வால்டேர் வளர்த்த கழுகு (Post No 2558)

eagle1

Written by S Nagarajan

 

Date: 20  February 2016

 

Post No. 2558

 

Time uploaded in London :–  6-21 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

  19-2-16 பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

மேதை உள்ளம்

வால்டேர் வளர்த்த கழுகு

 

.நாகராஜன்

 voltaire

உலகின் பிரபலமான மேதைகளில் ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த  வால்டேர்.(பிறப்பு 21-11-1694 மறைவு 30-5-1778) அறிவும் செல்வமும் ஒருங்கே சேர்ந்திருந்த அபூர்வமான மேதைகளை வரலாற்றில் காண்பது மிகவும் அரிது. அப்படிப்பட்ட ஜீனியஸ்களில் ஒருவராக வால்டேர் திகழ்ந்தார். அவரது மேதைத் தன்மையைப் பற்றி மேடம் நெக்கர் (Madam Necher) கூறுகையில், ‘அவர் எதையும் ஒருமுறை படித்தாலே போதும் கடைசிச் சொட்டு வரை உறிஞ்சி விடுவார். அவர் ஒரு ஸ்பாஞ்ஜ் போல.’ என்று வியப்புடன் கூறினார்

ஏராளமான நூல்களைக் கரைத்துக் குடித்த அவர் ஹிந்து நாகரிகத்தையும் ஹிந்து அறிவு மேன்மையையும் கண்டு வியந்தார்.

“நமக்கு எல்லாமே கங்கைக் கரையிலிருந்து தான் வந்திருக்கிறது” என்று பிரமித்துப் போய்க் கூறினார் அவர்.

தன் வாழ்நாளில் 2000 புத்தகங்களையும் 20000 கடிதங்களையும் அவர் எழுதியுள்ளார்!

அப்படிப்பட்ட அபூர்வ மேதை மிகவும் ஆசையாக ஒரு கழுகுக் குஞ்சை வளர்க்க ஆரம்பித்தார். அதை ஃபெர்னி என்ற இடத்தில் இருந்த தன் மாளிகையில் அது எங்கும் பறந்து போய் விடக் கூடாது என்று நினைத்து ஒரு செயினுடன் இணைத்து வளர்க்க ஆரம்பித்தார்.

ஒரு நாள் இரண்டு சேவல்கள் அந்தக் கழுகைத் தாக்க அது படுகாயம் அடைந்தது.தனது செல்லக் கழுகு காயமடைந்ததைப் பார்த்த வால்டேர் துடிதுடித்துப் போனார்.

 

உடனடியாக ஒரு அவசரச் செய்தியை ஜெனிவாவிற்கு அனுப்பினார் – நல்ல ஒரு மிருக வைத்தியரை உடனே அனுப்பி வைக்கவும் என்று. வைத்தியர் வரும் வரைக்கும் பொறுமையாக இருக்க அவரால் முடியவில்லை.

பறவை இருந்த கூண்டிற்கும் தனது சாளரத்திற்குமாக அலைந்தார். அந்த சாளரத்திலிருந்து நீண்ட நெடுஞ்சாலை நன்கு தெரியும்.

கடைசியாக தனது தூதுவனுடன் ஒரு டாக்டரும் வருவதைப் பார்த்து ஆஹா என்று மகிழ்ச்சியுடன் கூவி அவரை வரவேற்க ஓடினார்.

மாளிகையில் ஒரு பெரிய வரவேற்பு அந்த வைத்தியருக்குத் தரப்பட்டது.

“எனது கழுகை மட்டும் குணமாக்கி விடுங்கள். உங்களுக்கு வேண்டியதைத் தருகிறேன் என்றார் வால்டேர்.”

இப்படி ஒரு வரவேற்பைத் தன் வாழ்நாளிலேயே பார்த்திராத அந்த மிருக வைத்தியர் திகைத்துப் போனார்.

பறவையை நன்கு சோதனை செய்தார். அதற்குள் மிக்க கவலையுடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்த வால்டேர், ‘என்ன, கழுக்குக்கு ஒன்றுமில்லையே” என்று கவலையுடன் கேட்டார்.

 

eagle2

வைத்தியரோ,” இப்போதைக்கு ஒன்றும் சொல்ல முடியாது. முதலில் கட்டைப் போடுகிறேன். கட்டை அவிழ்க்கும் போது தான் எதையும் உறுதியாகச் சொல்ல முடியும்” என்று சொன்னார்.

அவருக்கு ஏராளமான பணத்தைத் தந்த வால்டேர், “நாளை காலை கட்டை அவிழ்த்துப் பார்த்து எனக்குச் சொல்லுங்கள்” என்றார்.

மறுநாள் கழுகின் கட்டை அவிழ்த்துப் பார்த்த வைத்தியர். கழுகின் உயிருக்கு உறுதி சொல்ல முடியாது என்றார். ஆனால் வைத்தியத்தைத் தொடர்ந்தார்.

வால்டேருக்கு புதிய வேலையாக இது  வந்து சேர்ந்தது. தனது நம்பிக்கைக்கு உரிய பணிப்பெண்ணான மேடலைனை அழைத்து கழுகை உரிய முறையில் சரியாகப் பார்க்குமாறு உத்தரவிட்டார்.

காலையில் எழுந்தவுடன் வால்டேரின் முதல் கேள்வி:” மேடலைன். என் கழுகு எப்படி இருக்கிறது?” என்பது தான்!
“ரொம்ப மோசம், ஐயா, ரொம்ப மோசம்” என்பது மேடலைனின் வாடிக்கையான பதில்.

ஒரு நாள் காலை சிரித்துக் கொண்டே மேடலைன் வால்டேரிடம் வந்து, “ஐயா, உங்கள் கழுகுக்கு இனி வைத்தியம் தேவையே  இல்லை” என்று கூறவே வால்டேர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூவி “ஆஹா! எப்படிப்பட்ட நல்ல செய்தி! என் கழுகு நன்கு குணமாகி விட்டதா?” என்றார்

 

.”இல்லை ஐயா!  அது வாழவே லாயக்கில்லாத படி மிகவும் மெலிந்து விட்டது. அதற்கு வைத்தியமே தேவை இல்லை. அது  செத்துப் போய்விட்டது.” என்றாள் பணிப்பெண்.

இதைக் கேட்டவுடன் மிகுந்த சோகமடைந்தார் வால்டேர்.

“என் செல்லக் கழுகு செத்து விட்டது என்று சிரித்துக் கொண்டா சொல்கிறாய். உடனே இங்கிருந்து வெளியே ஓடி விடு!” என்று ஒரு கூப்பாடு போட்டார்.

நடுங்கிப்போன மேடலைன் வெளியே ஓட இந்தச் சத்தத்தைக் கேட்ட அவரின் மருமகள் டெனிஸ் ஓடோடி வந்து, “என்ன நடந்தது, மாமா?’ என்று கேட்டாள்.

ரௌத்ராகாரமாக இருந்த வால்டேர்,’இதோ இந்த மேடலைன் என் கண் முன்னால் இனி என்றும் இருக்கவே கூடாது. விரட்டி விடு அவளை”” என்று உத்தரவு போட்டார்.

“மெலிந்து விட்டதாம் மெலிந்து. செத்து விட்டதாம்! நான் கூடத் தான் ஒல்லியாக இருக்கிறேன். அதனால் என்னையும் கொலை செய்து விடலாமா? விரட்டு அவளை உடனே வெளியில்” என்று அவர் கத்தவே அந்த பணிப்பெண்ணை உடனடியாக மாளிகையை விட்டு வெளியே அனுப்பினாள் டெனிஸ்.

 

eagle-flying-on-sky

இரண்டு மாதங்கள் ஓடின. மேடலைனைப் பற்றி வால்டேர் ஒன்றுமே கேட்கவில்லை. ஒரு நாள் மெதுவாக அவர் டெனிஸிடம், அந்த மேடலைன் என்ன ஆனாள்?” என்று கேட்டார்

“ஐயோ, பாவம் அந்த மேடலைன். ஜெனிவாவில் கூட அவளுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. இங்கிருந்து அனுப்பப்பட்ட அவளை யார் தான் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள்?” என்றாள் டெனிஸ்.

“எதற்காக அவள் என் கழுகு இறந்ததைப் பார்த்துச் சிரித்தாள்? ஒல்லியாக இருந்தால் சாக வேண்டுமா என்ன? இருந்தாலும் அவள் பட்டினியாக இருக்கக் கூடாது. அவளுக்கு ஒரு வேலை போட்டுக் கொடு. ஆனால் என் கண் முன்னால் மட்டும் வரக் கூடாது. வந்தால் அவள் வேலைக்கு நான்  உத்தரவாதம் இல்லை: என்றார் வால்டேர்.

மிக்க மகிழ்ச்சியுடன் மறைவாக வைத்திருந்த மேடலைனை வேலை பார்க்க உத்தரவிட்டாள் டெனிஸ்.

ஆனால் ஒரு நாள் தற்செயலாக மேஜையிலிருந்து எழுந்த வால்டேர் மேடலைன் எதிரே நிற்பதைப் பார்த்து விட்டார். நடுநடுங்கிப் போன மேடலைன் மன்னிப்பு கேட்டவாறு முணுமுணுத்தாள்.

“ஒரு வார்த்தையும் பேசாதே! ஒன்று மட்டும் தெரிந்து கொள். மெலிந்து இருக்கும் காரணத்தினால் யாரையும் சாகடிக்கக் கூடாது. புரிந்ததா! ஓடிப் போ” என்றார் வால்டேர்.

பதறி அடித்துக் கொண்டு ஓடினாள் மேடலைன்.

 

 

கருணை வாய்ந்த உள்ளம் வால்டேருக்கு எப்போதுமே இருந்தது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

மேதையின் அபாரமான உள்ளம் மிக்க இளகிய உள்ளம்.

கஷ்டப்பட்டு செல்லம்மாள் வாங்கி வைத்திருந்த அரிசியை மகாகவி பாரதியார் சிட்டுக் குருவிகளுக்கு வாரி வாரி இறைத்துப் போட்ட சம்பவத்தை இதனுடன் ஒப்பிடலாம்.

கருணை உள்ளம் மேதைகளின் இயல்பான சொத்து!

************

.

 

 

லண்டனில் இந்திய மஹாராஜா மோதிரங்களும் காதல்கிளிகளும் (Post No. 2556)

IMG_3427 (2)

Picture: Ring set with Indore Ruby, Mauboussin, Paris, 1930s

Written by London swaminathan

 

Date: 19  February 2016

 

Post No. 2556

 

Time uploaded in London :–  17-23

 

( Thanks for the Pictures; courtesy Financial Times, London  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; 

 

லண்டனில் பிரிட்டிஷ் மியூசியமும், விக்டோரியா ஆல்பர்ட் மியூசியமும் (Victoria & Albert Museum) மிகவும் புகழ்பெற்றவை. வி அண்ட் ஏ (V&A) என்று சுருக்கமாக அழைக்கப்படும் விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில்தான் திப்புசுல்தானின் கவர்ச்சிகரமான புலி பொம்மை இருக்கிறது.இது ஒரு வெள்ளைக்காரனைக் குதறும் பாணியில் உறுமல் ஒலியுடன் இயங்கக்கூடியது.

 

அங்கு 2016 மார்ச் மாதம் வரை இந்திய மஹாராஜாக்கள் தங்கள் காதலிகளுக்கு வாங்கிக்கொடுத்த மோதிரங்களும், ப்ரோச்சுகளும் (Brooch) (புடவையில் அணியும் ஊசி/கொக்கி) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றின் பின்னாலும் சில சுவையான காதல் கதைகள் உள்ளன.

 

கபூர்தலா மஹாராஜா ஜகஜித் சிங், 1906-இல், ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிட்டில் அரச திருமணத்துக்கு வந்திருந்தார். வழியில் பாரீஸில் தங்கி, புகழ்பெற்ற பிரெஞ்ச் நகைக்கடையில் ஒரு தங்க-வைர மயில் வடிவ ப்ரோச் வாங்கினார். அதுவாங்கிய முஹூர்த்தம், மாட்ரிட் நகரில் நடனம் ஆடிய 16 வயதுப் பெண் அனிடா டெல்காடோவின் (Anita Delgado) காதல்வலையில் சிக்கினார். பின்னர், அவளை மணக்கையில் அந்த ப்ரோச்சை பரிசாகக் கொடுத்தார்.

 

 

இதுபோன்ற 104 நகைகள் வி அண்ட் ஏ மியூசியத்தில் இந்திய ராஜாக்களின் காதல்கதைகளைச் சொல்லுகின்றன. இவைகளை ஆறு பிரிவுகளாகப் பிரித்து காட்சிக்கு வைத்துள்ளனர். மொகலாயர் கால நகைகள் முதல் தற்கால மும்பை வீரேன் பகத் கடை நகைகள் வரை பல மோதிரங்கள், ப்ரோச்சுகள் காட்சியில் உள்ளன.

 

அனிடா டெல்காடோ, கபூர்தலா மன்னரின் ஐந்தாவது மனைவியான பின்னர் ஒரு யானையின் மீது அழகிய மரகதக் கல்லைக் கண்டு மோகித்தார். உடனே கணவன் காதில் கிசுகிசுத்தார். அவரும் “அன்பே! ஆருயிரே! அது உனக்குக் கிடைக்கவேண்டுமால் நீ உருது மொழியில் கதைக்க வேண்டும்” என்றார். அந்தக் காதல் கிளியும் உருது மொழியைக் கற்றுக்கொண்டு கொஞ்சவே அந்த மரகதத்தை வாங்கி வைரத்தில் பதித்து 19 ஆவது வயது பிறந்த நாள் கொண்டாடுகையில் பரிசாகக் கொடுத்தார். இதுவும் காட்சிக்குள்ளது.

IMG_3428 (2)

Brooch, 1910, designed by Paul Iribe, Paris, featuring antique Mughal emerald

இந்த மஹாராஜாக்களின் காதல் மோகங்களால் ஐரோப்பிய நகைகள் மீது இந்தியாவின் தாக்கமும், இந்திய நகைகள் மீது ஐரோப்பாவின் தாக்கமும் அதிகரித்தது. ஆனால் இந்தியாவின் செல்வாக்கே மேலோங்கியிருப்பதாக மியூசிய அதிகாரி சூசன் ஸ்ட்ரோஞ் கூறுகிறார். மஹாராஜாக்களின் மனைவியர், இந்திய நகைகள் ஜொலிக்க ஜொலிக்க ஐரோப்பாவில் வலம் வந்ததால் அந்த வகை பாணிகளில் ஆர்வம் பிறந்தது என்கிறார். பிரெஞ்ச் கடிகார/ நகை தயாரிப்பாளரான லூயி கார்டியர் இதில் இகவும் ஆர்வம் காட்டியது. லூயியின் சகோதரர் 1911ஆம் ஆண்டில் ஐந்தாவது ஜார்ஜ் மன்னரின் பட்டமேற்பு வைபவத்துக்காக டில்லிக்கு வந்திருந்தார். அப்போது பல மன்னர்கள், அந்த நிறுவனத்திடம் புதுவகை நகைகளுக்கு ஆர்டர் கொடுத்தனர்.

 

இந்தூர் மன்னர் யஸ்வந்த்ராவ் ஹோல்கர், நியூயார்க், பாரீஸ் நகைக்கடைகளில் வாங்கிய மோதிரங்களும் காட்சியில் உள்ளன. கதார் நாட்டு ஷேக் ஹமீத் பின்  அப்துல்லா அதானி, தனது சொந்த சேகரிப்பில் வைத்திருந்த அரிய நகைகளையும், மியூசியத்துக்கு இரவல் கொடுத்துள்ளார்.1607ஆம் ஆண்டில் ஜஹாங்கீர் வைத்திருந்த ஒரு பச்சைக்கல்லும் இதில் அடங்கும்.

 

ஆற்காட்டு நவாப், சார்லோட் மஹாராணிக்கு அனுப்பிய 17-21 காரட் வைரம், படக்க்ஷான் சுரங்கத்திலிருந்து வந்த ஸ்பைனல் (சிவப்புக் கல்) வகை ரத்தினம், 352 காரட் தைமூர் ரூபி (கெம்பு) ஆகியனவற்றையும் மியூசியத்துக்கு வருவோர் கண்டு களிக்கலாம்.

-சுபம்-

 

Grace will last, Beauty will blast! (Post No 2555)

Monroe

Compiled  by London swaminathan

 

Date: 19  February 2016

 

Post No. 2555

 

Time uploaded in London :–  9-37 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; 

 

 

There are umpteen proverbs and sayings about BEAUTY. Some are in favour of it and some are against it; some about its bad influence and some about its positive effect. Let us look at these sayings with my comments:-

 

I have compiled  59 beautiful quotations on Beauty!

bebin

Its superficiality

 

1.Beauty is only skin deep

2.Beauty is only one layer (Japanese Proverb)

3.Beauty may have fair leaves, yet bitter fruit

4.Fair face, foul heart

5.The peacock has fair feathers, but foul feet

( I don’t agree; who looks at its foul feet; In Tamil we say same thing about Rose: Rose has thorns in it!)

6.There is many a fair thing full false

7.Fair without, false within

8.Beauty and honesty seldom agree

9.Beauty and folly go often in company

10.White silver draws black lines

 

Some of the above comments are not fair; they are subjective. When one is adversely affected by a beautiful woman, then one criticizes. But Hindu saints like Adi Shankara and Pattinathar also criticised beauty of a woman, but with a philosophical view. They not only criticized woman and her beauty but also wealth and other pleasures.

 

dan moore

Influence of Beauty

11.Beauty draws more than oxen

12.Beauty opens locked doors

13.Beauty is eloquent even when silent

14.A good face is a letter of recommendation

15.A fair face is half a portion

 

We very often come across complaints that a woman get promoted or given higher salary in many institutions, because she was beautiful and favoured by x, y,z.

 

Even a famous BBC broadcaster criticized BBC for its choice of women broadcasters with beautiful face sans brain. A famous quotation says “A woman’s geography is more important than a woman’s history”.

nargis_600x450

Its unimportance

16.The fair and the foul, by dark are like store.

17.All cats are grey in the dark

18.Goodness is better than Beauty

19.Good fame is better than a good face

20.Handsome is handsome does

I don’t find anything wrong with the above statements.

 

 

madhubala-stamp

Its inadequacy

21.Beauty without bounty avails nought

22.A fair woman without virtue is like palled wine

(Everyone will agree)

23.Beauty won’t make the pot boil

24.No one can live on Beauty, but they can die for it.

(Taj Mahal is an example; legendary lovers like Romeo and Juliet, Ambikapathy and Amaravathy, Attanathy and Athimanthi of Sangam Tamil literature are some more examples)

25.Prettiness makes no pottage

26.A poor beauty finds more lovers than husbands

(very true; they are misused and abused; but nowadays they sue the abusers 10 or 20 years after the relationship and get a fat compensation in western countries)

 

27.Beauty is no inheritance

(very true; even a fisherwoman/ Beauty  changed Indian history according to Mahabharata)

28.Beauty is potent but money is omnipotent

ivory coast

 

Its ephemerality

29.Beauty is but a blossom

30.The fairest flowers soonest fade

31.The fairest rose is at last withered

32.Grace will last, beauty will blast

33.Prettiness dies first

(This is a popular theme of Hindu poets; this is the condition of a person’s life, according to Hindu saints; they warn men and women that youthfulness won’t last long)

 

Carole-Joan-Crawford

Its subjectivity

34.Beauty is in the eye of the beholder

(My teacher Professor S Ramakrishnan –SRK of Madurai—remarked very often that “the eternal hope of every woman is that she is beautiful to someone in the world”. Very true; I see many lovers as mismatch; but they live together happily. In London white women marry black men; Love is blind or Beauty is in the eye of the beholder)

 

35.A ship under sail

A man in complete armour

A woman with a great belly

Are three of the handsomest sights.

 

36.Beauty fades like a flower

37.Fair is not fair, but that which pleases

 

38.If Jack is in love, he is no judge of Jill’s beauty

39.The owl thinks her own young fairest

(yes, we have a similar proverb in Tamil; a crow thinks that its own young is a golden one)

 

 

Giselle-La-Ronde-Miss-World-1986

Is sources

40.Health and gaiety foster beauty

41.Health and wealth create beauty

42.A blithe heart makes a blooming visage

43.The joy of the heart makes the face fair

 

 

grenada_1971_miss_world_ss

Its disadvantages

44.The fairest silk is soonest soonest stained

45.In an ermine spots are soon discovered

46.The fairer the paper, the fouler the blot (beauty shows up by contrast even the smallest fault)

47.The smaller the peas, the more to the pot; the fairer the woman  the more the giglot (Giglot means wanton)

48.Who has a fair wife need more than two eyes

49.Please your eye and plague your heart

 

50.A fair wife and a frontier castle breed quarrels

51.Pretty face, poor fate (Chinese Proverb)

52.Beauty’s sister is vanity, and its daughter lust

53.A woman and a cherry are painted for their own harm

miss universe

 

Its value

54.A bonny bride is soon buskit and

A short horse is soon weskit

(Buskit means adorned; wispit means rubbed down)

55.A thing of beauty is a joy for ever (John Keats in Endymion; 1795-1821)

 

56.A good face needs no band, and a bad one deserves none (band means adornment)

57.Who is born fair born married

58.A fair face cannot have a crabbed heart

59.An enemy to beauty is a foe to nature

miss world1

miss world2

–Subham–

 

 

 

வீட்டில் தோட்டம் வளர்க்கலாமே! (Post No.2554)

vilvam22,fb

Written by S Nagarajan (Radio Talk)

 

Date: 19  February 2016

 

Post No. 2554

 

Time uploaded in London :–  8-33 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

      சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க உள்ள ஏராளமான வழிகளில் ஒரு பயனுள்ள வழி வீடுகளில் தோட்டம் வளர்ப்பதாகும்.பச்சைப் பசேலென பசுமைக் காட்சிகளைத் தருவதோடு உயிரைக் காப்பதிலும், ஆரோக்கியத்தைப் பேணுவதிலும் மூலிகைகள் தனி ஒரு இடத்தைப் பெறுகின்றன. இவற்றை அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருப்போர் கூட வளர்க்க முடியும். தனி வீட்டில் வாழ்வோர் தங்களின் வீட்டின் முற்றத்திலோ அல்லது வீட்டின் ஒரு குறிப்பிட்ட இடத்திலோ பயனுள்ள கறிகாய் வகைகளையும் மூலிகைகளையும் பயிரிட்டு வளர்க்கலாம்.

 

 

    மூலிகைகள் மருத்துவ குணங்கள் உள்ளவை. அழகைப் பராமரிப்பவை. சமையலுக்கும் உபயோகப்படுபவை. பழங்காலத்தில் நம் முன்னோர்கள் இவற்றை சமுதாய நலனுக்காக ஆங்காங்கே வளர்த்து வந்தனர் என்பதை எண்ணிப் பார்க்கும் போது அவர்கள் எவ்வளவு சமூகப் பொறுப்புள்ளவர்களாக இருந்தனர் என்பது தெரியவரும்.

 

 

    சந்தையிலே வாங்கும் கெமிக்கல் கலந்த உரத்தினால் உற்பத்தியாகும் கறிகாய்களைத் தவிர்த்து நம் வீட்டிலேயே இவற்றைப் பயிரிட்டு பயன்படுத்துவதால் ஆரோக்கியம் மேம்படும். செலவு குறையும். முக்கியமாக நமது வீட்டில் நம்மால் வளர்க்கப்பட்டவை என்ற ஆத்ம திருப்தி தோன்றி எல்லையற்ற மகிழ்ச்சி உண்டாகும்.

 

 iruvachi,fb

   அனைத்து செடிகளுக்குமே பொதுவாக சூரிய ஒளியும் ஈர மண்ணும் தேவை. சிறு சிறு ஓட்டைகள் உள்ள நல்ல பானைகளை வாங்கி உரிய மண்ணை நிரப்பி நல்ல விதைகளை விதைத்துப் பயன் பெறலாம். அழகிய மலர்ச் செடிகளை வளர்க்க விரும்புவோர்  நர்ஸரியில் அவற்றைப் பெற்று வளர்க்கலாம். பானைகளை சூரிய ஒளியில் அவ்வப்பொழுது படும் படி வைத்தல் இன்றியமையாதது.

 

 

    எதை வளர்க்க முடியும் என்ற பட்டியலுக்கு முடிவே இல்லை. சிறு சிறு கீரை வகைகள், கொத்தமல்லி, கருகப்பிலை, ரோஜா, மல்லிகை, சூரிய காந்தி என்று இடத்திற்கும் நம் மனத்திற்கும் தக்கபடி செடி வகைகளையும் மூலிகைகளையும் இனம் கண்டு வளர்க்கலாம்.

 

 

இது தனி மனிதனுக்கான ஆதாயம் மட்டுமல்ல; தனி மனிதன் நாட்டிற்கே செய்யும் சேவையும் கூட!

*********    

Famous Doctor refused to write a book! Why? (Post No. 2553)

doctor-and-stethoscope

Compiled  by London swaminathan

 

Date: 18  February 2016

 

Post No. 2553

 

Time uploaded in London :–  8-11 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

Doctor Hsu was physician of almost supernatural skill. “Why don’t you write a book, he was asked, “so that your knowledge may be passed on for the benefit of the posterity.”

“Medical skill is a matter of intelligence”, the doctor replied, “and depends partly on a man’s power of concentrated thought, and partly on his skill in feeling the pulse. The pulse, as the ancients knew, may be of different types difficult to distinguish, and each indicates a different disease. Facility in these two matters cannot be taught. When the nature of the pulse is skilfully distinguished, then the disease can be diagnosed, and treatment can be given with the proper drug, on which alone recovery depends.

 

“The way the medical men go on in these days, continued the doctor after a pause, “failing to diagnose correctly by the pulse, and treating a disease with a whole collection of ameliorating drugs instead of the one appropriate, is just like a hunter, who, having not the slightest idea where the hare is, wastes endless men and horses over a large area, in the vague hope that one or other of them may meet it and be lucky enough to catch it”.

China (Tai Ping Kuang Chi)

 

Xxx

antidote

What are Antidotes?

The Book of Medicine says, “A tiger shot by a poisoned arrow eats mud; a wild bear rootles about for harebell or kikio-root; a pheasant wounded by a hawk seeks the leaves of the ti-huang plant. Chng Ao tried giving powdered yti-stone to rats, and found that they became unconscious of the presence of man, yet they could be completely restored in a few minutes by a drink of medicine compounded from jelly fish.

 

Birds, beasts and even insects know the antidotes for things which are poisonous to them; how much more should man? A silk worm sting may be cured by an application of powdered snake; the bite of a horse by rubbing it with the ashes of a burnt whip-holder. In short, to be effective, an antidote must correspond to that which has caused the injury.”

 

— China (Tai Ping Kuang Chi)

 

உரத்தொழிற்சாலைக் கழிவுகள்! (Post No. 2552)

ammonia urea

Written by S Nagarajan

 

Date: 18  February 2016

 

Post No. 2552

 

Time uploaded in London :–  7-43 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

      ஒரு நாட்டின் வளத்திற்குத் தொழிற்சாலைகளின் பங்கு இன்றியமையாததாகும். தொழிற்சாலைகளின் வளத்திற்கும் உற்பத்திப்  பெருக்கத்திற்கும் அவற்றில் பணிபுரிவோரின் உடல் ஆரோக்கியம் மிக முக்கியமான ஒன்று.தொழிலாளர்களின் ஆரோக்கியமான மனமும் ஆரோக்கியமான உடலும் தொழிற்சாலைகளுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கே நலம் பயக்கும் என்பதில் ஐயமில்லை.

 

 

   இந்தியாவில் உரத் தொழிற்சாலைகளை மட்டும் எடுத்துக் கொண்டால் நாள் ஒன்றுக்கு ஒரு உரத் தொழிற்சாலை  300 டன்கள் அம்மோனியாவையும் 300 டன்கள் யூரியாவையும் 1100 டன்கள் காம்ப்ளெக்ஸ் பெர்டிலைஸர்களையும் (Complex Fertilisers) 130 டன்கள் மெதனாலையும் (Methanol) உற்பத்தி செய்கிறது. இந்த உற்பத்தியால் நாள் ஒன்றுக்குப் பத்தாயிரம் கனமீட்டர் அளவிற்கு திரவக் கழிவுகளை வெளியேற்ற வேண்டியுள்ளது. ஆக இவற்றில் இருக்கும் மாசுள்ள மற்றும் மாசற்ற பொருள்களின் எடை மட்டும் 50000 டன்கள் என்ற மாபெரும் அளவைக் கொண்டுள்ளது.

 

 

    இந்தக் கழிவுகளை உரிய முறையில் அகற்றவில்லை எனில் தொழிற்சாலைகளின் பணிபுரிவோருக்கும் தொழிற்சாலைகளின் அருகில் வசிப்போருக்கும் பல்வேறு விதமான ஆரோக்கியக் கேடுகளை அக்கழிவுகள் உருவாக்கும்.

 

 

 

    கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படுகின்றனவா என்பதைத் தொழிலாளர் குழுக்களும் சமூக அக்கறையுள்ள பொதுமக்களும் அவ்வப்பொழுது கண்காணித்து வருதல்  இன்றியமையாத ஒன்று. 

 

 

    இதற்கெணன சமூக ஆர்வலர்கள் பொது மக்களிடம் இதற்கான விழிப்புணர்ச்சியைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருதல் வேண்டும். அத்தோடு பொதுமக்களும் தங்கள் அண்டை அயலாரிடம் இது பற்றிய சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் உணர்வை ஏற்படுத்த வேண்டும். இது நமது தேசத்தை நோயற்ற நாடாக ஆக்கி உலக நலனுக்கும் வழி வகுக்கும்! 

 

 

********

 

 

கடலுக்கும் ஆற்றுக்கும் இடையே உரையாடல்! (Post No 2551)

IMG_1927

Translated  by London swaminathan

 

Date: 18  February 2016

 

Post No. 2551

 

Time uploaded in London :–  6-07 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

 

மழைக் காலம் வந்தது. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது. எல்லா ஓடைகளும் தண்ணீரைக் கொண்டுவந்து கொட்டின. மறு கரையே தெரியாத அளவுக்குப் பரந்து ஓடியது. அக்கரையில் நின்ற பசுமாட்டுக்கும் வீட்டுக்கும் இடையே வித்தியாசம் சொல்ல முடியாத அளவுக்குச் சின்னதாகத் தெரிந்தது. ஆற்றுக்கு ஒரே குஷி! நேராக சமுத்திரதுக்குச் சென்றது. இது வரை தன்னைவிட சிற்றோடை களையே கண்ட, அந்த ஆற்றுக்கு சமுத்திரத்தைப் பார்த்த மாத்திரத்தில் ஒரே மலைப்பு, திகைப்பு. ஆர்ப்பரிக்கும் கடலைக் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது.

 

IMG_1928

ஆறு சொன்னது:

“அரை வேக்காடுகளுக்கு முழு உண்மை தெரியாது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். என் விஷயத்தில் அது உண்மையாகிவிட்டது. கடந்தகாலத்தில் கன்பூசியஸின் கல்வி அறிவையும், ‘போ’வின் வீரதீரத்தையும் குறைகூறுவதைக் கேட்டிருக்கிறேன். இப்போது விரிந்து பரந்த உன்னைக் கண்டவுடன் என்னால் நம்ப முடியவில்லை. உன்னை மட்டும் நான் இன்று கண்டிருக்காவிட்டால், என் சிற்றறிவைக் கண்டு, விஷயம் தெரிந்தோர் என்னைப் பார்த்துப் பரிகசித்திருப்பார்கள்.

 

இதற்கு சமுத்திரம் பதில் சொன்னது:

“கிணற்றுத் தவளையிடம் போய் சமுத்திரத்தைப் பற்றிப் பேசினால் புரியுமா? கோடைகால ஈக்களிடம் போய், பனிக்கட்டி பற்றி பேசினால் அதுகளுக்கு விளங்குமா? அதிகம் படித்தவனிடம் சட்டம் பற்றிப் பேசினால் அவனுக்கு என்ன தெரியும்? இப்போது நீ, என்னைப் பார்த்துவிட்டதால், உனக்கு பெரியது, சிறியது தெரியும். இனிமேல் நான் உன்னிடம் பெரிய கொள்கைகளை எடுத்துரைக்கலாம். உலகில் சமுத்திரத்தை விடப்பெரியது கிடையாது. உலகிலுள்ள எல்லா நதிகளும் இதில் விழுகின்றன. ஆனால் கடல் நிரம்பி வழிந்ததே இல்லை. இதிலிருந்து எவ்வளவோ தண்ணீர் வெளியேறினாலும் இதற்கு வெள்ளம், வறட்சி என்ற பிரச்சனையே இல்லை. எல்லா ஆறுகளையும் ஓடைகளையும் விடப் பெரியது. ஆயினும் நான் என்னைப் பற்றி பெருமை பேசுவதில்லை. எனது உருவத்தை இந்தப் பிரபஞ்சம் எனக்கு அளித்துள்ளது. ஆக்க சக்தி, அழிவு சக்தி என்னும் பிரபஞ்சம் முழுதும் பரவிய கொள்கையிலிருந்து எனக்கு சக்தி கிடைக்கிறது. நான், பெரிய பூமியில் ஒரு கூழாங்கல்லைப் போன்றவன்; பெரிய மலையில் ஒரு சின்னப் புதர் போன்றவன். மனிதனைக்கூட ஒரு முடியின் (மயிர்)நுனிதான் என்று ஒப்பிடுகிறார்கள்.

 

அளவுகளுக்கு, உருவங்களுக்கு எல்லையே கிடையாது. காலம் எல்லையற்றது. நிலைமைகள் மாறிக்கொண்டே இருக்கும். நாம் இடக்கூடிய பெயர்களும் முடிவானவை அல்ல. இப்படி இருக்கையில் ஒரு முடியின் நுனிதான் அளவில் சிறியது என்றோ பிரபஞ்சம்தான் மிகவும் வியாபகமானது என்றும் எப்படிச் சொல்ல முடியும்?”

IMG_1926

–சுபம்-

ராஜா தந்த முத்தை பிச்சைக்காரனுக்கு கொடுத்த பூசாரி (Post No 2550)

pearl

Compiled  by London swaminathan

 

Date: 17  February 2016

 

Post No. 2550

 

Time uploaded in London :–  8-28 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

 

ஒரு ஊரில் ஒரு அர்ச்சகர் இருந்தார். கிட்டத்தட்ட நம்ம ஊரில் அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டர் போல. எதையும் தனக்கென வைத்து கொள்ளா உபகாரி. அவரது புகழ் திக்கெட்டும் பரவியது உடனே சீன தேசத்து ராஜா அவரைப் பார்க்க வந்தார். நெடு நேரம் தத்துவ விஷயங்கள் பற்றி உரையாடினர். கற்றாரை கற்றாரே காமுறுவர் அன்றோ. ஆகையால் விடைபெற்றுச் செல்லுகையில் விலையுயர்ந்த முத்து ஒன்றை அர்ச்சகரிடம் அன்பளிப்பாகக் கொடுத்தார்.

 

அதை வாங்கிய அர்ச்சகர், ராஜாவுக்கு முன்னாலேயே, அதைக் கூட்டத்தில் நின்று வேடிக்கை பார்த்த பிச்சைக்காரனிடம் கொடுத்துவிட்டார். ராஜாவுக்கு என்னமோ போலாகிவிட்டது. முகம் சிறுத்துவிட்டது.

 

இருந்தபோதிலும் காரணத்தை அறிவோமென்று எண்ணி, “அன்பரே நீர் உபகாரி என்பதை நான் அறிவேன். நீவீர் எப்போதுமே இப்படித்தான் செய்வீர்களோ? என்று கேட்டான் மன்னன்.

 

“ஆமாம், மன்னர் மன்னா!”

“அப்படியா?உங்கள் நண்பர்கள் எதைக்கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களோ” – என்று கேட்டான் மன்னன் ஏளனமாக.

“ஆமாம்”, என்றார் அர்ச்சகர்.

 

“இதோ நீங்கள் நடப்பதற்கு ஊன்றுகோல் வைத்திருக்கிறீர்களே. அதை உங்கள் நண்பர் கேட்டால்”…..

 

“ நீதி சாத்திரங்களில் சொல்லியிருக்கிறது. ஒரு நண்பனுக்கு அத்தியாவசியமான எதையும் ஒரு உயர்ந்த மனிதன்/ உத்தம புருஷனானவன், கேட்கக்கூடாதென்று” – என்றார்.

 

“சரி, அவர் உயர்ந்த குணமுள்ள நண்பர் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்களேன்…” என்றான் மன்னன் விடாப்பிடியாக.

 

“ஆ, அருமையான கேள்வி. அப்படிப்பட்ட குணமுடையவன் எனக்கு நண்பனாக இருக்கவே முடியாதென்றார்”, அர்ச்சகர்.

மன்னர் வாயடைத்துப் போனார்.

 

–இது ஒரு சீனக் கதை

 

Xxxx

 

ardhanaree

எல்லாம் கடவுள் கொடுப்பான்?

இரண்டு நண்பர்களிடையே காரசாரமான வாக்குவாதம். கடவுள், எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுப்பார். நாம் ஒன்றும் செய்யத் தேவையே இல்லை என்றான் ஒருவன்.

 

இல்லை, அப்பைடியில்லை. யார் ஒருவன் முயற்சி செய்கிறானோ அவனுக்குதான் கடவுள் உதவி செய்வார் என்றான் மற்றவன்.

 

உடனே முதலாமவன், “இதோ பார் நான் கோவிலில் போய் ஒரு மூலையில் உட்காருகிறேன். எனக்கு உணவு முதலியன கிடைக்கும் என்று சொல்லி ஒரு மூலையில் அமர்ந்தான். அவன் நண்பனும் தொலைவிலிருந்து வேடிக்கை பார்த்தான். ஒரு நாள் ஆயிற்று; இரண்டு நாள் ஓடிற்று; யாரும் அவனைக் கண்டுகொள்ள வேயில்லை. பசியோ வாட்டியது. மூன்றாம் நாளும் வந்தது. இரவு நெருங்கிவிட்டது. இதுவரை யாரும் அவனைக் கண்டுகொள்ள வேயில்லை.

அப்பொழுது மூன்று பக்தர்கள் மிச்சமுள்ள பிரசாதத்தைப் பங்குபோட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களோ, இந்த ஆளை நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை.

அவர்களிடம் பிரசாதம் நிறைய மிஞ்சியிருந்ததால், அட, இதை வீணடிக்கக்கூடாது; வீட்டிற்குக் கொண்டு செல்வோம் என்று பேசிக்கொண்டனர். மூலையில் உட்கார்ந்த ஆள் யோசித்தான். இவர்களும் போய்விட்டால் நான் மூன்று நாள் சாப்பிடாததால் இரவில் மயக்கம் போட்டுவிடுவேன் என்று எண்ணி ஒரு தந்திரம் செய்தான். லேசாக ஒரு இருமல் இரும்பி கணைத்தான். உடனே பக்தர்கள் மூவரும் அவன் பக்கம் திரும்பி, அடப் பாவமே முகமெல்லாம் வாடி இருக்கிறதே. சாப்[பிடவே யில்லை போலிருக்கிறதே என்று கருதி மீதியுள்ள புளியோதரை, தயிர்சாதம் எல்லாவற்றையும் கொடுத்தனர். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நண்பனிடம் போனான். கடவுள் எல்லோருக்கும் உதவுவார்தான். ஆனால் அவரைக் “கொஞ்சம் தூண்டிவிட” வேண்டியிருக்கிறது- என்றான்.

நண்பன் சிரித்துக்கொண்டே வீட்டுக்குப் போனான்.

–பாரசீகக் கதையின் தழுவல்

 

 

Why do you praise me without knowing past and present? – Buddha (Post No.2549)

buddha

Compiled  by London swaminathan

 

Date: 17  February 2016

 

Post No. 2549

 

Time uploaded in London :–  8-14 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

 

The venerable Sariputta came to the place where the Exalted One (Buddha), and having saluted him, took his seat respectfully at his side, and said:

“Lord, such faith I have in the Exalted One that methinks tere never has been, nor will there be, nor is there now, any other, whether Wanderer or Brahman, who is greater and wiser than the Exalted One … as regards the higher wisdom.

 

Grand and bold are the words of thy mouth, Sariputta, (answered the Master)

‘verily, thou hast burst forth into a song of ecstasy! Of course then thou hast known all the Exalted Ones of the past … comprehending their minds with yours, and aware what their conduct was, what their wisdom, …… and what the emancipation they attained to?

 

Not so, O Lord!

Of course, then thou hast perceived all the Exalted Ones  of the future, ……comprehending their whole mind with yours

Not so, O Lord!

But at least, then, O Sariputta, thou knowest me  … and hast penetrated my  mind?

Not even, O Lord!

You see ,then, Sariputta that you know not the hearts of the Able, Awakened Ones of the past and of the future. Why, therefore, are your words so grand and bold? Why do you burst forth into such a song of ecstasy?

–Dialogues of The Buddha

Xxx

 

stamp-china-lao-tzu-TN

Founder of Taoism (Picture)

Can anyone have Tao?

SHUN asked Cheng, saying, can one get Tao so as to have it for himself?

(Tao means Road, Path, Principle in Chinese)

Your very body, replied Cheng, is not your own. How should Tao be?

If my body, said Shun, is not my own, pray who is it?

 

It is the delegated image of God, replied Cheng. Your life is not your own. It is the delegated harmony of God. Your individuality is not your own. It is the delegated adaptability of God. Your posterity is not your own. It is the delegated exuviate of God. You move, but know not how. You are at rest, but know not why. You taste, but know not the cause.  These are the operations of God’s laws. How then should you get Tao so as to have it for your own?

 

–Cheng Tzu (China)

மேற்குத் தொடர்ச்சி மலை வளத்தைக் காப்போம் (Post No 2548)

forest2

Written by S Nagarajan

 

Date: 17  February 2016

 

Post No. 2548

 

Time uploaded in London :–  7-50 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

train watr falls

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை ஏ அலைவரிசை  11-12-2015 முதல் 20-12-2015முடிய ஒலிபரப்பிய 10 உரைகளில் முதலாவது உரை

 

 

மேற்குத் தொடர்ச்சி மலை வளத்தைக் காப்போம்

 

ச.நாகராஜன்

 

மேற்குத் தொடர்ச்சி மலை இந்தியாவின் அற்புதமான வளங்களில் ஒன்று. இந்த அரிய வளத்தில் அமைந்துள்ள காடுகள் கடந்த பல ஆண்டுகளாக அழிக்கப்பட்டு வருவது துரதிர்ஷ்டமான விஷயம்.

 

தாபியிலிருந்து கன்யாகுமாரி வரை உள்ள இந்த மலைத் தொடரின் நீளம் சுமார் 1500 கிலோமீட்டர். 1.6 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பைக் கொண்ட இதில் 30 ச்தவிகிதப் பரப்பு காடுகளில் உள்ளது. இதன் சிறப்புக்கள் பல. கிழக்குத் தொடர்ச்சி மலை போல விட்டு விட்டு இல்லாமல் இது தொடர்ந்த ஒரு மலைத் தொடராக உள்ளது. இதன் உயரம் 1500இலிருந்து 2000 மீட்டர் வரை உள்ளது. இது வெப்ப மண்டல பிரதேசமாகும். தென்னிந்தியாவின் முக்கிய நதிகளான கிருஷ்ணா, கோதாவரி மற்றும் காவேரி உருவாவது மேற்குத் தொடர்ச்சி மலையில் தான்.

 

பயோடைவர்ஸிடி எனப்படும் உயிரியப் பன்மயத்திற்கான அரிய இடம் இது. உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் பத்து சதவிகிதம் இந்த மலைத் தொடரி பிரதேசத்தில் இருப்பதும் நீலகிரி மலைத்தொடரில் சுமார் பத்தாயிரம் யானைகள் இருப்பதும் இதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது.

 

இப்படிப்பட்ட காரணங்களால் யுனெஸ்கோ உலகின் எட்டு அரிய இயற்கை வளங்களால் மேற்குத் தொடர்ச்சி மலை வளத்தையும் ஒன்றாக அறிவித்திருக்கிறது.

 

இப்படிப்பட்ட உலகின் அரிய இயற்கை வளம் நவீன யுகத்தின் தொழில் மயமாக்கல், காட்டுச் செல்வத்தைச் சுரண்டி சுயந்லத்திற்காகப் பயன்படுத்தல் உள்ளிட்ட ஏராளமான காரணங்களால் அழிக்கப்பட்டு வருகிறது. ஓரின பயிர் வளர்ப்பு சாகுபடிக்காக காடுகள் விளைநிலங்களாக மாற்றப்படுவதும், இரும்பு போன்ற தாதுப் பொருட்கள் சுரண்டப்படுவதும் இந்த இயற்கை வளம் அழிவதற்கான முக்கியமான காரணங்களாகும்.

 

இந்த அழிவைத் தடுக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இப்பகுதி வாழ் மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டி வருகின்றன.கடத்தல்காரர்களையும் வேட்டையில் ஈடுபடுவோரையும் தடுப்பது, வனவிலங்குகளை அழிக்காமல் அவற்றையும் வாழ விடும் நோக்கத்தை அப்பகுதி வாழ் மனிதர்களிடையே ஏற்படுத்துவது, காடுகளை அழித்து விளைநிலம் ஆக்காமல் இருப்பது, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி அதை மேம்படுத்தும் ப்ணிகளை மக்களே உணர்ந்து செயல்படுத்துவது ஆகியவை இந்த அரிய வளத்தைக் காக்கும்.

 

அரசின் ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு பெரும் நிறுவனங்களும் மக்களும் ஆதரவு தருவது இன்றைய நிலையில் அவசரமானதும் அவசியமானதுமான ஒரு நற்பணியாகும்.

 

***