார்த்தைகளே இல்லை! வாழ்த்துக்கள்!!

உறவுகள், வர்ணங்கள், பரிமாணங்கள், வடிவங்கள், ருசிகள், தரங்கள், அளவுகள்,சரீர பாகங்கள், பிராணிகள், பக்ஷிகள், பூச்சிகள், பழங்கள், கறிகாய்கள், மளிகை சாமான்கள், புஷ்பங்கள், உலோகங்கள், எண்கள், பழைய தமிழ் அளவுகள், நாணயம், வேலைகள், தளிகை, அகம், கால் அளவைகள், வருஷங்கள், மாதங்கள், திதிகள், ராசிகள், வார நாட்கள், ருதுக்கள், பக்ஷ்ங்கள், அயனங்கள், பொழுதும் ஜாமமும், ந்க்ஷத்திரங்கள், வாஹனம், திசை என்று அன்பர் எதையும் விடவில்லை.

 

பழத்தைப் பிழிந்தெடுத்து ஜூஸ் போல தந்திருக்கிறார்.

 

***

சம்பாஷ்ணைகள் என்ற அத்தியாயத்திலிருந்து ஒரு சிறிய் பகுதி:

ரங்கா : கவலைபடாதேள். சீக்கிரம் போய்டலாம். ராத்திரி தளிகை ஆயிடுத்தா. என்ன பண்ணேள், இன்னைக்கு

கோமளம் மாமி : தளிகை ஆயிடுத்துடா. ராத்திரிக்கு ஒண்ணும் தனியா பண்ணல. மத்தியானம் பண்ன வெண்டக்காய் கொழம்பு, பாவக்காய் கறமது இருக்கு. சாத்தமது பண்ணேன். அப்பறம் கொஞ்சம் வடாம் வறுத்துட்டேன். அவ்ளோ தான்.

 

ரங்கா: பிரமாதம் மாமி. உங்க தளிகைன்னா கேக்கணுமா. நளபாகமாச்சே.

கோமளம் மாமி : படவா. சாப்டாமலே சொல்றே. உனக்கு பரிகாசம் பண்ண நான் தான் ஆப்டேனா. போய் வேலையை பாரு. விட்டா பேசிண்டேருப்பே. அம்மா கிட்ட நான் விஜாரிச்சதா சொல்லு. என்ன. நான் கிளம்பறேன். இந்த சனிக்கிழமை ஆத்துக்கு வாடா.

 

ரங்கா: சரி மாமி. நான் கண்டிப்பா வரேன். நீங்க கிளம்புங்கோ. பத்திரமா போயிட்டு வாங்கோ.

**

சங்க காலத்திலிருந்து பிராமணர்கள் யாகத் தீயை வளர்த்தார்போல தமிழையும் ஒங்கி உயர வளர்த்திருக்கிறார்கள்.

இதை மன்னர்களும் மக்களும் அங்கீகரித்து அவர்களைத் தொடர்ந்து பாராட்டி வந்திருக்கின்றனர்; உரிய மதிப்பையும் வழங்கியுள்ளனர்.

 

தூய தமிழ் சொற்களை பிராமணர் தமிழில் காணலாம்.

இவற்றைத் தொகுப்பது ஒரு பெரிய முயற்சி. இந்த் வேலையைத் தனி ஒருவராக எம்பார் கண்ணன் ரங்கராஜன் செய்திருக்கிறார் என்றால் அது “ஆசை பற்றி அறையலுற்ற” தமிழ் ஆசை தான் காரணமாக இருக்கும்.

 

இதே போல அவர் குறிப்பிடும் தென்னகத் தமிழ், கோவை தமிழ் மற்றும் இதர பகுதிகளின் பரிபாஷைகளையும் அந்தந்த ப்ரிபாஷைகளின் வல்லுநர்கள் தொகுத்தால் அது தமிழுக்குச் செய்யும் அரிய தொண்டாக அமையும்.

 

எம்பார் கண்ணன் ரங்கராஜன் அவர்களின் மின்னஞ்சல் முகவரி ykrrajan@gmail.com.

 

இந்த நூலைப் பெற விரும்புவோரும் அவரைப் பாராட்ட விழைவோரும் இந்த மின்னஞ்சலில் அவரைத் தொடர்பு கொள்ளலாம்.

 

நூலைப் படித்து முடிக்கின்றபோது தமிழை உண்மையாக வளர்ப்பவர்கள் ஒரு புறமிருக்க தமிழின் பெயரால் துவேஷத்தைத் தூண்டி அந்தக் குழம்பிய குட்டையில் மீன் பிடித்து தன்னையும் தன் குடும்பத்தையும் தழைக்கச் செய்யும் “தமிழ் இனக் காப்பாளர்களை” நினைக்காமல் இருக்க முடியவில்லை.

தமிழை வளர்ப்ப்வர் ஒரு புறம்; தமிழால் தன்னை வளர்ப்பவர் ஒரு புறம்.

 

நல்லவர்களை இனம் கண்டு பாராட்டாத தமிழ் இனம் இனியேனும் விழிக்குமா?

 

தமிழால் தன்னை வைதாரையும் வாழ வைக்கும் குமரன் அருளே தேவை!

 

நூலை எனக்கு அனுப்பி உதவிய எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்திரிநாதன் அவர்களுக்கு மீண்டும் எனது நன்றியை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நூலும் நூலை எழுதியவரும் ஒரு மின்னஞ்சல் தூரத்திலேயே இருப்பதைச் சுட்டிக் காட்டிய மகிழ்ச்சியோடு கட்டுரையை முடிக்கிறேன்.

***

 

 

Drought in Tamil and Sanskrit Literature (Post No.3953)

Research Article Written by London Swaminathan

 

Date: 29 May 2017

 

Time uploaded in London- 14-36

 

Post No. 3953

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

Our forefathers and writers gave a true account of the weather conditions prevailing in those days. These true accounts prove that they wrote genuine things and not concocted anything. We have reports of Tsunamis, earth quakes, accidents, shipwrecks, massive engineering works such as diverting River Ganga (by Bhageeratha) and River Kaveri (by Agastya), laying roads through the Vindhya Hills (Agastya ), population explosion in North India and migrating to South east Asia (Agastya drank sea) etc. Only thing is people could not understand their symbolic language. They though these are all mythological ‘stories’.

 

If we read through our literature, we can see many droughts which caused massive migrations. We even come to know the drying of Saraswati river ended the Indus Valley civilization and they migrated to different parts of India. These are very important events to know the history of the land.

Massive drought resulted in the migration of people from the Saraswati River Valley during Vedic days. Brahmins in India are generally divided into 10 groups: Pancha Goawda and Pancha Dravida. Gowda Brahmins lived in North India and Dravida Brahmins lived in South India. It is all in our literature. Many droughts caused the migration of Brahmins from one part of the country to the other.

 

Hindus believed that the 12 year orbit of Jupiter around the sun caused a drought every twelve years. Position of Venus was also considered to measure the amount of rain.

Tevaram sung by three Saivite saints mentioned the drought in different parts of Tamil Nadu. Lord Siva helped the saints by providing huge quantity of paddy and gold coins, which are considered great miracles by the Tamils. Those  1400 year old Tevaram verses are sung by all the Saivaite Tamils even today.

 

The word for drought in Sanskrit is Varkadam. In Tamil we have Varatchi and it is related to Varkata.

 

Tamil Tiruvilaiyaadal Purana talks about the drought in and around Madurai.

 

Kalidasa and Tamil Sangam Literature

Kalidasa and other poets used drought followed by rains as similes in their poems.

रावणावग्रहक्लान्तमिति वागमृतेन सः।
अभिवृष्य मरुत्सस्यम् कृष्णमेघस्तिरोदधे॥ १०-४८

rāvaṇāvagrahaklāntamiti vāgamṛtena saḥ।
abhivṛṣya marutsasyam kṛṣṇameghastirodadhe || 10-48

rAvaNAvagrahaklAntamiti vAgamR^itena saH|
abhivR^iShya marutsasyam kR^iShNameghastirodadhe || 10-48

 

On showering ambrosian water called his speech on the desiccating crop called gods owing to the drought called Ravana, he that black cloud called Vishnu disappeared.

Rain=speech, dry crops=gods, drought caused by=Ravana, Black Cloud=Vishnu

 

Tamil poet Alankudi Vanganar used the same simile in Natrinai verse 230. A man came back to his wife after visiting a courtesan. She told that the very sight of him is like rain flooding the land affected by drought.

 

Raghuvamsa 10-48= Natrinai 230

 

Sangam Tamil poets (Pura nanauru 35, 383 and 397) say that even if the planet Venus is seen in the wrong direction there wont be any drought because of the just rule of the kings. This shows their belief n the position of Venus in the sky.

 

12 long Drought and Indus Valley Civilization

 

There is an interesting reference to the drying of River Saraswati, the mighty river which ran through Punjab, Uttapradesh and other states.

 

Sarasvata, son of Dadhichi and Sarasvata survived a twelve year long drought. But all other rishis had gone away  in search of food. They had forgotten the Vedas completely. Then Sarasvata rishi taught them the Vedas (Mahabharata 9-51). This gives credit to the story of Vedic Hindus migration from the Indus valley to other parts of India after a 12 year long drought. Story of Saraswata Brahmins’ origin also corroborates this.

 

During the reign of Ukra Kumara Pandya, a legendary king, there was a 12 year long drought. Then he went and prayed to Agastya. He showed them the way.

 

The reference to 12 year long drought and once in 12 year drought are plenty in our literature.

Two droughts during Tevaram days

 

Tevaram is a collection f hymns sung by three saints Sambadar, Appar and Sundarar.

 

Sambandar and Appar were contemporaries who lived during seventh century CE. Because of drought and famine they went to Siva temple and prayed for the sake of the people. They were given one coin each till they tided over the famine. They used the coins to buy food articles.

 

Sundarar, who lived later than Appar and Sambadar , was getting regular  supply of paddy  from a generous Shiva devotee.  Suddenly he stopped it due to a severe drought. When Sundara came to know about it, he was very much worried. Lord Shiva appeared in the dream of that philanthropist and promised him a good supply of paddy. The very next day he went to nearby Tiruvarur and informed Sundara about the miracle. When Sundara saw the huge hills of paddy I a village he was wondering ow to carry them. Shiva told him that the paddy would be in Tiruarur. His words came true and every house in Tiruarur had a heap of paddy in front of his/her house. Sundara was very happy to see the delivery at the doorstep.

–SUBHAM–

 

முப்பது வெற்றி வேற்கை பொன்மொழிகள் (Post No.3952)

Written by London Swaminathan

 

Date: 29 May 2017

 

Time uploaded in London-  6-56 am

 

Post No. 3952

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

ஜூன் 2017 சிந்தனைச் சிற்பி காலண்டர்

ஹேவிளம்பி வைகாசி-ஆனி பஞ்சாங்கம்

 

அதிவீரராம பாண்டியனின் வெற்றி வேற்கை நூலில் இருந்து 30 பொன்மொழிகள் இங்கே இடம்பெறும்.

 

திருவிழா நாட்கள் : 7 வைகாசி விசாகம், 25 புரி ரத யாத்திரை,26 ரம்ஜான்  30 ஆனித் திருமஞ்சனம்.

நல்ல/முகூர்த்த நாட்கள்: June 1, 4, 14, 16, 19, 26, 28, 30.

அமாவாசை-23; பௌர்ணமி-9; ஏகாதசி-4, 20

ஜூன் 1 வியாழக்கிழமை

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்

ஜூன் 2 வெள்ளிக் கிழமை

கல்விக்கழகு கசடற மொழிதல்

ஜூன் 3 சனிக்கிழமை

செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்

ஜூன் 4 ஞாயிற்றுக் கிழமை

வேதியர்க்கழகு வேதமும் ஒழுக்கமும்

ஜூன் 5 திங்கட் கிழமை

மன்னர்க்கழகு செங்கோல் முறைமை

ஜூன் 6 செவ்வாய்க்கிழமை

வணிகர்க்கழகு வளர் பொருள் ஈட்டல்

ஜூன் 7 புதன் கிழமை

மந்திரிக்கழகு வரும்பொருள் உரைத்தல்

 

Picture by Lalgudi Veda

 

ஜூன் 8 வியாழக்கிழமை

உண்டிக்கழகு விருந்தோடுண்டல்

ஜூன் 9 வெள்ளிக் கிழமை

ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை

இருநிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே

 

ஜூன் 10 சனிக்கிழமை

கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே

 

ஜூன் 11 ஞாயிற்றுக் கிழமை

நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்

கற்றிலனாயின் கீழிருப்பவனே

 

ஜூன் 12 திங்கட் கிழமை

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

 

ஜூன் 13 செவ்வாய்க்கிழமை

யானைக்கில்லை தானமும் தருமமும்

பூனைக்கில்லை தவமும் தயையும்

ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும்

 

ஜூன் 14  புதன் கிழமை

பெண்டிர்க்கழகு எதிர்பேசாதிருத்தல்

அறிஞர்க்கழகு கற்றுணர்ந்து அடங்கல்

 

Picture by Lalgudi Veda

 

ஜூன் 15 வியாழக்கிழமை

நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை

நீர்க்குள் பாசிபோல் வேர்க்கொள்ளாதே

 

ஜூன் 16 வெள்ளிக் கிழமை

அச்சமும் நாணமும் அறிவிலோர்க்கில்லை

நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை

 

ஜூன் 17 சனிக்கிழமை

வறிஞர்க்கழகு வறுமையில் செம்மை

ஜூன் 18 ஞாயிற்றுக் கிழமை

குடை நிழலிலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்

நடை மெலிந்து ஓரூர் நண்ணினும் நண்ணுவர்

 

ஜூன் 19 திங்கட் கிழமை

இல்லோர் இரப்பதும் இயல்பே இயல்பே

இரந்தோர்க்கீவதும் உடையோர் கடனே

 

ஜூன் 20 செவ்வாய்க்கிழமை

தறுகண் யானை தான் பெரிதாயினும்

சிறுகண் மூங்கிற் கோற்கஞ்சும்மே

 

ஜூன் 21 புதன் கிழமை

கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டிலும்

கடும்புலி வாழும் காடும் நன்றே

 

ஜூன் 22 வியாழக்கிழமை

பெருமையும் சிறுமையும் தாந்தர வருமே

 

ஜூன் 23 வெள்ளிக் கிழமை

காலையும் மாலையும் நான்மறை ஓதா

அந்தணர் என்போர் அனைவரும் பதரே

 

ஜூன் 24 சனிக்கிழமை

சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம்

பெரியோராயிற் பொறுப்பது கடனே

 

ஜூன் 25 ஞாயிற்றுக் கிழமை

துணையோடல்லது நெடுவழி போகேல்

 

ஜூன் 26 திங்கட் கிழமை

பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால்

மெய்போலும்மே மெய்போலும்மே

 

ஜூன் 27 செவ்வாய்க்கிழமை

மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால்

பொய்போலும்மே பொய்போலும்மே

ஜூன் 28 புதன் கிழமை

வழியே ஏகுக, வழியே மீளுக (குறுக்கு வழியில் போகாதே)

 

ஜூன் 29 வியாழக்கிழமை

பழியா வருவது மொழியாதொழிவது (பழிதரும் சொல்லைச் சொல்லாதே)

 

ஜூன் 30 வெள்ளிக் கிழமை

தன் மனையாளைத் தனி மனை இருத்திப்

பிறர் மனைக்கேகும் பேதையும் பதரே

–Subham–

எண் ரகசியம் – 2 (Post No.3951)

Written by S NAGARAJAN

 

Date: 29 May 2017

 

Time uploaded in London:-  5-19  am

 

 

Post No.3951

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipdia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

எண் ரகசியம்

காபிரைட் உள்ள தொடர் இது. திரு எஸ்.சுவாமிநாதன் அனுமதி பெற்று www.tamilandvedas.com மற்றும் கட்டுரை ஆசிரியரின் பெயரோடு வெளியிடல் வேண்டும். மீறியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

 

எண் ரகசியம் – 2

சூரிய எண் 666-இன் மர்மம்!

ச.நாகராஜன்

 

 

எண்களில் 666 என்ற எண் மிகவும் மர்மமான எண்.

கணிதத்தில் இதன் பெருமையே தனி.

666 என்பது 36வது ட்ரை ஆங்குலர் எண். ஒரு எண்ணுடன் அதன் அடுத்த எண்ணைக் கூட்டினால் வருவது ட்ரை ஆங்குலர் எண். எடுத்துக்காட்டு:

1+2 = 3

1+2+3 = 6

இப்படி ஒன்று முதல் அடுத்த எண்ணைக் கூட்டிக் கொண்டே போய், அனைத்தையும் 36 எண் வரை கூட்டினால் வருவது 666.

 

1+2+3+4+5+6+7+8+9+10+11+12+13+14+15+16+17+18+19+20+21+22+23+24+25+26+27+28+29+30+31+32+33+34+35+36 = 666

 

கீழே முதல் 36 ட்ரை ஆங்குலர் எண்களைக் காணலாம்.

 

1, 3, 6,10,15,21, 28, 36, 45, 55, 66, 78, 91, 105, 120, 136, 153, 171, 190, 210, 231, 253, 276, 300, 325, 351,378,406,435, 465, 496,528, 561, 595,630,666.

இதில் 36வது ட்ரை ஆங்குலர் எண் 666!

ரோமானிய எண்களை நாம் அறிவோம். இதில் முதல் ஏழு ரோமானிய எண்களைக் கூட்டினால் வருவது 666!

I + V + X + L + C + D  = 666

அதாவது 1+5+10+50+100+500 = 666!

இதைப் போல கணிதம் அறிந்தவர்கள் இதை ஸ்மித் எண் என்றும் கூறுவர்.

(666 is a Smith Number. This means : The sum of digits [ 6+6+6] is equal to the sum of the digits of the prime factors [ 2+3+3+(3+7)] )

இதை சூரிய எண் என்று கூறுவர்.

1080 என்பது சந்திர எண்.

கற்பனா சக்தியைக் குறிக்கும் சந்திரனுடைய எண்.

666 என்பது சூரிய சக்தியையும் அதிகாரத்தையும் தர்க்கரீதியிலான கொள்கையையும் குறிக்கும் எண்.

இது சூரியனுக்குரிய  மாயச் சதுர எண்ணாகவும் அமைகிறது.

சூரியனுக்குரிய மாயச் சதுரத்தைப் பார்ப்போம்:

 

6 32 3 34 35 1
7 11 27 28 8 30
19 14 16 15 23 24
18 20 22 21 17 13
25 29 10 9 26 12
36 5 33 4 2 31

 

இதில் கூட்டுத் தொகையாக ஒவ்வொரு வரிசையிலும் 111 வருவதைக் காணலாம். ஆறு வரிசையிலும் வரும் 111ஐக் கூட்டினால் வருவது 666.

இது சூரியனுக்குரிய மாயச் சதுரமாக ஆகிறது.

பைபிளில் 666 என்ற எண் – Beast Number -மிருக எண்ணாகக் குறிப்பிடப்படுகிறது.

(Number of the animal )

 

பைபிள் வாசகங்களையொட்டி இந்த எண்ணைப் பற்றி ஏராளமான கருத்துக்கள் உண்டு.

புனிதர் ஜான் கூறுவது இது: Here is wisdom! Who has brains, should think of the number of the baast; because it is a human’s number.

 

இந்த எண்ணைக் கண்டு பிடிக்குமாறு அவர் அறிவுறுத்துகிறார். இரண்டு மிருகங்கள் உள்ளன. ஒன்று கடலில் மறைகிறது. இன்னொன்று பூமியில் மறைகிறது என்கிறார் அவர்.

ஆக அவர் குறிப்பிடுவது சூரியனே என்பது சிலரின் கருத்து.

 

இன்னொரு கணித ஆச்சரியம் இந்த் எண்ணைப் பற்றி உண்டு.

முதல் ஆறு எண்களைப் பெருக்கினால் வருவது 720

அடுத்த ஆறு எண்களைப் பெருக்கினால் வருவது 6,65,280. இந்த இரண்டையும் கூட்டினால் வருவது 666000!

1X2X3X4X5X6      =       720

7X8X910X11X12      = 665280

———–

கூட்டுத் தொகை        666000

——–

இன்னும் 666இன் விசித்திரங்களை பொருளாதாரத்திலும் இதர துறைகளிலும் கூடக் காணலாம்.

ஆற்றல் மிகுந்த இந்த சூரிய எண்ணை சந்திர எண்ணான 1080டன் கூட்டினால் வரும் எண் 1746.

இதுவே இஸ்ரேலின் இறைவனின் புனித எண் என்று கூறப்படுகிறது.

சந்திரனையும் சூரியனையும் இணக்கும் Fusion Number என்றும் இது  கூறப்படும் இந்த இணைப்பு எண் புனிதமானதும் கூட!

வரலாற்றில் இந்த எண்ணின் மகிமையை ஆராய விரும்புவோர் இணைய தளத்தில் புகுந்து பார்த்து ஏராளமான விஷயங்களைப் படித்து மகிழலாம்.

***

 

 

Lord Shiva’s Favourite Number 8, posted on April 28, 2013

 

 

Hindu’s Magic Numbers 18, 108, 1008 | Tamil and Vedas

Hindu’s Magic Numbers 18, 108, 1008

26 Nov 2011 – In Hinduism numbers have a lot of significance. … But 108and 1008 are used for all the Gods in Ashtotharam (108) and Sahasranamam (1008) …

 

 

Mysterious Number 17 in the Vedas! (Post No.3916) | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/17/mysterious-number-17-in-the-veda…

 

 

4 days ago – Number symbolism is in the Vedas from the very beginning. This shows that the Vedic seers are very great intellectuals. They were the …

 

Mystery Number 7 | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/mystery-number-7/

“It may be incidentally pointed out that the number 7 which gives thenumber of time units in Misrajati appears to have fundamental importancein nature. In most …

 

MOST HATED NUMBERS 666 and 13 | Tamil and Vedas

https://tamilandvedas.com/2012/…/most-hated-numbers-666-and-1…

 

29 Jul 2012 – No 7 and No 3 are considered as holy numbers by several cultures, particularly, the Hindus. Vedic literature and Indus Valley Civilization have …

 

 

Numbers in the Rig Veda! Rig Veda Mystery-2 | Tamil and Vedas

Numbers in the Rig Veda! Rig Veda Mystery-2

3 Sep 2014 – Numbers in the Rig VedaRig Veda Mystery-2. Vedas 9. Research Paper written by London Swaminathan Post No. 1265; Dated 3rd …

 

Oldest Riddle in the World! Rig Veda Mystery –3 | Tamil and Vedas

Oldest Riddle in the World! Rig Veda Mystery –3

6 Oct 2014 – Rig Veda is the oldest religious book in the world. Even if we … 30)Numbers in the Rig VedaRig Veda Mystery – 2 –posted on 3rd Sep.2014

 

 

 

 

.

Buddha’s Encounter with the Brahmins! (Post No.3950)

Written by London Swaminathan

 

Date: 28 May 2017

 

Time uploaded in London- 14-56

 

Post No. 3950

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

Foreigners painted Buddha as Anti Hindu and Anti Brahmin and Agnostic. Those who read Tri Pitakas would realise that all these are wrong. He only opposed the rituals like fire sacrifices which had become meaningless by his time. Vedic Hindus forgot why and for what purpose they were doing it.

 

Buddha praised Brahmins sky high and praised Vedic God Indra. He asked his followers to follow eight good virtues so that God realisation would naturally follow it. He also said in one of his speeches that he knew lot more things but he would not reveal them to his disciples. We knew why he said that. He did not want to confuse his followers and push them towards rituals.

 

But what he feared ultimately came true. He refused to allow women into his fold. But his chief disciple Ananda begged to him and got the permission. He said to him that his religion would have lived 1000 years but now that he allowed women it would live only for 500 years. That came true . Buddhism died soon but Buddhists live longer. Even Mahendra Pallavan, the mighty Pallva King of Kanchi wrote a Sanskrit drama Mattavilasa Prhasana, a comedy on fake ascetics.

 

Buddhist Veda Dhammapada contains 423 slokas in Pali. of them one tenth are about Brahmins. last Chapter is about Brahminism. Even before this chapter he says,

“And a saint, a Brahmin, is pure from past sins; even if he had killed his father and mother, had murdered two noble kings, and had ravaged a whole kingdom and its people” (294 Dhammapada).

 

Dr S Radhakrishnan, philosopher and former President of India wrote a commentary on Dhammapada, the Veda of the Buddhists. In the introduction, he gives two anecdotes about the Brahmins:

 

“Once Buddha entered a public hall at Ambathikka and found some of his disciples talking of a Brahmin who had just been accusing Gautama impiety and finding fault with the Order of the mendicants he had founded.

Brethern, if others speak against me, or against my religion, or against the order, there is no reason why you should be angry, discontented or displeased with them. If you are so, you will not only bring yourselves into danger of spiritual loss, but you will not be able to judge whether what they say is correct or not correct”.

Intolerance seemed to him the greatest enemy of religion.

 

“When a Brahmin came to the Buddha with the remnants of his oblationin his hand, the Buddha said to him, Do not deem, O Brahmin, that purity comes by merely laying sticks in fire, for it is external. Having therefore, left that course, I kindle my fire only within, which burns for ever.  Here in this sacrifice the tongue is the sacrificial spoon and the heart is the altar of the fire.” (Samyutta 1-168)

 

Source: The Dhammapada, English Translation and Notes by S Radhakrishnan, Year 1950

 

புத்தரும் பிராமணர்களும்: இரண்டு சுவையான சம்பவங்கள்! (Post No.3949)

Written by London Swaminathan

 

Date: 28 May 2017

 

Time uploaded in London: 11-07 am 

 

Post No. 3949

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

புத்தர் பற்றி வெள்ளைக்காரர்கள் எழுதியதை அப்படியே நம்பிவிடக்கூடாது. அவர் ஏதோ இந்து மதத்துக்கு எதிராகப் புரட்சிக்கொடி தூக்கியதாகவும் பிராமணர்களை எதிர்த்ததாகவும் வெளிநாட்டுக்காரர்கள்

எழுதியதை நம்பி இங்குள்ள திராவிட பக்தர்களும் புத்தர் படத்தை தனது வீட்டில் மாட்டி வைத்திரு ப்பர். அவர்களுக்கு புத்தர் ‘தம்ம பத’த்தில் என்ன சொன்னார் என்று தெரியாது பாவம்! அதாவது அறியாத ஜீவன்கள்; சுக்கான் உடைந்த கப்பல்கள்; வழி தெரியாமல் திணறும் அந்தகர்கள்.

 

என்னுடைய பல திராவிட நண்பர்கள் இன்னும் திருக்குறளையே படித்ததில்லை. படித்த பிறகு அதன் கருத்துகளை வேறு ஜீரணம் செய்யவேண்டும்; பின்னர் அதில் ஒரு திருக்குறளையவது பின்பற்ற வேண்டும்! நடக்குமா?

 

புத்தமதத்தினரின் வேதப் புத்தகமான தம்ம பதத்தில் 423 ஸ்லோகங்கள் உண்டு. அதில் கடைசி அத்தியாயம் ‘பிராமணர்’ என்ற தலைப்பிட்ட 26-ஆவது அத்தியாயமாகும். அதில் 41 ஸ்லோகங்கள் இருக்கின்றன. அதாவது அந்தப் புத்தகத்தில் பத்தில் ஒரு பகுதி. அவ்வளவு முக்கியத்துவம் பிராமணர்களுக்கு!

அசோகனும் தனது கல்வெட்டுகளில் முதலில் பிராமணர்களைக் குறிப்பிட்டுவிட்டே மற்ற வகுப்பினரைக் குறிப்பிடுவான்; அவ்வளவு பய பக்தி.

 

எப்படி தமிழ் வேதமான திருக்குறள் இருக்கும் வரை இந்துமதம் அழியாதோ, அப்படி தம்மபதம் உள்ளவரை இந்துமதம் அழியாது. ஏனெனில் இரண்டு நூல்களிலும் இந்துமதக் கருத்துகள் அப்படியே உள்ளன. ஆயினும் வள்ளுவனும் புத்தனும் வெறும் சடங்குகளையும், யாகத்தில் உயிர்ப் பலியையும் எதிர்த்தது உண்மையே. அவர்கள் இருவரும் உலக மக்கள் எல்லோரும் ‘வெஜிட்டேரியன்ஸ்’ – சாக பட்சிணிகள்– ஆக வேண்டும் என்று எதிர்பார்த்தனர். அது என்றுமே நடவாத காரியம். இது இந்துக்களுக்குத் தெரியும். ஆனால் மனிதன் உயர்நிலையை அடைய ஒவ்வொருவரும் மாமிசத்தை தவிர்த்தே ஆக வேண்டும். மாமிசமுண்ணாததால் மட்டும் உயர்நிலையை அடைந்து விடமுடியாது.

 

தம்மபதத்தில் பிராமணர் பற்றிய அதிகாரத்தில் யார் பிராமணன் என்று விவரிக்கிறார். அதற்கு முன்னரும் 6, 7 இடங்களில் பிராமணர் பற்றிச் சொல்கிறார்.

 

“ஒரு பிராமணனும் முனிவனும் கடந்த கால பாவங்களில் இருந்து விடுபட்டவர்களாவர்; அவன் தனது தந்தை தாயைக் கொன்று இருந்தாலும், இரண்டு நியாயமான அரசர்க ளைக்கொன்று இருந்தாலும். ஒரு நாட்டையே சீரழித்திருந்தாலும், மனிதர்களின் மாணிக்கம் போன்றோரைக் கொன்று இருந்தாலும் அவர்கள் தூயவர்களே (தம்மபதம் 294, 295)

 

ஏன் இப்படிச் சொன்னார்? ஒரு முனிவனும், ஒரு பிராமணனும் சொல், செயல், சிந்தனையில் (திரிகரண சுத்தி) ஒன்றுபட்டுவிட்டால் பின்னர் அவர்கள் பூலோக தேவர்கள் ஆவர்.

 

வள்ளுவனும் புத்தனும் சொன்ன எல்லா கருத்துகளும் ஏற்கனவே உள்ள கருத்துகள்தான். ஆனால் அவைகளைச் சுருக்கமாக, ஆழமாக, அழுத்தமாக, மக்கள் பேசும் மொழிகளில் (பாலி, தமிழ்) சொன்னதும் அவைகளை அவர்கள் தன் வாழ்நாளில் பின்பற்றிக் காட்டியதுமே அவர்களுடைய நூல்களை வேதங்கள் அளவுக்கு உயர்த்தின.

 

தம்மபத நூலுக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அதில் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த தத்துவ அறிஞர் டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய உரையில் வரும் இரண்டு சம்பவங்களைக் காண்போம்:-

 

முதல் சம்பவம்

 

ஒரு பிராமணர் யாக யக்ஞாதிகளை முடித்துவிட்டு அவற்றின் பிரசாதத்தைக் கொண்டு வந்தார். புத்தரிடம் வந்தவுடன் அவைகள் என்னவென்று கேட்டார். அவை யாகத்தின் மிச்சம், மீதி என்று அறிந்தவுடன் புத்தர்  சொன்னார்:-

“ஓய், பிராமணரே! யாகத் தீயில் குச்சிகளை (சமித்து) வைப்பதன் மூலம் நீவீர் தூய்மையாகிவிட்டதாக எண்ண வேண்டாம். இதெல்லாம் மேம்போக்கானவை. நான் என்னுள்ளே உறைந்துகிடகும் அகத் தீயை எழுப்புகிறேன். அந்த ஞானத் தீ எப்போதும் எரிந்து கொண்டிருக்கும். இந்த வேள்வியில் என்னுடைய நாக்குதான் யாகக் கரண்டி; என்னுடைய இருதயம்தான் (உள்ளம்தான்) யாக குண்டம்” என்றார் புத்தர்.

 

பிராமணர்கள் செய்த யாக யக்ஞங்கள் காலப்போக்கில் பொருளற்றுப் போய் வெறும் சடங்குகள் ஆனதால் புத்தர் இப்படிப் புகன்றார். ஆனால் புத்தருக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்த பிருஹத் ஆரண்யக, முண்டக உபநிஷத்துகளிலேயே இக்கருத்து உள்ளது. புத்தரோ வள்ளுவரோ புதிதாக ஒன்றும் சொல்லவில்லை

 

இரண்டாவது சம்பவம்

ஒருமுறை புத்தர், அம்பலதிகா என்னும் இடத்திலுள்ள பொது மண்டபத்துக்குள் வந்தார். அப்பொழுது  அவர்கள், புத்தர் மீது குற்றச் சாட்டுகளை சுமத்திவிட்டு வெளியேறிய, ஒரு பிராமணன் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். புத்தர் சொன்னார்,

 

 

” என்னைப் பற்றியோ, நான் போதிக்கும் விஷயங்கள் பற்றியோ, புத்த பிட்சுக்கள் பற்றியோ யாராவது குறைகூறினால் ஏன் கோபப்படுகிறீர்கள்? இப்படிக் கோபப்பட்டால் உங்களால் ஆன்மீக  முன்னேற்றம் காண முடியாது. மேலும் ஏனையோர் சொல்வது சரியா தவறா என்று பகுத்துணரும் சக்தியையும் இழந்து விடுவீர்கள்” என்று எச்சரித்தார்.

 

புத்தரின் வெற்றிக்கு இதுதான் காரணம். அவர் கோபப்பட்டதாக ஒரு சம்பவமும் இல்லை. மற்றவர்களைக் குறைகூறியதாகவும் ஒரு சம்பவமும் இல்லை. காலப்போக்கில் அவரது பிரதம சீடர்களாக ஆனவர்களும் பிராமணர்களே!

தான் சொல்லும் கருத்துகளை, அவர்  பின்பற்றினால், பின்னர் அவருடைய உபதேசங்களுக்கு மந்திர சக்தி வந்துவிடும்.

ராமகிருஷ்ண பரமஹம்சர்,  சுவாமி விவேகாநந்தர், ரமண மகரிஷி, காஞ்சிப் பெரியவர் ஆகிய பெரியோர் வாழ்விலிருந்து இவற்றை அறியலாம்.

 

–சுபம்–

ஜாலி எல் எல் பி – Jolly LLB (Post No.3948)

Written by S NAGARAJAN

 

Date: 28 May 2017

 

Time uploaded in London:-  6-54  am

 

 

Post No.3948

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipdia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

சிந்திக்கவும் சிரிக்கவும்

 

பார்த்து மகிழ ஒரு நல்ல திரைப்படம்          ஜாலி எல் எல் பி – Jolly LLB

ச.நாகராஜன்

 

சாதாரணமாக திரைப்படம் பார்க்க எனக்கு நேரமே கிடையாது. இப்போது சான்பிரான்ஸிஸ்கோவில் இருப்பதால் நிறைய நேரம் கிடைக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் தொலைக்காட்சி சீரியல்களையும் சில திரைப்படங்களையும் பார்க்கும் வசதியும் வாய்ப்பும் நேரமும் இங்கு உள்ளதால் சில தமிழ், ஹிந்தி, ஆங்கிலத் திரைப்படங்களையும் தொலைக்காட்சி சீரியல்கள்கள் சிலவற்றையும் பார்க்க முடிந்தது.

 

இதில் குறிப்பிடத்தகுந்த படமாகத் திகழ்வது ஹிந்தியில் எடுக்கப்பட்ட Jolly LLB  ஜாலி எல் எல் பி என்ற திரைப்படம்.

2013ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது. நையாண்டி படம் என்றோ காமடி திரைப்படம் என்றோ இதை லேசில் ஒதுக்கி விட முடியாது.

அற்புதமாக காட்சிக்கு காட்சி ரசிக்க வைக்கும் திரைப்படம் இது. அத்துடன் தீவிர சிந்தனையைத் தூண்டி விடும் படமாகவும் இது அமைகிறது.

கதையின் ஓட்டத்தில் கதாபாத்திரங்கள் சொல்வதையும் செய்வதையும் மேம்போக்காகப் பார்த்து விட்டாலும் ஒவ்வொரு சீனிலும் அழுத்தம் திருத்தமாக பல உள்ளார்ந்த அர்த்தங்கள் இருப்பதை சிந்தனை செய்து தெரிந்து கொள்கிறோம்.

 

கதை வக்கீல்களைப் பற்றியது; ஒரு கேஸைச் சுற்றிச் சுழல்கிறது. பணக்கார வீட்டுப் பையன் நடைபாதையில் படுத்திருந்த ஆறு பேரை ஒரு காரை ஏற்றிக் கொன்று விட்டான், குடி போதையில்.

அந்த கேஸிலிருந்து தப்பிக்க போலீசுக்கு லஞ்சம். வக்கீலுக்குப் பெருந்தொகை. தப்புக்கு மேல் தப்பு செய்யும் ஒரு பெரிய வக்கீலின் சாகஸ திருப்பங்கள்.

 

நமது கோர்ட் வாசல்களிலும் சுற்றுப்புறங்களிலும் இருக்கும் வக்கீல்களின் கூட்டமும் அவல நிலையும் ஒரு புறம்.

ஓட்டை டைப்ரட்டர்களை வைத்துக் கொண்டு, சார், பெய்ல் வேணுமா என்று கத்தரிக்காய் வியாபாரி போலக் கூவும் வக்கீல்கள். அந்த ஓட்டை டைப்ரட்டரையும் ஒரு பூட்டு போட்டு பாதுகாக்கும் அவலம்!

 

இந்த வக்கீல் கும்பலில் தன் தனித்துவத்தை நிலை நாட்ட விரும்பி, ஆறு பேரைக் கொலை செய்த ஹிட் அண்ட் ரன் கேஸை எடுத்து தன் பெயரை நிலை நாட்டத் துடிக்கும் ஜாலி என்ற வக்கீல் (அர்ஷத் வாஸி நடிகர்)

அவர்  கேஸைக் கையாளும் விதம் அழகுறச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பாக ஜட்ஜ் திரிபாதியாக  நடித்துள்ள சௌரப் சுக்லாவின் நடிப்பைப் புகழ வார்த்தைகளே இல்லை.

லஞ்சம் வாங்கும் சபலப் பேர்வழியோ என்று முதல் காட்சியில் சந்தேகம்; டீ குடித்து விட்டு கேஸ் பேப்பர்களை கண்ணாடி வழியே அருகே வைத்துப் பார்த்து ஏ.சி. இல்லை என்று அலட்டிக் கொள்வது, அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று அனைவரையும் திகைக்க வைக்கும் ஒரு வித்தியாசமான கேரக்டர், பெரிய வக்கீலான ராஜ்பாலைப்( நடித்து அசத்துபவர் நடிகர் பொமன் இரானி) புகழ்வது; அவரை அனுசரிப்பது; ஆனால் தன் போக்கில் வழக்கை மேலே நடத்த அனுமதிப்பது. ராஜ்பால் கத்தும் போது அவருக்கு மேலே கத்தி ‘இது எனது கோர்ட்; இங்கு நான் தான ஜட்ஜ் என்று தீர்க்கமாகச் சொல்வது, கடைசியில் இறுதித் தீர்ப்பை வழங்குவது என எல்லா விதத்திலும் அழகுற நடித்து அசத்துவதோடு நம்மை பெரிதும் சிந்திக்க வைக்கிறார்  சௌரப் சுக்லா – இல்லை, இல்லை ஜட்ஜ் திரிபாதி.

 

குடும்ப உறவைச் சித்தரிக்க காதலி தேவை – அதற்கு அமிர்தா ராவ்!

படத்தில் பல திருப்பங்கள்!

ராஜ்பால் வாதத்தால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியால் மனம் நொந்து கேண்டீன் நடத்தும் பெரியவர்;

 

செக்யூரிடியாக் வந்து இருமி இருமி இளைத்தவராக இருக்கும் போலீஸ் என்றாலும் இறுதியில் தன் பணியைச் செய்யும் செக்யூரிடி போலீஸ்.

இருப்பவரை இறந்ததாக மாற்றும் லஞ்ச லாவண்ய போலீஸ் இன்ஸ்பெக்டர்,

“இறந்து போன”வர் சாட்சி சொல்ல வருவது,

 

பெருந்தொகையைப் பெற தானே ஆளை செட் அப் செய்யும் ‘பெரிய்ய வக்கீல்’ தேஜ்பால்

என இப்படி கேரக்டர்களின் வீச்சு அபாரமாக உள்ளது.

பாட்டுக்கள் கூட பொருள் பொதிந்து இருப்பதால் கேட்க வைக்கிறது.

நமது நியாய ஸ்தலங்கள் எப்படி ஒரு அவல நிலையில் இயங்குகிறது என்பதைச் சுட்டிக் காட்டும் இந்தப் படத்தில் இடம் பெறும் வசனங்கள் ஒவ்வொன்றுக்கும் இன்னொரு மறை பொருள் அர்த்தம் இருக்கும் படி பார்த்துக் கொண்ட் வசனகர்த்தா நம்மை நெடு நேரம் சிந்திக்க வைக்கிறார். இந்தப் படம் 1999ஆம் ஆண்டு ந்டந்த ஒரு ஹிட் அண்ட் ரன் கேஸான சஞ்சீவ் நந்தா கேஸ் மற்றும் பிரியதர்ஷினி மாட்டூ கேஸ் ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்பட்ட உத்வேகத்தால் எடுக்கப்பட்டது.

 

 

படத்தின் டைரக்டர் மற்றும் வசனகர்த்தா சுபாஷ் கபூர். இல்லை இவரை சபாஷ் கபூர் என்றே இனி அழைக்கலாம்.

சிறந்த ஹிந்தி படத்திற்கான நேஷனல் பிலிம் அவார்டை இந்தப் படம் பெற்றுள்ளது.

 

ஜட்ஜ் திரிபாதியாக நடித்த சௌரப் சுக்லாவிற்கு பெஸ்ட் சப்போர்டிங் ஆக்டர் என்ற நேஷனல் பிலிம் அவார்ட் கிடைத்துள்ளது. அட, அவார்டுகளின் மீது கூட ஒரு நம்பிக்கை வருகிறதே, இந்தப் படத்தால்!

அடுத்து ஜாலி எல் எல் பி 2 – இந்த ஆண்டு வெளியாகி இருக்கிறது!

 

அதையும் பார்த்து விட வேண்டியது தான் என்று எண்ணிக் கொண்டேன்.

சிந்திக்க வைக்கக் கூடிய ஒரு தமாஷ் மற்றும் சீரியஸான படத்தைப் பார்க்க 128 நிமிடம் இருந்தால் இதை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்.

எனது மார்க் இந்தப் படத்திற்கு நூற்றுக்கு நூறு!

 

***

திரைப்படங்கள் சிலவற்றைப் பார்த்திருப்பதால் அதைப் பற்றிய தீர்மானமான எனது எண்ணங்களை இன்னொரு கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறேன்.

****

 

 

கர்ம வினை பற்றி புத்தரும் வள்ளுவரும் செப்புவது ஒன்றே!- பகுதி 7 (Post No.3947)

Written by London Swaminathan

 

Date: 27 May 2017

 

Time uploaded in London: 21-26

 

Post No. 3947

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

(This is already posted in English a few days ago)

 

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (குறள் 37)

 

பல்லக்கினைச் சுமந்து செல்கின்றவனையும் பல்லக்கில் அமர்ந்து செல்பவனையும் பார்த்த உடனேயே தெரியும்- அறத்தின் பயன் என்ன என்று. புண்ணியம் செய்தவன் பல்லக்கில் பவனி வருவான். இது பரிமேல் அழகர் உரை. இதற்கு எதிர் மாறாராக எழுதப்படும் உரை தவறானவை. நூறு ஆண்டுக்கு முந்தைய புத்தகங்களில் எல்லாம் இந்த உரையே இருக்கும் புத்தரின் தம்ம பத உரையும் இதை ஆதரிக்கும்.

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க் கணி (குறள் 115)

பொருள்

உலகத்தில் அழிவும் ஆக்கமும் இல்லாமல் இல்லை. இது ஒருவருக்கு வருவதற்கு பழ வினையே காரணம். ஆகையால் எது வந்தபோதிலும் நடுவு நிலைமை தவறாது இருப்பதே பெரியார்களுக்கு அணிகலன் ஆகும்

 

கெடுவல்யான் என்பது அறிக தன் நெஞ்சம்

நடுஒரீஇ அல்ல செயின் (குறள் 115)

 

ஒருவன் நடுவுநிலைமை தவறி தவறானவற்றைச் செய்யப் போனால், தான் கெட்டுப் போனதற்கு அறிகுறி அதுதான் என்பதை அவன் உணர வேண்டும். அதாவது அவன் கெட்டழிவது உறுதி

 

விநாச காலே விபரீத புத்தி என்று சம்ஸ்கிருதத்தில் பழமொழி உண்டு.

quosdeus vult perdere prius dementat – Napoleon

Whom God wishes to destroy He first deprives sanity

 

நெப்போலியனும் சொல்கிறார்: கடவுள் யாரை விழுத்தாட்ட நினைக்கிறானோ அவனுக்கு முதலில் புத்தியைத் தடுமாற வைப்பார்.

 

தம்மபதத்தில் புத்தர் சொல்கிறார்:

 

கெட்டதும் நல்லதும் நம்மால் வருவதுதான்; தானே தீங்கு

செய்து கொள்கிறான்; தானே தீமையை அகற்றவும் செய்கிறான். தானே தூய்மைப்படுத்திக் கொள்ளவும் செய்கிறான்.        இது எல்லாம் வேறு ஒருவர் செய்வதல்ல (தம்மபதம் 165)

தனக்குத் தானே எஜமானன் என்றும் சொல்லுவார் (160)

 

தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற கனியன் பூங்குன்றன் கருத்து இங்கே தொனிக்கிறது:-

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)

 

 

 

புலால் மறுத்தல்

தன்னூன் பெருக்கத்துத் தான்பிறிது ஊனுண்பான்

எங்கனம் ஆளும் அருள் (குறள் 251)

 

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும் (குறள் 260)

 

பொருள்:-

தன்னுடைய சதையைப் பெருக்க வைப்பதற்காக இரக்கமின்றி மற்ற உயிர்களைக் கொன்று சாப்பிடுபவன் எப்படி கருணை உடையவனாக இருக்க முடியும்?

 

ஒரு உயிரையும் கொல்லாமலும், மற்றவர் விற்கும் புலாலை உண்ணாமலும் இருப்பவனை எல்லா உயிரினங்களும் இருகரம் குவித்து தொழுது ஏத்தும்.

 

புத்தர் சொல்கிறார்:

எல்லா மனிதர்களும் தண்டனை என்றால் நடுங்குகின்றனர்; எல்லோரும் மரணத்தைக் கண்டு பயப்படுகிறார்கள்; அவர்கள் நிலையில் நம்மை வைத்துப் பார்க்க வேண்டும். எந்த உயிரையும் கொல்லக்கூடாது. கொல்வதற்க்குக் காரணமாக இருக்கக்கூடாது.–தம்மபதம் 129

 

to be continued………………..