The difference between a Sage and an Astrologer (Post No.2547)

kili-2

Compiled  by London swaminathan

 

Date: 16  February 2016

 

Post No. 2547

 

Time uploaded in London :–  12-10

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

kili-7

Someone asked whether a sage could make divination. Yang Hsiung replied that a sage could certainly make divination about Heaven and Earth. If that is so, continued, the questioner, what is the difference between the sage and the astrologer?

 

Yang Hsiung replied, “The astrologer foretells what the effects of heavenly phenomena will be on man; the sage foretells what the effects of man’s actions will be on the heavens.”

—-Chinese anecdote

Xxx

 

What is Astrology? Persians’ View

If you become an astrologer, constrain yourself to take great pains over mathematics. The science of judicial astrology is a many-sided one, and perfect justice, without the commission of any error, cannot be done to it, there being nobody so accurate that he never commits an error.  Be that as it may, the fruit of astrology is prognostication, and when you have constructed an almanac the advantage of it lies in its prognostications. Since, therefore, prognostications are essential, endeavour to become well acquainted with their principles and be competent in the art of almanac making. It is only when the star almanac is exact and the ascendant star rightly identified that prognostication is accurate.

kili-51

—-Kai Ka Us Ibn Iskandar

நம்பினார் கெடுவதில்லை: மரண தண்டனை ரத்து! (Post No.2546)

two pillars

Written  by London swaminathan

 

Date: 16  February 2016

 

Post No. 2546

 

Time uploaded in London :–  9-43 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

 

ஒரு மனிதனுக்கு ஒரு மாகாண கவர்னர், தவறுதலாக, அநியாயமாக மரணதண்டனை கொடுத்துவிட்டார். பாரசீக நாட்டில் (தற்போது ஈரான்) இது நடந்தது. மரண தண்டனைக் கைதிக்கு நம்பிக்கை போகவில்லை. இறுதிவரை முயன்று பார்ப்போம். நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறைத் தீர்ப்பல்லவா!

 

அந்த ஊரில் மரண தண்டனைக் கைதிகளை ஒரு தூணில் கட்டிவைத்து, தலையை ஒரே வெட்டாக வெட்டி விடுவர். நேரம் நெருங்கியது. கொலை வாளுடன் வந்தான் தண்டனையை நிறைவேற்றும் வெட்டியான். அப்போது, மரண தண்டனைக் கைதி ஒரு வேண்டுகோள் விடுத்தான். எனக்கு இந்தத் தூணில் மரணம் வேண்டாம். அடுத்த தூணில் கட்டிவைத்து என்னை வெட்டு என்றான்.

 

வெட்டியானுக்கு ஒரே சிரிப்பு. “ஏனப்பா? சாகப் போகிறவனுக்கு தலைக்கு மேலே, வெள்ளம் சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன? உனக்கு எதற்கு அடுத்த தூண்?” என்று நகைத்தான். கைதியோ மீண்டும் மீண்டும் வேண்டினான். “சரி, போ! உன் கடைசி ஆசையை நான் நிறைவேற்றுகிறேன்” என்று அடுத்த தூணுக்கு அழைத்துச் சென்று கட்டிக் கொண்டிருந்தான். இதற்குள் பெரும் கூட்டம் கூடிவிட்டது. அந்த நாட்டு அரசன், அந்தப் பக்கமாகச் செல்லுகையில் இது என்ன  பெருங்கூட்டம்? எனக்குத் தெரியாமல் எந்நாட்டில் என்ன நடக்கிறது? என்றான். உடனே எல்லோரும் கைதியின் விநோத வேண்டுகோளைத் தெரிவித்தனர். அரசனுக்கும் ஆச்சரியம். கூட்டத்தை விலக்கி, மரண தண்டனைக் கைதியுடன் பேசினான். அவன், தான் நிரபராதி என்றும், தனக்கு மரணதண்டனை அளித்தது தவறு என்றும் அழகாக எடுத்துரைத்தான். உடனே அவனை விடுதலை செய்ய அரசன் உத்தரவிட்டான்.

நம்பிக்கையை இழக்கக்கூடாது;முயற்சி திருவினை ஆக்கும்.

 

Xxx

cow

சண்டை பிறந்தால் தீர்வு பிறக்கும்!

ஒரு ஊரில் ஒரு பக்காத் திருடன் இருந்தான். ஒரு குடியானவன், பக்கத்து ஊரில் ஒரு பசு மாட்டை விலைக்கு வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போவதைப் பார்த்தான். இந்த மாட்டை இன்று இரவு திருடி விடுவோம் என்று அவனுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்தான். போகும் வழியில் ஒரு ஆவியும் (பேய்) அவனைப் பின் தொடர்ந்தது. அது, அந்தக் குடியானவனைக் கொல்ல வேண்டுமென்று திட்டமிட்டது.

 

அந்தக் குடியனவனைப் பின் தொடரும் திருடனிடம் சென்று தனது திட்டத்தை தெரிவித்தது. திருடனுக்கு ஏக சந்தோசம். நமக்கு ஒரு துணை கிடைத்தது என்று ஜாலியாகப் பேசிக்கொண்டே சென்றான்.

 

குடியானவனின் வீடும் வந்தது. அவன் மாட்டைக் கட்டிவிட்டு, மனைவி மக்களைச் சந்தித்து அளவளாவினான். திருடனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம். முதலில் பேயை (ஆவி) அனுப்பி, குடியானவனைக் கொல்லச் செய்தால் வீட்டிலுள்ள எல்லோரும் அழுது புலம்புவார்கள். எல்லோரும் விழித்துக் கொண்டால் பின்னர் மாடு திருடும் வேலை நடக்காது என்று எண்ணி, பேயே! நீ உன் திட்டத்தை  எனக்குப் பின்னால் நிறைவேற்று; கொஞ்சம் பொறு — என்றான்.

 

பேய்க்கும் ஒரு சந்தேகம். இந்தத் திருடன் போய் முதலில் பசுவைத் திருடினால் அது, “மா, மே” என்று கத்தும். எல்லோரும் விழித்துக் கொண்டால் என் பாடு, திண்டாட்டமாகிவிடும் என்று எண்ணி, “ஏ, திருடா, கொஞ்சம் பொறு. நான் போய் என் வேலையை முதலில் முடிக்கிறேன்” என்றது.

 

 

இருவரும் ஒருவரை ஒருவர் வலியுறுத்தவே, அது வாக்குவாதமாகி மாறி கைகலப்பில் முடிந்தது. வீட்டிலுள்ள எல்லோரும் விழித்துக்கொண்டு வேடிக்கை பார்க்க வெளியே வந்துவிட்டனர். ஊரே கூடிவிட்டது. திருடனும் பேயும் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கவே, ஊர் மக்கள் அனைவரும் கூடி, அவர்களை ஓட ஓட விரட்டினர். குடியானவனுக்கு மிக்க மகிழ்ச்சி.

 

–சுபம்–

 

ஆவி கொடுத்த ஆவணத்தை ஏற்று தீர்ப்பளித்த நீதிபதி! (Post No. 2545)

IMG_8847

Written by S Nagarajan

 

Date: 16  February 2016

 

Post No. 2545

 

Time uploaded in London :–  8-10 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

அதீத உளவியல் ஆற்றல்

 

 

பாக்யா 5-2-2016 இதழில்  அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

 ஆவி கொடுத்த ஆவணத்தை ஏற்று தீர்ப்பளித்த நீதிபதி!

.நாகராஜன்

 

 

IMG_1991

சிறப்பில் மனதை  மயக்கும் உன்னதமான ஆவி உலகம் எப்போதும் அப்படி இருக்கவே விரும்புகிறது”

                                – பிரபல எழுத்தாளர் விக்டர் ஹ்யூகோ

 

 

உலேண்ட்  லுட்விக் (Uhland Ludwig 1787-1852) என்பவர் பிரபல்மான ஜெர்மானியக் கவிஞர். இவரது சொத்து யாருக்குச் சேர வேண்டும் என்பது பற்றிய சிக்கலான வழக்கு இவர் இறந்து 58 ஆண்டுகளுக்குப் பின்னர் 1930ஆம் ஆண்டில் பெர்லின் நகரில் தொடரப்பட்டது. விசித்திரமான இந்த வழக்கை நீதிபதி எப்படி தீர்த்து வைக்கப் போகிறார் என அனைவரும் ஆவலுட்ன் எதிர்பார்த்திருந்தனர்.

 

 

ஒரு நாள் சொத்தின் மீது உரிமை கொண்டாடிய ஒரு பெண்மணி ஆவி உலகத் துணையை நாடினார். சற்று அரை இருட்டாக இருந்த அறையில் மீடியமும் அந்தப் பெண்மணியும் மற்றவர்களும் குழுமினர்.திடீரென ஒரு கை தோன்றியது. அது அந்தப் பெண்மணியின் கையைப் பற்றியது. அந்தக் கையில் மஞ்சள் நிறமுள்ள தோல் ஒன்று இருந்தது. அதை அந்தப் பெண்மணி பெற்றார்.

 

 

ஹோலோகிராப் பார்ச்மெண்ட் (Holograph parchment)  என்பது சொத்துக்குரிய ஒருவர் தன் கைப்பட  தோலில் அது யாருக்குச் சேரவேண்டும் என்பதை எழுதிக் கொடுக்கும் ஒரு ஆவணமாகும்.

மீடியம் கையில் பெறப்பட்ட தோல் ஆவணம் காலத்தால் பழுப்பேறிக் கிடந்தது. அதில் சொத்து பற்றிய விபரம் அடங்கிய இரண்டு செய்யுள்கள் – குறள் போல – இருந்தன. அதில் உலேண்ட் லுட்விக்கின் கையெழுத்தும் இருந்தது.

முதலில் கையெழுத்து கவிஞருடையது தானா என சரிபார்க்கப்பட்டது அந்த தோல் ஆவணத்தின் நிலை காலத்தால் அது முற்பட்டது என்பதையும் அதில் இருந்த செய்யுளின் நடை லுட்விக்கின் நடை தான் என்பதும் கையெழுத்தும் அவருடையது தான் என்பதும் உறுதி செய்யப்பட்டன.

 

 

வழக்கு விசாரணைக்கு வந்த போது சாட்சிகள் தோல் ஆவணத்தை மீடிய்மாக் இருந்த பெண்மணியின் கையில் ஆவி கொடுத்ததைத் தாங்கள் பார்த்ததாக சாட்சியம் கூறினர்.

நீதிபதி ஆவி கொடுத்த ஆவணத்தை ஏற்பதாகக் கூறி அந்த சொத்துக்கான உரிமையை அந்தப் பெண்மணிக்கே அளித்து தீர்ப்புக் கூறினார்.

 

 

ஆவி உலக ஆதரவாளர்கள் பெரிதும் இதை வரவேற்றனர். பரபரப்பான இந்த வழக்கில் ஆவி உலகமே வென்றது!

 

இதே போல  கவிஞர்கள் மட்டுமல்லை, ராஜதந்திரிகள் கூட ஆவி உலகை நம்புபவர்களாக இருந்ததை வரலாறு சுட்டிக் காட்டுகிறது. இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக நான்கு முறை பதவி வகித்தவர் டபிள்யூ. ஈ. க்ளாட்ஸ்டோன். (W.E.Gladstone 1809-1908).  மிகச் சிறந்த ராஜதந்திரி என்று உலகத்தினரால் பாராட்டப்பட்டவர் இவர்.

பிரப்ல நாவலாசிரியையான வயலட் ட்வீடேல் என்பவரின் அழைப்பை ஏற்று. அவர் வீட்டிற்கு க்ளாட்ஸ்டோன் வருகை புரிந்தார்.

 

 

அங்கு ஆவிகளை அழைக்கும் அமர்வு நடந்தது. அதில் அவர் கலந்து கொண்டு பல சோதனைகளை நடத்தி மிகவும் திருப்தியுற்றார். வில்லியம்ஸ் மற்றும் ஹஸ்க் ஆகிய இரு மீடியம்கள் க்ளாட்ஸ்டோன் ஆவி உலத்துடன் தொடர்பு கொள்ள உதவினர்.

 

 

இந்த அமர்வுகள் முடிந்த பின்னர் விஞ்ஞானிகளை நோக்கி அவர் கூறினார் இப்படி:” விஞ்ஞானம் இந்தக் காலத்தில் மிகப் பெரிய அரும் பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறது.ஆனால் விஞ்ஞானிகள் தங்களின் விதிகளுக்கும்  நடைமுறைகளுக்கும் ஒத்து வராத எதையும் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் ஆவி உலக ஆராய்ச்சியில் இப்போது பெரும் பணி ஒன்று உலகில் நடந்து வருகிறது. அதை உணருங்கள்” என்று ஆவி உலகத் தொட்ர்பு பற்றிய ஆராய்ச்சியைப் புகழ்ந்து பேசினார்.

க்ளாட்ஸ்டோன் தன் வீட்டிற்கு வந்தது உள்ளிட்ட ஆவி உலக அனுபவங்களை வயலட் ட்வீடேல், ‘தி கோஸ்ட்ஸ் ஐ ஹாவ் சீன்’ (The Ghosts I have seen) என்று புத்தகமாக எழுதினார்.

 

 

 

இது ஒரு புறமிருக்க, ஆவிகள் மூலம் கொலை வழக்குகளில் குற்றம் இழைத்தவரைக் கண்டு பிடிக்க முடியுமா என்பன போன்ற கேள்விகளை ப்லர் எழுப்புவதுண்டு!.

உலகில் அமெரிக்கா,இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் சிக்கலான கேஸ்களைக் கண்டுபிடிக்க போலீஸாரின் துப்பறியும் பிரிவு மீடியம்களின் உதவியை இப்போது நாடி வருகின்றது.. சைக்கிக் டிடெக்டிவ்ஸ் என்று அழைக்கப்படும் இவர்கள் ஆவிகளின்  துணையோடு நடந்தது என்ன என்பதை அக்கு வேறு ஆணி வேறாக அலசிச் சொல்லி விடுகின்றனர். நூற்றுக் கணக்கான கேஸ்களில் ஒன்றை மட்டும் இங்கு பார்க்கலாம்.

பெர்ரி சாரா என்ற பெண்மணி அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட்டில் 1973ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி கோரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள். எவ்வளவோ முயன்றும் போலீஸாரால் அவரைக் கொன்றவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.டிடெக்டிவ் ஜார்ஜ் மஜ்ஜாகேன் சைக்கிக் மீடியமான பசகரெல்லா டவுனி என்பவரின் துணையை நாடினார்.

 

 

அவர் மிகத் தெளிவாக,” கொலையாளியின் மீது ஆயில் நாற்றம் அடிக்கிறது.  அவர் ஒரு மெக்கானிக்கிற்கான யூனிஃபாரத்தை அணிந்தவர்.. அவரது சட்டையில் ‘E’ என்ற ஆங்கில எழுத்து காணப்படுவதால் அவர் பெயர் ‘E’ யில் ஆரம்பிக்கும். ஆனால் தப்பி ஓடும் சாமர்த்தியசாலி என்பதால் அவரைப் பிடிக்க நெடுங்காலம் ஆகும்” என்றார்.

 

 

அதே போலவே நடந்தது. 26 வருடங்கள் கழித்து 1999ஆம் ஆண்டு எட்வர்ட் என்பவர் சாராவைக் கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். டிஎன்ஏ  சோதனை மூலம் அவரது குற்றம் நிரூபணமானது. கொலை செய்த சமயத்தில் அவர் மெக்கானிக்காக வேலை பார்த்ததும் தெரிய வந்தது! அவர் கொலைக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டார்.

இது போல சுவாரசியமான கேஸ்கள் சைக்கிக் டிடெக்டிவ்களால் தீர்க்கப்பட்டுள்ளது ஆச்சரியப்பட வைக்கும் ஒன்று.

Thomas-Alva-Edison  Thomas-Alva-Edison-1847-1931

. அறிவியல் அறிஞர் வாழ்வில்

 

தாமஸ் ஆல்வா எடிஸனுக்கு தனது கணக்குப் பிரிவில் இருப்பவர்களைக் கண்டாலே அவ்வளவாகப் பிடிக்காது. தனது உள்ளுணர்வை வைத்தே கணக்கு விஷயத்தில் அனைத்தையும் அவர்  முடிவு செய்து விடுவார். அடிக்கடி அவர்  “இந்த கணித மேதைகளிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கூறி கணக்கைப் போட சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? ஒரு பெரிய பேப்பரை எடுத்துக் கொண்டு வரிசை வரிசையாக  கோடு போட்டு ஏ என்றும் பி என்றும் எக்ஸ் என்றும் ஒய் என்றும் எழுதி அந்த கட்டங்களில் ஏராளமான நம்பர்களைப் போட்டு நிரப்புவார்கள். கடைசியில் ஒன்றுக்கும் உதவாத ஒரு தப்பான விடையைத் தருவார்கள்.” என்று சொல்வது வழக்கம். தன் மனதிலேயே கணக்கைப் போட்டு உடனடியாக உள்ளுணர்வில் தோன்றியபடி விஷயத்தை முடித்து விடுவார் அவர்.

 

 

ஒரு முறை வெஸ்டர்ன் யூனியன் கம்பெனி அவரது ஒரு கண்டுபிடிப்புக்காக ஒரு லட்சம் டாலர் தொகையைத் தந்தது. அவ்வளவு பெரிய தொகையைப் பார்த்துப் பிரமித்துப் போனார் எடிஸன். கம்பெனி நிர்வாகத்திடம், “ எனக்கா இவ்வளவு பெரிய தொகை? இதை என்னிடம் தர வேண்டாம். நீங்களே பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். ஆண்டொன்றுக்கு ஆறாயிரம் டாலர் வீதம் பதினேழு ஆண்டுகளுக்கு எனக்கு நீங்கள் தாருங்கள்” என்றார். அந்த நிறுவனமும் அப்படியே செய்ய சம்மதித்தது!

**********

 

 

 

The Big and the Small: Conversation between the River and the Ocean! (Post No. 2544)

IMG_2946

Compiled by London swaminathan

 

Date: 15  February 2016

 

Post No. 2544

 

Time uploaded in London :–  14-26

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact  swami_48@yahoo.com)

IMG_9241

It was the time of autumn floods. Every stream poured into the river, which swelled in its turbid course. The banks grew so apart that it was impossible to tell a cow from a house.

 

The spirit of the river shouted for joy that beauty of all the earth was gathered to himself. Down with the stream he journeyed east until he reached the ocean. There looking eastward and seeing no limit to its waves, his face fell. And as he gazed over the expanse he said to the spirit of the ocean:

“A common proverb says that he who hears half the truth thinks no one is equal to himself. And so it is with me.  When formerly I heard people decrying the learning of Confucius or the heroism of Po, I did not believe, but now that I see your vastness – Ah, if I had not reached your dwelling I should have forever been a laughing stock to those who knew better!”

 

To this the ocean spirit replied:

“You cannot talk of the ocean to a frog in a well – the creature of narrow bounds. Nor of ice to summer flies – the ephemera of a day.  You cannot speak of the Law to a pedant. His limits are narrow. But now that you have emerged – that you have seen the great ocean, you know your narrowness, and I may speak of great principles.

 

Nothing beneath the heaven is greater than the ocean. All water flows into it, yet it does not overflow. It is drained yet does not empty. It knows no floods or droughts and thus greater than mere rivers and brooks – though I, its spirit, dare not boast, for I get my shape from the universe, my vital power from the negative and positive principles governing all. In the universe I am as a little stone or a bush on a vast mountain. And of all who inhabit the earth man is but one. Is not he compared with all creation as the tip of  a hair as small?”

IMG_3030

“By no means. Dimensions are limitless. Time has no bounds. Conditions vary. Terms are not final. How then can one say that the tip of a hair is the last word on littleness or the universe the last word on the vastness?”

—-Chuang Tzu (China)

 

 

Never Lose Hope! (Post No.2543)

two pillars

Compiled by London swaminathan

 

Date: 15  February 2016

 

Post No. 2543

 

Time uploaded in London :–  9-53 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

Escape may lie between this pillar and that!

 

An innocent man was condemned to death by an unjust governor, and when the executioner had bound him to a pillar and was about to cut off his head, the victim begged he might be bound to the next pillar instead.

 

The executioner laughed at him, saying “what can you hope to gain so brief an interval? You might just as well let me finish my job.”

But eventually he gave way to the man’s entreaties; and while he was engaged in untying him and fastening him to the next pillar, the king chanced to pass by and asked the meaning of the large crowd that had gathered. On being told, he sent for the condemned man, who was able to convince him of his innocence, and so escaped death.

 

Xxx

cow

May God always bless us with such evil!

A pious man bought a cow in the market and set out for his home. He was followed by a thief who planned to steal his cow. On the way the thief fell in another man who revealed himself as a demon who planned to take the pious man’s life.

 

As they drew near to the latter’s house, where the cow was now tied up, it occurred to the thief that if the demon killed the pious man first, his family may be aroused, and it would be impossible to steal the cow. At the same time the demon thought that, f the thief stole the cow first, the pious man would be awakened by the bellowing, and so would escape death.

 

Each began to ask the other to wait and take the second place, and eventually they came to blows. The thief began to shout, ‘O Pious man, here is a demon who has come to take your life!’ while the demon shouted back ‘O Pious man, here is a thief who has come to steal your cow!’

 

In the end the man and his family were aroused, the thief and the demon took to their heels, and the pious man prayed, “May God always bless us with such evil” for the benefit of his family.

–Subham–

மெத்தக் கற்ற எத்தன் சிட்டாய்ப் பறந்துபோனான்! (Post No.2542)

rifle

Compiled by london swaminathan

Post No. 2542

Date: 15th February 2016

 

Time uploaded in London:- 9-07 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

 

100 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய ஜோக்.

ஆதாரம்: விநோத விகட சிந்தாமணி;

அனுப்பியவர்: சென்னை ச. சீனிவாசன்

 

“சாமத்தில் வயிற்றுச் சாப்பாட்டுக்கு வழியின்றி, தந்திரம் ஒன்றும் தோன்றாமல்,சென்னையன் என்ற கருமான் பழைய துப்பாக்கி ஒன்றைச் சம்பாதித்து, கையிற்பிடித்து, அடர்ந்து படர்ந்த சாலையின்கண், துப்பாக்கியும் கையுமாய் உலவிக்கொண்டிருக்கையில், சங்கிலிபோல தங்கக் கொலுசு அரை ஞாணும்  நிறைய வெண்டயம் போல் வளைவுள்ள  விசிறிமுருகுகளையும் அணிந்து கையில் பணப்பையுடன் ஒரு செட்டியைக் கண்டு சந்தோஷத்துடன் கருமான், கையிலுள்ள துப்பாக்கியால் செட்டியைச் சுடுவது போலக் குறிவைத்து, “செட்டி மகனே! உன் கெட்டிக் கொலுசையும், வட்ட முருக்கையும், பொட்டிப் பணத்தையும் கொட்டிக்கொடுக்கிறாயா? சுட்டுப்போடட்டுமா? என்று பயமுறுத்திக்கேட்க, அதற்குச் செட்டி மகன், கெட்டியுக்தி பண்ணி, உன் துப்பாக்கியை எனக்குக் கொடுத்துவிட்டால், என் சொத்தனைத்தையும் உனக்குத் தருகிறேன் என்றான்.

(இதுவரை ஒரே வாக்கியம்; பழையகால நடை!!!!!!!!!!!!!!!!!)

 

கருமான் சம்மதித்து, சொத்தையெல்லாம்  பறித்துக்கொண்டு துப்பாக்கியைக் கொடுத்தான். அதைக் கையிற்பிடித்து, “பட்டி மகனே! என் சொத்து முழுவதையும் கட்டிவைக்கிறாயா? அல்லது உன்னைச் சுட்டுப் போடட்டுமா? என்று செட்டியார் கேட்க, அதற்குக் கருமான், “செட்டியாரே! சுட்டுப் போட அதில் மருந்திருந்தாலன்றோ? என்று சொல்லிக்கொண்டு வந்தவழியே ஓட்டமெடுத்தான். செட்டியார் ஏமாந்து, துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தன் மதியீனத்தை நினைத்து துக்கித்தார்.

–சுபம்–

கும்பகோணம் கோவிந்தசெட்டி சொன்னது எல்லாம் பலித்தது: விவேகாநந்தர் (Post No 2541)

viveka

Written by S Nagarajan

 

Date: 15  February 2016

 

Post No. 2541

 

Time uploaded in London :–  8-24 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

அதீத உளவியல் ஆற்றல்

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (4)

 

 

ச.நாகராஜன்

 

 talks-with-swami-vivekananda-400x400-imadzmseukfsp66n

தாயைப் பற்றிய கவலை

 

மேலை நாடுகளில் அற்புதங்களுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஸ்வாமிஜி கூறி முடித்த போது அங்கு அருகிலிருந்த ஸ்வாமி யோகானந்தர், ஸ்வாமிஜியிடம் உங்கள் சென்னை அநுபவத்தை இந்த சிஷ்யருக்குச் சொல்லுங்களேன்” என்றார்.

 

உடனே ஸ்வாமிஜி தனது சென்னை அனுபவத்தைக் கூறலானார்.

ஸ்வாமிஜி சென்னையில் இருந்த சமயம் அது. அவர் சென்னையில் அக்கவுண்ட் ஜெனரலாக இருந்த மன்மத நாத் பட்டாசார்யாவுடன் இருந்து வந்தார். ஒரு நாள் இரவு அவரது தாயார் இறந்து விட்டது போல அவர் கனவு கண்டார். இது

அவர் மனதை பெரிதும் பாதித்தது.மேலை நாடு செல்வதற்காக மும்முரமான ஏற்பாடுகள் வேறு அப்போது நடந்து கொண்டிருந்தது.ஆகவே அவர் மனம் ஊசலாடியது.

 

 

ஸ்வாமிஜி தனது கவலையை மன்மத பாபுவிடம் தெரிவித்தார். உடனே அவர் உண்மையான நிலவரம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக கல்கத்தாவிற்குத் தந்தி ஒன்றை அனுப்பினார்.

அத்துடன் ஸ்வாமிஜியின் கவலையைப் போக்க அவர், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள வலங்கைமான் என்னும் கிராமத்தில் குறி சொல்வதில் வல்லவரான கோவிந்த செட்டி என்று ஒருவர் இருப்பதாகவும்  அவரிடம் சென்று குறி கேட்கலாம் என்றும் சொன்னார்.

 

கோவிந்த செட்டி மிகவும் பிரபலமானவர். எதிர்காலத்தைச் சொல்ல வல்லவர். அவரை மைசூர் மன்னர், சென்னை மாகாண கவர்னர் எனப் பலரும் கண்டு குறி கேட்டதுண்டு! அவர் சென்றால் ஊர் மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்வர். அப்படிப்பட்டவரைச் சந்திக்க ஸ்வாமிஜியும் ஒத்துக் கொண்டார்.

 

vivek world

கும்பகோணப் பயணம்

 

அளசிங்கர், மன்மத பாபு, ஸ்வாமிஜி, இன்னுமொரு அன்பர் ஆகிய நால்வர் அடங்கிய குழு ரயிலில் ஏறி கும்பகோணம் சென்றது. அங்கிருந்து நடைப் பயணம் மேற்கொண்டு வலங்கைமான் சென்று கோவிந்த செட்டியை அவர்கள் சந்தித்தனர். அவர் ஒரு சுடுகாட்டின் அருகில் இருந்தார்.

 

பயமுறுத்தும் தோற்றம் அளித்த அவரைப் பார்க்கச் சற்று பயமாகத் தான் இருந்தது. அங்கிருந்த அவரது உதவியாளர்கள் அவர் அனைத்து ஆவிகளின் மீதும் கட்டுப்பாட்டைக் கொண்ட பெரும் சக்தியைக் கொண்டவர் என்று கூறினர்.

வந்தவர்களை அவர் கண்டு கொள்ளவே இல்லை. சிறிது நேரம் காத்திருந்த பின்னர் அவர்கள் அனைவரும் எழுந்து கிளம்ப யத்தனித்தனர்.

 

அப்போது கோவிந்த செட்டி அவர்களை இருக்குமாறு கூறினார்.

பின்னர் ஸ்வாமிஜியை அழைத்தார்.

 

சில படங்களை முதலில் வரைந்த அவர் மனதை ஒரு முகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

அளசிங்கர் அவர் கூறியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார்.

 

 

கோவிந்த செட்டி கூறிய எதிர்காலக் கணிப்பு

 

கோவிந்த செட்டி ஸ்வாமிஜியின் பெயர், அவரது வமிசாவளி, முன்னோர்களின் பெயர் ஆகிய அனைத்தையும் கூறினார். ஸ்வாமிஜியின் சஞ்சாரம் முழுவதும் ராமகிருஷ்ணர் அவருடன் கூடவே இருப்பதையும் அவர் உரைத்தார். ஸ்வாமிஜியின் தாயார் நலமாக இருக்கும் நற்செய்தியையும் அவர் கூறினார். அத்தோடு மதத்தை பிரச்சாரம் செய்யும் வகையில் தொலைதூர நாடுகளுக்குச் ஸ்வாமிஜி செல்வார் என்றும் அவர் கூறினார்.

இந்த நற்செய்திகளை எல்லாம் கேட்டு குழுவினர் மீண்டும் சென்னை திரும்பினர்.

 

 

இதைச் சொல்லி முடித்த ஸ்வாமிஜி யோகானந்தர் பக்கம் திரும்பி, “அந்த மனிதர் சொன்ன அனைத்தும் அப்படியே பலித்தது” என்று கூறி முடித்தார்.

 

 

யோகானந்தர் இப்போது ஸ்வாமிஜியை நோக்கி, “இதையெல்லாம் முன்னர் நீங்கள் நம்புவதில்லை என்பதால் இந்த அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டது போலும்” என்றார்.

 

 

உடனே ஸ்வாமிஜி, “ எதையும் நேரடி நிரூபணம் இல்லாமல் நம்புகின்ற முட்டாள் நான் இல்லை. ஆனால் மகாமாயையின் ஆளுகைக்குள் வந்தால் நான் பார்த்த மாயாஜால மர்மங்கள் எத்தனையோ! அடடா!! என்ன பேச்சைப் பேசிக்

 

கொண்டிருக்கிறோம் இந்த நாள் முழுவதும்! பிசாசு, ஆவிகளைப் பற்றி! பேயைப் பற்றி பேசுபவர்கள் பேயாகவே ஆகி விடுவார்கள். ‘நான் ஆத்மன்’ என்று நினைப்பவர்கள் அதாக ஆவார்கள்” என்று கூறி நிறுத்தினார்.

 

தேவையற்ற குப்பைகளால் உங்கள் மனதை நிரப்பாதீர்கள் என்று சீடர்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்க ஆரம்பித்தார் அவர்.

இரவு வெகு நேரம் ஆகவே, சீடர்கள் கலைந்தனர்.

 viveka lanka

கோவிந்த செட்டிக்கு ஸ்வாமிஜியின் அருள்

 

இனி கோவிந்த செட்டி சம்பவத்திற்கு மீண்டும் வந்து பின்னர் நடந்த ஒரு சம்பவத் தொடர்ச்சியைப் பார்ப்போம்.

ஸ்வாமிஜிக்கு கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு ஒரு தந்தி வந்தது – அவரது அன்னை நலமாய் இருப்பதாக!

கோவிந்த செட்டி கூறிய அனைத்தும் அப்படியே நடந்தது.

உலகப் புகழ் பெற்று ஸ்வாமிஜி இந்தியாவிற்குத் திரும்பினார்.

ஊர் ஊராக வரவேற்பு, ஆரவாரம், கோலாகலம்!

 

கும்பகோணத்திற்கு விஜயம் செய்த ஸ்வாமிஜிக்கு கோலாகலமான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

 

கோவிந்த செட்டியைப் பார்த்து நான்கு வருடங்கள் உருண்டோடி விட்டன.

 

வரவேற்புக் கூட்டத்தில் கோவிந்த செட்டியும் நிற்பதைப் பார்த்தார் ஸ்வாமிஜி.

 

அவரை அழைத்தார். தன்னைத் தனியே வந்து சந்திக்குமாறு கூறினார் ஸ்வாமிஜி. அவரும் அப்படியே தனியே பின்னர் வந்தார்.

அவரிடம் ஸ்வாமிஜி,” உங்களிடம் அற்புத சக்திகள் இருப்பது எனக்குத் தெரியும். அதனால் பணமும் புகழையும் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் ஆன்மீக்ம் என்று எடுத்துக் கொண்டால் ஒரு அடி கூட நீங்கள் முன்னேறவில்லையே!. எங்கே ஆரம்பித்தீர்களோ, அங்கேயே நிற்கிறீர்களே! இது தானே உண்மை! கடவுளை நோக்கி என்றாவது உங்கள் மனம் சிறிதாவது சென்றுள்ளதா!” என்றார்.

 

 

கோவிந்த செட்டி ஸ்வாமிஜி கூறியதில் இருந்த உண்மையை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.

 

பின்னர் ஸ்வாமிஜி,” கடவுளை நாடாவிட்டால் இந்த சக்திகளால் பயன் தான் என்ன! இறையானந்தத்தை ஒரு முறை நீங்கள் சுவைத்து விட்டால் அதன் பிறகு இவை எல்லாம் பயனற்றதாக ஆகி விடும்” என்று அருளினார்.

 

 

பின்னர் ஸ்வாமிஜி கோவிந்த செட்டியை கட்டி அணைத்துக் கொண்டார்.

 

என்ன ஆச்சரியம்! அன்றிலிருந்து கோவிந்த செட்டியின் அற்புத ஆற்றல்கள் அவரை விட்டு அகன்றன. இறை பக்தியிலேயே அவர் ஆழ்ந்து உலகைத் துறந்தவராக அவர் வாழ ஆரம்பித்தார்.

 

(ஸ்வாமிஜி தான் வாழ்ந்த நாள் முழுவதும் அன்னை மீது பக்தியும் மரியாதையும் கொண்டவராக விளங்கினார்.

39 ஆண்டுகள் 5 மாதங்கள் 24 நாட்கள் வாழ்ந்து 1902ஆம் ஆண்டு ஜூலை மாதம்  நான்காம் தேதி சமாதி அடைந்த ஸ்வாமிஜியின் மறைவு கேட்டு அன்னை புவனேஸ்வரி தேவி மாளா துக்கத்துடன் அழுது புரண்டார். அவரை மடத்து துறவிகளும் ஏனையோரும் சமாதானப் படுத்த முடிந்தமட்டில் முயன்றனர்.)          -தொடரும்

 

குறிப்பு: மேற் கூறிய சம்பவத்தை ஆங்கிலத்தில் படிக்க “TALKS WITH SWAMI VIVEKANANDA “ (RAMAKRISHNA MUTT) என்ற புத்தகத்தைப் பார்க்கலாம் 500 பக்கங்கள் அடங்கியுள்ள இந்த நூலில் ஸ்வாமிஜி பல விஷயங்களைத் தெளிவு பட விளக்குகிறார். மேலே உள்ள சம்பவம் 113 முதல் 116ஆம் பக்கம் முடிய உள்ள பக்கங்களில் இடம் பெற்றுள்ளது.

 

–சுபம்–

Priest and the Emperor (Post No.2540)

chinese

Compiled by london swaminathan

Post No. 2540

Date: 14th February 2016

 

Time uploaded in London:- 17-10

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

Story from China

An old, lame priest was so renowned for his self-denying liberality that the Emperor Chien Lung himself paid him a visit. After some conversation the emperor presented him with a valuable pearl which the old man immediately bestowed on a beggar in the crowd.

 

His Majesty was somewhat taken aback at this act of rudeness and asked it was his habit to give everything away in the same manner. On receiving a reply in the affirmative, the Emperor added, “Even down to the crutch you lean upon”.

 

“Ah”, said the priest, “it is written that the superior man does not covet what his friend cannot spare”.

“But supposing”, said the Emperor, “he was not a superior man?”

“In that case”, answered the priest, “you could not expect me to be his friends.”

 

Xxx

Cheese-Bread

God is the Provider, but he needs a nudge (story from Persia)

 

In other words, God helps those help themselves. Two friends were disputing, one of them maintaining that God would provide all one’s needs, the other arguing that one had to work for one’s living. At length to settle the matter, the first man went and sat in a corner of the mosque to wait his sustenance from god. Two days passed, and then three, and still nothing came from heaven or earth.

 

But on the evening of third day three villagers came into the mosque to eat their bread and cheese. As they were packing up the reminder of the food before leaving, our friend, seeing his last chance about to disappear, coughed gently. The villagers noticed him and taking pity on his haggard appearance, gave him the remains of their food. The man went back to his friend in all humility “God is indeed the Provider”, he admitted, “but he needs a nudge.”

 

Xxx

 

Earth-globe-with-people-Stock-Vector

World is God (Story from India)

 

A man living in this world was disgusted with life, and renouncing it, went to a solitary spot and dwelt in a cave praying God to give His Darshan. He fasted and prayed for a long period and just when he was despairing of seeing God, He appeared before him saying, “Lo, I am here”. What did the man see before him? God had come to him in the form of the world itself which he had renounced in search of Him. On having this vision the man returned to the world and saw God everywhere in it and ever remained filled with bliss and peace.

 

–Subham–

 

108 உபநிஷத்துகளின் பட்டியல் (Post No. 2539)

IMG_2976

List of 108 Upanishads in Tamil

 

Compiled by london swaminathan

 

Post No. 2539

Date: 14th February 2016

 

Time uploaded in London:- 11-55

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

 

swami_48@yahoo.com)

 

தமிழில் 108 உபநிஷத்துகளின் பெயர்கள் உள்ள பழைய நூல் ஒன்றை, பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டேன். அதன் விவரங்கள் கீழே உள்ளன. ஆங்கிலத்தில் ஏற்கனவே 121 உபநிஷத்துகளின் பெயர்களை வெளியிட்டுள்ளேன்.

 

 

 

IMG_2980

 

IMG_2981

 

IMG_2982

 

IMG_2984

IMG_2986

 

IMG_2987

My Previous Upanishad Articles in English:–

List of 121 Upanishads; posted on 9 December 2014

Humour in the Upanishads 23 April 2014

Why did Shah Jahan’s son translate the Upanishads? 11 December 2014

Plato used Hindu Microcosm and Macrocosm 20 June 2015

Da..Da…. Da….. Story, posted 19 February 2014

 

 

List of 108 Upanishads in Tamil

 

Compiled by london swaminathan

 

Post No. 2539

Date: 14th February 2016

 

Time uploaded in London:- 11-55

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

 

swami_48@yahoo.com)

 

தமிழில் 108 உபநிஷத்துகளின் பெயர்கள் உள்ள பழைய நூல் ஒன்றை, பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டேன். அதன் விவரங்கள் கீழே உள்ளன. ஆங்கிலத்தில் ஏற்கனவே 121 உபநிஷத்துகளின் பெயர்களை வெளியிட்டுள்ளேன்.

 

 

 

My Previous Upanishad Articles in English:–

List of 121 Upanishads; posted on 9 December 2014

Humour in the Upanishads 23 April 2014

Why did Shah Jahan’s son translate the Upanishads? 11 December 2014

Plato used Hindu Microcosm and Macrocosm 20 June 2015

Da..Da…. Da….. Story, posted 19 February 2014

மூலிகைப் போர்! (Post No 2538)

IMG_6701

Written by S Nagarajan

 

Date: 14  February 2016

 

Post No. 2538

 

Time uploaded in London :–  6-57  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

பாக்யா 12-2-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

 

மூலிகைப் போர்!

.நாகராஜன்

 

 

IMG_6703

ஆயுர்வேதத்தில் இருக்கும் பெரிய நன்மை என்னவென்றால் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தவே ஏற்படுத்தாது. பக்க ஆதாயங்களைத் தான் ஏற்படுத்தும்                         – சுப்ரா கிஷன்

                              

கடைசி கடைசியாக, அதிசயமாக நாம் விழித்துக் கொண்டோம். எதில்?  மூலிகைப் போரில்!

பிரம்மாண்டமான இமயமலை வடக்கில் இருக்க விந்தியாசலம், கொல்லி மலை, மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை என்று நம் தேசத்தில் உள்ள மலைகளைச் சார்ந்துள்ள விஸ்தாரமான காடுகள் அபூர்வ மூலிகைகளைக் கொண்டுள்ளன. இந்த மூலிகைகளின் பயன்பாட்டைத் தெரிந்து கொண்டு அவற்றை இன்றும் ப்ழங்குடி மக்கள் சர்வ சாதாரணமாக உப்யோகிக்கின்றனர். பெரிய வியாதிகள் கூட உடனடியாகத் தீருகிறது. வாதம், பித்தம், கபம் ஆகிய திரி தோஷங்களையும் தனி நபருக்கே உரித்தான பிரக்ருதியையும் அடிப்படையாகக் கொண்டது நமது ஆயுர் வேதம்.

 

இதை நமது விஞ்ஞானிகள் முதல் முறையாக ஆராய்ந்து அதன் அருமை பெருமைகளைக் கண்டுபிடித்து உரைத்துள்ளனர்.

ஆனால் நமக்கு முன்பாகவே விழித்துக் கொண்ட சீனா கன்ஃப்யூசியஸ் கூறிய நெறிகளின் படி மூலிகை ஆராய்ச்சியில் இறங்கி திபெத்தில் உள்ள அரிய பெரிய மூலிகைகளை இனம் கண்டு அதிலிருந்து பல்வேறு மருந்துகளைத் தயார் செய்து வருகிறது. உலகின் பிரம்மாண்டமான மருந்து உற்பத்தி மற்றும் விற்பனை சந்தையில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இந்த மூலிகைப் போரை சீனா ஆரம்பித்துள்ளது.

அமெரிக்காவோ வெளியில் அல்லோபதி என்று சொன்னாலும் மூலிகை மற்றும் தாவரங்களிலிருந்தே உயிர்காக்கும் மருந்துகளைத் தயாரிக்கிறது.

 

1820ஆம் ஆண்டு இரண்டு பிரெஞ்சு ஆய்வாளர்கள் மூலிகையிலிருந்து மலேரியாவைப் போக்கும் கொய்னா மாத்திரையைக் கண்டுபிடித்ததிலிருந்து இந்த மூலிகை வேட்டை ஆரம்பித்தது. சரக சம்ஹிதாவில் சரக முனிவர் கூறிய அற்புதமான சர்ப்பகந்தியை நாம் விட்டு விட அமெரிக்கா அதை எடுத்துக் கொண்டது. அதை உபயோகித்து,  பன்னாட்டு மருந்து நிறுவனமான சிபா-கெய்கி  ரெஸர்பைன் (Reserpine) மாத்திரையைக் கண்டுபிடித்து பெரும்புகழைப் பெற்றது. மஞ்சளை அமெரிக்கா பேடண்ட் எடுத்த கதையையும் நாம் அறிவோம்.

 

2009ஆம் ஆண்டு சீனா ஹார்வர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து மூலிகைகளிலிருந்து மருந்துகளைத் தயாரிக்கும் உயர்தர உத்திகளை வகுத்துக் கொண்டது.

இமயமலைப் பகுதியை முற்றிலுமாக ஆராய்ந்து அங்கிருக்கும் அபூர்வ மூலிககைகளை இனம் கண்டு உயர்தர மருந்துகளை சீனா தயாரிக்கும் வேகத்தைப் பார்த்தால் மூலிகைப் போரில் அது வெற்றி பெற்று விடுமோ என்ற பயம் ஏற்படுவதாக நமது விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

இமயமலைப் பகுதியில் கங்கோத்ரி யமுனோத்ரி என கங்கையும் யமுனையும் உருவாகும் பகுதிகளில் அற்புதமான மூலிகை வளம் உள்ளது.

இங்குள்ள துரோணகிரியின் அருகிலே தான் சஞசீவனி மூலிகை உள்ள் சஞ்சீவனி பர்வதம் உள்ளது.

 

லக்ஷ்மணனைக் காப்பாற்ற ஹநுமார் சஞ்சீவனி மூலிகையை எடுக்க வந்த பந்தர் பூஞ்ச் பகுதியில் பங்குனி மாதத்தில் ஒரே ஒரு குரங்கு மட்டும் வருகிறது. ஹரித்வார் வழியாக வரும் அந்தக் குரங்கை தரிசிக்க யாத்ரீகர்கள் கூட்டம் கூட்டமாகக் காத்திருப்பர். பலரும் தரிசிக்கின்றனர். ஒரு வருடம் மலை உச்சியில் வசிக்கும் அந்தக் குரங்கு அடுத்த குரங்கு வந்தவுடன் மலையை விட்டு இறங்கி விடும். இமயமலை தரும் நூற்றுக் கணக்கான அபூர்வங்களில் இதுவும் ஒன்று!

 

உயிரை மீட்டுத் தரும் சஞ்சீவனி மூலிகை உள்ளிட்ட ஏராளமான மூலிகைகளின் பெயரை சரகர் குறிப்பிடுகிறார்.  உயிரைக் கொல்லும் வியாதியான கான்ஸருக்கு வின்ப்ளாஸ்டைன் (Vinblastiine), மற்றும் வின்கிறிஸ்டைன்(Vincristine) ஆகிய மருந்துகள் மூலிகையிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன.

 

இந்திய அரசின் நிறுவனமான  சென்ட்ரல் ட்ரக் ரிஸர்ச் இன்ஸ்டிடியூட் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் குக்குள் மூலிகையிலிருந்து குக்குளிபிட் மருந்தை 1986இல் தயாரித்தது குறிப்பிடத் தகுந்தது.

 

இந்த வகையில் நமது ஆராய்ச்சிகள் தீவிரமடைந்துள்ளன. ஹைதராபாத்தைச் சேர்ந்த சென்டர் ஃபார் செல்லுலர் அண்ட் மாலிகுலர் பயாலஜியைச் (Centre for Cellular and Molecular Biology)  சேர்ந்த விஞ்ஞானிகள் ஆயுர்வேதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் மனித அமைப்பு சரிதானா என்ற சோதனையில் ஈடுபட்டனர். இதற்காக  20 வயதிலிருந்து 40 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண்கள் 3416 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த நிறுவனம் ஆய்வை ஆரம்பித்தது. இறுதியில் வாத, பித்த, கபம் ஆகிய மூன்று தோஷங்களில் ஏதேனும் ஒரு தோஷம் 60 சதவிகிதத்திற்கு மேலாக உள்ள 262 பேர்களை தேர்ந்தெடுத்தது.

IMG_6704 - Copy

இவர்களின் மீது மரபணு, புள்ளியியல் அடிப்படையில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1.2கோடி ரூபாய் செலவில் ஆறு ஆண்டுகள் செய்யப்பட்ட இந்த ஆய்வு சமீபத்தில் 2015 வருட முடிவில் முடிந்து விட்டது.

இதன் முடிவுகள் ஆச்சரியமூட்டும் விதமாக நமது ஆயுர்வேத கொள்கைகளை உறுதி செய்கிறது!

 

இந்த ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட விஞ்ஞானி டாக்டர் குமாரசாமி தங்கராஜ் தனது குழுவினர் மரபணுவில் 52 மாறுபாடுகளைக் கண்டறிந்துள்ளனர் என்று தெரிவிக்கிறார். இந்த ஆராய்ச்சி மேலும் நடைபெற்றால் மூன்று தோஷங்களின் உட்பிரிவுகளையும் கண்டு பிடிக்க முடியும். அப்போது ஒவ்வொரு தனி நபருக்கும் உரிய தனித் தனி சிகிச்சை முறையை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

 

இந்திய அறிவியல் இதழ்களில் இடம் பெற்று விட்ட இந்த ஆராய்ச்சி மூலிகைப் போரில் இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை ஊக்குவிக்கிறது.

தொன்மமும் நம்பிக்கையும் ஒரு புறம் இருக்க அறிவியல் ரீதியாக ஆராய்ந்து அவை உறுதிப்படுத்தப் படும் போது வரும் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாதல்லவா!

 

ருத்ரமூலிகா, சஞ்சீவனி, சர்ப்பகந்தி உள்ளிட்ட அபூர்வ மூலிகைகளை இந்திய விஞ்ஞானிகள் இனம் கண்டு ஆய்வு நடத்தினால் புதியதோர் வியாதியில்லா உலகைப் படைக்க இந்திய விஞ்ஞானிகள் காரணமாகி விடுவார்கள். புராதனமான அறிவும் நவீன அறிவியலும் ஒன்றிணைந்தால் இந்தியா, ‘மூலிகை நாடு’ என்ற உயரிய அந்தஸ்தைப் பெற்று விடும்!

அந்த நாள் விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

பிரான்ஸை சேர்ந்த பிரபல் விலங்கியல் அறிஞரும் இயற்கையியலருமான (Zoologist and Naturalist)  ஜார்ஜ் குவியே         ( Georges Cuvier 1769-1832) ஒரு விநாடி கூட நேரத்தை வீணாக்க மாட்டார்.  உலகில் உள்ள சகல விதமான மிருகங்கள், பறவையினங்கள் உள்ளிட்ட உயிரினங்களைப் பற்றி அவருக்கு அத்துபடி. அந்த விவரங்களை எல்லாம் தனது அறையில் அவர் சேகரித்து வைத்திருந்தார்.

 

தன் வீட்டிற்குள் வந்து அநாவசியமாக யாரேனும் நேரத்தை வீணடிப்பது அவருக்கு அறவே பிடிக்காது. பிரபலமான ஒரு கனவான் அவரை மரியாதை நிமித்தம் சந்திக்க வருவார். ஒருமுறை அதைப் பற்றிக் கூறுகையில், “ அவர் வருவது ஒருவருக்கொருவர் முகமன் கூறிக் கொள்ள; அவ்வளவு தான்! யாராவது வந்து இன்று மழை பெய்யுமா, வெயில் அடிக்குமா என்று என்னிடம் தெரிவிக்கத் தேவையே இல்லை. அவர்கள் கூறுவதை விட எனது தெர்மாமீட்டரும் பாரோமீட்டரும் இன்னும் துல்லியமாக அனைத்தையும் தெரிவிக்கும்.” என்று கூறியவர் தன் அறையைச் சுட்டிக் காட்டி. “இதோ இங்கு இருக்கும் மிருக உலகத்தில் எந்த வகையிலும் சரி, எந்த இனத்திலும் சரி, எப்படி ஆனாலும் சரி என்னை பயமுறுத்தக் கூடிய ஒரு உயிரினமே கிடையாது. ஆனால் வெட்டியாய் நேரத்தைப் போக்கும் சோம்பேறிக்கும் நேரத்தை வீணடிக்கும் வீணரையும் கண்டால் நான் மிகவும் பயப்படுகிறேன்” என்றார். ஆகவே அவரைச் சந்திப்பவர்கள் ஒரு வினாடி நேரத்தையும் கவனமுடன் கணித்துக் கொள்வார்கள்.

IMG_6707

மேதைகள் அனைவருக்கும் நேரம் என்பது பொன்னைக் காட்டிலும் மதிப்பு மிக்கது. பிரான்ஸ் நாட்டின் சட்ட மேதையும் பிரதான அமைச்சராகவும் விளங்கிய ஹென்றி ப்ராங்கோய்ஸ் டி அகுஸா (Henry Francois de aguesseau 1688-1751)) என்பவர் ஒரு வினாடி நேரத்தையும் வீணாக்க மாட்டார்.

 

தின்சரி உணவு நேரத்தில் மேஜைக்கு சரியான நேரத்தில் அவர் வந்து அமர்வார். ஆனால் அவரது மனைவியோ தினமும் 15 நிமிடம் கழித்தே வருவார். எவ்வளவோ சொல்லியும் அவரது வழக்கம் மாறவில்லை.

 

பார்த்தார் அகுஸா. டைனிங் டேபிளுக்கு ஒரு நோட்டுடன் வந்து அமர ஆரம்பித்தார். 15 வருடங்கள் கழித்து பெரிய நான்கு தொகுதிகளை அவர் வெளியிட்டார். எல்லாம் டைனிங் டேபிள் நோட்புக்கில் எழுதிய நூல் தான்! அது பல பதிப்புகளைக் கண்டு பெரும் புகழை அவருக்குப் பெற்றுத் தந்தது.

 

எல்லா மேதைகளும் முதலில் மற்றவருக்குக் கற்றுத் தரும் முதல் பாடம்: நேரத்தை வீணாக்காதே என்பது தான்!

IMG_6708

*******